November 27, 2007

காலக் கனவு!


வ. கீதாவின் சிந்தனையில் உருவான 'காலக் கனவு' இன்று ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி அரங்கில் திரளான மாணவர்கள் மத்தியில் நிகழ்த்தப்பட்டது. நாடகத்துறையில் புது முயற்சிகள் இதில் கையாளப்பட்டுள்ளது. வரலாறு புத்தகமாகவும். நாவலாகவும். திரைப்படமாகவும். கவிதையாகவும். டாக்குமென்டரியாகவும் வடிக்கப்பட்டுள்ளது. தற்போது வரலாறு நாடகமாக்கப்பட்டுள்ளது. அதுவும் தமிழக பெண்ணுரிமை வரலாறு என்பது குறிப்பிடத்தக்கது.
பெண்ணடிமைத்தனம் நிலப்பிரபுத்துவ சமூக கட்டமைப்போடு இணைந்தது. இந்தியாவில் இன்றைக்கும் அரை நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பு தகர்க்கப்படாமல் உள்ளதை நாம் அறிவோம்.
நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூக அமைப்பில் மிகவும் கீழாக ஒடுக்கப்பட்டவர்கள் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தாழ்த்தப்பட்ட வகுப்பினரை விட பெண்களை மிகவும் கீழானவர்களாகத்தான் நம் இந்திய சமூகம் சித்தரித்துள்ளது.
இத்தகைய சமூக அமைப்பில் பெண்களுக்கு இடப்பட்ட அடிமை விலங்குகளை உடைத்தெறிய தமிழகத்தில் எழுந்த பல்வேறு போக்குகளை இந்நாடகம் மிகவும் அற்புதமாக படம் பிடித்துள்ளது.
குறிப்பாக 120 ஆண்டு கால வரலாறு இதில் படம் பிடிக்கப்பட்டுள்ளது. தேவதாசி முறை தொடங்கி பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டது முதல். குழந்தை மணம். விதவை மறுமணம். உடன்கட்டை ஏறுதல். போன்ற பல்வேறு சமூக விசயங்களை ஆழமாக உள்ளடக்கி இந்நாடகம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த அவல நிலைக்கு எதிராக போராடிய சுப்புலட்சுமி அம்மையார். மூவலுர் ராமமிர்தம்மாள். மணலுர் மணியம்மையார். ஜனாகியம்மாள். அயோத்திதாச பண்டிதர். பெரியார். மகாகவி பாரதியார்.... என நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் பெண்ணடிமைத்தனத்திற்கு எதிராக எவ்வாறு குரல் எழுப்பினார்கள் என்பதை மிக அழகாக வடிவமைத்துள்ளனர்.
நாடகம் கதை சொல்லும் பாணியை கையாண்டிருந்தாலும். அதனை மிகவும் நுட்பமாக பாடலுடனும். அட்டைப் படங்களைக் கொண்டும். தங்கது துடிப்பான நடிப்பின; மூலமும் கண்முண் கொண்டு வந்து நிறுத்துகின்றனர்.
குறிப்பபாக இதில் பெரும் பகுதி கையாண்டிருக்கும் மூல வசனங்கள் நெத்தியடியாக உள்ளது. தஸ்லீமா நஸ்ரினுக்கு எதிராக பிற்போக்கு பழமைவாதிகள் குரல் எழுப்பி வரும் வேளையில் தமிழகத்தில் சித்தி ஜிபைதா போகம் போன்ற இசுலாமிய பெண்மணிகள் செயல்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துரைத்திருப்பது புதிய தகவலாக இருக்கிறது.
கதாபாத்திரங்களாக பேசும் ரேவதி. கவின். கப்னா. பொன்னி மற்றும் துணை பாத்திரங்கள் அனைவரும் மிசச் சிறப்பாக தங்களது பாத்திரத்தை நிறைவேற்றுகின்றனர்.
குறிப்பாக கவினின் குரல் இனிமையாக காற்றை கிழித்துக் கொண்டு கீதம் இசைக்கிறது. அதேபோல் பொன்னியின் குரல் கம்பீரமாக - கலகத்தின் குரலாக ஒலிக்கிறது.
கடந்த காலத்தை சிறப்போடு படம் டிபத்தவர்கள் நிகழ்காலத்தையும் கொஞ்சம் சித்தரித்திருக்கலாம். 40-60களில் திராவிட இயக்கம் பெண்ணுரிமை விசயத்தில் தாக்கத்தை உண்டாக்கியிருந்தாலும். அது தமிழகத்தில் தற்போது எந்த வடிவத்தில் உள்ளது என்பதை பரிசீலனைக்குரியதே!
அதே சமயம் இன்றைக்கு பெண்ணுரிமை சம்பந்தப்பட்ட விசயத்தில் சமூகத்திலும். அரசியலிலும். ஆரோக்கியமாக ஈடுபட வைத்திருப்பது இடதுசாரிகளே என்பதை பதிவு செய்ய வேண்டியுள்ளது.
மேலும் பெண்ணியம் என்ற தளம் தனித்து இயங்குவது சமூகத்தின் அடித்தளத்தை மாற்றுவதற்கு எந்த வகையிலான பாத்திரத்தை வகிக்கிறது. பெண்ணடிமைத்தனம் என்பது நிலவும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ சமூக அமைப்பை மாற்றுவதோடு இணைக்கப்பட வேண்டும். நாடக ஒருங்கிணைப்பாளர்கள் இதனை கணக்கில் கொள்வது இன்னும் சிறப்பாக இருக்கும்.

November 24, 2007

மனித உரிமை ஆணையத்தின் எட்டப்(ப) பார்வை!

மார்க்சிஸ்ட் கட்சியையும் அதன் தலைமையிலான இடது முன்னணியையும் தாக்குவதற்கு அறிவு ஜீவி வட்டாரத்தில் ஒரு படையே கிளம்பியிருக்கிறது. மேலோட்டமான சில சிந்தனைகளை வைத்துக்கொண்டு மார்க்சிஸ்ட்டுகள் குறித்து அவநம்பிக்கை பிரச்சாரம் செய்ய முயன்ற இவர்கள், இப்போது மேற்கு வங்கத்தின் நந்திகிராமம் பிரச்சனையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகிறார்கள்.
வன்முறை மட்டுமே ஒட்டுமொத்த அரசியல் இலக்காகக் கொண்ட நக்சலைட்டுகளின் பிடியில் ஒரு வட்டாரமே சிக்கிக்கொண்டாலும் பரவாயில்லை, இடதுமுன்னணியின் செல்வாக்கை எப்படியாவது குறைத்துவிட வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டதுபோல் இவர்கள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். மார்க்சிஸ்ட்டுகள் சொல்கிற எந்த விளக்கத்தையும் கேட்க மாட்டோம் என்ற, "கொள்கை உறுதியோடு இவர்கள் தங்களுடைய பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிட்டுள்ளனர்.இந்தப் படையில் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரும் இணைந்துவிட்டாரோ என்ற எண்ணம் ஏற்படுகிறது. ஏற்கெனவே நந்தி கிராமத்தில் என்ன நடந்தது என்பதை ஆராய்வதற்கான நடவடிக்கைகளை ஆணையம் துவங்கியிருக்கிறது.
புத்ததேவ் அரசு அதற்கு முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறது.இந்நிலையில் ஆணையத்தின் தலைவர் எஸ்.ராஜேந்திர பாபு, நந்தி கிராமத்தையும் குஜராத்தையும் ஒப்பிட்டு, கருத்துக் கூறியிருக்கிறார். குஜராத்தில் சட்டம் ஒழுங்கை மீறி மாநில அரசின் ஆசீர்வாதத்தோடு கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள மதவெறிக் கலவரத்தையும், நந்தி கிராமத்தில் மக்களை வன்முறையாளர்கள் பிடியிலிருந்து மீட்டு சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கையையும் ஒப்பிடுவதற்கு இவருக்கு எப்படித்தான் மனம் வந்ததோ?குஜராத்தில் நடந்தது இந்துத்துவா கூட்டத்தால் திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட படுகொலை அரசியல். சிறுபான்மை மக்கள் - குறிப்பாக இஸ்லாமிய மக்கள் - பெரும்பான்மையினருக்கு கட்டுப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்ற "பாடத்தை" போதிப்பதற்காக அந்த அரங்கேற்றம் நிகழ்த்தப்பட்டது. இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட அப்பாவி முஸ்லிம் மக்கள் கொலை செய்யப்பட்டனர்.
அந்தக் கொலைகளுக்கு அரசாங்கப் பதவிகளில் இருந்தவர்களே கூட எப்படியெல்லாம் வழிகாட்டினார்கள், எப்படியெல்லாம் காவல்துறை கைகட்டிக்கொண்டு இருந்தது என்பது குறித்து ஏராளமான செய்திகள் வந்துள்ளன. ஒரு நிறைமாத கர்ப்பிணிப் பெண்ணின் வயிற்றைக் கிழித்து உள்ளே இருந்த சிசுவை வெளியே எடுத்து நெருப்பில் வீசுகிற அளவிற்கு மதவெறி போதை தலைக்கேறிய அந்தக் கூட்டம் கொலைவெறியாட்டம் நடத்தியது.
2002ம் ஆண்டு அந்தக் கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான அப்பாவிகள் தங்களுடைய இடங்களுக்கு திரும்பிச் செல்ல முடியாமல் அகதிகள்போல் வாழ்ந்துகொண்டிருக்கின்றனர்.நந்தி கிராமத்திலோ மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் ஒரு ஆபாசக் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அந்த வட்டாரத்தைக் கைப்பற்றுவதற்கு சதி செய்தன. அந்தச் சதியின் ஒரு கூறாகவே அப்பட்டமான வலதுசாரிக் கட்சிகளான பாஜக, மம்தாவின் திருணாமுல் காங்கிரஸ் ஆகியவற்றோடு அதிதீவிர மாவோயிஸ்டுகளும் சேர்ந்துகொண்டார்கள்.
தீவிரவாதம் குறித்து மேலும் கீழும் குதிக்கும் பாஜக, திரிணாமுல் காங்கிரஸ் வகையறாக்கள் கொஞ்சமும் கூச்சமின்றி இந்த அதிதீவிரவாதிகளின் ஒத்துழைப்பை நாடினர். அதேபோல், கம்யூனிஸ்ட்டுகளையும் மற்ற இடதுசாரிகளையும் ஒட்டுக்காகக் கையேந்துபவர்கள் என்று ஓயாமல் கூறிக்கொண்டிருக்கும் நக்சலைட்டுகள் இந்தக் கும்பலோடு உறவு வைத்துக்கொள்ள தயங்கவில்லை.
அறம் வழுவிய இக்கூட்டணியால் சுமார் நான்காயிரம் மக்கள் அவர்களுடைய வீடுகளிலிருந்து வெளியேற்றப்பட்டனர். நில உரிமை பாதுகாப்புக்குழு என்ற பெயரில் ஏற்படுத்தப்பட்ட அந்தக் கூட்டணி, இந்த மக்களை அவர்களுடைய சொந்த நிலங்களிலிருந்து விரட்டியடித்தது. அவ்வாறு விரட்டப்பட்டவர்களில் தலித்துகள், முஸ்லிம்கள், விவசாயத் தொழிலாளர்கள், கைவினைத் தொழிலாளர்கள் என அனைத்துப் பிரிவினரும் இருக்கிறார்கள். இந்த ஆண்டில் மட்டும் இக்கூட்டத்தால் சுமார் 30 இடது முன்னணி ஊழியர்கள் கொல்லப்பட்டனர்.
இக்கூட்டத்தினரிடமிருந்து எண்ணற்ற துப்பாக்கிகள், வெடிமருந்துகள் உள்ளிட்ட ஆயுதங்களை - மாநில காவல்துறை அல்ல - மத்திய ரிசர்வ் காவல்படை கைப்பற்றியிருக்கிறது.வெளியேற்றப்பட்ட அந்த மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவம், தங்களது தொழில்களில் அமைதியாக ஈடுபடவும் இடது முன்னணி அரசு தன்னால் இயன்ற அத்தனை முயற்சிகளையும் செய்துகொண்டிருக்கிறது.
அந்த முயற்சிகளுக்கு துணையாக இருப்பதற்கு மாறாக, சில தொண்டு நிறுவனங்களும் - தங்களுக்கு வருகிற அந்நிய நிதிகளுக்கு விசுவாசமாக - நந்தி கிராமம் பிரச்சனை குறித்து நாடு முழுக்க திசைதிருப்பும் பிரச்சாரங்களை செய்து வருகின்றன.
இப்படிப்பட்ட பிரச்சாரங்களுக்கு சிலர் இரையாவது இயற்கைதான். ஆனால் பகுத்தறிவோடு பிரச்சனைகளை அணுக வேண்டிய மனித உரிமைகள் ஆணையம் இரையாகலாமா? நந்தி கிராமம் பிரச்சனை குறித்து ஆணையத்தின் விசாரணை முழுமையாக முடிந்து அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியாவதற்கு முன்பே அதன் தலைவர் இப்படி குஜராத்தையும் நந்தி கிராமத்தையும் ஒப்பிட்டது என்ன நியாயம்?
மேலோட்டமான தனிமனித உரிமை பேசிக்கொண்டு ஒட்டுமொத்தமான ஜனநாயக உரிமைகளை புதைகுழிக்கு அனுப்ப முயல்கிறவர்களின் குரலை ராஜேந்திர பாபுவும் எதிரொலித்திருப்பது வேதனையானது மட்டுமல்ல, விபரீதமானதும் கூட.
விரைவில் உண்மைகள் வெளியாகும். உள்ளங்கள் அதில் தெளிவாகும் - தேசிய மனித உரிமை ஆணையத் தலைவருக்கும்.
அ.குமரேசன்

November 23, 2007

கெட்டிக்காரன் புளுகு 8 நாளைக்கு! கோயபல்ஸ் புளுகு?


நந்திகிராம் தொடர்பாக நவம்பர் 22 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாதத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, ‘நந்திகிராம் கலவரங்களுக்கு திரிணமுல் காங்கிரஸ், மாவோயிஸ்ட்டுகள், பா.ஜ.க.வினரின் கூட்டு நடவடிக்கைள்தான் காரணம்' என்று குற்றம் சாட்டியிருந்தது.
இதற்கு பதிலளித்த பா.ஜ.க. எம்.பி.யும், எதிர்க் கட்சி துணைத் தலைவருமான சுஸ்மா சுவராஜ், ‘வன்முறை சம்பங்களைக் கண்டிக்காமல் வன்முறைகளுக்கு மாவோயிஸ்ட்டு நக்ஸல்கள்தான் காரணம் என்று மார்க்சிஸ்ட் கட்சி சாக்குப் போக்கு சொல்கிறது. ஆனால் அங்கு மாவோயிஸ்ட் இல்லை என்று மாநில உள்துறை செயலர் சொல்லியிருக்கிறார்" என்று மாவோயிஸ்ட்டுகளுக்கு வக்காலத்து வாங்கினார். மாவோயிஸ்ட்டு பயங்கரவாதிகளின் குரலை பாராளுமன்றத்திலேயே ஒலித்தார்.
இதற்கு விரிவாக பதிலளித்த மார்க்சிஸ்ட் கட்சி எம்.பி. சீத்தாராம் யெச்சூரி, "மாநில உள்துறை செயலர் அவ்வாறு கூறவில்லை என்று கூறியதோடு, நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட் இருப்பதாக தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் கூட சொல்லியிருக்கிறார் அத்துடன், மாவோயிஸ்ட் வன்முறைச் சம்பவங்கள், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பிற்கே பெரும் அச்சுறுத்தலாக எழுந்துள்ளது. நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் ஊடுருவியுள்ளனர். நந்திகிராமத்தில் இயங்கும் பூமி பாதுகாப்புக் குழுவினருக்கு ஆயுதங்களும், வெடிமருந்துப் பொருட்களும் ஏராளமாக அனுப்பப்பட்டிருக்கின்றன.''
மத்திய உளவு ஸ்தாபனத்தின் அறிக்கை இதனை உறுதிப்படுத்துகின்றது. தேவையானால், மத்திய உள்துறை அமைச்சர் இங்கு அமர்ந்திருக்கிறார், அவரிடம் எவர் வேண்டுமானாலும் தெளிவுபடுத்திக்கொள்ளலாம் என்று குட்டினார்.
சரி, இது குறித்து மாவோயிஸ்ட்டுகளின் அதிகாரப்பூர்வ பிரதிநிதி வரவரராவ் என்ன கூறினார் என்பதை பார்ப்போம்!
நவம்பர் 22 அன்று என்.டி.டி.வி.யில் பேட்டியளித்த மாவோயிஸ்டுகளின் அதிகாரப்பூர்வமான பிரதிநிதி வரவரராவ், ‘மாவோயிஸ்ட்டுகள் நந்திகிராமத்தில் தீவிரமாக செயல்படுகிறார்கள் அவர்கள் சி.பி.ஐ.(எம்)-யை கடுமையன எதிர்க்கிறார்கள், நான் நந்திகிராமத்திற்கு மே மாதத்திலும், ஜூன் மாதத்திலும் சென்றிருந்தபோது, அங்கிருந்த மக்களும், அறிவாளிகளும் ஆதரவளித்தனர், நந்திகிராம் நிகழ்வுகள் 60களில் நடந்த நக்சல்பாரி நிகழ்வுகளைப் போல் மாவோயிஸ்ட்டுகளுக்கு உதவி செய்கிறது. எனவே நந்திகிராமில் மாவோயிஸ்ட்டு தொண்டர்கள் இருக்கிறார்கள்." என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின், பயங்கரவாத செயல்களுக்கு வக்காலத்து வாங்கும் மோடித்துவ பா.ஜ.க.வினர், மார்க்சிஸ்ட்டுகளை எதிர்க்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு பயங்கரவாத மாவோயிஸ்ட்டுகளோடு புனிதக் கூட்டுச் சேர்ந்துள்ளனர். மாவோயிஸ்ட்டுகளும் - பெரும்பான்மை - சிறுபான்மை மதவெறியர்களோடு அணிவகுத்துள்ளனர்.
மொத்தத்தில் சுஸ்மா சுவராஜின் கெட்டிக்காரத்தனமான புளுகு ஒரே நாளில் அம்பலப்பட்டு விட்டது!
- நடராஜன்

கோயபல்ஸ் சிஷ்யர்களின் முகமூடி கிழிந்தது!

நந்திகிராம நிகழ்வுகள் குறித்து நாடாளுமன்ற மக்கள வையில் விவாதம் நடைபெற்றது. வியாழனன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய பாஜக உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் மேற்கு வங்க அரசை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரினார்.
இதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சி உறுப்பினர்களுக்கும், பாஜக உறுப்பினர் களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது நந்தி கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் இல்லை என்று மாநில உள்துறை அமைச்சர் கூறியிருப்பதாக சுஷ்மா கூறினார். இதை வன்மையாக மறுத்த சீத்தாராம் யெச்சூரி, மாநில உள்துறை செயலாளர் அவ்வாறு கூறவில்லை. மேலும், தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணனே நந்திகிராமத் தில் மாவோயிஸ்ட்டுகளின் கைவேலை உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறினார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட்டுகள், நந்திகிராமத்தில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்று சுஷ்மா சுவராஜ் அபத்தமாக உளறிக் கொட்டினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த சீத்தாராம் யெச்சூரி, நேபாள மாவோயிஸ்ட்டுகளையும், நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் சீர்குலைவு வேலை களில் ஈடுபட்டுள்ளவர்களையும் ஒன்றுபடுத்தி பேசக்கூடாது என்று குறிப்பிட்டார். நேபாள மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயகத்திற்காக போராடுகிறார்கள். நந்திகிராமத்திலோ இவர்கள் மக்களை படுகொலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எனினும், மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இடது முன்னணி அரசு தயாரா கவே உள்ளது என்றும் அவர் கூறினார். நந்திகிராமத்திற்கு துணை ராணுவப்படையினரை அனுப்புவதில் மத்திய அரசு தாமதம் செய்ததாக யெச்சூரி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலத்தில் 341 பிளாக்குகள் உள்ளன. ஒரு பிளாக்கிலும், மற்றொரு பிளாக்கில் சிறு பகுதியிலும்தான் பிரச்சனை உள்ளது. இதற்காக மாநில அரசையே கலைக்க வேண்டுமென்று பாஜக கூறுகிறது. குஜராத் மாநிலத்தையே கலவர பூமியாக்கிய பாஜகவினருக்கு இதைக் கூற உரிமையில்லை என்று யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காகவே பாஜக, ஆர்எஸ்எஸ், திரிணாமுல் காங்கிரஸ், அன்னிய நிதி உதவியுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் என மகா கூட்டணியை அமைத் துள்ளனர் என்று குற்றம் சாட்டிய யெச்சூரி, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பாஜக அடிக்கடி பேசுகிறது.
ஆனால், நந்திகிராமத்தில் மட்டும் மாவோயிஸ்ட்டுகளை பாதுகாத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறது. இது தான் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அக்கறையா என்று அவர் கேள்வி எழுப்பினார். மாவோயிஸ்ட்டுகள் கூட் டத்தில் அத்வானி பேசியதை சுட்டிக் காட்டிய யெச்சூரி, நக்சலைட்டுகள் குறித்த தங்களது நிலையை பாஜக தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
யெச்சூரி பேசிய போது, உரிய பதிலளிக்க முடியாத பாஜகவினர் கூச்சல் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர்.

November 22, 2007

நந்திகிராம் பகடை காயின் நான்கு முகங்கள்!


நந்திகிராமில் மத்திய அரசின் இரசாயண தொழிற்சாலை அமைப்பது தொடர்பாக எழுந்த பிரச்சனையை அடுத்து. நந்திகிராம மக்கள் விரும்பவில்லையென்றால் அரசு தொழிற்சாலையை வேறு பகுதிக்கு மாற்றிவிடும் என்று அறிவித்த பின்னரும். மமதா பானர்ஜியும் - இசுலாமிய அமைப்புகளும் - நக்சலிசவாதிகளும் பெரும் அவதூறுகளையும் - வன்முறையையும் கட்டவிழித்து விட்டு சி.பி.எம். மற்றும் இடதுசாரி கட்சி ஆதரவாளர்களை அந்த கிராமத்திலிருந்து விரட்டியடித்தனர். இவர்ளது வன்முறையால் 3000க்கும் மேற்பட்ட மக்கள் நந்திகிராமத்திற்கு வெளியே அகதிகளைப் போல் முகாமில் தங்க வைக்கப்பட்டனர். எவ்வளவு நாளைக்கு கிட்டத்தட்ட 7 மாதங்களுக்கு மேலாக அவ்வாறு தங்கியிருந்தனர். சொந்த கிராமத்திலிருந்து பாலஸ்தீன மக்களைப்போல் விரட்டியடிக்கப்பட்டனர். மேலும் நந்திகிராமத்தை மாவேயிஸ்டுகள் - சுசி - நக்சலிச வாதிகள் - மமதாபானர்ஜி - இசுலாமிய அடிப்படைவாத அமைப்புகள் - பா.ஜ.க.வினர் என மொத்தமாக கூட்டுச் சேர்ந்து மெகா கூட்டணி அமைத்தனர். பூமி பாதுகாப்பு குழு என்ற பெயரில் எதிரும் புதிருமானவர்கள் நண்பர்கள் ஆனார்கள். நந்திகிராமத்தை மேற்குவங்கத்திலிருந்து அனைத்துவிதத்திலும் துண்டித்து விட்டனர். அரசு இயந்திரம் 9 மாதமாக செயல்பட முடியவில்லை. பள்ளிக்கூடங்கள் இயங்கவில்லை. அரசு அலுவலகங்கள் செயல்பட முடியவில்லை. நலத்திட்டங்கள் முற்றிலுமாக முடங்கியது. காவல்துறையினர் ஊருக்குள் நுழைய முடியவில்லை. இப்படி பல தொல்லைகளை கொடுத்தவர்கள் நக்சலிசவாதிகளை வெளியிலிருந்து ஆயுதங்களோடு நக்திகிராமத்திற்குள் வரவழைத்து இடது முன்னணி அரசுக்கு எதிரான போர்களமாக இதனை மாற்றி விட்டனர். அரசின் எந்தப் பேச்சுவார்த்தைக்கும் இவர்கள் இசைந்தபாடில்லை. மேலும் இந்தப் பிரச்சனையையொட்டி மேற்குவங்க அரசு போலீசாரோடு நுழைந்த பின்னணியில் 14 பேர் உயிரிழக்க நேரிட்டது. இதற்காக இடது முன்னணி வருத்தம் தெரிவித்தது. இதில் போலீசாரின் துப்பாக்கி சுட்டிக்கு பலியானர்கள் 8 பேர் மட்டுமே. மற்றவர்கள் நக்சலைட்டுகளின் தாக்குதலால் பலியானவர்கள். இதை தொடர்ந்து நந்தி கிராமத்தில் அமைதியை நிலைநாட்ட எடுத்துக் கொண்ட முயற்சிகளை எட்டி உதைத்த பூமி பாதுகாப்பு கமிட்டியினர். இடது முன்னணிக்கு ஆதரவானவர்கள் அனைவரையும் கிராமத்தை விட்டே துரத்தினர்.
இந்த பின்னணியில் மாநில அரசே மத்திய அரசை மத்திய படையை அனுப்பும்படி கேட்டுக் கொண்டது. மத்திய அரசும் மாற்றந்தாய் மனப்போக்கோடு நடந்தக் கொண்டது.
இந்திய வரலாற்றில் எதிர் கட்சிகள்தான் வழக்கமாக மத்திய பாதுகாப்பு படையை கோரும். ஆனால் மேற்குவங்கத்தில் மாநில அரசே கோரியது. காங்கிரஸ் இடது முன்னணி அரசுக்கு எதிராக என்ன நடந்தாலும் பரவாயில்லை என்ற மனப்போக்கோடு நடந்துக் கொண்டது. இதைத்தான் மத்திய அமைச்சரிடம் உணர முடிந்தது.
இந்த நிலையில் மத்திய பாதுகாப்பு படை நந்திகிராமத்திற்கு நுழைய கூடாது என்றவர்கள் பூமி பாதுகாப்பு குழுவினர்.
மத்திய அரசே கூட கைவிட்ட நிலையில் ஒரு மாநில அரசு என்ன செய்ய முடியும். இறுதி முடிவை மக்களிடமே விட்டு விட்டது. 9 மாதம் அகதிகளாக இருந்தவர்கள் மீண்டும் ஊர் திரும்பினர். பூமி பாதுகாப்பு குழுவினரை சந்தித்தனர். சொந்த கிராமத்திற்குள் சி.பி.எம். மற்றும் இடது முன்னணியின் கொடிகளோடு நுழைந்த வெற்றிக் கொடியை ஈட்டினர். கிராமத்தில் அமைதியை நிலைநாட்டினர்.
மேற்குவங்க ஆளுநர் இதைத்தான் அவர்கள் ரீ கேப்சர் செய்து விட்டார்கள் என்று கூறினார். இதற்கு என்ன அர்த்தம் என்று தெரியவில்லை! ஒரு கிராமத்து மக்கள் திரும்பவம் தங்களது இருப்பிடத்திற்கு வருவதே தவறா? அல்லது என்ன நடந்தாலும் மாநில அரசு வேடிக்கை பார்க்க வேண்டும் என்று கவர்னர் விரும்புகிறாரா என்று தெரியவில்லை? மேலும் இந்த விசயத்தில் மாநில கவர்னர் தனது எல்லையை மீறி தலையிட்டது ஜனநாயக விரோதமானது என்பதை அனைவரும் அறிவர். ஆனால் சட்டம் அறிந்த உச்ச நீதிமன்றம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறது. மாநில சுயாட்சி குறித்து ஓங்கி முழங்குபவர்கள் கவர்னரின் அதிகார வரம்பு மீறலை கண்டித்துள்ளது நல்ல செய்தி.
மமதா பானர்ஜி தனது எம்.பி. பதவியை ராஜினாமா செய்து விட்டதாக தலைவிரி கோலமாய் நாடகம் ஆடினார். ஆனால் இதுவரையில் தனது ராஜினாமா கடித்தை சபாநாயகருக்கோ. ஜனாதிபதிக்கோ அனுப்பி வைக்கவில்லை என்பதுதான் உண்மை. இதுதான் மமதா?
பாஸிஸ்ட் புகழ் அத்வானி நந்திகிராமத்திற்கு ஓடோடி வருகிறார். அவருக்கு மாவோயிச புரட்சிவாதிகள் ரத்தனகம்பளம் விரித்து வரபேற்பு தருகின்றர். நக்சலிச பயங்கரவாதிகளை எதிர்ப்போம் என்று தினந்தோறும் ஊளையிடும் அத்வானி அவர்களத கூட்டத்திற்கு உள்ளேயே போய் ஆதரித்து பேசுகிறார். பா.ஜ.க. சங்பரிவாரம் பாசிசம் இந்தியாவில் நாங்கள்தான் உறுதியாக எதிர்க்கிறோம் என்று வேடம் போடும் நக்சலிசவாதிகள் அத்வானியின் பேச்சுக்கு மகுடி ஊதுகிறார்கள். மொத்தத்தில் பாசிசமும் - பயங்கரவாதமும் ஒரே கூட்டணியின் இரு முகங்கள் என்பதை வெட்ட வெளிச்சமாக நிரூபித்துள்ளனர்.
இவர்களோடு தற்போது சேர்ந்துக் கொண்டுள்ளது சிறுபான்மை மத அடிப்படைவாத பாசிசம். அவர்கள் நந்திகிராமப் பிரச்சனையையும் - தஸ்லீமா நஸ்ரினையும் இணைத்து கொல்கத்தாவில் ஊர்வலம் நடத்தி வெறியாட்டம் போட்டுள்ளனர். நகரத்தையே ஸ்தம்பிக்க செய்து வன்முறை வெறியாட்டத்தை நிகழ்த்தியுள்ளனர். இவர்களது நோக்கம் தஸ்லீமாவை மேற்குவங்க அரசு ஆதரிக்க கூடாது. உடனடியாக மேற்குவங்கத்தை விட்டு வெளியேற வேண்டும் என்று கோரி வன்முறையாட்டம் போட்டுள்ளனர். பெட்ரோல் குண்டுகளை வீசியுள்ளனர். பல பேருந்துகளை கொளுத்தியுள்ளனர். இடதுசாரி கட்சி அலுவலகங்களை கொளுத்தியுள்ளனர். மொத்தத்தில் நகரத்தையே தன் கையில் எடுத்துக் கொண்டுள்ளனர். மாநில காவல்துறையால் இதனை அடக்க முடியவில்லை அவ்வளவு வெறியாட்டம்! பின்னர்தான் மத்திய படை அழைக்கப்பட்டது. தற்போது இயல்பு நிலை திரும்பியுள்ளது.
மொத்தத்தில் என்ன புரிகிறது. 30 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கும் ஒரு கட்சிக்கு எதிராகவும் - இடது முன்னணி ஆட்சிக்கு எதிராகவும் பாசிஸ்ட்டுகள் - பயங்கரவாதிகள் - சிறுபான்மை மத அடிப்படைவாத பாசிஸ்ட்டுகள் - மமதா குழுவினர் இந்த நான்முக கூட்டணி மேற்குவங்கத்தை சீர்குலைவின் உச்சத்திற்கு தள்ளியுள்ளது. இதுபோல் வேறு மாநிலத்தில் இதுபோன்ற நம்பவங்கள் நடந்ததாக வரலாறு உண்டா? இவர்களுக்கு பின்னால் இருப்பவர்கள் யார்? கம்யூனிச விரோதிகள் - ஏகாதிபத்திய சக்திகள்! இவர்களது முகமூடி தற்போதே கிழிந்து விட்டது. இருப்பினும் மேற்குவங்க மக்கள் இவர்களை குப்பைக் கூடையில் வீசியெறிவார்கள்.
நாட்டு நடப்பை அலசும் நியாய தராசுகளே நீங்கள் எந்தப் பக்கம்?

நோம் சாம்ஸ்கியும் மற்ற அறிவாளிகளும்!

Chomsky and other intellectuals on Nandigram
To Our Friends in Bengal.

News travels to us that events in West Bengal have overtaken the optimism that some of us have experienced during trips to the state. We are concerned about the rancour that has divided the public space, created what appear to be unbridgeable gaps between people who share similar values. It is this that distresses us. We hear from people on both sides of this chasm, and we are trying to make some sense of the events and the dynamics. Obviously, our distance prevents us from saying anything definitive.


We continue to trust that the people of Bengal will not allow their differences on some issues to tear apart the important experiments undertaken in the State (land reforms, local self-government).
We send our fullest solidarity to the peasants who have been forcibly dispossessed. We understand that the government has promised not to build a chemical hub in the area around Nandigram. We understand that those who had been dispossessed by the violence are now being allowed back to their homes, without recrimination. We understand that there is now talk of reconciliation. This is what we favour.


The balance of forces in the world is such that it would be impetuous to split the Left. We are faced with a world power that has demolished one state (Iraq) and is now threatening another (Iran). This is not the time for division when the basis of division no longer appears to exist.


Noam Chomsky, author, Failed States: The Abuse of Power and the Assault on Democracy; Tariq Ali, author, Pirates of the Caribbean: Axis of Hope and editor, New Left Review; Howard Zinn, author, A Power Governments Cannot Suppress; Susan George, author, Another World is Possible if, and Fellow, Transnational Institute; Victoria Brittain, co-author, Enemy Combatant: A British Muslim’s Journey to Guantanamo and Back, former editor, Guardian; Walden Bello, author, Dilemmas of Domination: The Unmaking of the American Empire, and Chair, Akbayan, the fastest growing party in the Philippines; Mahmood Mamdani, author, Good Muslim, Bad Muslim: America, The Cold War and the Roots of Terror; Akeel Bilgrami, author, Politics and the Moral Psychology of Identity; Richard Falk, author, The Costs of War: International Law, the UN and World Order After Iraq; Jean Bricmont, author, Humanitarian Imperialism: Using Human Rights to Sell War; Michael Albert, author, Parecon: Life After Capitalism, and editor, ZNET; Stephen Shalom, author, Imperial Alibis: Rationalizing US Intervention After the Cold War; Charles Derber, author, People Before Profit: The New Globalization in an Age of Terror, Big Money and Economic Crisis; Vijay Prashad, author, The Darker Nations: A People’s History of the Third World.

The Hindu, 22nd November 2007

Editorials The challenge of Nandigram


Three days after the Left Front in West Bengal appealed for peace and for the “safe and secure return” to villages in the Nandigram area of all people forced to live outside, and in the aftermath of the beginning of peace talks at the local level, violence has erupted again in this area of rural West Bengal. The Maoists have resumed their armed campaign of terror; working people have been injured and killed in political violence; and, ever-willing to give chaos a chance, Trinamool Congress leader Mamata Banerjee has been reported as saying that her party would “paralyse West Bengal” indefinitely. For 11 months, the campaign spearheaded by the Bhumi Ucched Pratirodh Committee (BUPC, or “Committee to Prevent Eviction from Land”) has brought administration and development work to a halt, and has sought to cut the area off from government and state power. According to one estimate, 15,000 children could not be given pulse polio doses; Rs.2 crore worth of expenditure on health infrastructure has had to be abandoned; health facilities have been unable to function; and Rs.2 crore worth of investment on electrification could not be made. People of the region, particularly peasant families owing allegiance to the Left Front, were systematically evicted from their homes and villages, with the number of refugees swelling to 3,500.


In February 2007, the government announced that the chemical hub would not be established in Nandigram. Even that announcement brought no respite. On the contrary, the forced withdrawal of the police from certain areas provided a new opportunity for the Maoists to set up an armed presence in the region, and for the opportunist alliance represented by the BUPC to regroup and continue their campaign of violence and externment, and of preventing the administration from functioning. No government worth the name can stand aside when people are indefinitely denied the right to occupy their homes and pursue their livelihoods in peace, and, when finally the internal refugees seek to return to their homes, their paths are blocked by arms and landmines. The Central government, which depends on the Left for survival, has eventually responded to the request by the Government of West Bengal by releasing a battalion of the Central Reserve Police Force for deployment in the Nandigram region. Intelligent and speedy deployment of these paramilitary forces can contribute to the resumption of peace directly by means of their armed presence and, more importantly, as a confidence-building measure among the people. This newspaper has editorialised on the part played by political slowness in responding to a tricky situation as well as administrative mishandling of a volatile situation in the tragedy of Nandigram in March 2007. But once the State government made it absolutely clear that the chemical hub would not be established in Nandigram, what raison d’etre could exist for the disruptive activities of the BUPC and the continuing violence of the opposition in West Bengal? What is now manifest is that the peace process in Nandigram has its determined enemies.


The role of Governor Gopalkrishna Gandhi has, for a second time, come under the spotlight. In March 2007, he clearly stepped out of line in publicly airing his philosophical and tactical differences with the State government over Nandigram. He does not seem to have learnt any lessons from that experience and, in fact, his latest speaking out of line has had the effect of adding fuel to the flames. Let us concede that Nandigram represented a situation where the moral urge not to remain silent came into conflict with the restraints imposed by the constitutional office. Yet, of the restraints imposed by the office, there would seem to be little doubt, and a public statement critical of the government’s handling of the issue could not have been made without transgressing them. The Hindu has consistently regarded this as a major question of principle in the constitutional realm. The classic 1867 exposition of the role of the British monarch by Walter Bagehot applies equally to the office of the President and the Governor: “To state the matter shortly, the Sovereign has, under a constitutional monarchy such as ours, three rights — the right to be consulted, the right to encourage, the right to warn. And a king of great sense and sagacity would want no others. He would find that his having no others would enable him to use these with singular effect.” The right to advise and the right to warn are to be exercised in private and in confidence, and not through public statements. This restraint required of the head of state is not a mere constitutional formality but is based on sound democratic principles. In the first place, the head of state must not, through statements critical of its functioning, place himself or herself in conflict with the representative government, which has a greater democratic legitimacy. Secondly, the head of state should appear non-partisan and remain above the fray when controversial and divisive questions are being debated in the political sphere, and avoid any public statements that could give comfort to one side or the other. The Governor’s public statements on Nandigram both challenged the wisdom of the government’s approach and came down on the side of the critics of its action. Further, Mr. Gandhi laid himself open to the charge of remaining silent when the supporters of the Left Front were at the receiving end. His conduct through this crisis has been constitutionally indefensible. Yet the Left Front government must not get distracted by this. Its top priorities must be to re-establish peace, ensure human security, and resume development work in Nandigram. The CPI(M) has a special responsibility in this regard — among other things, to be manifestly fair in its dealings on the ground, and to restrain its cadre from any campaign of reprisal.

The Hindu, Monday, Nov 12, 2007

நந்திகிராமத்தில் நடப்பதென்ன?

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் சீத்தாராம் யெச்சூரி மற்றும் மக்களவை உறுப்பினர் பாசுதேவ் ஆச்சார்யா, அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் திறந்த மடல் எழுதியுள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
நந்திகிராமத்தில் நடந்துள்ள நிகழ்வுகள் சம்பந்தமாக உண்மைச் சித்திரத்தை உங்கள்முன் அளிப்பதற்காகவே இக்கடிதத்தை எழுதுகிறோம்.
நந்தி கிராம மக்களுக்கு உதவி செய்து, அம்மக்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்புவதற்காக மேற்கு வங்க அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ஊடகங்களால் இருட்டடிப்பு செய்யப்படுவதா லும், ஒருதலைப்பட்சமாக செய்திகளை வெளியிட்டுக் கொண்டிருப்பதாலும், இந்தக் கடிதத்தை உங்களுக்கு எழுத வேண்டிய கட்டாயத்தை எங்களுக்கு ஏற்படுத்தி இருக்கிறது. பெண்களுக்கு எதிராகவோ அல்லது அப்பாவி மக்களுக்கு எதிராகவோ வன்முறைச் சம்பவங்கள் எது நடந்திருந்தாலும், அதை யார் புரிந்திருந்தாலும் அவர்கள் கட்சி வித்தியாசமின்றி கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்பதில் எங்களுக்கு எந்தக் கருத்து மாறுபாடும் கிடையாது என்பதை முதலிலேயே தெரிவித்துக் கொள்கிறோம்.
அதேபோன்று “நில ஆர்ஜிதத்திற்கு எதிராக விவ சாயிகள் மேற்கொண்ட அமைதியான எதிர்ப்பின்’’ ஒரு பகுதிதான் நந்திகிராம நிகழ்ச்சிகள் என்பதும் கெடுநோக்குடன் செய்யப்படும் பொய்ப் பிரச்சாரமேயன்றி வேறல்ல என்று கூறி அவற்றை மறுதலிக்கிறோம். நந்திகிராம நிகழ்ச்சிப்போக்கு கள், ஆயுதந்தாங்கிய கும்பல் வன்முறை மூலமாக அப்பகுதியைக் கைப்பற்ற மேற்கொண்ட நடவடிக் கைகள் என்பதையும், அவற்றிற்கு அங்குள்ள எதிர்க்கட்சிகள் எவ்வித லஜ்ஜையுமின்றி ஆதரவளித்து, ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளதும் ஆழமான கேள்விகளை எழுப்பியுள்ளன. இடது முன்னணியும், மேற்கு வங்க அரசும் எந்த ஒரு திட்டத்தை அறிவிக்கும்போதும், அப்பகுதி மக்களின் நம்பிக்கையைப் பெற்றபிறகு தான் அத்திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதை கொள்கையாகக் கொண் டுள்ளன.
ஆயினும், இத்திட்டம் குறித்து மேலும் ஆழமான வகையில் விவாதம் நடைபெற்றுக் கொண்டிருந்த சமயத்தில்தான், ‘நந்திகிராமப் பகுதி சிறப்புப் பொருளாதார மண்டலத்திற்காக மாநில அரசால் எடுத்துக்கொள்ளப்பட இருக்கிற தென்றும், அங்கிருக்கும் மக்கள் அனைவரும் விரட்டியடிக்கப்பட இருக்கிறார்கள் என்றும், அங்குள்ள அனைத்துப் பள்ளிகளும், மருத்துவ மனைகளும், கோவில்களும், மசூதிகளும், கல்லறைகளும் நிர்மூலமாக்கப்பட இருக்கின்றன என்றும்’ ஒரு பொய்ப்பிரச்சாரம் கட்டவிழ்த்து விடப்பட்டது.
இவ்வாறு இழிவான பிரச்சாரத்தின் மூலம் மக்கள் மத்தியில் ஒரு கொந்தளிப்பான சூழலை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டன. மேற்குவங்கத்தில் உள்ள திரிணாமுல் காங்கிரஸ், காங்கிரஸ், எஸ்யுசிஐ, நக்சலைட்டுகள், ஜமி யத்-இ உலாமமா-இ ஹிண்ட், பாஜக, மற்றும் அந்நிய நாடுகளிலிருந்து நிதி பெறும் அரசு சாரா நிறு வனங்கள் ஒன்றி ணைந்து பூமி பாதுகாப்புக் குழு என்று ஒரு மேடையை ஏற்படுத்தி கலவரத்தில் ஈடுபட்டனர்.கலவரக்காரர்கள், ஆயுதங்களுடன் தங்கள் அராஜக வேலைகளில் இறங்கினார்கள். அங்கிருந்த பாலங்களையும் சாலை இணைப்புகளையும் தகர்த்தார்கள். இதனைத் தொடர்ந்து மாவோயிஸ்ட்டு கட்சியினர் அந்தப் பகுதிக்குள் கள்ளத்தனமாக நுழைந்து பூமிப்பாதுகாப்பு இயக்கத்தாருடன் இணைந்து கொண்டார்கள். பின்னர் அங்கு ஒரு பயங்கரமான சூழ்நிலையை உருவாக்கினார்கள்.
ஜனவரி 4, 5 தேதிகளில் நந்திகிராமம் மற்றும் கெஜூரி பகுதியை உலகத்துடன் இணைக்கும் அனைத்து சாலைகளையும் துண்டித்தார்கள். ஒரு 25 கே.வி. மின்சார துணை நிலையத்தையே தீக்கிரையாக்கினார்கள். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தல அலுவலகங்கள் கொளுத்தப்பட்டன. மார்க்சிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்களின் வீடுகள் சூறையாடப்பட்டன.
இதனையடுத்து மார்க்சிஸ்ட் கட்சி ஊழியர்களும் ஆதரவாளர் களும் புகலிடங்களில் முகாமிட வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு ஆளாக்கப்பட்டனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்களில் மார்க்சிஸ்ட் கட்சியின் இரு மாவட்டக் குழு உறுப் பினர்கள், இரண்டு வட்டாரக் குழு செயலா ளர்கள், ஆறு மண்டலக் குழு உறுப்பினர்கள், 16 வட்டாரக்குழு உறுப்பினர்களும் மற்றும் 56 கட்சி உ றுப்பினர்களும் அடங்குவர்.
200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் நிவாரண முகாமிலும், உறவினர் இல்லங்களிலும் தங்க வைக்கப்பட்டனர். பின்னர் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டிருந்தனர். பின்னர் வன்முறை யாளர்கள் தங்கள் அராஜக நடவடிக்கைகளை அப்பகுதியில் விரிவாக்கினர். மேற்கு வங்க முதல்வர் நந்திகிராமப் பகுதியில் கட்டாயப்படுத்தி எவரிடமிருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று திட்டவட்டமாக அறிவித்தார். அமைக்கப்படவிருந்த பெட்ரோ கெமி கல் தொழிற்சாலை வேறிடத்திற்கு மாற்றப்படுவ தாகவும் அறிவித்தார்.
ஆயினும் வன்முறையாளர்கள் தங்கள் அராஜக நடவடிக்கைகளைக் கைவிடவில்லை, தொடர்ந்தனர். நந்திகிராமத்தில் வன்முறையாளர்களின் வெறியாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யைச் சேர்ந்தவர்கள் 27 பேர் இதுவரை பலியாகியுள்ளனர். வன்புணர்ச்சி, கொலை, கொள்ளை, தீக் கிரை முதலான சம்பவங்கள் தொடர்பாக ஐம்பதுக்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அரசியலில் எதிர்ப்பு காண்பிப்பது என்பது நம்முடைய ஜனநாயக நடைமுறைகளின் ஒரு பகுதி தான். ஆனால், ஜனநாயகப்பூர்வமாக நடைபெறும் தேர்தல்களில் வெற்றி பெற முடியாதவர்கள், அப்பகுதிகளை வன்முறை மூலமாக ‘’கைப்பற்றுதல்’’ என்னும் இழிவான நடைமுறையை எந்த விதத்திலும் நியாயப்படுத்த முடியாது.
கடந்த பதினோரு மாதங்களில் ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள், குழந்தைகள் நந்தி கிராமத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு விரட்டியடிக்கப்பட்டவர்கள் மேற்கு வங்க ஆளுநரைச் சந்தித்து தங்கள் அவலநிலை குறித்து எடுத்துரைத்துள்ளனர். உயர்நீதிமன்றத் திலும் மனுச்செய்துள்ளனர். ஆயினும் அவர்களி டமிருந்து எந்த பிரதிபலிப்பும் அவர்களுக்குக் கிடைத்திடவில்லை. நந்தி கிராமப் பகுதிக்கு உண்மை கண்டறிவ தாகச் சொல்லிச் சென்ற குழுக்களும் இவர்கள் பற்றி எவ்விதக் குறிப்பும் அளித்திடவில்லை, இவர்களை மனிதப்பிறவிகளாகவே அவை கருதிடவில்லை.சமீபத்தில் மத்திய ராணுவ துணை பிரிவுகள் நந்திகிராம பகுதிக்கு வந்தபின் நிலைமை கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளது.
நிவாரண முகாம்களில் தங்கியிருந்தோர் மீண்டும் தங்கள் இல்லங்களுக் குச் சென்றுள்ளனர். மத்திய ராணுவ துணை பிரிவினரும் காவல்துறையினரும் இணைந்து நந்தி கிராம பகுதியை பாதுகாத்து சுற்றி வந்துகொண் டிருக்கின்றனர். இப்போதைய உடனடித்தேவை என்பது அங்கு அமைதி திரும்புவது என்பதேயாகும். அமைதியை விரும்பும் அனைத்துப் பகுதி மக்களும் நந்தி கிராம பகுதியில் இயல்பு வாழ்க்கை திரும்பிட ஒத்துழைப்பார்கள் என்று நம்புகிறோம். நாட்டின் அனைத்து மக்களும் முன்பு வாழ்ந்ததுபோலவே அமைதியுடனும் நல்லிணக்கத்துடனும் வாழ்ந்திட முன்வர வேண்டும்.
தமிழில்: ச. வீரமணி

November 12, 2007

ஜனநாயகப் போரில் பர்மா

தெற்காசிய பகுதியின் முக்கிய நாடுகள், குறிப்பாக இந்தியாவின் அண்டை நாடுகளான பாகிஸ்தான், பங்களாதேஷ், மியான்மர் (பர்மா), மற்றும் தாய்லாந்து, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில் இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் கொடிகட்டி பறக்கின்றன. நேபாளத்தில் நிலப்பிரபுத்துவ மன்னராட்சியிட மிருந்து ஜனநாயக ஆட்சியை நிலைநாட்டுவதற்கான போராட்டம் நடைபெற்று வருகிறது. மொத்தத்தில், நவீன உலகில் இத்தகைய முதலாளித்துவ இராணுவ சர்வாதிகார ஆட்சிகள் மக்கள் ஜனநாயகத்திற்கு பெரும் சவாலாக விளங்குகின்றன. ஏகாதிபத்திய காலனி ஆட்சியாளர்களை விரட்டியடித்த நாடுகள் தற்போது சரிவாதிகரிகளிடம் சிறைப்பட்டு கிடக்கின்றன. எனவே, அந்த வியாதி இந்தியாவில் பரவாமல் இருக்க நாம் விழிப்போடு இருக்க வேண்டியுள்ளது. அந்த அடிப்படையில் தற்போது பர்மாவில் நிலவும் சூழல்கள் குறித்து இந்தக் கட்டுரை அலசுகிறது.
உலக மீடியாக்களில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது பர்மா-மியான்மர். (இராணுவ ஆட்சியாளர்கள் பர்மாவை இனவாத போக்குடன் மியான்மர் என பெயர் மாற்றி விட்டனர்.) ஜனநாயகத்தை மீட்பதற்கான நீண்ட நெடிய போராட்டம் தற்போது உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த 45 ஆண்டு களாக அடக்குமுறை இராணுவ ஆட்சியின் பிடிக்குள் சிக்கித் தவிக்கும் பர்மா ஜனநாயக சுதந்திர காற்றை சுவாசிக்கும் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறது. இல்லற வாழ்வை துறந்த லட்சக்கணக்கான புத்த துறவிகள் தற்போது உழைக்கும் மக்களுடன் இணைந்து ஜனநாயகத்திற்கான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏன் இந்த திடீர் போராட்டம்
அரிசி உற்பத்தியில் ஆசியாவின் அட்சயப் பாத்திரமாக விளங்கியது பர்மா. அரிசி மட்டுமா? ‘பர்மா தேக்கு’ என்றால் உலகப் புகழ் பெற்றது. வளம் பொருந்திய தேக்கு மரங்களை ஏற்றுமதி செய்யும் நாடு பர்மா. அத்தோடு இயற்கை எரிவாயுவில் உலகில் முன்னணியில் இருக்கும் நாடு. 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவையும், 3 பில்லியன் பீப்பாய் பெட்ரோலிய எண்ணை வளத்தையும் தன்மடியில் சுமந்து கொண்டிருக்கும் நாடு பர்மா!
இராணுவ ஆட்சியாளர்களின் சுகபோக வாழ்க்கை மற்றும் இராணுவத்திற்கான செலவு அதிகரிப்பு, போராடுபவர்களை ஒடுக்குவதற்கான நவீன ஆயுதங்களை வாங்குவது போன்ற நாசகர - சர்வாதிகார கொள்கையின் விளைவாக ஜெனரல் தான் ஷா தலைமையிலான இராணுவ அரசு பெட்ரோலிய பொருட்களின் விலையை 500 சதம் உயர்த்தியுள்ளது. இதுதான் தற்போதைய போராட்டத்திற்கான வித்தாக மாறி ஜனநாயக எழுச்சி கொண்டுள்ளது.
அன்றாட வாழ்க்கைக்கே அல்லல்படும் பர்மிய மக்கள், இந்த திடீர் விலை ஏற்றத்தால் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலைகளும் கடுமையாக உயர்ந்ததாலும், குறிப்பாக உழைக்கும் மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் போக்குவரத்துக் கட்டணங்கள் பன்மடங்கு உயர்ந்ததாலும் நிலைகுலைந்து போயுள்ளன. வாழ்க்கையின் எல்லைக்கே துரத்தப்பட்ட பர்மிய மக்கள், இராணுவ ஆட்சியாளர்களின் துப்பாக்கி முனைகளை துச்சமாக நினைத்து தெருக்களில் இறங்கி சவால் விடுகின்றனர்.
போராட்ட பாரம்பரியம் மிக்க பர்மிய மக்கள்
குறிப்பாக ‘88 ஜெனரேஷன்’ என்று அழைக்கக்கூடிய போராட்டப் பாரம்பரியம் மிக்கவர்கள் இராணுவ ஆட்சியாளர் களின் விலை உயர்வுக்கு எதிராக கடந்த ஆகஸ்ட் மாதம் 19 ஆம் தேதியன்று 400க்கும் மேற்பட்டோர் வீதியில் இறங்கி கண்டனம் முழங்கினர். சும்மா இருக்குமா அரசு? போராட்டக்காரர்கள் மீது கடுமையான அடக்குமுறைகளை ஏவியதோடு, அவர்களை கைது செய்து சிறையிலும் அடைத்தது. இதைத் தொடர்ந்து, செப்டம்பர் 22 அன்று நாடு முழுவதும் உள்ள உழைக்கும் மக்கள், மாணவர்கள் மற்றும் புத்த துறவிகள் என பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களது எதிர்பையும், கண்டனத்தையும் தெரிவித்து விலை உயர்வுக்கு எதிராகவும், ஜனநாயகத்தை வலியுறுத்தியும் முழக்கங்களை எழுப்பி, ஆங் சான் சூ குயி-யின் படங்களை ஏந்திக் கொண்டு பர்மா முழுவதும் போராட்டத்தில் குதித்தனர்.
அமைதியான முறையில் போராடியவர்களுக்கு எதிராக ஆங்காங்கே துப்பாக்கி சூடு நடத்தி பலரை கொன்று குவித்தது இராணுவ அரசு. பல்வேறு இடங்களில் தடியடி நடத்தி போராடியவர்களை சிறையிலும் தள்ளியது. இந்த சம்பவத்தை தொடர்ந்து பர்மா தலைநகர் ரங்கூன் மற்றும் மாண்டலேவில் செப்டம்பர் 24 அன்று லட்சக்கணக்கான புத்த துறவிகளும் - உழைக்கும் மக்களும் - மாணவர்களும் கலந்து கொண்ட பிரம்மாண்டமான கண்டன பேரணிகள் நடைபெற்றது. இது உலகின் கவனத்தை ஈர்த்தது. இந்த பேரணியில் முன்னணியில் நின்றவர்கள் லட்சக்கணக்கான புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு பத்திரிகைகள் இதனை ‘ஜனநாயகத் திற்கான காவி புரட்சி’ என்றே வர்ணித்தது!
ஜெனரல் தான் ஷா தலைமையிலான அடக்குமுறை இராணுவ அரசு இதுவரை 500க்கும் மேற்பட்டவர்களை கொன்று குவித்துள்ளதோடு, 1000த்துக்கும் மேற்பட்ட புத்த துறவிகளையும், 5000த்துக்கும் மேற்பட்ட போராட்டக்காரர் களையும் சிறையில் தள்ளியுள்ளது. பல்வேறு புத்த மடாலயங் களுக்குள் அதிரடியாக நுழைந்து அங்கே ஆயுதங்கள் பதுக்கி வைப்பட்டிருப்பதாக கூறி அமெரிக்க பாணியில் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
மேலும், முக்கிய நகரங்களில் ஊரடங்கு உத்தரவை பிறப்பித்து தனது அடக்குமுறை தர்பாரை நடத்தி வருகிறது. 1988 ஆம் ஆண்டு ஆங் சான் சூகி தலைமையில் நடைபெற்ற ஜனநாயகத்திற்கான போராட்டத்தின் போது 3000 பேரை கொன்று குவித்து பர்மாவை ரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது போல், இம்முறையும் அதே பாணியை பின்பற்றி ஒடுக்குமுறையை ஏவியுள்ளது. துப்பாக்கி ஏந்திய இராணுவ ஒடுக்குமுறையாளர் களுக்கு எதிராக பல்லாயிரக்கணக்கான மக்கள் தங்களை சுட்டுத் தள்ளுமாறு நெஞ்சை நிமிர்த்தி போராடி வருகின்றனர்.
உலகின் கவனத்தை திருப்பிய இன்டர்நெட்
நவீன தகவல் தொழில்நுட்ப புரட்சியின் உயர்ந்த அம்சமான இணையதளம் - இமெயில் - வலைபதிவு - செல்போன், கையடக்க மொபைல் கேமிரா போன்றவற்றின் வளர்ச்சியை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்டது உழைக்கும் வர்க்கம். பர்மாவில் நடைபெறுவது என்ன? என்பதை உலகம் இதன் மூலம் அறிந்து கொள்ள முடிந்தது. லட்சக்கணக்கான மக்களின் எழுச்சியும் - இராணுவ ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறையும் உலக மக்களை பர்மாவின் பக்கம் திருப்பியது. இதனை உணர்ந்து கொண்ட இராணுவ அரசு அதற்கே உரிய குணத்தோடு பர்மாவிலிருந்து இயங்கும் அனைத்து இணையதளம் மற்றும் செல்போன் சேவைகளை ரத்து செய்துள்ளதோடு, தன்னுடைய ஒடுக்குமுறை களையும் தீவிரப்படுத்தியது. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் ஆட்சியாளர்களின் ஒடுக்குமுறைக்கு ஜப்பானிய பத்திரிகை நிருபர் கென்ஜி நாகாய் துப்பாக்கி சூட்டில் பலியானதும் சர்வதேச கண்டனத்திற்கு உள்ளானது. உலகம் முழுவதும் உள்ள மனித உரிமை அமைப்புகள் பர்மாவுக்கு எதிராக தங்களது கண்டனக் கணைகளை தொடுத்தன.
இந்த சம்பவங்களை உற்று நோக்கிய சர்வதேச சமூகம் பர்மாவில் நடைபெறும் இராணுவ சர்வாதிகாரத்திற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்று பல்வேறு வகைகளில் நிர்பந்தித்து வருகிறது.
அமெரிக்காவின் ஜனநாயக வேடம்
இதனை பயன்படுத்திக் கொண்டு அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஏகாதிபத்தியவாதிகள் பர்மாவில் நுழைய தங்களை ஜனநாய கத்தின் காவலர்களாக காட்டிக் கொள்கின்றனர். பனாமா, ஆப்கானிஸ்தான், ஈராக் என பல்வேறு நாடுகளில் அமெரிக்கா வழங்கி வரும் ஜனநாயக சேவை எத்தகையது என்பதை உலகம் நன்கு உணர்ந்துள்ளது. மேலும், தற்போது பாகிஸ்தானில் ஜனநாயகத்தை புதைகுழிக்கு அனுப்பிய முஷாரப்பின் பின் அமெரிக்காவின் கையிருப்பதையும் உலகமறியும்.
பர்மாவின் இயற்கை வளங்கள் மீது கண் வைத்து காய்நகர்த்தும் நாடுகள் ஒரு புறமும், பர்மிய மக்களுக்கு ஜனநாயக ஒளி பிறக்க வேண்டும் என்று விரும்புகிற நாடுகள் மறுபுறமும் என இருமுனைகளில் செயலாற்றுகின்றன.
தற்போது பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுக்க ஐக்கிய நாடுகள் சபை இப்ராஹிம் கம்பாரியை தூதுவராக அனுப்பி வைத்து அங்குள்ள இராணுவ ஆட்சியாளர்களிடமும், ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி-யிடமும் பேச்சுவார்த்தை களை நடத்தி வருகிறது. மறுபுறத்தில் அமெரிக்கா பர்மா மீது அழுத்தமான பொருளாதார தடைகளை விதிக்கப்போவதாக மிரட்டி வருகிறது. அதன் அர்த்தம் என்ன தெரியுமா? பர்மிய உழைக்கும் மக்களை மேலும் பட்டினி போட்டு பணிய வைப்பது என்பதுதான். அல்லது சர்வாதிகாரி தான் ஷா இராணுவ அரசு அமெரிக்காவின் சொல்லைக் கேட்கும் கிளிப்பிள்ளையாக மாற வேண்டும் என்பதுவே அதன் உள்நோக்கம். அல்லது பர்மாவில் இராணுவ ஆட்சியாளர்களுக்கு பதிலாக தங்களது கைப் பாவையை கொண்டு வரவேண்டும் என்ற ஜார்புஷ் மற்றும் கண்டலிசா ரைசின் விருப்பம்.
மேலும், தென் கிழக்கு ஆசிய நாடான பர்மா புவி அரசியல் ரீதியாக மிகவும் கேந்திரமான பகுதியாக விளங்குகிறது. குறிப்பாக, சீனாவின் 2210 கிலோ மீட்டர் எல்லையை அது பகிர்ந்து கொண்டுள்ளது. மறுபுறம் இந்தியா, தாய்லாந்து உள்ளதால் அமெரிக்காவின் இராணுவப் பார்வை அங்கு விரியாமல் இருக்குமா? இந்திய - அமெரிக்க இராணுவ ஒப்பந்தத்தை பயன்படுத்தி யுத்த தந்திர ரீதியாக சீனாவிற்கு எதிரான நிலையெடுத்து வருவதை இடதுசாரிகள் கண்டித்து வரும் நிலையில், தற்போது அது பர்மாவை பயன்படுத்தி தன்னுடை எதிர்கால இராணுவ திட்டத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. மேலும் பர்மா 30 டிரில்லியன் கன அடி இயற்கை எரிவாயுவை கொண்டுள்ள ஒரு நாடு என்பதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது! பெட்ரோலிய வளத்திற்காக ஒரு ஈராக் என்றால் இயற்கை எரிவாயுவிற்காக பர்மா தேவைப்படாதா? ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி இயற்கை வாயுத் திட்டத்தை புதைகுழிக்கும் அனுப்பத் துடிக்கும் அமெரிக்காவின் சூட்சமம் இங்குதான் உள்ளது. மொத்தத்தில் அமெரிக்காவின் உதட்டளவிலான ஜனநாயக சேவை என்பது நிலைகுலைந்து வரும் தன்னுடைய டாலர் பொருளாதாரத் தோடு தொடர்புடையதே என்று அறுதியிட்டுக் கூறலாம்.
ஏகாதிபத்திய எடுபிடி எழுத்தாளர்கள் அமெரிக்காவை ஜனநாயக காவலராக சித்தரிப்பதோடு, சீனாவை ஜனநாயக எதிரியாகவும் காட்டி வருகின்றனர். சீன மற்றும் பர்மாவின் வரலாற்றை படிப்பவர்களுக்கு ஒரு விஷயம் நன்றாக புரியும். இந்த இரு நாடுகளுக்கும் 17 ஆம் நூற்றாண்டிலிருந்தே நல்லுறவு இருந்து வருவதை காண முடியும். மேலும், பிரிட்டிஷ் மற்றும் ஜப்பானிய ஏகாதிபத்தியத்திடமிருந்து 1948 ஜனவரியில் விடுதலைப் பெற்ற பர்மாதான் உலகிலேயே முதன் முதலில் சோசலிச சீனாவை ஆதரித்த கம்யூனிஸ்ட் அல்லாத முதல் நாடு என்பது குறிப்பிடத்தக்கது. வரலாற்று ரீதியாக நல்லுறவை வைத்துக் கொண்டுள்ள சீனாவிற்கு எதிராக விஷம் கக்கும் பிரச்சாரத்தை முதலாளித்துவ எடுபிடிகள் தொடர்ந்து செய்து வருவது அமெரிக்க வழியிலான ஜனநாயகத்தை காப்பதற்கே தவிர பர்மாவின் நலனுக்காக அல்ல!
விடுதலைப் போரிலிருந்து இராணுவ ஆட்சியை நோக்கி...
பர்மாவை தனது காலனியாக வைத்திருந்த பிரிட்டிஷ் ஏகாதிபத்தி யத்திடமிருந்தும், ஜப்பானிய பாசிஸ்ட்டுகளிட மிருந்தும் அந்நாட்டு கம்யூனிஸ்ட்டுகளும், தேச பக்தர்களும் இணைந்து நின்று வீரஞ்செறிந்த போராட்டம் நடத்தியதன் விளைவாக 1948 இல் பர்மா சுதந்திர நாடாக மாறியது.
அந்நாட்டின் விடுதலைக்காக பாசிஸ்ட்டு எதிர்ப்பு முன்னணி என்ற பெயரில் பல்வேறு தேச பக்த சக்திகளை ஒன்றிணைத்து களம் கண்டு போரிட்ட பர்மா கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் செயலாளர் ஆங் சான் மற்றும் அவரது சகாக்கள் 1947 இல் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர். அப்போது நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி பொறுப்பை ஏற்பதற்கு முன் இந்த சம்பவம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து பாசிஸ்ட் எதிர்ப்பு முன்னணியில் ஆங் சானோடு இணைந்து பணியாற்றிய யூ நூ சுதந்திர பர்மாவின் முதல் பிரதமரானார்.
விடுதலைப் பெற்ற பர்மாவின் முதல் பிரதமராக வரவேண்டிய ஆங் சானை ஒழித்துக் கட்டிய ஆளும் வர்க்கம் அந்நாட்டில் வலுவாக இருந்த கம்யூனிஸ்ட் போராளிகளையும், ஜனநாயக உரிமைகளுக்காக களம் கண்டவர்களையும் கருவறுப்பதற்கான தொடர் சதி வேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக யூ நூ தலைமையிலான கட்சியில் ஏற்பட்ட பிளவைத் தொடர்ந்து ஏற்பட்ட குழப்பமான அரசியல் நிலைமையை பயன்படுத்திக் கொண்ட பர்மா இராணுவத் தளபதி நீ வின் 1962 இல் ஆட்சியை கைப்பற்றிக் கொண்டார்.
ஜெனரல் நீ வின் தலைமையிலான இராணுவ சர்வாதிகார அரசு ‘பர்மா சோசலிஸ்ட் திட்ட கட்சி’ என்ற பெயரில் புதிய கட்சியை ஏற்படுத்தியதோடு ‘பர்மிய வழியிலான சோசலிசம்’ என அலங்காரமான பெயரில் பல கட்சி செயல்பாடுகளையும், சட்டமன்றம், நீதிமன்றம் போன்றவற்றை முடக்கியதோடு, சர்வதேச சமூகத்திடமிருந்தும் பர்மாவை துண்டித்துக் கொண்டு, அனைத்து தொழில்களையும் தேசவுடைமையாக்கிக் கொண்டு (இராணுவ உடைமையாக்கிக் கொண்டு) முன்னேறப்போவதாக கூறி, பர்மா கம்யூனிஸ்ட் கட்சியை (சி.பி.பி.) சட்ட விரோதம் என தடை செய்து, அவர்களை வேட்டையாடவும் செய்ததோடு, பல கட்சி ஜனநாயக நடைமுறையை சவப்பெட்டிக்குள் தள்ளியது. மொத்தத்தில் ஆட்சிமன்றம், நீதிமன்றம், பத்திரிகை சுதந்திரம் போன்ற ஜனநாயக உரிமைகளை காலில் போட்டு மிதித்தது.
தொடர்ந்து இராணுவ வீரர்களின் படை பலத்தை அதிகரித்ததும், அவர்களுக்கு சலுகைகள் மேல் சலுகைகளை வாரி வழங்கியும் அடக்குமுறை - சர்வாதிகாரத்தின் மூலம் ஆட்சியை தக்க வைத்து வந்தது. இதன் மூலம் அனைத்து வழியிலும் பர்மா சுதந்திர காற்றை சுவாசிப்பதிலிருந்து நிறுத்திக் கொண்டது. இதனால் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகள் அம்மக்களை படுகுழியில் தள்ளியது. இராணுவ அதிகாரிகளின் கைகளில் கொண்டு வரப்பட்ட நிறுவனங்கள் முறையாகவும், திறமையாகவும் நிர்வகிக்காமல், ஊழலுக்கு இரையாகி முடங்கிப் போனது.
இந்நிலையில், மேலும் ஒரு தாக்குதலை தொடுத்தது நீ வின் அரசு. அதாவது, பர்மா ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்று அதிரடியாக அறிவித்தது. இதனால் உழைக்கும் மக்கள் சிறுகச் சிறுக சேகரித்து வைத்த சேமிப்பு தொகை அனைத்தும் மொத்தமாக பறிபோனது. குறிப்பாக 1960 இல் 670 டாலராக இருந்த தனிநபர் வருமானம் 1989 இல் 200 டாலராக குறைந்தது. அரிசி ஏற்றுமதியில் முதலிடத்தில் திகழ்ந்த பர்மா மோசமான ஆட்சியின் காரணமாக அந்நாட்டு மக்களை பிச்சை எடுக்கும் நிலைக்குத் தள்ளியது. இதன் விளைவாக ஏற்பட்டதே 1988 எழுச்சி.
இந்த எழுச்சியை ஒடுக்குவதற்கு சக்தியற்ற நீ வின் பதவி விலகி அந்த இடத்தில் தனது கைப்பாவைகள் பலரை பதவியில் அமர்த்தினார். இருப்பினும் மக்களின் தொடர் போராட்டம் மற்றும் எழுச்சியின் விளைவாக 1989 இல் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழு ஆட்சியை கைப்பற்றியது. இந்தக் குழு பர்மாவில் அமைதியையும் - வளர்ச்சியையும் நிலை நாட்டப் போவதாக கூறிக் கொண்டு ‘அரசு அமைதி - மற்றும் வளர்ச்சிக் கவுன்சில்’ என்ற பெயரில் இராணுவ உயர் அதிகாரிகளைக் கொண்ட குழுவின் (ஜூன்டா) ஆட்சியாக தன்னை மாற்றிக் கொண்டு புதிய வடிவம் எடுத்தது. அதன் தற்போதைய சர்வாதிகாரிதான் ‘ஜெனரல் தான் ஷா’.
1988- 89களில் பர்மாவில் ஜனநாயகத்திற்கான போராட்டம் வீறு கொண்டு நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழலில் ஆங் சாங் சூ குயி-இன் தாயாரின் உடல் நிலை பாதிப்படைந்ததைக் கேள்வியுற்று சூ குயி தன்னுடைய கனவர் மற்றும் இரண்டு குழந்தைகளுடன் பர்மாவிற்கு திரும்பினார். ஆங் சான் சூ குயி-யின் தந்தை ஆங் சான் பர்மிய மக்களின் அடையாளம். அந்த பாரம்பரியத்தில் வந்த ஆங் சான் சூ குயி-யை சந்திக்க மக்கள் சாரை சாரையாக வந்தனர். அத்தோடு நாட்டில் நிலவும் அடக்குமுறை, சர்வாதிகாரம் மற்றும் தங்களது துன்ப துயரங்களை விளக்கியதோடு, அவருக்கு தங்களது ஆதரவையும் தெரிவித்தனர்.
பர்மாவின் அப்போதைய குழப்பமான அரசியல் நிலையும், போராட்ட சூழலும்தான் ஆங் சான் சூ குயி-யை களத்திற்கு இழுத்து வந்தது. உழைக்கும் மக்களோடும், போராடும் மாணவர்களோடும் கரம் கோர்த்த ஆங் சான் சூ குயி நாடு முழுவதும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு ஜனநாயகப் பாதையில் பர்மாவை மீட்டெடுக்க வேண்டும் என்று முழங்கினார். இதற்கு நாடு முழுவதும் பலத்த ஆதரவு கிடைத்தது. அத்தோடு தனது ஆதரவாளர்களைக் கொண்டு என்.எல்.டி. - நேஷனல் லீக் பார் டெமாக்ரசி (ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி) என்ற பெயரில் புதிய கட்சியை துவக்கினார். பல்வேறு ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் இந்த அமைப்பில் தங்களை இணைத்துக் கொண்டனர்.
இரத்தக் கறை படிந்த 88
இதைத் தொடர்ந்து வீறு கொண்டு எழுந்த போராட்ட பேரலையை ஒடுக்குவதற்கு திட்டமிட்ட இராணுவ அரசு ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி 1988 அன்று (8.8.1988) 3000க்கும் மேற்பட்ட போராட்ட வீரர்களை துப்பாக்கி குண்டுக்கு இரையாக்கியது. ஜனநாயக ரீதியான அமைதி வழியிலான போராட்டத்தை இரத்த வெள்ளத்தில் மூழ்கடித்தது இராணுவ சர்வாதிகார அரசு. இதில் 500க்கும் மேற்பட்ட புத்த துறவிகள் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான மாணவர்களும், தேச பக்தர்களும் இந்த துப்பாக்கி சூட்டிற்கு பலியாகினர். பல்லாயிரக்கணக்கான மக்கள் சிறையில் அடைக்கப்பட்டதோடு, ஆயிரக்கணக்கானோர் நாட்டை விட்டே விரட்டியடிக்கப் பட்டனர். லட்சக்கணக்கான மக்கள் தாங்கள் குடியிருந்த இடத்திலிருந்து புலம் பெயர்ந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட ஆங் சான் சூகுயி வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது கணவர் மற்றும் குழந்தைகள் கூட அவரோடு இருப்பதற்கு அனுமதிக்கப்பட வில்லை. இரத்த வெறி பிடித்த இராணுவ ஆட்சியாளர்கள் துப்பாக்கி முனையில் தங்களது ஆட்சியை நிலை நிறுத்திக் கொண்டனர்.
இவ்வாறு சிறைப் பிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான மாணவர்கள் இன்றும் கூட சிறைக் கொட்டடியில் அடைபட்டு கிடக்கின்றனர். ஆங் சான் சூகுயி தொடர்ந்து 17 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். உலகிலேயே அதிக நாட்கள் சிறையிலிருந்த முதல் பெண் ஆங் சான் சூ குயி என்பது குறிப்பிடத்தக்கது. இவரை இன்னொரு நெல்சன் மண்டேலா என்று அழைக்கின்றனர். மாணவர் போராட்டத்திற்கு தலைமை தாங்கிய மின் கியோ நியாங் 1989 முதல் 2005 ஆம் ஆண்டு வரை சிறைவாசம் இருந்தார். இளைஞராக சிறைக்குச் சென்றவர் முதுமையோடு வெளியே வந்த காட்சி இராணுவ ஆட்சியின் அடையாளத்திற்கு எடுத்துக்காட்டாக உள்ளது. இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்களைத்தான் ‘88 ஜெனரேஷன்’ என்றும் அழைக்கின்றனர். அந்தப் போராட்டத்தில் ஈடுபட்ட பலரது குடும்பங்கள் சிதறி சின்னாபின்னமாய் போனது. அவர்களுக்கு உதவுவதற்காக தாய்லாந்திலிருந்து பல உதவிக்குழுக்கள் இயங்கி வருகிறது.
தற்போது நடைபெறும் ஜனநாயகத்திற்கான போராட்டத் திலும் மின் கியோ நியாங் ஈடுபட்டதால் மீண்டும் அவரை சிறைக்குள் தள்ளியுள்ளது இராணுவ அரசு.
கேலிக் கூத்தான ஜனநாயகம்!
1988ஆம் ஆண்டு நடைபெற்ற மகத்தான எழுச்சியைத் தொடர்ந்து 1990 மே மாதம் 27 ஆம் தேதி பொதுத் தேர்தலை நடத்தியது இராணுவ அரசு. இத்தேர்தலில் 93 கட்சிகள் போட்டியிட்டன. இதில் ஆங் சான் சூ குயி-இன் ‘என்.எல்.டி. - ஜனநாயகத்திற்கான தேசிய கட்சி’ மகத்தான வெற்றி பெற்றது. 485 இடங்களில் 392 இடங்களை இக்கட்சி கைப்பற்றியது. மொத்த இடத்தில் இது 80 சதம் என்பது குறிப்பிடத்தக்கது. இராணுவ ஆட்சியாளர்கள் எதிர்பாராத அளவில் இந்த வெற்றி அமைந்ததால், ஆங் சான் சூகுயி தலைமையில் ஜனநாயக அரசை அமைப்பதற்கு அனுமதிக்காமல், மக்கள் தீர்ப்பை தூக்கியெறிந்து ஆட்சி அதிகாரத்தை இராணுவ ஆட்சியாளர்களே தக்க வைத்துக் கொண்டுள்ளனர். முதலாளித்துவ சர்வாதிகாரம் என்பது ஜனநாயகத்திற்கு எப்போதும் நேர் விரோதமானது. சலகவிதமான அடக்குமுறைகளையும் மேற்கொண்டு ஆட்சி அதிகாரத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளது.
இந்த சம்பவங்களைத் தொடர்ந்து ஜெனரல் தான் ஷா தலைமையிலான ஆட்சியாளர்கள் பர்மாவிற்குள் வெளிநாட்டு முதலீடுகளுக்கான கதவுகளை திறந்து விட்டனர். இதனால் பர்மாவின் எண்ணை வளம், அரிசி உற்பத்தி, தேக்கு மர ஏற்றுமதி, வைரச் சுரங்கங்கள் என அனைத்து துறைகளிலும் தாராளமாக அந்நியர்கள் நுழைந்து கொள்ளையடிக்க அனுமதிக்கப்பட்டது.
கொள்ளை போகும் பர்மிய வளம்
அமெரிக்காவின் ‘ச்செர்வான்’ ஆயில் நிறுவனமும், பிரான்சின் ‘டோட்டல்’ நிறுவனமும், தாய்லாந்தின் ‘ஃபேம்’ நிறுவனமும் எண்ணை வளத்தை பங்கு போட்டு கொண்டன. மேலும் தாய்லாந்து வழியாக பல்வேறு துறைகளில் முதலீடுகள் செய்யப்பட்டு அந்நாட்டை மொத்தமாக சுரண்டி வருகின்றனர். பர்மாவிலிருந்து 25 சதவீதம் துணியை அமெரிக்கா இறக்குமதி செய்து வருகிறது. இதன் மூலம் கிடைக்கும் டாலர்களை கொண்டு இராணுவ அரசு தனது படை பலத்தை பெருக்கிக் கொள்வதையே பிரதான தொழிலாக மேற்கொண்டு வருகிறது. தற்போது மியான்மர் - பர்மா இராணுவத்தில் நான்கு லட்சத்திற்கும் மேற்பட்டோர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அத்தோடு போராட்டக்காரர்களை ஒடுக்குவதற்கு நவீன ரக அயுதங்களையும் வாங்கி குவித்து வருகிறது.
இராணுவ ஆட்சியாளர்கள் 1997 ஆம் ஆண்டு முதல் அரசின் பட்ஜெட் - வரவு செலவு கணக்கை வெளிப்படையாக அறிவிப்பதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசின் மொத்த வருவாயில் 40 - 60 சதம் வரை இராணுவத்திற்கே செலவழிக்கப் படுகிறது. கல்விக்கும் - சுகாதாரத்திற்கும் வெறும் ஒரு சதவீதம் மட்டுமே ஒதுக்கப்படுகிறது. மொத்தத்தில் இராணுவத்திற்கும் அவர்களது குடும்பத்திற்கும் வாரியிறைத்து தங்களது ஆட்சி அதிகாரத்தை துப்பாக்கி முனையில் தக்க வைத்துக் கொள்கிறது பர்மிய அரசு.
அந்நாட்டின் வேலையிண்மை தற்போது 10 சதவீதத்திற்கும் மேல் அதிகரித்துள்ளது. மேலும், 10 சதவீதம் செல்வந்தர்களிடம் அந்நாட்டின் மொத்த வருவாயில் (ஜி.டி.பி.) 32.4 சதம் செல்வம் குவிந்துள்ளது. அதேசமயம் 10 சதவீதம் உழைக்கும் மக்களிடம் வெறும் 2.8 சதவீதமே சென்றடைகிறது. அரிசி ஏற்றுமதியில் முக்கிய இடத்தை வகித்த பர்மா இன்றைக்கு ஓபியத்தை (போதைப் பொருள்) ஏற்றுமதி செய்து வருவதில் இருந்தே இராணுவ ஆட்சியாளர்களால் சீரழிக்கப்பட்ட நிலையை உணர முடியும். ஓபியம் ஏற்றுமதியில் முதலிடத்தை வகிப்பது அமெரிக்க வழியிலான ஜனநாயகம் நடைபெறும் ஆப்கானிஸ்தான் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்தில் திரு. வால்கவ் ஹெவல் மற்றும் திரு. டெஸ்மண்ட் எம். டிட்டு என்ற இரு நோபல் பரிசு பெற்ற ஆய்வாளர்கள் பர்மா குறித்து ஆய்ந்து ஐ.நா.விற்கு சமர்ப்பித்த அறிக்கையில் பல அதிர்ச்சிசூட்டும் தகவல்கள் வெளியா கியுள்ளது. குறிப்பாக, அந்நாட்டு மக்கள் தொகையில் 75 சதம் பேர் வறுமைக் கோட்டிற்கு கீழே இருப்பதாக தெரி வித்துள்ளனர். ஐந்து வயதிற்கு உட்பட்ட 36 சதவீத பர்மிய குழந்தைகள் குறைந்த எடையுடன் இருப்பதாகவும், மூன்றில் ஒரு பகுதி குழந்தைகள் 5 ஆம் வகுப்பு வரைகூட பள்ளி கல்வியை முடிப்பதில்லை என்றும் தெரிவித்துள்ளனர். மேலும் 2005 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி பர்மா அகதிகளில் 5 இலட்சம் பேர் தாய்லாந்திலும், 15,000 பேர் பங்களாதேஷிலும், 60,000 பேர் இந்தியாவிலும், 25,000 பேர் மலேசியாவிலும் மேலும் 2,50,000 பேர் இசுலாமிய நாடுகளில் தஞ்சமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இது தவிர சின்ஸ், கச்சின்ஸ், ஷான், கரன்ஸ் போன்ற சிறுபான்மை இன மக்களை அவர்களது வாழிடங்களி லிருந்து இடம் பெயர வைக்கப்பட்டுள்ளனர். மேலும், அங்குள்ள சிறுபான்மை தேசிய இனத்தவரிடையே பகைமையை உருவாக்கி, அவர்களுக்குள் மோதலை ஏற்படுத்தி வருவதோடு, பர்மியர்கள் என்ற தேசிய அடையாளத்தையும் அழித்து வருகின்றனர். மேலும், 2500க்கும் மேற்பட்ட கிராமங்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
இராணுவ ஆட்சியாளர்களின் ஊழல் மற்றும் ஊதாரித் தனத்தாலும், அந்நிய நிறுவனங்கள் பர்மாவின் செல்வத்தை கொள்ளையடித்துச் செல்வதாலும் ஏற்பட்ட நெருக்கடியின் ஒரு பகுதியாகத்தான் தற்போதைய பெட்ரோலிய பொருட்களின் விலை உயர்வும், அதையொட்டிய போராட்டமும் விண்ணை கீறிக் கொண்டு வந்துள்ளது.
துப்பாக்கி முனைகளை எதிர் கொள்ள அந்நாட்டின் புத்த துறவிகள் அமைதியான வழியில் தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 88 ஆம் ஆண்டு அவர்கள் போராட்டக் காலத்தின் போது இராணுவ ஆட்சியாளர்களின் குடும்ப விழாக்களில் எதிலும் பங்கேற்கப்போவதில்லை என்றும், மேலும் பாரம்பரிய மத ரீதியான சடங்குகளைக் கூட நடத்த மாட்டோம் என்றும், அவர்கள் வழங்கும் எந்த கொடையையும் ஏற்க மாட்டோம் என்றும் அறிவித்தனர். அத்தகைய போராட்ட வழி முறைகளையும் தற்போது கையாண்டு வருகின்றனர்.
பர்மா கலாச்சார முறைப்படி அந்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் புத்த துறவியாக செயலாற்று வதற்கு ஒருவரை அனுப்பி வைப்பது வழக்கம். பர்மா இராணுவத் திற்கு நிகராக அமைப்பு ரீதியாக திரண்டுள்ளவர்கள் புத்த துறவிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கிட்டத்தட்ட 5 லட்சம் புத்த துறவிகள் அந்நாட்டில் உள்ளனர். இவர்கள் அனைவரும் ஜனநாயக போராளி ஆங் சான் சூ குயி மற்றும் இதர ஜனநாயக அமைப்புகளின் போராட்டங்களுக்கு நேசக்கரம் நீட்டி வருகின்றனர். பர்மாவில் நடைபெறும் ஜனநாயக போராட்டத் திற்கு உலகம் முழுவதும் உள்ள உழைப்பாளி மக்கள் ஆதரவு இயக்கங்களை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் உள்ள அரசியல் கட்சிகளிலேயே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிதான் முதன் முதலில் பர்மாவிற் கான போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்ததோடு, பர்மாவில் ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கு இந்திய அரசும் ராஜதந்திர ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
மேலும் ஏகாதிபத்திய சக்திகள் அந்நாட்டின் மீது கொண்டு வரும் எந்தவிதமான பொருளாதார தடைகளையும் ஏற்க முடியாது என்று வலியுறுத்தி வருகிறது.
உலகம் முழுவதும் உள்ள ஜனநாயக சக்திகள், பர்மாவில் கைது செய்து பல வருடங்களாக சிறையில் உள்ள அரசியல் கைதிகள், புத்த துறவிகள் மற்றும் போராட்டக்காரர்களை உடனடியாக விடுதலை செய்வதோடு, அந்நாட்டில் ஜனநாயக அரசு அமைய வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றன.
அத்தோடு, பர்மாவின் ஜனநாயகத்தை புதைகுழிக்கும் அனுப்பும் அந்நாட்டு இராணுவ ஆட்சியாளர்களுக்கு ஆதரவான பர்மாவின் அரசியல் சாசன சட்டத்தையும் திருத்த வேண்டும் என்று அங்குள்ள ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகள் வலியுறுத்தி வருகின்றன.
20ஆம் நூற்றாண்டு காலனியாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் மகத்தான பங்கினை ஆற்றியது. 21ஆம் நூற்றாண்டு பர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம், இந்தோனேஷியா என பல்வேறு நாடுகளில் நிலவும் இராணுவ ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தை எதிர்த்து ஜனநாயகத்தை மீட்பதற்கான போராட்டத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இத்தாலிய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் அந்தோனியா கிராம்சி கூறியது போல், ‘சோசலிசத்திற்கான போராட்டத்தில் நொடிப் பொழுது கண்ணயர்ந்தால் கூட பாசிசம் எனும் கொடுந் தண்டனை நம்மை வந்து சேரும்’ என்ற உன்னதமான கூற்று எவ்வளவு நிதர்சனமானது என்பதை பர்மா விஷயத்தில் உணர முடிகிறது.
இறுதியா, இந்தியாவிலும் கூட பிற்போக்கு ஜனநாயக சக்திகள் சமீப ஆண்டுகாலமாக தற்போது நிலவும் ஜனநாயகத்திற்கு எதிராக தொடர் தாக்குதல்களை தொடுத்து வருகின்றனர். குறிப்பாக, ‘இரு கட்சி ஆட்சி முறை’, ‘ஜனாதிபதி ஆட்சி முறை’, ‘நிலையான அரசு - ஐந்தாண்டுகளுக்கு நீடித்த ஆட்சி முறை’ போன்ற கோஷங்களை முன் வைப்பதை பார்க்கிறோம். இவையெல்லாம் உழைப்பாளி மக்களின் நலன்களை காப்பதற்காக அல்ல; மாறாக, ஏகாதிபத்திய - பெருமுதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் தங்கு தடையற்ற சுரண்டலை பாதுகாப்பதற்கே. எனவே, இந்திய உழைப்பாளி மக்கள் விழிப்போடு இருந்து ஜனநாயகத்தை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் உறுதியோடு செயலாற்ற வேண்டியுள்ளது.
இந்திய மார்க்சிய அறிஞர் பேராசிரியர் பிரபாத் பட்நாயக் கூறுவதுபோல், ‘ஜனநாயகம் வர்க்கப் போராட்டத்தின் களம்.’ எனவே அதனை பாதுகாப்பதற்கான போராட்டத்தில் நாம் முன்னிற்க வேண்டும். பர்மாவில் நடைபெறும் ஜனநாயகத்திற் கான போராட்டத்திற்கு நேசக்கரம் நீட்டுவோம்! வெற்றிபெற வாழ்த்துவோம்!!

ஆதாரம் :
1. பர்மாவின் ஜனநாயகப் போராளி, ஆங் சான் சுய் குய்,
என். ராமகிருஷ்ணன், சவுத் ஏசியன் புக்ஸ், 1992.
2.டெக்கான் க்ரானிக்கல்
3.பிரண்ட் லைன்
4.பீப்பிள்ஸ் டெமாக்ரசி
5.http://en.wikipedia.org/wiki/Burma
6.http://www.cpa.org.au
7.http://www.zmag.org
8.http://www.CrisisGroup.org

October 15, 2007

வலை வீசும் மாயமான்கள்!

உலகயமாக்கல் யுகத்து நவீன வார்ப்புகளே கார்ப்பரேட் முதலாளித்துவம். இந்தியாவின் சேவைத் துறையை குறிவைத் துப்பாயும் இத்தகைய பன்னாட்டு முதலாளித்துவ நிறுவனங்கள் நமது மக்களிடமிருந்து எவ்வாறெல்லாம் பிக்பாக்கெட் அடிக்கின்றன என்பது சுவராசியமானது.‘வலது கை கொடுப்பது இடது கைக்கு தெரியக்கூடாது’ என்று கூறுவார்கள். வலது கை எடுப்பது இடது கைக்குத் தெரியாமல் வெகு நுட்பமாகக் கொள்ளையடித்து வருகின்றன பன்னாட்டு நிறுவனங்கள்.
இதில் குறிப்பிடத்தக்கது இன்சூரன்ஸ் துறை. சமீபத்தில் ஒரு அந்நிய நிறுவனமும் ஒரு இந்திய நிறுவனமும் இணைந்து, மக்களை தங்களது இன்சூரன்ஸ் நிறுவனத்தின் பக்கம் கவர்வதற்காக வெகுஜோரான திட்டத்தை தீட்டி யுள்ளார்கள். இந்தத் திட்டத்தின் மூலம் எலிப்பொறிக்குள் மாட்டிய அனுபவமே நமது மக்களுக்கு மிஞ்சுகிறது.கடந்த ஒரு மாத காலமாக பலருடைய செல்பேசிக்கு மிக இனிமையான பெண் குரலில் மென்மையான அழைப்பு வருகிறது. அநேகமாய் உங்களுக்கும் அந்த அழைப்பு வந்திருக்கக் கூடும். இல்லையேல் இனிமேல் வரக்கூடும். குறிப்பிட்ட நிறுவனத்திலிருந்து பேசுவதாக அறிமுகப்படுத்திக் கொண்டு, “உங்களுக்கு முற்றிலும் இலவசமாக லைஃப் டைம் பாலிசி வழங்குகிறோம், அதற்காக ஐம்பது பேர்களைத் தேர்ந்தெடுக்கப் போகி றோம். அதில் உங்களது செல்பேசியின் அதிர்ஷ்ட எண் விழுந் தால் உங்களுக்கு தெரிவிக்கிறோம்,” என்று மிகவும் கனிவான குரலில் முதல் வலை வீசப்படுகிறது.மேலும், தொலைபேசியில் அழைக்கப்பட்டவருக்கு திருமணம் ஆகியுள்ளதா என்பதும் உறுதிப்படுத்திக் கொள்ளப்படும். “உங்களை அழைத்தவரின் பெயர் நிவேதிதா” (பெயர் மாற்றப் பட்டுள்ளது) என்று கூறிவிட்டு மிகுந்த நன்றியுணர்வுடன் அழைப்பை முடித்துக் கொள்வார்கள்.
கார்ப்பரேட் நிறுவனங்களின் வாடிக்கையாளர்களைக் கவர்வதற்காக நடத்தப்படும் இதுபோன்ற கால் சென்டர்களில் இப்படி அழைக்கிற வேலைக்கு என, குரல் தேர்வு (அறிவுத் தேர்வல்ல!) வைத்து வசீகரிக்கும் நவீன மாரிசன்களை தேர்ந்தெடுக்கின்றனர் என்பது குறிப்பிட வேண்டியது.மறுநாள் அதே குரல் அதே செல்பேசி எண்ணை தொடர்பு கொண்டு, “தாங்கள் எங்களுடைய சிறப்புக் குலுக்கலில் தேர்ந் தெடுக்கப்பட்டிருக்கிறீர்கள்,” என்று மிகுந்த மகிழ்ச்சியோடு அறிவிக்கின்றனர். “இன்று மாலையே நீங்களும் உங்களது மனைவியும் அலுவலகத்திற்கு வந்து எங்களுடைய இலவச லைஃப் டைம் பாலிசியை பெற்றுக் கொள்ள வாருங்கள்,” என்று மிகுந்த கனிவுடன் - அணுசரணையோடு - அன்போடு அழைக்கிறது அந்தக் குரல்.அழைக்கப்பட்டவர் இன்றைக்கு முடியவில்லை, நாளை வருகிறேன் என்று கூறினால் கூட அந்தக் குரல் மிகுந்த அக்கறையோடு “பரவாயில்லை சார். நான் நாளை மறுபடியும் உங்களை தொடர்பு கொள்கிறேன்,” என்று கனிவோடு கூறி விட்டு முடித்துக் கொள்ளும்.விடாது கருப்பாக, மறுநாள் சூரியன் உதயமானதும், சூரியக் கதிர்களின் வேகத்தோடு போட்டிப் போட்டுக் கொண்டு, உங்களை மீண்டும் அந்த அலுவலகத்திற்கு வரவேற்கிறது அந்த இனிய குரல். “உங்களுக்கான நேரம் இன்று ஒதுக்கப்பட்டிருக்கிறது சார்.
உங்களுக்கு வாய்ப்பான நேரத்தை சொன்னால் அதற்கேற்ப எங்களது நிறுவனத்தில் அந்த பாலிசியை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்கிறோம்,” என்று அன்பும் அக்கறையும் குழைத்து அழைக்கப்படுகிறது. நீங்கள் எத்தனை முறை வேண்டாம் என்று ஒதுக்கினால் கூட, அவர்கள் மிக அழகாக உங்களை ஏற்கச் செய்து, மீண்டும், மீண்டும் எந்தவிதமான சலிப்பும் இல்லாமல் தொடர்ந்து அழைக்கிறார்கள். குறிப்பாக ஒரு விஷயத்தை மறக்காமல் வலியுறுத்துவார்கள். “இந்த பாலிசியை பெறுவதற்கு தாங்கள் வரும்போது, தங்கள் மனைவியுடன் வரவேண்டும்” என்பதுதான் அவர்களது அன்புக் கட்டளை.
உங்களது இலலறத்தின் மீது அவ்வளவு கரிசனம் - ஈடுபாடு!சரி, ஒருமுறை போய் பார்த்துவிடுவோம் என்ற மனநிலைக்கு நீங்கள் வந்துவிடுவீர்கள். மனைவியோடு அந்த நிறுவனத்தின் குளு குளு அலுவலகத்திற்குச் செல்பவருக்கு ஒரு அறிமுக எண் கொடுக்கிறார்கள். அவர்களை யார் தொடர்பு கொண்டது என்ற விவரத்தையும் பதிவு செய்து கொண்டு, இனிய முகத்தோடு வரவேற்று “உங்களுக்கான பாலிசியை தயாரிப்பதற்கும், வழங்குவதற்கும் ஒரு மணி நேரம் ஆகும்,” என்று முன்கூட்டியே கூறிவிடுகிறார்கள்.அதற்கு முன், ஒரு படிவத்தை கொடுத்து நிரப்பித்தருமாறு கேட்கப்படுகிறது. அந்தப் படிவத்தில் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. சொல்லப்போனால் ஒரு நம்மைப் பற்றி ஒரு குட்டி சென்சஸ் எடுத்து விடுகிறார்கள்!
இதுவரை நீங்கள் பாலிசி எடுத்திருக்கிறீர்களா? இல்லையென்றால் என்ன காரணம்? தங்கள் முன் நிற்கும் முக்கியமான பணியாக எதை கருதுகிறீர்கள் ? (மருத்துவம், கல்வி, திருமணம், வீடு கட்டுதல், பைக் - கார் வாங்குதல் என ஏதாவது ஒன்றை நிச்சயம் நீங்கள் தேர்ந்தெடுக்கும் விதமாக கேள்வியை அமைத்திருக்கிறார்கள்). அது மட்டுமா? உங்களது வருமானம் எவ்வளவு? மாதந்தோறும் நீங்கள் எவ்வளவு சேமிப்பீர்கள்? இப்படிப் பல கேள்விகள்... சுருக்கமாகச் சொன்னால், இதுபோன்ற ஒரு கேள்வித் தாளுக்கு மார்க்கெட்டிங் சர்வே எடுத்தால் ஒரு படிவத்திற்கு குறைந்தது ரூ. 50 வழங்குவார்கள். மேற்படி நிறுவனத்தின் புத்திசாலித் தனம் எந்தவிதமான கட்டணமும் இல்லாமலே தங்களுக்கான சர்வேயை எடுத்துக் கொள்கிறார்கள்.அப்புறம் என்ன?
உங்களைப் போல் வந்திருக்கும் பல ஜோடிகளை அழைத்துக் கொண்டு குளிரூட்டும் அறைக்கு அழைத்துச் செல்கிறார்கள். அங்கே பிஸ்கட்-டீ வழங்கப்படுகிறது. பின்னர் அந்த நிறுவனத்தின் இலவச பாலிசி திட்டம் குறித்து அறிமுகப் படுத்துகிறார்கள். அது வேறொன்றும் இல்லை; சாதாரணமான ஒரு விபத்து பாலிசி மட்டுமே! ஏதாவது விபத்து ஏற்பட்டு மரண மடைந்தால் ஒரு லட்சம் தருவதாக கூறப்படுகிறது. அதைத் தொடர்ந்து அழகான திரையில் - முன்கூட்டியே தயாரிக்கப்பட்ட படக்காட்சி போட்டுக் காட்டப்படுகிறது. திட்டங்களை மிக அற்புதமாக விளக்குகிறார்கள். பணம் இல்லாமல் எப்படியெல்லாம் மருத்துவத்திற்கு கஷ்டப்படுகிறார்கள்? கல்விச் செலவிற்கு கஷ்டப்படுகிறார்கள்? திருமணத்திற்கு கஷ்டப்படுகிறார்கள்? -என்று மிகுந்த அக்கறையோடு உணர்த்துகிறார்கள். சேமிப்பின் அருமை தெரியாமல் இவ்வளவு நாள் இருந்து விட்டோமே என்ற தன்னிரக்கத்தை மிக மென்மை யாக, நுட்பமாகப் பெண்ணின் மனதுக்குள் இறக்குகிறார்கள். அப்புறம் என்ன? “உடனே நீங்கள் உங்களுக்குத் தேவையான பாலிசியைத் தேர்ந்தெடுங்கள்,” என்று ஒரு பெரிய வலையை வீசி ஒரே அமுக்கு. குடும்பச் சுமையை சுமக்கும் பெண்கள் மிக எளிதில் உணர்ச்சிவயப்பட்டு இதற்கு இரையாகி விடுவார்கள் என்பது மேற்படி நிறுவனத்தின் கண்டு பிடிப்பு! இதற்காகத்தான் தவறாமல் மனைவியோடு வரச்சொல்லுகிறார்கள்! இப்போது புரிகிறதா கார்ப்பரேட் கரிசனம் என்னவென்று.அப்புறம் என்ன? உங்கள் கையில் அழகானதொரு உறையில் இலவச விபத்து பாலிசி வழங்கப்படுகிறது. உங்களுக்கு ஒரு லட்சம் தேவை என்றால் வந்த வழியிலேயே நீங்கள் நடு ரோட் டில் அடிபட்டு இறக்க வேண்டும். இதுதான் கார்ப்பரேட் தர்மம்! நீங்கள் தயாரா?
இதுபோன்ற விபத்து பாலியை எல்.ஐ.சி., ஓரியன்டல் இன்சூ ரன்ஸ் போன்ற பல நிறுவனங்கள் வழங்குகிறது. அதற்கான செலவு வெறும் ஆண்டுக்கு 65 ரூபாய் மட்டுமே! இத்தகைய சொற்பமான தொகையைக் கொண்ட பாலி சியை அந்த நிறுவனம் ஒரு லட்சம் பேருக்கு இலவசமாக வழங்கி னால்கூட அதில் எத்தனை பேர் விபத்தில் மரணமடையப் போகி றார்கள்? எவ்வளவு பேருக்கு ஒரு லட்சம் கிடைக்கப்போகிறது? மறு பக்கம் ஒரு லட்சம் பேரின் மூளைகளைச் சலவை செய்வதன் மூலம் 5000 பேராவது அவர்களது பாலிசிதாரர்களாக மாறுவார் கள் என்பதே அவர்களது புதுக்கணக்கு! உலகமயம் - கார்ப்பரேட் முதலாளித்துவம் எத்தகைய நவீன யுத்திகளையெல்லாம் பயன்படுத்தி மக்களின் செல்வா தாரத்தைச் சூறையாடுகிறது என்பதை இன்னும் விரிவாக அம்பலப்படுத்துக்கு வர வேண்டியுள்ளது.
இதுபோன்று பல தனியார் நிறுவனங்கள் புதுப் புதுத் திட்டங் களை உருவாக்கி தொழிலாளர்களுக்கான பாலிசிகளை வழங்கி மரணம் அடையும் தருவாயில் பட்டை நாமம் சூட்டிய கதைகள் அனுபவித்தவர்களுக்குத் தெரியும்!
இது தொடர்பாக ஏதாவது வழக்குத் தொடர வேண்டும் என்றால், அவர்களது சட்ட விதிகளின் படி மும்பைக்கோ - டெல்லிக்கோ செல்ல வேண்டும். அவ்வளவு தூரத்திற்கு சென்று நமது தொழிலாளி களின் குடும்பத்தாரால் வழக்குத் தொடுக்க முடியுமா? உலக மயம் என்பது மக்கள் மீதான கரிசனம் அல்ல மக்களிடம் இருக்கும் பணத்தின் மீதான கரிசனமே!

September 24, 2007

பா.ஜ.க. விரும்பும் ஜனநாயகம்!


இந்திய அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மூன்று முக்கிய விசயங்கள் தற்போது மையம் கொண்டுள்ளது.

1. இந்திய இறையாண்மை தொடர்பான இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு.

2. உலகமய பொருளாதார கொள்கைகளால் நாசமாகும் மக்கள் வாழ்வு.

3. சேது சமுத்திர திட்டம் - பா.ஜ.க. எதிர்ப்பு.

பா.ஜ.க. பாதையை பின்பற்றும் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏழைகள் பரம ஏழைகளாகவும் - நடுத்தர மக்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டும் - செல்வந்தர்களின் நிலை உயர்த்திற்கு செல்வதாயும் உள்ளது. விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளனர். பல மாநிலங்களில் கிரிக்கெட் ஸ்கோரை விட வேகமாக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. வேலையிண்மை ஒரு பக்கம். இப்படி பல்வேறு சிக்கலான பொருளாதார நிலைமைகளில் பொறுப்புள்ள எதிர் கட்சியான மதவாத பா.ஜ.க. இதற்கு எதிராக எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அல்லது மக்கள் இயக்கங்களோ நடத்துவதில்லை என்பதோடு இது சார்நத் விசயங்கள் முன்னுக்கு வருவதைக் கூட விரும்பாமல் ராமர் என்கினற் திரையைப் போட்டு மூடி மறைத்து இந்திய பெரும் முதலாளிகளுக்கு கூஜா தூக்கி குளிர் காய்ந்து வருகிறது.

அடுத்து அணு சக்தி உடன்பாடு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலை இதுதான் என்று அந்தக் கட்சிக்கு உள்ளே இருப்பவர்களால் கூட சொல்ல முடியில்லை. நாளுக்கு நாள் வேறு வேறு அறிக்கைகளைக் கொடுத்து மக்களை குழப்பி வருகிறது. இந்த உடன்பாட்டிற்கான துவக்கமே பா.ஜ.க.தான் என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய போபார் தீர்மானத்தின் ஒரு பகுதியாக அத்வானி பேச்சில் கூட அமெரிக்காவை நேச சக்தி என்று அழைத்துள்ளார். எனவே இந்திய இறையாண்மை - சுயச்சார்பு - தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற விசயங்களில் எல்லாம் மதவாத பா.ஜ.க.கவுக்கு உண்மையான அக்கறை இல்லையென்பதையே காட்டுகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் அணு சக்தி தொடர்பான விவாதத்தை முறையாக நடத்துவதற்கு மாறாக - காட்டுமிராண்டிகளின் கூச்சல் மற்றும் சீர்குலைவு நடவடிக்கையால் பாராளுமன்ற நடவடிக்கையே முடங்கியுள்ளது. இந்த விசயத்தில் கடுமையாக அம்பலப்பட்டுப் போன பா.ஜ.க. ராமரையே மீண்டும் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது.

சேது சமுத்திர திட்டம் என்பது இன்றைக்கு வகுக்கப்பட்டதல்ல 150 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் கடற்படை தளபதியால் வகுக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுவதற்கான வாய்புகள் உண்டு. இந்த திட்டம் தமிழக மக்களின் வெகுநாள் கனவு. இதற்காக குரல் கொடுக்காத அரசியல் கட்சியே தமிழகத்தில் இல்லை. ஏன் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் அறிக்கைகளில் கூட இது வெகுவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2001 சட்டமன்ற பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் கிழக்கிலிருந்து மேற்கும். மேற்கிலிருந்து கிழக்கும் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து இலங்கையை சுற்றி வர வேண்டியிருக்கிறது. இதை தவிர்க்கும் வகையிலும் கப்பல் பயணத்தின் தூரத்தை குறைத்திடும் வகையிலும் மற்றும் பயணிகள். சரக்கு கட்டணங்கள் குறைத்திடும் வகையிலும் பாக் ஜலசந்தியில் சேது சமுத்திர திட்டம் அமைக்கும் பணியினை துரிதப்படுத்தப்படும்.

2001 தேர்தலின் போதெல்லாம் ராமர் பாலத்தை - ராமர் கட்டியதாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு ஞானோதையம் ஏற்படவில்லை. அப்போது அவர்களுக்கு அயோத்தி ராமர் துணையாக இருந்தார். தற்போது உத்திரபிரதேசத்தில் 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசுதியை குடித்து தரைமட்டமாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களை படுகொலைக்கு உள்ளாக்கி ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையை மேற்கொட் சங்பரிவாரத்தின் ஜனநாயக நடவடிக்கை இதுதான். தற்போது அதே உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க.வை மக்கள் கை கழுவி விட்டதோடு - அவர்களை நான்காவது இடத்திற்கு தள்ளி விட்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன இருக்கவே இருக்கிறார் தென்னக இராமர்!


தற்போது சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையான நடவடிக்கையில் பா.ஜ.க. எழுப்பி வருகிறது. இது விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட சவால். ஏன் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களில் பெரு:ம பகுதியினர் கிட்டதட்ட 99.9 சதவீதம் பேர் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கின்றனர். அணு சக்தி தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரும் பா.ஜ.க. தமிழக மக்களின் உணர்வுகளை - ஜனநாயகத்தை மதிப்பதேயில்லை. மேலும் பா.ஜ.க.வின் ஜனநாயகம் என்பது உணர்வு பூர்வமான விசயத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி - கலவரத்தை தூண்டி ஜனநாயகத்தை சீர்குலைத்து மோடியிச பாணியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதுதான். இட்லர் இந்த பாணியை பின்பற்றிதான் அப்போது ஜர்மனியில் ஆட்சிக்கு வந்தான். தற்போது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க. தென்னக ராமரை முன்னிருத்துகிறது. தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் ஏமாற மாட்டார்கள்.

சங்பரிவாரத்தின் வால் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி என்ற காட்டுமிராண்டி கலைஞரின் தலையை வெட்ட வேண்டும். நாக்கை அறுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். அதற்கு பகவத் கீதையையும் துணைக்கு அழைக்கிறான். அதாவது தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.
இந்த விசயத்தில் மாற்றுக் கருத்தை வெளியிட்ட முதல் கருணாநிதியின் மகள் வீடு மீது தாக்குதல். பேருந்து ஒன்றிற்கு தீ வைத்து - இரண்டு பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது சங்பரிவாரத்தால். இறந்தவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. ராமர் வன்முறையை கையிலெடுக்கும் ராமர் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர்.

ராமர் என்கின்றன விஷ விதையை சமூகத்தில் விரைதத்து வன்முறையை தூண்டி - கலவரத்தை ஏற்படுத்து முனையும் பா.ஜ.க. தன்னுடைய அலுவலகம் தாக்கப்பட்டதாக ஜனநாயகம் பேசுவது கேலிக் கூத்தானது. ஜனநாயகம் - மற்றவர்களின் உணர்வை மதிப்பது என்ற சித்தாந்தம் சங்பவரிவாரங்களிடம் துளியையும் எதிர்பார்க்க முடியாது. ராம பக்தரான மகாத்மாவையே கொன்றவர்கள் அல்லவா இவர்கள். இவர்களது ராமர் கோட்சேயிஸ ராமர். இவர்களின் ஜனநாயகம் என்பது மோடித்துவ ஜனநாயகமே! பா.ஜ.க. இதைத்தான் விரும்புகிறது.

குஜராத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்த பாசிச கும்பலல்லவா இந்த இந்துத்துவ கும்பல். இவர்களுக்கும் உண்மையான இந்து மத பக்தர்களுக்கும் வித்தியாசம் உண்டு. அவர்கள் வள்ளலார் வழியில் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற நம்பிக்கை வழி வந்தவர்கள். இவர்களோ வாடிய பயிரை தீக்கிரையாக்கி இன்பம் காணும் மோடியிஸ்ட்டுகள்.

September 22, 2007

பா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்!


அயோத்தியில் ராமருக்கு கோயில் இது நேற்றைய அரசியல் முழக்கம் பா.ஜ.க.வுக்கு. உத்திரபிரதேச மக்கள் ராம பக்தர்களாக இருந்தாலும் பா.ஜ.க.வின் பித்தர்களாக இருக்க விரும்பவில்லை. ராமரை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றி விட்டனர். அதனால்தான் அவர்களை ஆட்சியில் இருந்தும் ஓரம் கட்டி விட்டனர். ஏன் பா.ஜ.க.வை நான்காவது இடத்திற்கே தள்ளி விட்டனர். அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன?
தென்னக இராமர் இருக்கிறால் அல்லவா? அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் புதிய அரசியல் முழக்கமாக ராமர் பாலத்தை முன்வைத்து தேசத்தில் பெரும் மதக்கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையிலேதான் மாற்றுக் கருத்தை தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞரின் அன்பு மகள் செல்வியின் வீட்டில் தாக்குதலை தொட்டுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை தொடுத்துள்ளனர் மதவெறி சங்பரிவார கும்பல். மேலும் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை மறித்து தீ வைத்து கொளுத்தி இரண்டு பேரை கொன்றுள்ளனர் இந்த இந்துத்துவவாதிகள்.
தற்போது வி.எச்.பி. ராம்விலாஸ் வேதாந்தி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும்ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும் - நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
ராமர் பாலம் விசயத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சிக் கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இந்த காட்டுமிராண்டி கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இதற்காக மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் பாசிச தாக்குதல் தொடுத்திடவும் சங் பரிவாரம் தயாராகி வருவதைத்தான் காட்டுகிறது. இதனை நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்ஷேவின் வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. மேலும் காமராஜருக்கு எதிராகவும் - அவரை கொல்வதற்கும் முயன்ற கும்பல்தான் இந்த சங்பவரிவார கும்பல்.
எனவே மதச்சார்பற்ற கட்சிகள் - ஜனநாக சக்திகள் - இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு இந்த காட்டுமிராண்டி கும்பலின் அனைத்துவிதமான சதிகளையும் முறியடிப்பதோடு - இவர்களது இந்துத்துவ தத்துவத்தை இந்த தேசத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டியுள்ளது.
இந்த காட்டுமிராண்டிகள் இன்றைக்கு விடுத்துள்ள அறிக்கையில் ராமராஜ்யத்தை அமைப்பதாக கனவு கண்ட மகாத்மாவின் உணர்வுகளை கூட மதிக்கவில்லை என்று வேஷம் போட்டுள்ளனர்.
மகாத்மா கனவு கண்ட ராம ராஜ்யமும் - பா.ஜ.க. - சங்பரிவாரத்தின் ராம ராஜ்ய கனவும் ஒன்றா? இவர்கள் அகன்ட பாரதம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயல்படும் வெறிகொண்ட காட்டுமிராண்டி கும்பலே இந்த சங்பரிவார கும்பல் என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.
மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடியவர். இந்துக்களும் - இசுலாமியர்களும் இந்தியத் தாயின் ஒரே பிள்ளைகள் என்று வலியுறுத்தியவர். மதனினை மனிதன் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான சாத்வீக தத்துவ நெறியோடு - அகிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இந்த சங்பரிவாரங்களின் நெறி எது? அடிப்படை கோட்பாடு எது? இந்த அமைப்பு தோன்றியது முதல் கொலை வெறியையும் - மதவெறியையும் மட்டுமே தனது நோக்கமாக கொண்டு ஆதிக்க வெறியோடு செயல்படும் சங்பரிவாரம் ராம ராஜ்யம் குறித்து பேசுவது வெட்கக் கேடானது.
மதச்சார்பற்ற இந்து பக்தர்கள் - கடவுள் பக்தி கொண்டவர்கள் ராமரை தங்களுடைய சுரண்டல் கேடயமாக பயன்படுத்தும் இந்த மதவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டிய தருணம் வந்து விட்டது. கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் - மசுதிக்கும் - தேவலாயத்திற்கும் சகோதர உணர்வோடு - உண்மையான பக்தியோடு நாள்தோறும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக ஒரே குரலில் இந்திய மக்கள் எழுந்து நிற்க வேண்டிய சரியான தருணம் இதுவே!

September 21, 2007

பா.ஜ.க.வின் அமெரிக்க அடிமைத்தனமும்! கலாச்சார பாசிசமும்!!


பா.ஜ.க. தேசிய செயல்குழு கூட்டம் மத்திய பிரதேசத்தில் உள்ள ராஜா போஜ் நகரில் இன்று துவங்கியது. இந்தக் கூட்டத்தில் பா.ஜ.க.விற்குள் ஏற்பட்டுள்ள தலைமை நெருக்கடி மற்றும் அஸ்தமிக்கும் அதன் எதிர்காலம் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. கூட்டத்தில் உரையாற்றிய பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங் தங்களது அமெரிக்க அடிவருடித்தனத்தையும், பொய்யையும், புளுகையும் கொஞ்சம் கூட கூசாமல் உரையாற்றி சங்பரிவார தொண்டர்களை புல்லரிக்க வைத்துள்ளார்.
அதில் ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுவது பொருத்தமாக இருக்கும். கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். ஆனால் பாசிஸ்ட்டுகளின் புளுகு எட்டு நிமிடம் மட்டுமே!
இந்தியாவின் 60 ஆண்டு சுதந்திர தினத்தையும், 1857 இல் நடைபெற்ற இந்திய முதல் சுதந்திரப் போராட்டத்தின் 150 வது ஆண்டு குறித்தும் நினைவு கூர்ந்த ராஜ்நாத் சிங், அதனை நாடு முழுவதும் கொண்டாடப் போவதாக கூறியுள்ளார்.
எந்த முகத்தை வைத்துக் கொண்டு என்பதை மட்டும் அவர் விளக்கவில்லை. பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம் வீர் சவார்க்கார் இனியும் நான் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட மாட்டேன் என்று எழுதி கொடுத்து விட்டு சுதந்திரப் போராட்டத்திற்கு துரோகம் இழைத்து, பிரிட்டிஷ் காவல் நாய்களாக (வாட்ச் டாக்) கலாச்சார தேசியம் என்ற பெயரில், இந்திய மக்களுக்குள் மோதலை உருவாக்கி - பிரிவினைக்கு வித்திட்டு, இந்தியாவின் ஆன்மாவாக திகழ்ந்த மகாத்மாவை கொலை செய்த கோட்சேவின் வாரிசுகள் எப்படியெல்லாம் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு அடிமைச் சேவகம் புரிந்தார்கள் என்பதை பேசப்போகிறார்களோ என்னவோ! போலி தேச பக்திக்கு சங்பரிவாரங்களை விட்டால் வேறு யார் இருக்கிறார்கள்?
அடுத்து, இந்தியா உலகளவில் பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து விட்டதாம், உலகளவில் அறிவாளிகளின் மையமாக இந்தியா திகழ்கிறதாம், அத்தோடு உலகளவில் இராணுவ சூப்பர் பவராக திகழ்கிறராம்! இதற்கெல்லாம் காரணம் இவர்கள் 6 ஆண்டுகள் ஆட்சி செய்ததால்தானாம்!
இந்தியா ஒளிர்கிறது என்று முழக்கத்தை வைத்து தேர்தலை சந்தித்த பா.ஜ.க.வை மக்கள் விரட்டியடித்ததை இன்னும்கூட மறக்கவில்லை என்றே தெரிகிறது! அதனால்தான் அதே கோஷத்தோடு, வேறு மொழியில் பேசத் துவங்கியுள்ளனர். இந்தியா பொருளாதாரத்தில் சூப்பர் பவராக வளர்ந்து இருக்கிறதாம்? ஐயா படித்தவர்களே இது உண்மையா? தண்ணிர் தனியார்மயமாகி விட்டதால் தண்ணீருக்காக கண்ணீர் விடும் கதையெல்லாம் பா.ஜ.க.வினருக்கு தெரியாது போலும், அதை விடுங்கள் புதிய பொருளாதார கொள்கை என்ற பெயரால் எத்தனை பேர் வேலையிழந்து வீட்டுக்குள் முடங்கிக் கிடக்கிறார்கள், ஏன் பென்ஷன் திட்டம் முதல் பல சேம நலத் திட்டங்கள் படாத பாடுபடுகிறதே, இன்னும் கூட வறுமைக் கோட்டுக்கு கிழே உள்ள மக்களுக்கு ரேஷன் கார்டு எப்போது கிடைக்கும் என்று ஏங்கிக் கொண்டு இருக்கிறானே! எதற்காக? இவர்கள் வழிவந்த பொருளாதார கொள்கையால் இந்தியா சூப்பர் பவராக மாறி விட்டது என்றால் எத்தனை பேருக்கு வேலை கிடைத்தது, வேலையில்லாத் திண்டாட்டம் ஒழிந்து விட்டதா? சுகாதார திட்டங்கள் எப்படி செயல்படுகிறது? என்பதையெல்லாம் விளக்குவார்களா? இவர்களைப் பொருத்தவரை சூப்பர் பவர் என்றால் வேறு எதுவும் இல்லை! அதையும் ராஜ்நாத் சிங்கே கூறிவிட்டார். கோரஸ் என்ற இந்திய நிறுவனம் ஐரோப்பாவில் கூட்டு வைத்துக் கொண்டு தொழில் தொடங்கி விட்டதாம்! ஐயா முதலை கண்ணீர் என்பார்களே அது இதுதான்!
விவசாயிகள் தற்கொலை குறித்தும் அவர் மறக்காமல் பேசியுள்ளார். இது பற்றியும் தேசிய அளவில் விவாதிக்க வேண்டுமாம்!
ஐயா ராஜ்நாத் சிங் அவர்களே கடந்த 10 ஆண்டுகளாக இந்தியாவில் 10,000த்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்களே இதற்கு நீங்கள் சொந்தம் கொண்டாட மாட்டீர்களா? இந்த தற்கொலைகளுக்கு உங்கள் கொள்கை வழிவகுக்கவில்லையா? இதைத்தான் சூப்பர் பவர் பொருளாதாரம் சாதித்ததா? ஏன் உங்கள் கூட்டணி ஆட்சி செய்த மகாராஷ்டிராவில்தானே விதர்பா உள்ளது! இந்திய நாட்டு விவசாயிகளை குழிதோண்டி புதைத்த கொள்கை வீரர்களே இன்னொரு தேர்தலுக்காக மக்கள் தயாராகவே இருக்கிறார்கள் உங்களை அடியோடு விரட்டியடிக்கத்தான்!
இந்தியா அறிவாளிகளின் மையமாக திகழ்கிறதா? அப்புறம் ஏன் சங்பரிவாரங்களை சார்ந்த வீரப் புலிகள் எல்லாம் அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறது! குறிப்பாக மென்பொருள் துறையில் அமெரிக்கா என்று அவர்களுக்கு சேவகம் செய்து - இங்கே கலவரத்தை உருவாக்க நிதியனுப்புவதற்காகவே என்று மக்கள் கேட்பது உங்கள் காதுகளுக்கு கேட்கவில்லையா?
இராணுவத்தில் சூப்பர் பவராக இருக்கிறோமா? எப்படி என்பதை கொஞ்சம் விளக்குவீர்களா? நீங்கள் ஆட்சி செய்த காலத்தில் நமது எல்லையான கார்கிலுக்குள் பயங்கரவாதிகள் புகுந்து கொண்டது கூட தெரியாமல் இருந்ததாலா? அல்லது நமது எல்லையில் இருந்து அவர்களை விரட்டியடித்து விட்டு பெரும் சாதனைப் போல் டமாரம் அடித்துக் கொண்டிர்களா? அதனாலா? அல்லது பாராளுமன்ற வளாகத்திற்கு உள்ளேயே நுழைந்து தாக்குதல் நடத்தியதும் உங்கள் ஆட்சிக்காலத்தில் தானே! உங்களது இன்டிலிஜன்ஸ் திவலானதைக் கூட நீங்கள் எப்போதும் ஒத்துக் கொள்வதில்லை என்பது நாட்டு மக்களுக்கு நன்றாகவே தெரியும்! அதை விடங்கப்பா ஈராக்கில் கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு கோடிக்கும் மேல் மக்களை கொன்று குவித்து வரும் அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகளுக்கு கூஜா தூக்குவதற்காக இந்தியா இராணுவத்தினரை அனுப்ப உத்தேசித்தீர்களே அதனால் சூப்பர் பவராகி விட்டது என்று கதைக்கிறீர்களா?
அவரது பேச்சில் கோதுமை இறக்குமதிக்காக கொஞ்சம் கவலைப் பட்டுள்ளார்! பா.ஜ.க. ஆட்சியில் 6 கோடி டன் கோதுமை புளுத்துப் போனதும், எலிக்கு இரையாக்கியதையும் அதே நேரத்தில் விவசாயிகள் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி இறக்க நேரிட்டதையும் இன்னும் மறக்கவில்லையா? உங்களது ஆட்சியில்தான் இந்த இறக்குமதி கொள்கைகை முதன் முதலில் துவக்கி வைத்தீர்கள்! இப்போது நீலிக் கண்ணீர் வடிப்பதெல்லாம் பாட்சா பலிக்காது.
அணு சக்தி ஒப்பந்தத்தில் தங்கள் நிலையை தெளிவாக விளக்கியுள்ளார்கள்? என்ன விளக்கினார் என்று ராஜ்நாத் சிங்கிற்கோ அல்லது கூட்டத்தில் இருந்த பரிவாரங்களுக்கே ஒன்றும் தெரியாது! ஏனென்றால் அவர்களது நிலையை அவ்வப்போது விளக்கி விட்டார்களாம். மேலும் அவர்கள் ஆட்சியில் அணு குண்டு வெடித்து சோதனை செய்ததை சாதனையாக கூறியதோடு, அமெரிக்காவோடு தற்போதைய இராணுவ கூட்டாளி ஒப்பந்தத்தையும் அவர்கள் துவக்கி வைத்ததையும், கேந்திர கூட்டாளியாக அமெரிக்காவோடு கைகோர்த்ததையும் வெட்கம் இன்றி வாக்குமூலம் கொடுத்துள்ளார். அத்தோடு இதனை விவாதிப்பதற்காக கூட்டு பாராளுமன்ற குழு அமைக்க வேண்டுமாம்! இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் இந்திய பாராளுமன்றத்தில் விவாதிப்பதை அனுமதிக்க கூடாது என்ற நோக்கத்தில்தானே பாராளுமன்ற நடவடிக்கைகளையே முற்றிலும் கேலிக்கூத்தாக்கி - ஜனநாயக நடவடிக்கைகளை முடக்கினீர்களே அதை நாங்கள் மறக்கவில்லை! மக்களும்தான்....
இறுதியாக சேது சமுத்திரம் தொடர்பாக மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். அது நம்பிக்கை சார்ந்த விஷயமாம் எனவே ராமாயணம் குறித்தோ அல்லது ராமர் குறித்தோ கேள்வி எழுப்புவது அபத்தமாம்! ஆனால் பாபர் மசூதி மட்டும் இசுலாமியர்களுக்கு நம்பிக்கை சார்ந்த விஷயம் இல்லையாம்! அது அவமானச் சின்னமாம்...! இந்த நம்பிக்கை குறித்தெல்லாம் உலகளவில் அறிவுஜிவிகளாக இருக்கும் இந்தியர்கள் யாரும் கேள்வி கேட்கக் கூடாது! உஷ்.... உஷ்.... உஷ்....
இறுதியாக, பா.ஜ.க. கலாச்சார தேசியம் என்ற தத்துவத்தை உயர்த்திப் பிடிக்கிறதாம். ஆனால் தற்போது நவீன பொருளாதார வளர்ச்சியால் கலாச்சாரம் பாதிக்கப்படுகிறதாம்! எப்பா என்ன கருணை! என்ன கருணை!! ஒரு பக்கம் பொருளாதார வளர்ச்சி என்று குத்தாட்டம் போடும் பா.ஜ.க. அதனால் ஏற்பட்ட சீரழிவுக்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிப்பார்களாம் அதற்கு மற்றவர்கள்தான் காரணமாம்! ஹலோ பா.ஜ.க. தலைவரே உங்களது இதுபோன்ற தேசிய செயல்குழு கூட்டம் ஒன்று நடைபெறும் போது ஜோஷி என்ற மகாராஷ்டிர சங்பரிவார தலைவரின் அஜால் குஜால் சி.டி. யெல்லாம் உங்களது பார்வைக்கே அனுப்பி வைக்கப்பட்டதே அதை மறந்து விட்டீர்களா! அடுத்து உங்களது பா.ஜ.க. எம்.பி.க்கள் வெளிநாடுகளுக்கு கடத்தி அம்பலப்பட்டுப் போனார்களே அதை மறந்து விட்டீர்களா? முதலில் சங்பரிவாரத்திற்குள் கலாச்சார தேசியத்தை நிலைநாட்டுங்கள்... இந்திய மக்களின் ஒற்றுமை எனும் கலாச்சாரத்தை கெடுத்து தேசத்தை பிளவுபடுத்துவதே நீங்கள்தான் என்பதை மக்கள் மறக்கவில்லை! தற்போது உங்களிடம் மிச்சமிருப்பது அமெரிக்க அடிமைத்தனம் மட்டுமே!

September 20, 2007

போலி மெடலும் விவசாயிகள் தற்கொலையும்!


போலி என்கவுன்டர். போலி பத்திரம். போலி ரூபாய் நோட்டு என போலிகள் வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது போலி மெடல்.

என்ன ஆசிரியமாக இருக்கிறதா? ஆமாங்க! இந்த போலி மெடலை வழங்கியது வேற யாரும் இல்ல. சாட்சாத் நம்ம மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுதான்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா என்றாலே விவசாயிகள் தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும். அதாவது நம்ம ஐயா நரசிம்மராவ் - வாஜ்பாய் - மன்மோகன் சிங் வகையறாவின் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் அவர்கள் முடிவை அவர்களே தேடிக்கொள்வது என்ற தற்கொலை வடிவம்.

விவசாயிகளின் பாரம்பரிய விவசாயத்திற்கு மூட்டை கட்டி விட்டு. அந்த இடத்தில் பணப் பயிரான பருத்தியை விளைவிக்கச் சொல்லி - விவசாயிகளுக்கு ஆசை காட்டி ஒரே வருடத்தில் நீங்கள் மில்லினியராக ஆகிவிடலாம் என்று கதைக்கட்டி கடைசியில் இருக்கின்ற கோவணத்தையும் விட்ட கதையாக அந்த விவசாயிகள் கடன் தொல்லை தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மிசச் சாதாரண விசயமாக மாறி விட்டது மகாராஷ்டிராவில். 2002 முதல் இதுவரை 5000 விவசாயிகள் இதுபோன்று தற்கொலை செய்துக் கொண்டதாக இந்து பத்திரிகை கூறுகிறது.

அப்படிப்பட்ட இடத்தில் ஒரு விவசாயி தாதாஜி என்பவர் அரும்பாடு பட்டு விவசாயத்தில் சாதனை படைத்து விட்டார். அதுவும் புது ரக நெல் விளைச்சலில் சாதனை படைத்து விட்டார். இந்த விவசாயியின் அரிய சாதனையை கெளரவிக்க கிரிசி பூஷன் விருது வழங்கப்படும் என அறிவித்தது. இந்த விருது 14 கராட் தங்கத்தால் 50 கிராம் எடையுடன் கூடியது என அறிவித்தது. இதன் விலை ரூ 32,250. விருது வழங்கும் விழா மகாராஷ்டிர கவர்னர் மாளிகையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இது போன்ற விருதினை பலருக்கும் வழங்கியது. நம்ம விவசாயி தாதாஜி தற்போது விவசாயத்தில் நட்டம் அடந்து விட்டதால் அந்த விருதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது என்ற முடிவுக்கு வந்து. அதை விற்பதற்காக ஒரு ஜிவல்லரிக்கு சென்றபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அந்த மெடல் வெறும் விலை குறைந்த வெள்ளியால் செய்யப்பட்டதாம். அதன் மேல் வெறும் கோல்டு எனாமல் பூச்சு மட்டும் பூசப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் அதன் விலை ரூ. 500 க்கு மேல் போகாது என கூறிவிட்டார்.

ஆஹா இவர்கள் அல்லவா விவசாயிகளை காக்க வந்த மகா உத்தமர்கள்! காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் முழி பிதுங்கி நிற்கிறார்!

September 17, 2007

மணலை கயிராக திரிக்கும் பா.ஜ.க.


சேது சமூத்திர திட்டம் தமிழக மக்களின் 150 ஆண்டு கனவு. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டி அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட திட்டம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களின் வேலை வாய்ப்புக்கும் - வளர்ச்சிக்கும் உதவும் திட்டம்.
பா.ஜ.க.வின் விரக்தி அரசியலுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் ராமர் பாலம் விவகாரம். ஆதம் பாலம் என அழைக்கப்படும் இடத்தில் உள்ள மணல் திட்டுப் போன்ற பகுதி ராமரால் கட்டப்பட்டது என்று மணலை கயிராக திரித்து தங்களது மதவாத அரசியலுக்கு மெருகூட்ட முனைந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு. இந்திய அகழ்வாய்வுத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு - ஆதம்பாலம் என்பது இயற்கையாக உருவானது. அது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கான எந்த ஆதாரம் அங்கு இல்லை என்று நிறுவியுள்ளது.
வரலாற்று ரீதியாகவும். இலக்கிய ஆதாரங்களின்படியும் கூட ராமர் பாலத்திற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜ.க. இந்த விசத்தை மக்கள் நம்பிக்கை என கயிராக திரித்து - மத உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகிறது.
இராமாயணம் - மகாபாரதம் போன்றவைகள் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதிதானே ஒழிய அதற்கும் வரலாற்றறிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை பெரியார் இது குறித்து கூறும் போது இவைகள் எல்லாம் வரலாற்று புரட்டும் - குப்பையும்தான் என கூறியதே இந்நேரத்தில் நிள னைவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாடு சுடான விவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கையில். அந்த விசயத்தில் அம்பலப்பட்டுப் போயுள்ள பா.ஜ.க. ராமர் பாலம் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திசை திருப்ப முனைகிறது.
தேசத்தின் மீதான இவர்களது அக்கறை போலித்தனமானது என்பது வெளிப்பபடையானது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இதனை சங்பரிவாரம் மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் சங்பரிவார வேர்களை வேரறுக்கும் வரையில் இந்திய நாட்டின் வளர்சிக்கு விடிவுகாலம் இல்லை.

September 12, 2007

ஆட்டம் காணும் அம்மாவின் மனக் கணக்கு!


ஐக்கிய தேசிய முற்போக்கு கூட்டணிக்கு (அதாங்க அம்மா கூட்டணி) பிள்ளையார் சுழி போட்டு மூன்று மாதங்களே ஆன நிலையில் கூட்டணிக்குள் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த மூன்றாவது அணி ஆரம்பிக்கும் போதே ஆட்சியை இழந்தவர்களின் அந்திமக் கூட்டணி! என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை சந்திப்பில் போட்டிருந்தேன். இந்த கொள்கையற்றவர்களின் கூட்டணியின் அந்திமக் காலம் துவங்கி விட்டதைதான் அம்மாவின் அறிக்கை காட்டுகிறது.
அம்மாவின் அரசியலை தமிழகம் நன்கு உணர்ந்துள்ளது. அம்மாவின் கருத்துக்கு மாற்றுக் கருத்துக் கூறினால் அடுத்த நிமிடமே முகத்தை மாற்றிக் கொள்ளும் பேராதிக்க குணம் படைத்தவர். அது மட்டுமா? தோழமை கட்சியினராக இருந்தால் கூட தான் சொல்வதை மட்டுமே ஏற்க வேண்டும் என்ற குணம் கொண்டவர். இவரது அரசியல் சுபாவம் சந்திரபாபுவுக்கோ அல்லது முலாயமுக்கு தெரிந்திரிக்க நியாயம் இல்லை. அந்த ரகசியத்தை நன்கு உணர்ந்து அரசியல் நெருக்கம் கொண்டிருக்கும் ஒரே தலைவர் வைகோ மட்டுமே!
இந்திய - அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் விசயத்தில் இடதுசாரிகள் நடத்திய ஆர்ப்பாட்டங்களில் முலாயமும். சந்திரபாபும் கலந்து கொண்டார்கள் என்பதைத் தவிர வேறு எதுவும் இல்லை இவர்களது விரிசலுக்கு. அம்மாவுக்கு யாரும் தகவல் சொல்லவில்லையாம்! இவரும் கூட அணு சக்தி ஒப்பந்தத்தை எதிர்ப்பதாக நீலிக் கண்ணீர் வடித்துக் கொண்டுதான் இருக்கிறார். ஏன் இவர் இடதுசாரிகளோடு ஒத்துழைக்கவில்லை. இவரது எதிர்ப்பு என்பது பா.ஜ.க.வின் எதிர்ப்பைபோலத்தான் இரட்டை தன்மை கொண்டது. அது இந்த ஆட்சி எப்போது கவிழும் என்ற நோக்கத்தை கொண்டதே தவிர உண்மையான தேச நலன் சார்ந்தது இல்லை.
அம்மா எப்போதும் கூட்டணி தர்மத்தை கடைப்பிடிப்பவராம்! அது சரி ஜனாதிபதி தேர்தலில் மூன்றாவது அணி பா.ஜ.க. வேட்பாளர் பைரோன் சிங் செகாவாத்துக்கு ஓட்டுப் போட வேண்டும் என்றா தீர்மானம் எடுத்தது! இல்லையே! இவர் என்ன செய்தார்? திடுதிப்பென்று இவருக்கே தெரியாமல் அவர்களது சட்டமன்ற - பாராளுமன்ற உறுப்பினர்கள் ஓட்டுப் போட்டு விட்டார்களாம்! மணலை கயிராக திரிக்கும் கலையில் அம்மாவுக்கு ஆஸ்கர் அவார்டே தரலாம்! பாவம் முலாயமும். சந்திரபாபுவும் யாருக்கும் ஓட்டுப் போடாமல் நடுநிலை வகித்தனர். (நடுநிலை என்ற ஒரு கொள்கையே இல்லை). அப்போதுதான் புரிந்தது அம்மாவின் அரசியலுக்குள் ஒளிந்திருக்கும் சங்பரிவார - பா.ஜ.க.வின் குரல்.
இரண்டு நாட்களுக்கு முன்னால் பா.ஜ.க. பொறுப்பாளர் ரவி சங்கர் வர்மா அம்மாவை சந்தித்து ஒரு மணி நேரம் அரசியல் ஆலோசனை செய்துள்ளார். அதற்கு பின்தான் அம்மாவின் அறிக்கை வந்துள்ளது! தற்போது அத்வானி வரப் போகிறாராம் அம்மாவை சந்திக்க! இவரது மூன்றாவது அணி யாருடைய நலனை காப்பதற்கு என்பது வெட்ட வெளிச்சமாகி விட்டது.
விழித்துக் கொண்ட முலாயமும். சந்திரபாபுவும் அம்மா விரித்த வலையில் சிக்காமல் மீண்டால் சரி!
இடதுசாரிகளைப் பொறுத்தவரை மூன்றாவது அணி என்பது குறைந்தபட்ச கொள்கை கொண்டதாக இருக்க வேண்டும். குறிப்பாக மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகள். உறுதியான மதச்சார்பின்மை - மதவாத அரசியலுக்கு எதிர்ப்பு - சுயேச்சையான அயலுறவு கொள்கை போன்ற அடிப்படை விசயங்களிலாவது சரியான புரிதல் கொண்டவர்களாக இருக்க வேண்டும் என்பதுதான். அம்மாவுக்கு ஆட்சி கனவைத் தவிர வேறு என்ன கொள்கை இருக்க முடியும்!
நான் மதவாத பா.ஜ.க.வோடு கூட்டணி வைத்ததற்காக மன்னிப்பு கேட்கிறேன். என்று அம்மா மெரீனா கடற்கரையில் முழங்கினார். அவரது தொண்டர்கள் அதனை மறந்திருப்பார்கள் ஆனால் மக்கள் மறக்க மாட்டார்கள். எந்த அடிப்படையில் மதவாதிகளோடு கள்ளத்தனமாக உறவு கொள்ள துடிக்கிறார் என கேட்கத் துவங்கி விட்டனர். எம்.ஜி.ஆரின். கொள்கை பற்றாளர்கள் விழிப்பார்களா?

September 11, 2007

மாநகர பேருந்து மாசற்ற பேருந்தா?

சென்னை மாநகர பேருந்து ‘மாசற்ற பேருந்து’ என்ற முழக்கத்தோடு வலம் வருகிறது. உண்மையில் ‘மாசற்ற’ என்ற சொல்லுக்கு என்ன அர்த்தம் கொடுக்கிறது என்பது ‘சென்னை மாநகர போக்குவரத்து கழகத்திற்கு’ தான் வெளிச்சம்.

இன்று (செப்டம்பர் 11, 2007) 18A பிராட்வே - தாம்பரம், அடுக்கு மாடி பேருந்தில் நிகழ்ந்த சம்பவத்தை இங்கே பதிவது பொருத்தமாக இருக்கும். காலை 11.05 க்கு பிராட்வேயில் இருந்து மேற்குறிப்பிட்ட பேருந்தில் ஏறினேன். அது அடுக்குமாடி பேருந்தாக இருந்ததால், மேலே சென்று பயணிப்பதில் ஒரு சுகம்தான். மேலே சென்று முன்னிருக்கையில் அமர்ந்தவுடன் கீழே இருபுறமும் ‘சென்னை மாநகரத்தில் அகற்றப்படாத குப்பைகள்’ போல் குவிந்து கிடந்தது.

என்னுடன் பேருந்தில் ஏறிய சகபயணிக்கு இதைப் பார்த்தவுடன் கடும் கோபமாகி விட்டார். அவர் என்னிடம், ‘என்னங்க இது அநியாயமாக இருக்கிறது’ மாசற்ற பேருந்துன்னு சொல்றாங்க இப்படியிருக்கே! என்று வருத்தப்பட்டதோடு நிற்காமல், நடத்துனரிடம் (கண்டக்டர்) சென்று என்னங்க இப்படி ஒரே குப்பையா இருக்கே என்று அவரிடம் கேட்க, அவரோ, பரிதாபமாக ஒரு பார்வை பார்த்து விட்டு, இன்றைக்கு கிளீன் பன்னாமல் விட்டுட்டு இருப்பாங்கன்னு ஒரு சமாதானம் சொன்னார்.

அந்த உயரமான, வாட்ட சாட்டமான, தாடி வைத்த பயணி மீண்டும் என்னிடம் வந்து தன்னுடைய அதிருப்தியை தெரிவித்தார். நானும், ஆமாங்க இவங்களுக்கு ஒரு சமூக பொறுப்பே இருப்பதில்லை. மக்களைப் பற்றி எந்த கவலையும் இருப்பதில்லை என்று கூறி அவரோடு இணைந்து கொண்டேன். அந்த சக பயணி தன்னுடைய செல்போனை எடுத்து நேராக மாநகர போக்குவரத்து கண்ட்ரோல் ரூமூக்கு போன் செய்து, (வழித்தட எண் 18A, TAD 401, TN-01-N-3134) வண்டி எண் உட்பட அனைத்தையும் சொல்லி வண்டியில் மேல் மாடியில் ஒரே குப்பையாக இருக்கிறது. நானும் இதை ஒருவாரமாக பார்த்துக் கொண்டே இருக்கிறேன், இப்படி இருந்தால் நாங்கள் எப்படி பயணம் செய்வது, நீங்கள் வேண்டும் என்றால் சைதாப்பேட்டையில் - விஜிலன்சை அனுப்பி செக்-அப் செய்யுங்கள் என்று கூறினார்.

அதே சமயம் கண்டக்டரையும் மாட்டி விடக்கூடாது என்ற நல்ல எண்ணம் அவருக்குள் இருந்தது. ஐயா கண்டக்டர் சார் உங்களுக்கு எந்த அப்ஜக்ஷனும் இல்லையே! என்று அவரிடமும் கேட்டுக் கொண்டார். மீண்டும் என்னோடு பேச்சுக் கொடுத்தார். இங்க மட்டும் இல்லைங்க, கீழேயேயும் அப்படித்தான் இருக்குது. வண்டிய எடுக்கும் போதே இதெல்லாம் பார்க்க மாட்டாங்களா? என்று அவரது நியாயமான கோபத்தையும், கேள்வியையும் எழுப்பினார் அந்த பயணி. நானும் படிக்க வேண்டிய புத்தகத்தை மூடி வைத்து விட்டு, அவரது நியாயத்திற்கு பேச்சுக் கொடுத்துக் கொண்டே வந்தேன்.

அந்த பயணி நீங்கள் எங்கே இறங்க வேண்டும் என்று என்னை கேட்டார். நான் எ°.ஐ.இ.டி. என்று கூற, அவரும் அங்கேதான் இறங்க வேண்டும் என்று கூறினார். சம்பந்தப்பட்ட பேருந்து நிறுத்தம் வந்ததும் இருவரும் இறங்கிக் கொண்டோம்! நாளைக்கு நான் இதே பேருந்தில்தான் வருவேன் பார்ப்போம் எப்படி இருக்குது என்று கூறிக் கொண்டே அவர் இறங்கியதோடு, “இது என்னங்க பேசஜ்சர்களை ஏற்றும் வண்டியா? அல்லது குப்பை அள்ளும் வண்டியா?” என அவர் வினவியது மிகப் பொருத்தமாக இருந்தது.

உண்மையில் சம்பந்தப்பட்ட பேருந்தில் கீழ்ப்புறத்திலும் குப்பைகள் மண்டிக் கிடந்ததோடு, நாறிக் கொண்டும் இருந்தது. கொசுக்கள் மற்றும் நோய் பரப்பும் கிருமிகளுக்கு அந்த பேருந்து பயணம் ஒரு சுகமாகவே இருக்கும்! இது குறித்து மாநகர போக்குவரத்து கழகம் விழிக்குமா? அல்லது தன்னுடைய ‘மாநகர பேருந்து மாசற்ற பேருந்து’ என்ற வாசகத்தையாவது மாற்றிக் கொள்ளுமா?

சென்னை மாநகர பேருந்துகளில் திருவள்ளுவரின் திறக்குறளை சிறிய எழுத்தில் போட்டு விட்டு, ஐயன் வள்ளுவரின் (அதாங்க முதல்வர் கலைஞரின்) குறளை பெரிய படமாக போடுவதில் காட்டும் அக்கறையை குப்பையை அகற்றுவதிலும் கொஞ்சம் காட்டியிருக்கலாம்!

பேருந்தை சுற்றிலும், ஷாம்பு கம்பெனிக்கும், சோப்பு கம்பெனிக்கும் டிஜிட்டல் விளம்பரம் கொடுத்து பேருந்தையே மொத்த விளம்பரத்திற்கு குத்தகை கொடுத்து அதன் அழகை கூட்டிக் கொள்ளும் பேருந்திற்குள் நாறிக் கொண்டிருப்பது மட்டும் ஏனோ தெரியவில்லை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு! ஷாம்பு வாசனை அதை மறைத்து விடும் என்ற நம்பிக்கையோ!
மறுபுறத்தில் கலர் கலராய் சொகுசு பேருந்து என்ற பெயரில் கட்டணத்தை உயர்த்தி பகல் கொள்ளையடித்து வரும் தமிழக அரசும் - மாநகர பேருந்தும் தங்களது சேவை குறித்து கிஞ்சித்தும் அக்கறை காட்டாதது அவர்களது பொறுப்பற்றத் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது.


சமூக பொறுப்புணர்வோடு தன் உணர்வை வெளிப்படுத்திய அந்த சக பயணிக்கு ஜே!

September 07, 2007

மார்ச்சுவரியை நோக்கி சிங்கார சென்னை!

சிங்கார சென்னை நகரம் கடந்த ஒரு மாதமாக நாறிக் கொண்டிருக்கிறது. இது குறித்து நமது வலைப்பதிவர்கள் விரிவாக பதிவிட்டுள்ளனர். இருப்பினும் அதன் தற்போதைய அவல நிலையை நகைப்புக்கு மட்டுமல்ல உலகமயத்தின் விளைவையும் விளக்குவதாக உள்ளது.

சென்னையை சிங்கப்பூராக மாற்றுவேன் என்று சபதமேற்று அதிமுக - திமுக இந்த இருவரும் குப்பையை அள்ளுவதற்கு ஓனிக்ஸ் என்ற நிறுவனத்திற்கு காண்ட்டிராக்ட் விட்டதும். தற்போது ஓனிக்சின் காண்ட்டிராக்ட் முடிவுக்கு வந்து. அந்த இடத்தில் நீல் மெட்டல் பனால்கா என்ற நிறுவனத்திற்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

முதல் கோணல் முற்றும் கோணல் என்பது போல அந்நிறுவனத்தின் துவக்கமே அலங்கோலமாக இருந்தது. மலை மலையாய் தேங்கிய குப்பைகளை அகற்றுவதற்கு போதுமான வாகனங்களோ - ஊழியர்களோ அல்லது உரிய திட்டமிட்ட ஏற்பாடோ இல்லாததால் சென்னை நாறிக் கொண்டிருக்கிறது.

சென்னை தி.மு.க.வின் கோட்டை என்ற கனவை கடந்த சட்டமன்ற தேர்தல் அசைத்து விட்ட காரணத்தால் தற்போதைய குப்பை அரசியல் திமுகவை எங்கே ஓரம் கட்டி விடுமோ என்ற பயத்தில் மாநகராட்சி அவசரம் என்ற பெயரில் மாநகராட்சி ஊழியர்களை கொண்டு துரிதமாக குப்பைகளை அகற்றிக் கொண்டிருக்கின்றனர். இருப்பினும் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்படவில்லை. எஜமான விசுவாசத்தால் பழைய ஓனிக்ஸ் நிறுவனமும் சற்று உதவி செய்தது. இது அடுத்த காண்ட்டிராக்ட்டிற்கு திட்டம் போட்டுதான்.
சிங்கப்பூராக்குவேன் என்றவர்கள் சென்னையை குப்பைக்காடாக்கியதுதான் மிச்சம். சரி. தனியாமயம் குப்பை அகற்றும் தலித் மற்றும் அடித்தட்டு மக்களை நிரந்தர பணியில் இருந்து முதலில் அகற்றியது. பின்னர் அவர்களது வாரிசுகள் ஓனிக்சின் கரங்களில் சிக்கி சின்னபின்னமாகிப் போனதும் தற்போது ஓனிக்சின் ஆயுள் காலம் முடிந்த கையோடு அந்த ஊழியர்களின் வாழ்க்கையும் அமிழ்ந்த போனது. குறைந்த சம்பளம் - நிறைவான உழைப்பு... இருப்பினும் என்ன கிடைத்தது இளமையை இழந்து - நோயோடு பேயாக வாழும் வாழ்க்கைதான் அவர்களுக்கு மிச்சம்.

தற்போதைய புதிய எஜமான் நீல் மெட்டல் பனால்கா அதே ஊழியர்களை மிக குறைந்த சம்பளத்தில் வேலைக்கு அமர்த்த திட்டம் போட்டு வருகிறது. சரி இருக்கட்டும்... தனியார்மயம் ஊழியர்களை மட்டுமா குப்பையாக்கியது சென்னை நகரையும் தானே! மெத்தப் படித்தவர்கள் அனைத்தையும் தனியார்மயமாக வேண்டும் என்று வக்காலத்து வாங்குபவர்கள் கூட முகம் சுளிப்பதைத்தான் இது காட்டுகிறது.

அதைவிடக் கொடுமை என்ன தெரியுமா? தற்போதைய நீல் மெட்ட்டல் பனால்கா குப்பைகளை அகற்றுவதற்கான குப்பைத் தொட்டிகளை வாங்குவதற்கு பாங்காக்கிற்கும் - சிங்கப்பூருக்கும் காண்ட்டிராக்ட் விட்டிருக்கிறது. அதன் முலம் தற்போது 1800 குப்பைத் தொட்டிகள் இன்னும் சில நாட்களில் இறக்குமதியாகி விடுமாம். இதில் 1100 குப்பைத் தொட்டிகள் சிங்கப்பூரில் இருந்தும். 700 பாங்காக்கில் இருந்தும் வாங்கப்படுகிறதாம்.

வேடிக்கை என்னத் தெரியுமா? வெளிநாட்டில் இருந்து சென்னை துறைமுகத்திற்கு வந்த குப்பைத் தொட்டிகளை இறக்குவதற்கு இடம் இல்லையாம். அதனால் அவைகள் மகாராஷ்டிரத்திற்கு திருப்பி விடப்பட்டு - அங்கிருந்து வாகனங்கள் மூலம் தரைவழியாக சென்னை வருகிறதாம். தலையை சுற்றி உங்களால் சாப்பிட முடியுமா? சென்னை மாநகராட்சியும் - உலகமயமும் அதை செய்து காட்டுகிறது!

உலகமயம் என்றால் உலகத்தையே சுற்ற வேண்டும் என்னவா? சென்னை நகரில் குப்பை அள்ளுவதற்கு தேவையான குப்பை தொட்டிகளை கூட உருவாக்க லாயக்கற்றவர்களாகி விட்டனர் தமிழக மக்களும் - இந்திய மக்களும்!

ஆட்சியாளர்கள் சென்னையை சிங்கப்பூராக மாற்றுவார்களோ இல்லையோ? சிங்கப்பூரை உலகமயத்தின் மூலம் வாசிங்டன்னாக மாற்றுவார்கள் போலும்.
தனியார்மயத்தின் பல்ளிக்கும் சாட்சியாக சென்னை நகர குப்பை காட்சிகள் உள்ளது. சென்னை நகரத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நோய்க்கு தார்மீக ரீதியாக சென்னை மாநகராட்சிதான் பொறுப்பேற்க வேண்டும். நோயால் பாதிக்கப்படப் போவது கூலி ஜனங்கள்தானே பரவாயில்லை... இது உலகமயத்தின் பரிசு! என்று சொன்னாலும்a சொல்லுவார்கள் இந்த ஊழல் குபேரபுரிகள்.

நோயின் அறிகுறி குப்பை அரசியலில் தெரிந்து விட்டது இப்போதே இதற்கான சிகிச்சையை ஆரம்பிக்கவில்லையென்றால்... அப்புறம் இருக்கவே இருக்கிறது... மார்ச்சுவரி...! உலகமயம் என்ற நோயை இப்போதே விரட்டியடிக்கவில்லையென்றால்.... ஆட்கொல்லிக்கு இறையாவதை தவிர்க்க முடியாது!