March 29, 2007

27 % இடஒதுக்கீட்டுக்கு உச்சநீதிமன்றம் தடை!

ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை மத்திய ஐ.மு.கூ. அரசு கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த சட்டத்தை கொண்டு வந்தபோதே சங்பரிவாரம் உட்பட மேல் ஜாதி ஆதிக்கவாதிகள் நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்களை நடத்தியதோடு, மருத்துவமனைகளை எல்லாம் முடக்கி தங்களது இழி முகத்தை காட்டிக் கொண்டனர். கடந்த 3000 ஆண்டுகளாக அடக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட மக்கள் கல்வியிலும், வேலைவாய்பிலும் பின் தங்கியே உள்ளனர். உயர் ஜாதி ஆதிக்கவாதிகளுக்கு மட்டுமே வாக்கப்பட்டதுபோல் உயர் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு கூடாது என்று அலறி வருபவர்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. உச்சநீதிமன்றத்தில் உள்ளவர்கள் சமூக நீதியை பற்றி கவலை கொள்ளாமல் எப்படி தீர்ப்பு அளிக்க முடியும்? மேலும், இடைக்கால தீர்ப்பில், பிற்படுததப்பட்டவர்களுக்கான சரியான பட்டியல் இல்லை என்ற சொத்தை காரணத்தைக் கூறியிருக்கிறார்கள் இதனை ஏற்க முடியாது. மத்திய அரசு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு உட்பட தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்டவர்களுக்கான கணக்கெடுப்பையும் நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலத்திலும், அந்தந்த மாநிலத்தில் உள்ள நிலைமைக்கு ஏற்ப இடஒதுக்கீடு என்பது பின்பற்றி வரும் சூழ்நிலையில் இத்தகைய தீர்ப்பு பெரும் பாதகத்தை ஏற்படுத்தும். மேலும், இந்திய நாட்டில் நிலவும் ஜாதிய கொடுமைகளால் தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் எவ்வாறு வஞ்சிக்கப்பட்டனர் என்ற சமூக அக்கறையற்ற தீர்ப்பாகவே இது தெரிகிறது. இதன்
மூலம் அரசியல் ரீதியாகவும், சமூக ரீதியாகவும் ஒடுக்கப்பட்ட மக்கள் போராடுவதன் மூலமே இதனை மீட்டெக்க முடியும்.

27% இட ஒதுக்கீட்டுக்கு சுப்ரீம் கோர்ட் தடை மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. மத்திய அரசின் உயர் கல்வி நிறுவனங்களான ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்டவற்றில் பிற்பபடுத்தப்பட்ட வகுப்பினருக்கு 27% இட ஒதுக்கீட்டுக்கு வகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்தது. இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இன்று உச்சநீதிமன்ற பெஞ்ச் இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தது. ஓட்டு வங்கிக்காக நாட்டை பிளவுபடுத்தும் முயற்சியில் அரசு ஈடுபடக் கூடாது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் குறித்த முறையான, முழுமையான தகவல் இல்லை என்று மனுதாரர்கள் கூறுவதை நிராகரிக்க முடியாது. எனவே நாட்டில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் கணக்கு குறித்து உரிய ஆவணங்களை மத்திய அரசு தாக்கல் செய்ய வேண்டும். அதைத் தாக்கல் செய்த பின்னரே இந்த வழக்கில் இறுதித் தீர்ப்பு அளிக்கப்படும். அதுவரை இந்த இட ஒதுக்கீட்டை அமல்படுத்த இடைக்காலத் தடை விதிக்கப்படுகிறது என்று நீதிபதிகள் தங்களது இடைக்கால உத்தரவில் தெரிவித்திருந்தனர்.
Thanks:www.thatstamil.com
இடஒதுக்கீடு குறித்த முந்தைய பதிவுகள்

March 28, 2007

இழந்து விட்டோம் எதிர்கால கின்னஸ் சாதனையாளரை!

கொடிது கொடிது இளமையில் வறுமை கொடிது என்று பாடினார் ஒளவை பாட்டி. ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகில் சாதிக்கப் பிறந்தவர்கள்தான். ஆனால், வாழ்க்கைச் சூழலில் சிக்கி சின்னாபின்னமாகிப் போவதுதான் இந்த முதலாளித்துவ சமூகத்தின் விதியாகியுள்ளது. கிரிக்கெட் வீரர்களுக்காக கோடிக்கணக்கில் விளம்பரத்தையும், நிதியையும் வழங்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்கள், குக்கிராமத்தில் இருக்கும் - ஏழ்மையில் இருக்கும் சாதனை வீரர்களை பராமுகமாக இருப்பது அவர்களது வர்க்க குணாம்சம். ஆனால், ஆளும் ஆட்சியாளர்களும் இத்தகைய இளைஞர்களை அலட்சியப்படுத்துவதால், ஒரு கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவேண்டிய ஒரு சாதனை - முன்னோக்கு இளைஞனை நம் தமிழ் சமூகம் இழந்து விட்டிருக்கிறது. இதற்காகத்தான் இளைஞர்களுக்கான கொள்கைகளை வகுக்க வேண்டும் என்று இடதுசாரிகள் வற்புறுத்தினாலும், ஆட்சியாளர்கள் கேளா காதினராய் இருப்பதால், இன்னும் எத்தனைப் பேரை இழப்போமோ!
ஏழ்மையால் தனது படிப்பும், சாதனை முயற்சிகளும் தடைபட்டதால் மனம் உடைந்த கோவையைச் சேர்ந்த மாணவர் அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
கோவை, பாப்பநாயக்கன் பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சதீஷ்வரன். தனியார் பாலிடெக்னிக்கில் 2ம் ஆண்டு பொறியியல் படிப்பு படித்து வந்தார். விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்ட சதீஷ்வரன் புறங்கையால் தண்டால் எடுத்து சாதனை படைத்தவர். இதற்காக இவரது பெயர் லிம்கா சாதனையாளர் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளது.
150 தண்டால்களை எடுத்து லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றார் சதீஷ்வரன். அடுத்து கின்னஸ் சாதனை படைக்க வேண்டும் என்ற ஆர்வத்தில் இருந்து வந்தார் சதீஷ்வரன்.
ஆனால் அவரது சாதனை முயற்சிகளுக்கு பணம் பெரும் தடையாக இருந்து வந்தது. ஆஸ்திரேலியா, அமெரிக்கா போன்ற நாடுகளில் போட்டிகளில் கலந்து கொள்ள வந்த வாய்ப்புகளை இதனால் நிராகரிக்க வேண்டியதாயிற்று.
பலரிடம் பணம் கேட்டும் பணம் கிடைக்காததால், இந்த நாடுகளுக்குச் செல்ல முடியவில்லை சதீஷ்வரானால். இந்த நிலையில் ஈரோடு மாவட்டம் ஏழூர் என்ற கிராமத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்குச் சென்ற சதீஷ்வரன் அங்கு அரளி விதையை அரைத்துக் குடித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றை எழுதி வைத்துள்ளார் சதீஷ்வரன். அதில், எனது பெற்றோருக்கு நம்பிக்கையூட்டும் வகையில் நான் நடந்து கொள்ளவில்லை. படிக்காமல் எந்த சாதனையையும் செய்ய முடியாது, அதனால் பலன் இருக்காது என்று அவர்கள் கூறியதை நான் புறக்கணித்து விட்டேன்.
என்னால் பல சாதனைகளை செய்ய முடியும். ஆனால் எனது பெற்றோருக்கு நிம்மதியைக் கொடுக்க முடியாது. என்னதான் எனக்காக அவர்கள் பல தியாகங்களைச் செய்தாலும், அவர்களுக்கு என்னால் எந்த நன்றிக் கடனையும் செலுத்த முடியாத நிலைதான் உள்ளது.
இதனால் தற்கொலை செய்து கொள்கிறேன். அடுத்த பிறவியில் நான் சாதனை வீரனாக, விளையாட்டு வீரனாகத்தான் பிறப்பேன் என்று கூறியுள்ளார்.
Thanks : Thatstamil

March 26, 2007

வாழ்க்கைக்கு வழிகாட்டும் பாதை

சீன வரலாற்றில் நீண்ட நெடுங் காலத்திற்கு முன்பு இளந்துறவி ஒருவர் ஒருமலைக் கோயிலில் வசித்து வந்தார். காலையில் கண் விழித்ததும் கோயில் முற்றத்தைப் பெருக்கி, சுத்தம் செய்து, தண்ணீர் பிடித்து வைத்து, புத்தமறைகளை ஓதிமனப்பாடம் செய்ய வேண்டும். பின்னர் மலையடிவாரத்திற்கு இறங்கிச் சென்று, வெகுதொலைவில் உள்ள நகரத்தில் இருந்து, தினசரி உபயோகத்திற்கு வேண்டிய பொருட்களை வாங்கிக் கொண்டு சுமந்து வர வேண்டும். இது தான் அந்தச் சிறுவனின் அன்றாட வேலை.
ஆனால் அவன் தினமும் கோயிலுக்குப் பின்புறமாக உள்ள கரடுமுரடான காட்டுப்பாதை வழியாக இறங்கி ஏற வேண்டியிருந்தது. அதன் பிறகு மற்ற இளந்துறவிகளுடன் சேர்ந்து நள்ளிரவு வரை மறைகளை ஓத வேண்டியிருந்தது.

சில நாட்களுக்குப் பிறகு அந்தச் சிறுவனுக்கு ஓர் உண்மை புலப்பட்டது. அதாவது, கோயிலில் தன்னைப் போல் துறவிகளாக உள்ள மற்றச் சிறுவர்களும் பொருட்களை வாங்க நகரத்திற்குப் போய் வருகிறார்கள். ஆனால் அவர்கள் செல்லும் பாதையோ, கோயிலுக்கு முன்புறமாக உள்ள வழவழப்பான சாலை, மேலும் அவர்கள் செல்லும் நகரமும் மிக அருகில் இருந்தது. ஒரு நாள் பெரிய சாமியாரிடம் கேட்டான். "ஐயா, நான் நீண்ட நாட்களாக இங்கே கோயிலில் தங்கியிருக்கிறேன். மற்றவர்களோ புதிதாக வந்தவர்கள். அவர்களுக்கு மட்டும் ஏன் சுலபமான வேலை?" இந்தக் கேள்வியைக் கேட்ட பெரிய சாமியார் மெல்லியதாகப் புன்முறுவல் பூத்தார். ஆனால் பதில் சொல்லவில்லை.

ஒரு நாள் மற்ற இளந்துறவிகள் கோயிலுக்கு முன்புறமுள்ள நகரத்திற்கு பொருட்கள் வாங்க காலையிலேயே புறப்பட்டுச் சென்றனர். அதே வேளையில், இந்தச் சிறுவன் கோயிலுக்கு பின்னால் வெகு தொலைவில் உள்ள நகரத்திற்கு காட்டுப் பாதை வழியாகப் புறப்பட்டுச் சென்றான். அன்று மத்தியானத்திற்குள் ஒரு பெரிய மூட்டையைச் சுமந்து கொண்டு, கரடுமுரடான மலைப்பாதை வழியே திரும்பி வந்து விட்டான். முன்புறமாகச் சென்ற சிறுவர்கள் நீண்ட நேரமாகியும் திரும்பவில்லை. பெரிய சாமியாரும், சிறுவனும் கோயில் வாசலிலேயே காத்திருந்தனர். பொழுது சாயும் வேலையில் மற்ற சிறுவர்கள் சின்னச்சின்ன மூட்டைகளைச் சுமந்தபடி ஆடி அசைந்து வந்தனர்.

"காலையிலேயே புறப்பட்டுப் போனீர்களே! ஏன் இவ்வளவு தாமதம்?" என்று பெரிய சாமியார் கேட்டார்.

"ஐயா, நாங்கள் பேசிக் கொண்டே வந்தோம். வழியில் இயற்கைக் காட்சி ரொம்ப அழகாக இருந்தது. எப்போதும் போல நின்று ரசித்தோம் என்று ஒரே குரலில் பதில் தந்தனர்."

பிறகு பெரிய சாமியார் தன்பக்கத்தில் இருந்த சிறுவனைத் திரும்பிப் பார்த்து, "கோயிலுக்குப் பின்னால் உள்ள பாதை கரடுமுரடான மலைப் பாதை. நகரமோ வெகு தொலைவில். நீ எப்படி பெரிய அரிசி மூட்டையைச் சுமந்து கொண்டு மத்தியானமே திரும்பி விட்டாய்?" என்று வினவினார்.

"ஐயா, ஒவ்வொரு தடவை மலைச் சரிவில் இறங்கும் போதும் சீக்கிரம் திரும்ப வேண்டும் என்கிற உறுதியோடு போகிறேன். ஆனால், கனமான சுமையோடு ஏறும் போது, தடுமாறி விழாமல் இருக்க ஒவ்வொருபடியாக பார்த்து ஏற வேண்டியிருந்தது. பிறகு, மெல்ல மெல்ல காலடி பழகி விட்டது. நான் பாதையைப் பற்றிக் கவலைப்படாமல் எனது இலக்கு பற்றி மட்டுமே சிந்திக்கத் தொடங்கினேன். இப்போது பாதை பற்றிக் கவலை இல்லை," என்று பணிவாகப் பதில் சொன்னான். அவன் சொல்லி முடித்ததும் பெரிய சாமியார் சிரித்தபடியே,

"மென்மையான பாதை ஒருவனை இலக்கில் இருந்து திசை திரும்புகிறது. கரடுமுரடான பாதையோ ஒருவனுடைய மன உறுதியை வலுப்படுத்துகிறது," என்றார்.

கடக்கும் பாதையைப் பற்றிக் கவலைப்படாமல், இலட்சியமே குறியாகக் கொண்டு முன்னேறிய அந்த இளந்துறவிதான் பிற்காலத்தில் தமிழகத்தின் காஞ்சிபுரம் வரை வந்து புத்தமதக்கல்வி கற்ற சீனத்து யாத்ரீகர் யுவான் சுவாங். நாம் நமது வரலாற்றுப் புத்தகங்களில் யுவான் சுவாங் என்றே அறிந்திருக்கிறோம். ஆனால், சீன மொழியில் ச்சுவான் சாங் என்று உச்சரிக்கின்றனர். ஹெனான் மாநிலத்தின் யான்ஷி என்ற ஊரில் கி. மு. 600ஆம் ஆண்டு ஓர் அரசு அதிகாரியின் குடும்பத்தில் பிறந்த ச்சுவான் சாங்கின் இயற்பெயர் சென் ஹுயி. 13 வயதில் துறவறம் பூண்டதும், லுவோ யாங் என்ற ஊரில் உள்ள ஜிந்து மடாலயத்தில் சேர்ந்த போது, அவருக்கு ச்சுவான் சாங் என்று பெயரிடப்பட்டது. அவர் துறவியாவதற்கு முன்பே தமது குடும்பப் பின்னணி காரணமாக கல்வி கேள்விகளில் வல்லவராகத் திகழ்ந்தார். மடத்தில் புத்தமத மறைகளை மனனம் செய்து, பல்வேறு வழிகளில் விளக்கம் சொல்லும் திறன் பெற்றார்.

March 24, 2007

கிரிக்கெட் வீரர்கள் அடுத்து என்ன செய்யலாம்!

கிரிக்கெட் உலகின் ஜாம்பவான், பேட்டிங்கில் உலகமகா கில்லாடி தெண்டுக்கர், இந்தியாவின் சுவர் திராவிட், பெங்கல் புலி கங்குலி, சுழல் பந்து வீச்சில் எட்டாத சிகரம் கும்ளே, ஹர்பஜன் சிங், சேவாக்... இவர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்க்கையில் புகழின் உச்சிக்கே சென்றவர்கள், அதிலும் தெண்டுல்கர் இந்தியாவில் 20 பணக்காரர்கள் வரிசையில் ஒருவராக இருப்பவர். இந்த உலகக் கோப்பையில் இந்தியாவை மூட்டைக் கட்டி கிரிக்கெட் விளையாடுவதற்குகூட நாங்கள் இனிமேல் லாயக்கு இல்லை என்று நிரூபித்து விட்டு வந்துள்ளனர். ஜனாதிபதி அப்துல் கலாம் வேறு இந்தியா 2020 என்று ஓயாது கணா கண்டு வருகிறார்!.......... இந்தியா 2020 இல் பாதி சோமாலியாகவும், மறுபாதி சூடானின் டர்பராகவும் மாறாமல் இருந்தால் சரி!
இந்த கிரிக்கெட் வீரர்களுக்கு இனிமேல் கிரிக்கெட்டில் பிழைப்பை ஒட்ட முடியாது என்பது நன்றாக தெரியும். எனவே, எதிர் வரும் உத்திரபிரதேச தேர்தல் எதிர்காலத்தில் இந்தியாவின் தலை எழுத்தையே மாற்ற உள்ளது. எனவே, இப்போதே இவர்கள் அனைவரும் ஏதாவது ஒரு கட்சியில் சேர்ந்து பிரச்சாரம் செய்யலாம் அல்லது எம்.எல்.ஏ.வுக்கு நிற்கலாம்.
ஒரு தொழிலில் ஓய்வு பெற்றவர்கள் சரணாகதியடையும் இறுதி தொழில் அரசியலாக அல்லவா மாறி விட்டது. அப்புறம் என்ன தியாகத்தைப் பற்றியெல்லாம் ஓயாது பேசிக் கொண்டே இருக்கலாம். அப்படியும் இல்லையென்றால் பாப் உல்மர் மாதிரி தெண்டுல்கர் ஏதாவது ஒரு குட்டி நாட்டிற்கு கோச்சராக போகலாம்! அவர்கள் உங்களை சேர்ப்பார்களா என்பது தெரியாது.
அதுவும் இல்லையென்றால் ரியல் எ°டேட் பிசின°, கிரிக்கெட் வர்ணனையாளர், சினிமாவில் நடிப்பது, ஹோட்டல் கட்டுவது போன்று ஏதாவது ஒரு தொழிலை தேர்ந்தெடுத்து தேசத்திற்கு சேவை செய்யலாம். அதுவும் இல்லையென்றால் உங்களைப் பற்றி நீங்களே யாரையாவது வைத்து டாக்குமெண்டரி எடுக்கலாம். அதுவும் முடியாது என்றால், பாப் உல்மர் மாதிரி கிரிக்கெட் சூதாட்டம் குறித்து ஏதாவது உளரலாம்.......... அதைத் தவிர மற்றதையெல்லாம் நீங்கள் செய்வீர்கள்.
அடுத்த தலைமுறையும் உங்களது திறமைகளைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டே... உங்களைப் பின்தொடர்ந்து வளரும்.... சூப்பரப்பா. சூப்பர்.................. கலக்கிட்டீங்க................ விளையாட்டுத்துறைக்கு என்று ஒரு மந்திரி வேற இருக்கார். அவங்களுக்கும் கிரிக்கெட்டை விட்டா வேற விளையாட்டு தெரிய மாட்டேங்குது. அவங்க என்னப் பண்ணுவாங்க... இதைத்தானே இந்த பாழாப்போன டிரில்லினியர்கள் விரும்புராங்க...

March 22, 2007

நந்திகிராமம் வன்முறைக்கு மம்தா, நக்சல் கும்பலே காரணம்

மேற்கு வங்கத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆட்சிக்கு வந்தவுடன் இருக்கிற நிலங்களை நிலமற்ற கிராமப்புற ஏழை மக்களுக்கு விநியோகித்தது. மேற்கு வங்கத்தில் வெறும் 6 சதவீத தரிசு நிலம் மட்டுமே உள்ளது. மாநிலத்தில் இப்படி ஒரு முக்கிய தொழிற்சாலை அமையும்போது அதற்கு நிலம் கையகப்படுத்திக் கொடுப்பது அரசின் கடமை. அந்த அடிப்படையில் நிலம் கையகப்படுத்த முடிவு செய்யப்பட்டது.
கடந்த ஜனவரி மாதத்தில் நடைபெற்ற முதல் சம்பவத்தில் மம்தா மற்றும் நக்சல் கும்பலால் மார்க்சிஸ்ட் கட்சி யைச் சேர்ந்த தோழர்கள் 3 பேர்கள் படுகொலை செய்யப்பட்டனர். ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டார். ஒரு எஸ்.ஐ. கொலை செய்யப்பட்டார்.
அதோடு நிற்காமல் அக்கிராமத்தில் வசித்த 2500 குடும்பத்தினரை அக்கிராமத் திலிருந்து விரட்டியடித்தனர். அவர்கள் மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பாக நடத்தப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.
மேற்படி கிராமத்திற்கு அருகில் 10 கி.மீ. தொலைவில் விவசாயிகள் சங்கத்தின் சார் பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் 15 லட்சம் பேர்கள் திரண்டனர். அந்தக் கூட்டத் தில் கலந்து கொண்ட முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மக்கள் எதிர்க்கும் பட்சத்தில் இந்த ஆலையை ஹால்டியாவுக்கே கொண்டு செல்கிறோம் என்று அறிவித்தார்.
இதனையடுத்து இந்த ஆலைக்கு நிலம் எடுக்கும் திட்டத்தை கைவிட்டனர். ஆனால் நிலம் கையகப்படுத்தப்படுவதாக தொடர்ந்து மம்தாவும், நக்சல் கும்பலும் கோயபல்ஸ் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டனர். இதற்கிடையில் முகாமில் தங்கியுள்ளவர்களின் வீடுகள், கடைகள் வன்முறைக் கும்பலால் சூறையாடப்பட்டது. இதனால் முகாமில் தங்கியிருந்தவர்கள் இரண்டு மாதங்களுக்குப் பிறகு தங்கள் வீடுகளுக்குச் செல்ல வேண்டும் என்று கோரினர். இது சம்பந்தமாக மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் தாசில்தார்கள். சர்வ கட்சியினர் கலந்து கொண்ட சமாதான கூட்டம் நடத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் மம்தா மற்றும் நக்சல் கும்பல் தவிர அனைத்து கட்சியினரும் கலந்து கொண்டு முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களை நந்திகிராமத்தில் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்வது என்று முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் நந்திகிராமத்திற்குச் செல்லும் வழியில் உள்ள சாலைகள் மற்றும் பாலங்கள் சிதைக்கப்பட்டு நகரத்திலிருந்து துண்டிக்கப்பட்டது. இதனால் நந்திகிராமத்தில் உள்ள நான்கு கிராமங்கள் தனி தீவு போலானது. முகாமில் தங்க வைக்கப்பட்ட மக்கள் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டனர். இதற்கிடையில் நந்தி கிராமத்தில் இவர்கள் தாக்கு தல் நடத்துவதற்காக மம்தா மற்றும் நக்சல் கும்பல்கள் வெளி மாவட்டங்களிலிருந்து ஆட்களைத் திரட்டி வைத்திருந்தனர். அவர்கள் அதிகாரிகள் நிலம் கையகப்படுத்தத்தான் வருகிறார்கள் என்று பொய்ப்பிரச்சாரத்தை செய்து கிராம மக்களைத் தயார்படுத்தினர். பின்னர் கிராம மக்களில் பெண்களையும், குழந்தைகளையும் முன்னிறுத்திக் கொண்டு, பின்னிருந்து கையெறி குண்டுகளையும், பைப் குண்டுகளையும் கொண்டு போலீசார் மீது தாக்குதல் நடத்தினர்.
இதனால் மக்களை காக்க வேண்டி போலீசாரும் நடத்திய துரதிஷ்டவசமான தாக்குதலால் இத்தனை பேர்கள் பலியாகியுள்ளனர். இதற்கு முக்கியப் பொறுப்பாளர்களாக மம்தா மற்றும் நக்சல் கும்பல்கள்தான் காரணம். நடந்த சம்பவத்திற்கு மார்க்சிஸ்ட் கட்சி வருத்தம் தெரிவித்துக் கொள்கிறது. இது சம்பந்தமாக எந்தவொரு விசாரணை நடத்தவும் மார்க்சிஸ்ட் கட்சி தயாராக உள்ளது. சம்பவம் நடைபெற்ற மறுநாள் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று உயர்நீதி மன்றம் கேட்டுக்கொண்டதையும் மார்க்சிஸ்ட் கட்சி ஏற்றுக் கொண்டுள்ளது. அது சம்பந்தமாக விசாரணையும் நடைபெற்று வருகிறது.
தற்போது மம்தா, நக்சல் கும்பலிடமிருந்து சில ஆயுதங்களை சிபிஐ கைப்பற்றியுள்ளது. ஆனால் மார்க்சிஸ்ட் கட்சியினரிடமிருந்து ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதாக மம்தா, நக்சல் கும்பல் பொய்ப் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

March 19, 2007

அசுரனுக்கு ஐந்து கேள்விகள்! விவாத களம்!


1. ஒன்றுபட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 1964 இல் உருவாக்கப்பட்ட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தனக்கென்று திட்டத்தை உருவாக்கிக் கொண்டு, அதன் அடிப்படையில், அத்திட்டத்தை நிறைவேற்றிட கடந்த 40 ஆண்டுகளாக செயலாற்றி வருகிறது. எங்கள் கட்சியின் திட்டத்தை அறிந்து கொள்ள இந்த லிங்கை உபயோகப்படுத்தவும். தாங்கள் ஆதரிக்கும் கட்சிக்கு, போலி கம்யூனிஸ்ட் என்று ஓயாது வசைபாடும் உங்கள் உண்மையான! கட்சிக்கு, கட்சி திட்டம் என்ற ஒன்று உண்டா?

2. 1969 இல் எம்.எல். கட்சியாக பிரிந்து சென்ற நக்சல்பாரிகள், இன்றைக்கு 20க்கும் மேற்பட்ட கட்சிகளாக பிரிந்திருக்கிறார்களே இது அவர்கள் எடுத்த நடைமுறைத் தந்திரம் தோல்வியில் முடிந்ததைத்தானே பறைசாற்றுகிறது?
3. இந்தியாவில் சங்பரிவார பாசிச வளர்ச்சியை வீழ்த்துவதற்கும், நாடு முழுவதும் உள்ள வெகுஜன மக்களை அதற்கு எதிராக திரட்டுவதற்கும், அவர்களிடையே வேலை செய்வதற்கும், அல்லது உழைக்கும் மக்களில் 80 சதவீதத்திற்கும் மேல் இதர முதலாளித்துவ கட்சிகளில் நம்பிக்கை கொண்டுள்ள சூழலில், இக்கட்சிகளையும், இதன் பின்னால் திரண்டுள்ளமக்களையும் மதவாதத்திற்கு எதிராக ஒன்றுபடுத்திட சி.பி.ஐ.(எம்) நடைமுறையில் எடுத்து வருகிற ஐக்கிய முன்னணி தந்திரம் போல் நக்சலிசவாதிகள் செய்ததென்ன? நக்சலிசவாதிகள் வெற்றுப் பேச்சைத் தவிர - வேறு என்ன செய்தனர்?
4. ரஷ்யாவில் லெனின் காலத்தில் இருந்த பாராளுமன்றம் குறித்தும், லெனின் பாராளுமன்றத்தில் பங்கேற்றது குறித்தும், தற்கால இந்திய பாராளுமன்றம் குறித்தும், உங்களது பார்வை என்ன?
5. இந்தியாவில் தேசிய இனம் குறித்து தங்களது பார்வை என்ன? ஆரியம் - திராவிடம் என்ற கருத்தாக்கம் குறித்து தங்கள் கட்சியின் பார்வை என்ன?
குறிப்பு : இந்த விவாதத்தில் தங்கள் கருத்துக்களை மட்டுமே எதிர்பார்க்கிறேன். ஏனெனில் கேடயம், புதிய காற்று, தமிழ் அரங்கம் போன்ற பெயர்களில் இயங்குபவர்கள் எல்லாம் அடையாளம் இல்லாமல் இயங்குகின்றனர். அதேபோல், புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் போன்றவற்றில் வந்ததையெல்லாம் கட் அண்ட் பேஸ்ட் செய்து படிக்க முடியாமல் செய்யாதீர்கள்! விவாதம் வெளிப்படையா இருக்கு வேண்டும் என்று கருதுகிறேன். இணையவாசிகள் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

March 17, 2007

நந்திகிராமத்தில் நடந்தது என்ன? சில அலசல் கட்டுரைகள்!

மேற்குவங்க மாநிலம் நந்திகிராமத்தில் நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் அது சார்ந்த விஷயங்களில் உள்ள பின்னணி குறித்து சி.பி.ஐ.(எம்) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி விளக்கியுள்ளார். இது தவிர மற்றும் சில கட்டுரைகளை இணையவாசிகளின் பார்வைக்காக கொடுத்துள்ளேன்.

சந்திப்பு
நந்திகிராமத்தில் துப்பாக்கிச்சூடு துரதிருஷ்டவசமானது:
மம்தா கட்சி - நக்சல் கும்பல் திட்டமிட்டு பெரும் கலவரம் - சீத்தாராம் யெச்சூரி பேட்டி

மேற்குவங்க மாநிலம் நந்திகிராமத்தில் மம்தா பானர்ஜி கட்சி மற்றும் நக்ச லைட் கும்பல்கள் புதனன்று பெரும் வன்செயலில் ஈடுபட்ட னர். நந்திகிராமத்தை சேர்ந்த வர்களை அடித்து விரட்டி விட்டு வன்முறையாளர்கள் அந்தப் பகுதியை தங்கள் கட்டுப்பாட் டுக்குள் வைத்துள்ளனர். சாலைகள், பாலங்களை தகர்த் துள்ளனர்.புதனன்று அந்தப் பகுதிக் குள் போலீசார் நுழைய முயன்றபோது, அவர்கள் மீது வெடிகுண்டுகளை வீசியும், துப்பாக்கியால் சுட்டும் கல வரத்தை ஏற்படுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலில் 10-க்கும் மேற்பட்ட போலீசார் படுகாய மடைந்துள்ளனர். இவர்களில் சிலரது நிலை கவலைக் கிடமாக உள்ளது. போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் சிலர் இறந்துள்ளனர். இதுகுறித்து நாடாளுமன்ற வளாகத்தில் புதனன்று மாலை நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் சீத்தாராம் யெச் சூரி கூறியதாவது:மேற்கு வங்கம், நந்தி கிராமத்தில் மாநிலத்தில் சில அரசியல் கட்சிகளும், சமூக விரோத சக்திகளும் சேர்ந்து நந்திகிராமம் மக்கள் மத்தியில் ஆத்திரமூட்டும் நடவடிக்கை களில் இறங்கி யிருந்தனர். காவல்துறையினர் விரைந்து அந்த ஊருக்கு வராத வகை யில் சாலைகளில் பள்ளங்க ளைத் தோண்டியும், பாலங்க ளைத் தகர்த்தும் வைத்திருந் தனர். அக்கிராம மக்கள் இது தொடர்பாக காவல்துறையின ருக்குத் தெரிவித்து பாதுகாப்பு கோரினர். காவல்துறையினர் நந்திகிராமத்திற்குச் சென்ற போது. சமூக விரோத சக்திகள் அவர்களை கிராமத்திற்குள் நுழையாதவாறு தங்கள் வசம் இருந்த துப்பாக்கிகளால் காவல்துறையினரைப் பார்த்து சுட்டனர். பின்னர் காவல் துறையினரும் அவர்களைப் பார்த்து சுட்டனர். இதில் சிலர் உயிரிழந்துள்ளனர்.சிறப்புப் பொருளாதார மண்டலத்தின் கீழ் நந்தி கிராமத்தில் நிலங்கள் கைய கப்படுத்துவது தொடர்பாக பிரச்சனை இருந்தது. எனவே மேற்கு வங்க அரசு நிலம் கைய கப்படுத்தும் நடவடிக்கைகளை நிறுத்தி வைத்திருக்கிறது. இருந்தும் கூட சமூக விரோத சக்திகளும், சில அரசியல் கட்சிகளும் அங்கே ஆத்திர மூட்டும் செயல்களில் இறங்கி யுள்ளன. இவர்கள் யாரும் அந் தப் பகுதியைச் சார்ந்தவர்கள் அல்ல. இவர்களது நடவடிக் கைகளை அக்கிராம மக்கள் எதிர்த்தார்கள். வன்முறை யாளர்களால் அவர்கள் தாக் கப்பட்டார்கள். இதில் ஒருவரின் கால் வெட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து கிராம மக்கள் காவல்துறையினரின் உத வியை நாடினர். காவல்துறை யினர் கிராமத்திற்கு வந்த போது, வன்முறையாளர்களால் அவர்கள் தடுக்கப்பட்டனர். வன் முறையாளர்கள் காவல்துறை யினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். எனவே, காவல் துறையினரும் திருப்பிச் சுட்ட னர். இதன் விளைவாக இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவம் நடைபெற்றது. நந்தி கிராமத்தில் நிலங்க ளைக் கையகப்படுத்துவதில் பிரச்சனை வந்ததால், இப் போது அங்கே எந்தப் பணிக ளும் நடைபெறவில்லை. அனைத் தும் நிறுத்தி வைக்கப்பட் டிருக்கிறது. ஆயினும் வன் முறையாளர்கள் அக்கிராம மக்களுக்கு எதிராக ஆத்திர மூட்டும் நடவடிக்கைகளில் இறங்கியுள்ளனர்.மேற்கு வங்கத்தில் உள்ள எங்கள் கட்சியின் அப்பகுதி மாவட்டக் குழுவும், விவசாயி கள் சங்கமும் புதனன்று மாலை 5 மணி முதல் வியாழனன்று மாலை 5 மணி வரை பந்த்திற்கு அறைகூவல் விடுத்திருக்கிறது. இதனை நாங்கள் அரசியலாகச் சந்திக்கத் தயாராக இருக்கி றோம். இவ்வாறு சீத்தாராம் யெச் சூரி கூறினார்.நந்தி கிராமத்தில் வெளி யாட்களால்தான் மோதல் ஏற்பட்டது என்கிறீர்களா, வெளியாட்கள் என் றால் யார் என்று ஒரு செய்தி யாளர் கேட்டபோது, வெளிப் படையாக இயங்கக்கூடிய கட் சிகள், தலைமறைவாக இயங் கும் நக்சலைட்டுகள் அனை வரும்தான் என்று சீத்தாராம் கூறினார். பந்த்திற்கு அறைகூவல் விடுத்ததற்கான காரணத்தை ஒரு செய்தியாளர் கேட்டபோது, இப்பிரச்சனையை மக்களிடம் கட்சி கொண்டு சென்றிருக்கிறது. இதை நாங்கள் ஒரு அரசியல் சவாலாக ஏற்றுக்கொண்டிருக் கிறோம். இதனை அரசியலாகச் சந்திக்க விரும்புகிறோம் என்று சீத்தாராம் கூறினார்.மேலும் நந்தி கிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலப் பணி கள் அதிகாரபூர்வமாக நிறுத் தப்பட்டு விட்டன. தாக்குதல் நடத்தியவர்கள், கிராம மக்களை விட அதிக மாக உள்ளார்களா என்று ஒரு செய்தியாளர் கேட்டபோது, தாக்குதல் நடத்தியவர்களிடம் இருந்த ஆயுதங்கள் கிராம மக்களின் எண்ணிக்கையை விட அதிகமாகும் என்று சீத் தாராம் கூறினார். நந்திகிராமம் ஊராட்சி யைச் சேர்ந்த 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளூர் மக்கள் வன்முறையாளர்களால் விரட் டப்பட்டு நிவாரண முகாம் களில் கடந்த ஜனவரி மாதம் முதல் அகதிகளைப் போல் தங்கியுள்ளனர். இடது முன்னணி ஆட்சி யில் மேற்குவங்கத்தின் தொழில் வளர்ச்சி ஸ்தம்பித்து விட்டது என்று மம்தா கட்சி யினர் குற்றம் சாட்டினர். ஆனால் தற்போது, தொழில் வளர்ச்சியை திட்டமிட்டு முடக்க பெரும் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர் என்று எச்சரித் திருந்தார். நாடாளுமன்ற மக்களவை யில் இடதுசாரிக் கட்சி உறுப் பினர்கள் செவ்வாயன்று நடந்து கொண்ட விதம் குறித்து ஒரு செய்தியாளர் கேட்டபோது, இதற்கு நேற்றே செய்தி யாளர்கள் மத்தியில் பதில் கூறப்பட்டுவிட்டதென்றும், உணர்ச்சிவசப்பட்டு உறுப் பினர்கள் நடந்து கொண்ட செய்கைக்கு எங்கள் கட்சியின் நாடாளுமன்றக்குழுத் தலை வர் வருத்தம் தெரிவித்து விட்டார் என்றும் கூறினார்.


மேற்குவங்க மக்களுக்கு சிபிஎம் வேண்டுகோள்

நந்திகிராமத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற் பட்டுள்ளது குறித்து வருத்தம் தெரிவித்துள்ள மார்க்சிஸ்ட் கம் யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு, மம்தா கட்சி மற்றும் நக்சலைட் கும்பல் திட்டமிட்டு வன்செயலில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-நந்திகிராமம் பகுதியைச் சேர்ந்த 5 ஊராட்சிகளில் கடந்த இரண்டரை மாதங்களாக வன்முறையாளர்கள் திட்டமிட்டு நிர்வாகத்தை சீர்குலைத்துள்ளனர். நிலம் கையகப்படுத்துவதை எதிர்ப்பதாகக் கூறிக் கொண்டு வன்முறையைத் தூண்டி வரும் அவர்கள் சாலைகளை துண்டித்து பாலங்களை தகர்த்தனர். மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்கள் மற்றும் ஆதரவாளர்கள் அந்தப் பகுதியிலிருந்து அடித்து விரட்டப்பட்டுள்ளனர். 2,500-க்கும் மேற்பட்டோர் அந்தப் பகுதியிலிருந்து வன்முறையாளர்களால் அகற்றப்பட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் நந்தி கிராமம் பகுதிக்கு வெளியே அமைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். நந்திகிராமத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைப் பதற்கு நிலம் எதுவும் கையகப்படுத்தப்படவில்லை என்று மாநில அரசு பலமுறை தெளிவுபடுத்திய பிறகும், திரிணாமுல் மற்றும் நக்சலைட் கும்பல், அரசு அதிகாரிகளையோ போலீசாரையோ அந்தப் பகுதிக்குள் நுழைய அனுமதிக்கவில்லை. தொடர்ந்து சீர்குலைவு வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். சில நாட்களுக்கு முன்பு சுமிதா மண்டல் என்ற பெண், வன்முறையாளர்களால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். நந்திகிராமம் பகுதியில் அமைதியை ஏற்படுத்த நிர்வாகம் மேற் கொண்ட எந்த முயற்சிக்கும் அவர்கள் ஒத்துழைக்கவில்லை. சமா தானக் கூட்டங்களுக்கு வர மறுத்தனர். கடைசியாக அமைதியை ஏற்படுத்தும் நோக்கத்துடன் ஏற்பாடு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தை புறக்கணிப்பதாக திரிணாமுல் காங்கிரஸ் அறி வித்தது. நிர்வாக நடவடிக்கைகளை உறுதி செய்யவும், சாலைகள், பாலங்களை சீர் செய்யவும் நந்திகிராமத்திற்குள் போலீசார் நுழைந்தனர். அவர்கள் மீது செங்கல் மற்றும் வெடிகுண்டுகளை சீர்குலைவு சக்திகள் வீசினர். குழாய் துப்பாக்கிகளையும் அவர்கள் பயன்படுத்தினர். துப்பாக்கிச்சூட்டில் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது மிகவும் வருந் தத்தக்கது. போலீசார் மீது வெடிகுண்டுகளை வீசி துப்பாக்கிச்சூடு நடத்தி திட்டமிட்ட கலவரத்தை ஏற்படுத்தியது சீர்குலைவு சக்தி கள்தான். மேற்குவங்க மக்கள் குறிப்பாக, நந்திகிராமம் மற்றும் கிழக்கு மிட்னாப்பூர் மாவட்ட மக்கள் சீர்குலைவு சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு நிற்குமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு கேட்டுக் கொள்கிறது.

Thanks : http://www.theekkathir.in

March 12, 2007

கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!


தமிழ் மக்களிடையே மிகப் பிரபலமாக இயங்கும் பழமொழிகளில் ஒன்றுதான், "கூரையேறி கோழி பிடிக்காதவன், வானம் ஏறி வைகுண்டம் போவானாம்!" என்பது. இந்த பழமொழிக்கு உரியவர்கள் வேறு யாரும் சாட்சாத் ம.க.இ.க.வினர்தான். ஆம்! மக்கள் கலை இலக்கிய கழகம் என்ற பெயரில், நாங்களும் கம்யூனி°ட்டுகள் என்று கூறிக் கொண்டு, கம்யூனிச எதிர் பிரச்சாரத்தை நடத்தி வரும் திண்ணை நக்சலிசவாதிகள், இவர்களின் தற்போதைய பிரதான புரட்சிகர தொழில் இணையம் மூலம் புரட்சி நடத்துவது.
ம.க.இ.க.வின் பிரதான வேலை என்ன தெரியுமா? யாராவது சி.பி.ஐ.(எம்) அல்லது சி.பி.ஐ. என்று தெரிந்து விட்டால் போதும், தோழரே! கொஞ்சம் உங்கள் முகவரியைக் கொடுங்கள் என்று கேட்டு வாங்கிக் கொண்டு, அதிகாலை 5.00 மணிக்கெல்லாம் சம்பந்தப்பட்டவரின் வீட்டுக் கதவைத் தட்டி, தங்களது பிரசங்கத்தை ஆரம்பித்து விடுவார்கள். குறைந்தது ஒருவாரமாவது இந்த பிரசங்கம் இருக்கும். இவர்களது பேச்சு எடுபடாது என்று தெரிந்த பின்னர், அடுத்த நபர்களைத் தேடிக் கொண்டிருப்பார்கள்.
மேலும், இவர்களது முகவர்கள் (புரட்சிக்காரர்கள்!) ஒரே பெயரில் இயங்குவதில்லை. சமீபத்தில் இப்படிப்பட்ட முகவர்கள் நான்கு பேர் குரோம்பேட்டையில் சீர்குலைவு வேலையில் ஈடுபட்டதை பெருமையடித்துக் கொண்டிருந்தனர். எதேச்சையாக இவர்களின் விவாதம் என்னுடைய காதில் விழ, என்னால் சும்மாயிருக்க முடியவில்லை. ஐயா, புரட்சி வீரர்களே! உங்களுக்கெல்லாம் வீடு எங்கன்னு கேட்டதுதான் தாமதம். ‘அதெல்லாம் நீங்கள் கேட்கக்கூடாது, என்று கூறிவிட்டு பேந்தப் பேந்த முழித்தாhர்கள்.’ இவர்களுக்கு குரோம்பேட்டையில் என்ன வேலை தெரியுமா? சி.பி.ஐ.(எம்) செயல்படுற இடத்துல போய் குட்டையை குழப்புவதும், சீர்குலைவு வேலையில் ஈடுபடுவதும்தான். உங்க பெயர் என்ன என்று கேட்டதுதான் தாமதம். ஒரு புரட்சிக்காரரின் முகத்தில் ஈயோடவில்லை. என் பெயரா? என்று முழிக்கத் துவங்கி விட்டார்! இவர்களைப் பொருத்தவரை தங்கள் சொந்தப் பெயரைக் கூட தைரியமாக சொல்லிக் கொண்டு மக்கள் மத்தியில் வேலை செய்யத் துணியாத புரட்சிக்காரர்கள்.
இவர்களது நடவடிக்கை தலைமறைவு காலங்களில் செயல்படுவதுபோல் இருந்தது. நான் இவர்களிடம் கேட்டது இப்படித்தான். ஐயா, நீங்கள் எந்த ஊர் என்று தெரியாது, உங்களது புரட்சிகர வேலைகளை நீங்கள் குடியிருக்கும் பகுதியில் உள்ள மக்களிடம் செய்வதுண்டா? அவ்வளவுதான். உங்களுக்கு சுந்தரய்யாவைத் தெரியுமா?... என்று ஆரம்பித்து விட்டார்கள். இவர்களது செயல்பாட்டை நினைத்தவுடன் மேலே கண்ட பழமொழி நினைவுக்கு வராமல் இருக்குமா?
தங்களது செயல்பாடுகளால் மட்டுமே இந்திய நாட்டில் புரட்சியை கொண்டு வர முடியும் என்று கனா கண்டுக் கொண்டிப்பவர்கள் தான் இந்த ம.க.இ.க.வினர். இதர கம்யூனிச கட்சிகள் எல்லாம் போலி கம்யூனி°ட்டுகள், ஓட்டுப் பொறுக்கிகள்..... பக்கத்து வீட்டுக்காரனிடம் தான் நக்சல் என்று கூறி அரசியல் நடத்த முடியாத வீரர்களிடம் வேறு எதை எதிர்பார்க்க முடியும்?
ஒரு வருடத்தில் நான்கு இயக்கம் நடத்துவர்கள். கோக் எதிர்ப்பு, கருவறை நுழைவு, தமிழ் மக்கள் இசை விழா, இத்தியாதி... இத்தியாதி.... ஐயோ, இவர்கள் நடத்தும் இத்தகைய கும்பமேளாவுக்கு நான்கு மாதம் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வார்கள். அப்புறம் மாநிலம் முழுவதும் இருந்து ஒரு 500 பேர் கும்பமேளாவில் கலந்து கொண்டு ஜல சமாதியில் கலந்து விடுவார்கள்... புரட்சி நடவடிக்கையல்லவா? மேலும் நக்சலிசம் என்று பேசிக் கொண்டு, தங்களை எதிர்ப்பவர்களை தமிழகம் மற்றும் இந்தியாவில் உள்ள அனைத்துக் கட்சிகளும் இவர்கள் கண்ணோட்டத்தில் ஓட்டுப் பொறுக்கிகள்தான். ஆனால், மம்தாவின் முந்தானையில் தங்களை மறைத்துக் கொள்வதில் வெகு கில்லாடிகள்... ஒருவேளை ஜெயலலிதா மேற்குவங்கத்தில் இருந்தால், அவரது பின்னால் ஒளிந்துக் கொண்டு புரட்சிப் பேசுவார்கள்.
தமிழகத்தில் எந்த பகுதியிலாவது, இவர்கள் ஜனநாயக ரீதியாக மக்களை வென்றெடுத்திருக்கிறார்களா? அல்லது மக்களைத்தான் அரசியல் படுத்தியிருக்கிறார்களா? ஒன்றுமில்லை சிரங்கெடுத்தவன் சொறிவது போல், தேர்தல் நேரத்தில், அதுவும் சி.பி.எம்., சி.பி.ஐ. நிற்கும் இடங்களில் மட்டும் புரட்சி பேசுபவர்கள். இவர்களது திண்ணை வேதாந்தும் ஒவ்வொரு ஆண்டும் உழைக்கும் மக்களை பிற பகுதிகளில், நக்சலிச பயங்கரவாதத்தில் 700க்கும் மேற்பட்ட மக்கள் பலியாவதற்கு மட்டுமே பயன்படுகிறது. 1967 இலிருந்து நக்சலிசம் பேசியவர்கள் தற்போது 20க்கும் மேற்பட்ட நக்சலிச நடைமுறையற்றவாதிகளாய் பிரிந்து கிடப்பதும், ஒடுங்கிக் கிடப்பதும்தான் இவர்களது பிரதான சாதனை! இவர்களின் நவீன வடிவமாய் உருவெடுத்திருப்பது இணைய வேதாந்தம், இங்கும் பல பெயர்களில் உலா வருகிறார்கள். நேபாளத்தில் உள்ள மாவோயி°ட்டுகள் கூட இவர்களை அங்கீகரிப்பதில்லை என்பதுதான் சமகால உண்மை.
இது குறித்த மேலும் சில விரிவான கட்டுரைகள்

உயர்நீதிமன்றத்தில் தமிழ்: தீர்மானத்தை திருப்பி அனுப்பியது மத்திய அரசு!

சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்கும் திட்டத்தை மத்திய அரசு நிராகரித்துள்ளது. இதுதொடர்பாக தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பாமலேயே திருப்பி அனுப்பி விட்டது. மத்திய அரசின் இந்த செயல் குறித்து முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், அதிருப்தியும் தெரிவித்துள்ளார்.
சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ் ஆட்சி மொழியாக்கப்படும் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து இதுதொடர்பாக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.ஷா முதல்வருக்கு எழுதிய கடிதத்தில், இந்த நடவடிக்கையை வரவேற்பதாகவும், அதேசமயம், அடிப்படைக் கட்டமைப்பை ஏற்படுத்தாமல் இதை அமல்படுத்துவது சரியாக இருக்காது என்றும் கூறியிருந்தார்.
அதற்கு கருணாநிதி பதிலளிக்கையில், தலைமை நீதிபதி விரும்பும் அனைத்து வசதிகளும் செய்து தரப்பட்ட பின்னரே தமிழ் ஆட்சிமொழியாகும் என்று தெரிவித்திருந்தார்.
தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் இந்த தீர்மானத்தை குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமலேயே, தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பி விட்டது மத்திய அரசு.
இதற்கு முதல்வர் கருணாநிதி அதிர்ச்சியும், வியப்பும் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங், மத்திய சட்ட அமைச்சர் எச்.ஆர்.பரத்வாஜ், உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீல் ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில், கடந்த ஆண்டு டிசம்பர் 6ம் தேதி தமிழக சட்டசபையில், சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை ஆட்சிமொழியாக்குவது என்று கூறி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர் இந்தத் தீர்மானம் குடியரசுத் தலைவரின் அனுமதியைப் பெறுவதற்காக மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் மத்திய அரசு இந்தத் தீர்மானத்தை திருப்பி அனுப்பியுள்ளது. இதுகுறித்து மத்திய அரசு தெரிவித்துள்ள பதிலில், உச்சநீதிமன்றத்துடன் இந்தத் தீர்மானம் குறித்து கலந்து ஆலாசிக்கப்பட்டது. அதற்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி, தற்போதைய சூழ்நிலையில் மாநில மொழிகளை உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக்குவது பொருத்தமான செயல் அல்ல என்று கூறினார்.
எனவே அதன் அடிபப்டையில், தமிழக அரசின் தீர்மானம் குடியரசுத் தலைவரிடம் அனுப்பாமல், திருப்பி அனுப்பப்படுவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்தப் பதில் அதிர்ச்சி தருவதாக உள்ளது. வியப்பளிப்பதாகவும் இருக்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் 348 (2) மற்றும் 1963ம் ஆண்டைய ஆட்சி மொழிச் சட்டத்தின் பிரிவு 7 ஆகியவை மிகத் தெளிவாக உள்ளன. அதன்படி உயர்நீதிமன்றங்களில் அந்தந்த மாநில மொழியை அலுவல் மொழியாக வைத்துக் கொள்ள இவை அனுமதிக்கின்றன.
இந்த சட்டப் பிரிவுகளை மாநிலத்திற்கு மாநிலம் பாரபட்சமாக அமல்படுத்த முடியாது. தமிழகத்தின் ஆட்சி மொழியாக உள்ள தமிழ், சென்னை உயர்நீதிமன்றத்திலும் ஆட்சி மொழியாக வேண்டும் என லட்சோபம் லட்சம் தமிழர்கள் நீண்ட காலமாக கனவு கண்டு கொண்டுள்ளனர், ஏங்கிக் கொண்டுள்ளனர்.
இந்திய மொழிகளில் தமிழ் மட்டுமே மத்திய அரசால் செம்மொழி என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் ஆட்சி மொழியாவதற்குத் தமிழுக்குத் தடை இருக்காது என்ற நம்பிக்கையும் அதிகரித்தது.
சட்டசபையில் இதுதொடர்பாக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தவிர, சென்னை உயர்நீதிமன்றம் தமிழக அரசின் இந்த முடிவுக்கு கொள்கை அடிப்படையில் ஆதரவும் தெரிவித்திருந்தது.
மேலும், உயர்நீதிமன்றத்தில் தமிழை அலுவல் மொழியாக்கும் முடிவு சட்டப்பூர்வமானதுதான் என்று தமிழக ஆளுநரும், சென்னை உயர்நீதிமன்ற.ம் கருத்து தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு மாநிலமும், அந்த மாநில உயர்நீதிமன்றத்தின் ஆட்சிமொழியாக அந்த மாநில ஆட்சி மொழியை அமல்படுத்த சட்டப்பூர்வ உரிமை உண்டு.
ஏற்கனவே உத்தரப் பிரதேசம், பீகார், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய மாநில உயர்நீதிமன்றங்களில் அந்த மாநில ஆட்சி மொழியே, அலுவல் மொழியாக உள்ளது நினைவு கூறத்தக்கது.
இந்த அடிப்படையில்தான் தமிழகத்திலும் உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக தமிழை அமல்படுத்த முடிவு செய்யப்பட்டு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த விஷயத்தில் பிற மாநிலங்களுக்கு ஒரு நீதியும், தமிழகத்திற்கு இன்னொரு நீதியும் என்பதை ஏற்க முடியாது.
எனவே, தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திற்குக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுத் தர உதவ வேண்டும் என்று கூறியுள்ளார் கருணாநிதி.

March 09, 2007

டாடா கார் தொழிற்சாலை????????????


மார்ச் 4ம்தேதியிட்ட ஜூனியர் விகடனில் மேற்கு வங்காளத்தைப் பற்றி திரும்பவும் ஜென் ராம் ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். முந்தைய கட்டுரையில் டாடா கார் தொழிற்சாலையின் பூமி பூஜை பற்றி சாமியாடியிருந்தார்.

இந்த வாரம் மேற்குவங்க மாநிலத்தில் மூலதனம் பெறுவது குறித்து ருத்ர தாண்டவம் ஆடியிருக்கிறார். சென்றவாரம் அவர் எழுதிய கட்டுரைக்கு நாம் ஒரு மறுப்பு எழுதியிருந்தோம். அதைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை ஜென்ராமுக்கு. அவரைப் பற்றி ஏதோ தகாத முத்திரை குத்து வது போல் துடித்திருக்கிறார்.இந்த வாரமோ நாய் விற்ற காசு குரைக் காது என்ற நாகரீக உதாரணத்தோடு இந்தோ னேசியாவில் கம்யூனிஸ்டுகளை கொன்று குவித்த சுகர்த்தோ என்பவருக்கு வேண்டிய சலீம் குழுமம் மேற்கு வங்கத்தில் முதலீடு செய்ய அனுமதி கொடுத்திருப்பது பற்றி எழுதியிருக்கிறார்.

தீ, கதிர்களை சாம்பலாக்கிவிடக்கூடாது என்று வார்த்தை ஜாலமும் காட்டியிருக்கிறார். இந்த தீக்கதிர் எதையும் சாம்பலாக்காது. மாறாக, இந்தக் கதிரின் வெப்பம், கதகதப்பு வேண்டியவற்றிற்கு கதகதப்பு தரும். பச்சை தானியங்களை இளம் சூடாக்கி மனிதர்களுக்கு சுவையான உணவாக மாற்றித்தரும். மனிதகுல எதிரிகளை சுடும். அதுதான் இதன் பாரம்பரியமே தவிர, கண்டதே காட்சி, கொண்டதே கோலம் என்று எப்போதும் தன்நிலையை மாற்றிக்கொள்ளாது.விமர்சனங்களை தாங்கிக்கொள்ளும் மனப் பக்குவம் வேண்டுமாம். நமக்குச் சொல்லித் தருகிறார் ஜென்ராம். அவரால் தாங்கிக்கொள்ள முடியாத காரணத்தினால் மேலே சொன்ன நாய், உதாரணத்தோடு கட்டுரையை நிரப்பியிருக்கிறார்.

பிற கட்சிகளோடு விமர்சன யுத்தம் நடத்து வது மட்டுமல்ல; சொந்தக் கட்சிகளுக்குள்ளேயே சுய விமர்சனம் - விமர்சனம் என்ற பதங்களை முன் வைத்து தங்களுடைய அனைத்து பணி களையும் அக்குவேறு ஆணி வேறாய் அலசிக் கொள்பவர்கள் கம்யூனிஸ்டுகள்.உட்கட்சி ஜனநாயகத்தையும், விமர்சனத் தையும் மார்க்சிஸ்ட் கட்சி போல ஊக்கப்படுத்து கிற கட்சி வேறு எதுவும் இருக்க முடியாது. ஜென்ராம் போன்றவர்கள் பேனாவை எடுத்து பேப்பரை நிரப்புவதற்கு முன்னதாகவே மார்க்சிஸ்ட் கட்சியினுடைய தீர்மானங்கள், தலைவர்களின் பேட்டிகள் போன்றவற்றை படித்துக்கொண்டோ, கேட்டுக்கொண்டோ விமர்சனம் செய்ய முற்படுவது நல்லது.காங்கிரஸ் கட்சியின் ஜனநாயகத்தையும், இந்திராகாந்தி உருவாக்கிய இருண்டகாலத் தையும் மார்க்சிஸ்ட் கட்சியோடு இணைத்து ஜென்ராம் எழுதியிருக்கிறார். இது - கருப்பாய் இருப்பதால் காகமும், குயிலும் ஒன்று; வெள்ளையாய் இருப்பதால் பாலும், சுண்ணாம்பும் ஒன்று என்பதைப்போல் உள்ளது.

காங்கிரஸ் என்பது ஒரு தனிமரம். ஒருநபர் படை. மார்க்சிஸ்ட் கட்சியோ பல மரங்கள் கொண்ட ஒரு தோப்பு. பல்லாயிரம் வீரர்கள் கொண்ட சைன்யம். எல்லாவற்றையும் போட்டு குழப்பிக் கொள்ளக்கூடாது. அதாவது மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடக்கூடாது. மேற்குவங்கத்தில் தொழில்மயமாக்குதலின் முதல்கட்டமாக ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப் படுத்தப்பட்டதற்கு குதியோ குதி என்று மம்தாவும், நக்சலைட்டுகளும் குதிக்கிறார்கள். இவர் களுக்கு எப்போதுமே சேணம் கட்டிய குதிரைப் பார்வைதான் போலும். வரலாற்றிற்கு பல பக்கங்கள் உண்டு என்பதை மறந்துவிடுகிறார்கள்.

மேற்குவங்கத்தில் பி.சி.ராய் காங்கிரஸ் முதலமைச்சராக இருந்த காலத்தில்தான் துர்க் காபூரில் உள்ள இரும்புத் தொழிற்சாலைக்காக 10 ஆயிரம் ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை. அன்றைக்கு எதிர்க் கட்சி தலைவராக இருந்த தோழர் ஜோதிபாசு அதற்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தார். ஏனெனில், அன்று ஆக்கப்பூர்வமான எதிர்க் கட்சித்தலைவர் ஜோதிபாசு. இன்றைய மம்தா வைப் போல எதிரிக்கட்சித் தலைவர் அல்ல; 1952 முதல் 1967 வரை விளைநிலங்கள் காங் கிரஸ் ஆட்சியில் கையகப்படுத்தப்பட்டுத்தான் வந்திருக்கிறது. இதை அங்குள்ள ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சி ஒருபோதும் எதிர்த்ததே இல்லை. காரணம் வேளாண்மையும், தொழில் வளமும் மாநில முன்னேற்றத்திற்கான இரண்டு கண்கள் என்பதைப் புரிந்து கொண்டதால்.

ஏன்? தமிழகத்தில் கூட நெய்வேலி அனல் மின் நிலையம், பாரத் மிகு மின்நிலையம் போன்ற பெருந்தொழிற்சாலைகள் உருவாக தலைவர் காமராஜர் ஆட்சிக்காலத்தில் பல்லாயிரக்கணக் கான ஏக்கர் நிலங்களை கையகப்படுத்திய போதும், மார்க்சிஸ்ட் கட்சி எதிர்க்கவில்லை. 1967 முதல் 1994 வரை மேற்குவங்கம் தொழில் வளர்ச்சியில் மத்திய அரசால் புறக் கணிக்கப்பட்டே வந்தது. அன்று முதலமைச் சராக இருந்த தோழர் ஜோதிபாசு, பிரதமர் ராஜீவ்காந்தியை சந்தித்து தொழில் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்று கேட்டுக்கொள்ள முடிவு செய்தார். அங்குள்ள எதிர்க்கட்சிகள் அனைத் தையும் அழைத்தார். எந்தவொரு கட்சியும் ராஜீவ்காந்தியை சந்திக்க வரவில்லை. மாறாக தொழில் வளர்ச்சிக்கு முட்டுக் கட்டை போடவே செய்தார்கள். இன்றைக்கும் அதையே செய்து கொண்டிருக்கிறார்கள்.

இதிலும் கூட இன்னும் குறிப்பிடத்தகுந்த விஷயம் ஒன்று உண்டு. அதுதான் பக்ரேஷ்வர் அனல்மின் நிலையத் திட்டம். மின் பற்றாக்குறை அதிகம் உள்ள மேற்குவங்கத்தில் மின் பற்றாக் குறையைப் போக்குவதற்குத்தான் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. வழக்கம்போல் மத்திய அரசு இதற்கு உதவவில்லை. அதற்காக மார்க்சிஸ்ட் கட்சி வாளாயிருந்திடவில்லை. தன்னுடைய கட்சியின் லட்சோப லட்ச இளைஞர்களை ரத்த தானம் உள்பட செய்ய வைத்து நிதி திரட்டி அந்த திட்டத்தை நிறைவேற்றியது. மேற்குவங்கம் இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தை சிறப்பாக நிறைவேற்றிய மாநிலம். உணவு உற்பத்தியிலும், காய்கறி உற்பத்தி யிலும், இறைச்சி உற்பத்தியிலும் முதன்மையான மாநிலம். இதன் காரணமாக, மக்களிடம் வாங் கும் சக்தி கூடியிருக்கிறது. சிறுதொழில்கள் வளர வாய்ப்புகள் பெருகியிருக்கிறது. இதற்கு ஆதாரமான மின்சார உற்பத்தியில் தன்னிறைவு பெற்றிருக்கிறது.

விவசாயத்தில் பெற்ற வளர்ச்சியை, முன்னேற்றத்தை தக்க வைக்கவும், புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் தொழில் வளர்ச்சி தவிர்க்க முடியாததாகிறது. அதைத் தான் இன்றைக்கு மார்க்சிஸ்ட் கட்சி அங்கு செய்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு நில விநியோகம் செய்கிற பொழுது எதிர்த்த நக்சல்பாரிகள், காங் கிரஸ்காரர்கள், பிஜேபியைச் சேர்ந்தவர்கள்தான் இன்றைக்கு அந்த நிலங்களிலிருந்து தொழிற் சாலைகளை உருவாக்கும்போதும் எதிர்க்கிறார்கள்.

பசித்தவன் தின்னாததில்லை; பகைத்த வன் சொல்லாததில்லை என்பதற்கு நடமாடும் உதாரணமாக கொடி பிடித்துக் கொண்டிருக் கிறார்கள்.மேலும், மார்க்சிஸ்ட் கட்சியினுடைய அகில இந்திய தலைமை முதல் மேற்குவங்க கட்சி கிளைகள் உட்பட விவாதித்து ஏற்றுக்கொண் டதுதான் இந்த தொழில்மயமாக்கும் பிரச்சனை. இது புத்த தேவின் சொந்தப் பிரச்சனையல்ல. சென்ற வருடம் டெல்லியில் நடைபெற்ற 18வது அகில இந்திய மாநாட்டில் நிறைவேற்றப் பட்ட தீர்மானத்தின் 2வது பிரிவில் தொழில்மய மாக்கல் பற்றி விரிவாகப் பேசித் தெளிவாக முடிவு செய்திருக்கிறோம். எனவே, மேற்குவங் கத்தை தொழில் மயமாக்குவதுதான் மார்க் சிஸ்ட் கட்சியின் முழு முதற்கடமை.மேற்குவங்கத்திற்கு முதலீடு செய்ய வரும் சலீம் குடும்பம் சுகர்த்தோவால் வளர்த்துவிடப் பட்டதாக ஜென்ராம் சொல்கிறார்.

ஆனால், அதை நாங்கள் பயன்படுத்துவது என்பது அந்த சுகர்த்தோ கும்பலுக்கு எதிராக ஓங்கிக் குரல் எழுப்பத்தான். அவர் கள் விரலைக் கொண்டு அவர்கள் கண்ணையே குத்துகின்ற கலை எங் களுக்கும் தெரியாமலா இருக்கும்? சமீபத்தில் கூட வியட்நாம் நாட்டிற்கு அமெ ரிக்காவின் அதிபர் ஜார்ஜ் புஷ் சென்றது மட்டு மல்ல, அந்த நாட்டின் பாரம்பரிய உடையிலேயே போட்டோவிற்கு போஸ் கொடுத்தது நம்மூர் நாளிதழ்களிலும் வந்திருந்தது. 25 ஆண்டுகாலம் தங்கள் நாட்டின் மீது குண்டு மழை பொழிந்து லட்சோபலட்சம் மக் களை கொன்றுக்குவித்த அமெரிக்க ஏகாதிபத் தியத்தை வியட்நாம் மக்களும் மறக்கவில்லை. ஜார்ஜ் புஷ்சும் மறக் கவில்லை.

நாங்களும் இதை ஆட்சேபிக்கவில்லை.ஒருகாலத்தில் சீனாவை ஐ.நா. சபைக்குள் நுழைய விடமாட்டேன் என்று கொக்கரித்த அமெரிக் காவின் தலைவர்கள், இன்று வாரம் ஒருமுறை பிக்னிக் போவது போல் சீனாவிற்கு போகவில்லையா? இந்த பயணங்கள் உணர்த்தும் உண்மை - எதையும் மறக்கும் சூழ்நிலையில் நாங்களும் இல்லை; மறைக்கும் சூழ்நிலையில் அவர்களும் இல்லை என்பதுதான்.

ஏனெனில், வளர்ந்த நாடுகளின் தொழில் நுட்பம் வளரும் நாடுகளான வியட்நாம், சீனா போன்ற நாடுகளுக்கு தேவைப்படுகிறது. வளரும் நாடுகளின் பணம் வளர்ந்த நாடுகளுக்கு தேவைப்படுகிறது. இதுவொரு வகையான கொடுக்கல் வாங்கல்தான். ஜென்ராம் போன்றவர்கள் இதற்குப் பிறகா வது மார்க்சிஸ்ட் கட்சியைப் பற்றியும், மேற்கு வங்கத்தில் அதன் செயல்பாடுகள் பற்றியும் புரிந்து கொண்டால் நல்லது. இல்லையெனில், தவறாக சிந்திக்கப்படும் எதுவும் தவறாகவே வெளிப் படுத்தப்படும் என்பார்கள். இதை சரியாகவே செய்திருக்கிறார் ஜென்ராம் என்ற முடிவுக்கு வரவேண்டியிருக்கும்.

Thanks: by Jyothiram

March 08, 2007

அரைவேக்காடு தங்கதுரையும், அரிப்பெடுத்த காலச்சுவடும்!


"சிறப்பு பொருளாதார மண்டலங்கள்: மார்க்சிSட்டுகளின் இரட்டை நிலைபாடு" என்ற தலைப்பில் அரைவேக்காடு இரா. தங்கதுரை, காலச்சுவடில் வாந்தியெடுத்துள்ளார். மமதையான மம்தாவின் ஆட்டத்திற்கே வங்க மக்கள் இறையாகவில்லை. இங்கே, மணலை கயிராக திரித்து சரடு விடுகிறது காலச்சுவடும், அரைவேக்காடு தங்கதுரையும். தமிழக மக்கள் ஒன்றும் ஏமாளிகள் இல்லை. சரி விஷயத்திற்கு வருவோம்.

டாடா நிறுவனம் சிங்கூரில் துவங்கவுள்ள கார் தொழிற்சாலைக்கு மேற்குவங்க இடது முன்னணி அரசு 997.11 ஏக்கர் நிலம் வழங்கியுள்ளது. தங்கதுரை இந்த புள்ளி விவரத்தை கூட அறியாத பாலகராக இருப்பதற்கு நாம் ஒன்றும் செய்வதற்கில்லை. (அவர் இதனை 920 ஏக்கர் என குறிப்பிட்டுள்ளார் - பார்க்க அவர் கட்டுரையை)

கம்யூனி°ட்டுகளுக்கு எதிராக அவதூரை பரப்பும் இந்த வாய்ச்சவடால் பேர்வழிகள், தொடர்ந்து கூறி வரும் குற்றச்சாட்டுகளில் ஒன்று மேற்குவங்கத்தில் தொழில் வளர்ச்சியே இல்லையென்று. அத்தகைய பேர்வழிகள்தான், தற்போது விவசாயிகளின் புது நண்பனாக உருவாகியுள்ளனர். உண்மை நிலைமை என்ன என்று மேற்குவங்க மக்களுக்குத் தெரியும். அதற்காக நாம் அலட்டிக் கொற்வதற்கு ஒன்றுமில்லை.

இந்தியாவிலேயே நிலச் சீர்திருத்தத்தின் மூலம் 13.87 லட்சம் ஹெக்டேர் நிலத்தை கைப்பற்றி, அதனை 28 லட்சம் மக்களுக்கு விநியோகித்தது மேற்குவங்க அரசு. மோடியை புகழ்ந்து தள்ளியிருக்கும் தங்கதுரை, குஜராத்தில் 3000 சிறுபான்மையினரை கொலை செய்து, இலட்சக்கணக்கான இசுலாமியர்களை ஊரைவிட்டே விரட்டிய நவீன பாசிச மோடியை புகழ்ந்திருப்பதன் மூலம் அவரது சுயரூபம் வெளிப்பட்டிருப்பதை நாம் உணரலாம். குஜராத்தில் பா.ஜ.க. - சங்பரிவார அரசு நிலச்சீர்திருத்தம் ஏதாவது செய்ததா? அதனை தங்கதுரை நிரூபிக்க முடியுமா? பூணை கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருண்டு போகாது தங்கதுரை. உன்னுடைய விஷம் கக்கும் பிரச்சாரம் கோயபல்சை மிஞ்சி விட்டது. இவ்வாறு மேற்குவங்கத்தில் விநியோகிகப்பட்ட நிலத்தில் 40 சதவீதம் பயனடைந்தது தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மேற்குவங்கம் விவசாய உற்பத்தியில் முதலிடம் வகிப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த பின்னணியில்தான், மேற்குவங்க அரசு தொழில் வளர்ச்சியை கணக்கில் கொண்டு டாடா நிறுவனத்தின் கார் தயாரிப்பு தொழிற்சாலைக்கு சிங்கூரில் இடம் ஒதுக்கீடு செய்தது. ஒதுக்கீடு செய்யப்பட்ட 997 ஏக்கரில் 945 ஏக்கர் நிலம் ஒருபோக விளைச்சல் மட்டுமே கொண்டது. ஒரு சிறு பகுதி மட்டும் இரு போக விளைச்சல் நிலம். இத்தகைய நிலங்களுக்கு தற்போதைய மார்க்கெட் விலையை விட 150 மடங்கு தொகையை உத்திரவாதப்படுத்தி, விவசாயிகளுக்கு எந்தவிதமான அலை கழிப்பும் இல்லாமல் முழுமையாக செட்டில் செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் இழப்பீட்டைப் பொறுத்தவரை ஒருபோக நிலமாக இருந்தால் 8.40 லட்சமும், இருபோக நிலமாக இருந்தால் 12 லட்சமும் வழங்கப்படுகிறது. இந்த நிலத்தினை அரசு கொண்டு வரும் திட்டத்திற்காக 12 ஆயிரம் விவசாயிகள் தங்களது முழு ஒப்புதலோடு கையெழுத்துப் போட்டு, முழு ஆதரவினைத் தெரிவித்துள்ளனர். மேலும் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு திட்டம் அமையவுள்ள இடத்தில் உரிய வேலைவாய்ப்பும் தற்போது கொடுக்கப்பட்டு வருகிறது.
இது தவிர, தகுதியுள்ள நபர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் விதத்தில் தொழிற்பயிற்சியும் அளிக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பிட்டர், டர்னர், வெல்டர் என பலதொழில்களை 2000க்கும் மேற்பட்டவர்கள் எடுத்துக் கொண்டு வருகின்றனர். இது தவிர பெண்களுக்கு தையல் தொழில் உட்பட பல்வேறு வேலைவாய்ப்புகளுக்கு மேற்குவங்க அரசு வழிகாட்டி உதவி வருகிறது. இதுபோன்ற திட்டம் இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பார்க்க முடியாதது. அதேபோல் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தொழில் வளர்ச்சிக்காக எப்போதெல்லாம் நிலம் கையகப்படுத்தப்பட்டதோ, அங்கெல்லாம் இன்னும்கூட முழுமையாக நிவாரணமோ அல்லது வேலைவாய்ப்போ வழங்காமல் மக்கள் அலை மோதுவதையெல்லாம் தங்கதுரையின் பூனை கண்களுக்கு தெரியாமல் போனதற்கு என்ன காரணமோ? அவருக்கே வெளிச்சம்.

அதைவிட பெரிய சரடு என்னவென்றால், இந்த தலைப்பில் "சிறப்பு பொருளாதார மண்டலம் மார்க்சிSட்டுகளின் நிலைபாடு என்பதே" இவர்களை நினைத்தால் பரிதாபமாகத்தான் இருக்கிறது. தங்கதுரை நீங்கள் எழுதிய கட்டுரைகள் எல்லாம் எப்படியிருக்கும் என்பதை இந்த கட்டுரையின் மூலம் தமிழகத்திற்கு விளக்கி விட்டீர்கள். ஐயா, தங்கதுரை சிங்கூரில் அமையவுள்ள டாடா கார் தொழிற்சாலை திட்டம், சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் வராது. சிறப்பு பொருளாதார மண்டலம் குறித்து மேற்குவங்க அரசு மாற்றுக் கொள்கை வைத்துள்ளது. இதையெல்லாம் அறிந்து கொள்ளாமல் மார்க்சிSட் கட்சி மீது புழுதிவாரித் தூற்றும் நோக்கத்தோடு எழுதுவதால் உங்களுக்கு பெரும் திருப்தி கிடைக்கலாம். ஆனால், உங்களது எழுத்தே உங்களைப் பார்த்து நகைப்பதை என்னவென்று சொல்லுவது. காலச்சுவடு இப்படிப்பட்ட அரைவேக்கடுகளின் கட்டுரைகளை வெளியிட்டு பெருமைபடுவது அதற்கு மட்டுமே பொருந்தும்.
கடந்த 30 ஆண்டுகளாக மக்களின் நம்பிக்கையினைப் பெற்ற அரசு மேற்குவங்க இடது முன்னணி அரசு. காங்கிரசு முதல் மமதா, பா.ஜ.க. வரையில் பலரும் இடது முன்னணி அரசுக்கு எதிராக போடாத ஆட்டங்கள் இல்லை. அவற்றையெல்லாம் மேற்குவங்க மக்கள் முற்றாக நிராகரித்து விட்டார்கள். பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை மேற்குவங்க மக்களின் நம்பிக்கையைப் பெற்ற அரசு இடது முன்னணி அரசே. குறிப்பாக மார்க்சிSட்டுகளின் பங்கு மகத்தானது. உலகின் அதிசயம் மேற்குவங்கம். தேர்தல் தில்லு முல்லுகள் மூலம் ஆட்சிக்கு வருவதாக தங்கதுரை போன்றவர்கள் தான் கடந்த காலத்தில் உளறிக் கொட்டிக் கொண்டிருந்தனர். அவற்றிற்கெல்லாம் கடந்த சட்டமன்ற தேர்தலில் பெரிய அடியை மேற்குவங்க மக்கள் கொடுத்துள்ளனர். தங்கதுரை உங்கள் எழுத்திற்கு சன்மானம் கிடைக்கலாம். தமிழக மக்கள் அவற்றை முற்றிலும் நிராகரிப்பார்கள்.

March 06, 2007

நவீன மூளிகளும்! நல்ல தங்காளும்


நல்லதங்காள் கதையை என் தாயார் பலமுறை சொல்லியுள்ளார். இருந்தாலும், அதனை சொந்தமாக வாசிக்கும் போது பெரும் தாக்கத்தையும், துக்கத்தையும் ஏற்படுத்துகிறது. தற்போதைய தமிழ்ச் சூழலில் இத்தகைய கதைகளை சொல்லும் கலை மறக்கடிக்கப்பட்டு சன் தொலைக்காட்சியின் இரண்டு பெண்டாட்டி, நான்கு புருஷன் கதைகளில் நாளை என்ன நடக்குமோ? என்ற சிந்தனை தளத்திற்கு நம்மை இட்டுச் சென்று விட்டனர் நவீன மூளிகள்.


இதுபோன்ற கதைகள் மறுவாசிப்பிற்கு உள்ளாக்கப்பட வேண்டும். இத்தகைய கதைகளை மீண்டும் நம் தமிழ் குழந்தைகளிடம் கொண்டுச் செல்வதன் மூலம் வறுமையை, பசி, பட்டினி, வஞ்சகம், வைராக்கியம், பழிவாங்கும் உணர்ச்சி போன்ற பலதரப்பட்ட உணர்வுகளை உணர வைக்க முடியும்.


இந்த கதை ஏற்படுத்தும் தாக்கம் பெரிதுதான் எனினும், உலக இலக்கியத்தோடு இதனை ஒப்பிட முடியுமா? இது எத்தகைய தாக்கத்தை வெளிப்படுத்துகிறது என்பதை பரிசீலிக்க வேண்டியுள்ளது. குறிப்பாக வங்க நாவல் ‘அனந்த மடம்’ பஞ்சத்தின் கோலத்தை பெரும் நாவலாக விரித்துச் சென்று, பஞ்சத்தின் கோர முகத்தை நமக்கு விரித்துச் சொல்லும். ஆனால், அதைவிட அதே சமயம் பஞ்சத்தின் கோரம் எந்தவிதத்திலும் சரியாத அளவிற்கு நம்முடைய நல்லதங்காள் கூறுகிறது. மேலும், விக்டர் ஹியூகோவின் ‘ஏழை படும் பாடு’ என்ற நாவலோடு ஒப்பிட்டப் பார்க்கும் போது முதலாளித்துவ சமூகத்தில் ஏற்படும் வறுமை பாந்தோனை எப்படி விபச்சாரத்திற்கு தள்ளுகிறது என்பதையும், ஜீன் வால்ஜின் தன்னுடைய சகோதரிகளுக்காக வெறும் ரொட்டியை திருட முயற்சி செய்தபோது, காவலர்கள் அவனை உலக மகா திருடனாக சித்தரித்த விதம் இந்த முதலாளித்துவ சமூகத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்ற தாக்கத்தை உருவாக்குகிறது. நம்முடைய நல்லதங்காளில் இயற்கையின் பஞ்சம், அதனால் ஏற்படும் தாக்கமாக மட்டுமே விரிகிறது.


வங்க பஞ்சத்தின் போது 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பலியானது கூட நம்மை அடிமைப்படுத்திய பிரிட்டிஷ் அரசாங்கத்தின் தவறான - முதலாளித்துவ ஏற்றுமதி கொள்கையால்தான் ஏற்பட்டது. எனவே, பஞ்சத்திற்கு இயற்கை ஒரு காரணமாக இருந்தாலும் கூட, ஆட்சியாளர்களே பெரும் காரணமாக இருந்துள்ளனர் என்பது பல்வேறு வரலாற்று உண்மைகள் வெளிப்படுத்தும் கூற்று.


நல்ல தங்காள் கதை, அனந்த மடம், ஏழை படும் பாடு... இவைகள் அனைத்தையும் நாம் ஒருசேர வாசிக்கும் போது பெரும் தாக்கத்தை நிச்சயம் ஏற்படுத்தும். மொத்தத்தில் உலகில் உள்ள அனைத்து உயிர்களின் வாழ்க்கைக்கும் எதிரியாக இருப்பது முதலாளித்துவ, ஏகாதிபத்திய சமூக அமைப்பே! ஆப்கானி°தானில் இருந்து ஈராக் வரையும், சோமாலியாவில் முதல் உகாண்டா வரை நீடிக்கும் வறுமைக்கும் துன்பத்திற்கும் காரணம் முதலாளித்துவ பேரரசு அமைப்பே! குறிப்பாக அமெரிக்காவும், பிரிட்டனும் அதன் கார்ப்பரேட் தலைவர்களும் உலக மக்களையே சூறையாடி வருகிறார்கள்.
இத்தகைய துன்பத்தையும், அதற்கெதிரான போராட்டங்களையும் கிளர்ந்தெழச் செய்திட நவீன மூளிகளான பேரரசுவாதிகளை அம்பலப்படுத்திட, தேவை நவீன நல்ல தங்காள்!

March 05, 2007

விலைவாசியும் கலைஞர் ஆட்சியும்!

திமுக ஆட்சிக்கு வந்தது முதல், இன்று வரை அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதியில் 80 சதவீதத்தை நிறைவேற்றி விட்டோம் என்று தொடர்ந்து டமுக்கடித்துக் கொண்டேயிருக்கிறார்கள்.

இரண்டு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி என்பதெல்லாம் மற்ற மாநிலங்களுக்கு ஒரு முன்னுதாரணத் திட்டமே. இருப்பினும் ஆளும் கட்சிக்காரர்களே அரிசியை கடத்துவதும், அரிசி கடத்தலுக்கு எதிராக உறுதியான நடவடிக்கை இல்லாததும், இந்த திட்டம் யாருக்கானது? என்ற சந்தேகத்தை நாளுக்கு நாள் வலுப்படுத்தி வருகிறது!

அதே போல், திமுகவின் இரண்டு ஏக்கர் நில விநியோகமும் இன்றைய சூழலில் பலத்த வரவேற்பை பெற்ற ஒரு மகத்தான திட்டம் என்பதில் எந்த சந்தேகத்திற்கும் இடமில்லை. இருப்பினும் இந்த திட்டமும் எதிர்பார்த்த வேகத்தோடு நடைபோடுவதில் தள்ளாட்டம் கண்டு வருகிறது.

ஜனநாயகத்தின் மறுபிறப்பாக திமுக தன்னைக் காட்டிக் கொள்ள முயற்சித்தாலும், சென்னை தில்லு முல்லு தேர்தலால் அதன் ஜனநாயக வேடம் கலைந்து போய் விட்டது. நீலச் சாயம் வெளுத்துப் போச்சு... டும். டும். டும்... என கொட்ட வைத்து விட்டது. மாநில சுயாட்சி பற்றி அடிக்கடி வெளுத்து வாங்கும் கலைஞர் ஏனோ தெரியவில்லை முலாயம் ஆட்சி விஷயத்தில் காங்கிரசின் நிலையே தன் நிலை என்று பறையடித்து விட்டார்! இதுதான் அரசியல் சாணக்கியத்தனம்!

ஒவ்வொரு விஷயத்திலும் ஒரு பாசிட்டிவ், நெகட்டிவ் இருக்கும் என்பார்கள்... ஆனால், திமுக ஆட்சியில் பாசிட்டிவ், நெகட்டிவ் என்று இரண்டும் சமத்தன்மையில் செயல்படுவதால் ஒரு தேக்க நிலைமையத்தான் கடந்த ஓராண்டில் கலைஞராட்சி வழங்கியிருக்கிறது.

மத்திய ஆட்சியின் வலுவான தூண் திமுக, மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் கேடு கெட்ட உலகமயக் கொள்கையால், முன்பேர வர்த்தகம் என்ற சூதாட்டத்தால் மக்களின் வாழ்வு பெருமளவிற்கு சூறையாடப்பட்டுள்ளது. அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையும் மிகக் கடுமையாக உயர்ந்து வாட்டி வதைத்து வருகிறது. சாதாரண மக்கள், ஏழை மக்கள் இந்த விலைவாசி உயர்வை கண்டு நெருப்பாய் எரிந்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், மாநில அரசு பால் விலையை ரூ. 1.25 உயர்த்தப் போவதாக அறிவித்துள்ளது எரியும் நெருப்பில் பெரும் எண்ணெய்யை ஊற்றுவதுபோல் உள்ளது.

என் வீட்டிற்கு வந்திருந்த கிராமப்புறத்துவாசி அடித்த கமெண்ட் என்னை நெகிழச் செய்து விட்டது. “இரண்டு ரூபா அரிசின்னு சொல்லிட்டு... எல்லா விலையும் ஏத்திட்டானுங்க...” என்று. திமுக அரசு தான் செய்வதெல்லாம் நல்லது என அதுவாக நினைத்துக் கொண்டால் போதாது, இத்தகைய திட்டங்கள் மக்களிடம் என்ன தாக்கத்தை, விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது என்ப குறித்து சிந்திக்க வேண்டும். உளவுத்துறைகள் எப்போதும் சேம் சைடு கோல்தான் போடும்! அது அவர்களின் பிழைப்பப்பா.... பால் விலையில் கை வைத்த அரசுகள் எல்லாம் பாழாய் போன வரலாறு கலைஞருக்கு தெரியாமல் இருக்காது!

கேரளாவில் விலைவாசி உயர்வை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக பத்திரிகைகளில் செய்திகள் வந்துள்ளது. குறிப்பாக கிராமப்புறத்தில் காய்கறிகள், பருப்புகளை மொத்தமாக கொள் முதல் செய்து, குறைந்த விலைக்கு ரேஷன் கடைகள் - மாவேலி கடைகள் மூலம் விற்க திட்டமிட்டிருக்கிறது கேரள அரசு. இத்தகைய பயனுள்ள நடவடிக்கைகளை நம் கலைஞர்.... அரசு மேற்கொள்ளுமா? பொறுத்திருந்து பார்ப்போம்!.... கலைஞர் புத்திகூர்மையான அரசியல்வாதி என்பதை நாமறிவோம்!