February 26, 2009

ஒளிரும் இந்தியாவும் - ஸ்லம்டாக் மில்லினியரும்


உலகத் திரைப்பட ரசிகர்களின் உதடுகளில் செல்லமாய் தவழ்கிறது "ஸ்லம்டாக் மில்லினியர்". லாஸ் ஏஞ்சல்சில் ஆஸ்கர் அருவியில் குளித்து, உலக மக்களின் இதயங்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது "ஸ்லம்டாக்".
"ஒன் பில்லியன் பீப்பிள்" என்று வருணிக்கப்படும் இந்தியர்களால் ஒலிம்பிக் போட்டியில் ஒரே ஒரு பதக்கத்தைத்தான் பெறமுடிந்தது. இது திறமைக்குறைவால் ஏற்பட்டதல்ல; ஆட்சியாளர்களின் அலட்சியத்தால் உருவாக்கப்பட்டது.
திரைப்படத்துறையில் இந்தியர்கள் சாதனைகள் பல படைத்தாலும் "ஆஸ்கரின்" அங்கீகாரமே எவரஸ்ட் சிகரம் என்ற கனவு நனவாக்கப்பட்டுள்ளது.
இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் ஆஸ்கர் விருதை தனது இசைப்புலத்தால் தன்வயப்படுத்தியதன் மூலம் உலக இசைப் பிரியர்களை இந்திய இசையின் பக்கம் திருப்ப வைத்துள்ளார். எட்டாத உயரத்திற்கெல்லாம் இந்திய இசை தற்போது பயணித்துக் கொண்டுள்ளது.
நகரமயமாதலின் சுவடுகள் கூட சென்றடையாத கேரள கிராமத்திலிருந்து முளைத்தெழுந்த பூக்குட்டி இசைக்கலவையின் மகோன்னதத்தை எட்டிவிட்டார். ஆஸ்கர் என்ன அகிலமும் எட்டும் தூரத்தில்தான் என்பதை நிரூபித்துள்ளனர் ஸ்லம்டாக் குழுவினர்.
ஆஸ்கரின் மூலம் இந்தியப் பெருமை தற்போது உலகின் திக்கெட்டும் பயணித்துக் கொண்டிருக்கிறது. ஆம்! "இந்தியா ஷைனிங்", "ஒளிருது, ஒளிருது இந்தியா..." என்று சப்புக்கொட்டியவர்களும், "2020 உலக வல்லரசு" கனவில் மூழ்கி முத்துக்களை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கும் இந்தப்படம் அதிர்ச்சி வைத்தியம்தான்.
தொலைந்துபோன தனது முகத்தை இருட்டில் தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு இந்தப் படம் எதிரொலியை கொடுத்துள்ளது.
ஆம்! ஸ்லம்டாக் மில்லினியர் அப்படி என்னத்தான் கூறிவிட்டது? எதைத்தான் காட்டிவிட்டது? என்று கேட்பவர்களுக்கு ஒரே பதில் படத்தை பாருங்கள்! கனவு இந்தியாவின் முகம் இதுதான். நீங்களும் விரும்பும் இந்தியாவை வடிவமைக்க செல்ல வேண்டிய தூரம் ஏராளம்... ஏராளம்...
உலகமயம் புதிய, புதிய கோட்டீஸ்வரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. எப்படி என்ற ரகசியம் உங்களுக்கு தெரியாதா என்ன? எல்லாம் "சத்யம்" மயம். பங்குசந்தையின் ஏற்ற, இறக்கத்தில் சொர்க்கத்திற்கும் - நரகத்திற்கும் சென்றுக் கொண்டிருக்கின்றனர் உலகமய விரும்பிகள் என்றால், மீடியாக்கள் மட்டும் வேடிக்கை பார்க்குமா என்ன? அவர்களும் "குரோர்பதி", "கோட்டீஸ்வரன்" மூலம் புதிய பணக்காரர்களை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர். அதன் ரகசியத்தைத்தான் தேடுகிறது படம்.
அமிதாப்பச்சன், அமீர்கான், கமலஹாசன், மம்முட்டி... போன்ற எந்தவொரு முன்னணி நடிகரும் இல்லாமல் உருவாக்கப்பட்டுள்ள படம், உலகின் உச்சத்தைத் தொட்டிருப்பது இன்னொரு அதிசயம்.
இன்டிலிஜென்ட்ஸ், அறிவு ஜீவிகள், உயர்படிப்பு படித்தவர்கள், விக்கி பீடியாவையே தன்னுள் வைத்துக் கொண்டிருப்பவர்களால்தான் குரோர்பதி போன்ற போட்டிகளில் மிகச் சாமர்த்தியமாக தனது அறிவுத் திறனை வெளிப்படுத்தி வெற்றி பெறமுடியும் என்ற நிலையில், ஒரு சாதாரண "சாய் வாலா" டீ-க்கார பையன் எப்படி வெற்றி பெறுகிறான் என்பதே ரகசியம்.
மும்பை, உலக பணக்கார நகரங்களில் மிக முக்கியமானது. விண்ணளவு உயர்ந்திருக்கும், பளபளக்கும் கட்டிடங்களுக்கு மத்தியில் எலிப் பொந்துகளில் வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கும் சேரி மக்களின் வாழ்க்கையும், அவர்கள் சந்திக்கும் பிரச்சனைகளும்தான் படம் முழுக்க விரவியிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் உலகின் உச்சத்திற்கு டென்டுல்கரை உருவாக்கியிருந்தாலும், மும்பை-தாராவி குழந்தைகளுக்கு விளையாடுவதற்கு இடமேது. ஒரு தனியார் திடலில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருக்கும் குழந்தைகளை காக்கி நாய்கள் குற்றவாளிகளைத் துரத்துவது போல் துரத்துகிறது. வாழ்க்கையின் ஓரத்திற்கு தள்ளப்பட்ட குழந்தைகள் காக்கிகளின் கைகளில் சிக்காமல் ஓடும் காட்சி சிறப்புடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. குழந்தைகள் ஓடும் பகுதிகளில் இமலயமலை அளவிற்கு உயர்ந்து நிற்கும் குப்பை மேடுகளும், காற்றுக்கூட புகமுடியாத அளவிற்கு மிக நெரிசலான தகரம் வேய்ந்த குடிசைகளும் இந்தியாவின் உண்மை முகத்தை சிறப்புடன் காட்டுவதாக உள்ளது. 60 ஆண்டு குடியரசு இந்தியா எப்படி ஒளிர்கிறது என்பதைத்தான் காணச் சகிக்கவில்லை என குமுறுகின்றனர் கனவுலகவாதிகள்.
ஒளிரும் இந்தியாவின் "நவீன கழிப்பிடம்" எப்படியிருக்கிறது என்று அற்புதமாக திரையிட்டுள்ளனர். திரைப்பட நடிகர்களின் நடிப்புகளையே தனது வாழ்வின் உச்சபட்ச கனவாக மாற்றி வைக்கப்பட்டுள்ள இந்திய மனங்கள் எப்படிப்பட்டது என்று விபரிக்கும் காட்சி நாற்றம் அடிக்க வைக்கிறது.
குடிசைகள் நிறைந்த தாராவிக்கு அமிதாப்பச்சன் ஹெலிக்காப்டரில் வருவதாகவும், இதைப் பார்ப்பதற்கு மக்கள் கூட்டம் சுனாமி பேரலையைப் போல் செல்வதையும், அந்த நவீன கழிப்பறையில் மாட்டிக் கொண்ட சிறுவன் "ஜமால் மாலிக்" (கதாநாயகன்) அப்படியே மூக்கை பிடித்துக் கொண்டு மலக்குழியில் இறங்கி... அதே வேகத்தில் அமிதாப்பிடம் சென்று ஆட்டோகிராப் வாங்கும் காட்சி மெய்சிலிக்க வைக்கிறது.
அதேபோல் வாழ்க்கையில் ஒவ்வொரு நாளும் செத்துக் கொண்டிருக்கும் சேரிவாழ் மக்களை "மதவாதிகள்" மதக்கலவரத்தை தூண்டி எப்படி வேட்டையாடுகின்றனர் என்பதை உலகின் கண்களுக்கு இந்தியாவில் படரும் பாசிசத்தை அழகாக படம் பிடித்துள்ளனர். இந்த கலவரத்தில் தனது குடும்பத்தினரை பலிக்கொடுக்கின்றனர் ஜமால் மாலிக்கும், சலிம் மாலிக்கும், அவர்களுடன் இன்னொரு தாய், தந்தையரை மதவெறிக்கு பலிகொடுத்த லத்தீக்காவும் அனாதையாக்கப்படுவதும்... அவர்கள் வாழ்க்கையில் ஒவ்வொரு கட்டமும் வாழ்வதற்காக போராடுவதும் மிக நேர்த்தியாக சித்தரிக்கப்பட்டுள்ளது.
மதவெறியர்களால் அனாதையாக்கப்பட்ட சிறுவர்கள் வயிற்றுப் பிழைப்புக்காக குப்பை மேடுகளில் குப்பைகளாக காலம் தள்ளுவதும், இதையும் கூட அனுமதிக்காத கிரிமினல் பேர்வழிகள் அந்தக் குழந்தைகளை கடத்தி பின்னர், அவர்களது கண்களைப் பிடுங்கி பிச்சை எடுக்க வைப்பதையும் நெஞ்சம் பதற காட்டப்பட்டுள்ளது. இந்தியாவில் வருடத்திற்கு ஆயிரக்கணக்கான குழந்தைகள் காணாமல் போவது ஏன்? என்ற கேள்விக்கான விடையை ஸ்லம்டாக் மில்லினியர் கொடுக்கிறது.
இத்தகையை மனித விரோதிகளிடம் இருந்த தப்பிக்கும் நமது கதாநாயகர்கள்... பசியாலும், பட்டினியாலும் துடிப்பதும் அதைத் தொடர்ந்து வயிற்றுப் பசிக்காக ரயில்களில் உணவை திருட முற்படும்போது ரயிலில் இருந்து தூக்கியெறியப்படுவதும் என இதயத்தை ரணமாக்கும் காட்சிகள் ஏராளம். அனாதைகளாக்கப்பட்ட நாளைய மன்னர்கள் மதவாதத்திற்கும், மதவெறியர்களுக்கும் நடமாடும் சாட்சியமாக உள்ளனர்.
பின்னர் தாஜ்மஹாலை எதேச்சையாக பார்க்கும் இந்தக் குழந்தைகள் சிலவற்றை கற்றுக் கொண்டு... முன்னேறுகின்றனர். ஆனால், ஒவ்வொரு படியிலும் வில்லன்கள்....
இடையில் கைவிடப்பட்ட லத்தீக்கா பாலியல் தொழிற்கூடத்திற்கு இரையாவதும், பின் அவளைத் தேடித் திரியும் மாலிக் சகோதரர்கள் அவளை கண்டுப்பிடித்து தப்பிக்க வைப்பதும்... இவர்களுக்குள் உறைந்து கிடந்த அன்பு மேலேழுந்து வருவதும் சிறப்பான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
இறுதியாக, குரோர்பதி நிகழ்ச்சியில் பங்கேற்கும் ஜமால் மாலிக் இறுதிக் கட்டத்தை எட்டுவதும் ஒரு மில்லியன் பணத்திற்கு அதிபதியாவதும், இறுதிக் கேள்வி ஒன்று மீதமிருக்கையில் நிகழ்ச்சியை நடத்துபவர்களே அவனை போலீசில் சிக்கவைத்து - தீவிரவாதி என பட்டம் சூட்டுவதும்... அதனால் போலீசின் அனைத்து சித்திரவதைகளையும் ஒருங்கே அனுபவிக்கும் ஜமால் மாலிக்கின் நடிப்பு அற்புதமானது. எலக்ட்ரிக் ஷாக் வைத்து உண்மையை வரவழைக்கத் துடிக்கும் போலீஸ் அதிகாரிகளிடம் தனது வாழ்க்கை அனுபவத்தை கதையாக கூறுவதே ஸ்லம்டாக் மில்லினியர். இறுதியில் வெற்றியின் கதைவை தட்டுகிறான் ஜமால்.
குறிப்பாக, இந்தியாவில் ஹீரோ என்றாலே அது இந்துவாகவும், வில்லன் என்றாலே அது முஸ்லீமாகவும் காட்டப்படும். ஆனால், ஸ்லம்டாக் மில்லினியர் அனைத்துவிதத்திலும் ஒரு வித்தியாசமான கதையே!
குறிப்பாக இதற்கான திரைக்கதையை எழுதிய சைமன் பீபே பாராட்டிற்குரியவர். சிறப்பான முறையில் படத்தை இயக்கிய டேனி போயலும், லவ்லீன் டான்டனும் பாராட்டிற்குரியவர்கள்.
படத்திற்கான இசையும், ஓஹே ஜோ... பாடலுக்கான இசையையும் சிறப்புடன் வடிவமைத்த ஏ.ஆர். ரஹ்மான் பாராட்டிற்குரியவர்.
ஒளிரும் இந்தியாவின் நிஜ முகத்தை உருவாக்கிய ஆட்சியாளர்களுக்கு நாம் என்ன பரிசளிக்கப்போகிறோம்!

February 23, 2009

என்னைக் கவர்ந்த விபச்சாரிகள்!


ரெட் லைட் ஏரியா, சிவப்பு விளக்கு பகுதி, பாங்காக் முதல் பாம்பே வரை வியாபித்து விரவிக் கிடக்கிறது. சிறு நகரம் முதல் பெரு நகரம் வரை எங்கெங்கும் வியாபித்திருக்கும் விபச்சாரம். இது யாரால் உருவானது? எப்படி உருவானது என்பதற்கு சுலபமான விடை இது சமூகத்தால் உருவாக்கப்பட்டது.


ஒரு காலத்தில் மன்னர்களின் அந்தப்புரத்தை அலங்கரித்தவர்கள். நூற்றுக்கணக்கான அந்தப்புர அழகிகளின் மயக்கத்திலேயே காலத்தை கழித்தவர்கள் மகா சக்கரவர்த்திகள். மன்னர்கள் எவ்வழியோ மக்களும் அவ்வழியே!


இதுவே நிலப்பிரபுக்களின் காலத்தில் "கோவிலுக்கு பொட்டுக் கட்டி" ஆடவிட்டு ஆசை நாயகியாக்கியவர்கள் ஏராளம்... ஏராளம்...


காலத்தின் கோலத்தால் தகுதிக்கேற்றபடி ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் முதல் கடைத்தெரு வரையிலும் தகுதிக்கேற்றபடி விபச்சாரம் நடக்காமலா இருக்கிறது! இவர்களையெல்லாம் உருவாக்கியது இந்த சமூகம்தான். விபச்சாரத்தை கண்டு ஆசாரமாக முகம் சுளிப்பவர்கள், ஏளனமாய் பார்ப்பவர்கள், இருட்டிலே வாழ்க்கையைத் தொலைத்தவர்களின் உண்மைக் கதைகளை அறியாதவர்கள். சமூகம் இவர்களை ஒதுக்கினாலும், சமூகத்தை இவர்கள் ஒதுக்குவதில்லை. அப்படிப்பட்டவர்களின் சிலர் குறித்து எழுதுவதே இப்பதிவின் நோக்கம்.


சென்னை பூக்கடை - பிராட்வே பகுதியில் உள்ள ஆறுமுகம் தெருவை தேவடியாள் (தேவர்களின் அடியாள்) தெருவென்றே அழைப்பார்கள். மாலை நேரங்களில் மங்கும் ஒளியில்தான் இவர்களது வாழ்க்கைக்கான பயணம் ஆரம்பிக்கும்.


அடிமைப்பட்டிருந்த இந்தியாவை பிரிட்டிஷ் கழுகுகளிடம் இருந்து மீட்பதற்காக நாடு முழுவதும் மக்கள் எழுச்சிகளும், கிளர்ச்சிகளும் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சென்னையும் இதற்கு விதிவிலக்கல்ல. மகாத்மாவின் அந்நிய துணி எரிப்பு போராட்டம், தனிநபர் சத்தியாகிரகப் போராட்டம், உப்பு சத்தியாகிரகப் போராட்டம் உச்சத்தில் இருந்த காலம்.


பிரிட்டிஷ் ஏவலாளிகளான போலீசாரின் லத்திக் கம்புகள் நாள்தோறும் மாற்றப்பட்டுக் கொண்டே இருந்தன. அடக்குமுறை அந்த அளவிற்கு இருந்தது. இந்தச் சூழ்நிலையில்தான், 1930களில் ஜமதக்கனி என்ற காங்கிரஸ் தொண்டர் தனிநபர் துணிக்கடை மறியலை பிராட்வேயில் நடத்தினார். சும்மா விடுமா காக்கிச் சட்டை! அதுவும் பிரிட்டிஷ் ஏகாதிபத்திய காக்கிச் சட்டையாச்சே! அன்றைய தினம் நாள்தோறும் ரத்தத்தை சுவைத்த லத்திக் கம்புகளுக்கு ஓய்வு கொடுத்தது காவல்துறை. அதற்கு பதிலாக வேறு ஒரு உத்தியை கடைப்பிடித்தது. எப்போதும் காவலர்களுக்கு நெருங்கிய நண்பர்களாக இருக்கும் ஒரு பேட்டை ரவுடியை ஜமதக்கனி மீது ஏவி விட்டது.


1980க்கு முன்னால் இப்போது இருப்பது போல் வீச்சரிவாள் எல்லாம் கிடையாது. பட்டன் கத்திதான் ரொம்ப பேமஸ். போலீஸ் ஏவிய அந்த சமூக விரோத தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டிருந்த ஜமதக்கனியின் மண்டையில் ஒரு பேனக் கத்தியை இறக்கி விட்டான். அவ்வளவுதான் துடி துடித்துப் போனார் ஜமதக்கனி. இரத்தம் பீறித்து அடிக்க அவர் துடித்துக் கொண்டிருந்தால்தான் என்ன, செத்துப் போனால்தான் என்ன? அவரை காப்பாற்றுவதற்கோ அல்லது மருத்துவமனைக்கு தூக்கிச் செல்வதற்கோ மக்கள் முன்வர பயந்தனர். அந்த அளவிற்கு பிரிட்டிஷ் கொடுமை மிகுந்திருந்த காலம். என்று


அது மட்டுமா? இப்படிப்பட்ட சுதந்திரப் பித்தர்களுக்கு யாராவது மருத்துவர்கள் வைத்தியம் பார்த்தால் அவர்களது பிழைப்பும் போய்விடும். அந்த அளவுக்கு கெடுபிடி. எப்படியோ ஜமதக்கனியின் நண்பர் ஒருவர் அவரை ரத்தம் துடி துடிக்க தூக்கிச் சென்றார் மருத்துவமனைக்கு அல்ல. தேவடியாள் தெருவிக்கு, அதான் ஆறுமுகம் தெருவுக்கு! அங்கே ஒரு வீட்டில் அவர் கதவை தட்டி உள்ளிருந்து வெளிப்பட்ட ஒரு பெண் பதறிப் போய் என்ன ஏது என்று கேட்காமல் அப்படியே அவர்களை உள்ளே அழைத்துச் சென்று கதவை தாழிட்டால். தன்னுடைய படுக்கையில் ஜமதக்கனியை அப்படியே படுக்க வைத்து விட்டு, அவருக்கு வைத்தியம் பார்க்கும் மருத்துவரை அழைத்து வந்தார். அந்த மருத்துவரும் மிகுந்த பயத்தோடு ஜமதக்கனியின் தலையில் சொருகப்பட்ட கத்தியை பக்குவமாக எடுத்து, மருந்திட்டு வைத்தியம் பார்த்தார். இந்த தகவல் யாருக்கும் தெரியாது. கிட்டதட்ட இரண்டு மாதக்காலம் ஜமதக்கனியை அந்த வீட்டிற்கு உள்ளே வைத்திருந்து வைத்தியம் பார்த்தார். அதுவரை அந்த பெண்ணின் முன் வாசல் கதவு யாருக்கும் திறக்கப்படவேயில்லை. வாடிக்கையாளர்கள் வருந்தினர்! என்ன ஏது என்று தெரியாமல் விழித்தனர். இருந்தாலும் கதவு திறக்கப்படவில்லை.


இரண்டு மாதம் கழித்து சுதந்திரப் பித்தர் ஜமதக்கனியின் உடல் நலம் தேறியவுடன் அந்த இதயம் உள்ள பெண்ணிடம் இருந்து விடைபெற்றுக் கொண்டு தனது இலக்கை நோக்கி பயணம் செய்யத் துவங்கினார். அந்த பெண் இவரிடம், "என்னை இப்படியே விட்டு விட்டுச் சென்றால் எப்படி? என்னை திருமணம் செய்து கொள்ளுங்கள்" என்று கூற, இவரோ, நான் ஏற்கனவே தேச சுதந்திரத்தை திருமணம் செய்து விட்டேன் எனவே உங்களை மறுமணம் செய்ய முடியாது என்று கூறிவிட, "நான் என்ன செய்வது? எனக்கு ஒரு வழியைச் சொல்லுங்கள்" என்று வற்புறுத்த... ஜமதக்கனியும், நீங்களும் தேசத்திற்காக மகாத்மா கூறிய வழியில் நூல் நூற்றுக்கொண்டே வாழ்ந்து விடுங்கள் என்று கூற அதை அப்படியே ஏற்றுக் கொண்ட அந்த பெண் தனது இறுதிக்காலம் வரை மேற்கொண்டிருக்கிறார். இவரது மிக நெருங்கிய உறவினர் தமிழகத்தின் முன்னால் முதல்வர் என்பது குறிப்பிடத்தக்கது. முன்வாசலை மூடியவர் சுதந்திர வாசலை திறப்பதற்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்டார் இந்த உத்தமமான பெண்ணை யாரால் மறக்க முடியும்!


ஏறக்குறைய இதே காலகட்டம் "கீழ வெண்மணி" கதாநாயகன் என்று இன்றும் போற்றப்படுபவர் பி.எஸ்.ஆர். (பி. சீனிவாசராவ்) கர்நாடகத்திலிருந்து தாய், தந்தை, சொந்தம், பந்தம் என்று அனைத்தையும் துறந்து, கல்விச் சாலையில் படித்துக் கொண்டிருந்தபோது சுதந்திர தாகம் பெற்று அனைத்தையும் தூக்கி்யெறிந்து விட்டு அரைக்கால் சட்டையோடு - தனது ரோஜசாப் பூ நிற வண்ணத்துடன் தான் பிறந்த பிராமண குல ஆசாராங்களை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு சுதந்திர நீரோட்டத்தில் இணைந்தார்.


ஜமதக்கனியைப் போலவே இவரும், காந்தியால் ஈர்க்கப்பட்டு சுதந்திர ஜோதியில் கலந்தவர். இவரும் 1930களில் தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டார். போலீசாருக்கு மிகுந்த பரிச்சயமானவர் பி. சீனிவாசராவ். முதல் நாள் போலீசாரிடம் பழுக்க அடி வாங்கி விட்டு, மறுநாள் அதே இடத்தில் மீண்டும் மறியலில் ஈடுபட்டு மறுநாளும் லத்திக் கம்புகள் முறியம் வரை அடி வாங்குவார்... சிறை செல்வார்... இதுதான் இவரது வாடிக்கை, வழக்கம். கிட்டத்தட்ட 8 முறை இதுபோல் தனிநபர் துணிக்கடை மறியலில் ஈடுபட்டு அடி வாங்கி சிறை சென்றுள்ளார். பிராட்வே துணிக்கடையில் வியாபாரம் சூடு பிடிக்கிறது என்றால் பி.எஸ்.ஆர். அடி வாங்குகிறார் என்று அர்த்தம்.


இப்படி ஒரு நாள் மறியல் செய்து கொண்டிருக்கும் போது நாள்தோறும் தண்ணிக்காட்டும் இவனை இல்லாமல் செய்து விட்டால்தான் நமக்கு தூக்கம் பிடிக்கும் என்று தீர்மானித்து போலீஸ் புடை சூழ வருகை தந்து நொய்யப் புடைத்து விட்டனர். பி.எஸ்.ஆர். அந்த இடத்திலேயே குற்றுயிரும், குலை உயிருமாக, ரத்தம் சொட்டச் சொட்ட மயங்கி விழுந்தார். பிரிட்டிஷ் நாய்கள் அத்துடன் விட்டதா? இவன் செத்துப் போய்விட்டான் என்று கருதி கூவம் சாக்கடையில் வீசிவிட்டுச் சென்று விட்டனர்.


மாலை நேரம் பொழுது இருள் கவ்வத் தொடங்கியது நட்சத்திரங்கள் தலைகாட்டத் தொடங்கின. யார் கண்ணிலும் படாமல் ஒரு தாய் ஓடி வந்தார், கூவத்தின் சாக்கடையோடு - ரத்தம் வடிந்துக் கொண்டிருந்த பி.எஸ்.ஆர்.ன் இதயத்தில் கை வைத்துப் பார்த்தார் அவரது இதயம் துடித்துக் கொண்டிருந்தது. உடனே அவரை தூக்கிச் சென்று தனது வீட்டில் வைத்து அவரை சுத்தம் செய்து, வைத்தியம் பார்த்தார். தாயின் அன்பை நினைவூட்டும் அந்த அம்மையாரின் செயலை தான் ஒருபோதும் மறக்க மாட்டேன் என்று பி.எஸ்.ஆர். கூறியிருக்கிறார். அவரும் ஒரு விலைமாதர் என்பதுதான் விதி! இருந்தாலும் என்ன? செவ்வாழை சிறு கதை எழுதி நிலப்பிரபுவின் சுரண்டல் மனப்பான்மையை படம் பிடித்த அண்ணா அவர்களின் கதையில் வரும் பெரும் நிலப்பிரபுவின் கோட்டையாக இருந்த தஞசை மண்ணை சிவப்பாக்கியவர். "அடித்தால் திருப்பி அடி", "இடுப்பில் இருக்கும் துண்டை தோளில் போடு" என்று அடிமைகளாய் இருந்த கூலி விவசாயிகளுக்கு போர்ப்பரணி கற்றுதந்த... விடுவித்த வீரனுக்கு மறுவாழ்வளித்தவர் அந்த தாய். இந்த விபச்சாரியை வரலாறுதான் மறக்குமா? பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் ஏவிவிட்ட கைத்தடிகள் இன்றைக்கு மண்ணோடு மண்ணாய் புதைந்து போய்விட்டார்கள் ஆனால், அந்த விபச்சாரி!


அடுத்து இந்த வரிசையில் உலக இலக்கியத்தில் மங்காத இடம் பெற்றிருப்பது "யாமா". இது ஒரு ரஷ்ய விபச்சாரி குறித்த கதை. அலக்சாண்டர் குப்ரினின் புரட்சிக் கதாநாயகி. யாமா ரஷ்யாவின் புகழ்பெற்ற ரெட் லைட் ஏரியா. ஓய்வு ஒழிச்சலின்றி இயங்கிக் கொண்டிருக்கும் நகரம். சமூகத்தின் உயர்ந்த அந்தஸ்தில் இருப்பவர்கள் எல்லாம் இந்த யாமாவுக்குள் அடக்கம். சொல்லப்போனால் பல ஒழுக்கக்கேடுகளை தடுக்கும் மையமாக யாமா செயலாற்றியது.


இப்படியான ஒரு விபச்சார விடுதிக்கு வருகிறாள் ஒரு ரஷ்யப் பெண் (பெயர் நினைவில் இல்லை.) இவளது அழகை வர்ணிப்பதற்கு வார்த்தைகள் இல்லை. அந்த அளவிற்கு உடல் அமைப்பும், முக அழகும் ஒருங்கே பெற்றவள். புதிதாக விபச்சாரத்தில் ஈடுபட விரும்புவதாக இந்த விடுதி உரிமையாளரிடம் கூறுகிறாள். அவளும் பல கேள்விகளை கேட்கிறாள்? எதற்காக நீ விபச்சாரத்தில் ஈடுபடுகிறாய்? குடும்பத்தில் சண்டையா? அல்லது வறுமையா? அல்லது வேறு நீ ஏதாவது போலீஸ் உளவாளியா? என்றெல்லாம் கேட்கிறாள். அனணத்துக்கும் இல்லை என்று பதில் கூறும் அந்த நாயகி, "ஆண்கள் மீது மோகம்; எனவே, அதிகமான ஆண்களை அனுபவிக்க வேண்டும்" என்ற தனியாத ஆசையே காரணம் என்று கூறுகிறாள்.
இருப்பினும் இது விபச்சாரம் என்பதால் நீ இங்கே கூச்சப்படக் கூடாது என்று அறிவுரை கூறி விபச்சாரத்திற்கு பொருத்தமானவளா என்று சோதனை செய்கிறாள். அதாவது அவளது உடலில் உள்ள அனணத்து துணிகளையும் நீக்கச் சொல்கிறாள், கதாநாயகியும் எந்தவிதமான கூச்சமும் இல்லமல் அனணத்து துணிகளையும் அப்படியே அவிழ்த்துப் போடுகிறாள். பின்னர் அவளது வாழைத் தண்டு போன்ற வளவளப்பான தொடைகளையும், மார்பகத்தையும் வேறு சில இடங்களையும் கையை வைத்து அழுத்திப் பார்த்து சோதனை செய்கிறாள். பின்னர் அவள் நீ ஒரு முதல்தரமான ஆள்தான் என்று கூறி. விடுதியின் சட்ட - திட்டங்களை எல்லாம் கூறுகிறாள். இங்கே பல அசிங்கமானவர்கள் கூட வருவார்கள். ஆனால், நீ அதற்கெல்லாம் கவலைப்படாமல் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுகிறாள்... அவள் அனைத்திற்கும் சம்மதிக்கிறாள். மறுநாளிலிருந்து அன்னா மார்க்கோவா விபச்சார விடுதி புதிய களை கட்டுகிறது. வருகிற அத்துனை கஸ்டமர்களும் புதியதாக வந்தவளைத்தான் தேர்வு செய்கிறார்கள். தொடர்ந்து சில மாதங்கள் நகர்கின்றன. இருந்தாலும் அந்த விடுதியை நடத்தும் அன்னாவிற்கு ஒரே குழப்பம். வருகிறவன் எல்லாம் அவளைத்தான் தேர்வு செய்கிறார்கள். ஆனால், ஒரு முறை வந்த பிறகு பின்பு வரவே மாட்டேங்கிறார்களே அது ஏன் என்று சக விபச்சாரிகளிடம் கேட்கிறாள். அதற்கு அவர்கள், அவள் படுக்கையில் சிணுங்க மாட்டேங்கிறாள்... சரியான ஒத்துழைப்பு தர மாட்டேங்கிறாள் என்று கூறுகிறார்கள். விடுதி உரிமையாளர் அந்த நாயகியை அழைத்து விசாரிக்கிறாள். நீ போலியாக சினுங்க வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால் அவள் அதற்கு நான் அப்படி செய்ய முடியாது, அப்படியெல்லாம் போலியாக நான் நடிக்க மாட்டேன் என்று கூறுகிறாள். உடனே இருவருக்கும் வாய்த்தகராறு முற்றுகிறது. இறுதியில் விடுதி உரிமையாளரை போலீசில் மாட்டி விடுவேன் என்று கூறுகிறாள் கதாநாயகி.


"இருந்தாலும் என்ன அவள் பழம் பெருச்சாளி அல்லவா? அதெல்லாம் ஒன்றும் நடக்காது பாப்பா இங்க இருக்கிற ஜீல்லா இன்ஸ்பெக்டர் முதல் ஏட்டு அய்யா வரை நம்ம கஸ்டமர். என்னை மீறி ஒரு பயலும் எதுவும் செய்ய முடியாது" என்று ஆணவமாக கொக்கரிப்பதோடு, இனிமேல் உனக்கு பாதுகாப்பு போட வேண்டியதுதான் என்று சத்தமிட்டாள்.


இந்நிலையில், சில நாட்கள் கழித்து அந்த கிழப்பெருச்சாளி கூறிய அதே இன்ஸ்பெக்டர் பூனையைப் போல் பம்மிப் பம்மி ஒரு உயர்தர அதிகாரியுடன் வேகவேகமாக அந்த விபச்சார விடுதிக்குள் நுழைகிறார். அந்த கிழட்டு சனியனை - விடுதி உரிமையாளரை கூப்பிட்டு, அந்த கதாநாயகியின் பெயரைச் சொல்லி இந்த அம்மா இங்கே இருக்கிறாரா என்று மிகுந்த பயம் கலந்த மரியாதையோடு கேட்கிறார். அவளும் பதறிப்போய் ஆமாம் என்றுச் சொல்ல! உடனே அந்த அம்மாவை கிளம்பி வரச்சொல் என்று மிரட்டுகிறாள். அந்த விடுதி உரிமையாளரோ அவரிடம் எனக்கு சில பாக்கிகள் இருக்கிறது என்று சொல்ல! கோபமடைந்த அந்த இன்ஸ்பெக்டர் ஏ கிழட்டு சனியனே அவர் யார் தெரியுமா? நீ என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய், உன்னை உள்ளே தள்ளிவிடுவேன் என்று பயமுறுத்த... உடனே பதறிப்போய் அந்த நாயகியை அழைத்து... உதவிக்கு ஒரு ஆளையும் அனுப்பி கிளம்பச் சொல்கிறாள்.


உதவிக்கு போன பெண் அந்த நாயகியிடம் கேட்கிறாள், இப்போது புரிந்து விட்டது நீங்கள் பெரிய இடத்திலிருந்து வருகிறீர்கள். வந்திருப்பவர் உங்கள் வீட்டுக்காரரா? என்று கேட்க இல்லை என்று சொல்கிறாள்? சகோதரரா என்று கேட்க அதற்கும் இல்லை என்கிறாள்? பின்னர் அவர் என்னுடைய நண்பர் என்று மட்டும் உரைக்கிறார். அது சரி எதற்காக நீங்கள் இந்த தொழிலுக்கு வந்தீர்கள் என்று கேட்க, அதற்கு நாயகி, நான் ஒரு எழுத்தாளர் விபச்சாரம் குறித்து ஒரு புத்தகம் எழுத உள்ளேன் அதற்காக வந்தேன் என்று கூறுகிறாள். பின்னர் தயாரான நிலையில் வாசலை நோக்கி வந்தவுடன் அந்த இன்ஸ்பெக்டர் காலில் விழாத குறையாக நாயகியிடம் மிகப் பணிவாக நடந்துக் கொள்கிறார்.


சில வருடங்கள் கழிகிறது. மீண்டும் வேறு ஏதோ ஒரு வேளையாக அதே விபச்சார விடுதிக்கு வருகிறார் அந்த இன்ஸ்பெக்டர். அப்போது அந்த விடுதி உரிமையாளர் - கிழட்டு சனியன் அந்த பெண் குறித்து கேட்க, "முகம் மாறிப்போன அந்த இன்ஸ்பெக்டர், அந்த தேவடியாள் நம்மை ஏமாற்றி விட்டாள். அவளை கூப்பிட வந்தவனும் மகாராணியின் உயர் அதிகாரியில்லை. இரண்டு பேருமே புரட்சிக்காரர்களாம்? அவள் இங்கே விபச்சாரம் என்ற போர்வையில் புரட்சிக்கு ஆள் பிடித்திருக்கிறாள்" என்று மூச்சு இறைக்க கூறுகிறான். அது சரி இப்போது அவள் என்ன ஆனால்? என்று கண்களை அகல விரித்துக் கேட்க, "அவள் மன்னர் மீது குண்டு வீசிய வழக்கில் கைது செய்யப்பட்டு தூக்கு மேடைக்குப் போய்விட்டாள், அவன் தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறான் என்று" முடித்தான்....

l
இந்த விபச்சாரியை உங்களுக்கும் பிடித்திருக்கும்... படியுங்கள் நக்கீரன் வெளியீட்டில் வந்திருக்கும் "யாமா" என்ற புத்தகத்தை... அதன் முழுமையான இலக்கிய மற்றும் கருத்தை சுவைத்திட.
இவர்களே எனக்குப் பிடித்த விபச்சாரிகள்! இதுபோல் இன்னும் ஏராளம், ஏராளம்... விபச்சாரம் எப்படி இந்த சமூகத்தால் உருவாக்கப்படுகிறது என்பதையும் "ஏழை படும் பாட்டையும்" படிக்கலாம்!



February 20, 2009

காக்கிச் சட்டையும் கருப்புக் கோர்ட்டும்






சென்னை டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர்களுக்கு இடையில் நடைபெற்ற கோரமான மோதல் நடைபெற்றபோது கைகட்டி, வாய்பொத்தி வேடிக்கை பார்த்த காவல்துறையின் செயல் தமிழக மக்கள் மத்தியில் அதிர்ச்சிகளை ஏற்படுத்தியது.

அதேபோல், நேற்றைய தினம் காவல்துறைக்கும் - வழக்கறிஞர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் காவல்துறையின் காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதல் அதைவிட பன்மடங்கு அதிர்வுகளை உண்டாக்கியுள்ளது.

தமிழக வரலாற்றில் இல்லாத அளவிற்கு இந்த தாக்குதல் சம்பவம் மிகக் கோரமாக நடைபெற்றுள்ளது. 100க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்களும், நீதிமன்ற ஊழியர்கள், நீதிபதிகள், பொதுமக்கள் என அந்த வளாகத்திற்கு உள்ளே கண்ணில் பட்டவர்களை எல்லாம் தாக்கி, தங்களது தடியின் வலிமை எப்படிப்பட்டது என்பதை காட்டியுள்ளது காவல்துறை.

சட்டம்-ஒழுங்கை கட்டுப்படுத்த கடமைப்பட்ட காவல்துறையே வன்முறை ஆயுதத்தை கையில் எடுத்துக் கொண்டால், சட்டமும் - கட்டுப்பாடும் எதற்கு என்ற கேள்வியே எழுகிறது. நடைபெற்ற வன்முறைச் சம்பவங்கள் குறித்து சி.பி.ஐ. விசாரிப்பதற்கு அனுமதிக்கப்பட்ட சூழலில் யார் தவறு செய்தவர்கள், கலவரம் நிகழ்வதற்கு யார் காரணம்? காவல்துறையே திட்டமிட்டு இத்தாக்குதலை நடத்தியதா? அல்லது கலவரம் நடைபெற வேண்டும் என்பதற்காக யாராவது மறைமுகமாக தூண்டி விட்டார்களா? என்ற கேள்விகள் எழாமல் இல்லை. எப்படி இருந்தாலும் விசாரணை முடிவை தமிழகம் மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சமூகமே எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறது. எனவே, அந்த விசாரணைக்குள் இந்த பதிவு புக விரும்பவில்லை. ஆனால் ஒரு உண்மை அடிபட்டவர்களில் 95 சதவிகிதம் வழக்கறிஞர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரும் அப்பாவிகள் என்பதுதான்.

தமிழக அரசியல் களமே இலங்கைப் பிரச்சனையில் பன்முனைகளில் பிரிந்து நிற்கையில், நமது வழக்கறிஞர்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா?. அவ்வாறு இருக்கையில், கடந்த 15 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றுள்ள நீதிமன்றப் புறக்கணிப்பு நடவடிக்கையால் அயர்வுற்ற பல வழக்கறிஞர்கள், அரசியலுக்கு அப்பாற்பட்டு நீதியை நிலைநாட்டவேண்டிய நீதித்துறை ஒட்டுமொத்தமாக முடங்கிக்கிடப்பது சரியா? என்ற கேள்வியை தங்களுக்குள்ளேயே எழுப்பாமல் இல்லை. இருந்தாலும் என்ன? உணர்ச்சிகளுக்கு மதிப்பளிப்பதுதானே மனித குலம். இதற்கு அவர்கள் மட்டும் விதிவிலக்கானவர்களா என்ன? ஆனாலும், இந்த (தமிழ்)உணர்ச்சியையை முதலாக வைத்து வியாபாரம் செய்துக் கொண்டு வருகிற அரசியல்வாதிகளுக்கும் அவர்களுக்கு பக்கபலமாக இருக்கும் வழக்கறிஞர்களும் இதற்கு விதிவிலக்காக இருக்க முடியுமா? தற்போதைய சம்பவத்தின் மூலம் மேலும் சில நாட்கள் நீதிமன்றம் ஓய்வெடுத்துக் கொள்ளலலாம்! ஆனால் நீதிக்காக ஏங்கும் அபலைகளின் கண்ணீர் யாரால் துடைக்கப்படுமோ?

இறுதியாக, காவல்துறையினரின் தடியடியால் பாதிக்கப்பட்டவர்கள் சென்னை அரசு பொது மருத்துவமனையில் தரைத்தளத்திலும், மூன்றாவது மாடியிலும் 60க்கும் மேற்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொருவர் மீது விழுந்த அடியும் காவல்துறையின் கண்ணியக்குறைவை பறை சாற்றுவதாகவே இருக்கிறது.

தடியடித் தாக்குதல் என்றால் முட்டிக்கு கீழேதான் தாக்கவேண்டும் என்பதெல்லாம் மரபாகிப் போய் மரத்துப்போயுள்ளது காவல்துறைக்கு. அதனால்தான் அவர்கள் தலையில் தாக்கியுள்ளனர். மண்டை உடையாதவர் களை பார்ப்பதே அபூர்வம் என்பதுபோல்தான் இருந்தது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர்களை கண்ட காட்சிகள்.

ஒரு நடுத்தர வயதுள்ள வழக்கறிஞர் நீதிமன்ற நூலகத்தில் படித்துக் கொண்டிருந்தாராம். வெளியில் என்ன நடக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாதாம். தாக்குதல் தொடங்கிய சில மணித்துளிகளில் குவிக்கப்பட்டிருந்த 5000 போலீசும் நீதிமன்றத்தில் உள்ள அத்துனை அறைகளுக்கு உள்ளேயும் - வெளியேயும் சென்று கோர நர்த்தணம் ஆடியுள்ளனர். இதில் நூலகத்தில் படித்துக் கொண்டிருந்த அந்த அப்பாவி வழக்கறிஞரும் காவல்துறையின் லத்திகளுக்கு இரையாகி மண்டை உடைந்து காணப்பட்டார். "நாங்கள் அப்பாவிகள்? ஏன் இவ்வாறு போலீஸ் நடந்துக் கொண்டது? நாங்கள் என்ன செய்தோம்? என்று மனம் உருக கேள்வி எழுப்பினார்".

இன்னொரு நீதிமன்ற ஊழியர் அவரது அரைக்குள்ளே இருந்தபோது கலவரத் தடுப்பு காவலர்கள் உள்ள நுழைந்ததும், "அய்யா என்னை விட்டு விடுங்கள் என்று காலில் விழுந்துள்ளார்? காவல்துறைக்கு இதயம் இருந்தால்தானே இந்த அபலையின் குரல் கேட்க! விழுந்ததே போதும் என்று மிதித்து துவைத்துள்ளனர்."

இன்னொரு வழக்கறிஞர் தப்பித்தால் போதும் என்று ஓடி ஒரு ரூமிற்குள் ஒளிவதற்கு சென்றபோது, "உன்னை துப்பாக்கியால் சுட்டு விடுவோம், எங்களை ஒன்றும் செய்ய முடியாது" என்று துப்பாக்கி முனையில் மிரட்டி பதம் பார்த்துள்ளனர்.

வேறு சிலர் கும்பலாக நீதிபதிக்கு பக்கத்தில் போய் நிற்கையில், அவர் ஓடாதீர்கள், "இங்கேயே உட்காருங்கள் என்று சொல்லியிருக்கிறார். அவர்களும் உட்கார வந்த வேகத்தில் அவர்களை துவம்சம் செய்து விட்டார்கள் ரியோட் கண்ட்ரோல் போலீசார்".

இன்னொரு சிவப்பான இளம் வழக்கறிஞரை "தோள்பட்டைகள், முதுகு, கழுத்து என்று மேலும் சிவக்க வைத்துத்துள்ளதோடு, காவல்துறையின் கொடிய பூட்ஸ் கால்களால் மதித்துள்ளனர். இதில் அவரது ஒரு கை செயலிழந்து விட்டதாக கூறினார்"

இப்படித்தான் ஒவ்வொருவரது கதையும்... நீண்டுக் கொண்டே இருக்கும்! காவல்துறை இதற்கு மேல் எல்லை மீற முடியாது என்ற அளவிற்கு தங்களது அனைத்து எல்லைகளையும் தாண்டி கொடூர வன்முறையை நிகழ்த்தியிருக்கிறது. இத்தகைய வன்முறை ஒரு சுதந்திர சமூகத்திற்கு ஆரோக்கியமானதல்ல. ஆட்சியாளர்கள் உணர்வார்களா?

இன்னொரு புறத்தில் டி.வி.யில் கண்ட காட்சிகள் தற்போதைய வழக்கறிஞர்களின் செயல்பாடுகளைக் கண்டு முகம் சுளிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது. பேட்டை ரவுடிகளிடம் இருந்தும், சமூக விரோதிகளிடம் இருந்தும் பாதிக்கப்படும் மக்களை சட்டத்தின் முன் நிறுத்தி சமூகத்தை காக்க வேண்டிய வழக்கறிஞர்களே பேட்டை வஸ்தாதுகளைப் போல் கல்லெறிவதும், காவல்துறையை சூறையாடுவதும், அங்கிருந்த ஆவணங்களை கொளுத்துவதும், எந்தவிதமான சமூகப் பொறுப்பும் இன்றி - வெறியாட்டம் ஆடுவதும் சட்டம் படித்து விட்டதாலேயே அதற்கு தாங்கள் கட்டுப்பட்டவர்கள் அல்ல என்பதைப் போன்ற தினமணியின் நியாயமான தலையங்கத்தைத்தான் உணர்த்துகிறது. நீதியைக் காப்பாற்ற வேண்டியவர்கள் நீதி தவறிய குற்றத்திற்கு உள்ளாகியிருக்கிறார்கள். முட்டை அடிப்பதும் - கல்லெறிவதும் நீதியைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை கொண்டிருந்தால் அவர்கள் தங்களது கருப்புச் சட்டைகளை கழற்றி வைத்து விட்டு அதையே தொழிலாகக் கொள்ளலாம். சமூகம் இவர்களது செயலை ஏற்கவில்லை என்பதையும் இங்கே சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.
மறுபுறத்தில் தேசத்தின் ஜனநாயகத்தையும் - மக்களின் பாதுகாப்பையும் உத்திரவாதப்படுத்தும் மிக முக்கியமான ஜனநாயகத் தூண்களில் ஒன்றுதான் நீதிமன்றம். இந்த நீதிமன்றத்தின் நீதிபதிகள் அவர்கள் வழங்கும் நீதிக்காகவே - நியாயத்திற்காகவே தலைவணங்கப்படுபவர்களாக உள்ளனர். இந்நிலையில் நடைபெற்ற சம்பவத்திற்கு தலைமை நீதிபதிதான் காரணம் என்று சென்னை மருத்துவமனையில் அடிபட்டவர்களை பார்க்க வந்த நீதிபதிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியும், முழக்கம் எழுப்பியும், அவர்களை பார்க்க அனுமதிக்காமல் வெளியேற்றிய சம்பவங்களை பார்த்த பொதுமக்களுக்கு நீதிபதிகள் மீதான மரியாயும், வழக்கறிஞர்கள் மீதான மரியாதையும் காற்றில் கரைந்து போனது! வழக்கறிஞர்ளின் இத்தகைய செயலை நாகரீக சமூகம் ஏற்காது!
தமிழகம் எதை நோக்கிச் செல்கிறது? அல்லது எதை நோக்கி செல்ல சதி தீட்டப்படுகிறது என்பதை ஆட்சியாளர்களும் - மக்களும் விழிப்பாய் இருந்து ஒற்றுமையுடன் செயல்படவேண்டிய நேரமிது.

February 18, 2009

பொதுவுடைமை இயக்க முன்னோடி சிங்காரவேலர்!

பேராசிரியர் முனைவர் முத்து குணசேகரன்

இந்திய சுதந்திரப் புரட்சியாளர்களிலே மூத்தவர் மட்டுமல்ல, முதிர்ந்தவர் ம.சிங்காரவேலர். சிலரே இவரினும் மூத்தவர்கள். அண்ணல் மகாத்மாகாந்தி, ரஷ்யப் புரட்சி வீரர் லெனின், இவர்களினும் மூத்தவர் சிந்தனைச்சிற்பி சிங்காரவேலர். 18-2-1860ல் பிறந்த இந்த மேதை 1946 பிப்ரவரி 11ல் மறைந்தார். இவர் மறைவை இராஜாஜி அவர்கள் “சுதந்திரப் பித்தரும், யோக்கியர்களில் ஒருவரும் மறைந்தார்” என்று குறிப்பிட்டார். இதனால் ம.சிங்கார வேலரின் ஒழுக்கமான அரசியல் செயல் பாட்டை நாம் புரிந்து கொள்ள முடியும்.


வெட்டுக்கிளிகளும் பச்சோந்திகளும் புகழப்பட்ட நேரத்தில் சிங்காரவேலரை-புரட்சிப் புலியை மக்கள் மறந்தனர் என்று பேரறிஞர் அண்ணா குறிப்பிட்டார். சிங்காரவேலர் இந்தியா சுதந்திரம் பெறுவ தற்கு ஓராண்டிற்கு முன்னமேயே மறைந்தார். செய்திகளை வகைதொகைப்படுத் திச் சொல்வதில் ம.பொ.சி விற்பன்னர். “இந்தியாவில் உருவாகிய இயக்கங்கள் நான்கு. இந்திய தேசிய காங்கிரஸ், சம தர்ம இயக்கம், சுயமரியாதை இயக்கம், தொழிற்சங்க இயக்கமென நான்கு. இந்த நான்கு இயக்கங்களிலும் நீக்கமற, நெருக் கமாக இடம்பெற்றவர் சிங்காரவேலர் மட் டுமே” என்பார் ம.பொ.சி. இவருடைய தீவிரவாதத்தினாலேயே அந்நாளைய இரகசியக் காவலர்கள் இவரை “சூடிவநன யபவையவடிச, சூடிவடிசiடிரள யபவையவடிச” என்று பதிவு செய்து வைத்தனர். அண்ணல் காந்தியின் காங்கிரசை விடவும் உண்மையில் அஞ் சத் தகுந்தது சிங்காரவேலரின் “இந்துஸ் தான் லேபர்கிஸ்ஸான் கட்சியே” என்று காவலர்கள் பதிவு செய்தனர்.


வரலாற்றில் 1925 டிசம்பரில் கான்பூ ரில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மாநாடு தொடங்கப் பெற்றதெனப் படிக்கிறோம். இந்த மாநாட்டை இங்கிலாந்து எதிர்க்கட் சித்தலைவர் கம்யூனிஸ்ட் சக்லத்வாலா வராத நிலையில் அதனைத் தொடங்கி வைத்தவர் ம.சிங்காரவேலர்தான். அத னால் பேரறிஞர் அண்ணா, சிங்காரவேல ருக்கு இணையாக லெனினைச் சொல்லலாம், டிராட்ஸ்கியைக் சொல்லலாம், சக் லத் வாலாவைச் சொல்லலாம் எனக் குறிப்பிட்டார். இந்தக் கம்யூனிஸ்ட் கட் சிக்கு இந்தியாவில் தோன்றிய முதல் முளை ஒன்று உண்டு. அதற்குப் பெயர் “இந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான்” கட்சி என்பது. அதனை முதன்முதலில் இந்தியாவில் தொடங்கி இரு இடங்களிலே மே நாளில் 1923ல் காங்கிரஸ் கொடியுடன் கம்யூனிஸ்ட் கொடியான கதிர் அரிவாள் சின்னம் பொறித்த செங்கொடியை ஏற்றிய வர் ஆசியாவிலேயே முதல் மனிதர் சிங் காரவேலர்தான்.


ஏங்கெல்ஸ், காரல் மார்க்ஸ் “கம்யூ னிஸ்ட் அறிக்கையை” வெளியிட்டதைப் போலச் சிங்காரவேலரும் “இந்துஸ்தான் லேபர் கிஸ்ஸான் கெஜட்” என்ற பத்திரி கையையும், தமிழில் “தொழிலாளி” என்ற பத்திரிகையையும் வெளியிட்டார். அதற்கு முன்னர் “நான் கோவாப்பரேட்டர்” என்ற பத்திரிகை பிரிட்டிஷ் அரசால் முளை யிலேயே கிள்ளி எறியப்பட்டதென அறிகி றோம். இதனாலேயே ஆத்திரமுற்ற பிரிட் டிஷ் அரசு சிங்காரவேலர் மீது “கான்பூர் சதி வழக்கு” என்ற வழக்கையும் தொடர்ந்தது.


அண்ணல் காந்தியின் மக்கள் செல்வாக்கை உணர்ந்திருந்த சிங்காரவேலர் காந்தி தன்னினும் இளையவர் என்றாலும் காந்தியின் ஆணையை ஏற்று அவரின் தொண்டன் எனத் தன்னை கூறிக் கொண்டார். அந்நியப் பொருட்களைப் புறக்கணித்தல், நீதிமன்றங்களைப் புறக் கணித்தல் என்ற காந்தியின் ஆணைக் கிணங்கத் தன்னுடைய வழக்கறிஞர் அங் கியைத் திருவல்லிக்கேணி கடற்கரை யில் மக்கள் முன்னால் தீ மூட்டி மக்களுக்கு போர் உணர்ச்சியை ஊட்டினார். பிரிட்டிஷ் ஆட்சியின் நீதிமன்றங்களைப் புறக்கணித்த சிங்காரவேலரும், வீரமுரசு சுப்பிரமணிய சிவாவும் “இந்துஸ்தான் பஞ்சாயத்து” என்ற அமைப்பில் மக்க ளின் சிவில் கிரிமினல் வழக்குகளை இருவரும் தீர்த்து வைத்தனர்.


1922ல் கயா காங்கிரஸ் மாநாட்டிற்குச் சென்றிருந்த சிங்காரவேலர் அதுவரை யாரும் பயன்படுத்தாத இளைஞர்களே உச்சரிக்க அஞ்சுகின்ற “காம்ரேட்” என்ற சொல்லால் 400க்கும் மேற்பட்ட இளை ஞர்களை அழைத்தார். உலகக் கம்யூ னிஸ்ட்டுகள் சார்பாக இந்த மாநாட்டில் அவர்களின் வாழ்த்தைச் சொல்வதற்காக வந்துள்ளேன் என்று கூறினார். 1922 லேயே அந்த கயா மாநாட்டில் சிங்கார வேலர் இந்தியர்களுக்கு வேண்டியது “பரி பூரண சுயராஜ்யமே” என்று குறிப்பிட்டது அதிசயமென்று எம்.என்.இராயின் “வேன் கார்டு” பதிவு செய்துள்ளது. 1917ல் பாசிச நாசிச அரசுகளுக்கு எதிராக உலகத் தொழிலாளர்கள் குரல் கொடுக்க வேண் டுமென்று மாஸ்கோ லெனின் அறிவித்த கோரிக்கையை ஏற்று 1917லேயே சென் னைத் துறைமுகத் தொழிலாளிகளைத் திரட்டி ஆர்ப்பாட்டம் செய்தவர் சிங்கார வேலர் என்று காலஞ்சென்ற செஞ்சட் டைப் பஞ்சாட்சரம் குறிப்பிடுவார்.


1920க்கும் முன்னரேயே ரஷ்ய லெனினுடன் இரகசியத் தொடர்பு கொண்டிருந் தார் ம.சிங்காரவேலர், அந்தப் பாசத்தின் காரணமாகவே இந்தியாவிலிருந்து செல்லுகின்ற அனைவரிடமும் மாமேதை லெனின் “இந்தியாவின் கிழச்சிங்கம் சிங்காரவேலர் எப்படியிருக்கிறார்?” என்று கேட்பதுண்டாம். பாடை ஏறினும் நூலது கைவிடேல் என்பது தமிழ் முது மொழி. அந்த மொழிக்கு இலக்கணமாக வாழ்ந்தவர் சிங்காரவேலர். தென்னாட் டில் தனிப்பட்டவர்கள் நூலகங்களில் மிகப்பெரிய நூலகம் சிங்காரவேலர் நூல கம். 20,000க்கும் மேற்பட்ட நூல்கள் அவ ருடைய நூலகத்தில் இடம் பெற்றிருந்தன.


சரியான முயற்சி இன்மையால் அவ்வ ளவு புத்தகங்களும் பகத்ஹவுசில் சேர்க்கப்பட்டு அழிந்து போயின. ஆனாலும் ரஷ்ய ஆய்வாளர் மித்ரோகின் முயற்சியி னால், நாகை கே.முருகேசன் பேருழைப் பால் மாஸ்கோவிலுள்ள மிகப்பெரிய லெனின் நூலகத்தின் உட்பிரிவில் “சிங் காரவேலர் நூலகம்” என்று அவரின் மிஞ் சிய சில புத்தகங்களாவது சேர்த்து வைக் கப்பட்டுள்ளது நமக்கெல்லாம் நிறை வளிக்கும் செய்தியாகும்.


1927ல் 42வது காங்கிரஸ் மாநாடு சென்னையில் நடைபெற்றது. நேரு தலைமையில் நடைபெற்ற அந்தக் காங்கிரஸ் மாநாட்டிற்கு நகரசபை உறுப்பினர் என்ற முறையில் அனைத்து உதவிகளையும் செய்தவர் சிங்காரவேலர்தான். சென்னைக்கு வந்த லண்டன் நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரான கம்யூனிஸ்ட் சக்லத்வாலாவை நகரசபை வரவேற்கத் தீர்மானம் தந்தவர் சிங்காரவேலர். சுயமரி யாதை இயக்கத்தோடு சுழன்று கொண்டி ருந்த தந்தை பெரியாருக்கு பொதுவுடைமை என்னும் புத்தொளியைப் பாய்ச்சி ரஷ்யாவிற்கும் பரிந்துரைக் கடிதத்துடன் அனுப்பி வைத்தவர் சிங்காரவேலர். அதனால்தான் ஈ.வெ.ராமசாமி நாய்க்கன் கெட்டுவிட்டான், சிங்காரவேலுச் செட்டி அவனைக் கெடுத்து கம்யூனிஸ்ட்டாக்கி விட்டான்” என இரகசியக் காவலர்கள் குறிப்பெழுதினர். பெரியாரின் சுயமரி யாதை இயக்கமும், சிங்காரவேலரின் சமதர்ம இயக்கமும் 1932 முதல் 1934 வரை பேரியக்கமாகச் செயல்பட்டது. 400க்கு மேற்பட்ட சமதர்ம இயக்கங்கள் தமிழகத்தில் தோற்றுவிக்கப்பட்டன. பெரி யார், சிங்காரவேலர் செயல்பாடு கண்டு பிரிட்டிஷ் அரசு, கம்யூனிஸ்ட் இயக்கத் தை 1934ல் தடை செய்தது.


மிகச்சிறந்த பேச்சாளராகவும், எழுத் தாளராகவும் இருந்த சிங்காரவேலர் வட இந்திய இரயில்வே போராட்டத்திற்கு முகுந்தலால் சர்க்காருடன் இணைந்து அரும்பாடுபட்டார். பெரும்சாதனை படைத்தார். தென்னிந்திய சதிவழக்கில் தலைமை தாங்கி பத்தாண்டுகள் சிறைத் தண்டனையும் சிங்காரவேலர் பெற்றார். உலகிலுள்ள தமிழர்கள் கேட்ட கேள்வி களுக்கெல்லாம் தமிழில் பதில் சொல்லி தெளிய வைத்தவர் சிங்காரவேலர். இவ ரது கட்டுரைகள் குடியரசு, புரட்சி, பகுத் தறிவு, புதுவை முரசு, புதுவுலகம், சுதர்மா, தொழிலாளர், இந்து, சுதேசமித்திரன், நவசக்தி இவைகளிலெல்லாம் இடம்பெற் றன. இவர் பயன்படுத்திய புனைபெயர் கள் தோழர், சமதர்மி, அப்சர்வர். எமி னென்ட்லாயர், இமாலய தவசி, பூகை வாதி, சிந்தனைவாதி, சோசலிஸ்ட், சைன்டிஸ்ட், யுக்திவாதி, முகமூடி, சிங்கி ரண்டு என்பனவாகும்.


உலகத் தொழிலாளர்களை ஒருங்கிணைக்கப் பாடுபட்ட சிங்காரவேலர் அநியாயமாகக் கொல்லப்பட்ட சாக்கோ, வான்சிட்டி என்ற அமெரிக்கத் தொழிலாளர்களுக்காகவும் சென்னையில் கண் டனக் கூட்டங்கள் நடத்தினார். மிகக் கொடுமையாகக் கொல்லப்பட்ட ஏழு பி அண்டு சி மில் தொழிலாளர்கள் சவ அடக்கத்திற்குத் தலைமை தாங்கினார். வீட்டில் அடைக்கப்பட்ட நிலையிலும் வீட்டிலிருந்தே சைமனுக்குக் கருப்புக் கொடி காட்டிய சிங்காரவேலரின் வீரம் ஈடு இணை இல்லாதது. அயோத்திய தாச பண்டிதர், லட்சுமணதாசு நாயுடு இவர்களுடன் இணைந்து அளப்பரிய புத்த பணிகளை 1900லேயே ஆற்றினார். இவரிடமிருந்து மார்க்சியத்தையும், டார் வினிசத்தையும் கற்றதால் சிங் காரவேல ருக்கு மாணவரானதாகத் திரு.வி.க. குறிப்பிடுகின்றார். 


இவருடைய தீவிரவாதத்தைப் பொறுக்க முடியாத வெலிங்டன் பிரபு சிங்காரவேலரை அவர் வாழ்விடமான நடுக்குப்பத்திலிருந்து அப்புறப்படுத் தினான். இன்றைக்கும் வெலிங்டன் வளா கத்தில் சிங்காரவேலரின் முன்னோர்கள் கந்தப்பச்செட்டி, அருணாச்சலசெட்டி சமாதிகளைக் காணமுடியும். 1946 பிப்ர வரி 11ல் “உலகில் போர் ஒழியட்டும்; அமைதி தலைக்கட்டும்” என்றே சிங் காரவேலரின் இறுதிமூச்சு அடங்கியது.

February 17, 2009

மறைமுக பார்ப்பனீயத்தை விதைக்கும் ம.க.இ.க.!

வி.பி. சிங்கை இழிவுபடுத்தும் 'புதிய ஜனநாயகம்!
விடுதலை இராசேந்திரன்

'மக்கள் கலை இலக்கியக் கழக'த்தை பெரியார் திராவிடர் கழகத்தின் தோழமை சக்தியாகவே கருதுகிறோம். களப் பணிகளில் பல்வேறு சூழல்களில் கரம் கோர்த்து நிற்கும் இயல்பான சூழ்நிலைகள் வரும்போதெல்லாம் இரு சக்திகளும் கரம் கோர்த்தே களமிறங்கி வருகின்றன. குறிப்பாக 'இந்து' எதிர்ப்பு; பார்ப்பன எதிர்ப்பு என்ற கோட்பாடுகள் - இரு அணியின் தோழர்களையும் நெருக்கமாக்கியுள்ளன. ஆனாலும்கூட அண்மையில் அவர்களின் 'புதிய ஜனநாயகம்' ஏட்டில் வி.பி.சிங் பற்றி வெளிவந்த ஒருகட்டுரை - 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புப் பற்றிய பல்வேறு அய்யங்களை எழுப்பியிருப்பதை நாம் சுட்டிக் காட்ட வேண்டியிருக்கிறது.

'காக்கை குயிலாகாது; பதவியைக் காப்பாற்றிக் கொள்ள இந்து மதவெறியர்களுக்கு அனுசரணையாக நடந்து கொண்டவர்தான் வி.பி.சிங்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள அக்கட்டுரை, வி.பி.சிங்கைக் குற்றவாளி கூண்டில் நிறுத்தியுள்ளது. குஜராத் மோடி அளவில் வி.பி.சிங்கைக் கொண்டு வந்து நிறுத்தி, "குற்ற"ப் பட்டியல்களை அடுக்கியிருக்கிறது. பச்சைப் பார்ப்பனியப் பார்வையில் வெளிவந்திருக்கும் அக்கட்டுரை 'துக்ளக் சோ', 'சு.சாமி' கும்பலை நிச்சயமாக மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியிருக்கும். 'பொதுவுடைமை கட்சிகளில் மீண்டும் தமது குரல் ஒலிக்கத் தொடங்கிவிட்டது' என்று "அவாள்"கள் கருதினால், அதில் தவறு இல்லை என்பதே நமது கருத்து.

இந்திய அரசியலில் பார்ப்பனர்கள் மற்றும் 'அவாள்' ஊடகங்களின் கடுமையான வெறுப்புக்குரிய மனிதர் தான் வி.பி.சிங். அவரின் மரணம் கூட ஊடகங்களால் 'இருட்டடிப்பு' செய்யப்பட்டன. தங்களின் வஞ்சகத்தைத் தீர்த்துக் கொண்டார்கள்; அவரது மறைவையொட்டி சிறப்புக் கட்டுரைகள் எதையும் எந்த பார்ப்பன தேசிய ஏடும் வெளியிடவில்லை. பார்ப்பனர்கள் 'கள்ள மவுனத்தால்' வி.பி.சிங்கை அவமதித்தார்கள் என்றால் 'புதிய ஜனநாயகம்' பததிரிகையோ வெளிப்படையாகவே தமது அவமதிப்புகளைப் பதிவு செய்து, அதில் மகிழ்ச்சி அடைகிறது.

காங்கிரஸ் அரசியலில் பொது வாழ்க்கையைத் தொடங்கிய வி.பி.சிங், பிறகு காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலுக்கு வந்தார் என்பது வரலாறு; தமது சொந்த நிலங்களை 'பூமி தான' இயக்கத்துக்கு வழங்கினார். அமைச்சர் பதவிகளை வகித்தார். ஆனால், வி.பி.சிங்கின் பொது வாழ்க்கை காங்கிரஸ் அரசியலில் முடங்கிக் கிடந்தபோது, காங்கிரஸ் இழைத்த தவறுகளையெல்லாம் பட்டியலிட்டு அதை வி.பி.சிங் மீது சுமத்தி, அவற்றையெல்லாம் எதிர்த்தாரா என்று 'புதிய ஜனநாயகம்' கேள்வி எழுப்புவது - அதன் காழ்ப்புணர்ச்சியை வெளிப்படுத்துகிறதே தவிர, நேர்மையான சமூகப் பார்வையை அல்ல. காங்கிரஸ் அரசியலில் மூழ்கிக் கொண்டிருக்காமல், அதன் சுயரூபத்தை அறிந்து வெளியேறி - காங்கிரஸ் எதிர்ப்பு அரசியலை தொடங்கியதுதான் வி.பி.சிங்கின் சிறப்பு.

'இரண்டு அரசியலிலும் எங்களுக்கு உடன்பாடில்லை; நாங்கள் மூன்றாவது அரசியல் அணி' என்பது 'புதிய ஜனநாயகத்தின்' கொள்கையாக இருக்கலாம். அந்தக் கொள்கைக்கு வந்து சேராத எவருமே 'கடைந்தெடுத்த அயோக்கியர்கள்' தான் என்ற நிலைப்பாட்டில் எழுதுவதும் - பேசுவதும் கட்சி வாதமாகத்தான் இருக்க முடியும். லட்சியவாதிகள் - கட்சிவாதிகளாக முழுமையாக மாறி நிற்பது மக்களை அணி திரட்டுவதற்கு - ஒரு போதும் பயன்படாது. அவர்களின் சுயதிருப்திக்குத்தான் தீனி போடும்.

வி.பி.சிங் பிறப்பித்த பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டு ஆணையை சில அரசு பதவிகளுக்கான சலுகைகளாக உண்மையான பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையாளர்கள் எவரும் சுருக்கிப் பார்த்து விட முடியாது. மாறாக இந்திய அரசியலில் அதிரடி மாற்றங்களை உருவாக்கிய நடவடிக்கை அது. பார்ப்பன அரசியல் தலைமையைப் புரட்டிப் போட்டு, பார்ப்பனரல்லாத தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை அணி திரட்டலுக்கு வழியமைத்து அவர்கள் தேர்தல் அரசியலை நிர்ணயிக்கும் செல்வாக்கு மிக்க சக்திகளாக்கிய மாற்றத்தை அந்த ஆணை தான் கொண்டு வந்தது.

பார்ப்பனர்களுக்கு வி.பி.சிங் மீது எழுந்த கடும் கோபத்துக்கு இதுவே அடிப்படை. பார்ப்பனர்களுக்கு மட்டுமல்ல, அதுவரை பார்ப்பன மேலாதிக்கம் - சாதியமைப்புகளைக் கவனத்திலே எடுக்காமல், வர்க்கக் கண்ணோட்டத்தில் 'புதிய ஜனநாயக'ப் புரட்சிகளைப் பேசி வந்த பொதுவுடைமை கட்சிகளும், இதனால் நெருக்கடிக்கு உள்ளாயின என்பதும் மறுக்கப்பட முடியாத உண்மை. தங்களது நிலைப்பாடுகளை மாற்றிக் கொள்ளும் நிர்ப்பந்தத்தை இந்த மனிதன் உருவாக்கி விட்டானே என்ற ஆவேசத்தை - தங்களது அடி உள்ளத்தில் புதைத்து வைத்திருந்தவர்கள்தான் வி.பி.சிங்கை அவர் மறைவிலும் கொச்சைப்படுத்தத் துடிப்பவர்களாக இருக்கிறார்கள். மாறாக, சரியான சமூகப் பார்வைக்கு 'மண்டலாக்கம்' வெளிச்சம் தந்தது என்று கருதுவோர், வி.பி.சிங்கின் பங்களிப்புக்கு ஏற்பு வழங்கி பாராட்டுவார்கள்.

'புதிய ஜனநாயகத்தின்' இந்தக் கட்டுரை மண்டலாக்கத்தால் பதறிப் போன பார்ப்பனர்கள் பக்கம் அது நிற்பதையே உணர்த்துகிறது.

1989 இல் வி.பி.சிங் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்த போது, "அதை நாங்கள் எதிர்க்கவும் இல்லை; ஆதரிக்கவும் இல்லை" என்று எழுதிய 'புதிய ஜனநாயகம்' "மண்டல் குழு பரிந்துரை அமலாக்கமும் எதிர்ப்பும் அரசியல் பயன்களை அடைவதற்காக மேல்சாதிகளுக்கிடையே நடக்கும் மோதல் சண்டை" என்றும் எழுதியது. ('புதிய ஜனநாயகம் - மார்ச், 2003) வி.பி.சிங் நாட்டை சாதிவாரியாகக் கூறு போட்டுவிட்டார் என்று 'அருண்சோரி'களும், 'சோ'க்களும், பார்ப்பனர்களும் ஏதோ, சாதியமைப்பையே வி.பி.சிங் தான் உருவாக்கியது போலக் கூப்பாடு போட்டார்கள். அதே பார்ப்பன குரலைத்தான் 'புதிய ஜனநாயகம்' அன்று இவ்வாறு ஒலித்தது. "நம்புங்கள்; இன்னமும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை என்பதைத் தவிர, நாடு ஒரு உள்நாட்டுப் போரில் மூழ்கிப் போய்விட்டது, சாதிப்போர், மதப்போர், இனப் போராக." (புதிய ஜனநாயகம், அக்.16, 1990)

மண்டல் குழு பரிந்துரையை எதிர்த்து நாடு முழுதும் கலவரத்தை உருவாக்கிய பார்ப்பன சக்திகளைக் கண்டித்து, ஒடுக்கப்பட்ட மக்கள் பக்கம் நிற்க வேண்டிய 'புதிய ஜனநாயகம்' அதைச் செய்யவில்லை. மாறாக - இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்களையும் சேர்த்தே குற்றவாளியாக்கியது.

"இடஒதுக்கீட்டை ஆதரித்தும் எதிர்த்தும் சாதி அடிப்படையிலும், அயோத்தி விவகாரத்தில் மத அடிப்படையிலும் நடக்கும் கோரக் கொலைகள், வன்முறை வெறியாட்டங்கள் மனசாட்சியுடைய அனைவரையும் வெறுப்பும், அதிருப்தியும் அடைய வைக்கின்றன" என்று எழுதியதோடு "அரசு அதிகாரங்களைப் பகிர்ந்து கொள்வதற்காக மேல்சாதி மேட்டுக் குடியினரிடையே நடக்கும் சாதிச் சண்டைகளை அம்பலப்படுத்தி முறியடிப்போம்" என்று அறைகூவலும் விடுத்தது.

வி.பி.சிங் ஆட்சியின் உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பார்ப்பன சக்திகள் தொடர்ந்த வழக்கில், பல்வேறு நிபந்தனைகளுடன் 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீhப்பளித்தபோது, 'புதிய ஜனநாயகம்' இவ்வாறு எழுதியது. "இடஒதுக்கீடு ஆதரவும் சரி; எதிர்ப்பும் சரி; தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்கள் உட்பட சகல பிரிவு உழைக்கும் மக்களையும் அடக்கி ஒடுக்கிச் சுரண்டும் தரகு அதிகார முதலாளிகள், நிலப் பிரபுக்களுக்குச் சேவை செய்யும் அரசு எந்திரத்தில் பதவி - இடம் பிடிப்பதற்கான போட்டா போட்டியும் - நாய்ச் சண்டையும் தான் இந்த அப்பட்டமான உண்மை இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளது" என்று எழுதியது ('புதிய ஜனநாயகம் 1993 - செப். 16-31, அக் 1-15)

ம.க.இ.க.வின் அரசியல் அமைப்பான இந்தியப் பொதுவுடைமை கட்சியின் (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) அதிகாரப்பூர்வ ஏடான "புரட்சிப் புயல்", "இடஒதுக்கீடு கொள்கை மக்கள் சாதிகளாகப் பிரிந்திருப்பதை சாசுவதமாக்குகிறது" என்று எழுதி, பார்ப்பனர்களின் நிலைப்பாட்டையே தனது கொள்கை என்று அறிவித்திருந்தது. ('புரட்சிப் புயல்' - 1985 டிசம்பர்)

"ஒரு அரசியல் தலைவரை - எந்த வர்க்கத்துக்கு சேவை செய்தார் என மதிப்பீடு செய்யாமல், தனி மனிதப் பண்புகளையும், ஒரு சில சீர்திருத்த அறிவிப்புகளையும் மட்டும் வைத்து மதிப்பீடு செய்து, துதிப்பாடி போற்றுவது என்பது இன்னொரு மோசடியே" என்று, எழுதும் 'புதிய ஜனநாயக'த்தைப் பார்த்து, நாம் கேட்க விரும்புவதெல்லாம் இதுதான். அரசியல் தலைவருக்கு பொருந்தக்கூடிய இலக்கணம் அரசியல் கட்சிக்கும் பொருந்தக் கூடியது தானே; அப்படியானால் 'புதிய ஜனநாயகம்' இடஒதுக்கீட்டில் மேற்கொண்ட நிலைப்பாடு எந்த வர்க்கத்துக்கு சேவை செய்வதாகும் என்ற கேள்வியைத்தான் நாம் திருப்பிக் கேட்க விரும்புகிறோம். இடஒதுக்கீட்டில் கண்டிப்பான எதிர்நிலை எடுத்திருந்த புரட்சிகரக் குழுக்களை எல்லாம் வி.பி.சிங்கின் ஆணை நெருக்கடிக்குள்ளாக்கி விட்டதன் சீற்றத்தை 'புதிய ஜனநாயக'த்தின் கட்டுரையிலும் பார்க்கிறோம்.

போபர்சு பீரங்கி ஊழலில் ராஜீவ்காந்தியோடு சமரசம் செய்து கொள்ள மறுத்ததால் காங்கிரசை விட்டு வெளியேறினார் வி.பி.சிங் என்ற உண்மையை 'புதிய ஜனநாயகம்' மறைத்து - "கறைபடாதவர் என போற்றப்படும் இவர் போபோர்சு பீரங்கி விவகாரத்தில் வெளியேறி ஜனமோர்ச்சா எனும் கட்சியை உருவாக்கினார்" என்று எழுதுகிறது. கறைபடாதவராக இருந்த காரணத்தினால் தானே வெளியேறினார்?

போபோர்ஸ் ஊழலை அதிகாரத்தைப் பயன்படுத்தி மூடி மறைக்க முயன்றார் ராஜீவ். வி.பி.சிங் அதிகாரத்துக்கு வந்த பிறகு தான் பல தடைகளைக் கடந்து 'முதல் தகவல் அறிக்கையே' பதிவு செய்யும் நிலை உருவானது என்பதை எல்லாம் மறைத்து, குற்றவாளி ராஜீவ் கும்பலை தண்டிக்கவோ, விசாரிக்கவோ இல்லை என்று எழுதுவது பொறுப்புள்ள விமர்சனமாகுமா? 27 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து, வி.பி.சிங் ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக ராமன் ரதயாத்திரையைத் தொடங்கினார் அத்வானி. பீகாரில் யாத்திரை தடை செய்யப்பட்ட நிலையில், வி.பி.சிங் ஆட்சிக்கு பா.ஜ.க. ஆதரவைத் திரும்பப் பெற்ற வரலாறுகளையெல்லாம் மறைக்க, 'புதிய ஜனநாயகம்' ஏன் துடிக்க வேண்டும்? பீகாரில் லாலு, அத்வானி யாத்திரையைத் தடுத்து நிறுத்தியது, வி.பி.சிங், ஒப்புதல் பெற்றுத் தானே? ஏதோ வி.பி.சிங்கை கேட்காமல் லாலுவே முடிவு எடுத்தது போல் ஏன் திரித்து எழுத வேண்டும்?

ராஜீவ் ஈழத்துக்கு இந்திய ராணுவத்தை அனுப்பினார் என்றால், ராணுவம் திருப்பி அழைக்கப்பட்டது வி.பி.சிங் பிரதமராக இருந்த போதுதான்; 'இன்னும் கேவலமாக தோற்பதைவிட, நாடு திரும்புவதே மேல்' என்ற முடிவின் பேரில் வி.பி.சிங் திருப்பி அழைத்ததாக அதையும் கொச்சைப்படுத்துகிறது 'புதிய ஜனநாயகம்'.

ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும் - வி.பி.சிங் - புரட்சிகர மார்க்சிய லெனினியக் கட்சியின் உறுப்பினர்கள் அல்ல. ம.க.இ.க.வின் தத்துவார்த்தப் பார்வையில் கூற வேண்டுமானால், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவ நிலப்பிரபுத்துவ அரசியலில் இருந்த ஒருவரே, அந்த அரசியலுக்குள் அதிர்வுகளை நிகழ்த்தியவர் என்பதுதான். அந்த அதிர்வுகளின் தாக்கத்தைக் கவனத்தில் கொள்ளாமல் ஏற்கனவே இருந்த 'சமூக நிலையைக் குலைத்து விட்டாரே' என்று புலம்பும் பார்ப்பனியக் குரலோடு தன்னையும் சேர்த்துக் கொண்டு அதன் மூலம் தன் பங்கிற்கான 'சேற்றை' பார்ப்பனர்களுடன் சேர்ந்து கொண்டு வி.பி.சிங் மீது வீசுவது பார்ப்பனிய சார்புப் பார்வை அல்லவா?

'புதிய ஜனநாயகத்தின்' கட்டுரை நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்புகிறது. இடஒதுக்கீட்டுக் கொள்கையில் அக் கட்சியின் தெளிவான நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள விரும்புகிறோம். "இந்து மதத்தின் ஆன்மாவாக இருக்கும் பார்ப்பனியத்தை சாதிய அடுக்குமுறை மற்றும் ஒடுக்குமுறை அமைப்பை எதிர்த்து நமது போராட்டம் இருக்கும்" - என்று 1993-ல் அறிவித்த ம.க.இ.க. ('புரட்சிப் புயல்' - பக்.27, 28) 1998-ம் ஆண்டு கட்சித் திட்டத்துக்கான ஆவணத்தில் அத்திட்டம் காணாமல் போனது ஏன் என்பதும் நமக்குப் புரியவில்லை.

"இன்றைய நிலையில் இந்திய மக்கள் மீது மூன்று மலைகள் - அமெரிக்கத் தலைமையிலான மேல்நிலை வல்லரசுகள், தரகு அதிகாரவர்க்க முதலாளித்துவம், நிலப் பிரவுத்துவம் ஆகியவை அழுந்திக் கொண்டிருக்கின்றன. இம் மூன்றும் தான் முக்கியமாக இந்திய மக்களின் எதிரிகளாகும்" - (ம.க.இ.க.வின் கட்சித் திட்டம்-1998). - என்று 1998 இல் திட்டத்தை வகுத்துவிட்டார்கள்.

இந்திய மக்களின் அடிப்படை எதிரிகளாக பார்ப்பனர், பார்ப்பனியச் சக்திகள் இல்லை என்பதை கட்சித் திட்டமாக வைத்துக் கொண்டு, அதே பார்வையில் வி.பி.சிங் பற்றிய விமர்சனத்தையும் முன் வைத்துக் கொண்டு ம.க.இ.க. செயல்படுவது நமக்கு பல்வேறு சந்தேகங்களை எழுப்பவே செய்கிறது.

'கவி'யின் இந்த கட்டுரை 'புதிய ஜனநாயகத்தின்' பார்ப்பன எதிர்ப்புக் கொள்கையை சந்தேகப்பட வைத்துவிட்டது!
ம.க.இ.க.வின் தலித் விரோத நிலைபாட்டையும் தெரிந்து கொள்ளுங்கள்!

தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!

முல்லைத் தீவில் நடப்பதென்ன? ஐ.நா. அறிக்கை!


இலங்கையில் போரில் சிக்குண்டுள்ள மக்களின் அவல நிலை குறித்து ஐ.நா. கவலை: விடுதலைப்புலிகள் மீது கடும் கண்டனம்


கடந்த சில நாட்களாக இலங்கையின் போர் நடக்கும் பகுதிகளில் சிக்கியுள்ள பொதுமக்களின் நலன் குறித்த கவலை அதிகரித்து இருப்பதாக ஐ.நா மன்றம் கூறியிருக்கிறது.


இலங்கையில் உள்ள ஐ.நா. மன்ற வதிவிட மனித நேய ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்திலிருந்து வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், பாதுகாப்பு வலயம் என்று ஒரு பகுதி அரசால் அறிவிக்கப்பட்டதால் பொதுமக்களுக்கு ஓரளவு நிம்மதி ஏற்பட்டிருந்தாலும், நேற்றிலிருந்து அந்தப்பகுதியிலும் சண்டை நடப்பதாக செய்திகள் கூறுவதாக கூறப்பட்டுள்ளது.


பொதுமக்கள் செறிந்து தங்கியுள்ள பகுதிகளில் சண்டையை தவிர்க்குமாறு இலங்கை அரசு மற்றும் விடுதலைப்புலிகள் இருதரப்பாரையுமே, ஐ.நாமன்றத்தின் இவ்வறிக்கை கோரியிருக்கிறது.


பொதுமக்கள் போர்ப் பிரதேசங்களிலிருந்து வெளியேறுவதை விடுதலைப்புலிகள் தொடர்ந்து தீவிரமாக தடுத்து வருவதாகக் கூறும் ஐ.நா.மன்றம், வெளியேறும் மக்கள் சுடப்படும் மற்றும் சில சமயங்களில் சுட்டுக்கொல்லப்படும் சம்பவங்கள் அதிகரித்துவருவதாகக் கூறுகிறது.


ஐ.நா. மன்றத்தின் 15பணியாளர்கள், அவர்களின் 35பெண்கள் மற்றும் 40குழந்தைகள் உள்ளிட்ட 75குடும்ப உறுப்பினர்கள், விடுதலைப்புலிகளால் இந்தப் பகுதியிலிருந்து வெளியேறாமல் தடுத்துவைக்கப்பட்டிருப்பதாகக் கூறும் இந்த அறிக்கை, இந்த குழந்தைகளில் 15குழந்தைகளுக்கு சுவாசம் தொடர்பான வியாதிகள் வந்திருப்பதாகவும், இது அந்தப்பகுதியில் மனித நேய உதவி அனுப்பபடவேண்டியதன் அவசியத்தைக் காட்டுவதாகவும் கூறுகிறது.


இந்த ஐ.நா.மன்ற பணியாளர்களில் ஒருவர் விடுதலைப்புலிகளால் ஞாயிறன்று பலவந்தமாக அவர்களது படையணியில் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் கூறும் இந்த அறிக்கை, 14 வயதே ஆன சிறார்கள் விடுதலைப்புலிகளால் அவர்களது அணியில் சேர்க்கப்பட்டுவருவதாகத் தெரிவதாகவும் கூறியிருக்கிறது. இவ்வாறு சேர்க்கப்பட்ட ஐ.நா. மன்றப் பணியாளரை விடுதலைப்புலிகள் உடனடியாக விடுவிக்கவேண்டும் என்றும், வெளியேற விரும்பும் மக்களுக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்றும் ஐ.நா.மன்றம் கோருகிறது.


உணவு மற்றும் மருந்துப்பொருட்கள் உடனடியாக வன்னிப் பகுதியில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கு வழங்கப்படவேண்டிய தேவை இருப்பதை சுட்டிக்காட்டும் ஐ.நா.மன்றம், இருதரப்புகளும் இந்தப் பிரச்சினைக்கு ஒரு ஒழுங்கான மற்றும் மனிதநேய அடிப்படையிலான தீர்வைக் காணவேண்டும் என்றும் கோரியிருக்கிறது.

February 14, 2009

லோதேவும் - வெர்மரும் : காதலின் சாட்சியாய்



வெளிநாட்டில் வேலன்டைன் டே
இங்கு அது காதலர் தினம்


மனித குலத்தின் முதல் உலகமயம்
காதல்... காதல்... காதல்...


கதேவின் காதல் காவியத்தால்
சாகா வரம் பெற்றனர்
லோதேவும் - வெர்மரும்


கம்யூனிசத்தின் பிதா மகன்
காரல் மார்க்சும் - ஜென்னியும்
மரபுக் காதலர்கள் அல்ல


உலகை வாழ்விப்பதற்காக
தங்களை அர்ப்பணித்துக் கொண்ட
அபூர்வக் காதலர்கள்
உலக வறுமையை ஓட்டுவதற்காக
ஒட்டுமொத்த வறுமையையும்
சுமந்த சுகமான காதலர்கள்


மகாகவியின் வார்த்தையில்
அதனை வருணிப்பதே
இன்னும் பொருத்தமானது
காதல்... காதல்... காதல்...
காதற்போயின் சாதல்... சாதல்... சாதல்..



கதேவின் காவியமான
காதலின் துயரத்தை படிப்பவர்கள்
நிச்சயம் இதனை உணர்வர்.
இக்காவியத்தை படித்த
பலரும் புத்தகத்தின் கதாநாயகான
உலா வந்தனர் - வாழ்ந்தனர் -
மடிந்தனர்
பெண்களோ அப்புத்தகத்தில் வரும்
நாயகனைப் போல் தனக்கான
நாயகனை தேடினர்...
தேடிக் கொண்டேயிருக்கின்றனர்...


மனிதகுலத்தின் உணர்ச்சி
நாளத்தின் அத்தனை உணர்ச்சிகளையும்
ஒருங்கே காண முடியும்
காதல் எனும் நோய் பிடித்தால்...


இது மனித உணர்வுகளின்
ஆர்ட்டீசின் ஊற்று...
இதை எந்த கலாச்சார
காவலர்களாலும் தடுக்கவும்
முடியாது. தடைபோடவும் முடியாது!


அஜால்... குஜால் வேலைகளில்
ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு
எப்படித் தெரியும் காதலின் மகிமை
அவர்கள் வழியில் சமூகத்தை
நடத்தத் துடிக்கிறார்களோ என்ற
சந்தேகம்தான் பிறக்கிறது
காதலுக்காக எதிராக இவர்கள்
போடும் இந்துத்துவ தாலிபானிய
கலாச்சாரம்!


ராமபக்தர்கள் என்று நாமமிடுபவர்கள்
சீதையின் சிறப்பழகால்
தன்னை பறிகொடுத்த
ராமனின் உள்ளத்தைத் அறிவதைத் தவிர...
இடிப்பதை மற்றுமே கற்றவர்கள்
அல்லவா அவன் பெயரைச் சொல்லி.


இடிப்பது அவர்கள் வேலை என்றால்
கட்டுவது நமது வேலையாகட்ம்
ஆதலினால் காதல் செய்வீர்...


February 13, 2009

அட்டாக் பாண்டியனும் - அஞ்சா நெஞ்சனும் மத்திய சிறை அனுபவம்!

பரந்து விரிந்த அந்த மைதானத்தில் கைதிகளுக்கு மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது இருமுறையோ சினிமா படங்கள் திரையிடுவது வழக்கம். இங்குள்ள கைதிகள் பிரார்த்தனா போன்ற ஓப்பன் தியேட்டரில் கிடைக்கும் அதே சுகத்தோடுதான் சினிமாவை பார்ப்பார்கள். இந்த கலையரங்கம் கடந்த இரண்டு வருடங்களாக காட்சிகள் இல்லாமல் கலையிழந்து இருந்தது.

அந்த அகண்ட மைதானத்திற்கு மேற்கு பக்கத்தில்தான் அடக்க முறையாத அல்லது கொடுமையான சிறை கைதிகளை அடைப்பதற்கான மிகக் குறுகிய அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைகளிலிருந்து காற்று வெளியேறுவதற்கான துவாரங்கள் கூட கிடையாது. இரவு நேரத்தில் பேய் வீடு என்பார்களே அதுபோலத்தான் இருந்திருக்கும். இரண்டரை அடி இரும்பு கதவுகளுடன் பூட்டப்பட்ட மிகச் சிறிய அறைகள்தான் இவைகள்.

உள்ளே இருக்கும் கைதிகளில் யாராவது அடிக்கடி வம்பு செய்து கொண்டிருந்தாலோ அல்லது போலீசாரிடம் ஏடா கூடமாக நடந்துக் கொண்டாலோ இந்த சிறைக்குத்தான் அனுப்புவார்களாம். இந்த சிறையில் இருப்பவர் பக்கத்து அறையில் உள்ள கைதியிடம் கூட பேச முடியாது. அந்த அளவிற்கு கட்டப்பட்டுள்ளது. இதில் ஒரு கைதியை ஒரு மாதத்திற்கு அடைத்து வைத்தாலே அவன் சித்தம் கலங்கி பைத்தியக்காரனாக மாறி விடுவானாம்! அனுபவம் வாய்ந்த ஒரு முன்னாள் கைதி சொன்னது. இரண்டு நாள் இருந்தாலே போதும் அவனது மூளை கிறு கிறுக்க ஆரம்பித்து விடும் என்கிறார்கள். அதாவது மனிதனின் மூளை ஒரு நேரம் இருப்பது போல் இருக்காது சார்! என்றார்.

இதுபோன்ற சிறையில்தான் தென்னாப்பிரிக்காவின் விடுதுலை வேந்தர் நெல்சன் மண்டேலா 21 வருடம் கழித்தார் என்றால் அவரது திட உறுதியை என்னவென்று சொல்வது! அவர் மட்டுமா? இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சியின் மூளையை 20 ஆண்டுகாலம் செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று நீதிபதி கூறினாரே! அவர் அடைக்கப்பட்ட சிறை எப்படியிருந்திருக்கும். இத்தாலியில் ஆட்சிக்கு வந்த முசோலினி கம்யூனிஸ்ட்டுகளை வேட்டையாட ஆரம்பித்தான். அப்போது அந்தோனியா கிராம்சியை நாட்டை விட்டு வெளியேறிவிடும்படி சக தோழர்களும், கமிட்டியும் முடிவு செய்தது. இருந்தாலும் அதனை ஏற்க மறுத்து விட்டார் கிராம்சி. அவர் கூறிய வார்த்தைகள் என்றும் உயிருடன் திகழும். "மூழ்கும் கப்பலில் கடைசியாக வெளியேறுபவன் கேப்டனாக இருக்க வேண்டும்" என்று உறுதிபடக் கூறினார். அப்படிப்பட்ட மகத்தான போராளியைத்தான் இப்படிப்பட்ட கொடூமையான சிறையில் அடைத்தார்கள். அவ்வாறு அடைக்கும் போது, நீதிபதி இப்படித்தான் கூறினார். 20 வருடம் அவரது மூளையை செயலிழக்கச் செய்ய வேண்டும் என்று. ஏற்கனவே பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த கிராம்சி - முதுகு கூன் வளைந்தவர். இந்நிலையில் இந்த தனிமைச் சிறையில் அதிகமான ஒளி பொருந்திய விளக்கு அவர் மீது அடிக்கப்படுமாம். அந்த விளக்கு ஒளியில் அவரது மூளை சூடேறி குழம்பி விடவேண்டும் என்பது பாசிஸ்ட்டுகளின் எண்ணம். பல நேரங்களில் அந்த சிறை கம்பிகளில் முட்டி மோதிக் கொண்டு ரத்தம் வடிவதுகூட உண்டாம். இத்தகைய வலிகளின் ஊடேதான்.
இத்தாலியிலும், உலகத்திலும் மார்க்சியத்தை மேன்மைப்படுத்துவ குறித்தும் - மார்க்சியத்தின் பிரயோகம் குறித்தும் தனது குறிப்புகளை எழுதி வைத்தார். கிட்டத்தட்ட 3000 பக்கங்களைக் கொண்டது. 29 நோட்டுப் புத்தகங்களாக எழுதி வைத்திருந்தார். இந்த குறிப்புகள் அவரது மைத்துனியால் எப்படியோ கடத்திக் கொண்டு வரப்பட்டது. இவைதான் "சிறை குறிப்புகள்" prison Notes என்ற பெயரில் பின்னாளில் புகழ் பெற்றது. தொழிலாளி வர்க்கம் புரட்சியை மேற்கொள்வதற்கு முன் முதலில் வெகுஜன மக்களின் உள்ளத்தை புரட்சிக்கு ஆதரவாக வென்றெடுக்க வேண்டும் என்று கூறினார். அத்தகைய மகத்தான வீரன் தன்னுடைய வாழ்நாளை அந்த கொடுமையான சிறையில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கழித்ததால் நோய்வாய்ப்பட்டு விடுதலை செய்யப்பட்ட சில நாட்களில் இறந்து விட்டார்.

இது மட்டுமா சமீபத்தில் ஈராக்கில் கைது செய்யப்பட்ட வீரர்களை அபு கிரைப் சிறைகளில் நிர்வாணமாக ஆக்கி அவர்களை கொடுமைப்படுத்தியதையெல்லாம் சமீபத்தில் பெரும் சர்ச்சைகளை கிளப்பியது. உலக ஏகாதிபத்தியத்திற்கு தலைமை தாங்கும் அமெரிக்காவின் மனித உரிமைகளின் சாட்சியமாக அபு கிரைப் சிறைகள் இன்றைக்கும் சாட்சியமாக விளங்குகிறது. அபு கிரைப் சித்திரவதை முகாம்கள் ஏகாதிபத்திய சிறைக் கொடுமைகளின் நிகழ்கால சாட்சியமாக விளங்குகிறது என்றால் 172 ஆண்டு கால சென்னை மத்திய சிறைச்சாலையின் அந்த இருட்டு சிறைகளில் எப்படிப்பட்ட கொடுமைகள் நிகழ்ந்திருக்குமோ? இது குறித்து பழைய கைதிகள் யாராவது உயிருடன் இருந்து வெளிப்படுத்தினால் ஒழிய... அந்த இருட்டிற்குள்ளேயே இருட்டாக மறைந்து போயிருக்கும்.
இறுதியாக இந்த இரண்டு நூற்றாண்டு வரலாற்றில் சென்னை மத்திய சிறையை வரலாற்று பக்கங்களில் இருந்து பிரிக்க முடியாது. சுதந்திரப் போராட்டக் காலத்திலிருந்து - கொடுமையான எமர்ஜென்சி முதல் தற்கால அரசியல் மற்றும் வெகுஜன போராட்டங்களில் களம் கண்டவர்களையும், இந்த சமூகத்தால் உருவாக்கப்பட்ட குற்றவாளிகளிகளின் மனப்பதிவுகளையும் எங்கே தேட முடியும்! அதற்கு சாட்சியமாய் விளங்கிய சென்னை மத்திய சிறைசாலையில் இன்னும் சில நாட்களில் இந்த வரலாற்று சுவட்டை எங்கே விட்டுச் செல்லப் போகிறது? ஆனால் இதற்கு பொறுப்பான காவல்துறையும் - தமிழக அரசும் இந்த வரலாற்று பதிவுகளை மக்கள் மத்தியில் வைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். மேலும் மக்களுக்கு சிறையை திறந்து விட்ட காவல்துறை - அதனை சுத்தப்படுத்த வேண்டும் என்ற அக்கறையற்று கிடப்பது காவல்துறை சிந்தனையில் மண்டியுள்ள அழுக்கைத்தான் வெளிப்படுத்துகிறது.

இறுதியாக குற்றவாளிகள் எவ்வாறு உருவாகிறார்கள் என்பது குறித்து வரலாறு என்னை விடுதலைச் செய்யும் நூலில் பிடல் காஸ்ட்டிரோ பாடிஸ்டா அரசாங்கத்தால் கைது செய்யப்பட்ட நீதிமன்றத்தின் முன்னாள் நிறுத்தப்பட்ட போது எழுப்பிய கேள்விகள் உலகம் முழுவதும் உள்ள சிறைகளிலும் - சமூகத்தின் மூளை முடுக்குகளிலும் மோதிக் கொண்டுதான் இருக்கிறது. அவர் பேசும் போது, மதிப்புக்குரிய நீதிபதி அவர்களே, உங்கள் முன்னாள் நிறுத்தும் அனைவருக்கும் சட்டத்தின் படி தண்டனை கொடுக்கும் கடமையை மட்டுமே செய்து வருகிறீர்கள். என்றாவது ஒரு நாள் உங்கள் முன்னாள் நிறுத்தப்பட்டிருக்கும் குற்றவாளிகளைப் பார்த்து நீ எத்தனை நாளாய் பட்டினியாய் கிடக்கிறாய், உனக்கு வீடு உண்டா, வேலை உண்டா, உன் குடும்பத்தில் உள்ளவர்கள் சாப்பிடுகிறார்களா? என்று கேள்வி எழுப்பியது உண்டா என்று நீதிமன்றத்தையும், நீதியைப் பார்த்து கேட்ட கேள்விகள் மிகப் பொருத்தமானது. குற்றவாளிகளில் 90 சதவிதிகத்திற்கும் மேற்பட்டவர்கள் வாழ்க்கை ஓட்டத்திற்காக குற்றவாளியாக்கப்பட்டவர்கள். ஒரு புத்தக சாலை திறக்கும் போது ஒரு சிறைச்சாலை மூடப்படும் என்று கூறுவார்கள். ஆனால் தற்போது தெருவுக்கு தெரு போட்டிப் போட்டுக் கொண்டு கோவில்களை உருவாக்கும் சமூகத்தைத்தான் நாம் பெரியாரிய வெளிச்சத்தில் கட்டியமைத்து உள்ளோம். அவர்களின் அறிவுத் தேடலுக்கான நூலகத்தை உருவாக்குவதற்கு நமக்கு நேரம் உண்டா? சிறைச்சாலைகள் மூடப்பட வேண்டும் என்றால் சிந்தனைச் சாலைகள் உருவாக்கப்பட வேண்டும். நம்முடைய நிகழ்கால சமூகம் பிரசவித்துக் கொண்டிருப்பது கிராம்சிக்களையும், மண்டேலாக்களையும் அல்ல; அட்டாக் பாண்டியன்களையும், அஞ்சாநெஞ்சர்களையும் அல்லவா தற்போதைய திராவிட கலாச்சாரம் கட்டியெழுப்பி வருகிறது. எனவே மாற்றத்தை விரும்பும் ஜனநாயக - இடதுசாரி சக்திகள்தான் இதனை உருவாக்க முடியும்!...

February 12, 2009

துயரத்தை வெளிப்படுத்தும் சிறை அறைகள்!

முதல் வகுப்பு சிறை அறைகளை தாண்டியவுடன் கல்லூரி வளாகத்தைப்போன்ற சூழல் நம்மை வரவேற்கிறது. பரந்து விரிந்த விளையாட்டுத் திடல் போன்ற மைதானம், சிறையின் வயதிற்கு ஏற்ப ஓங்காரமாய் வளர்ந்திருந்த அரச மரங்களும், வேப்பம் மரங்களும், பாதாம் மரங்களும்... என்று தங்களது இலைகளால் நிழல் பரப்பிக் கொண்டிருக்கிறது.

இதன் இருபுறங்களிலும் சிறு குற்றங்களுக்காக மொத்தமாய் அடைக்கப்படும் செல்கள் பாடசாலையைப் போல் காட்சியளித்தது. அதற்கு முன்னாள் வெளிநாட்டு கைதிகளுக்கான சிறை அறைகள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இரண்டாவது தளங்களில் அமைக்கப்பட்டிருந்த இந்த செல்கள் அனைத்தும் தனிமைச் சிறை அறைகள்தான். வெறும் 8 அடிக்கு 6 அடி இருக்கும். அதற்குள்ளேயே கழிவறையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. இன்னும் ஒரு 172 ஆண்டுகளுக்கு தாங்கும் அளவிற்கு அதன் சிறை கதவுகள் கனமானதாகவும், வலுவானதாகவும் காட்சியளித்தது. இதுபோன்ற வலுவான சிறை அறையில் இருந்துதான் எல்.டி.டி.ஈ. அமைப்பினர் எட்டு பேர் தப்பியிருக்கின்றனர் என்றால் எப்படி முடிந்தது என்ற கேள்விதான் எழுகிறது? இவர்கள் மட்டுமா? ஆட்டோ சங்கர் கூட இப்படித்தான் தப்பினானாம்! இப்படி எண்ணற்ற கதைகளை சுமந்துக் கொண்டு கம்பீரமாய் நிற்கிறது சென்னை மத்திய சிறைச்சாலை. இதன் சுவர்களுக்கு மட்டும் பேசும் திறனிருந்தால் இலக்கியத்திற்கான அத்தனை நோபல் பரிசுகளும் இதற்கே கிடைத்திருக்கும்.
ஒவ்வொரு செல்லும் ஒரு கதையை சொல்லும். ஒரு செல்லில் தனது வாக்குமூலமாக ஒரு கைதி இப்படி எழுதி வைத்து விட்டுச் சென்றான். “எனது வாழ்க்கையில் பாதி இங்கேதான் கழிந்தது” என்று! அவனது மீதிப் பயணம் தற்போது எப்படியிருக்குமே?

சாதி, மத, இன மோதல்கள் எல்லாம் வெளியில் உள்ள சுயநலவாதிகளால் தான் தூண்டி விடப்படுகிறது. ஆனால் சிறைக்குள் எத்தனை கைதிகள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் ஆறுதல் தரும் அருமருந்தாக மாறி விடுகின்றனர்.உணர்ச்சி வசப்பட்டு குற்றம் இழைத்து விட்டு கொடூரங்களை அனுபவிக்கும் கைதிகளுக்கு ஒரே நம்பிக்கையாக உள்ளொளி வழங்கியிருந்தது அவரவர் சார்ந்த கடவுகளே! எல்லாச் சிறை அறைகளிலும் இந்து - மு°லீம் - கிறித்துவர் என்று பாகுபாடின்றி கடவுகள் படம் சங்கமமாயிருந்தன.

ஒரு சிறையில் இசுலாமியர் ஒருவர் தொழுகைக்கு செல்லும் போது சுத்தமாக கால் கழுவிவிட்டு செல்லவும் என்று அழகான தமிழிலும் - உருதுவிலும் எழுதியிருந்தார். அதுவே மசூதியின் மறுவடிவமாக அங்கே காட்சியளித்துக் கொண்டிருந்தது என்றால் வியப்பில்லை!

உலகமயமாக்கமும், தொழில்நுட்ப வளர்ச்சியும் ஓவியர்களின் தூரிகைகளை முறித்திருக்கலாம். ஆனால் இதன் எந்தத் தாக்கமும் சிறை கம்பிகளுக்குள் நடக்கவில்லை என்பதைத்தான் அங்கே ஒவ்வொரு சுவரிலும் வரையப்பட்டிருந்த ஓவியங்கள் சாட்சியாய் உயிரூட்டிக் கொண்டிருந்தன. வரைந்த கைதி உயிரோடு இருப்பாரோ? இல்லையோ? அவரது ஓவியம்.... மவுனமாய் ஒளி வீசிக் கொண்டிருந்தது.

திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கர், நேதாஜி சுபாஷ் சந்திரபோ°, ஜவஹர்லால் நேரு போன்ற சமூக போராளிகளின் வாழ்கையை சுவரோவியமாய் தீட்டியுள்ளான் அந்த ஓவிய சிறைப்பறவை. வெறும் படங்கள் மட்டுமல்ல! அவர்களது பொன் மொழிகளையும் மறக்காமல் பதித்திருந்தான் அந்த அழகான தூரிகையால்.

இன்னொரு சிறை அறைக்குச் சென்றபோது, “காதலுக்காக இவள் இங்கே சிறைபட்டாள் என்று எழுதப்பட்டிருந்தது.” சுவர் முழுக்க ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி, ஜோதி... என்று விதவிதமான அளவுகளில் எழுதப்பட்டிருந்தது. இங்கே சிறைபட்டவர் ஆணா - பெண்ணா என்ற குழப்பம் நீடிக்கத்தான் செய்தது; இருந்தாலும் என்ன உருக்குக்கு நிகரான சிறைச் சுவர்களால்கூட அவனது / அவளது உள்ளத்தில் இருந்த காதலை பிரிக்க முடியவில்லை. சிறைக்குள்ளே அவன் / அவள் இருந்தாலும் காதல் நிச்சயமாக சுகப்படுத்தியே இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

4 ஆம் எண் கொண்ட அகன்ற சிறைக்குச் சென்றபோது 1991 ஜெயலலிதா ஆட்சிக்கு வந்தவுடன் 25 பைசா பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டது நினைவுக்கு வந்தது. இந்த அநியாய ப° கட்டண உயர்வை எதிர்த்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் (டி.ஒய்.எப்.ஐ.) மாநிலம் முழுவதும் மறியல் போராட்டம் நடைபெற்றது. 50 ஆயிரம் பேர் கைதாகியிருந்தனர். வடசென்னையில் குறளகம் எதிரிலும், தென்சென்னையில் அண்ணா சாலையிலும் நடைபெற்ற மறியல் நடைபெற்றது. இதில் பல்லாயிரக்கணக்கான வாலிபர்கள் கலந்து கொண்டனர். நான் உட்பட...
அப்போது அண்ணா சாலையில் நடைபெற்ற மறியலின் போது போலீசாரின் கண்மூடித்தனமான, காட்டுமிராண்டித்தனமான தடியடித் தாக்குதலில் பலரின் மண்டை உடைந்தது. எங்களை எல்லாம் சென்னை சென்டிரலில் உள்ள நேரு °டேடியத்தில் கொண்டு போய் வைத்தனர். ஆயிரக்கணக்கான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். அண்ணா சாலையில் அடிபட்டவர்களை ரத்தம் சொட்டச் சொட்ட மருத்துவமனைக்கு கூட அழைத்துச் செல்லாமல் கைது செய்து நேரு °டேடியத்திற்கு கொண்டு வந்திருந்தனர் இரக்கமற்ற காவல்துறையினர். முதல் முறையாக தடியடியில் ரத்தத்தை பார்த்த எங்களுக்கு ரத்தம் பொங்கும் வகையில் கோபம் கொப்பளித்து. ஒருபுறம் தோழர்கள் பட்ட அடி எங்கள் மீது பட்ட அடியாக துடித்தோம் - நெஞ்சம் வெடித்தது. பின்பு ஒருவழியாக அடிபட்ட தோழர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

நானும் என்னுடன் 11 பேர் இந்த மறியலில் கலந்து கொண்டோம். எல்லோரும் 20 வயதுக்கு உட்பட்டவர்கள். அன்றைய தினம் காலையில் மறியலுக்கு செல்லும் வேகத்தில் இயக்கத்திற்கு அப்பாற்பட்ட எங்களது நண்பர்கள் சிலர் வரும் போது கண்ணில் பட்டார்கள் என்பதற்காக அவர்களையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டோம். இந்த தடியடி களோபரத்தில் அந்த புதிய தோழர்கள் கலங்கித்தான் போனார்கள். எப்படியும் மாலையில் விட்டுவிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு சூரியன் மறைந்த பின் வீனான கற்பனையானது. நாங்கள் எங்கே சென்றோம் என்று எங்கள் வீட்டில் உள்ளவர்கள் யாருக்கும் தெரியாது! இதுபற்றிய அச்சம் ஒருபக்கம். வீட்டில் உள்ளவர்கள் தேடுவார்களே... என்ற ஏக்கம் மறுபுறம்.

பின்னர் எங்களை எழும்பூர் கோர்ட்டுக்கு கொண்டுச் சென்று நீதிபதிகள் முன்னாள் ஆஜர் படுத்தியபின்னர் இரவு 8 மணிக்கு மேல் சென்டிரல் ஜெயிலுக்கு கொண்டுச் சென்றனர்.

அந்த இரவிலும் காவல்துறையினர் கண்ணியமாக கடமையை செய்தனர். பெயர், சாதி, மச்சம் என்று அனைத்தையும் குறித்துக் கொண்டு போர்த்திக் கொள்வதற்கு தூசியும் - அழுக்கும் படிந்த ஒரு போர்வையும், நொறுங்கிப் போன அலுமினியத் தட்டும், ஒரு தம்ளரும் கொடுத்தார்கள். வீட்டில் எங்களுக்காக சாப்பாடு சூடாக தயாரிக் கொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அலுமினியத் தட்டுடன் வீர நடைபோட்டுக் கொண்டிருந்தோம்.

இரவு ரொம்ப நேரம் பேசிக் கொண்டிருந்தோம். பின்னர் ஒருவழியாக தூக்கம் வந்தது. காலையில் சீக்கிரம் எழுந்து என்னப் பன்னப்போறோம் என்ற சோம்பேறித்தனம் அந்த இடத்தையும் விடவில்லை. இருப்பினும் என்ன? சிறையல்லவா? அங்கே ஒரு சி°டம் இருக்கிறது. காலை 06.00 மணிக்குள் சிறையில் அட்டென்டென்° எடுப்பார்கள். ஐந்து ஐந்த பேராக வரிசையாக குத்துக்காலிட்டு உட்கார வேண்டும். வித்தியாசமான அனுபவமாக இருந்தது. அப்புறம் செல்லில் இருந்து வெளியில் திறந்த விட்டார்கள். காலை பத்திகை எல்லாம் கிடைக்காது. எங்களைப் பற்றிய செய்தி வந்திருக்குதா என்றுக் கூட பார்க்க முடியாது. அந்த நேரத்தில் செல்போன் எல்லாம் கிடையாது.கிராமப்புற °டைலில் வேப்பம் குச்சியில் பல் துலக்கினோம். பின்னர் எல்லோருக்கும் காலை டிபன் அச்சு சோறுதான். அது என்னமோ பாடையில் கட்டி தூக்கி வருவதுபோல் எடுத்துக் கொண்டு வந்தார்கள். அதன் மேல் போர்த்தப்பட்ட துணி எங்களுக்கு கொடுக்கப்பட்ட போர்வையை விட படு மோசமாக இருந்தது. இருந்தாலும் என்ன? சாப்பிட்டுத்தானே ஆகவேண்டும்!

இதில் எங்கள் கூட அப்பத்தான் டாடா நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்ததிருந்த நரசிம்மன் என்ற புதிய தோழரும் வந்திருந்தார். அவருக்கு இந்த அச்சு சோற்றை பார்த்ததும் ஒரே எரிச்சல் அதை கையில் வாங்கிய உடன் அப்படியோ தூக்கி அடித்தார் சுவற்றில் அதே அச்சுப்போல சுவரில் ஒட்டிக் கொள்ள, இதைப் பார்த்த பழைய தாதாக்கள் (கைதிகள்) சண்டை பிடிக்க ஆரம்பித்து விட்டார்கள். நீங்கள் இன்னைக்கு வருவீங்க - நாளைக்கு போயிடுவீங்க எங்களத்தானே இதையெல்லாம் சுத்தம் செய்யச் சொல்லுவானுங்க என்று சொல்லும் போது அதில் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்தது.

அப்புறம் என்ன? பல குழுக்களாக பிரிந்தோம் சிறைச்சாலை அரசியல் பயிற்சி கூடமாக மாறியது. அத்துடன் சுதந்திரப் போராட்டக் காலத்திலும், பல கம்யூனி°ட்டுகளும் அனுபவித்த சிறைக் கொடுமைகள் பற்றியெல்லாம் படித்த தோழர்கள் சொல்ல எல்லாத்தையும் உள் வாங்கிக் கொண்டோம்.

அப்புறம் என்ன அந்த வேப்ப மரநிழலில் நான் உறங்கி விட அந்த நரசிம்மன் தோழர் அய்யோ எனக்கு வேலையே போய் விடும்; இவன் என்னான்னா கவலையே இல்லாமே தூங்குறானே என்று கொட்டித் தீர்த்தார். புதியவரை நாம் இந்த அளவிற்கு கொண்டு வந்து விட்டோமே என்ற கவலை என்னை வாட்டியது... இப்போதும்தான்...அந்த நேரத்தில் எங்க ஊரில் இருந்த பிரபல தாதாக்கள் எல்லாம் சிறையில் அடைபட்டிருந்தனர். அவர்கள் அங்கே உலா வந்ததைப் பார்த்தபோதுதான் சிறை அவர்களுக்கு சுகமானது என்று புரிந்தது. சமையல் கூட அவர்களுக்கு தனிதானாம். அவர்களே சமைத்துக் கொள்வார்களாம்! மீன், கறி என எல்லாம் அவர்களுக்கு கிடைக்கும். சிறைக்குள் சிகரெட், பீடி மட்டுமல்ல கஞ்சா கூட கிடைக்குமாம்! சிறையின் கொடுமை சமூக விரோதிகளை எப்போதும் அண்டியதே இல்லை; சமூகப் போராளிகளைத்தான் அது கொடுமையாக தண்டித்திருக்கிறது.

இறுதி பதிவு நாளை வெளி வரும்...

February 11, 2009

இடிக்கப்படப் போகும் சென்டிரல் ஜெயிலும் இடிபடாத நினைவுகளும்!

172 ஆண்டு காலம் பழமை வாய்ந்த சென்னை மத்திய சிறைச்சாலை வெகு விரைவில் இடிக்கப்பட உள்ளது. இதனால் பொதுமக்கள் பார்வைக்காக கடந்த இரண்டு நாட்களாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. வரலாற்று புகழ்பெற்ற மத்திய சிறைச்சாலையை பார்வையிடுவதற்காக கடந்த இரண்டு நாட்களாக திருவிழா கூட்டம் போல் மக்கள் அலை அலையாக குவிகின்றனர். சிறையை சினிமாவில் மட்டுமே பார்த்து வரும் மக்களுக்கு நேரடியாக பார்க்க ஒரு வாய்ப்பு என்றால் அதனை விடுவார்களா என்ன? இதில் பெண்கள் கணிசமானவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்கள், பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், மாணவிகள், வாலிபர்கள், அடித்தட்டு மக்கள், மேல் தட்டு மக்கள், நடுத்தர மக்கள் என்று அனைத்து தரப்பினரும் சென்னை மத்திய சிறைச்சாலையை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.
நானும் இன்று காலை 8.30 மணிக்கெல்லாம் சிறைவாசலுக்கு சென்று விட்டேன். அப்போதே கூட்டம் களைகட்டியிருந்தது. பலரும் வேலைக்கு போவதற்கு முன்னர் பார்த்து விட வேண்டும் என்ற ஆவலோடு வந்துள்ளனர். இருந்தாலும் என்ன? செத்துப்போனவனுக்கு பாலை ஊற்றுவதுபோல், செத்துப்போகாமல் இருக்கும் விதிமுறையை கடைப்பிடித்தது மாநகர காவல்துறை 10.00 மணிக்குத்தான் திறப்போம் என்றனர். இருந்தாலும் கூட்டம் அதிகரிக்க... அதிகரிக்க அங்கிருந்த காவல்துறையினரும் நழுவி விட, பூட்டியிருந்த கேட்டை ஏறி குதித்து தாவினர் மக்கள். சிறைக்கு சென்று அனுபவம் பெற்றவர்களும், நேற்றைக்கு அந்த இடத்தைச் சுற்றிப் பார்த்தவர்களும் உடன் இருந்ததால் புதியவர்களுக்கு வழிகாட்டினர். "அங்கேதான் தூக்குமேடை இருக்கிறது" என்று சுட்டிக்காட்ட கூட்டம் அந்த இடத்தை நோக்கி ஈக்களாய் மொக்கத் தொடங்கியது.
10அடி நீளம், 8 அடி அகலத்துடன் 7 அடி ஆழத்துடன் கூடிய தூக்குமேடை தனது வாழ்வு முடிந்துப்போனதை பறைசாற்றிக் கொண்டிருந்தது. இருந்தாலும் பிரிட்டிஷ் காரன் கட்டியது என்பதால் அதன் சுடுகள் அப்படியே இருந்தது. தூக்கு மேடையின் மேல்புறத்தில் இரண்டு பக்கமும் இரயி தண்டவாளத்தில் மரப்பலகையால் இரட்டைக் கதவுகள் போல் இணைக்கப்பட்டிருந்தது. இந்த மரப்பலகையின் மீதுதான் தூக்கு மேடை கைதிகள் நிறுத்தப்பட்டு பின்னர் அதன் கம்பிகளை இழுத்த சில மணித்துளிகளில் மரணத்தின் வாசல் திறக்கப்படும் அந்த கைதிக்கு. இந்த இடத்தை பார்த்ததும் மனித நேயம் மிக்க பொதுஜனம் பாவம் எத்தனை பேரின் உயிர் போயிருக்குமோ? என்று உச்சுக்கொட்ட... பக்கத்தில் இருந்தவர் நீங்க வேற அவன் எத்தனை போரைக் கொன்னானோ என்று கூற? அவரவர் பார்வையில் கருத்துக்கள் வந்தவண்ணமிருந்தன.
எனக்கு நினைவுக்கு வந்ததெல்லாம் எந்த உயிரையும் கொலை செய்யாமல் தூக்குமேடை ஏறிய அந்த வீரம்மிக்க வாலிபனைப் பற்றித்தான். அவன் செய்த குற்றம்தான் என்ன? பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் கொடும் அடக்குமுறையை எதிர்த்தும், ஆடு, மாடுகளைப் போல் மக்களை கொல்வதைக் கண்டு கொதித்துப்போன அந்த வாலிபன் - பிரிட்டிஷ் ஆளுகைக்கு உட்பட்ட இந்திய பாராளுமன்றத்தில் கொண்டு வரப்பட்ட தொழிலாளர் விரோத சட்டத்தை எதிர்த்து பாராளுமன்றத்தின் மைய மண்டபலத்தில் வெடிகுண்டை வீசினான் - இது யாரையும் கொல்லக்கூடிய குண்டு அல்ல. கேளா காதினராய் மாறிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் தூக்கத்தை கலைப்பதற்காகத்தான். வெடிகுண்டு வீசி விட்டு தலைமறைவாக ஓடவில்லை. அவன் மறைமுகப் புரட்சியாளன் இல்லை வெளிப்படையானவன். நீதிமன்றத்தையே பிரச்சார மேடையாக்கினான் இருந்தாலும் என்ன பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் அவனையும், அவனது தோழர்களையும் தூக்கிலேற்றியது அவன்தான் சுதந்திரப்போராட்ட வீரன் தியாகி பகத்சிங், சுகதேவ், சந்திரசேகர் ஆசாத். இவன் தூக்கிலேறியது நாட்டிற்காக! அத்துடன் நவகாலத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தால் போலி விசாரணை செய்யப்பட்டு தூக்கிலேற்றப்பட்ட ஈராக் அதிபர் சதாம் உசேன் என என் நினைவுகளில் வந்து விழ.. அந்த நினைவுகளோடு அங்கிருந்து நகர்ந்தேன்... சிறைவாயிலை நோக்கி...
சென்னை மத்திய சிறை 1837 ஆம் ஆண்டு கட்டப்பட்டது என்று அறிவித்துக் கொண்டது. அதன் வாயிற் கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை கூட்டம் ஏதோ புதுப்படத்திற்கு வந்தது போன்று இருந்தது. கையில் தயாராய் கெண்ட வந்திருந்த கேமராக்களாலும், மொபைலில் உள்ள டிஜீட்டல் கேமராக்களாலும் பல கோணங்களில் படம் எடுத்த வண்ணம் இருந்தனர். அங்கிருந்த ஒருத்தர் இங்க தான் கருணாநிதி உட்கார்ந்திருந்தார் என்று நினைவுபடுத்த, உடனே ஒரு பெரியவர் அதான் கொல்றாங்க... கொல்றாங்கன்னு... மீண்டும் குரல் கொடுக்க அதைப் பற்றி பேச்சு நகர்ந்தது.
சிறையின் நுழைவாயில் முன்னாள் கூட்டம் அலைமோதியது எப்போது திறப்பாங்களோ என்ற எதிர்பார்ப்புடன். அதற்குள் அங்கே வந்திருந்த ஒரு பழைய கைதியைப் பார்த்து ஏ உனக்குத்தான் புது வீடு புழல்ல கட்டிக் கொடுத்துட்டாங்களே இங்க எதுக்கு வந்த என்று அவரது நன்பர் நக்கலாக கூற, இன்னொருத்தர் மாமே அவன் மிச்சம் மீதியை வாங்க வந்துருக்கான்டான்னு சொல்ல... அதற்குள் யாரோ ஒரு போலீசார் கதவை திறக்க வந்திருந்த கூட்டம் ஆரவாரத்துடன் உற்சாக மிகுதியால் மடை திறந்த வெள்ளம் போல் நுழைந்தது. கடந்த 172 வருடத்தில் உள்ளே நுழைவதற்காக உற்சாகமடைந்தவர்களை இந்த சிறை பார்த்திருக்காது! அந்த பழங்கட்டிடத்திற்கு ஒரு புது உற்சாகம் பிறந்திருக்கும் என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்.
உள்ளே நுழைந்தவுடன் காவல் துறையினர் "சிறைக்குள் செல்போன் பயன்படுத்தக்கூடாது" என்று ஒட்டப்பட்டிருந்த பழைய அறிவிப்பு சீட்டு, வாசம் இழந்த மலரைப் போல் காட்சியளித்துக் கொண்டிருந்தது. ஒரு காலத்தில் அதிகாரத்தின் மறுவடிவமாய் இருந்த அந்த அறிவிப்பு இன்று செல்வாங்கிழந்து இருந்தது காலத்தின் கோலம்தான். முதல் முறையாக செல்போனின் விதவிதமான ரிங்டோன்களையும், அதன் நவீன கேமராக் கண்களையும் அந்த சிறை பார்த்தது - ரசித்தது. இவ்வளவு அழகான ரிங்டோன்களை எல்லாம் இந்த பாழாய் போன காவல்துறை இவ்வளவு நாள் தடுத்து வைத்திருந்ததே என்ற கோபம் கூட அந்த சிறைக்கு வந்திருக்கலாம்!
உள்ளே நுழைந்தவுடன் இடதுபுறத்தில் கைதிகளை பார்ப்பதற்காக மிகுந்த பாதுகாப்பான சிறிய நீளமான அறை இரும்பு கம்பிகளின் வலைப்பின்னலோடு காட்சியளித்தது. இரண்டு வருடத்திற்கு முன் குற்றவாளிக்கும் - குடும்பத்தினருக்கும் - உறவினருக்குமான பாசப்பினைப்பின் பல சோகங்களையெல்லாம் ஒரே சேர வைத்திருந்த இடமல்லவா அது? மனைவி, மகள், குழந்தை, காதலி, உறவினர், நண்பர்கள் என்று பலரும் 20 மணி நேரத்திற்கும் குறைவான காலத்தில் அதிகமான கைதிகளின் இரைச்சலோடு தங்களுடைய உணர்வுகளையும் பறிமாறிக் கொள்ளும் உணர்வுகளின் மையமான இடம் உணர்விழந்து காணப்பட்டது.
சற்றுத் தள்ளிப் போனவுடன் "மச்சம் பார்க்கும்" இடமாம். ஒரு பழைய கைதி சொன்னது. மச்சம் மட்டுமா? சாதி, மதம்கூட பார்ப்பாங்களாம் எல்லாம் ரெக்கார்டுக்குத்தான். குற்றவாளியே ஆனாலும் என்ன சாதியும், மதமும் மறைந்து விடுமா? அல்லது நாங்கள்தான் மறக்க விடுவோமா? என்ற தோரணையில்தான் சிறைவாசமும் இருந்தது. பள்ளிக்கூடத்தில் சாதியை சொல்லாதவர்கள் கூட இங்கே சாதியைச் சொல்லித்தான் ஆக வேண்டுமாம்!
இந்த மச்சம் பாக்குற இடத்துக்கு வலது புறமாக அமைந்திருந்தது உயர் ரக கைதிகளுக்கான இடம் - இங்கேதான் அரசியல்வாதிகள் கூட அடைக்காலம் ஆவார்களாம்! கருணாநிதி, அன்பழகன், ஜெயலலிதா, வைகோ என்று எல்லா தியாகிகளும்! சிறை புகுந்த இடம் அதுதானாம்! நல்ல காற்றோட்டத்தோடு கட்டப்பட்டுள்ள இடம் அது. அநேகமாக பெரிய அங்கே இருந்த கைதிகளுக்கு பெரிய அளவுக்கு பிரச்சனை இருந்திருக்க வாய்ப்பில்லை என்றே தெரிகிறது. இருந்தாலும் என்ன இந்த மகா தியாகிகளை தெரிந்த மக்களுக்கு அந்த சிறையில் சுதந்திரப் போராட்டத்திற்கு போராடி சிறை சென்ற ம. சிங்காரவேலர், வ.உ.சி., ஏ.கே.கோபாலன், சீனிவாசராவ், சர்க்கரை செட்டியார்... போன்ற மகத்தான தியாகிகள் பெயரை யாரும் மருந்துக்கு கூட முனகவில்லை. குறைந்தபட்சம் சென்னை மாநகர காவல்துறையாவது இந்த சிறையில் இருந்த முக்கிய சுதந்திரப் போராட்ட வீரர்களின் பட்டியல் குறித்து ஏதாவது குறிப்புகளை வைத்திருக்கலாம். ஆனால் அவர்களுக்கு இதை பற்றியெல்லாம் சிந்திக்க நேரம் இருக்குமா? எந்தவிதமான வரலாற்று குறிப்பும் இல்லாமல் பல்லாயிரக்கணக்கான மக்கள் வெறும் சுற்றையும் - ஜன்னல் கம்பிகளையும் மட்டுமே பார்த்து வந்தனர். இருந்தாலும் என்ன? வரலாற்றை மறைக்க வேண்டும் என்பதுதானே ஆட்சியாளர்களின் கொள்கை! அது இங்கேயும் நிகழ்வதை பார்க்க முடிந்தது. எமர்ஜென்சி கொடுமைகள் என்றெல்லாம் உளறும் திராவிட இனக் கொழுந்துகள் கூட இதைப்பற்றி சிந்திக்க மறுத்தது ஏன் என்று தெரியவில்லை.
இன்று தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் - மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரர் சிங்காரவேலரின் நினைவு தினமாக வேறு இருந்ததால் அவர் பற்றிய வரலாறும் - அவர் சென்னை சிறையில் இருந்தபோது நடந்த நிகழ்வும்தான் மணக்கண் முன்னால் வந்து நிழலாடியது. அவரும் ராஜாஜீ உட்பட பல காங்கிரஸ் காரர்களும் சிறையில் இருந்தபோது, மாணவராய் இருந்த ஜமதக்கனியும் (இவர் காரல் மார்க்சின் மூலதனத்தை தமிழில் மொழி பெயர்த்தவர். தற்போதைய திட்ட கமிஷன் துணைத் தலைவர் மு. நாகநாதனின் மானனார்) உடன் இருந்தார். அப்போது அவர் தினந்தோறும் ராஜாஜீயை சிறையில் சந்தித்து பேசுவது வழக்கமாம். இந்நிலையில் ராஜாஜீ நீ எங்கே வேண்டுமானாலும் போ, யார் கூட வேண்டுமானாலும் பேசு... ஆனால் அந்த -- நெம்பர் சிறையில் இருக்கும் கிழவன் இருக்கும் செல்லுக்கு மட்டும் போகாதே! அவர் உனக்கு விஷத்தை ஊட்டி விடுவார் என்று சொல்ல. ஜமதக்கனியும் நீண்ட நாட்கள் அந்தப் பக்கமே போவதில்லையாம்? ஒரு நாள் சரி போய்தான் பார்ப்போமே என்று போக! அப்புறம் என்ன அந்த சிங்காரவேலர் என்ற கிழவன் கம்யூனிசம் என்ற விஷத்தை ஊட்டி விட்டு விட்டார். அதனால்தான் தமிழுக்கு மூலதனம் கிடைத்தது. இவ்வளவு பெரிய வரலாற்று பாரம்பரியம் உள்ள நம்முடைய திட்டகமிஷன் துணைத் தலைவராவது இந்த விசயங்களை சொல்லி ஒரு வரலாற்று சிறை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்து இன்னும் பொது மக்கள் பார்வையிட காலத்தை நீட்டிக்கச் செய்யலாம்! செய்வார்களா ஆட்சியாளர்கள்?
இதன் இரண்டாவது பாகம் நாளை வெளி வரும்

February 07, 2009

இலங்கைப் பிரச்சனை பாட்டாளி வர்க்கத் தீர்வு

இலங்கையில் அரை நூற்றாண்டுகளாக தீர்க்கப்படாமல் புரையோடிப் போயுள்ள தமிழ் மக்கள் வாழ்விலும், அமைதியை இழந்து தவிக்கும் இலங்கை இனவாத நோய்கும் முற்றுப் புள்ளி வைக்கப்படுமா என்று இலங்கை மக்களும் - தமிழக மக்களும், இடதுசாரி, ஜனநாயக சக்திகளும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.

பிரச்சனையின் வரலாற்று வேர்களைத் தேடி அலசிக் கொண்டிருப்பது இப்பதிவின் நோக்கமல்ல; இருப்பினும், சில விசயங்களை தொட்டுக் காட்டி தீர்வை தேடுவது பொருத்தமாக இருக்கும் என்ற நோக்கில் எழுதப்பட்டுள்ளது.
மகத்தான ரஷ்யப் புரட்சியால் உத்வேகம் பெற்று எழுச்சியடைந்த அடிமைப்பட்ட நாட்டு மக்களின் வீரமிக்க போராட்டங்களால் விடுதலையடைந்த நாடுகளில் குறிப்பிடத்தக்கது இந்தியா, பாகிஸ்தான், சீனா, இலங்கை.

தனது காலனியாதிக்க நாடுகளில் இருந்து வெளியேறிய ஏகாதிபத்தியம் இந்தியா, பாகிஸ்தான், சீனாவில் மதத்தின் பெயராலும், சாதியத்தின் பெயராலும், இனத்தின் பெயராலும் விஷ விதைகளை புதைத்து விட்டுத்தான் சென்றன. சீனாவில் மாவோ தலைமையில் மகத்தான சோசலிசப் புரட்சி வெற்றியடைந்ததால் அங்குள்ள தேசிய இன முரண்பாடுகள் உட்பட பலவற்றிற்கு மார்க்சிய அடிப்படையில் தீர்வு காணப்பட்டது.

ஒன்றுபட்ட இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள வற்றாத செல்வங்களை ஒட்டச் சுரண்டிய பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இந்த நாடுகளில் இருந்த உழைக்கும் வர்க்கத்தை பெரும்பான்மையாக பிரதிநிதித்துவப்படுத்திய சாதியத்தை பாதுகாத்ததோடு, அதனால் எழுந்த எந்தவிமான முரண்பாடுகளுக்கும் தீர்வு காண முற்படாமல் - தனது சுரண்டல் கொள்கைகளுக்கு பாதிப்பு வராமல் மட்டும் பார்த்துக் கொண்டது. இறுதியில் இந்த நாடுகளின் தீராத நோயாக மாறுவதற்கு பதியம் போட்டவர்கள் இவர்களே!

அடுத்து இலங்கையில் ஆட்சியதிகாரத்திற்கு வந்த முதலாளித்துவ வர்க்கம். தன்னாட்டு சிறுபான்மை மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதற்கு எந்தவிதமான தொலைநோக்குப் பார்வையும் அற்ற நிலப்பிரபுத்துவ மரபுவதிகளாக இருந்ததோடு, ஒடுக்கப்பட்ட சாதி மற்றும் சுரண்டப்படும் மலையகத் தமிழர்களின் எழுச்சி பெற்று வந்த போராட்ட பேரலைகளை சந்திப்பதற்கு திராணியற்றதாக இருந்ததோடு. இதனை திசை திருப்பும் வகையில் தமிழ் மற்றும் சிங்கள அடையாளத்தை முன்னிறுத்தி இனவாதத்திற்கு வித்திட்டன.

முதன் முதலில் மலையகத் தோட்டத் தொழிலாளர்களான அம்மக்களை இலங்கை பிரஜைகளாக ஏற்க முடியாது என்று அறிவித்தது. அதைத் தொடர்ந்து சிங்களத்தை ஆட்சி மொழியாக அறிவித்தது. இதற்கடுத்து உயர் கல்வியில் தமிழர்கள் போட்டியிட முடியாதபடி திட்டமிட்டு முடக்கியது என்று அடுக்கடுக்காக தமிழர்களுக்கு எதிராக தாக்குதல்களைத் தொடுத்தது. இலங்கைத் தமிழர்கள் மீதான இத்தகைய தாக்குதல்களுக்கு எதிராக அன்றைக்கு குரல் கொடுத்தது இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே. இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான இத்தகைய தாக்குதல்களை எதிர்த்து சிங்கள - தமிழ் உழைக்கும் மக்களை பெருவாரியாக அணிதிரட்டுவதில் ஏற்பட்ட தொய்வும், தமிழர் பகுதியில் இதற்கு எதிரான உணர்வு ரீதியான எதிர்வினைகள் - சிங்கள இனவெறியர்கள் தமிழ் மக்கள் மீது தாக்குதல் என்று புறப்பட்டு அங்குள்ள உழைக்கும் மக்கள் இனவாதத்தின் பிடிக்கு இறையானார்கள

பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளின் ஆட்சிக் காலத்திலேயே தமிழர்களுக்கான பிரதேச உரிமைகள் குறித்த முழக்கங்கள் எழுந்த போது அவற்றுக்கு தீர்வு காணாத பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் இலங்கையை விட்டு வெளியேறியபோது இந்தப் பிரச்சனைகளையும் விட்டுச் சென்றது. மேலும் இலங்கையைப் பொறுத்தவரை பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகளுக்கு எதிரான சுதந்திரப் போராட்டம் இந்தியாவில் நடைபெற்ற அளவிற்கு ஒரு வெகுஜன இயக்கமாக மலரவில்லை என்ற விமர்சனமும் உண்டு. இப்படியொரு வெகுஜன இயக்கம் அங்கு கட்டியெழுப்பப்பட்டிருக்கும் என்றால் அந்த மக்களுக்கு இடையிலான இனவேறுபாடுகள் பெரிய அளவிற்கு மோதலுக்கு உள்ளாவதில் இருந்து தடுக்கப்பட்டிருக்கும்.

மேற்கண்ட சூழலில் தமிழர்களுக்காக டி.யூ.எல்.எப்., டெலோ, இ.பி.ஆர்.எல்.எப்., எல்.டி.டி.இ., ஈராஸ் என்று விதவிதமான இயக்கங்கள் முளைத்தெழுந்தன. இது இலங்கையில் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் கோபாவேசத்தின் வெளிப்பாடுகளாய் வெளிக்காட்டியது. இருப்பினும் சுதந்திர ஆட்சியாளர்கள் இவற்றுக்கு தீர்வு காணாமல் - இனவெறிக்கு தலைமை தாங்கியது பிரச்சனையை மேலும் சிக்கலாக்கியது. இந்நிலையில் இதற்கான ஒரே தீர்வாக தனி ஈழம் என்ற கோரிக்கை அங்கே முளைத்தெழுந்தது. வட்டுக்கோட்டை மாநாட்டு முழக்கம் பிரிவினை கோஷமாகவும் ஓங்காரம் பெற்றது. அதே சமயம் இலங்கையின் பாரம்பரியத் தமிழர்களான ஈழத் தமிழர்கள் மலையகத் தமிழர்கள் மீதான அரசின் தாக்குதல் தொடங்கியபோது அவர்களுக்காக முதலில் குரல் கொடுக்கத் தயங்கினர். இதில் தந்தை செல்வா விழிப்புடன் இருந்து அதனை ஒரு அரசியல் பிரச்சனையாக முன்னுக்கு கொண்டு வந்தார். மொத்தத்தில் ஈழம் என்ற முழக்கம் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களுக்கான முழக்கமாக அமையவில்லை என்ற விமர்சனம் இங்கே கணக்கில் கொள்ள வேண்டியது.

இரண்டு கோடிக்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட இலங்கையில் 74 சதவிகிதம் பேர் சிங்கள இனத்தைச் சார்ந்தவர்கள். 18 சதவிகிதம் பேர் தமிழ் இனத்தைச் சார்ந்தவர்கள். சோனகர் மற்றும் பரங்கியர்கள் 8 சதவிகிதம். மேலும் தமிழர்களிலேயே பாரம்பரியத் தமிழர்கள் 11 சதவிகிதமாகவும், மலையகத் தமிழர்கள் 7 சதவிகிதமாகவும், சோனகர் என்ற பிரிவினரும் தமிழ் பேசக்கூடியவர்கள்தான். பிரிந்துக் கிடந்தனர். இதற்குள் தமிழ் பேசும் முஸ்லீம்கள் கணிசமான தொகையினர். அதாவது, தமிழர்களிலேயே பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களின் பிரச்சனை தீவிரமானது. மேலும் ஈழம் உட்பட மற்ற பகுதியில் உள்ள தமிழர்களின் அடித்தட்டு உழைக்கும் வர்க்கத்தைச் சார்ந்த தலித் (தாழ்த்தப்பட்ட) தமிழர்கள் பிரச்சனை தனியானது. மேற்கண்ட முரண்பாடுகளின் ஊடாகத்தான் இனவாதம் அனைத்தையும் ஒன்றாகப் போட்டு கலக்கி தனி ஈழம் என்ற முழக்கமாக முன்னுக்கு வந்தது.

இதில் பிரபாகரன் தலைமையிலான புலிகள் இயக்கம் ஆரம்பத்தில் பெருவாரியான மக்கள் ஆதரவை பெற்றிருந்தது என்பது உண்மையே! இருப்பினும் அது துரோகிகளை அழித்தொழிப்பது என்று நாமகரணம் சூட்டிக் கொண்டு சக போராளி அமைப்புகளைச் சார்ந்த தலைவர்களை வேட்டையாட ஆரம்பித்ததோடு, புலிகள் செயல்பட்ட இடங்களில் மற்ற அமைப்புகள் செயல்படுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது. இத்துடன் புலிகள் இயக்கம் அமிர்தலிங்கம், சபாரத்தினம், உமா மகேஸ்ரன், மாத்தையா, உட்பட பலரையும் வேட்டையாடியது. அத்துடன் பத்மநாபா உட்பட 14 பேர் சென்னையிலேயே சுட்டுக் கொல்லப்பட்டனர் புலிகளால். இறுதியாக இந்த புலி பயங்கரவாதம் ராஜீவ் கொலை வரை நீண்டது. தொடர்ச்சியாக தமிழர் அமைப்புகளுக்கும் - தலைவர்களுக்கும் சிங்களா இனவாதத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை விட அதிகமான பாதிப்பு புலிகளால்தான் ஏற்பட்டது. புலிகள் எப்படிப்பட்டவர்கள் என்பதற்கும், தற்போது இலங்கையில் நிலவும் நிலை எப்படியிருக்கிறது என்பதற்கும் ஷேபாசக்தியின் வாக்குமூலங்கள் நமக்கு சாட்சியங்களாய் முன்னிற்கிறது.

தீராநதியில் அவரது பேட்டியில் கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், "உங்களது இந்தக் கேள்விக்குத் தெளிவான ஒரு பதிலைச் சொல்ல முடியாத நிலையில் இப்போதைக்கு நான் இருக்கிறேன். உள்ளதை உள்ளபடி சொல்வதற்கு ஏற்றதான ஒரு சனநாயகச் சூழல் எங்களுக்கு இல்லை. ஈழத்தில் மட்டுமல்ல, புலம்பெயர்ந்த நாடுகளிலும்கூட என் போன்றவர்களுக்குக் கருத்துச் சுதந்திரம் மறுக்கப்படுகிறது. சொல்வதானாலும், எழுதுவதானாலும் கொல்லப்படக்கூடிய ஒரு சூழலில் நாங்கள் வாழ்கிறோம்."
மற்றொரு கேள்விக்கு பதிலளிக்கையில், "எல்லாவிதமான சமூக ஒடுக்குமுறைகளுக்கமான தீர்வு தமிழீழத்திலேயே சாத்தியம் என்று நம்ப வைக்கப்பட்டேன். 80களிலே ஆயுதம் தாங்கிய இயக்கங்களால் கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிற்சங்கங்ள், சாதி ஒழிப்பு இயக்கங்கள் என்று எல்லாவித மாற்று அமைப்புகளுமே மெளனமாக்கப்பட்டன.", "இலங்கையைப் பொறுத்தவரை விடுதலைப் புலிகளின் ஆஸ்தான பேச்சாளர்களும் எழுத்தாளர்களும் மட்டுமே கருத்து தெரிவிக்கலாம் என்ற சூழல்தான் இருக்கிறது". என்று உரைத்திருக்கிறார்.

இலங்கையில் உள்ள நிலையை நாம் இங்கிருந்து விளக்குவதை விட, அங்கிருந்தவர் விளக்குவதே பொருத்தமாக இருக்கும் என்பதாலேயே சோஷபா சக்தியின் அனுபவம் மேலே பதியப்பட்டுள்ளது. அதாவது, ஒரு கட்டத்திற்குப் பிறகு இலங்கைத் தமிழர்களின் பிரச்சனை என்பது திசை திரும்பி, சிங்கள இனவாதத்திற்கு எதிராக எழுந்த இயக்கம் தமிழ் பேசும் மக்களுக்கான ஜனநாயகத்தையே அழிக்கும் பயங்கரவாதமாக புலிகளால் மாற்றப்பட்டது. அத்துடன் தமிழ் பேசும் இசுலாமியர்களை 48 மணி நேரத்திற்குள் அனைத்து உடமைகளையும் விட்டு விட்டு வெளியேற வேண்டும் என்று சொல்லி விரட்டியடித்த அமைப்புதான் புலிகள். அத்துடன் புலிகள் அமைப்பின் பேச்சாளர் மறைந்த தமிழ்ச்செல்வன் கூறும்போது ஈழம் விடுதலையடைந்த பிறகுதான் இசுலாமியர்கள் தங்களது உரிமை குறித்து பரிசீலிக்கப்படும் என்று கூறினார். இலங்கை பேரினவாதம் குறித்து வாய் திறக்கும் தமிழகத்தைச் சேர்ந்த தமிழ் இனவாதிகள் புலிகளின் இத்தகைய இசுலாமிய மற்றும் மலையகத் தமிழகர்களுக்கு எதிரான போக்கை கண்டும் காணமல் போவதேனோ? மேலும் அந்த அமைப்பிலேயே ஜனநாயகம் நிலவுவதற்கான சூழல் இல்லாததைத்தான் பல்வேறு தலைவர்கள் வெளியேறியதுக் கூட காட்டுகிறது.

மேற்கண்ட பின்னணியில் இனப் பிரச்சனைக்கு தீர்வு காண இந்தியா உதவுவதற்கு மாறாக, எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தார் போல் புலிகள் உட்பட பல்வேறு அமைப்புகளுக்கு இங்கு ஆயுதப் பயிற்சி உட்பட - ஆதரவும் வழங்கியது. அதாவது இந்தப் பிரச்சனையை கொம்பு சீவி விட்டதில் இந்திரா காந்தி உட்பட முன்னாள் - இன்னாள் முதல்வர்களுக்கும் பங்குண்டு. மறுபுறத்தில் அமைதிப்படை என்ற பெயரில் இந்தியா இராணுவத்தை அனுப்பியது போன்ற செயல்கள் இந்திய அரசுக்கு எதிராக கடும் விவாதங்களைக் கிளப்பியது.

இலங்கையிலோ புலிகள் - சிங்கள பேரினவாதி என்று வர்ணிக்கப்பட்ட பிரமேதாசாவோடு கூட்டணி அமைத்து அமைதிப்யைப்படையை வெளியேற்றினர். அதாவது புலிகளின் இனவாதம் என்பது அதிகார வெறியுடன் கட்டமைக்கப்பட்டதாக உருவெடுத்தது.

இப்படியான குழப்பமான நிலையில் தெற்காசிய பிராந்தியத்தில் அமெரிக்க ஏகாதிபத்தியம் திருகோண மலையில் தனது கப்பற்படைத் தளத்தை அமைத்தது. தற்போதுகூட அவர்கள் ஏவுகணை தளம் ஒன்றை நிறுவுவதற்கு தொடர்ந்து முயற்சிப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்து வந்துள்ளது. இலங்கை அரசு மற்ற நாடுகளுக்கு எதிராக இதுபோன்ற தளம் அமைப்பதற்கு அனுமதிக்க மாட்டோம் என்று கூறி வந்தாலும், அமெரிக்கா தொடர்ந்து இலங்கையில் தனது தளத்தை அமைத்திட முயற்சித்து வருகிறது என்ற உண்மை வெளிப்படையானது. அதாவது ஏகாதிபத்தியம் இந்த இன மோதல்களை ஊக்குவித்து வருகின்றது.

புலிகளும் சந்திரிகா மற்றும் நார்வே நாட்டு குழுக்கள் எடுத்து முயற்சிகளை எல்லாம் பலமுறை தூக்கி எறிந்து விட்டு அங்கு தமிழர் பகுதியில் அபலைகளாகவும், அகதிகளாகவும், புலம் பெயர்ந்தவர்களாகவும் மாறிப்போன இலங்கைத் தமிழர்களின் உயிர் மற்றும் வாழ்வைவிட தனது அதிகார வெறி மற்றும் பயங்கரவாத நடவடிக்கைகள் இந்தப் பிரச்சனைக்கு ஒரு அரசியல் தீர்வை நோக்கி நகர்த்துவதற்கு தடையாக இருந்துக் கொண்டிருக்கிறது.

இந்தப் பின்னணியில்தான் தற்போது இலங்கை இராணுவத்தின் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. புலிகள் தங்களது பரந்து விரிந்த சாம்ராஜ்ஜீயத்தை இழந்து தற்போது முல்லைத் தீவோடு சுருங்கிப் போயுள்ளதும். அங்கு ஒரு லட்சம் அப்பாவி தமிழ் மக்களை கேடயமாக - பணயமாக முன்வைத்து தாக்குதல் நடத்தி வருவதையும் சர்வதேச அமைப்புகள் அம்பலப்படுத்தியுள்ளன. ராஜபக்சே அரசாங்கமும் புலிகளுக்கு எதிரான நடவடிக்கை என்ற காரணத்தைக் காட்டி அரசியல் தீர்வை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறது. இது எந்தவிதத்திலும் தமிழ் மக்களுக்கு நன்மை பயப்பதாகவும், நம்பிக்கை ஊட்டுவதாகவும் அமையாது. எனவே காலம் தாழ்த்தாமல் - ஒன்றுபட்ட இலங்கையில் வாழும் அனைத்து தமிழ் மக்களையும் உள்ளடக்கிய கிழக்கு - வடக்கு பகுதிகளுக்கான மாநில சுயாட்சியை வழங்கிடவும் இதில் அரசியல், பொருளாதார, கலாச்சார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். இதுஒன்றுதான் அந்த நாட்டின் அமைதியான வாழ்விற்கு வித்திடும் மாமருந்தாக அமையும். இந்திய அரசு இவ்விசயத்தில் இருநாட்டு நல்லுறவின் அடிப்படையில் சமூகமான தீர்வினை காண்பதற்கு அணுக வேண்டும்.

இப்படிக்கூறும்போதுதான் தமிழகத்தில் உள்ள பல இனவாத நக்சலிச அமைப்புகள் உட்பட பலரும் சுயநிர்ணய உரிமை வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இதற்கு லெனின் உட்பட மார்க்சிய ஆசான்களையெல்லாம் அழைக்கின்றனர். எனவே, அவர்களுக்காக நாமும் அந்த ஆசான்களிடம் இருந்தே தீர்வை நோக்கி அலசுவது பொருத்தமாக இருக்கும். இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் மக்கட் தொகை அதில் உள்ள பிரிவினை மற்றும் புவியில் ரீதியாக தமிழர்களின் வாழ்விட அமைப்பு போன்றவற்றையும் - இலங்கையே ஒரு குட்டி நாடு என்பதை மனதில் வைத்து எதிர்காலத்தில் ஒரு குட்டி சாம்ராஜ்யம் அமைந்தால் அதனுடைய பொருளாதார அமைப்பு எப்படியிருக்கும் என்பன போன்றவற்றை எல்லாம் கணக்கில் கொள்ளாமல் புலிகளின் சர்வாதிகார - முதலாளித்துவ அரசு அமைவதற்காக இங்குள்ளவர்கள் சுயநிர்ணய உரிமை என்று அரசியல் பம்மாத்து காட்டுகின்றனர். இத்தகைய கோரிக்கை குறித்து மார்க்சிய ஆசான் லெனின் கூறுவதை இனி பார்ப்போம்!

பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்க் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.

தேசங்களுக்குத் தன்னாட்சி உரிமை என்பதை எச்சூழ்நிலையிலும் ஒரு குறிப்பிட்ட தேசத்துக்கு பிரிந்து செல்வதற்கான தகுதி உண்டு என்பதுடன் சேர்த்துக் குழப்பக் கூடாது. பிரிவினைப் பிரச்சனை ஒவ்வொன்றையும் சமூக வளர்ச்சி முழுவதன் நலன்கள், சோசலிசத்துக்கான பாட்டாளி வர்க்கப் போராட்டத்தின் நலன்கள் ஆகியவற்றுடன் அது பொருந்துகிறதா என்ற தகுதியை மட்டுமே கொண்டு சமூக ஜனநாயகக் கட்சி தீர்மானிக்க வேண்டும்.(லெ.தொ.நூ.19.429)
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

மேற்கண்ட லெனின் நிர்ணயிப்பு இலங்கைப் பிரச்சனைக்கு மிகப் பொருத்தமானது. நமது மார்க்சிய மனப்பாடவாதிகள் பாராளுமன்றம் எப்போதும் பன்றித் தொழுவம் என்று அப்பாவி தொண்டர்களை ஏமாற்றுவது போலவே இவ்விசயத்திலும் சுயநிர்ணய உரிமை என்று பிதற்றுவது வேதனையானது. இதனால் இலங்கை மக்களுக்கு தீர்வு கிடைப்பதற்கு மாறாக தள்ளிப் போடுவதற்குதான் அது உதவிடும். போகாத ஊருக்கு வழிகாட்டுவது என்று சொல்வார்களே அதுபோல...

மேலும் லெனின் கூறுவதைக் பார்ப்போம்:

தேசிய வாதத்தைப் புனிதமாக்க முயலும் எந்த முயற்சியையும் பாட்டாளி வர்க்கத்தால் ஆதரிக்க முடியாது; இதற்கு மாறாக, தேசிய வேறுபாடுகளைத் துடைத்தெறிய உதவும் ஒவ்வொன்றையும், தேசியத் தடைகளை நீக்கும் ஒவ்வொரு முயற்சியையும் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்கிறது....
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

தமிழ் இன தேசியவாதத்தை கழுவி புனிதப்படுத்தி, முத்துக்குமரனின் மரணத்தின் விளைவால் ஏற்பட்ட அனுதாபங்களை அறுவடை செய்யும் பிணவாத அரசியலுக்கும் சொந்தக்காரர்களாக மாறிட துடிக்கிறார்கள் திரிபுவாத - சந்தர்ப்பவாத தமிழ் இனவாத அரசியல் நடத்துகின்றனர். இதற்கு அடிக்கடி அவர்கள் மார்க்சியத்தையும் துணைக்கு அழைப்பது விந்தையிலும் விந்தைதான்.

மேலும் சுயநிர்ணய உரிமை குறித்து லெனின் மிக அற்புதமாக கூறுகிறார். இத்தகைய சுயநிர்ணய உரிமை - அதாவது ஒரு தேசத்தில் உள்ள மக்கள் பிரிகிறார்கள் என்றால் அது ஒன்றுபடுவதற்காக - இணைதற்காக என்று அறுதியிட்டுக் கூறுகிறார். இது குறித்து லெனின் கூறுவதைப் பார்ப்போம்.

நாம் சுதந்திரமாக ஒன்றுபடுவதை விரும்புகிறோம் அதனால்தான் நாம் பிரிந்து செல்லும் உரிமையை அங்கீகரிக்க வேண்டும். பிரிந்து செல்வதற்கான சுதந்திரமில்லாமல் ஏற்படும் ஒன்றிணைப்பைச் சுதந்திரமானது என்று சொல்ல முடியாது
பக்கம் 76-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

பிரிந்து செல்லவும் ஒரு சுதந்திர அரசை உருவாக்கவும் ஒவ்வொரு தேசத்துக்கும் உரிமை உண்டு என்பதை லெனின் உறுதிப்படுத்திய போது எல்லா இடங்களிலும் எல்லாச் சமயங்களிலும் இவ்வுரிமையைப் பயன்படுத்த வேண்டும் என்று வாதிட பாட்டாளி வர்க்கக் கட்சி கடமைப்பட்டிருக்கிறது என்ற பொருளில் அவர் சொல்லவில்லை. மாறாக, சில சமயங்களில் பிரிவினை என்பது தகாத ஒன்றாக இருக்கும் என்பதை அவர் ஏற்றுக் கொண்டார்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

இவைகள் எதையும் கணக்கில் எடுக்காமல் கணித சூத்திரம் போல் பிரிவினைவாதம் பேசி இனவாதத்திற்கு நெய் ஊற்றுகிறார்கள் இனவாதிகள்... இலங்கையில் உள்ள தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையின் மூலம்தான் தெற்காசிய மக்களின் ஒற்றுமை பாதுகாக்கப்படும் என்ற வரலாற்று உண்மையைக் கூட உணராமல்... ஏகாதிபத்திய அரசியலுக்கு இரையாகும் இனவாதப்போக்கு இயலாமைத்தான் காட்டுகிறது.

இறுதியாக லெனின் கூறுகிறார் இதுபோன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எப்படிப்பட்ட தீர்வினை முன்னெடுப்பது என்று:

பரந்த பிரதேசத் தன்னாட்சியும் முழுமையான ஜனநாயக சுய நிர்வாகமும் ஆகும். தன்னைத்தானே ஆள்கிற தன்னாட்சிப் பிரதேசங்களின் எல்லைகள் பொருளாதார சமூக நிலைமைகள், மக்கள் தொகையின் தேசிய இயல்பு முதலியவற்றைக் கொண்டு அவ்வட்டார மக்களால் தீர்மானிக்கப்படும்.
பக்கம் 82-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

பாட்டாளி வர்க்கத் தலைவர் லெனின் சுட்டிக்காட்டுவது போல இப்பிரச்சனைக்கு இரு எதிர் எதிரான தீர்வுகள் உள்ளன: பண்பாட்டு - தேசியத் தன்னாட்சி என முதலாளி வர்க்கம் சொல்லும் தீர்வு ஒன்று; பிரதேச மற்றும் வட்டாரத் தன்னாட்சி என்ற பாட்டாளி வர்க்கத் தீர்வு மற்றொன்று.

பண்பாட்டு-தேசியத் தன்னாட்சி என்ற கோட்பாட்டின்படி ஒவ்வொரு தேசிய இனத்தின் உறுப்பினர்களும் ஒரு `தேசியக் கழகத்தை` உருவாக்கிக் கொள்வர். இது கல்வி உள்ளிட்ட அவர்களது சமுக, பண்பாட்டு வாழ்வைக் கட்டுப்படுத்தும். இவ்வகையில் பள்ளிகள் தேசிய இனத்தின் அடிப்படையில் வேறுபடுத்தப்படும்.
பக்கம் 80-மார்க்ஸ் முதல் மா சேதுங் வரை

அதாவது, பொருளாதார மற்றும் புவியில் ரீதியாகவும் அந்த நாட்டின் உள்ள உட்கட்டமைப்புச் சூழலுக்கு ஏற்பவும் - அறிவியல் ரீதியாக பொருந்துவது மாநில சுயாட்சி என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தும் கோட்பாடுதான் பொருத்தமானது. இதனை நோக்கி இலங்கை அரசாங்கத்தை அரசியல் ரீதியாக இலங்கையில் உள்ள உழைக்கும் மக்களை திரட்டிட வேண்டும். இந்த கோரிக்கை முழக்கம் விண்ணில் எழும்நாள்தான் அங்குள்ள மக்களின் விடுதலைக்கான நாளாக மாறும். இத்தகைய நிலை இலங்கையில் எழ வேண்டும் என்றால் தொழிலாளி வர்க்கக் கோரிக்கைகள் முன்னுக்கு வரவேண்டும் என்றால் பயங்கரவாதப் புலிகள் அரசியல் ரீதியாக முறியடிக்கப்பட்டாக வேண்டும். அவர்களிடம் உள்ள அப்பாவி தமிழ் மக்கள் மீட்டெடுக்கப்பட வேண்டும். இலங்கை அரசாங்கமும் இலங்கைத் தமிழர்களுக்கான மாநில சுயாட்சி உரிமையை வழங்குவதற்கு - அரசியல் தீர்வினை காண்பதற்கு முன்வர வேண்டும். இதுமட்டுமே இலங்கையையும் - தமிழ் மக்களையும் காப்பாற்றும். அதுவரை அதிதீவிர சீர்குலைவு சித்தாந்தவதிகளின் செயலினை லெனின் வார்த்தைகளில் விமர்சிக்க வேண்டும் என்றால் முதலாளிகளின் பின்னால் வால்பிடிக்கும் சுயநிர்ணய உரிமை என்று முழக்கமிடுவது பாட்டாளி வர்க்கத்தின் நலன்களை மறுக்கும் மாபெரும் மோசடியாகும்.

புத்தகத்தின் வாயிலாக மார்க்சியம் கற்க முயலும் நமது நண்பர்கள் இனியாவது பூமியில் கால் வைத்து நடப்பார்கள் என்று நம்புவோம்!
கே. செல்வப்பெருமாள்