February 25, 2006

நேற்று ஈராக்! இன்று ஈரான்! நாளை இந்தியா!

அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்யை சிவப்புக் கம்பளத்துடன் வரவேற்க இந்திய அரசு ஆவலோடு காத்திருக்கிறது. மற்றொரு புறம் இந்திய இடதுசாரிகளும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும், ஜனநாயக சக்திகளும், தேசபற்றுக் கொண்டோரும் புஷ்ஷே இந்தியாவுக்கு வராதே! திரும்பிப் போ! என்ற முழக்கத்துடன் எதிப்பு நடவடிக்கைக்காக திட்டமிட்டு வருகின்றனர்.
இச்சூழலில் புஷ் இந்தியாவின் அணு தொழில்நுட்பம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளதோடு, அணுசக்திக்காக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்°, ரஷ்யா போன்ற நாடுகளிடம் கையேந்தவேண்டும் என்று பகிரங்கமாக கூறியுள்ளார்.இந்திய நாடு சுயேச்சையான அணுசக்தி கொள்கையை பின்பற்றி வருகிறது. மிக பாதுகாப்பான முறையில் அணுஉலைகளை இயக்கி மிக ஆக்கப்பூவர்மான நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தி வருகிறது. இந்த அணு உலைகளில் இருந்து வரும் கழிவுகளை மறு செறிவூட்டலும் இந்தியா மிகப் பாதுகாப்பாக செய்து வருகிறது.
ஜார்ஜ் புஷ் இனிமேல் இந்தியா அணுகழிவுகளைப் பயன்படுத்தி மறுசெறிவூட்டலை செய்யக்கூடாது என்று கண்டித்துள்ளதோடு, இத்தகைய மறுசெறிவூட்டல் தொழில்நுட்பம் எங்களிடம்தான் இருக்கிறது. எனவே, மறுசெறிவூட்டலை மேற்கண்ட ஏகாதிபத்திய நாடுகளிடம்தான் இந்தியா செய்யவேண்டும் என்று புஷ் கூறியுள்ளார்?புஷ்ஷின் இந்த அத்துமீறிய செயலை இந்திய விஞ்ஞானிகள் கடும் கண்டனம் செய்துள்ளனர். இது இந்திய விஞ்ஞானிகளை கேவலப்படுத்தும் செயலாகும்.
புஷ்ஷின் இந்த கூற்றை மீறினால் இந்தியாவும் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கழுகுக் கண் கீழ் இனிமேல் வரலாம்! அதையடுத்து பல்வேறு பொருளாதார தடைகள் உட்பட, இந்தியாவை ஐக்கிய நாடுகளின் சபைக்கும் இட்டுச் செல்லலாம் இதுவெல்லாம் வெறும் கற்பனை என்று நினைத்துவிட வேண்டாம்! அமெரிக்காவின் தொடர்ச்சியான மிரட்டலைத் தொடர்ந்து தற்போது அணுசக்தி விவகாரத்தில் நம்முடைய தொழில்நுட்பத்தை கேலிக்கூத்தாக்குவதோடு, அணுசக்தி தொழில்நுட்ப வல்லமை கொண்ட நாடாக இந்தியாவை அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை என்பதைத்தான் இது காட்டுகிறது.
புஷ் இத்துடன் நிற்காமல் “அணுசக்தி ஆற்றல் கொண்ட நாடுகளின்” புதிய கூட்டணியையும் ஏற்படுத்தியுள்ளார். (நம்முடைய தமிழக ஜனநாயக கூட்டணிகளுக்கு இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.)இத்தகைய பின்னணியில் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வருவது இந்திய பாதுகாப்பிற்கும், ஜனநாயகத்திற்கும், சுயாதிபத்தியத்திற்கும் முட்டுக்கட்டையாக விளங்கும்! எனவே மன்மோகன் சிங் அரசு ஜார்ஜ் புஷ் வருகையை உடனடியாக நிறுத்திட வேண்டும்.
இதுவே இந்திய மக்களின் எதிர்பார்ப்பு!நேற்று ஈராக்! இன்று ஈரான்! நாளை இந்தியா!

February 24, 2006

வலைபதிவர்களே! புஷ் வருகை எதிர்ப்பில் பங்கேற்பீர்!

அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்-ஷே திரும்பி போ!
சென்னையில் கண்டன ஊர்வலம் - ஆர்ப்பாட்டம்



அமெரிக்கா இன்றைக்கு உலக அமைதிக்கும், உலக நாடுகளின் இறையான்மைக்கும் பேராபத்தாக உருவாகியிருக்கிறது. ஆப்கானி°தான், ஈராக் நாடுகளை ஆக்கிரமித்ததோடு, அந்நாட்டு மக்களின் வாழ்வை மொத்தமாக சூறையாடியுள்ளது. மேலும் சோசலிச கியூபா, வடகொரியா, சிரியா, ஈரான் என பல நாடுகளை தொடர்ந்து மிரட்டி வருகிறது. இது தவிர இந்திய நாட்டின் உள் விவகாரங்களிலும் அப்பட்டமாக தலையிட்டு வருகிறது. இப்பின்னணியில் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை விரும்பத்தக்கதாக இல்லை.

கடந்த 2004 மே மாதம் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் என்.டி.ஏ. (பா.ஜ.க.) அரசு தோற்கடிக்கப்பட்டதற்கான பல காரணங்களில் அவர்களது அமெரிக்க சார்பு அயலுறவுக் கொள்கையும் ஒன்று.

புதியதாக பதவி ஏற்ற மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசும், அதே கொள்கைகளை இன்னும் தீவிரமாக அமுல்படுத்தி வருவது கண்டனத்துக்குரியது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 18ஆம் தேதி அமெரிக்காவுடன் போடப்பட்ட அணுசக்தி - சம்பந்தமான ஒப்பந்தம் இந்தியாவின் சுயாதிபத்தியத்தையே அமெரிக்காவின் காலடியில் கொண்டு போய் வைத்துள்ளது.

இந்திய அரசு எதைச் செய்வதாக இருந்தாலும் அவர்கள் (அமெரிக்க) நாட்டுப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஜூலை மாத அணுசக்தி ஒப்பந்தத்துக்கு ஆதரவளிக்க மாட்டார்கள் என்ற மிரட்டலைக் காட்டியே, இந்திய அரசை அடிபணிய வைத்து வருகின்றனர்.

சர்வதேச அணுசக்திக் கழகம் (ஐ.ஏ.இ.ஏ.) ஈரானுக்கு எதிராக நிறைவேற்றிய தீர்மானம் இந்தப் பின்னணியில்தான் என்பது உலகறியும். எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.) சிரியாவில் எண்ணெய் வயல்களை, சீனாவுடன் இணைந்து வாங்குவதை அமெரிக்கா ஆட்சேபிக்கிறது. இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையனைத்தும் வர்த்தகம் மற்றும் அரசியல் சம்பந்தமானவற்றில், அமெரிக்காவின் அனுமதியின்றி எதுவும் நடக்காது என்று நிர்ப்பந்தம் செய்யப்படுகிறது.

இதற்கு மேல், இந்தியாவின் அமெரிக்க தூதுவர், தூதுவர்களின் நடைமுறையையும், நாகரீகத்தையும் காற்றில் பறக்க விட்டு இந்திய அரசை வெளிப்படையாக மிரட்டியுள்ளார். தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில முதல்வர்களை மிரட்டிக் கடிதம் எழுதுகிறார். இவையனைத்தையும் தட்டிக்கேட்க மத்திய அரசு மறுத்து வருகிறது.

இந்தப் பின்னணியில், அமெரிக்க ஜனாதிபதி ஜார்ஜ் புஷ்ஷின் இந்திய வருகை மேலும் இந்தியாவின் ஜனநாயகத்தையும், இறையாண்மையையும் கேலிக் கூத்தாக்குகிற விஷயமாகும். எனவே, ஜார்ஜ் புஷ்-ஷின் இந்திய விஜயத்தை ஜனநாயகத்தில் பற்று கொண்டோரும், தேசபக்தி மிக்கோரும், நாட்டின் நலன்களைக் கணக்கில் கொண்டு எதிர்ப்பது அவசியம்.

“புஷ் வருகை எதிர்ப்புக்குழு” - தமிழகம் முழுவதும் “ஜார்ஜ் புஷ்-ஷே” திரும்பிப்போ என்ற கோஷங்களுடன் கண்டன ஆர்ப்பாட்டங்களையும், எதிர்ப்புக் கருத்தரங்குகளையும் நடத்த உள்ளது.சென்னையில் மார்ச் மாதம் 2ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு மன்றோ சிலை அருகிலிருந்து “ஜார்ஜ் புஷ் வருகை எதிர்ப்பு” கண்டன ஊர்வலம் நடைபெறும்.

ஜனநாயக எண்ணங்கொண்டோரும், ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களும், தேசம் காக்கும் போராளிகளும் கொடிகளுடனும், கோஷங்களுடனும் ஊர்வலத்தில் பங்கேற்பார்கள். அரசு விருந்தினர் மாளிகை முன்பு (பெரியார் சிலை அருகில்) தலைவர்கள் கண்டன உரையாற்றுகிறார்கள்.

February 23, 2006

புஷ் எதிர்ப்பு வாரம்

அமெரிக்க அதிபர் சாரி! உலக கொலைகாரன் ஜார்ஜ் புஷ் இந்தியாவுக்கு வருவதையொட்டி “புஷ் எதிர்ப்பு வாரமாக” கடைபிடிக்க முடிவு செய்துள்ளேன். அமெரிக்க தூதர் முல்போர்டு நமது மண்ணில் இருந்துக் கொண்டே இந்தியாவை கடுமையாக மிரட்டி வருகிறார் - உத்தரவு போடுகிறார். எப்படி வந்தது இந்த தைரியும்?

1. ஈரானில் இருந்து பாகி°தான் வழியாக இந்தியா வரும் சமையல் எரிவாயு திட்டத்தை கைவிட வேண்டும் என்று கண்டோலிசா ரை° மிரட்டுகிறார்.

2. ஈரானின் அணு ஆராய்ச்சி - மேம்பாடு திட்டத்திற்கு எதிராக இந்தியா ஓட்டு போட வேண்டும் என்று முல்போர்டு மிரட்டுகிறார்.

3. ஈரான் விஷயத்திலும், சில்லறை வியாபாரத்தில் அந்நிய முதலீடு குறித்தும் இடதுசாரிகள் வாய்திறக்கக்கூடாது என்று முல்போர்டு அலறுகிறார்.

4. மேற்குவங்க முதலமைச்சர் ஜார்ஜ் புஷ்யை ‘உலக கொலை காரன்’ என்று கூறியதற்கு, இந்திய மண்ணில் இருந்துக் கொண்டே மேற்குவங்க வருகை முதல்வருக்கு கடிதம் எழுதுகிறார்.முல்போர்டு தூதராக செயல்படுவதை விட ஜார்ஜ் புஷ் விரும்பும் திட்டத்தை அமலாக்கும் சர்வாதிகாரியாக செயல்படுகிறார். நமது இந்திய அரசும் இந்த நாயை விரட்டாமல் வைத்திருப்பது ஏன் என்றுத் தெரியவில்லை!

உலகவங்கி, ஐ.எம்.எப்., உலக வர்த்தக அமைப்பு என அனைத்து நிதி நிறுவனங்களையும் தன் கையில் வைத்துக் கொண்டு உலகையே மிரட்டி வருகிறான் இந்த புஷ்!

இது மட்டுமின்றி பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று அறிவித்து, இதை ஏற்காதவர்கள் எல்லாம் அமெரிக்காவிற்கு எதிரி என்பதுபோல் சித்தரிக்கிறார்.

புஷ்ஷின் கரங்கள் ஆக்டோபசாக விரிந்து உலக மக்களையும், உலக நாடுகளையும் கபளிகரம் சாப்பிட்டு வருகிறது. இந்த மனித மிருகத்தின் நிழல் இந்திய மண்ணில் பட்டால்கூட இந்திய தாய் அதை ஏற்க மாட்டாள்.

இந்திய அரசே! புஷ் வருகையை நிராகரி! இந்திய மக்களே புஷ் வருகையை எதிர்ப்போம்!

February 22, 2006

ஐ.நா. சபையில் ஒலிக்கப் போகும் தலித் பெண் குரல்

ஐக்கிய நாட்டு சபையில் வருகிற பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெற இருக்கும் ‘பெண்கள் முன்னேற்றம் குறித்த’ அரங்கில் பீகாரைச் சேர்ந்த தலித் பெண் திருமதி கிரிஜா தேவி அவரது சொந்த மொழியான போஜ்பூரியில் உரையாற்ற உள்ளார்.

பீகாரின் கிழக்கு சம்ப்ரான் மாவட்டமான மோத்திஹரியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கும் திருமதி கிரிஜா தேவி 125 கிராமங்களில் சாராய சாம்ராஜ்யத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.தலித் பழங்குடி சமூகத்தில் பிறந்த கிரிஜா தேவியின் வயது 59, முஷார் என்ற பழங்குடியினத்தை சார்ந்த இவர்களது உணவு பழக்கமே எலிகளை பிடித்து சாப்பிடுவதுதான்.
இந்த சமூகத்தில் உள்ள ஆண்கள் அனைவரும் குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானவர்கள். இதனால் அனைத்து குடும்பங்களிலும் வறுமை தாண்டவமாடியது. கூலி வேலைக்கு சென்று வீடு திரும்பும் ஆண்கள் சாராயக் கடைக்கு சென்று தண்ணி போடாமல் வீட்டுக்கு வருவதே இல்லை.இந்த கொடிய போதை பழக்கத்தை ஒழிக்க வேண்டும் என தீர்மானித்த கிரிஜா பிரசாத் முதலில் தன்னுடைய கணவரை திருத்தும் பணியில் இறங்கினார்.

இவரது வழிமுறை மிகவும் வித்தியாசமாக இருந்தது. குடித்து விட்டு வரும் ஆண்களுக்கு மொட்டை போடுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளார். அத்துடன் நிற்காமல் சாராயக் கடைகளுக்கும், சாராயம் காய்ச்சும் இடங்களுக்கும் நேரடியாக சென்று அந்த கடைகளை அடித்து நொறுக்கினார். கிட்டத்தட்ட கடந்த ஐந்து ஆண்டு காலமாக விடாப்பிடியாக போராடியதன் விளைவு இன்றைக்கு 125 கிராமங்களில் சாராயத்தின் சுவடே இல்லாமல் போய்விட்டது.

மகாத்மாவின் அறைகூவலால் கூட சாதிக்க முடியாத விஷயத்தை கிரிஜா தேவி சாதித்துள்ளார். இவருக்கு எழுத படிக்கத் தெரியாது என்பது குறிப்பிடத்தக்கது. இவரது சேவை இத்துடன் நின்று விடாமல், பீகாரில் நிலப்பிரபுக்களிடம் கூலி விவசாயிகளாக வேலை செய்யும் விவசாயிகளுக்கு கூலி உயர்வு உட்பட, பல்வேறு போராட்டங்களை நடத்தியிருக்கிறார்.

இவருக்கு உருதுணையாக ஆக்ஷன் எய்ட் என்ற அமைப்பும், வேறு சில தன்னார்வ அமைப்புகளும் செயல்பட்டுள்ளன. ஐக்கிய நாட்டு சபை கிரிஜா தேவியின் சேவையை பாராட்ட முன்வந்துள்ளதோடு, ஐ.நா. சபையில் உரையாற்றவும் அவரை அழைத்துள்ளது. இந்த தாயின் செயல்பாடு பெண்களிடையே ஏற்பட்டு வரும் விழிப்புணர்வை வெளிக்காட்டுவதாக அமைந்துள்ளது.

இவரது கிராமத்தில் ஒரு உயர்நிலை பள்ளியை அமைக்க வேண்டும் என்பதும், ஆரம்ப சுகாதார நிலையத்தை அமைக்க வேண்டும் என்பதும் இவரது ஆசை. இதற்காக மாநில முதல்வரை சந்திக்க இருப்பதாகவும் கூறியுள்ளார். கிரிஜா தேவி அந்த கிராமத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட பஞ்சாயத்து போர்டு உறுப்பினர் என்பது குறிப்பிடத்தக்கது.

இவரது முஷால் சமூகத்தில் 99 சதவீதம் பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது! அனைவரும் கூலி வேலை செய்பவர்கள். நிலப்பிரபுக்களின் தயவிலேயே தங்களது வாழ்க்கையை ஓட்டவேண்டிய நிர்ப்பந்தத்தில் இருப்பவர்கள். இந்த மக்களுக்கு சொந்த நிலம் என்பதே இல்லை!
50 ஆண்டுகால சுதந்திர இந்தியாவில் கல்வியறிவையோ, சிறிதளவிலாவது நிலத்தையோ, உத்திரவாதமான வேலையையே, சுhதார வசதியையோ ஏற்படுத்த முடியாதது சுதந்திர இந்தியாவின் தோல்வியைத்தான் காட்டுகிறது.

எந்த தலித் மக்களை பார்க்கக் கூடாது, தீண்டக்கூடாது, மலம் அள்ளுவதற்கு மட்டுமே பிறந்தவர்கள், நிலங்களில் உழைப்பதற்கு மட்டுமே பிறந்தவர்கள், பொது குளங்களில் ஆடு, மாடு, பன்றிகள் கூட தண்ணீர் குடிக்கலாம். ஆனால் தலித் மக்கள் குடிக்கக்கூடாது என்று விரட்டினார்களோ அப்படிப்பட்ட மக்களின் பிரதிநிதியாக திருமதி கிரிஜா தேவி உலக பெண்ணினத்திற்கே வழிகாட்டியாக திகழ்கிறார்! இவரது பயணம் வெல்லட்டும், சந்திப்பு வாழ்த்துகிறது! மலரட்டும் புதிய சமுதாயம்!

சுதந்திர இந்தியாவில் நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை இந்த தாயிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டியிருக்கிறது!

February 20, 2006

கலவை கர்ப்பம்

காஞ்சிபுரம், கலவையில் உள்ள சங்கரமடத்தில் தொண்டூழியம் புரிந்த பிராமண பெண் கர்ப்பம் தரித்து, குழந்தை பெற்றுள்ளார். கர்ப்பம் தரிப்பது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்று கேட்கலாம். திருமணம் ஆகாத அந்தப் பெண் கலவை மடத்தை சேர்ந்த கயவன் ஒருவன் கர்ப்பமாகியுள்ளான்.

இந்த விஷயத்தை சங்கர்ராமன் கொலை குற்றவாளி சங்காரச்சாரியாரிடம் கொண்டு போக, அவரோ, யார் கர்ப்பம், யார் கர்ப்பம் இல்லை என்று பார்ப்பதா என் வேலை? என்று கை கழுவியுள்ளார். இவரது ஒழுக்கமே சந்தி சிரிக்கும்போது, இவர் எப்படி இன்னொருவருக்கு நீதி வழங்க முடியும்! பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் தன் உள்ளத்தில் அடக்கி வைத்திருந்த தீ.... பற்றியெறிந்ததே! இதைதான் தமிழக மக்கள் மறப்பார்களா?

கடவுளுக்கு தொண்டூழியம் புரிகிறோம் என்ற போர்வையில் ஒழுக்கக்கேடு, கொலை புரிதல், சதி திட்டம் தீட்டுதல் போன்ற இழி செயல்களில் செயல்படுவது மடங்களின் இன்றைய நவீன கலாச்சாரமாகி போய் விட்டது! இவர்களுக்கு வக்காலத்து வாங்கும் முகமூடிகள் - சங்பரிவார் கூட்டம் மறுபுறம்!

இது குறித்து யாராவது வாய் திறந்தால், அவர்கள் எல்லாம் இந்து மத துரோகிகள் என்று பட்டம் சூட்டப்படும். முன்மாதிரியாக இருக்க வேண்டிய மத பீடாதிபதிகளே இத்தகைய அட்டூழியங்களில் ஈடுபடுவது இந்து மதத்திற்கு களங்கம் விளைக்காதா? இவர்களை தண்டிக்க வேண்டியவர்கள் யார்? முதலில் அவர்களிடம் இருந்து புனிதமான? இந்து மதத்தை காப்பாற்ற வேண்டாமா? அல்லது இத்தயை சித்துவேளைகளெல்லாம் கடவுளின் பெயரால் நிகழ்த்தப்படுவதால் இவற்றை கடவுள் ஜீரணித்துக் கொள்வாரா?

மனிதனை பார்த்தாலே தீட்டு, தொட்டால் தீட்டு என்று சொன்னவர்கள் மடத்திற்குள்ளேயே அந்தரங்க லீலைகளை நடத்துவது இந்து மதத்தை புனிதப்படுத்தவா?

மனித உரிமை, பெண்ணுரிமை, ஜனநாயகம் என 21ஆம் நூற்றாண்டில் இருக்கும் போதே இத்தகைய அட்டூழியங்களை புரியும் இவர்களின் மூதாதையர்கள் இந்துக்களாக சொல்லிக் கொள்ளும் தலித் மக்களையும், இதர இந்துக்களையும் எத்தனை பாடு படுத்தியிருப்பார்கள் என்று எண்ணிப்பார்க்க முடியவில்லை!

சமூகத்தின் அனைத்து மட்டத்திலும் இத்தகைய போலிகளுக்கு முதலிடம் என்பது வெட்கக்கேடானது இல்லையா?

கலவையில் கர்ப்பம் தரித்த பெண்ணுக்கு நீதி கிடைக்க வேண்டும். அதற்கு காரணமாக கயவாளி உடனே முன்னுக்கு வரவேண்டும். இல்லையென்றால் இன்னொரு புராணம் உருவாக இதுவே காரணமாகவும் அமையலாம். என்ன சூரிய பகவானால் கர்ப்பம் தரித்திருக்கலாம் என்று ஏதாவது ஒரு பிளாக்கில் எழுதினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

February 18, 2006

மாமேதை சிங்காரவேலர் வரலாறு

- ச. சுடலைமுத்து

உலக அளவில் புகழ்பெற்று இந்தியாவிற்கு பெருமை சேர்த்தவர்களில் மிகவும் குறிப்பிடத்தக்கவர்கள் மகாத்மா காந்தி, ஈ.வே.ரா மற்றும் மா. சிங்காரவேலர்இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் தந்தையாக கருதப்படும் சிங்காரவேலர் தொழிற்சங்க இயக்கத்தின் தந்தையாகவும், விஞ்ஞானப் பகுத்தறிவு பயிலும் சமத்துவத்தின் தந்தையாகவும் விளங்கினார். 1860 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 18 ஆம் நாள் வெங்கடாசலம் செட்டி, வள்ளியம்மை ஆகியோருக்கு 3வது மகனாக பிறந்தார். கந்தப்ப செட்டி வம்சத்தில் உயர்கல்வி பெற்றவர்களில் இவர் ஒருவரே. 1881 ஆம் ஆண்டு மெட்ரிகுலேசன் படிப்பு தேர்வு பெற்றவர், கிறிஸ்தவர் கல்லூரியிலிருந்து 1884 ஆம் ஆண்டு FAO படிப்பு முடித்தார். சென்னை பல்கலைக்கழகத்திலிருந்து பிரசிடென்ஸி கல்லூரியில் BA முடித்தார். 1907ல் மெட்ராஸ் சட்டக்கல்லூரியில் BL டிகிரி பெற்றார். சென்னை உயர்நீதிமன்றத்தில் சட்டத் தொழில் புரிந்தார். 1889 ஆம் ஆண்டு அங்கம்மாள் (சாதி மறுப்பு திருமணம்) என்பவரை மணந்தார். அவருடைய ஒரே பெண் குழந்தை கமலா. வழக்கறிஞராக அமோகமாக வாழ்க்கையில் வெற்றி கண்ட சிங்காரவேலர், திருவான்மியூர், மைலாப்பூர் ஆகிய இடங்களில் சில எஸ்டேட்டுகளை வாங்கினார். பெண்களுக்கு சம பங்கில்லாத அந்த காலத்தில் தனது மகளின் மகன் சத்தியகுமாரை தனது மகனாக 1932ல் சுவீகாரம் எடுத்துக்கொண்டார்.
விடுதலைப் போராளி மகாத்மா காந்தியின் தலைமையை ஏற்றுக் கொண்ட சிங்காரவேலர் தமிழகத்தில் பிரசிடென்ஸி காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் ஒருவரானார். 1918ல் பிரிட்டிஷ் அரசு ரௌலட் சட்டம் எனும் மக்கள் விரோத சட்டத்தை _ மக்களின் பேச்சு சுதந்திரத்தைப் போராட்ட சுதந்திரத்தை மறுக்கும் ரௌலட் சட்டத்தை கொண்டுவந்தது. விசாரணையின்றி மக்களை தண்டிக்க அது பாதை அமைத்தது. அந்த கறுப்பு சட்டத்தை எதிர்த்து காங்கிரஸ்கட்சி போராட்ட வடிவங்களை கையிலெடுத்தது. சிங்காரவேலர் சென்னையில் ரௌலட் சட்டத்தை எதிர்த்து பொதுக்கூட்டம் நடத்தினார்.
இந்திய வரலாற்றில் 1919 ஏப்ரல் 13. இந்திய வரலாற்றில் ரத்தம் தோய்த்தெடுக்கப்பட்ட நாள். 400க்கும் அதிகமானவர்கள் இறந்த 2000 பேர்கள் தங்களின் கால்களை இழந்த ஜாலியன் வாலாபாக் படுகொலை நாளே அந்நாள். ரத்த ஆறு ஓடியது. நாடு முழுவதும் பஞ்சாப் படுகொலை கடும் அதிர்ச்சியை உண்டாக்கியது. இத்தகைய மனிதத்தன்மையற்ற செயலுக்கு கண்டனம் தெரிவித்து மகாத்மாகாந்தி ஒத்துழையாமை இயக்கத்தை அறிவித்தார். 1921 மே மாதம் ஒரு பொதுக் கூட்டத்தில் சிங்காரவேலர் தனது வக்கீல் கவுனை எரித்தார். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்கும் முகமாக தனது வக்கீல் தொழிலை விட்டார். பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்த அத்தனை துறைகளையும் பகீஷ்காரம் செய்ய தீர்மானித்தார். 1921 ல் அவர் மகாத்மா காந்திக்கு அவருடைய செயலுக்கு விளக்கமாக எழுதுகையில் “நான் இன்று எனது வக்கீல் தொழிலை விட்டுவிட்டேன். இந்த நாட்டின் மக்களுக்காக தங்களுடைய போராட்டத்தை நான் தொடர்கிறேன்’’ ஒத்துழையாமை இயக்கத்தின் ஒரு முக்கியமான பகுதியாக சிங்காரவேலர் திகழ்ந்தார். முதல் படியாக அவர் அறிவித்த முழு அடைப்பும் வெற்றி பெற்றது.
ரௌலட் சட்டம் நிறைவேறிய பிறகு, ஜாலியன் வாலாபாக் படுகொலை மற்றும் சௌரி சேளரா நிகழ்வுகளுக்கு பிறகு பிரிடிஷ் அரசை மக்கள் வெறுக்கத் துவங்கினர். மக்களிடையே நம்பிக்கையை தோற்றுவிக்க மக்களின் எதிர்ப்புணர்வை மாற்ற வேல்ஸ் இளவரசர் மற்றும் அவரது ஆதரவாளர்களுடன் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டனர். இந்த முயற்சி மக்களை சாந்தப்படுத்த வில்லை. சென்னையில் இந்த தூதுக்குழு வருகையை பகீஷ்காரம் செய்ய மக்களை திரட்டினார். சென்னையை குலுக்கிய ஒரு மிகப்பெரிய ஆர்பாட்டம் என இதனை அணணாதுரை வர்ணிக்கிறார்-.1922ல் கயாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் ஆண்டு மகாசபையில் சிங்காரவேலர் பங்கேற்றார். அப்போது அவர் கூட்டத்தினரை பார்த்து, ‘தோழர்களே’ என்று அழைத்தார். (இந்தியாவில் முதலில் தோழர் என்ற வார்த்தையை பயன்படுத்திய தலைவர் அவர்) கயாவில் அவருடைய பேச்சின் சுருக்கம் வருமாறு: “மனித நேய ஆட்சிக்காக நாம் போராடி வருகிறோம் ஒத்துழையாமை, வன்முறையின்மை ஆகிய ஆயுதங்களோடு நாம் போராடுகிறோம். அவைகளில் நானும் நம்பிக்கை வைக்கிறேன். ஆனால் கம்யூனிஸ்ட் சகோதரத்துவத்திற்கு அவர்கள் (ஆட்சியாளர்கள்) பொருந்தாதவர்கள். அவர்களின் நடத்தையிலே வேறுபடுபவர்கள்.’’ சாதனைகள்:1. பல்வேறு தொழிலாளர் போராட்டங்களில் பங்கேற்ற இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர்.2. 1923ல் தொழிலாளர் தினம் (மே தினம்) கொண்டாடியதன் மூலம், மேதினம் கொண்டாடிய முதல் இந்தியர் (ஆசியாவிலேயே முதலாவதும் கூட)3. 1923 மே மாதத்தில் தொழிலாளர் விவசாய கட்சியை தொடங்கினார்.4. பள்ளி மாணவர்களுக்கான மதிய உணவு திட்டத்தை செயல்படுத்தியதிலும் அவரே முன்னோடி. 1925ல் சென்னை மாமன்றத்தின் உறுப்பினராக தேர்வு பெற்றபின் இந்த திட்டத்தை துவக்கினார்.5. தொழிலாளர் நலனுக்காக, “தொழிலாளர்’’, “லேபர் கிசான்’’ ஆகிய 2 பத்திரிகைகளை தொடங்கினார்.
இந்தியாவின் முதல் தொழிலாளர் தலைவர்:
இந்தியாவில் தொழிற்சங்கங்களை உருவாக்கிய முதல் தலைவர் சிங்காரவேலர். பொருளாதார சீர்திருத்தத்தை மனதில் கொண்டு, “சென்னை தொழிலாளர் சங்கம்’’ என்ற சங்கத்தை முதன் முதலில் இந்தியாவிலேயே முதலில் ஏற்படுத்தினார். இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் இதுவே.வி.ஷி.வி ரயில்வே தொழிலாளர் சங்கம், நாகப்பட்டினம் ரயில்வே தொழிலாளர் சங்கம், கோயம்புத்தூர் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்களை உருவாக்கியவரும் இவரே. இந்திய தேசிய காங்கிரஸ் கயாவில் கூடியபோது, உலகத்தின் நலத்தில் ஈடுபாடு கொண்ட வெகுஜன அமைப்பின் பிரதிநிதியாகவே அவர் பங்கேற்றார். தொழிலாளர் சட்டங்கள் தேவை என்பதற்காக பேசிய அவர், காங்கிரஸ் இயக்கத்தின் ஒரு பகுதியாகவே தொழிலாளர் இயக்கமும் உள்ளது என கருதினார். நாடு சுதந்திரத்திற்கான இலக்குகளை அடைய நாட்டு தொழிலாளர்களின் பயன்பாட்டை பயன்படுத்த தவறியதாக அவர் எடுத்துக்காட்டினார். காங்கிரஸ், வன்முறையற்ற தன்மை, ஒத்துழையாமை இயக்கம் ஆகியவற்றில் அடிப்படையில் தேசிய மட்டத்தில் தொழிலாளர்களுக்கு தலைமை தாங்க வேண்டும் என்று யோசனை கூறினார். தேசிய அளவில் ஒரு வேலைநிறுத்தத்தை தொடுக்க முடியவில்லையானால் ஆங்கிலேய அரசை அசைக்க சாத்தியமில்லை.
எனவே, தொழிலாளர்களை அணுகி காங்கிரசின் ஒரு அங்கமாக தொழிற்சங்கங்களை தொடங்குதல் இன்றியமையாதது என்றும் கூறினார்.தொழிலாளர்களில் இலக்கு சுதந்திரம்; அது அரசியல், வணிக, பொருளாதார சுதந்திரம் என அர்த்தப்படும் என்றார். இந்தியாவின் மேதினத்தை கொண்டாடியவர்களில் முன்னோடிஇந்தியா முழுமையும் இந்தியாவில் (ஆசியாவில் கூட) மே தினத்தை முதல் முதலில் கொண்டாடிய முதல் மனிதராம் சிங்காரவேலரையே அவரின் உதாரணத்தை பின்பற்றினர்.ஆரம்பக்காலத்தில் 1888 மே மாதம் முதல் தேதியன்று மே தினம் அமெரிக்காவில் ஒரு மிகப்பெரிய வெகுஜன ஊர்வலத்துடன் நடைபெற்றது. அதில் பேசிய அனைவரும் 8 மணி நேரத்திற்கு மேல் தொழிலாளர்கள் வேலை செய்ய வேண்டாம் என வலியுறுத்தினர். அதன் பிறகு முதலாளித்துவ வாதிகளால் உழைப்பாளிகள் கொல்லப்பட்டதை முன்னிட்டு அத்தினம் கடைப்பிடிக்கப்பட்டது. இதுதான் மேதினத்தின் சிறப்பும் வரலாறும் ஆகும். 1923ல் மேதினத்தை 2 இடங்களில் கொண்டாட ஏற்பாடுகளை செய்தார் சிங்காரவேலர். ஒரு பொதுகூட்டம் அவருடைய தலைமையில் உயர்நீதிமன்றத்தின் எதிரில் இருந்த கடற்கரையில் நடைபெற்றது. மற்றொன்று திருவல்லிக்கேணி கடற்கரையில் நடைபெற்றது. “தொழிலாளர்களால் மட்டுமே மேதினம் கொண்டாடப்படுகிறது எனக்கூறிய இவர், தொழிலாளர்கள் இத்தகைய போராட்டங்களுக்கு பிறகு அதிகாரத்தை கைப்பற்றி இந்த நாட்டின் வளர்ச்சிக்கு பங்களிப்பர் என நம்பிக்கை தெரிவித்தார். இந்த நிகழ்வின் முக்கிய பகுதியாக தொழிலாளர்களுக்கான ஒரு கட்சி ஆரம்பிக்கப்படுவதாக அரிவித்தார். சிவப்புக்கொடியை ஏற்றி ‘தொழிலாளர் விவசாயிகள் கட்சி’யை தொடங்கினார். இந்த புதிய கட்சியின் திட்டங்களையும், தீர்மானங்களையும் விளக்கினார்.
1927ல் மேதினம் சிங்காரவேலர் இல்லத்திலேயே கொண்டாடப்பட்டது. அவர் உழைப்பாளர்களுக்கு உணவளித்தார். ஒரு கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். தொழிலாளர்களின் ஒற்றுமையைக் குறித்து தேசத்தின் சகலத் தொழிலாளர்கள் சார்பாக அந்தக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.மேதின கொண்டாட்டத்தை பற்றி ஹிந்து பத்திரிகை எழுதியது. “சென்னை மேதின விழாவில் தொழிலாளர் விவசாயி கட்சி அறிமுகப்படுத்தப்பட்டது. தோழர் சிங்காரவேலர் கூட்டத்திற்கு தலைமை வகித்தார். மேதினத்தை விடுமுறை நாளாக அறிவிக்கக் கோரி அரசை வலியுறுத்தும் ஒரு தீர்மானம் நிறைவேறியது. கட்சியின் தலைவர் வன்முறையற்ற பாதையே கட்சியின் நடைமுறை என விளக்கினார். நிதி உதவி கேட்டும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது. சுதந்திரத்தை அடைய உலகத்தொழிலாளர்கள் ஒன்று கூடவேண்டும் என வலியுறுத்தப்பட்டது.’’ அண்ணாதுரை தனது மேதின கூட்டத்தில் மேதினத்தை விடுமுறை நாளாக அறிவித்தார். 1986 முதல் மே தினத்தை அரசும் கோண்டாடுகிறது. நேப்பியர் பூங்கா என்பதை மேதின பூங்கா என முன்னாள் முதல்வர் கருணாநிதி பெயர் மாற்றினார். இந்த முயற்சிகளின் தொடர்ச்சியாக முன்னாள் பிரதமர் க்ஷி.றி. சிங் மேதினத்தை ஒரு சம்பள விடுமுறைநாளாக அறிவித்தார். மாநில மற்றும் மத்திய அரசுகளின் இத்தகைய செயல்களுக்கு சிங்காரவேலரே ஒரு காரணியாக அமைந்தார்.1933ல் நடைபெற்ற மேதினத்தில் சிங்காரவேலர் ஆற்றிய விரிவான உரை 1933 மே 7ஆம் தேதி ‘கொடியறம்’ பத்திரிகையில் பிரசுரமாயிற்று.
அவருடைய பேச்சின் சாராம்சம் வருமாறுநாம் வன்முறையிலோ அழிவிலோ சமத்துவத்தை நம்பவில்லை. நாம் பொருட்களின் பங்கீட்டில் சமத்துவம் நிலவுகிறதா என்பதையே நாம் காணவேண்டும். உழைப்பாளர்களின் அரசு உலக சமாதானத்தை அடிப்படையாக கொண்டு இருக்கும். சமத்துவத்தை வலியுறுத்தவே தொழிலாளர் விவசாயி கட்சி ஆரம்பிக்கப்பட்டது. நாம் அரசில் பங்கு பெற்றால் சமத்துவத்தை அடிப்படையாகக் கொண்ட நியாயமான நெறியிலேயே உருவாக்குவோம். நிலம் மற்றும் நீர் அத்தியாவசிய தேவைகள், கப்பல்கள், இரயில்கள், சுரங்கங்கள் அனைத்தும் பொது சொத்தே. அவை மக்கள் நலனுக்காகவே பயன்படுத்தப்படும். யாரெல்லாம் நாம் சமத்துவத்தை நம்புகிறோமோ அவர்கள் அனைவரும் பார்லிமெண்ட் அவைகளில் நாம் இடம் பிடிக்க வேண்டும். உழைப்பாளர்களின் ஆட்சியின் கீழ் உருவாகும் சமத்துவம் மூலமே உலகம் அமைதியாக வாழும். சமத்துவம் வளமைக்கு இட்டு செல்லும்.மதிய உணவு திட்டத்தின் முன்னோடி 1925ல் சிங்காரவேலர் சென்னை மாமன்ற உறுப்பினராக தேர்தலில் நின்று ஜெயித்தார். அவரது முதல் தேர்வு சுற்றுப்புற தூய்மையே. தூய்மையே சிங்காரவேலரின் மிகப்பெரிய பங்களிப்பு குழந்தைகளுக்கு மதிய உணவு திட்டத்தை அமல்படுத்தியதே ஆகும். பின் காமராஜ்க்கு உதவி; இந்த திட்டம் தமிழக அளவில் அமல்படுத்தப் பட்டது. சிங்காரவேலர் தமிழ்நாடு அரசின் நிர்வாக மொழி தமிழே நிலைக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
சிங்காரவேலரும் தொழிலாளர் இயக்கமும்
தொழிலாளர் இயக்க வரலாற்றில் 1918 ஏப்ரல் 27ஆம் நாள் முதல் தொழிற்சங்கம் உருவானது. வ.உ. சிதம்பரம் சுதந்திர போராட்டத்தில் பங்கெடுத்துக் கொண்டமைக்காக அவருக்கு விதிக்கப்பட்ட பல ஆண்டுகால ஆயுள் தண்டனையின் மூலம் இந்திய தொழிலாளர்கள் தங்களுக்கான தொழிலாளர் சங்கம் தேவையென்பதை உணர்ந்தனர். அதன் விளைவாக சென்னை தொழிலாளர் சங்கம் உருவானது. இந்த சங்கத்தின் தலைவர் சிங்காரவேலர்.
இந்த சங்கம் உருவானவுடன் சிங்காரவேலர் சக்கரை செட்டியார், சர்க்காரி ஆகியோருடன் இணைந்து சில வேலைநிறுத்தங்களை நடத்தினார். ஙி&சி யில் உருவான சங்கம் ஆங்கிலேயரால் தடைசெய்யப்பட்டது. சென்னையிலும் மற்ற இடங்களிலும் வேறு பல சங்கங்கள் உருவாகின. அவை 1. வி.ஷி.வி ஊழியர்கள் சங்கம் 2. எலக்டிரிசிட்டி தொழிலாளர் சங்கம் 3. டிரெயின்வே பணியாளர் சங்கம் 4. பெட்ரோலியம் தொழிலாளர் சங்கம் 5. தச்சுத் தொழிலாளர் சங்கம் 6. அலுமினியம் தொழிலாளர் சங்கம் 7. ஐரோப்பிய தொழிலாளர் சங்கம் 8. மருத்துவர்கள் (பார்பர்கள்) சங்கம் 9. துப்புரவு தொழிலாளர் சங்கம் 10. மீனவர் சங்கம் 11. ரயில்வே தொழிலாளர் சங்கம் 12. கோயம்புத்தூர் நூற்பணியாளர்கள் சங்கம்
அனைத்து சங்கங்களும் சிங்காரவேலரால் ஆரம்பிக்கப்பட்டவை. தென்னிந்தியாவில் தொழிலாளர் போராட்டங்கள் தொடங்கிய உடனே அது நாட்டின் பிற பகுதிகளுக்கும் காட்டுத்தீயாய் பரவியது. அதன் விளைவாக மும்பை, கொல்கத்தா, கான்பூர், நாக்பூர் போன்ற பகுதிகளிலும் தொழிலாளர் சங்கங்கள் உருவாகின. தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, நாகப்பட்டினம் மற்றும் கோயம்புத்தூர் ஆகிய பகுதிகளில் தொழிலாளர்கள் பெருகியதால் சங்கங்கள் பெருகின. சென்னை தொழிலாளர் சங்கம் தொடங்கிய சில வாரங்களிலேயே எல்லா முனைகளிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பின. தொழிற்சாலைகளின் முதலாளிகள், தொழிலாளர்களின் ஒற்றுமையை சீர்குலைக்க முயன்றனர்.
சென்னையிலிருந்த சூளை காட்டன் மில் தொழிலாளர் இயக்கத்தை பலப்படுத்தினார். முதலாளிகளின் வெறுப்புணர்வு தொழிலாளிகளின் மேல் அதிகரித்ததாலும், திரு.வி.க. மற்றும் சிங்காரவேலரின் எழுச்சியூட்டும் இயக்கத்தால் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைய அதிக ஆர்வம் கொண்டனர். சென்னை தொழிலாளர் சங்கம், டிராம்வே தொழிலாளர் சங்கம், பிரிண்டிங் பணியாளர் சங்கம், பெட்ரோலியம் தொழிலாளர் சங்கம் ஆகிய சங்கங்கள் வேலைநிறுத்தங்களில் ஈடுபடுவதில் புகழ்பெற்று விளங்கின. 1921 ஆகஸ்டில் ஙி&சியில் தொழிலாளர்கள் போராட்டத்தை நிர்வாகம் சாதி சண்டையாக மாற்ற சதி செய்து அதன் விளைவாக 2 பகுதி மக்களிடத்தில் பிரச்சனை உண்டாகி துப்பாக்கிச் சூடும் நடைப்பெற்றது. துப்பாக்கி சூட்டில் பெரம்பூரில் ஏழுபேர் இறந்தனர். அவர்களின் இறுதி சடங்கிற்கு போலீஸ் தடைவிதித்து மீறுவோரை சுடுவோம் என மிரட்டிய போதும் சிங்காரவேலர் தனது மார்பை திறந்து சுடுமாறு கூறி முன்னேறினார். 1927ல் நடைபெற்ற வடக்கு ரயில்வே வேலைநிறுத்தத்தில் கல்கத்தா மற்றும் ஹெளரா ஆகிய இடங்களில் நடைபெற்றது. அதற்கு சட்ட ஆலோசகராகவும் வேலைநிறுத்தத்தை நடத்துபவராகவும் ஆனார் சிங்காரவேலர்.
அதன் பிறகு தெற்கு ரயில்வே தொழிலாளர்கள் திருச்சி பொன்மலையில் நடத்திய வேலைநிறுத்தத்திற்கும் தலைமையேற்றார். இந்தப் போராட்டம் இரத்தத்தால் எழுதப்பட்டது. கடும் போராட்ட விளைவுகளுக்குப் பிறகு இவ்வேலைநிறுத்தம் தோல்வியடைந்தது. சிங்காரவேலர் மற்றும் தலைவர்கள் கைது செய்யப்பட்டனர். சிங்காரவேலர் “சாதாரணமானவருக்கும் சொத்து அடைவதே கம்யூனிஸம். பூமியினுள் நாம் காணும் பொருட்களை கையாளுவதற்கான ஒரு வழி பொருட்கள் சமமாக பங்கிடப்படும் வழிகளில் ஒன்று’’ என கம்யூனிஸத்£தை விளக்குகிறார்.
கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாடு
1925 டிசம்பர் 26 மற்றும் 27 தேதிகளில் கான்பூரில் இந்திய கம்யூனிஸ்ட்டுகள் மாநாடு நடைபெற்றது. இதுதான் முதல் மாநாடு ஆகும். சிங்கார வேலர் தனது தலைமைவுரையில் “கம்யூனிசத்தின் விதிகள் மனித நேயத்துக்கு எதிரான நோய்களிலிருந்து மனிதநேயத்திற்கு உதவுதலே ஆகும்.’’ எல்லா மக்களுக்கும் இன்றியமையாத எல்லா பொருட்களையும் உழைப்பாளர்கள் உற்பத்தி செய்கின்றனர் என கம்யூனிசம் கூறுகிறது. அவர்களின் கடுமையான உழைப்பின் விளைவாக ஒவ்வொருவரும் நன்றாக வாழ போதுமானதாகிறது. ஆனால் மூல ஆதாரங்கள் முதலாளிகளின் கையிலே இருக்கும்வரை தொழிலாளர்கள் பட்டினிக்குள் தள்ளப்படுகின்றனர். தொழிலாளர்கள் ஒரு நியாயமான பங்கை உற்பத்தியான பொருட்களில் கிடைக்கப் பெற்றால், மூலப்பொருட்கள் அவர்களின் கைக்கு சொந்தமாகிவிடும். இதுதான் கம்யூனிசத்தின் அர்த்தம். ஒவ்வொரு கம்யூனிஸ்டும் கீழ்க்கண்டவற்றை நோக்கமாக கொள்ள வேண்டும்; சுய ஆட்சி இல்லாமல் வாழ்க்கையில்லை; உழைப்பாளர்கள் இல்லாமல் எந்த சுய ஆட்சியும் இல்லை; அரசாங்கத்தால் பல மாற்றங்கள் நடைபெற்ற போதும் நாம் தேசத்தின் விடுதலைப் போராட்டத்தில் தலைமை ஏற்கவேண்டும் நாம் கூடவே உழைப்பாளர்களின் உரிமைகளுக்கு பாதுகாவலனாக விளங்க வேண்டும் கல்வி அறிவு இல்லாத மக்கள் திரளை ஒற்றுமைப்படுத்துவதும் அவர்களை விடுதலை செய்வதும் கம்யூனிஸ்ட்களின் கடமையாக கொள்ள வேண்டும்.
தேசத்தின் வளர்ச்சியும் உழைப்பாளர்களின் முன்னேற்றமும் அணிதிரட்டப்பட்ட தொழிலாளர்களை சார்ந்தே உள்ளது எனும்பாடத்தை மற்ற கட்சிகளின் தவறுகளிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சி பாடம் கற்க வேண்டும். நாடாளுமன்ற சட்டமன்றங்களில் உழைப்பாளிகளுக்கு நேரடியான பிரதிநிதித்துவத்திற்கான ஒரு முடிவுடன் நீங்கள் வர வேண்டும்’’ என பேசினார்.
ஆங்கிலேய அரசு கடுங்கோபம் கொண்டு சிங்காரவேலர் உள்ளிட்ட தலைவர்களை நசுக்க திட்டம் தீட்டினர். கம்யூனிஸ்டுகளை 1923 மே முதல் கைதும் செய்தனர். 1924 மார்ச் 4ல் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட சிங்காரவேலர் பின் அவரை பெயிலில் விடுவித்தது; ஆனால் வழக்கு தொடர்ந்து நடத்த இறுதியாக அவர் மீதுள்ள வழக்குகளை தொடர்வதா அல்லது நீக்குவதா எனும் முடிவை இந்தியாவுக்கான செயலாளர், இலண்டனில் எடுத்தார். இலண்டனில் இருந்த இந்தியாவுக்கான செயலாளர் கவர்னர் ஜெனரலைவிட உயர்ந்த பதவியிலுள்ளவர். எனவே, உலகத் தலைவராக மாறினார் சிங்காரவேலர்.
1930ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் சிங்காரவேலரும் இதர தலைவர்களும் விடுதலையாயினர். அப்பொழுது சிங்காரவேலருக்கு வயது 70. பிற்கால கம்யூனிஸ்ட் தலைவர்கள் ஏ.எஸ்.கே., பி. சீனிவாசராவ், பி. ராமமூர்த்தி, கே. முருகேசன் ஆகியோருடன் அடிக்கடி விவாதித்ததுண்டு.தமிழகத்தில் மகாகவி பாரதியுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மகாகவி பாரதியின் உயிர் இவரின் மடியில் பிரிந்ததாகவும் கூறப்படுகிறது. திரு.வி.க மற்றும் ஈ.வெ.ரா. பெரியாரின் நல்ல தொடர்பை பெற்றிருந்தார். ஈ.வெ.ரா பெரியார் ரஷ்யா செல்வதற்கு இவரே காரணம் என்றும் கூறப்படுகிறது. பெரியாரின் குடிஅரசு பத்திரிகையை பெரியார் அவர்கள் ரஷ்யா சென்றபோது இவரே முழுப்பொறுப்பில் கவனித்து வந்தார்.பெரியாரின் ஈரோட்டுப்பாதை என்ற அற்புதமான திட்டத்தை தயாரித்து கொடுத்தவர் சிங்காரவேலர் என்பதும் ஈரோட்டில் சுயமரியாதை தோழர்கள் கூட்டத்தில் சிங்காரவேலர் பேசினார் என்பதும் அனைவரும் அறிந்ததே.
இறுதியில் 1945ஆம் ஆண்டு ஜூன் மாதம் 24ஆம் தேதி சென்னை அச்சு தொழிலாளர் மாநாட்டில் பங்கேற்றார். அதில் பேசிய பேச்சே அவரின் இறுதிப்பேச்சு.பக்கவாத நோயினால் பலமாத காலம் படுத்த படுக்கையாயிருந்த சிங்காரவேலர் 1946ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11ஆம் தேதியன்று இயற்கை எய்தினார். இறுதியாய் அவரின் விருப்பப்படி 10ஆயிரம் நூல்கள் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழுவிடம் வழங்கப்பட்டது.
பிப்ரவரி 11 (1946) சிங்காரவேலர் நினைவுநாள்
பிப்ரவரி 18 (1860) சிங்காரவேலர் பிறந்தநாள்

February 17, 2006

புஷ் வரார்... புஷ் வரார்... பராக், பராக், பராக்

என்னங்க ஏதோ கோர்ட்டுக்குள்ள நுழைஞ்ச மாதிரி இருக்குதா? இந்த மாதிரி குரல் கொடுப்பது கோர்டுல மட்டும் இல்லங்க. கலக்டர் ஆபிசுலையும் இப்படித்தான் குரல் கொடுப்பாங்க...


அதுக்கு என்னான்னு கேக்குறீங்க! புரியுது... நம்ம புஷ் இருக்காரே, அதாங்க அமெரிக்க ஜனாதிபதி அவரு இந்தியாவுக்கு அடுத்த மாசம் வரப்போறாராம்... அவர நீங்க வெறுமனே அமெரிக்க ஜனாதிபதின்னு நினைக்காதீங்க... அவரு உலகத்துக்கே ஜனாதிபதி... அதான் அவ்வளவு மரியாதை!
அட அத விடுப்பா, எதுக்கு வரார்ன்னு நீங்க கேக்குறது காதுல விழுது!


நம்ம ஊர்ல நெறைய மிட்டாய் கடைங்க, மளிகை கடைங்க, ஜவுளி கடைங்க, ஹார்டுவேர் கடை, சாப்ட்வேர் கடைங்கல்லாம் இருக்குல்ல... இந்த மாதிரி கடைகல்ல மட்டும் 250 பில்லியன் டாலர் வியாபாரம் நடக்குதாம்! (ஒரு பில்லியன்னா நூறு கோடி. அத அப்படியே டாலர்ல வேற கூட்டனும்...

என்னால முடியாதுப்பா... உங்களுக்கு தெரிந்த பின்னூட்டம் இடுங்க...) சரி விஷயத்துக்கு வருவோம்.

இந்த மாதிரி கடைகள்ளாம் நமக்கு நடத்த தெரியலையாம்! இன்னும் கூட ஹைடெக்காகவும், ஹைஜீக்காகவும் நடத்தனுமாம்... அதுக்காக இந்த வியாபாரத்த எல்லாம் நாங்களே நடத்துறோம். அதுக்கு நீங்க கதவ திறந்த மட்டும் போதுன்னு சொல்லத்தான் வர்றார்...


இன்னிக்கி ஏதோ பேப்பர்ல போட்டுருக்கிறாங்க... வியாபாரன்னா சரி சமமா இருக்கனும்னு புஷ் பேசினதா! அட ஆமாப்பா... இந்த சில்லறை வியாபாரத்த நம்ம மன்மோகன் சிங் இருக்காரே வெறும் 51 சதவீதம் மட்டும்தான் அனுமதிப்பேன்னு சொல்லிட்டார். அதுக்குத்தான் இந்த புஷ் இவ்வளவு எகிறு எகிறுறாரு...


ஹலோ... நீங்க பேசுறது எனக்கு நல்லா கேக்குது. இந்த புஷ்ஷூதான் அவருடைய செல்ல நாய்குட்டிக்கு இந்தியான்னு பேர் வெச்சார்... அததானே சொல்றீங்க...

இல்லையா! வேற என்னப்பா சொன்னீங்க... நம்ம ஊர்ல நினைற பன்னிங்க மேயுது. அதுக்குன்னு எந்த அடையாளமும் இல்லன்னு ரொம்ப வருத்தமாக இருந்தது. அதனால நம்ம பசங்கள்லாம் சேந்துக்குன்னு வெள்ள பன்னி ஒன்ணுக்கு புஷ்ஷூன்னு பேர் வெச்சாங்க... ஓ அதான பார்த்தேன்... நம்ம ஆளு சும்மா இருப்பானா...


அன்னே யார்னே அது! உங்க பக்கத்துல இருந்துக்குன்னு நொய், நொய்ன்னு பேசிக்கின்னு இருக்காரு. புஷ்ஷூ காதுல விழுந்துறப்போவுதுன்னே... நம்மலயும் டெரரி°ட்டுன்னு கைது பன்னிடப்போறாரு...


அது ஒண்ணும் இல்ல... இந்த அமெரிக்காகாரன்தான் பனாமா நாட்டு ஜனாதிபதிய புடிச்சி வெச்சிருக்கான். ஈராக் நாட்டு ஜனாதிபதிய புடிச்சி வெச்சிருக்கான். இது போதாதுன்னு சிரியா, வடகொரியா, கியூபா இதெல்லாம் ரவுடி நாடுன்னு பட்டம் வேற கொடுத்திருக்கான்... இப்ப இந்த பட்டியல்ல ஈரானையும் சேத்துக்கிட்டான்னு சொல்றாருப்பா....


அடப்பாவி இந்த உம்மனா மூஞ்சிக்கு இதெல்லாம்கூடவா தெரியும்! இது மட்டுமா! இன்னும் எவ்வளவோ இருக்குன்னு சொல்றாம்பா...


இன்னாபா அது! ஈரான் - பாகி°தான் - இந்தியா மூணு நாடு வழியா சமையல் எரிவாயு கொண்டார இந்த மூணு நாடுகளும் ஒத்துக்கிச்சாம். அது அமெரிக்காவுக்கு புடிக்கலையாம்! அதுக்கு பதிலா ஆக்கிரமிப்பு ஆப்கானி°தான் கிட்ட இருந்து எரிவாயு வாங்கனுமாம்!....


அடப்பாவி... இப்படியா சொல்றான் புஷ்....


அது கிடக்கட்டும்பா தீவிரங்க பதுங்கிகிறாங்கன்னு சொல்லி பாகி°தான்ல இருக்குற கிராம மக்கள் மேல ராக்கெட் விட்டானாம்மே! அட நீ வேற அமெரிக்காதான் உலக ரவுடியாச்சே! அது பாகி°தானா இருந்தா என்ன? இந்தியாவா இருந்தா என்ன! மொத்ததுல அமெரிக்காவுக்கு பொழப்பு நடக்கனும்...
யோவ்... இன்னிக்கி பேப்பர் பாத்தீயா! இடதுசாரிங்க புஷ் வரும்போது பெரிய அளவுக்கு எதிர்க்கப்போறாங்களாம். ஆர்ப்பாட்டம் - ஊர்வலம் - கருத்தரங்கம்னு நடத்தப்போறாங்களாம்...
பாத்தீயா!


மொத்தத்துல புஷ்ஷூ மூஞ்சில கரிய பூசப்போறங்கன்னு சொல்லு.... நம்ம தமிழ்மணங்கல்லாம் என்னப் பன்னப்போறாங்கன்னு பாப்போம்!

February 15, 2006

இராமதாசு-திருமாவளவன் ஆடு-புலி ஆட்டம்

தமிழக தேர்தல் சூடு பிடிக்க ஆரம்பித்து விட்டது. எந்தக் கூட்டணியில் யார், யார் இருப்பார்கள், எவ்வளவு பங்கு கிடைக்கும் என்று சூடாக விவாதித்துக் கொண்டிருக்கையில், எப்போதும் பரபரப்புட்டும் பா.ம.க. மட்டும் மிக அமைதியாக காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறது.

பா.ம.க.வின் ஒரே பார்முலா யார் அதிக சீட்டு தருவார்களோ அந்த கூட்டணியில்தான் இராமாசு இருப்பார். இன்னொன்று இராமதாசு கூறுவதுபோல் வெற்றிக் கூட்டணியில் இருப்பது. இந்த முறையும் இராமதாசின் பேரமைதி உணர்த்துவது அவருக்கு உரிய பங்கு திமுகவிடம் கிடைத்து விட்டதைத்தான் காட்டுகிறது.

இப்போது நடக்கும் விவாதம் திருமாவளவனை பயன்படுத்தி இன்னும் கூடுதலாக ஏதாவது பெற முடியுமா? என்பதுதான். இராமதாசின் ஒதுக்கீட்டுக்குள் உள் ஒதுக்கீடாக திருமாவுக்கு ஒதுக்கலாம் என்பது இராமதாசின் கணக்கு.

திருமாவளவனோ ஆயிரம்தான் தமிழ் பாதுகாப்பு இயக்கம், அது - இது என்று பேசினாலும் இராமதாசின் உள் ஒதுக்கீட்டில் 5 சீட்டோ 10 சீட்டோ பெறுவதில் தனக்கு ஆதாயம் இல்லை என்பதை நன்கு உணர்ந்துள்ளார். அதனால்தான் இனிமேல் திமுக கூட்டணியில் தனக்காக இராமதாசு வாதாட வேண்டாம் எனக் கூறி விட்டார். திருமாவோ தங்களுக்கு 100க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி வாய்ப்பை தீர்மானிக்கும் வாக்குவங்கி இருப்பதாக கதைத்துக் கொண்டு இருக்கிறார்.

மொத்தத்தில் இந்த ஆட்டத்தில் யார் வெற்றி பெறுவார்கள் என்று பார்த்தால் அது இராமதாசாகத்தான் இருக்க முடியும். ஏற்கெனவே தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சி பா.ம.க. எனக் கூறி வரும் இராமதாசு, தற்போது திருமாவளவனை எப்படியாவது தன்னுடைய பங்காளியாக மாற்றிக் கொள்வதன் மூலம், தலித் வாக்கு வங்கியை அபகரித்து பா.ம.க.வின் வாக்கு சதவீதத்தை அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதை நன்கு உணர்ந்துள்ளார் இராமதாசு.
இராமதாசைப் பொறுத்தவரை இந்த தேர்தலை விட, அடுத்து வரக்கூடிய தேர்தலில் தன்னை முதன்மையான கட்சியாக நிலை நிறுத்திக் கொள்வதுதான். இதற்காகத்தான் அவர் மிக சாதூரியமாக திருமாவுடன் கூட்டணி என்று கைகோர்த்து தலித் வாக்கு வங்கியை சுவாகா செய்யத் துடிக்கிறார்.

தமிழக கிராமப்புறத்தில் உள்ள தீண்டாமை வன் கொடுமைக்கு எதிராக திருமா - இராமாசு ஏதாவது போராட்டம் நடத்தியுள்ளார்களா? இல்லை! அல்லது தலித் மக்களுக்கு நிலச் சீர்திருத்தத்தின் மூலம் விவசாய நிலங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்று ஏதாவது இயக்கம் நடத்தியுள்ளாரா இராமதாசு? அதுவும் இல்லை. இவர்களது கூட்டு கொள்கை அடிப்படையானதா? என்றால் நிச்சயம் இல்லை பழைய காலாவதியாகிப்போன தமிழ் கோஷம் தமிழக மக்கள் பிரச்சினைகளை திசை திருப்புவதற்கே உதவிடும்! அதுதான் இவர்களது தேவையும் கூட... மொத்தத்தில் இந்த ஆடு - புலி ஆட்டத்தில் வெல்லப்போவது யானைதான்! நரி செத்தாலும் கண் கோழிக் கூண்டின் மீது என்பது தமிழக பழமொழி. அதுபோலத்தான் தலித் வாக்கு வங்கி மீது கண் வைத்திருக்கிறார் இராமதாசு! இது தலித் மக்களுக்கு பயனளிக்குமா?

February 13, 2006

புது வீடு! சிறுகதை

ஒருவாரமாக வாடகைக்கு வீடு தேடி அலைந்த வித்யாவின் முகத்தில் மகிழ்ச்சி ரேகை ஓடியது. எதிர்பார்த்த மாதிரியே வீடு கிடைத்தது. வாடகை கொஞ்சம் அதிகம்தான் ரூ. 1100/-, அட்வான்° ரூ. 5000/-.

எப்படியோ இனி கொஞ்ச நாளைக்கு நிம்மதியா இருக்கலாம்! என்ற நினைப்புடன் தன் வேலைகளைத் தொடர்ந்தாள் வித்யா.

இரண்டு பெண் குழந்தைகளையும், ஒரு பையனையும் பெற்ற வித்தியாவின் வாழ்க்கையில் எத்தனையோ சூறாவளிகள் வந்து போகின்றன. உதவாக்கரையாகிப்போன தன் வீட்டுக்காரரையும் சேர்த்து குடும்பத்தை தள்ளவேண்டிய பாரம் அவள் மீது.

வீடு காலி செய்வது என்பது எல்லாருக்கும் பெரிய காரியம்! ஆனால் வித்தியாவுக்கு அது ஒண்ணும் அவ்வளவுப் பெரிய விஷயம் அல்ல. சின்ன மீன் வண்டிய பிடிச்சா போதும் மொத்த சாமானையும் ஏற்றி விடலாம். என்ன இரண்டு பிளா°டிக் குடம், நாலஞ்சு தட்டு முட்டு சாமான்கள், படுப்பதற்கு கட்டில் இதுமட்டும்தான் சொல்லிக்
கொள்வது போல ஏதோ ஒரு பொருளா இருக்கு.

பிள்ளைகளின் கவனத்தை திசை திருப்ப ஒரு கிளி, இரண்டு கோழி குஞ்சு... மூன்று பிள்ளைகளும் தங்களுடைய விளையாட்ட இத சுத்தியே அமைச்சுப்பாங்கன்ற நம்பிக்கை!

புது வீட்டுக்கு காலையிலேயே குடித்தனம் வந்தாச்சு! நல்லா வசதியா இருக்கு! நல்ல காற்றோட்டம்.. தவிர மேல இருக்கிற வீட்டுக்காரங்க கீழேவே வரமாட்டாங்க... இது போதாதா...எப்படியோ வீட்டுல இருக்கிற பொருளை எல்லாம் ஒரு வழியாக ஏறக்கட்றதுக்கே மணி 11 ஆயிடுச்சி....

ஐய்யோ பேபியும், சுந்தரியும் எனக்காக வேற அங்க வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாங்க... செல் போன் சிணுங்காமல் இருப்பதால் கொஞ்சம் ரிலாக்° ஆகி விட்டு குளிக்கச் சென்றாள் வித்தியா! காலையில டிபன் கூட இன்னும் பண்ணல; பசங்களுக்கு மட்டும் டிபன் வாங்கிக் கொடுத்தாச்சு...

நல்லா மேட்சாக டிர° பண்ணிக்கிட்டு, பசங்க கிட்டு சொல்லிட்டு வேலைக்கு கிளம்பினாள் வித்தியா!வழக்கமாக 10 மணிக்கு வர்ற வித்யா அன்று 8.00 மணிக்கே வீட்டுக்கு வந்துட்டாள். புது வீட்டுக்காரங்க எப்படியிருப்பாங்களோ என்ற ஒரு அச்சம்தான். ச்ச... என்னா வாழ்க்கை இது... எதக் கண்டாலும் பயப்பட வேண்டியிருக்கு... என மனதுக்குள் முனு முணுத்துக் கொண்டே, இரவு வீட்டுக் காரர் வாங்கி வந்த டிபனை எல்லாரும் ஒண்ணா உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.

வேலை செஞ்ச அந்த களைப்புலேயே சீக்கிமே தூங்கி விட்டாள் வித்யா. பாத்ரூம் போய்டு தூங்கலாம் என்று வெளியே வந்த வித்யாவின் கணவருக்கு அந்த செய்தி சுனாமியாய் காத்திருந்தது!எப்போ வெளியே வருவாங்கன்ணு காத்திருந்த வீட்டு உரிமையாளர், வித்தியாவின் கணவன் அண்ணாவை பார்த்து நீங்க இன்னும் 10 நாள்ல வீட்ட காலி பண்ணுங்கன்னு சொன்னார். அவருக்கு ஒன்றும் புரியவில்லை!

நாங்க லோன் அப்ளே பண்ணியிருந்தோம். லோன் சேன்ஷன் ஆயிடுச்சு... மேல வீடு கட்டப்போறோம்! எனவே நீங்கள் இன்னும் 10 நாள்ல வீட்ட காலிப்பண்ணுங்ன்னு உறுதியா கூறிட்டார் வீட்டு உரிமையாளர்.

அண்ணா தூங்கிக் கொண்டிருந்த வித்யாவிடம் இந்த செய்திய சொன்னதும், தூக்கம் பறந்து போனது வித்யாவுக்கு.

வித்யாவுக்கு ஒரே குழப்பம் இன்னைக்கி காலையில தான் வந்தோம். எதிர்பாத்த மாதிரி எல்லாம் நல்லாத்தான் இருந்தது. ஏன் வீட்ட காலிபண்ணச் சொள்றாங்க... ஒரு வேளை நம்ம விஷயம் தெரிஞ்சிடுச்சோ... என்ற குழப்பத்தில், மன இறுக்கத்துடன் மூளையை கசக்கிக் கொண்டிருந்த வித்தியா அப்படியே தூங்கிப் போனாள்.

வீட்டு உரிமையாளர் எப்படியோ இந்த பேமலிய சாதூரியமா வீட்ட காலி பண்ணச் சொல்லிட்டோம். ச்சே... ச்சே... என்ன முட்டாள்தனம் செஞ்சுட்டோம். எப்பவும் உஷாராக இருப்போம்... இந்த தடவை... என்று சலித்துக் கொண்டே சாப்பிட உட்கார்ந்தார்.

வீட்டு உரிமையாளரின் மனைவி உஷாவும் அந்த விஷயத்தை கேள்விப்பட்டதில் இருந்து ஏதோ சித்தபிரம்மை பிடித்தவள் போல் இருந்தாள், இந்த விஷயத்தை தன் கணவரிடம் சொன்ன பின்னரே ஓரளவு சுயநினைவுக்கு வந்தவள் போலானாள்.

எனக்கு அப்பவே இந்த பேமிலி பத்தி ஒரே டவுட் என்றான் கணவன்!உஷா அதற்கு, நான் அப்பவே சொன்னான் யார்கிட்டயாவது விசாரிங்ன்னு... கேட்டீங்களா...அதுவும் நம்ம வீட்ல போய் இந்த மாதிரி ஒரு பேமிலி வைச்சிக்கினு இருந்தா என்ன சொல்வாங்க!எனக்கு அப்பவே சந்தேகம்! என்று உஷா ஆரம்பிக்க..என்ன?

காலையிலே அவங்க கொண்டுட்டு வந்த பொருட்களை பாத்ததுமே திக் என்றது! ஒண்ணும் புரியல! அதனாலதான் நான் அந்த தயிர்காரம்மா கிட்ட கேட்டேன் இந்த பேமிலி பத்தி, அவுங்க புட்டு, புட்டு வெச்சுட்டாங்க.

வித்யாவோட வேலையே காலையில போனா நைட் 10 மணிக்கு வர்றதாம்... அது மட்டுமில்லாம இரவு 12 மணிக்கு மேல நிறைய ஆம்பளைங்க வருவாங்களாம்... ஏற்கனவே குடியிருந்த வீட்டில், அவங்கள காலி பண்ண வக்கிறதுக்கே படாத பாடு பட்டாங்களாம்! இதுல வேற இரண்டு பேரும் லவ் மேரேஜாம். வித்யா வீட்டுக்காரன் வேலைக்கே போக மாட்டானாம்... இன்னும் என்னென்னவோ சொன்னங்க...

ஆமா இப்படியொரு கையாலாகத வீட்டுக்காரன் இருந்தா, வேற என்னப் பண்ணுவா மூணு புள்ளைய வேற காப்பாத்துனும், வித்யா என்ன எம்.ஏ., பி.ஏ.வா படிச்சிருக்கா? வேலைக்கு போனவுடன கைநிறைய சம்பளம் கொடுக்க! பி.இ. படிச்சவனுங்களே 1500 ரூபாய்தான் சம்பளம் வாங்குறானுங்க. எக்°போர்ட்டுல வேலைக்கு போய் மாசமெல்லாம் மாடா ஒழச்சாலும் 2000 ரூபாய் சம்பாதிக்க முடியாது! இதுல வீட்டு வாடகைக் கொடுத்து விட்டு, மூணு பேரு சாப்புடனும்னா முடியுமா? என்னய்யா சமூகம் இதுன்னு புலம்பி விட்டு கையை கழுவினார் உஷாவின் கணவர்.

February 10, 2006

சீண்டப்படாத கட்சி பா.ஜ.க.

ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது, இலை என்ன? என்று கேட்பார்கள். அதுபோல இன்றைக்கு தமிழக பா.ஜ.க.வின் நிலை உள்ளது. தாழ்த்தப்பட்ட மக்களுக்காக ஓயாது குரல் கொடுத்து போராடி வரும் திருமாவளவனின் - விடுதலை சிறுத்தைகளுக்கும், கிருஷ்ணசாமியின் - புதிய தமிழகத்துக்கும் இன்னும் கூட இரண்டு பெரிய கூட்டணியின் கதவுகள் திறக்கப்படவில்லை. இருவமே வழிமேல் விழி வைத்து காத்திருக்கிறார்கள்.

தேர்தல் நெருங்கும் தருவாயில்,இந்த இரண்டு கட்சிகளும் ஏதாவது ஒரு கூட்டணியில் நிச்சயம் இடம் பெறும். ஏனென்றால் அதன் வாக்கு வங்கி ஒரு காரணம். தலித் அரசியல் இன்றைக்கு முன்னுக்கு வந்துள்ளது மற்றொரு காரணம்.

தேர்தல் என்றாலே கொடி வைத்திருப்பவர்கள் எல்லாரையும் கூட்டணியில் சேர்த்துக் கொள்ளும் காலம் இது. தேர்தலுக்கு தேர்தல் புதுக்கட்சிகள் முளைப்பதும் அது யாருடனாவது கூட்டு சேர்ந்தே, ஆதரவு தெரிவித்தோ பிழைப்பை நடத்தும். ஆனால்....

பா.ஜ.க.வின் அரசியல் நிலை அவராக முன்வந்து நாங்கள் விஜயகாந்துடன் கூட்டணி வைப்போம் என்று உரக்கக் கூவினாலும், விஜயகாந்துக்கூட சீண்டாத கட்சியாக பா.ஜ.க. மாறிவிட்டது.
அம்மா திமுகவோ பா.ஜ.க.வின் பெயரை உச்சரிக்கக்கூட தயாரில்லை. அதே நிலைதான் திமுக கூட்டணியிலும்.

பா.ஜ.க.வின் பெருந் தலைவர்கள்? நாங்கள் 234 தொகுதிகளிலும் தனியாக நிற்போம் என்று மார்தூக்கினாலும், வாக்காளர்கள் இவர்களைப் பற்றி ஏதாவது கண்டுக் கொள்வார்களா என்பது தெரியவில்லை?

நீலச் சாயம் வெளுத்துப் போச்சு டும்... டும்... டும்... என்று சொல்வார்களே! அது போல பா.ஜ.க.வின் மதவெறிச் சாயம் வெளுத்து நாளிப்போனதே இப்படி தமிழக மக்கள் அரசியல் ரீதியாக அம்போவென விட்டு விட்டதற்கு.

பா.ஜ.க. மத்திய ஆட்சியில் இருந்தபோது அய்யய்யோ இவர்களது வாய்ஜாலத்தை சொல்லவே வேண்டாம். இந்திய அரசியலே வாஜ்பாய் தலையில் நடைபெறுவதாக ஒரு மதப்பு இருந்தது. அந்த மதப்பு எல்லாம் கடந்த பாராளுமன்ற தேர்தலில் காற்றில் பறந்து போனது, போதாக்குறைக்கு பா.ஜ.க.வின் கோஷ்டி மோதல், சங் பரிவாரமே பா.ஜ.க.வை வெறுக்கும் சூழ்நிலை, மேலும் பா.ஜ.க.வில் ஜோசி போன்ற செக்° குருக்கள் பெருகி விட்டது. இது தவிர பாராளுமன்றத்தையே மதிக்காத அடாவடி போக்கு. இவ்வளவு ஏன்? மத்திய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரையே மதிக்காத ஒரே கட்சி இந்தியாவில் இருக்கிறது என்றால் அது பா.ஜ.க.தான்., புறக்கதவு வழியாக மன்மோகன் சிங்கை சந்தித்து தங்களது மாற்றுக் கருத்தை தெரிவிக்க முனைந்தபோது, நமது இந்திய பிரதமர் அதை வாங்க மறுத்தது சாட்டையடி....

இதைவிட உச்சம் குஜராத்தில் தோண்டத் தோண்டக் கிடைக்கும் சிறுபான்மை மக்களின் எலும்புகள்... 3000க்கும் மேற்பட்டவர்களை கதறக், கதறக் கற்பழித்து, கொலை செய்த மகா பாதகர்களை தமிழக மக்கள் ஏற்பார்களா? நிச்சயம் ஏற்க மாட்டார்கள் என்பதுதான் தமிழகத்தில் மக்களாகவோ பா.ஜ.க.வை அரசியல் துறவறம் போகச் செய்து விட்டனர். இந்த துறவறம் மட்டும் போதுமா? எதிர்காலத்தில் பா.ஜ.க. என்ற அடிச்சுவடே இருக்குமா? என்றுத் தெரியவில்லை. பொறுத்திருந்து பார்ப்போம்.

February 09, 2006

பரித்ரானா: புதிய கட்சி - புது மாதிரியான கட்சி

அரசியல் என்றாலே சாக்கடை, எல்லாம் ஒரே குட்டையில் விழுந்த மட்டைகள் என்று நம் வாய்கள் எப்போதும் முனுமுனுத்துக் கொண்டே இருக்கும். அரசியல் கட்சியில் இருப்பவர்கள் எல்லாம் ஊழல் பேர்வழிகள், பொறுக்கிகள், அடிதடி பேர்வழிகள் உள்ள இடம். எனவே படித்தவர்கள் நாம் அரசியலில் ஈடுபடலாமா? ஐய்யய்யோ! கூடவே கூடாது. நமக்கு ஏங்க வீண் வம்பெல்லாம் என்று புலம்பி வருகிறோம்.

இதோ! பரித்ரானா வழிகாட்டுகிறது.

நம் இந்திய நாட்டில் ஆயிரக்கணக்கான அரசியல் கட்சிகளுக்கு இடையே புதிதாக தோன்றியிருக்கிறது பரித்ரானா. இந்த அரசியல் கட்சியை தோற்றுவித்தவர்கள் யார் தெரியுமா? நம்முடைய இந்திய நாட்டில் உயர் படிப்பு என்றாலே ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். என்று சொல்கிறோமே! அங்கே படித்த இளைஞர்கள் ஐந்து பேர் கூட்டாக இணைந்து இந்த அரசியல் கட்சியை தோற்று வித்துள்ளார்கள். பரித்ரானாவுக்கு வாழ்த்துக்கள்! 21ஆம் நூற்றாண்டுக்கான இந்திய அரசியல் கட்சி என்று என்று குறிப்பிட்டுள்ளனர். வளரட்டும் புதிய அரசியல் கட்சி!! செல்லட்டும் ஏழை மக்களிடம்... இது நமது முழக்கம்.

சரி! பரித்ரானாவின் அகில இந்திய தலைவர் டான்மே ராஜ்புரோகித், பாம்பே ஐ.ஐ.டியில் ஏரோபிக் துறையில் பி.டெக் பட்டம் பெற்றவர். இது தவிர அமெரிக்காவில் அதே ஏரோபிக் துறையில் எம்.எ°. பட்டமும், பொருளாதாரத்தில் எம்.எ°. பட்டமும் பெற்றுள்ளார். (ஐய்யோ... மலைக்காதிங்க...) இக்கட்சியின் துணை தலைவர் அஜித் அசுவால்யன் சுக்லா இவரும் பாம்பே ஐ.ஐ.டியில் எம்.டெக் பட்டம் பெற்றுள்ளார். இவர்களைத் தவிர மற்றவர்களும் ஐ.ஐ.டியில் பட்டம் பெற்ற இளைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய சூழலில் இம்மாணவர்களின் முயற்சி வரவேற்கத்தக்கது. இம்முயற்சி வெற்றி பெறுமா? இவர்களுக்கு பின்னால் யார் இருக்கிறார்கள்? என்பது போன்ற ஆராய்ச்சி இப்போது தேவையில்லை என்று நினைக்கிறேன்.

இது போன்ற எழுச்சி நம்முடைய இந்திய நாட்டில் சுதந்திரப் போராட்டக் காலத்தில்தான் நடைபெற்றது. பிரிட்டன் சென்று வாலிபர்கள்தான் சுதந்திரப் போராட்டத்தின் அடிவேறாக திகழ்ந்தார்கள். இன்றைக்கும் இந்தியாவில் ஊழலற்ற தலைவராக திகழும் ஜோதிபாசு ஐ.சி.எ°. பட்டம் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்னும் பல தலைவர்கள் இருக்கிறார்கள்.

அரசியல் என்பது உலகின் மிக முக்கியமான துறை இத்துறையில் படித்தவர்களும் - பாமரர்களும் நிச்சயம் பங்கேற்க வேண்டும். வேடிக்கைப் பார்ப்பவராகவோ, வெறும் ஓட்டளிப்பவராகவோ, வாயடிப்பவராக இருப்பதை விட பங்கேற்பதே மிகச் சிறந்தது.

மக்களுக்கு தேவையான சிறந்த அரசியல் கட்சி எதுவோ! அது நிச்சயம் வரலாற்றில் இடம் பெறும். உலகையே குலுக்கி எடுத்த இட்லரின் இடமும், அவரது தத்துவங்களும் இன்றைக்கு புதைக்கப்பட்டு விட்டது. எனவே, தகுதியுள்ளது வெற்றி பெறும்.

வாழ்த்துக்கள் பரித்ரானா!

ஆதிமனிதன் இறத்தது எவ்வாறு

ஆதிகால மனிதன் எவ்வாறு இறந்தான்?பொதுவாக மனிதர்கள் தான் வனவிலங்குகளை வேட்டையாடிக் கொன்றார்கள் என்ற நம்பிக்கை நிலவி வந்தது. ஆனால் 20 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்த குரங்குமனிதன், பறவைகளால் வேட்டையாடிக் கொல்லப்பட்டான் என்பதை நிரூபித்துள்ளார் லீ.ருபர்ஜர் என்ற ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தின் தொல்படிவ மானிடவியல் அறிஞர்.

டவுங் குழந்தை, எனப்படும் மனித மூதாதையரின் தொல் படிவுகள் 1924யில் கண்டுபிடிக்கப்பட்டதில் இருந்தே அந்த மனிதன் எவ்வாறு இறந்திருப்பான் என்ற விவாதம் நடை பெற்றுவந்தது. ஒரு புலியோ, ஈட்டி போன்ற கூர்மையான பற்களை உடைய பூனை போன்ற விலங்கோதான் ஆதிமனிதனைக் கொன்றிருக்க வேண்டும் என்று ஆய்வாளர்கள் யூசித்து வந்தனர். ஆனால், ஆதிமனிதனை புலி அடித்துக்கொல்லவில்லை. ஒரு பெரிய பறவை தான். வேட்டையாடிக் கொன்றது என்று பத்தாண்டுகளுக்கு முன்பு லீ பெர்ஜர், தமது சக ஆராய்ச்சியாளர் ரோன் கிளர்க்குடன் சேர்ந்து நிரூபித்தார்.
ஆதிமனிதனின் புதைபடிவுகள் கிடைத்த இடத்தில் இருந்த சிறிய குரங்குகளின் புதைபடிவுகளில் இருந்து அவை பறவையைல் தான் கொல்லப்பட்டன என்பது நிரூபிக்கப்பட்டது. ஆகவே குரங்கு போன்று இருந்த ஆதிமனிதனும் பறவையால் தான் கொல்லப்பட்டிருக்க வேண்டும் என்ற வாதத்தை அவர்கள் முன்வைத்தனர். ஆனால் பறவை தாக்கிதான் ஆதிமனிதன் இறந்தான் என்பதை, அவனுடைய மண்டை ஓட்டில் ஏற்பட்ட சேதம் மூலம் இவர்களால் நிரூபிக்க முடியாமல் இருந்தது. ஐந்து மாதங்களுக்கு முன்பு, மேற்கு ஆப்பிரிக்காவில் காணப்படும் கழுகுகள், ஆதிமனிதனை வேட்டையாடிய பறவை போல் இருப்பதை எடுத்துக்காட்டும் ஓஹேயோ அரசினர் பலகலைக்கழகத்தின் ஆராய்ச்சிக் கட்டுரை ஒன்றை லீ பெர்ஜர் படித்தார்.
கழுகுகள் மேலே இருந்து கீழ்நோக்கிப் பாய்ந்து, தங்களது கூரிய கால்விரல்களால் குரங்குகளின் மண்டை ஓட்டை குத்திக்கிழிப்பதாக கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆயிரக்கணக்கான குரங்குகளின் மண்டை ஓடுகளை ஆராய்ந்ததில், கண் துளைளுக்குப் பின்னால், ஒரே மாதிரியான துளைகளும், வெட்டுக்களும் தெரிந்தன. இதைப்படித்த பெர்ஜர் டவுங் குழந்தையின் மண்டை ஓட்டுடன் ஒப்பிட்டார். அதிலும் கண்துளைகளுக்குப் பின்னால் வெட்டுக்காயம் ஏற்பட்ட சேதம் தெரிந்தது. ஆகவே, ஆதிமனிதன் வானில் இருந்தும் வேட்டையாடிக் கொல்லப்பட்டது.
நன்றி :


February 08, 2006

நோபல் மனிதன் : ஹெரால்டு பிண்டர்

எழுத்தாளனுக்கு எதற்கு அரசியல் என்று வினா எழுப்பும் நிலை இப்போதும் நீடிக்கிறது. அரசியலில் ஈடுபட்டு ஒரு கோட்பாட்டுச் சட்டத்துக்குள் வந்து விட்டால் கருத்து சுதந்திரம் பறிபோய் விடும் என்று சொல்லிக் கொண்டு பறந்து சென்று ரெக்கை ஒடிந்து விழுந்தவர்களும் உண்டு.
ஆனால் அரை நூற்றாண்டு காலமாய் யுத்த எதிர்ப்பு, மனித நேயம், எகாதிபத்திய எதிர்ப்பு என்கிற உலகப் பொதுமையான அரசியல் கோட்பாட்டில் நின்று கொண்டு தொய்வின்றி இயங்க முடியும் என்று நிரூபித்திருக்கிறார் ஒரு இலக்கியவாதி.
தன்னிடம் உள்ள ராணுவ வல்லாண்மையைக் கொண்டு இளைத்தவர்களைத் தாக்கி அழிக்கும் அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகளை அவர் சமரசமின்றி சாடுகிறார். அமெரிக்க அதிபர் ஜார்ஜ்புஷ்ஷையும் பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேரையும் யுத்தக் குற்றவாளிகளாக்கி விசாரிக்க வேண்டும் என்று சொல்கிற நெஞ்சழுத்தம் கொண்டவர் அவர். அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்த போதும் நாம் சோம்ஸ்கியையும், ஆர்தர் மில்லரையும் அமெரிக்க மக்களின் மனசாட்சிகள் என்று அடையாளம் காட்டுகிறார். தனது கருத்துக்களைத் திரித்தும் தவறாகவும் வெளியிடும் பிரிட்டிஷ் நாளேடுகளான ‘தி இன்டி பென்டன்ட்’, ‘தி கார்டியன்’ ஆகிய ஏடுகள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார். ‘என் வாயை எந்த சக்தியாலும் அடைக்க முடியாது’ என உறுதியாகச் சொல்கிறார்.

கருத்தில் தெளிவு, சொல்லில் உறுதி, செயலில் நேர்மை என்ற உயரிய பண்புகள் தொடர்வதால் பாராட்டுக்கள் இவரைத் தேடி வருகின்றன. 1957ஆம் ஆண்டு எழுதத் தொடங்கிய இவருக்கு 1962ம் ஆண்டிலிருந்தே பரிசுகள் குவியத் தொடங்கின. இதற்கெல்லாம் உச்சமாக சென்ற ஆண்டு இலக்கியத்துக்கான நோபல் பரிசை இவர் பெற்றிருக்கிறார். இவர்தான் ஹெரால்ட் பிண்டர்.
லண்டனின் கீழ்க் கோடியில் உள்ள ஹாக்னியில் 1930ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ம் தேதி தையல் தொழிலாளர் ஒருவரின் மகனாகப் பிறந்தார் ஹெரால்ட் பிண்டர். இவரின் பெற்றோர்கள் இருவரும் யூதர்கள். அப்பா மிகவும் கண்டிப்பானவர் என்பதால், அம்மாவின் செல்லமாகவே வளர்ந்தார். இவரது இளம் வயதில் இரண்டாம் உலகப்போர் வெடித்ததால் ஹாக்னியிலிருந்து வெளியேறி கார்ன்வால் என்ற இடத்துக்குக் குடும்பமே சென்றது. ‘‘அப்போது பொழிந்த குண்டு மழையின் சோகம் என்னை விட்டு அகலவே இல்லை” என்று பிற்காலத்தில் அவர் நினைவு கூர்ந்தார். ஆழமாய்ப் பதிந்துபோன இந்த எண்ணங்களே அவரை மிகத் தீவிர யுத்த எதிர்ப்பாளராக ஆக்கியது போலும்!
பிண்டர் தனது பள்ளிப் பருவத்தில் ஆங்கில இலக்கியத்தில் குறிப்பாகக் கவிதைத்துறையில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். ஃப்ரான்ஸ் காஃப்கா, எர்னஸ்ட் ஹெமிங்வே ஆகியோரின் நூல்களையும் படித்தார்.
பிரிட்டிஷ் குடிமக்கள் அனைவரும் கட்டாய ராணுவ சேவை செய்ய வேண்டும் என்பதை ஏற்க மறுத்ததால் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். அந்த நீதிபதி இரக்க குணம் கொண்டவர் என்பதால் அபராதம் விதித்ததோடு விட்டு விட்டார். இந்த அனுபவம் இவருக்கு 1949 இல் ஏற்பட்டது.
1950 ஆம் ஆண்டு ‘கவிதை’ இதழில் இவரது கவிதைகள் வெளிவந்தன. ஹெரொல்ட் பிண்டா என்ற பெயரில் இவர் கவிதைகள் எழுதினார். பிபிசி வானொலியில் பகுதிநேர நடிகராகவும் வேலை செய்தார். நாடகப்பள்ளியில் பயின்று 1951, 1952 ஆகிய ஆண்டுகளில் ஷேக்ஸ்பியர் நாடகங்களை நடத்தும் குழுவுடன் அயர்லாந்தில் பயணம் செய்தார்.
பல்வேறு நாடகக் குழுக்களுடன் இணைந்து பணியாற்றிய நான்கு ஆண்டு அனுபவத்துக்குப்பின் 1957ஆம் ஆண்டு “தி ரூம்” என்ற நாடகத்தை இவரே பிரிஸ்டன் பல்கலைக் கழகத்தின் நாடகத்துறைக்காக எழுதினார். நான்கே நாட்களில் இதனை அவர் எழுதி முடித்தார் என்பது இதன் சிறப்பம்சம். பிபிசி வானொலியில் நடித்துக் கொண்டிருந்த இவர் 1959ஆம் ஆண்டில் முதலாவதாக ‘ ஏ ஸ்லைட் ஏக்’ என்ற வானொலி நாடகத்தை எழுதினார். இப்படியாக இவர் 29 மேடை நாடகங் களையும் இதே எண்ணிக் கையிலான வானொலி நாடகங்களையும் எழுதிக்குவித்தார்.
நாடகத் துறையில் நாட்டம் கொண்ட இவருக்கு விவியன் மெர்ச்சென்ட் என்ற நடிகையே வாழ்க்கைத் துணைவியானார். 1980ஆம் ஆண்டு இவர் விவியனை விவாகரத்து செய்தார். பின்னர் அன்டோனியா ஃபிரேசரைத் திருமணம் செய்து கொண்டார். விவாகரத்து காரணமாக எழுத்தாளரும், இசையமைப்பாளருமான தனது மகன் டேனியலை, பிண்டர் பிரிய நேர்ந்தது.
இப்படி நாடக இலக்கியத்துறையில் ஏற்றம் கொண்டிருந்த பிண்டர் இன்று புற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். 2002ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இவருக்குப் புற்று நோய் இருப்பது கண்டறியப்பட்டது. இதன்பிறகும் இவரது படைப்புத் பணி நிற்கவில்லை. 2002ம் ஆண்டு ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுத்த கொடூரத்தை ‘போர்' என்ற கவிதைத் தொகுப்பில் பதிவு செய்தார்.
ஈராக் மீது போர் தொடுத்ததற்கு எதிராக உலகம் தழுவிய விவாதம் ஒன்று 2002 நவம்பரில் நடந்தது. இதில் கலந்து கொண்ட பிண்டர் கூறியது அனைத்து மக்களையும் கவர்ந்தது. “புஷ் சொன்னார்: “உலகத்தின் மோசமான ஆயுதங்கள் உலகத்தின் மோசமான தலைவர்களின் கைகளில் இருக்க நாம் அனுமதிக்க முடியாது” நான் சொல்கிறேன்: “இது மிகவும் சரியானது. ஒரு முறை கண்ணாடி முன் நின்று பாருங்கள்; அது நீங்கள்தான்”
ஈராக் மீதான யுத்தம் பற்றி இவர் வானொலிக்கு அளித்த பேட்டியொன்றும் மிகவும் பிரபலமானது. “நமது (பிரிட்டிஷ்) நாட்டுப் பிரதமர் ஒரு சிறந்த கிருஸ்துவர் என்று சொல்லிக் கொள்கிறார். ஆனால் அவர் ஈராக் மீது குண்டு பொழிந்து-திட்டமிட்டு-ஆயிரக்கணக்கான அப்பாவி மக்களைக் கொல்கிறார். இப்படி நான் சொல்லக் காரணம் இவர்கள் போடும் குண்டுகள் சதாம் உசேனைக் கொல்லப் போவதில்லை. அவர் தப்பித்துக் கொள்ள அவருக்கே உரித்தான பல வழிகள் இருக்கும். இவர்கள் கொல்லப் போவது ஏதுமறியாத மக்களைத்தானே” என்ற இவரது வாதம் சாதாரண மக்களையும் கவர்ந்தது; சிந்திக்க வைத்தது.
அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது வெறுப்பு கொண்டிருந்தாலும் அந்நாட்டு மக்களிடம் அவர் நேசம் வைத்திருந்தார். ஆனால் அமெரிக்கர்கள் ஒருவேளை தன்னை வெறுப்பார்களோ என்ற ஐயமும் அவருக்கு இருந்தது. இது பற்றி ஒரு சம்பவத்தையும் இவர் தனது பேட்டியில் நினைவு கூர்கிறார் “ 1986 ஆம் ஆண்டு நான் நிகரகுவாவில் இருந்தேன். பிறகு அங்கிருந்து திரும்பி வரும் போது மியாமியில் ஒரு நாள் இரவு தங்க வேண்டியதாயிற்று. இங்குள்ள விமான நிலையத்தில் பாஸ்போர்ட், இமிகிரேஷன் கவுண்டரில் ஒரு பருமனான அமெரிக்கப் பெண் அமர்ந்திருந்தார். இவரை அணுகும் போது “நிகர குவாவில் என்ன செய்தீர்கள்" என்று கேட்பார். “உங்கள் வேலையை பாருங்கள்” என்று பதில் சொல்ல வேண்டும் என்று எண்ணியிருந்தேன். ஆனால் உண்மையில் அவரது மேசையருகே சென்ற போது பாஸ்போர்ட்டைப் பார்த்த அந்தப் பெண் “ நீங்கள்தான் ஹெரால்ட் பிண்டரா?” என்றார். திகைத்துப் போன நான் “ஆமாம்” என்றேன். “அமெரிக்கா உங்களை வரவேற்கிறது” என்றார் அந்தப் பெண். இது அமெரிக்காவின் இன்னொரு பக்கம் என்று தெரிந்து கொண்டேன்.
1973 ஆம் ஆண்டு சிலி நாட்டில் அலெண்டே சுட்டுக் கொல்லப்பட்ட பின் மனித உரிமைகள் பாதுகாப்பில் தீவிர கவனம் செலுத்தினார். செர்பியாவின் ஸ்லோபதான் மிலோசெவிச் ஐநா நடுவர் மன்றத்தால் கைது செய்யப்பட்ட போது அதற்குத் தூண்டுதலாக இருந்த நாடோ (NATO)வை எதிர்த்துக் குரல் கொடுத்தார். குற்றவாளிகளின் நீதி மன்றத்திற்கு இன்னொரு குற்றவாளியை விசாரிக்க அருகதை இல்லையென்று முழங்கினார். இது வெறும் முழக்கமாக நிற்காமல் 2001ஆம் ஆண்டு மிலோசெவிச் பாதுகாப்புக்கான சர்வதேசக் குழுவிலும் தன்னை இணைத்துக் கொண்டார்.
புற்று நோய் பாதிப்பு காரணமாகவே ஹெரால்ட் பிண்டர் நோபல் பரிசைப் பெற்றுக் கொள்ள நேரில் செல்லவில்லை. தனக்கு ஏற்பட்டிருக்கும் கடுமையான நோயையும் அவர் லகுவாக எடுத்துக் கொண்டு நகைச் சுவையுடன் பேசுவார்
“எனது கட்டியின் மரணத்தைநான் காண்பது அவசியம்அந்தக் கட்டியோமரணிக்க மறந்து விட்டதுஆனால் அதற்குப் பதிலாகஎன்னைக் கொல்ல திட்டமிடுகிறது”
என்று நோயின் தன்மையையே கவிதையாக்கினார். இப்படி நோய்வரும் போது உங்களுக்கு புத்திசாலித்தமான மருத்துவரும் புத்திசாலித்தனமான மனைவியும் கிடைக்க வேண்டும். நல்ல வேளையாக எனக்கு இருவருமே இப்படி அமைந்துவிட்டார்கள் என்று கூறி சிரிக்கிறார் பிண்டர்.
மக்களுக்குப் போரால் மரணம் நேரக் கூடாது என்று ஆண்டுகள் பலவாய் குரல் கொடுக்கும் 75 வயதான ஹெரால்ட் பிண்டர் தற்போது மரணத்தோடு போராடிக் கொண்டிருக்கிறார். 'மரணம்' என்ற தலைப்பில் கவிதையையும் சென்ற ஆண்டு எழுதியிருக்கும் இவர், இலக்கியம் படைப்பதை நிறுத்திக் கொள்வதாக 2005 பிப்ரவரியில் ஒரு பேட்டியில் அறிவித்தார். "29 நாடகங்கள் எழுதியிருக்கிறேன். போதாதா?" என்பது இவரின் கேள்வி. இதற்குப் பொருள் ஓய்வோ மரண பயமோ அல்ல. இனிமேல் தனது ஆற்றலை அரசியலுக்குப் பயன்படுத்தப் போவதாக அவர் அறிவித்தார். இது ஒரு இலக்கியவாதியின் அரசியல் பிரவேசம் அல்ல; வலுத்தவர்கள் இளைத்தவர்களை எப்போதும் நசுக்கிக் கொண்டே இருப்பதைக் கண்டதால் ஏற்படும் ஆவேசம்.


நன்றி : கூட்டாஞ்சோறு

February 07, 2006

‘உண்மை’ உண்மையல்ல!

ஆம்! நாம் வாழ்வில் பல சந்தர்ப்பங்களில், பல விஷயங்களில் எதை உண்மை என்று நம்புகிறோமோ அது உண்மையாக இருப்பதில்லை; கானல் நீராகி விடுகிறது. இதைதான் சமீபத்தில் நோபல் பரிசு பெற்ற ஹெரால்ட் பிண்டர் அவரது ஏற்புரையில் எடுத்துரைத்துள்ளார்.

அவர் எழுப்பிய கேள்வியில் மிக முக்கியமானது “ஈராக்கில் பேரழிவை ஏற்படுத்தும் அணு ஆயுதங்கள் இருப்பதாக அமெரிக்கா கூறியதே!” அது உண்மையா? என்பதுதான். இன்றைக்கு ஈராக் அமெரிக்காவின் பிடியில் முழுமையாக வந்து விட்டது. இப்போதாவது அங்கிருந்து பேரழிவு மிக்க ஆயுதங்கள் எடுக்கப்பட்டதா? உண்மை என்ன ஆனது?

இந்த வரிசையில் தற்போது சேர்ந்திருப்பது ஈரான்.

ஈரான் அணு ஆயுதங்களை உருவாக்க முயற்சிக்கிறது என்று குற்றம் சாட்டப்பட்டு, இந்த விவகாரத்தை ஐ.நா. சபைக்கு கொண்டு போகப்பட்டு பொருளாதார தடை உட்பட இராணுவ தாக்குதல் நடத்துவதுற்கு அமெரிக்கா முழுமையான அளவில் தயாராகி வருகிறது.

சமீபத்தில் வியன்னாவில் நடைபெற்ற சர்வதேச அணுசக்தி கழகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் ஈரானுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஈரான் தரப்பில் கூறப்படுவது என்ன? நாங்கள் அணுவை ஆக்கத்திற்கு பயன்படுத்திடவே ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளோம். நவீன விஞ்ஞான உலகில் இது மிக அவசியமானது என்று கூறியுள்ளது ஈரான். இதில் என்ன தப்பு.

இன்றைக்கும் உலகை பல முறை அழிக்கக்கூடிய வல்லமை படைத்த மிகப் பேரழிவை ஏற்படுத்தும் ஆயுதங்கள் உள்ள நாடு எது என்று கேட்டால்? குழந்தை கூட எளிதாக பதில் கூறி விடும் அமெரிக்கா என்று.

அணு ஆயுதங்களை முழுமையாக குறைத்துக் கொள்ள வேண்டும் என்று ஒப்பந்தம் போடுவதெல்லாம், அது ஏழை நாடுகளோ, வளரும் நாடுகளோ தங்களை விட - வேறு யாரும் அணு ஆயுத உற்பத்தியில் ஈடுபடக்கூடாது என்பதற்காகத்தான்.

இந்த அமெரிக்கா ஓநாயின் நீலிக் கண்ணீருக்கு துணை போயிருக்கிறது இந்தியா. இந்தியா நேரு காலத்தில் இருந்து சுயேச்சையான வெளியுறவு கொள்கையில் ஈடுபட்டு வந்த நாடு? இன்றைக்கு அதன் நிலை என்ன? அமெரிக்காவின் காலடியில் சரணாகதி... என்ற நிலையை நோக்கி செல்கிறது. இது சரியா?

ஈரான் இன்னொரு கேள்வியை எழுப்புகிறது. இதற்கு அமெரிக்கா ஓநாயோ, அல்லது ஐரோப்பிய ஊளைச் சதை ஜாம்பவான்களோ வாயே திறப்பதில்லை. என்ன அது?

இ°ரேலிடம் அணு ஆயுதங்களை வைத்திருக்கிறதே இதை கட்டுப்படுத்தவோ, அல்லது இதன் மீது நடவடிக்கை எடுக்கவோ ஏன் முயலவில்லை என்று கேள்வி எழுப்பும் போது, அமெரிக்கா கப் - சிப்பாகி விடுகிறது.
எதிர்கால உலகின் பொருளாதாரத்தை தீர்மானிப்பது - எண்ணெய் வயல்கள்தான் - இந்த சூழலில் மத்திய ஆசியாவை கபளிகரம் செய்துக் கொள்ள அமெரிக்க துடித்துக் கொண்டு இருக்கிறது. இதற்காகத்தான் இசுரேலையும் இசுலாமிய நாடுகளுக்கு எதிராக கொம்பு சீவி விட்டு முரட்டுக் காளையாக வளர்த்து வருகிறது.

மொத்தத்தில் உலகின் நவீன எசமான் அமெரிக்கா - புஷ்:

நாமெல்லாம் அடிமைகள் இல்லா நவீன அடிமைகள்! எந்த வொரு நாட்டின் சுயாதிபத்தியத்தையும் கேள்விக்கு உள்ளாக்கும் அமெரிக்காவின் மூக்கு உடைபடுவது வெகு சீக்கிரத்தில்....

அமெரிக்காவின் சீண்டலுக்கு துணைபோகும் இந்திய அரசு, மிக விரைவில் சர்வதேச அளவில் பெட்ரோல் விலை உயர்வு என்ற பெயரில், இந்திய மக்கள் மீது பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு ஆகியவற்றின் விலை உயர்வு குண்டாக வீசப்போகிறது. அமெரிக்காவின் தலையாட்டி பொம்மையாக, இப்படியே போனால் இந்திய மக்கள் இந்த ஆட்சியை குண்டுக்கட்டாக வீசுவார்கள்....

February 06, 2006

சமுத்ராவின் கருத்து சுதந்திரம்?

mஎனது நாட்டை நான் சுத்தம் செய்யக்கூடாதா?
என்ற தலைப்பில் ஒரு பதிவை அவரது வலைப்பதிவில் போட்டிருந்தார். அதற்கு நானும் என்னடைய கருத்தை பதிந்திருந்தேன். ஆனால், என்னுடைய கருத்தை அவர் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அதே சமயம் என்னுடைய கருத்தை அவர் முழுமையாக நிராகரிக்கலாம். அதை விட்டு விட்டு, நான் என்ன கூறினேன் என்பதை வசதியாக வாசகர்களுக்கு மறைத்து விட்டு. எனக்கு பதில் கூறியுள்ளது நகைப்புக்குரியதாக இருக்கிறது. மேலும் சமுத்ரா எந்த கட்சியை சார்ந்தவர் என்பதெல்லாம் எனக்குத் தெரியாது? எனக்குத் தெரிந்த நியாயத்தை - கருத்தை நான் பதிந்துள்ளேன். எனவே மறைக்கப்பட்ட என் கருத்தை என்னுடைய சந்திப்பிலேயே வாசகர்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றே இதை வெளியிடுகிறேன்.

எது சரி? நீங்களே தீர்மானியுங்கள்...
அவரது பதிவுக்கான பதில் வருமாறு

சமுத்ரா

நீங்கள் போட்டுள்ள படம் மிக அருமையாக இருந்தது. நன்றி.

ஆகா... என்னா தேசப்பற்று பாத்தீங்களா... குப்பையை அகற்றியவருக்கும், அதற்கு வரிந்து கட்டிக் கொண்டு எழுதியிருக்கும் சமுத்ராவுக்கும்...

இந்தியாவின் சொத்தை அந்நியருக்கும், தனியாருக்கும் விற்கும் தூரோகத்திற்கு துணைபோவதுதான் தேசப்பற்றா? சமுத்ராவின் கவலையெல்லாம் இந்தியாவை எப்போது அமெரிக்காவிடம் விற்பார்கள் என்பதுதான்!

அது மட்டும் நிறைவேறி விட்டால் சமுத்ராதான் அடுத்த அமெரிக்க தூதராக இந்தியாவில் முல்போர்டின் வேலையை செய்வார்.

இவ்வளவு நாள் விமான பயணிகளையெல்லாம் மிக பத்திரமாக, பாதுகாப்பாக ஏற்றிச் சென்று சேவை செய்த ஊழியர்களின் சேவையை விலை பேசுவதுதான் தேச நலனா?


அது சரி! வேலை நிறுத்தம் செய்றவங்க எல்லாம் தோழர்கள் என்று யார் சொன்னது? இந்த வேலை நிறுத்தத்தில் 22,000 விமான நிலைய தொழிலாளர்கள் பங்கேற்றுள்ளார்கள். இதில் காங்கிர°, பா.ஜ.க., பாரதீய ம°தூர் யூனியன், சி.ஐ.டி.யூ. என பலதரப்பட்டவர்கள் உள்ளார்கள் என்பது கூடவா தெரியவில்லை!

விமானத்திலேயே பறக்கும் அந்த பிசின°மேனுக்கு கீழே நடக்கும் விஷயங்கள் தெரியாமல் இருக்கும் என்று நினைக்கிறேன். குஜராத்தில் 3000 மு°லீம்களை கொன்றது, இலட்சக்கணக்கானோரை இடம் பெயரச் செய்தது, மகாராஷ்டிராவில் 3000க்கும் மேற்பட்ட குழந்தைகள் பட்டினியால் செத்தது, வறுமையிலும், கடன் தொல்லையிலும் விவசாயிகள் ஆண்டுக்கு 3000 பேர் இறப்பது, வேலையில்லா திண்டாட்டம் ஆண்டுக்கு ஆண்டு உயர்ந்து கொண்டு இருப்பது, வீடில்லாமல் நாய்களை விட கேவலமாக நமது மக்கள் வசித்துக் கொண்டிருப்பது உயரே பறப்பவருக்கு தெரியாது. நெதர்லாந்தில் இருந்து மாட்டு சானிகளை இந்தியாவில் இறக்கிய வாஜ்பாய் அரசின் அசுத்தங்கள் எல்லாம் கண்ணுக்குத் தெரியாமல் போனது.... ஏன்?

அமெரிக்கா கூட லிட்டில் பாய், பேட் பாயை போடும் போது விமானத்தை மிக உயரத்திற்கு கொண்டு சென்றுதான் 300000 மக்களை சொர்க்கத்திற்கு அனுப்பியது.

நீங்களும் நியாயத்தின் மீதான வெறுப்பு என்ற உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறீர்கள்.

February 03, 2006

தாமரை தொப்பி

இனிய உதயமானது இன்று! அதிகாலையே திருமணத்திற்கு செல்ல வேண்டியிருந்தது. நீண்ட பயணம்தான். குறைந்தது இரண்டு மணி நேர பேருந்து பயணம். கையில் இனிய உதயம்.

பேருந்தில் பயணம் செய்யும் போது படிக்க ஆரம்பித்து சிறிது நேரத்திலேயே தூக்கம் என்னை ஆக்கிரமிக்கும். இன்றோ இனிய உதயம்! பாப்லா நெருடாவின் ஒரு கவிதையும், தாமரை தொப்பி என்ற கவிதையும், சக்கரியாவின் நேர்காணலும் படித்தேன். மூன்றுமே சும்மா... நச்சுன்னு இருந்தது.

தாமரை தொப்பி என்ற சிறுகதை ஆட்சியாளன் சுயசிந்தனையும், கட்டுப்பாடும் இல்லாமல் இருந்தால் அந்த நாட்டு மக்கள் எத்தகைய அவதிக்கு உள்ளாவர்கள் என்பதை உரைக்கும் கதை. மிக அழகாகவும், நகைச்சுவையாகவும், எந்த இடத்திலும் போரடிக்காமல், மிக விரு விருப்பாக கதை நகர்ந்தது. கதையின் ஒவ்வொரு இடத்திலும் ஒரு டர்னிங் பாய்ன்ட்.
கதை சுருக்கம்


மன்னன் ஒருவன் பல வைப்பாட்டிகளை வைத்திப்பவன். தாமரையை மணந்த பிறகு எந்த வைப்பாட்டியையும் அவன் சேர்த்துக் கொண்டே இல்லை.


மன்னன் ஒரு நாள் குதிரையில் தனியாக உலா வரச் சென்றான். அப்போது மிக தூரத்திற்கு சென்று விட்டான். யாரும் இல்லாத வயல் வெளியில் குதிரையை கட்டி விட்டு, தானும் ஓய்வெடுக்க விரும்பினான். அப்போது தூரத்தில் ஒரு மிக அழகிய இளம் பெண் கிணற்றில் இருந்து தண்ணீர் இறைத்துக் கொண்டு இருந்தாள்.

மன்னன் அவள் அருகில் சென்று தாகத்தற்கு தண்ணீர் கிடைக்குமா என கேட்க! ஓ தாராளமாக எவ்வளவு வேண்டுமானாலும் தருகிறேன் என்று கூறினாள். மன்னருக்கு தண்ணீர் ஊற்றும் போது தாமரையின் மிக மெல்லிய புன்னகை வலையில் வீழ்ந்து விடுகிறார் மன்னர்.

அழகியே நான் உன்னை ஒன்று கேட்கலாமா? என்று மன்னர் கூற - நான் அழகி இல்லை என் பெயர் தாமரை என்று சொன்னாள்.

இதைத் தொடர்ந்து நான் உன்னை திருமணம் செய்து கொள்ள விரும்புகிறேன் என்று கூற, பத்திரகாளியானாள் தாமரை...

ஏ பினமே..., பன்னி, காட்டுப் பன்னி, கரடி, ஓடிடு இல்லாட்டி மண்டைய பிளந்துடுவேன்.. என கட, கடவென தன் கோபக் கனலை வெளிக்காட்டினாள். அதிர்ந்து போன மன்னர்

நான் யார் தெரியுமா? என்று கேட்டு நான் மன்னர் என்று கூறி, நான் உன்னை திருமணம் செய்து கொள்ள போகிறேன் என்று கூறினார். இத முன்னாலேயே சொல்லியிருக்க கூடாதா என்று தாமரை கூற...

நான் சொல்றதெல்லாம் நீ செய்வியா என கேட்க மன்னர் ஆமாம் என தலையாட்ட... பிறகு என்ன

ஒரு வழியாக இருவருக்கும் திருமணம் நடந்தது. மன்னரின் ஆசைகளுக்கு ஏற்ப நடந்து கொண்டாள் தாமரை... ஆனால் மன்னன் மட்டும் சோகத்திலேயே இருந்தார்.

என்ன காரணம் என்று தாமரை கேட்க! நீ என்னை அன்புடன் கூப்பிட வேண்டும் என்று கூற... மீண்டும் டேய் பன்னி, கரடி குட்டி, செத்த பினமே... என அர்ச்சிக்க மீண்டும் மன்னர் இந்த பேச்சால் உற்சாகமானார்...

தம்பதிகள் இருவரும் மாடியின் மேல் நின்று கொண்டு வேடிக்கை பார்க்கும் போது அழகான தொப்பி அணிந்து சென்றதை பார்த்த தாமரை அது வேண்டும் என கேட்க!

உடனே மன்னரின் உத்தரவு பறக்க... மக்களிடம் பதட்டம் தொற்றிக் கொண்டது.. மன்னர் ஏதோ வேறு நாட்டோடு போர் புரிய போகிறார்... அதுதான் இவ்வளவு பரபரப்பு என பேசத் துவங்கி விட்டனர்.

எப்படியோ ஒரு வழியாக தொப்பியை கொண்டு வந்து கொடுத்ததும் தாமரை திருப்தியானால்... அதோடு மட்டும் நிற்கவில்லை அவள்... இதை நம் மக்கள் எல்லோரும் அணிய வேண்டும் என்று கூற...

மன்னர் விழி பிதுங்கினார். அது எப்படி தாமரை முடியும் என கேட்க! தாமரை ஆத்திரத்தோடு கோபித்துக் கொண்டு டேய் பன்னி, சனியனே, காட்டு பன்னி, கரடி என கத்த மன்னர் மனம் குளிர்ந்து அதற்கும் உத்தரவிட...

ஒரே... தமாஷ்தான் போங்கள் நாட்டில் உள்ள அனைவரும் பெரியவர், சிறியவர், குழந்தைகள் என எல்லோரும் இந்த தொப்பியை அணிந்து கொண்டனர். சை° மட்டும் ஒரே சை° என்பதால் பலருக்கும் இது பிரச்சினையானது. பலரின் தலைமுழுக்க இது மூடிக் கொண்டது.... குழந்தைகள் பாடு திண்டாட்டம்தான்.

மன்னரும் - ராணியும் உலா வருவதால் அனைவரும் இந்த தொப்பியை அணிய வேண்டும் என்ற உத்தரவு பறக்க... வீதியில் அனைவரையும் பார்த்தபடி வந்தபோது, கூட்டத்தில் இருந்து குரல் வந்தது மன்னனும் - ராணியும் தொப்பி அணியவில்லை என்று...

மந்திரி உடனே ஏற்பாடு செய்ய இருவருக்கும் தொப்பி கொண்டு வரப்பட்டது... அந்த தொப்பி தாமரைக்கும் பொருந்தவில்லை, ராஜாவுக்கும் பொருந்தவில்லை! பிறகு என்ன?

தாமரை தன்னுடைய அழகிய கூந்தலைக் கொண்டு கட்டி விட்டுக் கொண்டால். தொப்பியும் ஜம்மென்று நின்று விட்டது. ஆனால் மன்னர் பாடு திண்டாட்டம் முகமே தெரியவில்லை.

தாமரையை பார்த்து உனக்கு தொப்பி எப்படி பொருந்தியது என கேட்க. பன்னி, காட்டு பன்னி, வழுக்கத் தலையா... முதல்ல முடிய வளரு... அப்பத்தான் பொருந்தும் என்பதோடு கதை முடிகிறது...

சுராவின் மொழி பெயர்ப்பு அற்புதம். நீங்களும் படிங்க...

February 01, 2006

முல்போர்டு எந்த நாட்டின் தூதர்?

டெல்யில் அமெரிக்க தூதராக செயல்படும் டேவிட் முல்போர்டு சமீபத்தில் இந்திய அரசை மிரட்டியுள்ளார். அணுசக்தி விவகாரத்தில் ஈரானுக்கு எதிராக இந்தியா வாக்களிக்க வேண்டும். இல்லையென்றால், இந்தியா பின்விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று நேரடியாகவே மிரட்டியுள்ளார்.

எந்த ஒரு விஷயத்திலும் இந்திய நாடு எத்தகைய அரசியல் நிலையை எடுக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் உரிமை இந்திய அரசுக்குத்தானே ஒழிய, ஒரு நாட்டின் ஏஜண்டாக செயல்படும் டேவிட் முல்போர்டு அல்ல.

இந்த விவகாரத்தில் வி.சி. சிங், முலாயம்சிங், பிரகாஷ்காரத், பரதன் உட்பட இடதுசாரி தலைவர்கள் டேவிட் முல்போர்டை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்துள்ளனர். டேவிட் முல்போர்டு தானே இந்திய நாட்டின் எஜமான் போல, இடதுசாரிகள் இதுபோன்ற விஷயங்களில் ஏன் தலையிடுகிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இது எதை காட்டுகிறது என்றால் இருப்பதற்கு இடம் கொடுத்தால் படுப்பதற்கு பாய் கேட்ட கதையாக இருக்கிறது.

சமீப காலத்தில் இந்திய நாட்டின் உள் விவகாரங்களில் அமெரிக்காவின் அத்துமீறல் தொடர்ந்து அதிகரித்து வருவதை காணலாம்.

ஈரானில் இருந்து சமையல் எரிவாயுவை பெறுவதற்கும் அமெரிக்க வர்த்தக அமைச்சர் கண்டோலிசா ரை° கண்டனம் தெரிவித்ததோடு, இந்த ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வெளிப்படையாக மிரட்டியுள்ளார். ஈரானில் இருந்து கொண்டு வரப்படும் சமையல் எரிவாயு பாகி°தான் வழியாக இந்தியாவிற்கு வருவது என்பது குறிப்பிடத்தக்க அம்சம். பாகி°தானுடன் இந்தியாவின் உறவு அதிகரித்து வருவதும் அமெரிக்காவுக்கு பிடிக்கவில்லை.

இதுமட்டுமின்றி, சமீபதில் சிரியா நாட்டில் இந்திய நாட்டின் சார்பில் எண்ணெய் வயல்களை வாங்குவதற்கும் அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளதோடு, இந்த திட்டத்தையும் கைவிட வேண்டும் என்று மிரட்டியுள்ளது.

இந்திய நாட்டின் இறையாண்மை, சுயாதிபத்தியத்தை கேள்விக்குறியாக்கும் அமெரிக்கா உலக ரவுடியாக, உலக பயரங்கரவாதியாக மற்ற நாடுகளை கபளிகரம் செய்யத் துடிக்கும், ஆதிக்கம் செலுத்தத் துடிக்கும் ஆக்டோபசாக செயல்படுவதை இந்திய மக்களின் ஒட்டுமொத்த எதிர்ப்பின் மூலம் கண்டிப்பதோடு, அமெரிக்க பொருட்களை வாங்குவதை நாம் அடியோடு நிறுத்த வேண்டும். அமெரிக்காவுடனான இந்தியாவின் அனைத்து ஒப்பந்தங்களையும் உடனடியாக நிறுத்த வேண்டும்.