February 05, 2009

ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள்!

ஈழம்: உலக மக்களே இந்தியாவைக் கண்டியுங்கள்!
என்ற தலைப்பில் வினவு தளத்தில் வெளியான கட்டுரையில் உள்ள முரண்பாடுகள் இங்கே விமர்சிக்கப்படுகிறது.
முதல் பொய்: புலிகளின் பெயரால் நடத்தப்படும் இந்த இன அழிப்புப் போரில் அப்பாவி மக்கள் கொல்லப்படும் செய்தி அனுதினமும் வந்த வண்ணம் இருக்கின்றன.

ம.க.இ.க. இனவாதிகளே உங்களது கோயபல்ஸ் பிரச்சாரத்திற்கு மேற்கண்ட வரிகளே உதாரணமாக திகழ்கிறது. உண்மையை மக்களிடம் மறைப்பதில் உங்களுக்கு நிகர் நீங்கள்தான். முதலாளித்துவ கட்சிகள் கூட உங்களிடம் இனிமேல் பிச்சை வாங்க வேண்டும். இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். அப்படியிருக்கையில் இதனை இனஅழிப்பு என்று கோயபல்ஸ் போல பிரச்சாரம் செய்வதின் நோக்கம் என்ன? கம்யூனிச வேடம் இப்போதுதான் கலைய ஆரம்பித்துள்ளது. போகப் போக புரியும் தமிழ் மக்களுக்கு இதுஒரு இலங்கை ஆதரவு என்.ஜீ.ஓ. என்று.

இரண்டாவது பொய்: இலங்கையிலே கூட சிங்களப் பெரும்பான்மை மக்களின் இனவெறியைத் தூண்டிவிட்டு ஈழத்தமிழனின் இரத்தம் குடிக்கும் இராணுவத்திற்கான ஆதரவை சிங்கள ஆளும்வர்க்கங்கள் பெற்றிருக்கின்றன.

தற்போது இலங்கை அரசின் இராணுவம்தான் புலிகளுக்கு எதிராக மோதல் தொடுத்து வருகிறது. அங்குள்ள சிங்கள மக்களுக்கும் - தமிழ் மக்களுக்கும் எந்தவிதமான மோதலும் நடைபெற்றதாக எந்தச் செய்தியும் வராத நிலையில் இப்படி கயிறு திரித்து தமிழ் இனவாத குளிரில் பிழைப்பு நடத்தலாமா? பெரும்பான்மை சிங்கள மக்கள் சோராம் போயிருந்தால் ஒட்டுமொத்த இலங்கை தமிழ் மக்களும் அல்லவா தற்போது பாதிக்கப்பட்டிருப்பார்கள். அப்படியிருக்கையில் அங்குள்ள யாழ்பாணத் தமிழர்கள் எல்லாம் ஏன் புலிகளிடம் இருந்து தமிழர்களை காப்பாற்றுங்கள் என்று போராட வேண்டும். உண்மையை பேசுங்கள் அய்யா!

மூன்றாவது பொய்: புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.

அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள். இது புலிகள் மீதான விமர்சனம் அல்ல. கரிசனம். அதாவத புலிகளை எதிர்கொள்ள முடியாத கோழைத்தனம். தமிழகத்தில் எழுந்துள்ள இனவாத இரைச்சலில் குளிர் காயும் ஓநாய்த்தனம் என்றுதான் இதனை உரைக்க முடியும்.

நான்காவது பொய்: இந்தப் போராட்டத்தில் எல்லா தேசிய இன மக்களும் கலந்து கொண்டு ஆதரவு தெரிவிக்கும் முகமாக இது இல்லை. தமிழன் செத்தால் தமிழன் மட்டும்தான் குரல் கொடுக்க வேண்டுமென்ற அவல நிலை நீடிக்கிறது. இந்தியாவில் கூட மற்ற மாநில மக்கள் ஈழப் பிரச்சினை பற்றி அலட்டிக் கொள்வதில்லை.

தமிழ் இனவாதத்தின் அப்பட்டமான - மலிவான - இழிவான குரலின் பிரதிபலிப்பு மேற்கண்ட வரிகள். ம.க.இ.க. சி.பி.ஐ.(எம்-எல்) எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மை முகம் இதுதான். அதாவது, இந்தியாவின் இதர மொழிவாரிய இன மக்கள் குரல் கொடுக்கவில்லை என்று கவலைப்படுவது தெரிகிறது. அதுசரி ஏதோ நீங்கள் இந்தியா முழுவதும் புரட்சியை கொண்டு வந்து கிழிக்கப் போவதாக ஏமாற்றுகிறீர்களே தமிழகத்தை தாண்டி உங்களுக்கு வேற்று மாநிலங்களில் அமைப்பு இருந்தால் அவர்களை வைத்து போராடியிருக்கலாமா? குரல் கொடுக்க வைத்து இருக்கலாமே? ஏதோ லண்டனில் ம.க.இ.க. இருப்பதுபோல் போஸ்டர் வெளியிட்டு பெருமையடிக்கும் உங்களுக்கு பக்கத்தில் இருக்கும் மலையாள, கருநாடக, ஆந்திர உழைக்கும் மக்களைக் கூடவா அணித்திரட்ட முடியவில்லை. அதனால்தான் சொல்கிறோம் உங்களது குழு வெறும் தமிழக அளவில் சீர்குலையை மட்டுமேன முன்னிறுத்தும் குழு என்று. அது மட்டுமா? வெறும் இனவாதக்குழு! இது படிப்படியாக வளர்ந்து சிங்கள இனவாதத்திற்கு நாங்களும் சளைத்தவர்கள் இல்லை என்று காட்டும் அளவிற்கு வளர்ந்து விடும். புலிகளுக்கும் உங்களுக்கும் எந்தவிதமான வித்தியாசமும் இல்லை. அதனால்தான் உங்களால் மற்ற மாநில மக்களை அணிதிரட்ட முடியலி்லை. புலிகளுக்கு அட்வைஸ் செய்வதற்கு முன்னால் ஒருமுறை உங்கள் முகத்தை பார்த்துக் கொள்வது நல்லது. பாவம் இணையவாதிகளை ரொம்ப நாள் ஏமாற்ற முடியாது. உங்கள்ம முகம் கிழிய ஆரம்பித்துள்ளது.

ஐந்தாவது பொய்: சிங்கள இராணுவம் நடத்தும் இந்தப் போர் இந்தியாவின் ஆதரவோடும், ஆசியோடும், பங்களிப்போடும் நடக்கிறது என்பதுதான் முக்கியம். புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம்.

நீங்கள் வக்காலத்து வாங்கும் புலிகள் பிரேமதாசா அரசாங்கத்தோடு இணைந்து இந்திய அமைதிப்படையை வெளியேற்ற வேண்டும் என்று குரல் கொடுத்தபோது இந்த சுயநிர்ணய உரிமை எங்கே போனது! புலிகள் ஒன்றும் இலங்கை ஆளும் வர்க்கத்தோடு சமரசம் செய்துக் கொள்ளாதவர்கள் இல்லை என்பதற்கு மேற்கண்ட உதாரணம் மிக முக்கியமானது. அதுசரி! தற்போது தோல்வியின் விளிம்பில் இருக்கும் புலிகளிடம் மாட்டிக் கொண்டுள்ள மக்களை விடுவிப்பது சம்பந்தமாக ஒரு வார்த்தைக்கூட - முனகல்கூட வரமாட்டேங்குதே இது என்ன இலங்கை தமிழ மக்கள் மீது உள்ள பாசமா? அல்லது புலிகள் மீதான கரிசனமா? ம.க.இ.க. செய்யப்போகும் புரட்சி இந்தியாவில் அல்ல என்பது மட்டுமல்ல. செய்ய விரும்புவது இலங்கையில் உள்ள முல்லைத் தீவில் மட்டும்தான் என்பது புரிகிறது.
புலிகளை ஒழிப்பதின் மூலம் ஈழத்தமிழர்களின் சுயநிர்ணய உரிமைக்கு சமாதி கட்டி ஒன்று பட்ட இலங்கையின் பொருளாதாரச் சந்தையை கைப்பற்றுவதுதான் இந்திய ஆளும் வர்க்கங்களின் நோக்கம். என்று சொல்லும் ம.க.இ.க. (சி.பி.ஐ.-எம்)எஸ்.ஓ.சி. தலைமை புலிகளை வெறும் புல்லு தின்னும் புலிகளாக நினைப்பது சூப்பர் காமெடி. அதாவது இவர்கள் நோக்கில் சுயநிர்ணய உரிமையை மீட்டெடுக்க வேண்டும் என்றால் புலிகளால்தான் முடியும்! மற்ற இலங்கைத் தமிழ் அமைப்புகள் அனைத்தும் ஐஸ் கிரீம் சாப்பிடுவதற்குதான் லாயக்கு! ம.க.இ.க.வின் புலிவேசம் பாருங்க இரயாகரன். இனவாதத்தின் உச்ச கட்டத்தில் ம.க.இ.க.

பொய் ஆறு: தமிழ்நாட்டின் ஓட்டுக்கட்சி தலைவர்கள் மத்திய அரசிடம் ஈழத்திற்காக போரை நிறுத்துமாறு பலவீனமான குரலில் வற்புறுத்தினாலும் கூட இந்திய அரசு அசைந்து கொடுப்பதாக இல்லை.

தமிழகத்தின் ஓட்டுக் கட்சிகளில் முக்கியமான கட்சியான தி.மு.க. - அதிமுக - சி.பி.எம். - காங்கிரசு போன்றவைகள் புலிகளை ஆதரிக்கவில்லை. மாறாக அங்கு பாதிக்கப்படும் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பை உத்திரவாதம் செய்ய வேண்டும் என்று ஒரே குரலில் நிற்கின்றன. ஆனால் தமிழ் இனவாதம் நடத்தும் சிறு கட்சிகள்தான் இந்த வேடத்தை தற்போது ஏற்று நடத்துகிறத. அதில்கூட தாங்கள்தான் புரட்சிகரமான முன்னிணியில் இருப்பதாக பீத்திக் கொள்கிறது ம.க.இ.க. இனவாதமே உன்பெயர்தான் சந்தர்ப்பவாதமா?

பொய் ஏழு: தமிழ்நாட்டின் உணர்வுப்பூர்வமான பிரச்சினை என்ற அளவில் கூட ஈழப் பிரச்சினை குறித்து இந்திய அரசு கவலைப்படவில்லை.

உணர்வுப்பூர்வமான பிரச்சனைகளை அறிவுப் பூர்வமாக அணுக மாட்டோம் என்ற ஒரே புரட்சிகர சீர்குலைவு அமைப்பின் உன்னத குரல் இதுதான். இதைத்தான் இரயாகரன் கேள்வி கேட்டார் இதுவரை அவருக்கு எந்தவிதமான பதிலையும் வினவு அளிக்கவில்லை. சந்திப்பு கேள்வி எழுப்பினால் ம.க.இ.க. இனவாதிகள் தனிநபர் அவதூறுகளை அள்ளித் தெளித்து புளகாங்கிதம் அடைகிறார்கள். கொள்கை குன்றுகளாய் மிளிர்கிறார்கள்.

பொய் எட்டு: இந்தியாவின் ஆதரவு துண்டிக்கப்பட்டால் ராஜபக்க்ஷேவின் திமிர் பெருமளவு அடக்கப்படும்.

இந்தியா கைவிட்டு விட்டால் அமெரிக்கா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கும். அதாவது இவர்களைப் பொறுத்தவரை அமெரிக்கதான் இலங்கையின் உற்ற நன்பனாக இருப்பது பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறார்களோ என்னவோ? பாகிஸ்தானுக்கு அமெரிக்கா நட்பாயிருப்பதால் நமக்கு ஏற்பட்டு வரும் இன்னல்களை நாம் அறிவோம்! இவர்கள் புரட்சிகரவாதிகள் அல்லவா? அதன் இப்படியெல்லாம் சிந்தித்து - சீர்தூக்கி வர்க்க ஆராய்ச்சி செய்கிறார்கள்....

பொய் ஒன்பது: வெளிநாட்டில் இருக்கும் தமிழ் பேசும் மக்கள் அந்தந்த நாட்டில் இருக்கும் ஜனநாயக சக்திகளுடன் இணைந்து கொண்டு குறிப்பாக மற்ற தேசிய இன மக்களை அணிதிரட்டி இந்தியாவை அம்பலப்படுத்தும் பணியை செய்ய வேண்டுமென கோருகிறோம்.

பரவாயில்லை இந்தியாவில்தான் ஓட்டுக் கட்சிகள் - பாராளுமன்றம் பன்னித் தொழுவம் என்று கூறி ஜனநாயகம் இல்லை என்று மாரடிக்கும் இந்தக் கூட்டம். வெளிநாட்டில் எல்லாம் சோசலிச ஜனநாயகம் நிலவுவதாகவும் அந்தக் கட்சிகள் எல்லாம் இவர்களைப் போலவே வர்க்கத்தை கடந்து நிற்பதாகவும் கூத்தடிப்பது வேடிக்கையானது. இவர்கள் அணிகள் எல்லாம் இதனைப் படித்து விட்டு புல்லரித்துப் போவார்கள்.
இலங்கை பிரச்சனை தொடர்பான சந்திப்பின் நிலைபாடு

26 comments:

சந்திப்பு said...

marxistindia : news from the cpi(m): February 5, 2009

Press Statement

The Polit Bureau of the Communist Party of India (Marxist) has issued the following statement:

Safeguard Tamil Civilians in Sri Lanka

The Polit Bureau of the CPI(M) expresses serious concern at the continuing reports of casualties among the Tamil civilian population who are trapped in the war zone in Mullaithivu district of Sri Lanka. The latest report from the United Nations representative confirmed that 52 people were killed and 80 wounded in the fighting in a day. There are incidents of two hospitals being shelled or bombed.

There are over two lakh civilians who are trapped in the areas where the fighting is going on. Both the Sri Lankan government and the LTTE have to ensure that the civilians are given safe passage into areas where there are no hostilities or safe zones.

The CPI(M) is also disappointed that the Sri Lankan government is not making any progress in working out a political settlement on the Tamil question, despite assurances.

The government of India should seek the assistance of the United Nations to ensure the safety of the Tamil civilian population in the northern province. It should also step up its diplomatic and political efforts to ensure that the Sri Lankan government immediately take up the provision of genuine autonomy for the Tamil-speaking areas within a united Sri Lanka as promised during the visit of the External Affairs Minister to Colombo.

eom

Anonymous said...

இலங்கை இனப்பிரச்சனையின் இன்றைய காலகட்டத்தில்,

திமுக, அதிமுக காங்கிரஸ் மற்றும் சிபிஎம் ஆகியோரின் முதிர்ச்சி நல்ல தீர்வு ஏற்படும் என்ற நம்பிக்கையை தருகிறது.

வாழ்த்துக்கள்!!

சந்திப்பு said...

http://ciththan.blogspot.com

மனிதப் பேரவலத்தைத் தடுத்து நிறுத்து! -புகலிட அமைப்புக்கள்

மனித பேரவலத்தை தடுத்து நிறுத்த உடன் செயற்படுமாறு இலங்கை அரசிடமும் விடுதலைப் புலிகளிடமும் புலம் பெயர் அமைப்புக்கள் கோரிக்கை : முல்லைத்தீவிலுள்ள பொதுமக்களின் பாதுகாப்பிற்கு முதலிடம்!

முல்லைத்தீவில் இடம்பெறும் யுத்தத்தில் சிக்குண்டுள்ள பொதுமக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் எள்ளளவும் கருத்திலெடுக்காது உதாசீனம் செய்யும் இலங்கை அரசையும் விடுதலைப்புலிகளையும் இந்த அறிக்கையில் கையொப்பமிட்டுள்ள நாம் வன்மையாக கண்டிக்கிறோம். இலங்கையின் வடபகுதியில் முளைவிடத்தொடங்கியிருக்கும் மனித பேரழிவை தடுப்பதற்கு, யுத்தத்தில் சிக்கித் தத்தளிக்கும் இரண்டரை லட்சம் பொதுமக்களின் பாதுகாப்பை உடனடியாக முதன்மைப்படுத்துமாறு இலங்கை அரசுக்கும் விடுதலை புலிகளுக்கும் நாம் கோரிக்கை விடுக்கிறோம்.

சர்வதேசச் செஞ்சிலுவை சங்கத்தின் 28 ஜனவரி 2009 திகதியிட்ட அறிக்கை, முளைவிடத்தொடங்கியிருக்கும் மனித பேரவலம் தொடர்பில் பின்வருமாறு எச்சரிக்கை செய்கிறது :

“ நூற்றுக்கணக்கான பொது மக்கள் கொல்லப்பட்டிருப்பதுடன், போதிய பராமரிப்பு மற்றும் மருத்துவ வசதிகளும் இல்லாததொரு சூழ்நிலையில் ஏராளமானவர்கள் காயப்பட்டும் இருக்கின்றனர்……. இரு தரப்பினருக்கும் இடையிலான யுத்தத்தில் பொது மக்கள் அகப்பட்டிருப்பதுடன், அம்புலன்ஸ்கள் வைத்தியசாலைகள் என்பன செல் தாக்குதலுக்குள்ளாகி காயமுற்றவர்களை அப்புறப்படுத்துவதில் ஈடுபட்டிருந்த பல தொண்டு நிறுவனப் பணியாளர்களும் காயமுற்றிருக்கின்றனர்.”

கடந்த சில மாதங்களாக திரும்ப திரும்ப இடப்பெயர்வுக்குள்ளாகி வருவதுடன், விமான தாக்குதல்கள் மற்றும் எறிகணை தாக்குதல்களிலிருந்து தப்பியோடி, போதிய உணவு மருத்துவ தங்குமிட வசதிகளின்றி சொல்லொணா துயரங்களை அனுபவித்து வரும் வன்னிப்பகுதி மக்களின் பாதுகாப்பையும் நலன்களையும் பற்றிய எமது ஆழ்ந்த கரிசனையையும் நாம் தெரிவிக்க விரும்புகின்றோம்.

முல்லைத்தீவில் தமது கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளுக்கு பொதுமக்களை பலவந்தமாக தங்களுடன் பின்வாங்குமாறு செய்ததற்கு விடுதலைப் புலிகளே பொறுப்பாவார்கள். இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையேயான நேரடி யுத்த களமுனைக்கு இடையே இரண்டரை லட்சம் பொதுமக்கள் சிக்கியுள்ளதாக செஞ்சிலுவை சங்கமும் ஜக்கிய நாடுகள் ஸ்தாபனமும் கணிப்பிட்டுள்ளன. இப்பகுதிகளிலிருந்து வெளியேற முயல்பவர்கள், இப் பொதுமக்களை மனித கேடயங்களாகப் பயன்படுத்தும் மற்றும் புலிகளால் கொலை செய்யப்படும் நிலை உள்ளதாக எமக்குக் கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆனாலும் இலங்கை அரசால் ஏற்படுத்தப்பட்டிருக்கும் „பாதுகாப்பு வலயம்” போதுமானதல்ல. பாதுகாப்புவலயத்திற்கு தப்பிவந்த பொதுமக்கள் கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத்திற்கு ஆளாகவேண்டிய பேராபத்தை சந்திக்கின்றனர். விடுதலைப் புலிகள் பாதுகாப்பு வலயத்திற்கு அண்மையிலிருந்து தம்மீது தாக்குவதால் தாம் பதில் குண்டுத்தாக்குதல்கள் நிகழ்த்துவதாக அரசதரப்பு சொல்கிறது. அரசின் இந் நடவடிக்கை எவ்விதத்திலும் நியாயப்படுத்த முடியாதது. எந்த விலை கொடுத்தேனும் தமது யுத்த நிகழ்ச்சி நிரலை கொண்டுசெல்ல முயலும் அரசின் முனைப்பையே இது காட்டுகிறது. தமிழ் பொதுமக்களின் நலனில் தாங்கள் கரிசனை கொண்டிருக்கிறோம், முல்லைத்தீவில் இருந்து தப்பி வருபவர்கள் மேல் தாங்கள் அக்கறை கொண்டிருக்கிறோம் என்பதை காட்டுவதற்கான உடனடி நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும்.

பொதுமக்களுக்கு நேரும் பேராபத்தை அறிந்துகொண்டு, யாழ் பேராயர் வண. தோமஸ் சவுந்தரநாயகம் அடிகளார் அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதிய 25 ஜனவரி 2009 திகதியிட்ட கடிதத்தில் பின்வருமாறு வேண்டுகோள் விடுக்கிறார்:

“ விடுதலை புலிகள் பாதுகாப்புவலையங்களில் பொதுமக்கள் மத்தியில் நின்று ராணுவத்தின் மேல் எறிகணைகளையும் குண்டுகளையும் வீசுவதை தவிர்க்குமாறு அவசரமாக வேண்டுகிறோம். இது மென்மேலும் உயிர் இழப்புகளை அதிகரித்து மக்களின் பாதுகாப்புக்குக் குந்தகம் விளைவிக்கும். பாதுகாப்பு வலையத்தை கண்காணிக்குமாறு நான் இரு தரப்பையும் கண்டிப்பாக வற்புறுத்துகிறேன்”.

விடுதலை புலிகள் மக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதும், அவர்கள் தப்பி ஓடாமல் தடுப்பதும் ஏற்றுக்கொள்ளப்படமுடியாததென்பதுடன், சர்வதேச போர் விதிகளை மீறும் செயலுமாகும். ஆனாலும் தனது பிரஜைகள் அனைவரதும் பாதுகாப்பை உறுதி செய்யவேண்டியது இலங்கை அரசின் தலையாய கடமையாகும். ராணுவ நோக்கங்களை விட மக்களின் பாதுகாப்பே முதன்மை படுத்தப்பட வேண்டியது. அதிகரித்துவரும் பொதுமக்களின் உயிரிழப்புகள், காயப்பட்டவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு சென்று மருத்துவ உதவி பெறமுடியாத கையறு நிலை, யுத்தத்தில் சிக்குண்டு பீதியடைந்திருக்கும் பொதுமக்களின் அவலநிலை ஆகியவற்றை இலங்கை அரசு உடனடியாக கவனத்திலெடுத்து அதற்கு முன்னுரிமை அளிக்கவேண்டும்.

மனித பேரழிவுக்கான நிலை உருவாகியிருப்பதை பற்றி சர்வதேச சமூகம் உணர்ந்திருக்கிறதென்பது அவர்களின் அறிக்கைகளூடாகத் தெரிய வருகிறது. ஆனாலும் இலங்கை அரசின் மீதும் விடுதலை புலிகள் மீதும் தொடர்ந்த அழுத்தத்தை பிரயோகித்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய சர்வதேச சமுகம் முன்வர வேண்டும்.
எனவே அய்க்கிய நாடுகள், அய்க்கிய நாட்டு அமைப்புகள், இலங்கையில் மனிதாபிமான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருக்கும் அரசுகள், சர்வதேச மனிதாபிமான அமைப்புகள் மற்றும், தமிழ் நாடு அரசு ஆகியவற்றிற்கு நாம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறோம் :

மேலதிகமான நேர்த்தியான பாதுகாப்புவலையங்கள ஏற்படுத்த இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுத்தல்;

பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேற ஏதுவாக பாதுகாப்பு வாசல்களை ஏற்படுத்தி, பாதுகாப்பு வலயங்களுக்கு பொதுமக்கள் சென்றடைவதற்கு ஏதுவாக அப்பகுதிகளில் யுத்தத்தை நிறுத்த விடுதலை புலிகளையும் இலங்கை அரசையும் வற்புறுத்தி கோருதல்

யு.என்.எச்.சீ.ஆர்., செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளுக்கு தங்குதடையற்ற போக்குவரத்து வசதிகள் செய்து அவர்கள் பொதுமக்களுக்கு முழுமையான சேவையை செய்ய அனுமதி வழங்குமாறு கோருதல்

அரச கட்டுப்பாட்டு பகுதிகளுக்கு தப்பி வரும் பொதுமக்கள் மேல் அரச படைகளோ ஆயுத குழுக்களோ மக்களின் உரிமைகளை மீறும் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் தடுத்தல்

இலங்கை அரசும் விடுதலை புலிகளும் ஜெனீவா சாசன விதிகளுக்கு அமைவாக பொதுமக்களை நடாத்த வேண்டுமெனவும், ராணுவத்தினரோ விடுதலைப்புலி இயக்கத்தினரோ சரணடைந்தாலோ அல்லது கைப்பற்றப்பட்டாலோ போர்க்கைதிகள் சம்பந்தமான சர்வதேச விழுமியங்களை பேணி அவர்களது உயிர்வாழும் உரிமை, மனிதாபிமானமாக நடத்துதல் போன்றவற்றை இருதரப்பினரும் கடைப்பிடிக்க வேண்டுமெனவும் வலியுறுத்தல்.

ஒப்பம் :

இலங்கை ஜனநாயக ஒன்றியம்
புலம்பெயர்ந்த இலங்கையர்களின் சர்வதேச இணையம்
ஜனநாயகத்திற்கும் நீதிக்குமான குழு (ஐ.இ.)
தேனீ - இணைய சஞ்சிகை
உதயம் பத்திரிகை - அவுஸ்திரேலியா
பறை சஞ்சிகை - நோர்வே
உயிர்நிழல் - அரசியல் கலை இலக்கிய தமிழ் சஞ்சிகை, பிரான்ஸ்
உயிர் மெய் - அரசியல் கலை இலக்கிய தமிழ் சஞ்சிகை, நோர்வே
சுதந்திர ஊடகம், நோர்வே
தென் ஆசிய தோழமை கழகம், ஐ.இ.
தென் ஆசிய தோழமை முயற்சி, அமெரிக்கா
வைகறை - கனடா
சிறிலங்கா இஸ்லாமிக் போறம் -யு. கே
சிறிலங்கா சங்கம் ஸ்டுட்கார்ட்-ஜேர்மனி
சிறிலங்கா வட்டம் பேர்லின் ஜேர்மனி
கனேடிய ஜனநாயக அமைப்பு, கனடா

Anonymous said...

முதல் உண்மை
வரலாற்று ரீதியாக தமிழர்கள் இலங்கையில் மூன்றாக உள்ளனர் என்பது குழந்தைக்கு கூடத் தெரிந்த உண்மை. பாதுகாக்கப்பட்ட பகுதியில் இலங்கை உள்ளிட்ட 7 நாட்டு ராணுவத் தாக்குதல் யார் மீது நடத்தப்பட்டது... எந்த பயத்தில் நடத்தப்பட்டது... ஜேவிபி போன்ற முன்னாள் டிராட்ஸ்கியவாத இன்னாள் இனவாதிகள் பேச்சும் உங்கள் பேச்சும் ஒன்று போலத் தெரிகின்றதே
இரண்டாம் உண்மை: மோதல் நடந்ததாக வினவு எங்குமே சொல்லவில்லை. ஆனால் தாக்குதலை எதிர்த்துப் போராட வேண்டிய சிங்கள மக்கள் ஏன் அமைதியாக இருக்கிறார்கள் அந்த அமைதி ஒருவகையான சம்மதம் இல்லையா? குஜராத் இல் இந்துமத வெறியர்களின் தாக்குதலைத் தடுக்கத் தவறிய நடுநிலை இந்துக்கள் விமர்சிக்கப்பட வேண்டியவர்களா இல்லையா...அது இலங்கைக்கும் பொருந்தும்தானே...
மூன்றாம் உண்மை: விமர்சனத்தில் இருவகை உண்டு. திருந்த வேண்டும் என்ற நோக்கில் வைப்பது அதுதான புலிகள் மீது வினவு வைப்பது. போகிற போக்கில் எல்லோரையும் உங்களைப் போல வெறுமென திட்டிவதை மாத்திரம் செய்வது உங்களைப் போல. விமர்சனம் பற்றிய இந்த அடிப்படை கூட புரியாதவர்கள் எப்படி கம்யூனிஸட் கட்சி என்ற பெயரில் உலவுகின்றீர்கள் எனத் தெரியவில்லை. கரிசனமும், கோழைத்தனமும், ஓநாய்த்தனமும் ஒரே நபரிடம் நிலவுவதாக ஆறு அறிவு படைத்த மனிதனால் ஆதாரமின்றி சொல்வது சாத்தியமில்லை. லாஜிக் இல்லாமல் பேசும் வழக்கத்தை மாற்றி மக்களுக்கு புரியும் வகையில் இன்னும் சரியாகச் சொல்வது என்றால் உங்களை விட அறிவாளிகளான சாதாரண மக்களுக்கு புரியும் வகையில் பேசுங்கள்.
நான்காம் உண்மை: படிக்கத் தெரியும்தானே... சிபிஎம் லதான அறிவொளி இயக்கமெல்லாம நடத்துறாங்க... அரசியல் விமர்சனத்துக்கு அமைப்பு பலம் பத்தி பதில் சொல்ற...அமைப்பு பலமா இல்லாததால இனவாதமாயிருவாங்கன்னு சொல்ற... இப்படி லாஜிக் இல்லாம பேசுறத யாருமே சகிக்க முடியாதே.... யாருகிட்ட இதெல்லாம் கத்துக்கிட்டீங்க..கட்சில இப்படி உளறத் தெரியாதவங்கல களையெடுக்க எதுவும் சீர்செய் இயக்கம் நடத்துறீங்களா.... ஸ்ட்ரெய்ட்டா கேக்குறேன். ஓரு தேசிய இனம் அழிக்கப்படும் பொது கம்யூனிஸடுனு தன்ன சொல்லிக்கிறவன் என்ன செய்யணும்...ப்ளீஸ் லாஜிக் கூட ஞாபகப்படுத்துறேன். (இரண்டாம் உலக்பபோர், யூத இனம். ஹிட்லர், பாசிசம், ..)
ஐந்தாம் உண்மை: திரும்பவும் சொல்றன் புலிகள வினவு ஆதரிச்சதுக்கு ஆதாரம் காட்டு. சும்மா நீ நினைக்கிறதயே பினாத்தாத... புலிகளிடம் மக்கள் மாட்டிக் கொண்டார்கள் என்பதற்கு உங்களது மத்திய அரசியல் குழுவை விட உயர்வாக நீங்கள் வைத்திருக்கும் மவுண்ட் ரோடு விஷுணுவோ அல்லாட்டி அவரு சம்பந்த காரரு டிவியான சன் டிவி யோ அல்லாத ஏதாவது ஆதாரம் சொல்லு பாக்கலாம். 48 மணி நேரத்துல யாருமே வரலியே... மக்கள கேவலப் படுத்துறத நாடு தாண்டி பண்றீங்களா..கம்யூனிஸ்டுகள் என்றால் சர்வதேசிய வாதிகள் அவர்கள் தெற்காசிய பிராந்திய ரவுடியாக தனது நாட்டை மாற்றுவதற்கு துணைநின்றால் இரண்டாம் அகிலத்துக்கும் உங்களுக்கும் என்ன வித்தியாசம்.
உண்மை ஆறு: நீங்களோ காங்கிரசோ பெரிய கட்சியா ப்ளீஸ் 2004, 06 தேர்தல்ல் எத்தின் சதவீதம்ஓட்டு வாங்குனீங்க... அதிமுக, காங்கிரசு ஒரு காலத்துல புலிகள ஆதரிச்சுது. அப்பவே அவிங்கள விமர்சனம் பண்ணி பேசினது நாங்கதான். போரை நிறுத்தாமல் மக்களை எப்படி பாதுகாப்பது தராஸ்கிய வழியில் ஏதாவது கண்டுபிடித்துள்ளீர்களா? ஜனநாயக அறிகுறி கூட இல்லாத நீங்க புரட்சி ப்த்தில்லாம பேசுறீங்களை பாப்பார என்.ராம் கோயிச்சுக்கப் போறாரு. இலங்கைல தொழில் நடத்துற டாடா கோயிச்சுக்குவாரு, மிட்டல் கோயிச்சுக்குவாரு...இவிங்க மே.வங்கத்துல மக்கள நசுக்குன மாறி இலங்கைலயும் நசுக்கி காலனியாக்கனும் அதுவும் சிவப்புக் கொடி பேரால....இதுக்கு பேரு பாப்பு வேல இல்லையா... என்ன பண்றது பழகுன தோசம் உங்களுக்கு பாப்பாரப் புத்தியும் வந்திருச்சி...

உண்மை ஏழு: உணர்ச்சிப்பூர்வமான பிரச்சினையை அறிவுப்பூர்வமாக அணுக வேண்டும். மிகச்சரி. நல்லாப்படிம்மா... அத ஒரு எதிரிகளின் அரசுக்கு தான் சொல்றாங்க... என்ன பண்றது நால்ற வருச குறுகுறுப்பு உறுத்துதோ? மக்கள் கொஞ்சம் இன உணர்வு கொள்வது தவிர்க்க முடியாத அறிவியல். ஒரு கம்யூனிஸட் கூட தடுமாறும் இடம் இது. மக்கள் இனவாத அரசியலிலிருந்து விடுபட நீங்கள் விரும்பினால் முத்துக்குமாரின் ஊர்வலத்தில் வந்து ஏன் பேசாமல், சர்.பி.டி. தியாகராசர் அரங்கத்திற்கு போய் சில அறிவாளிகளுக்கு மட்டும் நிகழ்ச்சி நட்த்திய வீரத்தை என்னவென்பத்? இதுதான் மக்களிடம் நீங்கள் செல்லும் லட்சணமா? அதெல்லாம் இருக்கட்டும் அந்த இன உணர்வு தவறு எனச் சொல்லும் அறிவியல் பார்வை உங்களுக்கு இருந்தால் என்ன மயித்துக்கு ஆயுத பூஜ கொண்டாடுறீங்க்...
உண்மை எட்டு: இப்பிடி இந்தியா எப்படி பேட்ட ரவுடி ஆவளாம்னு சீர்தூக்கி வேல செய்ய எப்படி ஒரு கம்யூனிஸ்டு சிந்திப்பான். ஓ... குறைந்த பட்ச செயல்திட்டத்துல காங்கிரசுக்காரனுக்காக சிந்திக்கிறதும் ஒன்னா உங்களுக்கு.. பாகிஸ்தான் அப்போ நமக்கு எதிரி நாடா? ஏப்பு இப்படி சொன்னப்புறமும் உங்கள வந்து ஏன் அத்வானியும் மோடியும் பார்த்து கூட்டணி போடாம இருக்காங்க...
உண்மை ஒன்பதும், உரைக்காத உண்மையும்: தயவு செய்து உங்க கட்சில் யாருக்காச்சும் மார்க்சிய அறிவு இருந்தா ஜார்ஜ் தாம்ஸனின் மார்க்ஸ் முதல் மாசேதுங் வரை என்ற நூலை படித்துப் பார்க்கவும், முக்கியமாக விவாதிக்கவும். லாஜிக் ஆக விவாதிக்க திணறினால் எனது செல் நம்பரைத் தருகிறேன் அழையுங்கள். உங்களது அலுவலகத்திலேயே வைத்து கூட விவாதிக்கலாம். வர்க்கம், தேசிய இனம் பற்றிய பத்தாம் பசலிகளுடைய தவறான கருத்துக்களை எளிய முறையில் அவர் புரிய வைத்துள்ளார். கற்றுக் கொள்வதற்கான மாணவப் பணிவு புத்தக்திற்கு முன்பாவது உங்களுக்கு அவசியம் தேவை

Anonymous said...

/இலங்கையில் கிழக்கு மாகாணத்திலும், மத்தியில் உள்ள மலையகத் தமிழர்களும், இசுலாமிய தமிழர்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர். இவர்கள் மீது இராணுவ மோதல்கள் எதுவும் நடைபெறவில்லை. ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள்./

get real, moron

Anonymous said...

கம்மியுனிசம் என்ற செத்த பிணத்தை வைத்துக்கொண்டு ஏம்பா தினம் தினம் இங்கு இரண்டு வீணாப்போன கும்பல்களும் அடித்துக்கொள்கிறீர்கள்.
வேற ஏதாவது பொழப்ப பாருங்கப்பா.

விடுதலை said...

//எம்முடன் நெருங்கிய இந்திய தோழர்கள் மத்தியில், இதை கண்டு அதிர்ந்து போகின்றோம். வால்பிடித்தல், உணர்ச்சிவசப்படல், பெரும் அலைக்கு பின்னால் ஒடுதல் எல்லாம் பாட்டாளி வர்க்க உணர்வை மறுதலிப்பதாக உள்ளது//

மேற்கண்ட பதில் இரயாகரன் அவர்களுடையது அவர் இந்தியாவில் உள்ள தமிழ்நாட்டில் மட்டும் உள்ள மகஇக திருடர்களைதான் .அயோக்கியதனமாக புலிக்கு ஆதரவா போரட்டம் செய்யறது கேட்டா தமிழ்மக்களுக்கு ஆதரவா போராட்டம் நடத்துகிறோம் என்று சிபிஎம்யை நக்கி திருட்டு அரசியல் செய்வது.

Anonymous said...

"பிரபா நீ மட்டுமே ஈழத்தைக் காக்க முடியும்" :
தேசியத்தலைவா! நீ மட்டுமே காக்க முடியும்.
ஈழக்குழந்தைகளின் ஈரலை குளிப்பாட்டுது இரத்தம்
திரும்பும் திசையெல்லாம் எரியுதடா நித்தம்,
அழும் குழந்தை அருகிலே மாண்டதாய்
அறியாது காரணம் அழும் குழந்தை இதாய்.
அன்று எரிந்த இலங்கையது ராமாயணம்,
எரியுதின்று இலங்கையிது ராஜபக்சே மயாணம்.
தேசியத்தலைவா! நீ மட்டுமே காக்க முடியும்.
ஓடுகாலி கூட்டமொன்று பயந்தோடி அன்று,
விதவிதமாய் வலைப்பூக்களில் கவிதையெழுதுது இன்று
திரும்பிவர கூப்பிட்டா கதய சொல்லுது நன்று.,
அன்று ஆயிரமுயிர் கொன்று நீ உன்னுயிர் காத்தாய்,
இன்று உன்னுயிர் கொண்டு லட்சமுயிர் காப்பாய்.
எங்கேயிருக்கிறாய் தலைவா! வெளியே வா!.
உணக்கென போரென்று உலகத்தையளிக்கிறான்.
நீ எங்கே என் தேசியமே! நீ ஒழிந்திருப்பதால்
வரலாறு உன் மீது வாருமே மண்ணை.
தியாகத்தால் அழியாது வைத்திருக்கும் உன்னை.
பிரபாகரா அனைத்தும் முடிந்து விட்டது.
எம்குழந்தைகள் இனியும் ஆயுதம் பிடிக்க வேண்டா.,
இனியாவது அவர்கள் பட்டாம்பூச்சி பிடிக்கட்டும்.
தேசியத்தலைவா! நீ மட்டுமே காக்க முடியும்.

விடுதலை said...

இடம்: அலுவலகம் இல்லாத தெரு நாய்கள்

கூலிக்கு மாரடிக்கும் அதாவது காசு வாங்கிட்டு பிளாக் எழுதும் வெனவு , இன்றாவது நமது புலிகிட்ட இருந்து காசு் வறாதா என ஏக்கத்தோடு கம்ப்யூட்டர் மானிடர்ரை பார்த்தபடி அமர்ந்திருக்கிறார்….
;;;பாசிச வெறிபிடித்த இந்தியா அழிய வழி சொல்லு அமெரிக்கா:::
செல்ஃபோன் அலறுகிறது. போனில் மசுரன்
இனி உரையாடல்

வெனவு
தோலர், சந்திப்பு சைட் பாத்தீங்களா

வெனவு
ஏன் தோலர் காலங்காத்தால வயத்தெறிச்லை கொட்டுரீங்க

மசுரன்
அதுக்கில்ல தோலர் இன்னிக்கு நாம புலிகிட்டயும். சிங்கள அரசுகிட்டயும் காசு வாங்கினு .நாம எழுதின பொய்யை கண்டிச்சி ம.க.இ.க. வினவின் இனவாத பொய்கள் என்ற கட்டுரையை போட்டிருக்காங்க.

வெனவு
அதுக்கென்ன.

மசுரன்
என்ன தோலர், நம்ம இப்ப சிங்கள அரசை ஆதரிக்கும் கூட்டனியில்ல புலியை ஆதரிக்கும் கூட்டனி நம்ம நான்டுகிட்டு சாகிற மாதரி ஒருத்தன் குறை சொல்றத அனுமதிக்கலாமா அப்புறம்

வெனவு
ஆமா ஆமா, நான் போய் நாலு பேருல பின்னூட்டம் போடறேன் நீங்க ஒரு நாலு பேருல போடுங்க. அப்படியே நானே பதிவெழுதி நானே பின்னூட்டம் போடுற அனானிக்கு கண்ணோட்டம் பதிவுலயும் ஒரு அனானி பின்னூட்டம் போடறேன். நீங்களும் உங்க சைட்டுல எல்லாம் போடுங்க.பாசிஸ்ட்ன்னும் போடுவோம், அப்படியே டவுசர கழட்டி கிழிச்சுடலாம்.

மசுரன்
அய்யோ தோலர் என்னய பேச உடுங்க. இன்னிக்கு அவங்க போட்ட பதிவுல வழக்கம்போல காசசு கொடுத்து எதையாவது போட்டாவை எடுத்து போராட்டம் நடத்தியதா போடுவமே அதையும்க கண்டுபிடிச்சிட்டாங்க

வெனவு
சரிங்க எப்பவும் நாம போடறதுதானே, வேணுமின்னா இலண்டனில் நாம் கட்சி நடத்துறம் அங்க அடுத்த வாரம் புரட்சி வருதுன்னு 50 கட்ரையை எழுதுவோம் போதுமா

மசுரன்
ஒரு நிமிசம் தோலர் அந்த போட்டோல ம.க.இ..க தமிழ்நாடுன்னு இருக்கு அதை புலி அளுங்க பாத்துட்டாங்க நாம் திருட்டுத்தனமா எழுதி நம்ம ஆள வைச்சி போட்டோ எடுத்துட்டோம் இன்ன பன்றதுன்னு தெரியல.

வெனவு
என்னது?

மசுரன்
ஆமாம் தோலர், எப்பிடி தோழர், நம்ம கட்சியை எவ்வளவு ரகசியமா நடத்துரம், நடராஜர் கோயில் பிரச்சனையில் ஆயிரக்கணக்கில் வந்துபோராட்டம் பன்ன டைபியை மரைச்சி போலிஸ்கிட்ட வம்பு பன்னி நம்ம ஆளுங்க நாளுபேர் இன்னமா யாறுக்கும் தெரியாம ஆக்ட் கொடுத்தோம்.நாம ட்ரைனிங் கொடுத்த நம்மாளுங்க யாரும் லண்டன்ல இல்லயா?

வெனவு
நீங்க வேற நாம அந்த போட்டோவை எடுக்க நாம பட்ட பாடு இருக்கே கொஞ்சமா. இத இப்படி டீல் பண்ண கூடாது. நான் ஒரு தனி பதிவே போடறேன்

மசுரன்
தோலர் வேணாம் தோலர் அதெயெல்லாம் படிச்சு பின்னூட்டம் போடறது நமக்கு கஸ்டம்.

வெனவு
அது எனக்கு தெறியாதா. நான் அவங்க எழுதுனதையே சேர்த்து மொத்த மொத்தமா போட்டு யாருக்கும் புரியாதமாதிரி அப்படியே எதிரா எழுதிடுரேன். நீங்க அதையே காப்பி பண்ணி பின்னூட்டமா போடுங்க

மசுரன்
ரைட்டு தோலர் வச்சுடரேன்

வெனவு
ஓகே தோலர்.
போனை வைக்கிறார்…..

Anonymous said...

ம.க.இ.க வினரின் ஒடுக்குமுறையாளர்களின் செயற்பாட்டினை கொச்சைப்படுத்தி கருத்தினை விட்டிருக்கும் பிரிவினர். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கடமையில் இருந்து சிந்திக்கவில்லை. மாறாக அரசாங்கங்களில் அங்கம் வகித்துக் கொண்டும் ஒடுக்குமுறை அரசயந்திரத்தை பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் போக்கைக் கொண்டவர்களால் கொச்சைப்படுத்தி கருத்தூட்டம் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம் பாசீச ஜெயலலிதாவின் கூட்டில் தற்பொழுது இருக்கின்றார்கள். முன்னர் தரகுமுதலாளிகளைக் கொண்ட கருணாநிதியின் அரசாங்கத்தை பாதுகாத்து வந்தார்கள்.
இவர்கள் செய்வது என்ன காலத்துக்கு காலம் ஒடுக்குமுறையாளர்களுடன் தேர்தலுக்காக கையோர்த்துச் செயற்படுபவர்கள். இவர்கள் ஒடுக்குமுறை யந்திரம் என்பது தற்கால அல்லது முன்னைய ஆட்சியாளர்கள் அடங்கமாட்டார்களா? அரசு என்பதே ஒரு வர்க்கம் சார்ந்தல்லவா இருக்கும் இது மார்க்சீயத்தின் அரிவரிப்பாடமல்லவா? இதனை மறந்து ஒடுக்குமுறையாளர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு இழைக்கும் துரோகம் அல்லவா?
சிபிஎம் இந்திய தலையீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் இந்திய தரகு வர்க்கத்தை அம்பலப்படுத்தியல்லவா இருக்க வேண்டும். அதனை விடுத்து தரகு முதலாளிகளைக் கொண்ட கூட்டத்தையும் அரவணைத்து ஈழத்தமிழருக்காக போராட வேண்டும் எனக் கூறுகின்றது.
இன்று கருணாநிதி தரகுமுதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டே ஈழப்பிரச்சனையில் மத்தியில் ஆழும் தரகு வர்க்கத்தின் ஊதுகுழலாளாக இருக்க வேண்டிய நிலைக்கு நிலைப்பாடு எடுத்துள்ளார்.
இத்துடன் இவருடைய குடும்ப நலன்களும் முக்கியமாக இருக்கின்றது. சண்சகோதரர்களின் நலனும் கலைஞரின் முடிவில் தாக்கத்தை கொடுக்கின்றது.
ஆக சொந்த நாட்டில் உள்ள ஆழும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவது சர்வசேதியமாகும். இதனை மகஇக தோழர்கள் செய்கின்றனர். இவைகள் முக்கியமான அம்சமாகும்.
nathan

Anonymous said...

ம.க.இ.க வினரின் ஒடுக்குமுறையாளர்களின் செயற்பாட்டினை கொச்சைப்படுத்தி கருத்தினை விட்டிருக்கும் பிரிவினர். பாட்டாளி வர்க்க சர்வதேசியம் என்ற கடமையில் இருந்து சிந்திக்கவில்லை. மாறாக அரசாங்கங்களில் அங்கம் வகித்துக் கொண்டும் ஒடுக்குமுறை அரசயந்திரத்தை பாதுகாத்துக் கொள்ளும் அரசியல் போக்கைக் கொண்டவர்களால் கொச்சைப்படுத்தி கருத்தூட்டம் விடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை எடுத்துக் கொள்வோம் பாசீச ஜெயலலிதாவின் கூட்டில் தற்பொழுது இருக்கின்றார்கள். முன்னர் தரகுமுதலாளிகளைக் கொண்ட கருணாநிதியின் அரசாங்கத்தை பாதுகாத்து வந்தார்கள்.
இவர்கள் செய்வது என்ன காலத்துக்கு காலம் ஒடுக்குமுறையாளர்களுடன் தேர்தலுக்காக கையோர்த்துச் செயற்படுபவர்கள். இவர்கள் ஒடுக்குமுறை யந்திரம் என்பது தற்கால அல்லது முன்னைய ஆட்சியாளர்கள் அடங்கமாட்டார்களா? அரசு என்பதே ஒரு வர்க்கம் சார்ந்தல்லவா இருக்கும் இது மார்க்சீயத்தின் அரிவரிப்பாடமல்லவா? இதனை மறந்து ஒடுக்குமுறையாளர்களுடன் கூடிக் கும்மாளம் அடிப்பது உழைக்கும் வர்க்கத்திற்கு இழைக்கும் துரோகம் அல்லவா?
சிபிஎம் இந்திய தலையீட்டை எதிர்க்கவில்லை. இவர்கள் இந்திய தரகு வர்க்கத்தை அம்பலப்படுத்தியல்லவா இருக்க வேண்டும். அதனை விடுத்து தரகு முதலாளிகளைக் கொண்ட கூட்டத்தையும் அரவணைத்து ஈழத்தமிழருக்காக போராட வேண்டும் எனக் கூறுகின்றது.
இன்று கருணாநிதி தரகுமுதலாளிகளின் நலனைப் பாதுகாக்கும் பொருட்டே ஈழப்பிரச்சனையில் மத்தியில் ஆழும் தரகு வர்க்கத்தின் ஊதுகுழலாளாக இருக்க வேண்டிய நிலைக்கு நிலைப்பாடு எடுத்துள்ளார்.
இத்துடன் இவருடைய குடும்ப நலன்களும் முக்கியமாக இருக்கின்றது. சண்சகோதரர்களின் நலனும் கலைஞரின் முடிவில் தாக்கத்தை கொடுக்கின்றது.
ஆக சொந்த நாட்டில் உள்ள ஆழும் வர்க்கத்தை அம்பலப்படுத்துவது சர்வசேதியமாகும். இதனை மகஇக தோழர்கள் செய்கின்றனர். இவைகள் முக்கியமான அம்சமாகும்.

சந்திப்பு said...

இரயாகரனின் கீழ்க்கண்ட இணைப்பில் உள்ள கட்டுரைக்கான பதில்

கழுதையிலும் கழுதை கேடுகெட்ட கழுதை என்று தமிழகத்தில் ஒரு பழமொழி உண்டு. இலங்கைக்காரரான உங்களுக்கு அது தெரிந்திருக்க நியாயமில்லை. இருப்பினும் என்ன? உங்களது கருத்து கழுதை தேய்ந்து கட்டெரும்பு ஆன கதையாகத்தான் உள்ளது.

சி.பி.எம். ஒருபோதும் இந்திய அரசே தலையிடு என்று கோரியது இல்லை. அது மட்டுமல்ல அமைதிப்படை இந்தியா சென்றபோது கூட அதனை அனுப்பியது தவறு என்று விமர்சித்தவர்கள். எந்தக் காலத்திலும் இனவாத நிலைபாட்டுக்கு மறைமுகமாகக் கூட ஆதரவாக நின்றதில்லை.

உங்கள் நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனை என்று உரிமை கொண்டாடும் நீங்கள்? அதில் தலையிட எமக்கு உரிமை இல்லை என்று கூறும் நீங்கள் சிங்கள பேரினவாத பாசிசத்தை மட்டும் ஏன் கண்டிக்கவில்லை என்று ஊளையிடுவது முரண் நகையாக உள்ளது.

இனவாதமாக இருந்தாலும், மதவாதமாக இருந்தாலும் அதில் சிறுபான்மையினர்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பது பாலபாடம். எனவே இதனை கண்டிக்காமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தோம் என்று கூறுவது மனப்பால் குடிப்பது போல் உள்ளது.

இலங்கையில் எழுந்த வந்த வர்க்கப் போராட்டத்தை முடக்குவதற்காக சிங்கள - தமிழ் முதலாளிகளால் திணிக்கப்பட்டதுதான் இந்த இனவாதம் என்பது உங்களைப் போன்ற பேரறிவாளர்களுக்கு தெரியாத விசயமல்ல. அப்படியிருக்கையில் இங்கே வர்க்கப் போராட்டம் நடப்பதாக யார் கதை விட்டது!

அது மட்டுமல்ல சி.பி.எம். அகில இந்திய கட்சி காங்கிரசிஸ்கு கூட ஜே.வி.பி. அமைப்பை நாங்கள் அழைக்கவில்லை. அதனுடைய பேரனிவாத அடையாள அரசியல்தான் அதற்கு காரணம். உண்மை இப்படியிருக்க உங்களைப் போன்றவர்கள் எவ்வளவுதான் ம.க.இ.க.வுக்கு முட்டுக் கொடுத்தாலும் அதன் சீர்குலைவு அரசியலை காப்பாற்ற முடியாது. அது சரி! இலங்கையில் தலையிடக் கூடாது என்று பொருமும் நீங்கள் ம.க.இ.க. அரசியல் விவகாரத்திற்குள் மூக்கை நுழைப்பது ஏன்? வர்க்கப்பாசமா? அல்லது என்.ஜீ.ஓ. வேலையின் நேசமா?

ஒரு தொழிலாளி வர்க்கக் கட்சி என்ற முறையில் இலங்ககை இனப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்பதில் சி.பி.எம். உறுதியாக உள்ளது. அது ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்ட அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியாக அமையவேண்டும் என்றும் வலியுறுத்துகிறோம். அது மட்டுமல்ல. இலங்கை அரசும் புலிகளை காரணம் காட்டி அவர்களுக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரால் அரசியல் தீர்வினை காலம் தாழ்த்தக்கூடாது என்று வலியுறுத்துகிறோம். மேலும் தற்போது புலிகளைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அவர்கள் மக்களை கவசமாக பயன்படுத்துவதுதான் பிரச்சனை! இவ்வாறு கூறினல் அது கூலிப்படையினரின் வேசம் என்று கொச்சைப்படுத்துவது யாரை திருப்திப்படுத்துவதற்காக? அதாவது புலிகளை ஆதரிக்கும் உங்கள் மக்கள், புலிகளை எதிர்க்கும் உங்கள் மக்கள் இவர்கள் இருவரும் கூலிப்படையா? இப்போது சொல்லுங்கள் ஈழ மக்கள் மீது யார் மலம் கழிப்பது என்று? சூப்பர் தத்துவம் மூடிக்கேற்ற ஜாடிதான். அடிங்கோ ஜால்ராவை!

அத்துடன் ஈழத் தமிழர்கள் புலிகாளலும் - அரசின் தாக்குதலாலும் பாதிப்பு அடைந்துக் கொண்டிருக்கும் போது சொகுசாக இலங்கையை விட்டு ஓடிப்போய் பிரான்சில் உட்கார்ந்து கொண்டு உரிமைப் பேசும் இரயாகரனின் அரசியல் அற்புதமானது.

சந்திப்பு said...

வன்னிப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்பெயர தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டும் : மனித உரிமைகள் கண்காணிப்பகம்

வன்னிப் பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்கள் சுதந்திரமாக இடம்பெயர தமிழீழ விடுதலைப் புலிகள் உடனடியாக ஆவண செய்ய வேண்டுமென மனித உரிமைகள் கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.

யுத்த பிரதேச மக்கள் சுதந்திரமாக இடம்பெயர எவ்வித தடையும் இல்லை என விடுதலைப் புலிகளின் அரசியல்துறைப் பொறுப்பாளர் பா.நடேசன் ஊடகங்களுக்குத் தெரிவித்த போதிலும், யதார்த்தத்தில் அவ்வாறான சுதந்திரம் காணப்படவில்லை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமிழீழ விடுதலைப் புலிகள் சிவிலியன்களது உயிரை பணயம் வைத்து யுத்தத்தை முன்னெடுப்பதாக மனித உரிமை கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச சட்டங்களுக்கு அமைய யுத்த பிரதேசத்திலிருந்து சிவிலியன்கள் அகற்றப்பட வேண்டியது யுத்தத்தில் ஈடுபட்டு வரும் சகல தரப்பினரதும் முதன்மை கடமை எனச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அதேவேளை, விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசத்தில் தங்கியிருக்கும் சிவிலியன்களது பாதுகாப்பு தொடர்பான பொறுப்பை ஏற்க முடியாதென அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கை சர்வதேச சட்டங்களுக்கு புறம்பானதென தெரிவிக்கப்பட்டுள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்று வரும் யுத்தம் காரணமாக நாளுக்கு நாள் சிவிலியன்களின் சேதம் அதிகரித்து வருவதாகவும் கண்காணிப்பகம் குறிப்பிட்டுள்ளது.

விடுவிக்கப்படாத பிரதேசத்தில் சிக்கியுள்ள சிவிலியன்களது பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியாதென்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் அனைத்து பிரஜைகளுக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டியது ஜனநாயக அரசாங்கமொன்றின் முக்கிய பொறுப்பு என மனித உரிமை கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்திய பணிப்பாளர் பிரட் அடம்ஸ் தெரிவித்துள்ளார்.

திட்டமிட்ட வகையில் சிவிலியன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் யுத்த நடவடிக்கைள் சர்வதேச போர்க் குற்றமாகவே கருதப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

விடுவிக்கப்படாத பிரதேசத்திலிருந்து வரும் சிவிலியன்களை முகாம்களை தடுத்து வைக்கும் செயன்முறையை அரசாங்கம் உடனடியாகக் கைவிட வேண்டும் எனவும், குறித்த நபர்கள் தங்களது சொந்தங்கள் அல்லது நண்பர்கள் வீடுகளுக்கு செல்ல அனுமதிக்கப்பட வேண்டுமென அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஒரு தரப்பின் யுத்த குற்றங்கள் மற்றொரு தரப்பின் யுத்த குற்றங்களினால் மூடி மறைக்கவோ அல்லது நியாயப்படுத்தவோ முடியாதென பிரட் அடம்ஸ் சுட்டிக்காட்டியுள்ளார்

Anonymous said...

மசுரன்
ஆமாம் தோலர், எப்பிடி தோழர், நம்ம கட்சியை எவ்வளவு ரகசியமா நடத்துரம், நடராஜர் கோயில் பிரச்சனையில் ஆயிரக்கணக்கில் வந்துபோராட்டம் பன்ன டைபியை மரைச்சி போலிஸ்கிட்ட வம்பு பன்னி நம்ம ஆளுங்க நாளுபேர் இன்னமா யாறுக்கும் தெரியாம ஆக்ட் கொடுத்தோம்.நாம ட்ரைனிங் கொடுத்த நம்மாளுங்க யாரும் லண்டன்ல இல்லயா?

Hi can you give the date of yours' organisaTIONS STRUGGLE AGAINST THEETCHITHARS.

Anonymous said...

//உங்கள் நாட்டுக்குள் நடக்கும் பிரச்சனை என்று உரிமை கொண்டாடும் நீங்கள்? அதில் தலையிட எமக்கு உரிமை இல்லை என்று கூறும் நீங்கள் சிங்கள பேரினவாத பாசிசத்தை மட்டும் ஏன் கண்டிக்கவில்லை என்று ஊளையிடுவது முரண் நகையாக உள்ளது//

முரண்நகை என்றால் என்ன அப்படினு பள்ளிக்கூடம் போயாவது படிமா...

//இனவாதமாக இருந்தாலும், மதவாதமாக இருந்தாலும் அதில் சிறுபான்மையினர்தான் அதிகமாக பாதிக்கப்படுவார்கள் என்பது பாலபாடம். எனவே இதனை கண்டிக்காமல் நாங்கள் கண்ணை மூடிக்கொண்டிருந்தோம் என்று கூறுவது மனப்பால் குடிப்பது போல் உள்ளது.//

குஜராத் படுகொலை நடந்தபோது மதநல்லிணக்கம்னுதான பேசுனீங்க. மதவெறிய ஒழிக்கணும்னுதான சொன்னீங்க. இந்துமத வெறினு ஏன் சொல்லல....பயமா...

//அது மட்டுமல்ல சி.பி.எம். அகில இந்திய கட்சி காங்கிரசிஸ்கு கூட ஜே.வி.பி. அமைப்பை நாங்கள் அழைக்கவில்லை. அதனுடைய பேரனிவாத அடையாள அரசியல்தான் அதற்கு காரணம்.//

ஜெவிபி உடைய அரசியல் நிலைப்பாட்டுக்கும் உங்களதுவும் என்ன இடத்தில் வேறுபடுது. ரெண்டு பேருமே போர் நடத்த சொல்றீங்க சுயநிர்ணய உரிமையை ஒரு இனத்துக்கே மறுத்து உங்க பாராளுமன்ற பசப்பலுக்கு தக்க மாநில சுயாட்சின்னு திமுக மாதிரி பேசுறீங்க... சொந்த புத்தின்னு சொல்றதுக்கு சிபிஎம் ல ஒண்ணுமே இல்லியா...

//இலங்கையில் தலையிடக் கூடாது என்று பொருமும் நீங்கள் ம.க.இ.க. அரசியல் விவகாரத்திற்குள் மூக்கை நுழைப்பது ஏன்? வர்க்கப்பாசமா? அல்லது என்.ஜீ.ஓ. வேலையின் நேசமா?//

இப்பவும் சொல்றன். சீரியசாவே கேக்குறேன். உங்க சிபிஎம்ல பரிசீலனை அப்படின்னா என்னன்னே தெரியாதா.... இலங்கைங்கிறது ஒரு நாடு பௌதீக வடிவம் உள்ளது. அரசியல் விவகாரம்கிறது கருத்து. கருத்துக்களுக்கிடையில் தலையிட வேண்டும். அப்போதுதான் உண்மை கிடைக்கும். சாலமோன் பாப்பையாவுக்கு கூட தெரிந்த உண்மை உங்களுக்கு ஏன் புரியவில்லை. ஒருவேளை அரசியல் கருத்துக்களை வெளிய பேசக்கூடாதுன்னு உங்க கட்சி ஆபீஸ்ல சொல்லிட்டாங்களா

//ஒன்றுபட்ட இலங்கைக்கு உட்பட்ட அதிக அதிகாரங்களைக் கொண்ட மாநில சுயாட்சியாக அமையவேண்டும் .... மேலும் தற்போது புலிகளைப் பற்றிய கவலை எங்களுக்கு இல்லை. அவர்கள் மக்களை கவசமாக பயன்படுத்துவதுதான் பிரச்சனை! //
அரசியல் பிரச்சினைய புரியாம இன்னோரு மேவங்கம் அல்லாட்டி கேரளாதான் ஈழம் னு நெனச்சா என்னாங்கிறது. புலிகள் பிடிக்காம இருக்கலாம் அதுக்காக அவங்கள திருத்த ஓரு விமர்சனம் கூடவா சோல்லக்கூடாது. காங்கிரசுக்காரன் கூட விமர்சனம் பண்றான்.

Anonymous said...

உண்மைகளையே கூறியுள்ளீர்கள். சில அரசியல்வாதிகளும் சில பத்திரிக்கைகளும் தங்கள் லாபத்திற்காக புலிகள் பற்றி ஒரு போலி கற்பனை விம்பத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்திவிட்டார்கள். புலி திருத்தவே முடியாத பயங்கரமான இயக்கம். நீங்கள் சொல்லியது போல் புலிகள் அற்ற கிழக்கு மாகாணத்திலும், யாழ்பாணத்திலும், மலையகத்திலும்
தமிழர்களும், முசுலீம்களும் பாதுகாப்பாகத்தான் உள்ளனர்.

விடுதலை said...

'நோய் நாடி' என்பதை புறந்தள்ளி விட்டு, ஆண்டாண்டு காலமாய் தமிழக ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் உணர்வுப் போராட்டத்தால் இதுவரை உலகத் தமிழன் முதல் உள்ளூர் தமிழன் வரை யாரும் பாதுகாக்கப்பட்டதாக வரலாறு கூறவில்லை.
யுத்தத்தாலோ, பட்டினியால் வயிறு பொருமும் சத்தத்தாலோ எங்கும் எப்போதும் மனிதன் செத்துமடியக்கூடாது என்பதுதான் மார்க்சியவாதிகளின் ஒட்டுமொத்த கவலை ஆனால் இந்த போலி மகஇக நாய்களுக்கு பிழைப்புவாத நலன் மட்டுமே.
நரம்புகள் புடைக்க பேசுவதும், நாடிகள் அதிர ஆடுவதும், சாமியாடிகள் மாதிரி தங்களுக்கு தாங்களே தேடும் வடிகால் போன்றதாக இருக்குமே அன்றி, பிரச்சனைகளை உண்மையில் தீர்க்க உதவாது என்பதையே வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்து வந்துள்ளது. உணர்ச்சிகள் மட்டுமே மேலிட்டால் நாம் முத்துக்குமரன்களைத்தான் இழக்க வேண்டியதிருக்கும். இந்த முத்துக்குமரன்களுக்கு யார் பொறுப்பேற்பது? அறிவும், உணர்வும் ஒருங்கே சேர்ந்தாலன்றி விடிவு வெகுதூரமே.

சந்திப்பு said...


குஜராத் படுகொலை நடந்தபோது மதநல்லிணக்கம்னுதான பேசுனீங்க. மதவெறிய ஒழிக்கணும்னுதான சொன்னீங்க. இந்துமத வெறினு ஏன் சொல்லல....பயமா...


சீர்குலைவு வாதத்தோடு - திரிபுவாதத்தையும் மேற்கொள்வதுதான் ம.க.இ.க.வோ! குறைந்தபட்சம் தீக்கதிரையாவது புரட்டிப் பாருங்க! இதைத்தான் கோயபல்ஸ் பிரச்சாரம் - தனது அணிகளின் உணர்வுகளை திரித்து புரட்சிகரமாக மழுங்கடிப்பது. நாங்கள் பள்ளிக்குச் சென்று படிப்பதற்கு முன்னாள் குறைந்தபட்சம் எல்லா விசயங்களிலும் உண்மையை முன்னிறுத்தி - உங்கள் முரண்பாடுகளை முன்வையுங்கள் அதுதான் மார்க்சியம்.


ஜெவிபி உடைய அரசியல் நிலைப்பாட்டுக்கும் உங்களதுவும் என்ன இடத்தில் வேறுபடுது. ரெண்டு பேருமே போர் நடத்த சொல்றீங்க சுயநிர்ணய உரிமையை ஒரு இனத்துக்கே மறுத்து உங்க பாராளுமன்ற பசப்பலுக்கு தக்க மாநில சுயாட்சின்னு திமுக மாதிரி பேசுறீங்க... சொந்த புத்தின்னு சொல்றதுக்கு சிபிஎம் ல ஒண்ணுமே இல்லியா..


போர் நடத்தச் சொல்கிறோமா? இதுபோல எங்காவது ஒரே ஒரு வார்த்தையையாவது தீக்கதிர், பீப்பிள்ஸ் டெமாக்ரசி, சந்திப்பு... அல்லது வேறு எங்காவது காட்ட முடியுமா? கோயல்சின் மொத்த வடிவமாய் மாறாதீர்கள்! உங்கள் அணிகளே உங்களை நம்பாது. ஏற்கனவே உங்கள் அணிகள் இலங்கை விசயத்தில் உங்களது இனவாத குறுகிய பார்வையை இணையத்தில் கேள்வி எழுப்பி நாறடித்துக் கொண்டிருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம். தி.மு.க. மாதிரி மாநில சுயாட்சின்னு பேசுறோம்னு சொல்றீங்களே! அதுசரிதான் நீங்க என்னத்த மார்க்சியம் படித்தீங்களோ தெரியாது. ஒழுங்கு நீங்க எனக்கு ரெக்கமண்ட் செய்த ஜார்ண் தாம்சனின் மார்க்ஸ் முதல் மாவோ புத்தகத்தை வரிக்கு வரி விடாமல் மணப்பாடம் செய்யவும். அது சரி இலங்கை தமிழ் இனப் பிரச்சனைக்கு நீங்கள் சொல்லும் தீர்வு என்ன? ஏற்கனவே புலிகளை பாஸீ்ட்டுன்னு சொன்ன நீங்க இப்போ புலிகள் சைவமா மாறிடுத்துன்னு உடான்ஸ் விடுவதுபோல விடக்கூடாது.


இப்பவும் சொல்றன். சீரியசாவே கேக்குறேன். உங்க சிபிஎம்ல பரிசீலனை அப்படின்னா என்னன்னே தெரியாதா....


முதல்ல இந்த ம.க.இ.க. காரங்க இதுதான் என்னுடைய கட்சின்னு வினவு தைரியமிருந்தால் சொல்லட்டும். அதன் கொள்கைகள் இதுதான் என்று வெளிப்படையா அறிவித்து மக்களை திரட்டட்டும். உங்க அமைப்பில் ஜனநாயகம் இல்லாததாலேயே வெளியேறிய பலபேரை என்னால் காட்ட முடியும். அதனால்தானே இந்த நக்சல்பாரி அமைப்பு சிதறு தேங்காய் போல் காட்சியளிக்கிறது. அங்க ஆயுதம் தூக்குவாங்கன்னு சொன்ன நீங்க அவங்க பேரை வைத்துக் கொண்டு குளிர் காயுவிங்க. அடுத்து, திண்ணை வேதாந்தம் பேசுவீங்க. முதல்ல உங்க கொள்கையை பற்றி கட்சிக்குள்ள சீரியசா விவாதியுங்கள்... அப்புறம் உங்களை எல்லாம் தேட வேண்டியிருக்கும் தோழரே!


அரசியல் பிரச்சினைய புரியாம இன்னோரு மேவங்கம் அல்லாட்டி கேரளாதான் ஈழம் னு நெனச்சா என்னாங்கிறது. புலிகள் பிடிக்காம இருக்கலாம் அதுக்காக அவங்கள திருத்த ஓரு விமர்சனம் கூடவா சோல்லக்கூடாது. காங்கிரசுக்காரன் கூட விமர்சனம் பண்றான்.


பிலிகளை திருத்துங்கள் அதற்காக நீங்கள் புலிவேசம் போடுவதுதான் வேதனையானது.

சந்திப்பு said...


தமிழக ஏகாதிபத்தியவாதிகள் நடத்தும் உணர்வுப் போராட்டத்தால் இதுவரை உலகத் தமிழன் முதல் உள்ளூர் தமிழன் வரை யாரும் பாதுகாக்கப்பட்டதாக வரலாறு கூறவில்லை.

விடுதலை மிகச் சரியாக சொல்லியுள்ளீர்கள். அவங்க இயக்கத்தை வளர்ப்பதற்கு இது உதவல அதற்கு சாட்சாத் பெரிய உதாணரம் வைகோ... அதே மாதிரிதான் இந்த ம.க.இ.க. இதனவாதிகள் (ஜே.வி.பி.)யின் எதிர் பிறப்புகள் - தமிழ் இன அடையாளவாதிகள் பிணவாத அரசியலில் கரையேறத் துடிக்கிறார்கள். அறிவுள்ள ம.க.இ.க. தொண்டர்கள் இதனை தீவிரமாக பரிசீலிப்பார்கள் என்று நம்புகிறோம்.

சந்திப்பு said...

12 வயது சிறுமியை பயன்படுத்தி புலிகள் தற்கொலைத் தாக்குதல்: உடல் முழுதும் சிதறி சிறுமி சின்னாபின்னமான கொடூரம்

உடம்பு முழுவதிலும் குண்டைக் கட்டி 12 வயதுடைய சிறுமி ஒருவரை பாதுகாப்புப் படையினரை நோக்கி அனுப்பிய புலிகள் அந்தக் குண்டை வெடிக்கச் செய்ததில் அந்தச் சிறுமியின் உடல் வெடித்துச் சிதறி சின்னா பின்னமாகிய கோரத்தை கள முனையில் நேரில் கண்ட பாதுகாப்பு படைவீரர்கள் தெரிவிக்கின்றனர். இராணுவத்தினரிடம் சரணடையும் சிவிலியன்கள் போன்று கைகளை உயர்த்தியவாறு அந்தச் சிறுமி சாலையின் வடக்கே படையினரை நோக்கி வந்துள்ளார். உடனடியாக அந்த சிறுமியை பாதுகாப்பாக மீட்டெடுக்கும் பொருட்டு இராணுவத்தினர் அந்தச் சிறுமியை அண்மித்தபோது அவரது உடம்பில் கட்டப்பட்டிருந்த குண்டு வெடித்துச் சிதறியுள்ளது. புலிகளின் இறுதி கடற்புலி தளமாக விளங்கிய சாலையை புலிகளிடமிருந்து முழுமையாக விடுவிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தின் 55வது படைப் பிரிவினரே இந்த அகோர காட்சியை கண்டுள்ளதாக பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவத்தில் அந்தச் சிறுமியை நோக்கிச் சென்ற இரண்டு இராணுவ வீரர்களும் படுகாயமடைந்துள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார். சிறார்களை யுத்தத்தில் பலாத்காரமாக ஈடுபடுத்திய புலிகள் தற்பொழுது அவர்களை பயன்படுத்தி தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் நடவடிக்கைகளிலும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளமை தெளிவாக விளங்குவதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Thanks:www.thenee.com

சந்திப்பு said...

ம.க.இ.க. தோழரே! மதவெறியர்களை எதிர்த்து கேரளாவில் எமது தோழர்கள் நாள்தோறும் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். வலுவாக இருந்தும் கூட அவர்களால் அரசியல் ரீதியாக ஒரே ஒரு எம்.எல்.ஏ. சீட்டுக்கூட பெற முடியாத அளவிற்கு போராடிக் கொண்டிருப்பவர்கள் மார்க்சிஸ்ட்டுகள் எனவே வெறும் வாய் வீச்சுக்களை செய்து உங்களது அறிவுள்ள தொண்டர்களை மழுங்கடிக்காதீர்கள்.

கொழுவி said...

ஏன் மீட்கப்பபட்ட கிளிநொச்சியில் உள்ள மக்கள் கூட பாதுகாப்பாகத்தான் இருக்கிறார்கள். //

என்னங்க..
கம்யுனிசம் மார்க்சியம் அது இது என பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லுறீங்க.. அதனால கொஞ்சம் விசயம் தெரிஞ்சவரா இருப்பீங்களோ என்று நினைச்சா..

ரொம்பவும் கூழ் முட்டையாக இருக்கிறீர்களே...

கிளிநொச்சி கைப்பற்றப்பட்டபோது சென்ற பத்திரிகையாளர்கள் அங்கு கட்டாகாலி நாய்களைத் தவிர யாரும் இல்லை. அனைவரும் கூண்டோடு இடம்பெயர்ந்து போய்விட்டார்கள் என சொல்லியிருந்தார்களே..

வெளியுலகத்தில என்ன ஏது நடக்குது என்றெல்லாம் பார்க்க மாட்டீர்களா... ?

மலையகத்தில் நடக்கும் கைதுகள் குறித்து ஏதாவது தெரியுமா? யாழ்பாணத்தில் நடக்கும் காணாமல் போதல்கள் குறித்து ஏதும் தெரியுமா..? அங்கே 600 பேருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பதாவது தெரியுமா.. ?

தவளைகளே
கிணற்றின் மேலேறி வாருங்கள்.

சந்திப்பு said...


மலையகத்தில் நடக்கும் கைதுகள் குறித்து ஏதாவது தெரியுமா? யாழ்பாணத்தில் நடக்கும் காணாமல் போதல்கள் குறித்து ஏதும் தெரியுமா..? அங்கே 600 பேருக்கு என்ன நடந்தது என்றே தெரியாது என்பதாவது தெரியுமா.. ?


கொழுவி இது குறித்து மறைந்த பத்திரிகையாளர் லசந்த விக்ரமசிங்காவின் கருத்துடன் உடன்படுகிறேன்.

Anonymous said...

//போரை நிறுத்து - எமது தோழர்கள் முல்லைத்தீவு நோக்கி பயணம்!//
இப்படி எல்லாம் கோமாளிதனம் செய்யும் நிலையில் தான் வினவு உள்ளது.

vimalavidya said...

''புலிகளோ சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவு வேண்டும் என்பதைப் பற்றி எப்போதும் கவலைப்பட்டதில்லை. மாறாக அவர்களிடமிருந்து அன்னியப்பட்டே இருக்கிறார்கள்.''

''அங்கே சிங்கள பேரினவாதம் தூண்டப்பட்டது என்றால் இது சிறுபான்மை தமிழ் இனவாதம். அப்படியிருக்கையில் புலிகள் எப்படி சிங்கள உழைக்கும் மக்களின் ஆதரவை கோருவார்கள் என்று எதிர்பார்க்கிறீர்கள்.''
good logic arguments.No doubt.In this arguments some time RSS AND MA.KA.EE.KA RESEMBLING EACH OTHERS.THEIR WORDS IDENTIFY THEM EASILY.I think a RSS man writing articles/replies in the name of ''anonymous''and supporting LTTE AND Naxal MA.KA.EE.KA and confusing and creating fights..see the comments>>>''why are you both fighting with dead body of ''communism''' ? (cpi-M + cpi-ML-SOC)-care is need.
Any war two sides will be there.In Tamilnadu some movements like MA.KA.EE.KA /MDMK/NEDUMARAN &CO/DK/CPI are asking to stop war immedeately.But they are putting the demands and cries only to srilanka government.Yes they must have equally put the same demand to LTTE also.Unless both sides stop the war how it is possible to save the Tamil innocent people.ceasefire cannot be a one sided thing.Sir! Both LTTE AND SRILANKAN govt must stop the war and come to negotiation table for political solution within the one Srilankan constitution.In this matter CPI-M to some extend telling right solutions which all parties slowly realising and accepting Sir.
selvapriyan

vimalavidya said...

Sir ! see this comment of''annonymous''>>>>

Anonymous said...

கம்மியுனிசம் என்ற செத்த பிணத்தை வைத்துக்கொண்டு ஏம்பா தினம் தினம் இங்கு இரண்டு வீணாப்போன கும்பல்களும் அடித்துக்கொள்கிறீர்கள்.
வேற ஏதாவது பொழப்ப பாருங்கப்பா.
who is WRITING this ? MA.KA.EE.KA.OR RSS >>>
-- SELVAPRIYAN