February 14, 2009

லோதேவும் - வெர்மரும் : காதலின் சாட்சியாய்



வெளிநாட்டில் வேலன்டைன் டே
இங்கு அது காதலர் தினம்


மனித குலத்தின் முதல் உலகமயம்
காதல்... காதல்... காதல்...


கதேவின் காதல் காவியத்தால்
சாகா வரம் பெற்றனர்
லோதேவும் - வெர்மரும்


கம்யூனிசத்தின் பிதா மகன்
காரல் மார்க்சும் - ஜென்னியும்
மரபுக் காதலர்கள் அல்ல


உலகை வாழ்விப்பதற்காக
தங்களை அர்ப்பணித்துக் கொண்ட
அபூர்வக் காதலர்கள்
உலக வறுமையை ஓட்டுவதற்காக
ஒட்டுமொத்த வறுமையையும்
சுமந்த சுகமான காதலர்கள்


மகாகவியின் வார்த்தையில்
அதனை வருணிப்பதே
இன்னும் பொருத்தமானது
காதல்... காதல்... காதல்...
காதற்போயின் சாதல்... சாதல்... சாதல்..



கதேவின் காவியமான
காதலின் துயரத்தை படிப்பவர்கள்
நிச்சயம் இதனை உணர்வர்.
இக்காவியத்தை படித்த
பலரும் புத்தகத்தின் கதாநாயகான
உலா வந்தனர் - வாழ்ந்தனர் -
மடிந்தனர்
பெண்களோ அப்புத்தகத்தில் வரும்
நாயகனைப் போல் தனக்கான
நாயகனை தேடினர்...
தேடிக் கொண்டேயிருக்கின்றனர்...


மனிதகுலத்தின் உணர்ச்சி
நாளத்தின் அத்தனை உணர்ச்சிகளையும்
ஒருங்கே காண முடியும்
காதல் எனும் நோய் பிடித்தால்...


இது மனித உணர்வுகளின்
ஆர்ட்டீசின் ஊற்று...
இதை எந்த கலாச்சார
காவலர்களாலும் தடுக்கவும்
முடியாது. தடைபோடவும் முடியாது!


அஜால்... குஜால் வேலைகளில்
ஈடுபடும் ஆர்.எஸ்.எஸ். காரர்களுக்கு
எப்படித் தெரியும் காதலின் மகிமை
அவர்கள் வழியில் சமூகத்தை
நடத்தத் துடிக்கிறார்களோ என்ற
சந்தேகம்தான் பிறக்கிறது
காதலுக்காக எதிராக இவர்கள்
போடும் இந்துத்துவ தாலிபானிய
கலாச்சாரம்!


ராமபக்தர்கள் என்று நாமமிடுபவர்கள்
சீதையின் சிறப்பழகால்
தன்னை பறிகொடுத்த
ராமனின் உள்ளத்தைத் அறிவதைத் தவிர...
இடிப்பதை மற்றுமே கற்றவர்கள்
அல்லவா அவன் பெயரைச் சொல்லி.


இடிப்பது அவர்கள் வேலை என்றால்
கட்டுவது நமது வேலையாகட்ம்
ஆதலினால் காதல் செய்வீர்...


3 comments:

Anonymous said...

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

சந்திப்பு said...

நன்றி வலைப்பூக்கள்

Anonymous said...

உங்களது காதல்- காதலர்தின கவிதை அருமை. காதல் அனைத்துக் கட்டுகளையும் உடைக்கும் என்பதால் அதைக்கண்டு அஞ்சுகிறார்கள் RSS கூட்டத்தினர்.