April 26, 2006

செந்தில் - கவுண்டமணி சந்திப்பு

செந்தில் : அண்ணே.. அண்ணே வணக்குமண...
கவுண்மணி : ஏண்டா எல்மட் தலையா, பண்ணி மாரி கருத்துப் போயிருக்கியே ஏன்டா?

செந்தில் : அத ஏன்னே கேக்குறீங்க... அம்மாவ முதலமைச்சராக்க பிரச்சாரம் பண்ணப் போயிருந்தேன்ன...
கவுண்டமணி : டேய்... பண்ணி வாயா... நீ என்ன எப்படா அரசியல்வாதியான...

செந்தில் : அண்ணே... எங்க தாத்தாவுக்கு தாத்ததா சுதந்திரப்போராட்டம் நடக்குறப்பே ஓரமா நின்னு பாத்தார்னே..., எங்க பரம்பரையே அரசியல் பரம்பரைன்னே...
கவுண்டமணி : டேய் கருவாட்டு தலையா உங்கப்பன் பன்னி மேச்சிக்கிட்டிருந்ததா சொன்னே... இப்போ என்னடான்னா அரசியல் பரம்பரை, அது, இதுன்னு... உதார் விடுற...

செந்தில் : உங்களுக்கு எப்பவுமே பொறாமன்னே...
கவுண்டமணி : சரிடா... மேடையில நீ போய் என்னடா பேசினா....

செந்தில் : அம்மா வேதனையெல்லாம் (அய்யய்யோ...) சாதனையெல்லாம் சொன்னேன்னே...
கவுண்டமணி : என்னடா சாதனை... உங்க அக்கா வெள்ள நிவாரணம் வாங்கப்போய் மிதிப்பட்டு செத்தாங்களே... அதச் சொல்றீயா...

செந்தில் : அண்ணே... அம்மா அதுக்கும் சேத்துத்தான்னே நிவாரணம் தந்தாங்க...
கவுண்டமணி : டேய் எருமாட்டுத் தலையா... உங்க ஆயா... எலிக்கறி சாப்பிட்டு நாட்டுக்குனு செத்துப்போச்ச அத சொன்னீயாடா....

செந்தில் : அத மறப்பனான்னே.... (தலையை சொறிந்து கொண்டே, பேய் முழி முழித்துக் கொண்டு) எலிக்கறி சுருசியா இருக்குன்னு சாப்பிட்டாங்கன்னு.......
கவுண்டமணி : ஏண்டா நாயே.... பண்ணி... எரும மாடு... ஒவ்வொரு நாளா ஒரு பொய்யச் சொல்ற... டேய். உன்னையெல்லாம் நடுத்தெருவுல வெச்சு.... நாக்கப் புடுங்கனும்டா....

செந்தில் : அம்மா... போலீசு.... காப்பாத்துங்க.... காப்பாத்துங்க... என்று டவுசரோடு ஓடுகிறார்.... நாயெல்லாம் அவர துரத்திக்கினே போகுது....

April 24, 2006

அரித்மெட்டிக் வேதியல் வினையாகிறது!

தமிழக தேர்தல் குறித்த விவாதங்களில், முக்கிய இடத்தை பெற்றுள்ளது. அரித்மெட்டிக்கா? வேதிவினையா? கூட்டணி கணக்கு திமுகவுக்கும், வேதியல் வினை (கெமிக்கல் ரியாக்ஷன்) அதிமுகவுக்கும் என கணிக்கப்பட்டது. இதில் வெல்லப்போவது யார்? என இந்து பத்திரிகையில் ஜெயந்த் துவக்கி வைத்தது, இன்று சூடுபிடித்து உச்சகட்டத்தை எட்டியுள்ளது.


ஆம்! திமுகவின் ஜனநாயக முற்போக்கு கூட்டணியின் 6 கட்சி பலம் இந்த தேர்தல் வெற்றியை தீர்மானிக்குமா? என அரூடம் பார்க்கத் துவங்கியவர்களுக்கு புது அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது திமுக தேர்தல் அறிக்கை என்றால் மிகையாகாது.


ஜெயலலிதா எதிர் கட்சி முகாமை சிதைக்க முயற்சித்து, தோல்வி கண்ட பிறகு, எப்படியோ அந்த வலையில் வைகோவும் - திருமாவும் சிக்கினாலும் கூட நான் மக்களுடன் கூட்டணி வைத்துள்ளேன் என்று கூறியதோடு நிற்காமல் ஜனநாயக மக்கள் கூட்டணி என மகுடம் சூட்டியுள்ளார்.
முதலில் பேட்டிங்கை துவக்கிய ஜெயலலிதா மிக வேகமாக முயல்போல் - பம்பரமாக சூழன்று தேர்தல் பிரச்சார களத்தில் தாங்களே எல்லா விதத்திலும் முன்னணியில் நிற்பதாக காட்டிக் கொண்டார். ஜெயலலிதா பிரச்சாரம் துவக்கிய சூழலில் பத்திரிகைகளின் கணிப்புகள் (ஆரூடங்கள்) அவருக்கு சாதகமாக கூறி வந்தன.


திமுக தலைவர் குடு, குடு கிழவன் கருணாநிதி தனக்கு நிகராக எங்கே ஈடுகொடுக்கப்போகிறார் என்ற எக்களத்தோடு வலம் வந்தார் அம்மையார்.


இந்த பின்னணியில் திமுக தலைவர் கருணாநிதியின் தேர்தல் அறிக்கையும், அதைத் தொடர்ந்து தனது பிரச்சாரத்தை ஆமைபோல் துவக்கினாலும் இன்றைக்கு வெல்லத்தை சுற்றும் எறும்புகளாக எங்கும் மக்கள் கூட்டத்தை எங்கெங்கும் காண முடிகிறது ஆண்டிப்பட்டி உட்பட.


கடந்த காலங்களில் தேர்தல் அறிக்கை என்பதெல்லாம் விவாதத்துக்கு உரிய விஷயமே இல்லை. அது ஏதோ கட்சிகள் செய்யும் - சொல்லும் பார்மாலிட்டி° என மக்கள் நினைத்தனர்.
ஆனால், இந்த முறை திமுக தலைவர் கருணாநிதி தான் வெளியிட்ட தேர்தல் அறிக்கை இந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்துமா? என அவரே கூட எதிர்பார்த்திருக்க மாட்டார்.


அறிக்கையில் மிக முக்கியமான அம்சம்:

  • 1. கிலோ அரிசி ரூ. 2க்கு
    2. டி.வி. இல்லாதவர்களுக்கு இலவச கலர் டி.வி.
    3. இரண்டு ஏக்கர் நிலம்
    4. விவசாயிகளுக்கான கூட்டுறவு கடன் ரத்து
    5. வேலையில்லா காலத்தில் வாலிபர்களுக்கு நிவாரம் ரூ. 300
    6. பெண்களுக்கு திருமண உதவித் திட்டம் ரூ. 15,000
    7. சுயஉதவிக்குழுக்களுக்கு ஊக்கம், நலவாரியம்...

என பல கவர்ச்சிகரமான திட்டங்களோடு தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.


திமுக தேர்தல் அறிக்கை ஆரம்பத்தில், அதிமுக அணியினர் வாயில் மெல்லுவதற்கு கிடைத்த அவலாய் போனது அரிசியும், டி.வி.யும்!


தர முடியுமா? ஏமாற்று வேலை என்றெல்லாம் ஏச்சும் - பேச்சும் தொடர்ந்தது.


இந்த சூழலில் கருணாநிதியின் தேர்தல் பிரச்சார துவக்கம் முதல் இன்று வரை எல்லா இடங்களிலும் அரிசி நிச்சயம் - அதுவே என் முதல் கையெழுத்து எனத் துவங்கி, டி.வி.க்கும் உத்திரவாதம் செய்ததோடு, கணக்கெடுப்பு துவக்கியாச்சு - என உறுதி கூறியதிலிருந்து, மக்களின் மனோ நிலையில் மாற்றம் துவங்கியது (வேதியல் எதிர் வினை புரியத்துவங்கியது).


ஒரு கட்டத்தில் மக்களின் மனோ நிலையில் மிக வேகமாக மாற்றம் ஏற்பட்டுவருவதை கண்ட ஜெயலலிதா அடித்தார் அந்தர் பல்டி 10 கிலோ அரிசி இலவசம் என்று! கேலி பேசியவர்களே கேலிப்பொருளாய் போனது இதுதான் முதல் முறை!


தற்போது களத்தில் கலைஞர் கருணாநிதியும், கூட்டணி கட்சி தலைவர்களான டாக்டர் இராமதா°, மத்திய அமைச்சர் பா. சிரதம்பரம், கம்யூனி°ட் தலைவர்கள் என். வரதராஜன், தா. பாண்டியன் மற்றும் இளம் தலைமுறையினர் புயல் வேகத்தில் நடத்தி வரும் பிரச்சாரத்தில் மக்கள் சாரை, சாரையாக எறும்புகளைப் போல், ஈக்களை போல் மொய்க்கத் துவங்கியுள்ளனர். ஜெயலலிதாவுக்கு வந்த கூட்டம் ஈசல் பூச்சிகளாய் செத்து மடிவதைத்தான் இன்றைய வேதிவினையில் பார்க்க முடிகிறது.


அரித்மெட்டிக்கா? வேதிவினையா? என்றவர்களுக்கு பெரும் ஆச்சரியம் காத்திருக்கிறது. திமுக கூட்டணியின் அரித்மெட்டிக் வலுவாக இருப்பதுபோல், அதன் தேர்தல் அறிக்கை செய்யும் வேதியல் வினை அதை விட வலுவானதாக மாறியுள்ளது. எனவே அரித்மெட்டிக்கும் + வேதியல் வினையும் கூட்டணி தற்போது அமைத்துள்ளதால், திமுகவின் வெற்றிக்கு கட்டியம் கூறியாகி விட்டது

April 22, 2006

அம்மாவின் பொற்கால ஆட்சியில்....

ஜெ அம்மாவின் சூறாவளி பிரச்சாரத்தில், புல்லரிக்கும் புள்ளி விவரங்களோடு, ‘பொற்கால ஆட்சி’ என்ற முழக்கத்தையும் எதிரொலிக்கத் தவறுவதில்லை.

கடந்த ஐந்தாண்டு காலம், ‘தமிழகத்தின் பொற்காலம்’ என வருணிக்கும் ஜெயலலிதா, மீண்டும் பொற்கால ஆட்சி தொடர, உங்கள் சகோதரிக்கு வாய்ப்பளிக்குமாறு கொஞ்சுகிறார் - கெஞ்சுகிறார்.

சங்ககாலத்தில் பொற்கால ஆட்சி நடைபெற்றதாக கதைக்கும் தமிழ் ஆர்வலர்களின் கூற்றே அதீதமானது என ஆ. சிவசுப்பிரமணியம் போன்ற ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுவதோடு, இதுவரை தமிழகத்தில் பொற்கால ஆட்சி என ஒன்று இருந்ததில்லை என எடுத்துரைக்கவும் தவறுவதில்லை.

இந்த பின்னணியில், ஜெயலலிதாவின் கடந்த ஐந்தாண்டு கால ஆட்சியை ‘பொற்கால ஆட்சி’ என தானே பறைசாற்றிக் கொள்வது குறித்து, இந்த வரலாற்றாசிர்களிடம் கேட்டால், பின்னங்கால் பிடறியில் இடிபட பறந்தோடி விடுவார்கள்!

வரலாற்றாசிரியரை விடுங்கள்... 2004 பாராளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்கள் என்ன செய்தார்கள்? அம்மாவின் பொற்கால ஆட்சி இனியும் தொடர்ந்தால், தாங்களும் பொற்சிலைகளாகிவிடுவோம் என்று கருதியல்லவா, அம்மாவுக்கு முட்டை போட்டார்கள். (40 பாராளுமன்றத் தொகுதியிலும் நாமம் போட்டார்கள்)

அம்மாவின் பொற்கால ஆட்சி எப்படியிருந்தது என கொஞ்சம் பார்ப்போம்!
  • குழந்தைகளுக்கு சத்துணவில் முட்டையா? அவர்களுக்கு கொழுப்பு அதிகமாக இதய நோய் வந்து விடும் என்று முட்டையை பறித்தார் சகோதரி!
  • மாணவர்களுக்கு இலவச ப°பா° வழங்குவதா? பிஞ்சு பருவத்திலேயே எல்லாம் இலவசமாக கிடைக்கும் என்ற சிந்தனை முளைத்து விடாதா? அதனால்தான் அதையும் பிடுங்கிக் கொண்டார். (இந்த இடத்தில் 10 கிலோ அரிசி இலவசமாக கொடுக்கிறேன் என கூறுகிறாரே அதை ஞாபகப்படுத்திக் கொள்ளாதீர்)
  • போக்குவரத்து, மின்சாரத்துறை ஊழியர்கள் அம்மாவின் பொற்கால ஆட்சியில் மிகுந்த ஏற்றம் பெற்று விட்டதால் அவர்களின் போன° உட்பட அனைத்து சலுகைகளும் இனியும் வழங்குவது அவர்களை அவமதிப்பதாக இருக்கும் என அதையெல்லாம் மறுத்து விட்டார். மறுத்து விட்டார்.
  • பெண்களின் மேல் மிகுந்த பாசம் கொண்ட சகோதரி ஜெயலலிதா குடிப்பதற்கு தண்ணீரா இல்லை? கவலையை விடுங்கள் இந்தியாவிலேயே மிகக் குறைந்த விலையில் ஒரு லிட்டர் குடிநீரை விட, ஒரு லிட்டர் பால் விலை குறைந்துதானே இருக்கிறது என பாலபிஷேகம் செய்தார்.
  • இது மட்டுமா? பொற்கால ஆட்சியில் ரேஷன் கடையில் நின்று பொருட்களை வாங்கலாமா! கூடாது என தீர்மானித்த சகோதரி எல்லோருக்கும் கௌரவ முத்திரை கொடுத்தாரே அதை மறக்கலாமா?
  • பொங்கலுக்கு புடவை - வேட்டியா? அபிஷ்டு, சுய உதவிக்குழுக்களால சுகமாக இருக்கும் உங்களுக்கு இதெல்லாம் தேவையா? என அதையும் நிறுத்தியது தாயுள்ளம்.
  • 25,000 நெசவாளர் குடும்பங்கள் பாதிப்பா? அதெல்லாம் எதிர்க்கட்சிகளின் பொறாமை பேச்சு! கஞ்சித் தொட்டி திறப்பது பொற்கால ஆட்சியை களங்கப்படுத்திடவே, எதிர்கட்சிகள் செய்யும் சதி! எனவே பொற்கால ஆட்சியில் அரிசி சாதமா? கூடாது பிரிணியே போடுறோம் என்று உலக சாதனை புரிந்தவரல்லவா அம்மா!
  • பொற்கால ஆட்சியில் விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் எல்லாம் மூன்று வேளை மூக்கைப் பிடித்து திண்ணும் போது, எதுக்கு அவங்களுக்கு நிலம்! இருப்பதே 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம்தான் அதைக்கூட பெரு முதலாளிகளுக்கு தரக்கூடாதா? அதற்கும் எதிர்ப்பா என சட்டமன்றத்தில் அலுத்துக் கொண்டார் அம்மா!
  • பத்திரிகைகள் ஜனநாயகத்தின் தூண்! உண்மைதான் இங்கு நடப்பதோ பொற்கால ஆட்சி! அப்படியிருக்க பழைய நினைப்பில் பத்திரிகைகள் ஏதாவது உளரக்கூடாதே என்பதற்காகத்தான் அவர்களது மூளைகளை சரிப்படுத்திட வழக்கு!
  • விவாய நிலங்களில் எல்லாம் பொன் விளைந்ததால், ஒரு சேஞ்சுக்காக விவாசயிகள் எலிக்கறியை திண்றதை எதிர்க்கட்சிகள் கேலிப்பேசுகின்றன. அது மட்டுமா? பொற்கால ஆட்சியை கண்டு கொண்ட ஆனந்த சந்தோஷத்திலல்லவா விவசாயிகள் தங்களையே மாய்த்துக் கொண்டனர். (பூச்சி மருந்து குடித்து சாகவில்லை, சாராயம் குடித்துதான் செத்தார் என்ற ஜெயலலிதாவின் புளுகை அம்பலப்படுத்தியதால்தான் நல்லகண்ணு மீது வழக்கு)
  • பொற்கால ஆட்சியில் மக்களிடம் செல்வம் மிகுந்திருப்பதால் அரசு மருத்துவமனைக்குப் போகும் போது வெறும் ஐந்து ரூபாய் மட்டும் கட்டணம் செலுத்தினால் போதும் என அம்மாவின் கணிவான அறிவிப்பு!
  • பொற்கால ஆட்சிக்கு தீங்கு விளைவிக்கும் எதிரி நாட்டு மன்னர்களை ஒழிக்க வேண்டாமா? அதனால்தான் பொடாவை பயன்படுத்தி வைகோ, (இவர் இப்போது பொற்கால மயக்கத்தில் உள்ளார்) நக்கீரன் கோபால், நெடுமாறன், சுப. வீரபாண்டியன்... என பலரையும் உள்ளே வைத்தது! அது மட்டுமா? டெ°மாவைப் பயன்படுத்தி பொற்கால ஆட்சிக்கு தீங்கு செய்யும் அயல்நாட்டுக்கு உளவுபார்க்கும் உளவாளிகளான அரசு ஊழியர்களை பிடித்து உள்ளே தள்ளியது.அம்மாவின் பொற்கால ஆட்சியின் சாதனைகளை சொல்லுவதற்கு இடம் போதாது! எனவே அம்மாவின் இந்த பொற்கால ஆட்சி மீண்டும் தமிழகத்தில் அமைந்திட வேண்டுமா?
பாராளுமன்றத்தில் நல்ல தீர்ப்பு வழங்கி தேசத்தை காத்தீர்!
சட்டமன்றத்திற்கும் நல்ல தீர்ப்பு வழங்கி தமிழகத்தை காத்திடுவீர்!!

April 21, 2006

காஷ்மீர்-ஒரு பார்வை

ஜம்மு-காஷ்மீர் பிரச்சனை இன்று சர்வதேச அளவில் செய்தித்தாள் களிலும், தொலைக்காட்சி களிலும் அலசப்படும் அரசியல் பிரச்சனையாகி விட்டது. அணுஆயுத சண்டைகள் மூலம் தீர்வுகாண இரு ஆட்சியாளர்களும் சவால் விடுவதால் மேலும் ஒரு பயம் உலகை கவ்வியுள்ளது. இந்த வீராப்பு பேச்சுதான் அமெரிக்கா தனது மூக்கை நுழைக்க உலக நாடுகளின் ஆதரவை தன் பக்கம் இழுக்க வசதி செய்தி கொடுத்துள்ளது.


வேற்றுமையில் ஒற்றுமை என்ற நமது பண்பாட்டை ஆட்சியாளர்கள் மறந்து விட்டதால்,
காஷ்மீர் பிரச்சனை உருவானது. அதனுடைய வரலாற்று பின்னணியையும், வரலாற்றையும்
பார்த்தால் இது புரியும்.




இந்தியாவின் தலைப்பகுதியான ஜம்மு-காஷ்மீர் 22,22,236 சதுர கிலோ மீட்டர் அளவு
பரப்பளவைக் கொண்டது. இங்கிருக்கும் மக்கள் தொகை 10,069,917 (2001 கணக்குப்படி).
காஷ்மீரி, உருது, தோக்கிரி, லதாகி, ஹிந்தி, பாகிரி ஆகிய மொழிகளும், ஒரு சில துணை
மொழிகளும் பேசக்கூடிய மக்களை உள்ளடக்கிய தொன்மையான கலாச்சாரத்தை கொண்டுள்ள ஒரு
மாநிலமே காஷ்மீர்.




கிழக்கு சுவிட்சர்லாந்து என்று அழைக்கப்படும் ஜம்மு - காஷ்மீர் பிரதானமாக நான்கு
பகுதிகளை உள்ளடக்கியது. ஜம்மு, காஷ்மீர், லதாக், “கில்ஜிட்-பால்ட்டிஸ்தான் -
காஷ்மீரின் ஒரு பகுதியை (ஆஸாத் காஷ்மீர், கில்ஜிட் - பால்டிஸ்தான்) பாகிஸ்தான்
ஆக்கிரமித்துள்ளது. மொத்தத்தில் மாநிலம் முழுவதும் 80 சதவீதம் முஸ்லீம்கள்
வசிக்கின்றனர். லதாக்கை பொருத்தவரை நிலப்பரப்பில் பெரியதாக இருந்தாலும் மாநில
மக்கள் தொகையில் வெறும் 2 சதவீதத்தினரே அங்கு வசிக்கின்றனர்.




இப்பகுதியின் கலாச்சாரம் தொன்மையானது. இஸ்லாம், பௌத்தம்(புத்தியிஸம்), காஷ்மீரி
பண்டிட்டுகள்-இந்துக்கள், சீக்கியர்களின் கலாச்சார இணைப்பாகவும், அத்துடன்
இஸ்லாத்தில் - ஸூபி என்ற மனித நேயத்தை வலியுறுத்தும் ஒரு கலாச்சார அமைப்பையும்
கொண்டு பல கலாச்சாரங்களின் தங்குமிடமாக காஷ்மீர் உள்ளது. இஸ்லாம் மதத்திலும் கூட
"தர்க்காக்களை வழிபடும்" தனித்தன்மை வாய்ந்த முறையும் இங்குதான் உள்ளது. இக்
கலாச்சாரத்தை இம்மக்கள் "காஷ்மீரியம்" என்று அழைக்கின்றனர். மதச்சார்பின்மை
என்பது இதன் இயல்பான அடிப்படை.




இவ்வாறு பன்முகத்தன்மையுடன் கூடிய காஷ்மீர் இன்று கலவரப்பகுதியாக, அமைதியிழந்து,
உரிமைகளிழந்து, பயங்கரவாதத்துடன் வாழும் வாழ்க்கையாக மாறியுள்ளது. இதுவரை
இம்மாநிலத்தில் கிட்டத்தட்ட 60,000த்திற்கும் மேற்பட்ட மக்கள் கொல்லப்பட்டும்,
நான்கு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்களது வீடுகளை இழந்து டெல்லி, பஞ்சாப்
உட்பட பல்வேறு பகுதிகளிலும், அயல்நாடுகளிலும் குடியெர்ந்து வாழ்ந்து வருகின்றனர்.
பயங்கரவாதிகளின் தாக்குதல் ஒருபுறமும், அவர்களைத் தாக்கும் ராணுவத்தின்
கண்மூடித்தனமான தாக்குதல் இன்னொரு புறமும் என்று மக்கள் பெரும் இன்னலுக்கு
உள்ளாகியுள்ளனர்.




காஷ்மீரின் வரலாற்றுப்
பின்னணி:




காஷ்மீர் பன்னெடுங்காலமாக முகலாயர்கள், ஆப்கானிஸ்தானியர்கள், சீக்கியர்கள்,
டோக்ராக்கள் என்று பல்வேறு தரப்பினரின் ஆளுகைக்குட்பட்ட பகுதியாகவே இருந்து
வந்தது. இதன் தொடர்ச்சியாக 1846 முதல் டோக்ரா மன்னன் குலாப்சிங்கின் ஆளுகையின்
கீழ் காஷ்மீர் வந்தது. இந்த குலாப்சிங் ஆட்சியில் அமர்ந்த விதமே வெட்கக்கேடானது.




அன்று காஷ்மீர் - பஞ்சாப் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகவே சீக்கியர்களின் கீழ்
செயல்பட்டு வந்தது. பிரிட்டிஷார் இந்தியாவின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றியது
போலவே பஞ்சாப் சமஸ்தானத்தையும் கைப்பற்ற சீக்கியர்களுடன் போரிட்டது. போரில்
தோல்வியுற்ற பஞ்சாப் சமஸ்தானத்தின் மீது இழப்பீட்டுத் தொகையாக சீக்கியர்கள்
75,00,000 ரூபாயை அபராதமாக கொடுக்க வேண்டும் என்று காலக்கெடுவுடன் கூடிய நிபந்தனை
விதித்தது பிரிட்டிஷ் அரசு. இல்லையெனில் காஷ்மீரை பிரிட்டிஷாருக்கு கொடுத்துவிட
வேண்டும் என்று ஒப்பந்தம் செய்து கொண்டனர். பஞ்சாப் சமஸ்தானமும் இதை
நிறைவேற்றுவதாக பிரிட்டிஷாருக்கு ஒப்புதல் அளித்தனர். ஆனால் அவர்களால் நிறைவேற்ற
முடியாத சூழ்நிலையில் காஷ்மீரை பிரிட்டிஷாரிடம் ஒப்படைத்தனர்.




இது நடைபெற்ற நான்கு நாட்களிலேயே இந்து டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங்
பிரிட்டிஷாரிடம் இத்தொகையை தான் தருவதாக கூறினார். இதை ஏற்றுக் கொண்ட
பிரிட்டிஷார் குலாப்சிங்கிற்கு காஷ்மீரை தருவதாக ஒப்புக் கொண்டனர்.




குலாப்சிங்கிற்கும், பிரிட்டிஷாருக்கும் இடையே நடைபெற்ற "அமிர்த் சரஸ்"
ஒப்பந்தப்படி குலாப்சிங் 75 இலட்சம் ரூபாயும், ஓராண்டு அடையாள வாடகையாக இருபது
பாஸ்மினா வகை ஆடுகளையும், ஒரு குதிரையையும், மூன்று இணை காஷ்மீர் சால்வைகளையும்
கொடுத்து காஷ்மீரை தன்வசப்படுத்திக் கொள்ள பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திடம்
ஒப்பந்தம் செய்து கொண்டான்.




டோக்ரா வம்சத்தை சேர்ந்த குலாப்சிங்கிற்கு எங்கிருந்து இவ்வளவு பணம் கிடைத்தது
என்பது ஒரு சுவராஸ்யமான செய்தி. குலாப்சிங் சீக்கிய மன்னர் ரஞ்சித்சிங் என்பவரின்
இராணுவத்தில் அவரது சதிவேலைகளுக்கு துணைநின்று விசுவாசமாக பணியாற்றியமைக்காக
"ஜம்மு" பகுதியை இனாமாக பெற்றார். இதன் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டு பின்னர்
சீக்கியரை தோற்கடிக்க பிரிட்டிஷாருக்கும் ஒத்துழைத்தார்.




90 சதவீதம் முஸ்லீம்களை கொண்ட காஷ்மீர், ஜம்முவைத் தலைநகராகக் கொண்ட டோக்ரா
மன்னர் குலாப்சிங்கின் கீழ் வந்தது. மன்னர் குலாப்சிங்கின் ஆட்சி, நீதி
நேர்மையற்று இருந்தது.




டோக்ரா இனத்தவருக்கு சலுகை, மற்றவர்களுக்கு தண்டம் என்று இருந்தது.
வேலைவாய்ப்பில் 60 சதவீதம் டோக்ராக்களுக்கே ஒதுக்கப்பட்டது. முஸ்லீம்கள் கல்வி,
தொழில், வேலைவாய்ப்பு, அரசின் நிர்வாகப் பதவிகள் போன்ற அனைத்திலும் ஒதுக்கி
வைக்கப்பட்டனர். காஷ்மீர் மக்கள் மீது கொடுமையாக வரி விதிக்கப்பட்டது. அவர்களது
கால்நடைகளான ஆடு, மாடுகள் மீது கூட கடுமையாக வரி விதிக்கப்பட்டது. அத்துடன்
"கொலைக் குற்றத்திற்கு டோக்ராவைத் தவிர அனைவருக்கும் தூக்குத் தண்டனை வழங்க
வேண்டுமென்பது நீதித்துறையின் கொள்கையாக இருந்தது"




குலாப்சிங்கின் ஆட்சிக்கு எதிராக கலகம் செய்வோர் சித்தரவதை செய்து
கொல்லப்பட்டனர். மிகக் கொடூரமாகவும், தோலை உரித்து அவர்களை தெருவோரத்தில்
நிறுத்தி வைத்து மற்றவர்களுக்கு பயமூட்டினான்.




மன்னர் குலாப்சிங்கின் ஆட்சிக்குப் பிறகு அவரது வாரிசான ரன்பீர்சிங்கின் ஆட்சி
1857 வரையிலும், பின்னர் 1885க்கு பின் பிரதாப்சிங்கின் ஆட்சியும் 1925க்கு பிறகு
மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியும் என மாறி, மாறி ஒரு நூற்றாண்டு காலம் டோக்ராக்களின்
ஆட்சி அதிகாரமே காஷ்மீர் மக்களை வாட்டி வதைத்தது.




மகாராஜா ஹரிசிங்கின் ஆட்சியிலும் குலாப்சிங் காலத்து கொடுமைகள் தொடர்ந்தன. இவரது
ஆட்சியிலும் முஸ்லீம்கள் இரண்டாந்தர மக்களாகவே நடத்தப்பட்டனர். முதல் ஐந்தாண்டுக்
காலத்தில் வழங்கப்பட்ட 25 நில மானியங்களில் இரண்டு மட்டுமே முஸ்லீம்களுக்கு
வழங்கப்பட்டது. அத்துடன், காஷ்மீரில் ஜமீன்தார்களுக்கு நிலங்களின் மீதான உரிமைகள்
பறிக்கப்பட்டது. காஷ்மீரிகள் தங்களது சொந்த விருப்பத்தின் பேரில் நிலங்களை
விற்கவோ, அடகு வைக்கவோ முடியாது. அவர்களது மரங்களை வெட்டுவதற்குக்கூட அரசின்
அனுமதியின்றி வெட்டக்கூடாது.




இத்துடன் மன்னர் ஹரிசிங்கின் ஆட்சி வகுப்புவாதப் பார்வையோடும் செயல்பட்டு வந்தது.
முஸ்லீம் பெண்களை மானபங்கப்படுத்துவது, பாலியல் வன்முறைக்கு உள்ளாக்குவது, குரானை
அவமதிப்பது, மசூதிகளை அழிப்பது போன்ற வன்செயல்களையும் செய்து வந்தது.




ஹரிசிங் ஆட்சிக்கு எதிரான
கிளர்ச்சி:




ஹரிசிங்கின் ஆட்சிக்கு எதிராக பரவலான அதிருப்தியும், கோபமும் உருப்பெற்று
கலகங்களாக வெடிக்க ஆரம்பித்தன. சேக் முகமது அப்துல்லா என்ற வாலிபர் அலிகார்
முஸ்லீம் பல்கலைக் கழகத்தில் பட்டமேற்படிப்பு முடித்து ஸ்ரீநகர் பள்ளி ஒன்றில்
ஆசிரியராகப் பணியாற்றி வந்தார். ஹரிசிங்கின் கொடுமையான ஆட்சிக்கு முடிவு
கட்டவேண்டும் என்ற நோக்கோடு அவரது பணியை விட்டு விட்டு படித்த முஸ்லீம் இளைஞர்களை
அணிதிரட்டி காஷ்மீர் முஸ்லீம் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளை நிறுத்தும்படி
அரசுக்கு மனுக் கொடுத்தார்.




பல்வேறு இடங்களில் கிளர்ச்சிகளும் நடைபெறத் துவங்கியவுடன் மன்னர் முஸ்லீம்களின்
கோரிக்கைகள் குறித்து பேசத் தயாராக உள்ளதாக அறிவித்தார். இதற்காக மாநிலம்
முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரதிநிதிகள் குழு தேர்ந்தெடுக்கப்பட்டது.
இவற்றை விளக்கி பல்வேறு இடங்களில் பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன.




1931 ஜூன் 25 அன்று நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் அப்துல் காதர் என்ற இளைஞர்
ஆற்றிய உரையை சட்டவிரோதம் என அறிவித்து, அவரைக் கைது செய்து ஜூலை 6ம் தேதியன்று
விசாரணை நடைபெறும் என்று அரசு அறிவித்தது. அன்றைய தினம் ஆயிரக்கணக்கான மக்கள்
திரண்டு விசாரணை நடைபெறும் இடத்திற்கு சென்று விசாரணையை தடுத்து நிறுத்தினர்.
பின்னர் விசாரணை தள்ளி வைக்கப்பட்டு சூலை 13 அன்று ஸ்ரீநகர் சிறையில் நடைபெறும்
என்று அறிவிக்கப்பட்டது.




அன்றைய நாளிலும் பெருந்திரளான மக்கள் கூடி விசாரணையை நிறுத்தும்படி வலியுறுத்தி
சிறைக்குள்ளே நுழைய முயன்றனர். அவ்விடத்திற்கு வருகைத்தந்த ஆளுநர் துப்பாக்கிச்
சூட்டிற்கு உத்தரவிட்டார். அதில் 72 பேர் கொல்லப்பட்டனர். இந்நாளே காஷ்மீரில்
"ஜூலை 13 - தியாகிகள் தினமாக" அனுஷ்டிக்கப்படுகிறது.




இரு முகாம்கள்:




1931ம் ஆண்டு நடைபெற்ற சம்பவத்தைத் தொடர்ந்து இன்றைய ஆர்.எஸ்.எஸ். முன்னோடிகள்
மன்னருக்கு எதிராக சதி நடப்பதாக கூக்குரல் எழுப்பினர். அதே ஆண்டு ஆகஸ்டில்
நடைபெற்ற இந்து மகாசபை மாநாட்டில் "காஷ்மீர் மகாராஜாவுக்கு எதிராக நடைபெறும்
கடுமையான பிரச்சாரத்தை இந்து மகாசபை அச்சத்தோடு நோக்குகிறது." என்று தீர்மானம்
நிறைவேற்றி தங்களது விசுவாசத்தை மன்னருக்கு தெரிவித்து வகுப்புவாதக் கனலை
மூட்டிவிட்டனர்.




இதைத் தொடர்ந்து மகாராஜாவுக்கு ஆதரவாக அவரது அரவணைப்போடு "காஷ்மீர் பண்டிட்
மாநாட்டுக் கட்சி," ஜம்முவில் தொடங்கப்பட்ட "இந்து சபா," சீக்கியர்களுடையே
"சிரோன்மணி கல்சா தர்பார்" என்ற புதிய கட்சிகள் உருவாக்கப்பட்டன.




இதே போன்று காஷ்மீர் மக்களின் கொழுந்து விட்டு எரியும் எழுச்சியின் தொடர்ச்சி ஒரு
விரிந்து பரந்த இயக்கத்தை உருவாக்கத் தூண்டியது. அதன் விளைவாக 1932ல் உருவானதே
சேக் அப்துல்லா தலைமையிலான "ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி".




இதன் முதல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சேக் அப்துல்லா தனது உரையில் "காஷ்மீர்
இயக்கம் என்பது ஒரு வகுப்புவாத இயக்கமல்ல, அனைத்துப் பிரிவு மக்களும் தமது
மனக்குறைகளை தீர்த்துக் கொள்வதற்கான ஒரு பொதுத்தளம், இந்துச் சகோதரர்களுக்கும்,
சீக்கியச் சகோதரர்களுக்கும் உதவி செய்ய நாம் எப்போதும் தயார் நிலையில்
உள்ளோம்..." என்று வெளிப்படையாக அறிவித்தார். மன்னரின் நிலப்பிரபுத்துவ
பிற்போக்கு ஆட்சிக்கு எதிராக அணிதிரண்ட அனைவரின் ஆதரவும் பெருவாரியாக
கிடைக்கப்பெற்றது.




ஜனநாயகம், சோஷலிசம் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து மதச்சார்பற்ற தன்மையோடு
செயல்பட்டு வந்த ஜம்மு-காஷ்மீர் முஸ்லீம் மாநாட்டுக் கட்சி பின்னர் 1939ல் "ஜம்மு
- காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி" என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது.




புதிய காஷ்மீர் திட்டம்:




1944ல் தனது இலட்சியங்களை விரிவாக எடுத்துச் செல்ல தேசிய
மாநாட்டுக் கட்சி "நயா காஷ்மீர்" (புதிய காஷ்மீர்) என்ற புதிய திட்டத்தை
தயாரித்தது.




"பெண்கள், தொழிலாளர்கள், சமூகத்தின் நலிந்த பிரிவினர் ஆகியோரின் உரிமைகளை
பாதுகாப்பது என்ற கோரிக்கைகளை வலியுறுத்திய அதே சமயம், பாசிசத்துக்கு எதிராக
போராடிய சோவியத்தின் செம்படைக்கு வாழ்த்து தெரிவித்தும் தீர்மானங்களை
நிறைவேற்றியது" நயா காஷ்மீர் திட்டம் பரவலாக மக்கள் மத்தியில் வரவேற்பைப்
பெற்றது.




"காஷ்மீரை விட்டு வெளியேறு"
இயக்கம்:




சேக் அப்துல்லா தலைமையிலான தேசிய மாநாட்டுக் கட்சி ஜம்மு - காஷ்மீரின்
பெரும்பான்மை முஸ்லீம்களை அடக்கியாளும் டோக்ரா மன்னர் ஹரிசிங்கின் ஆட்சியை
எதிர்த்து 1946ல் "காஷ்மீரை விட்டு வெளியேறு" என்ற வீரஞ் செறிந்த இயக்கத்தை
முன்னெடுத்துச் சென்றனர். மன்னர் ஹரிசிங்கின் இடத்தில் ஒரு முஸ்லீம் மன்னரே இடம்
பெற்றிருந்தாலும் கூட இதுபோன்ற போராட்டங்கள் நடந்திருக்கும்.




சுதந்திர நாடுகள்:




1947ல் இந்தியா - பாகிஸ்தான் என்ற இரு நாடுகள் உதயமாகின. இதைத்
தொடர்ந்து காஷ்மீரை ஆக்கிரமிக்கும் நோக்கோடு ஆதிவாசி மக்களையும், பயிற்சிப்பெற்ற
முன்னாள் ராணுவ வீரர்களையும் தூண்டிவிட்டு காஷ்மீரை பாகிஸ்தான் ஆக்கிரமிக்க
ஆரம்பித்தது. இந்நிலையில் மன்னர் ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடியதோடு, காஷ்மீரை
இந்தியாவுடன் இணைக்கவும் ஒப்புக் கொண்டு இணைப்புக்கான ஒப்பந்தத்தில்
கையெழுத்திட்டுக் கொடுத்தார். பின்னர் இந்திய ராணுவம் காஷ்மீர் மக்களால் ஆரவாரமாக
வரவேற்கப்பட்டு, காஷ்மீரிகளும் ராணுவத்துடன் இணைந்து ஊடுருவல்காரர்களை
விரட்டியடித்தனர். இந்திய அரசு இப்பிரச்சனையை ஐ.நா.விற்கு எடுத்துச் சென்றது.
இதன் தொடர்ச்சியாக போர் நிறுத்த உடன்பாடு ஏற்பட்டது. இதையே போர்நிறுத்த கோடு
(Cease Fire Line) என்று அழைக்கப்படுகிறது. பின்னர்
இது (LOC - Line of Control) என மாற்றப்பட்டது.
காஷ்மீரின் ஒரு பகுதி ஆஸாத் காஷ்மீர், கில்ஜிட் பால்டிஸ்தான் ஆகியவைகள் இன்று
பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு (POK - Pakistan Occupied
Kashmir
) பகுதிகளாக உள்ளன.




மாநிலத்தின் உயர்ந்தபட்ச
சுயாட்சி:




காஷ்மீரின் பின்னணியை உட்கொண்டு இந்திய அரசியல் சாசனத்தில் "சிறப்புப் பிரிவு
370" ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திற்காக சேர்க்கப்படுகிறது. இராணுவம், வெளியுறவு,
தகவல் தொடர்பு ஆகியவை மட்டுமே இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இருக்கும். தவிர
காஷ்மீருக்கென்று புதிய அரசியல் சாசனத்தையும் அமைத்துக் கொள்ளலாம் என்று பரந்த
அளவிலான அதிகாரங்களை வழங்கியது.




ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் அதற்கென்று இருக்கக்கூடிய கொடியை பயன்படுத்திக்
கொள்ளவும், அம்மாநிலத்திற்கான சட்டத்தை அவர்களே வடித்துக் கொள்ளவும்
அனுமதிக்கப்பட்டது. அங்கு இருக்கும் முதல்வர் பிரதமர் என்றே
அழைக்கப்படுவார், அத்துடன் கவர்னர் பதவி என்பதும் சரர்-ஈ-செரீப் என்றும், பிரதமர்
பதவி வாசிர்-ஐ-ஹஸாம் என்றும் அழைக்கப்படும். மாநிலத்திற்கான கவர்னரை இந்திய
குடியரசுத் தலைவரால் நியமிக்க முடியாது, அம்மாநில பாராளுமன்றமே தேர்ந்தெடுத்துக்
கொள்ளும் என்றும், தேர்தல் நடத்துவது உட்பட இந்திய தேர்தல் ஆணையம் அம்மாநிலத்தை
கட்டுப்படுத்த முடியாது. அத்துடன் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற பணியாளர்களை
ஜம்மு-காஷ்மீருக்கு நியமிக்க முடியாது போன்ற பல்வேறு வகையான விரிந்து பரந்த
அளவிலான அதிகாரங்களை வழங்கியிருந்தது.




சேக் அப்துல்லாவின் நிலச்
சீர்திருத்தம்:




காஷ்மீர் மக்களின் பிரதான செல்வாக்கை பெற்ற தலைவர் சேக்அப்துல்லா விடுதலை
செய்யப்பட்ட பின்னர் இந்திய அரசுக்கும், மன்னர் ஹரிசிங்கிற்கும், சேக்
அப்துல்லாவிற்கும் இடையில் ஒரு ஒப்பந்தம் உருவாக்கப்பட்டு அதன் அடிப்படையில் சேப்
அப்துல்லா மாநிலத்தின் பிரதமராக நியமிக்கப்பட்டார். ஹரிசிங்கின் மகன் கரன்சிங்
அம்மாநிலத்தின் முதல் சரர்-ஈ-செரீப் ஆக நியமிக்கப்பட்டார்.




சேக்அப்துல்லா ஜம்மு-காஷ்மீர் மக்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக விளங்கினார்.
அவரது ஆட்சிக்காலத்தில் முற்போக்கான நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
மாநிலத்தின் மொத்த விவசாய நிலப்பரப்பின் மொத்த உரிமையாளர்களாக மன்னர் ஹரிசிங்கின்
குடும்பத்திற்கும், அவரது ஆட்சியாளர்களுக்குமே சொந்தமாக இருந்தது. இந்நிலையில்
அவற்றை நஷ்ட ஈடு ஏதுமின்றி குத்தகைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. மாநிலத்தில்
இருந்த 396 பெரிய ஜாகிர்தாரர்கள் ஒழிக்கப்பட்டனர். 9000ம் நிலப்பிரபுக்களிடம்
இருந்து 4 இலட்சம் ஏக்கர் நிலம் பறிமுதல் செய்யப்பட்டது. காஷ்மீரத்தை பல
நூற்றாண்டுகளுக்குப் பின்னர் காஷ்மீரை காஷ்மீரிகளே ஆட்சி புரிவது இதுவே முதல்
முறையாக இருந்தது. சேக் அப்துல்லாவின் ஆட்சியில் பல்வேறு முற்போக்கு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டது.




ஆர்.எஸ்.எஸ்.-ன் குரூர
பார்வை:




காஷ்மீரில் சேக்அப்துல்லாவால் நிறைவேற்றப்பட்ட முற்போக்கான நிலச்சீர்திருத்த
நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டவர்கள் மன்னரின் வாரிசுகளும், இந்து
நிலப்பிரபுக்களும் ஆவர். டோக்ராக்களின் ஆட்சியில் முஸ்லீம்களுக்கு நிலத்திற்கான
உரிமைகள் ஏதும் வழங்கப்படவில்லை என்பதையும் இங்கு கவனத்தில் கொள்ளவேண்டும்.
இந்நிலையில் நிலத்தை இழந்த பிற்போக்கு சக்திகளும், மன்னர் ஹரிசிங்கும் அவரது
குடும்ப வாரிசுகளும் ஆர்.எஸ்.எஸ்., பிரஜா பரிஷத், ஜனசங்கம் ஆகிய இந்துத்துவ
சக்திகளோடு இணைந்து சேக்அப்துல்லாவின் ஆட்சிக்கு எதிராக தங்களது வகுப்புவாதத்
திட்டத்தை செயலாக்க ஆரம்பித்தன. இதன் ஒரு பகுதியாக...




1. ஜம்மு-காஷ்மீரை இதர மாநிலங்களைப்போல் முழுமையாக இந்தியாவுடன் இணைத்துவிட
வேண்டும்




2. சிறப்பு பிரிவான 370வது பிரிவை வாபஸ்பெற வேண்டும் என்பது உள்ளிட்டு




3. ஏக் விதான்", ஏக் நிஷான், ஏக் பிரதான்" ஒரே நாடு, ஒரே சட்டம், ஒரே கொடி




என்ற கோரிக்கைகளை முன்னிறுத்தி ஜம்முவில் ஜனசங்கம், ஹிந்து மகாசபை, ராம்ராஜ்
பரிசத், பிரஜா பரிஷத் ஆகிய இந்துத்துவா அமைப்புகள் 1951 - 53ல் ஒரு பெரும்
போராட்டத்தை துவக்கியது. இப்போராட்டத்திற்கு சியாம பிரசாத் முகர்ஜி முன்னின்று
நடத்தினார்.




(இதே இந்துத்துவா சக்திகள்தான் ஜம்மு-காஷ்மீரை மன்னர் ஹரிசிங் இந்தியாவுடன்
இணைக்க முயற்சித்தபோது எதிர்த்தவர்கள் என்பது நினைவில் கொள்ள வேண்டியது.)

இதுமட்டுமல்ல காஷ்மீரின் முதல் கவர்னராக இருந்த மன்னர் ஹரிசிங்கின் வாரிசான
கரன்சிங்கை பயன்படுத்தி இந்திய அரசும் சேக்அப்துல்லாவின் வளர்ந்து வரும்
செல்வாக்கை கட்டுப்படுத்த பல்வேறு சதிச்செயல்களிலும் ஈடுபட்டார்கள்.




சேக்அப்துல்லாவின் முதல் குரல்
:




1951 அக்டோபர் 31ல் ஜம்மு-காஷ்மீர் சட்டசபையில் சேக் அப்துல்லா உரையாற்றும் போது
கீழ்கண்டவற்றை சுட்டிக்காட்டினார்.




"இந்தியாவில் சில போக்குகள் தலை தூக்கத் துவங்கியுள்ளன. இது இந்தியாவை
எதிர்காலத்தில் மத அரசாக மாற்றலாம். அரசாங்கத்தில் வகுப்புவாத அமைப்புகளின் கை
ஓங்குமெனில் அப்போது முஸ்லீம்களின் நலன்கள் பாதிப்புக்குள்ளாகும்"




என்று இந்தியா குறித்து தனது அச்சத்தை தெளிவுபட வெளிப்படுத்தியுள்ளார். அத்துடன்
சேக்அப்துல்லா இந்தியாவின் மதச்சார்பின்மை, ஜனநாயகம் குறித்தும் தனது அச்சத்தை
தொடர்ந்து வெளிப்படுத்தினார். இது மட்டுமின்றி காஷ்மீருக்கான வாக்கெடுப்பு
கோரிக்கையையும், சுயாட்சி கோரிக்கையையும் முன்வைக்கத் தொடங்கினார்.




1953 ஆகஸ்ட் 9 அன்று சேக்அப்துல்லா கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்படுகிறார்.
இதைத் தொடர்ந்து சேக்அப்துல்லாவுடன் செயல்பட்ட பக்ஷிகுலாம் முகமதுவை சூழ்ச்சி
செய்து பிரித்து காங்கிரஸ் சார்பில் ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்கள். இவரது
ஆட்சியைத் தொடர்ந்து இந்திய ஆட்சியாளர்கள் காஷ்மீரின் சுயாட்சி உரிமைகளை
முழுமையாக செயலிழக்க வைப்பதற்கான திட்டத்தை படிப்படியாக நிறைவேற்றத் துவங்கினர்.




இவரது ஆட்சியை பயன்படுத்தி காஷ்மீர் குறித்து இந்திய அரசு பாராளுமன்றத்தில்
சட்டமியற்றும் அதிகாரத்தை பல்வேறு துறைகளில் நீட்டித்துக் கொண்டது. அது மட்டுமல்ல
ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். போன்ற ஆட்சி பணியாளர்களையும் காஷ்மீருக்குள் நியமிப்பதற்கான
உத்தரவை விரிவாக்கிக் கொண்டது. பக்ஷிகுலாம் முகமதுவின் ஆட்சி ஊழல் மிக்க
ஆட்சியாகவும், மக்களது போராட்டத்தை அடக்கியாள்வதற்கான ஆட்சியாகவும் அமைந்தது.
காஷ்மீரை வளமாக்க வென்று இந்திய அரசு ஒதுக்கிய பணத்தை கொண்டு பக்ஷி குலாம்
முகமுதுவின் குடும்ப வாரிசுகள் தங்களை வளமாக்கிக் கொண்டனர். இவரது ஆட்சியை "பக்ஷி
பிரதர்ஸ் கார்ப்பரேஷன்" என்று அழைத்தார்கள் என்றால் இவரது ஆட்சி எவ்வாறு
செயல்பட்டது என்பதை நாம் அறிந்து கொள்ளலாம்.




1956 நவம்பர் 17ல் ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்புச்சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதில்
காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என்று தெளிவாக வரையறுக்கப்பட்டது. இதைத்
தொடர்ந்து புதிய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் 1957ல் தேர்தல் நடைபெற்றது.




காஷ்மீரில் பக்ஷிகுலாம் முகமது முதல் - மீர் காசிம் வரையுள்ள பல்வேறு
ஆட்சியாளர்களை மாற்றி இந்திய அரசு அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை
இம்மாநிலத்தில் அமல்படுத்துவதற்கான சட்டத்தையும் நீட்டித்துக் கொண்டது. இதே போல்
இன்றைக்கு 370வது பிரிவு என்பது வெறும் சட்ட வடிவத்தில் மட்டுமே எஞ்சியுள்ளது.
அதன் சாரங்கள் அனைத்தையும் இந்தியாவை ஆண்ட காங்கிரஸ் கட்சி செயலிழக்கச் செய்து
விட்டது.




தேர்தல்களும் - ஜனநாயக சீரழிவும் :




1957ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தில்லுமுல்லுகள் மூலம்
மாநிலத்தின் அனைத்து இடங்களிலும் பக்ஷி குலாம் முகமதுவின் கட்சி வெற்றி பெற்றது.
இத்தேர்தலில் பாதிக்கும் மேற்பட்ட இடங்களில் போட்டியின்றியே வேட்பாளர்கள் தேர்வு
செய்யப்பட்டனர். போட்டியிருந்த அனைத்து இடங்களிலும் போட்டி வேட்பாளர்களது வேட்பு
மனுக்கள் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்டன. இவ்வாறே 1962ம் ஆண்டு நடைபெற்ற
தேர்தலிலும் பக்ஷியின் கட்சியே 75 இடங்களில் 70 இடங்களில் வெற்றி பெற்றது.
இதேபோல் 1967, 1972 தேர்தல்களிலும் பெரும் முறைகேடுகள், வேட்பு மனுக்கள்
நிராகரித்தல், எதிரணியினரை அச்சுறுத்துதல், வாக்குப் பெட்டிகளையே மாற்றுதல் போன்ற
ஜனநாயக கேலிக்கூத்துக்கள் நடைபெற்றன. 1972ல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி
- முஸ்லீம் அடிப்படைவாதக் கட்சியான ஜமாய்த்தே இஸ்லாமியை ஊக்கப்படுத்தியது.
தேர்தலில் வெற்றி பெறுவது டெல்லியில் உள்ள காங்கிரஸ் ஆட்சியாளர்களின்
அனுமதியின்றி நடைபெறாது என்ற அளவிற்கு ஜனநாயகம் பெரும் சீரழிவிற்கு
உள்ளாக்கப்பட்டது. 1977ல் நடைபெற்ற தேர்தல் மட்டுமே இதில் விதிவிலக்காக
கூறப்படுகிறது. இதில் சேக் அப்துல்லாவின் ஜம்மு-காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சி
47 இடங்களை வென்று ஆட்சியைப் பிடித்தது. நடைபெற்ற தேர்தல்களில் முக்கிய
கோரிக்கைகளாக காஷ்மீரின் சுயாட்சி, வாக்கெடுப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகளை
பிரதிபலித்து நடைபெற்றது.




பக்ஷிகுலாமின் ஆட்சியில் நடைபெற்ற ஊழல்கள் மக்களிடையே பெரும் கிளர்ச்சியைத்
தூண்டியது. பின்னர் பக்ஷியும் கைது செய்யப்பட்டார். இதைத் தொடர்ந்து எஸ்.எம்.
சாதிக், மீர்காசிம் என்று காங்கிரசின் கைபொம்மைகளே காஷ்மீரத்தில் ஆட்சியில்
நீடிக்க முடிந்தது.




இரண்டு போர்கள்:




இதற்கு இடையில் 1965 ஆகஸ்டில் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற
ஊடுருவல் காரர்களின் ஊடுருவலைத் தொடர்ந்து இரண்டு மாதக் காலமும், 1971ல் வங்க
தேசப் பிரிவினையைத் தொடர்ந்து இந்தியா-பாகிஸ்தானிற்கு இடையில் இரண்டு போர்கள்
நடைபெற்றன. இவை இரண்டிலும் பாகிஸ்தானின் ஊடுருவலை முறியடித்ததோடு இரண்டு முக்கிய
உடன்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. 1965ல் தாஸ்கண்ட் உடன்பாடும், 1972ல் சிம்லா
உடன்பாடும் ஏற்பட்டது.




சிம்லா உடன்பாடு :




சுல்பிகர் அலி பூட்டோவிற்கும் - இந்திராகாந்திக்கும் இடையில் சிம்லாவில் உடன்பாடு
எட்டப்பட்டது. இதில் இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இருநாட்டு உறவில் இவ்வுடன்பாடு
முக்கிய மைல் கல்லாக கருதப்படுகிறது. இவ்வுடன்பாடு எட்டப்பட்டு இரு நாடுகளுக்கு
இடையில் கடந்த 25 ஆண்டுகளில் எந்தவித போரும் (தற்போது கார்கில் தவிர) ஏற்படவில்லை
என்பது குறிப்பிடத்தக்கது.




இவ்வுடன்பாட்டின முக்கிய அம்சங்களாக ...




¬ இரு நாடுகளுக்கு இடையிலான முரண்பாடுகளையும், தீர்க்கப்படாமல் உள்ள
பிரச்சனைகளையும் அமைதி வழியில் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்த்துக் கொள்வது

¬ இரு நாடுகளின் ஒருமைப்பாட்டிற்கும், பாதுகாப்பிற்கும் குந்தகம் விளையாமல்
காப்பது. இருநாடுகளின் சுயச்சார்பு, அரசியல் சுயச்சார்பு ஆகியவற்றை மதித்து
நடப்பது.




¬ இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை மேம்படுத்துவது தொலைத் தொடர்பு, தபால்,
தந்தி, கடல்வழி போக்குவரத்து, வான்வழிபோக்குவரத்து ஆகியவற்றை மேம்படுத்துவது,




¬ இரு நாடுகளின் எல்லைக்கோட்டை மதித்து நடப்பது, இரு நாடுகளின் சர்வதேச
எல்லையில உள்ள படைகளை வாபஸ் பெறுவது, பொருளாதார, வர்த்தக உறவுகளை வளர்ப்பது,
அறிவியல், தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வது போன்று பல்வேறு அம்சங்களைக் கொண்ட
உடன்பாடு கையெழுத்தானது.




இவ்வுடன்பாடு இருநாட்டு மக்களிடையேயும், காஷ்மீர் பகுதி மக்களிடையேயும் பெரும்
வரவேற்பைப் பெற்றது. முற்போக்கு சக்திகள் பலராலும் பாராட்டப்பட்டது. மார்க்சிஸ்ட்
கம்யூனிஸ்ட் கட்சி இன்றைக்கும் இரு நாடுகளுக்கான பிரச்சனைகள் குறித்து சிம்லா
உடன்பாட்டின் அடிப்படையிலேயே பேச வேண்டும் என்பதை தொடர்ந்து வலியுறுத்தி வருவது
குறிப்பிடத்தக்கது.




பரூக் அப்துல்லாவின் ஆட்சி:




1977 தேர்தலுக்கு பின் மீண்டும் ஆட்சிக்கு வந்த சேக் அப்துல்லா
தனது அரசியல் வாரிசாக பரூக் அப்துல்லாவை நியமித்தார். 1982 செப்டம்பர் 8ம்
தேதி சேக்அப்துல்லா மறைவைத் தொடர்ந்து பரூக் அப்துல்லா அம்மாநிலத்தின்
முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சி தனது சித்து
விளையாட்டை மீண்டும் ஆரம்பித்தது. பரூக்கின் தேசிய மாநாட்டுக் கட்சியில் ஒரு
பிளவை உண்டாக்கி எஸ்.எம். ஷாவை முதல்வராக்கியது. பின்னர் 1983ல் நடைபெற்ற
தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் பரூக் அப்துல்லா மீண்டும் முதல்வரானார். அதே
சமயத்தில் இந்திராகாந்திக்கு எதிராக இந்திய நாட்டில் ஒரு வலுவான
எதிர்க்கட்சிகளின் ஒற்றுமை உருவானது. பரூக் அப்துல்லா எதிர்க்கட்சிகளோடு ஒரு உறவை
உண்டாக்கிக் கொண்டு செயலாற்றினார். இதை பொறுக்காத காங்கிரஸ் கட்சி, பரூக்கின்
கட்சியில் மீண்டும் ஒரு பிளவை உண்டாக்கியது. பரூக்கை வீழ்த்த காங்கிரஸ்
ஏற்படுத்திய சதித்திட்டத்திற்கு அப்போதைய கவர்னர் பி.கே. நேரு ஒத்துழைக்கவில்லை.




ஜக்மோகனின் ஆட்சி :




காஷ்மீரில் தனது கைப்பாவையாக செயல்பட ஒத்துழைக்காத பரூக்கை எப்படியாவது பதவியில்
இருந்து நீக்க வேண்டும் என்று துடித்த காங்கிரஸ் கட்சி ஜக்மோகனை புதிய கவர்னராக
நியமித்தது. எதிர்பார்த்தது போலவே பரூக்கின் ஆட்சி டிஸ்மிஸ் செய்யப்பட்டது.




ஜக்மோகனின் ஆட்சி இந்து மதவெறியுடன் கூடிய ஜனநாயகத் தன்மையற்றதாக இருந்தது. இவரது
நடவடிக்கைகளே இதற்கு சாட்சியாக இன்றும் உள்ளது. ஜக்மோகனின் காலத்தில் அனைத்து
ஜனநாயக போராட்டங்களையும் அடக்கி ஒடுக்குவது என்ற கோட்பாடே மேலோங்கி
செயல்படுத்தப்பட்டு வந்தது. அதுமிட்டுமின்றி ஜக்மோகன் முழுக்க முழுக்க வகுப்புவாத
பார்வையோடு அம்மாநிலத்தில் தனது ஆட்சியை நடத்தினார்.




ஸ்ரீநகரில் கவர்னர் மாளிகையில் பணியாற்றி வந்த முஸ்லீம்களை வெளியேற்றினார்.
ஜன்மாஷ்டமி தினத்தன்று ஆடுகள் வெட்டுவதற்கு தடை செய்தார்.




ஏற்கெனவே பக்ஷி குலாம் முகமது ஆட்சிக்காலத்தில் முஸ்லீம்களுக்கும்,
இந்துக்களுக்கும், சீக்கிய, பௌத்தர்களும் என்று 70 : 30 என்ற விகிதத்தில்
இடஒதுக்கீடு பின்பற்றப்பட்டது. ஆனால் இதில் ஜக்மோகனின் ஆட்சிக்காலத்தில்
முஸ்லீம்களுக்கான இடஒதுக்கீடு பாதியாக குறைக்கப்பட்டது. இவ்வாறு தொடர்ந்து
முஸ்லீம்களை பாதிக்கக்கூடிய வேலையையும், ஒடுக்கக்கூடிய வேலையையும் மிகுந்த
கவனத்தோடு செய்தார் ஜக்மோகன், இவரது ஆட்சிக்காலத்தில் காஷ்மீர் மக்களுக்கு
இந்தியாவின் மீதான அதிருப்தி அதிகரித்தது என்றால் மிகையல்ல.




தீவிரவாதத்திற்கான கரு:




மேற்கண்ட பல்வேறு நடவடிக்கைகளால் அதிருப்தியுற்ற இளைஞர்களிடையே இந்தியாவிற்கு
எதிரான உணர்வு எழத் துவங்கியது. இதேபோல் பாகிஸ்தான் வசம் உள்ள பாகிஸ்தான்
ஆக்கிரமிப்பு காஷ்மீரிலும் இதுபோன்ற உணர்வுகள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராகவும்
எழுந்தது. காஷ்மீரை தனிநாடாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்னிறுத்தி
"ஜம்மு - காஷ்மீர் விடுதலை முன்னணி" என்ற அமைப்பு உருவானது. இந்த இயக்கத்துடன்
தொடர்புடைய மக்பூல்பட் என்ற இளைஞன் கொலைக் குற்றச்சாட்டு குறித்து 1976ல் கைது
செய்யப்பட்டான். இவருக்கு தூக்குத் தண்டனையும் அளிக்கப்பட்டது. ஆனால் தண்டனை
நிறைவேற்றப்படாமல் இருந்த நிலையில் ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணி மக்பூல்பட்
உட்பட ஒரு சிலரை விடுதலை செய்யக்கோரியும், ஒரு மில்லியன் பணம் கோரியும் இந்தியத்
தூதரக அதிகாரி இரவீந்திர மேத்திரி-யை கடத்தினர். பின்னர் மூன்று நாள் கழித்து
அவரை படுகொலை செய்தனர். இதனைத் தொடர்ந்து இதே ஆண்டு பிப்ரவரி 11ல் சிறையில்
இருந்த மக்பூல்பட்டிற்கு தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டது.




தீவிரவாதத்தின் செயல்கள் இவ்வாறு முளைவிடத் துவங்கியது. அடுத்ததாக இவர்களுடைய
இலக்கு, மக்பூல்பட்டிற்கு தூக்குத் தண்டனை அளித்த நீதிபதியை கொலை செய்தனர்.
இவ்வாறு தொடர்ந்து இந்திய அரசிற்கு எதிராக பல்வேறு சதி வேலைகளிலும்,
வன்செயல்களிலும் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஒரு கட்டம் வரை பாகிஸ்தான் ஆதரவு
இருந்தது. பின்னர் இவர்களால் பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் உட்பட தனிநாடு
வேண்டும் என்று வலுவாக குரல் எழுப்பினர். இதன் விளைவாக பாகிஸ்தான் அரசு போட்டியாக
"ஹிஸ்புல் முஜாஹிதின்" என்ற அமைப்பினரை பயன்படுத்தி இந்திய அரசிற்கு எதிராகவும்,
ஜம்மு காஷ்மீர் விடுதலை முன்னணிக்கு எதிராகவும் பல்வேறு வன்செயல்களில்
ஈடுபட்டனர்.




சோவியத்தின் வீழ்ச்சியும் - தீவிரவாதத்தின்
வளர்ச்சியும்:




ஏற்கெனவே அமெரிக்க ஏகாதிபத்தியம் சோவியத் யூனியனை சீர்குலைக்க
பல்வேறு சதிவேலைகளில் ஈடுபட்டது. அதன் ஒரு பகுதியாக பாகிஸ்தானையும்,
ஆப்கானிஸ்தானில் உள்ள தாலிபான்களையும், பல்வேறு பிற்போக்கு ஆயுதம் தாங்கிய
குழுக்களையும் சோவியத்துக்கு எதிராக ஏவிவிட்டது. பின்னர் சோவியத் அரசு
பின்னடைவுக்குள்ளானதைத் தொடர்ந்து இத்தகைய தீவிரவாதக் குழுக்களையும்
"முஜாஹீதின்கள்" (புனிதப் போர் வீரர்கள்) என்று அழைக்கப்பட்ட இஸ்லாம் மத
அடிப்படைவாதிகளை இந்தியாவிற்கு எதிராக பயன்படுத்தத் துவங்கியது.




1989க்குப் பிறகே ஆயுதம் தாங்கிய தாக்குதல் நடவடிக்கைகள் துவங்கியது. இத்தகைய
தீவிரவாதக் குழுக்கள் ஜம்மு-காஷ்மீரில் உள்ள முற்போக்கு இயக்கங்களை
சீர்குலைப்பது, அவர்களது தொண்டர்களை படுகொலை செய்வது, பொதுச் சொத்திற்கு சேதம்
விளைவிப்பது, அரசின் செயல்களை முடக்குவது என்று பல்வேறு, அரசியல் கட்சித்
தலைவர்களை கடத்துவது, இதன் ஒரு பகுதியாகத்தான் மத்திய அமைச்சர் முப்தி முகமது
சையத்தின் மகள் ரூபியாவை கடத்திச் சென்றது என நாளுக்கு நாள் இவர்களது வன்செயல்கள்
அதிகரிக்கத் துவங்கியது.




அதன் விளைவாக காஷ்மீர் பள்ளத் தாக்குப் பகுதியில் பாகிஸ்தான் ஆதரவு அமைப்புகள்
டசன் கணக்கில் முளைக்கத் துவங்கின. ஹிஸ்புல் முஜாஹீதின், லஷ்கர் - இ - தொய்பா,
ஜெய்ஸ்-இ-முகமது, ஹர்ஹத் - வுல் - முஜாஹீதீன்கள், ஹல்உம்மால் முஜாஹீதீன்கள் என
பல்வேறு தீவிரவாத அமைப்புகளுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து இந்தியாவிற்குள்
ஊடுருவலை ஏற்படுத்தி வருகிறது. இவர்களுக்கு மதஅடிப்படையில் போதனை அளித்து,
தற்கொலைப் படையாக செயலாற்றி வருகின்றனர். இத்தகைய அமைப்புகள் காஷ்மீர்
பாகிஸ்தானுடன் இணைய வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து தங்களது சதிச்
செயல்களை நிறைவேற்றி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாகத்தான் தற்போது காஷ்மீர்
சட்டமன்றத்தில் நடைபெற்றத் தாக்குதல்கள், இந்திய பாராளுமன்றத்தின் மீது நடைபெற்ற
தாக்குதல்கள் என தொடர்கிறது.




இதுமட்டுமின்றி காஷ்மீரில் தற்போது ஒரு மறைமுக அரசாங்கத்தையே நடத்தி வருகிறார்கள்
என்றால் மிகையல்ல. காஷ்மீர் மக்கள் மீதும் அவர்களது சுயேச்சையான நடமாட்டத்தையும்
அச்சுறுத்தல் மூலம் தடை செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக காஷ்மீரில்
திரையரங்கங்களை சீர்குலைப்பது, பள்ளிக்கூடங்களை சீர்குலைப்பது போன்ற தாலிபானிய
செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். பாகிஸ்தான் அரசு இந்தியாவிற்கு எதிராக
Proxy War என்று அழைக்கக்கூடிய ஓர்
மறைமுக யுத்தத்தையே நடத்தி வருகிறது.




அமெரிக்காவின் காஷ்மீர் குறித்த
கொள்கை:




அமெரிக்காவைப் பொருத்த வரை 1947 முதலே காஷ்மீரை "பிரச்சனைக்குரிய பகுதி" என்றே
அழைத்து வருகிறது தற்பொழுது அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காலின் பெவல் “காஷ்மீர்
சர்வதேச அஜண்டா” என்று முழங்குகிறார். இன்றைய நிலையில் காஷ்மீர் பூகோள
ரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த பகுதி.
காஷ்மீரை மையமாக வைத்து பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா, சோவியத், சோசலிச
சீனா ஆகிய 5 நாடுகளின் எல்லைப்புறத்தை மையமாக கொண்டு அமைந்துள்ள, மலைகளும்,
பள்ளத்தாக்குகளும் நிறைந்த ஒரு பகுதி. எனவே காஷ்மீரை தனி நாடாக மாற்றுவது என்பதே
அமெரிக்காவின் நீண்ட நாளைய கொள்கையாக இருந்து வருகிறது.




சங்பரிவாரின் அபாயகரமான
கோரிக்கை:




சங்பரிவார அமைப்புகள் நீண்ட நாட்களாகவே காஷ்மீர் மக்களை இந்தியாவிலிருந்து
தனிமைப்படுத்தும் வேலைகளையும், கோரிக்கைகளையும் முன்வைத்து வருகின்றனர். இதன் ஒரு
பகுதியாக தற்போது காஷ்மீருக்கு என்று அரசியல் சாசனத்தில் வழங்கப்பட்ட சிறப்பு
பிரிவான 370 - யை நீக்க வேண்டும் என்று கோருவதோடு, ஜம்மு-காஷ்மீரை - இந்துக்கள்
வாழக்கூடிய ஜம்மு, முஸ்லீம்கள் வாழக்கூடிய காஷ்மீர், பௌத்தர்கள் வாழக்கூடிய
லதாக் என மூன்று மாநிலங்களாக பிரிக்க வேண்டும் என்ற அபாயகரமான கோரிக்கையும்
முன்வைக்கின்றனர்.




இத்தகைய கோரிக்கை என்பது மதஅடிப்படையில் பாகிஸ்தான் முன்வைக்கும் "மதஅடிப்படையில்
காஷ்மீர்" தன்னுடன் இணைய வேண்டும் என்ற “இரு நாடு கொள்கைக்கு” வலுச்சேர்ப்பதாக
அமையும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபட கூறியுள்ளது. அத்துடன்
மதச்சார்பின்மை என்ற கோட்பாட்டை சுககுநூறாக உடைத்து நொறுக்கும் செயலாகவே இது
அமையும்.




தற்போது இதற்கும் மேல் ஒரு படி மேலே சென்று "விஸ்வ ஹிந்து பரிஷத்" அமைப்பு
ஜம்மு-காஷ்மீரை நான்கு மாநிலமாக பிரிக்க வேண்டும் என்று தீர்மானம் இயற்றியுள்ளது.
இத்தகைய கோரிக்கைகள் காஷ்மீர் மக்களை மேன் மேலும் இந்தியாவிலிருந்து அன்னியப்பட
வைக்கவே உதவும்.




மாநில சுயாட்சி கோரிக்கையை சங்பரிவார அமைப்புகள் எள்ளவும் ஏற்றுக் கொள்ளவில்லை
என்பதோடு மட்டுமல்ல அதை தொடர்ந்து எதிர்த்தும் வருகிறது. அதே போன்று மாநில
சுயாட்சி குறித்து முன்னாள் பிரதமர் பி.வி. நரசிம்மராவ் Sky
is Limit
(வானமே எல்லை) என்று வியாக்கியானம் செய்தார். காங்கிரஸ்
கட்சிக்கும் மாநில சுயாட்சி குறித்து குறுகிய பார்வையே நீடிக்கிறது.




சர்வதேச தலையீடு:




கார்கில் போர் நடைபெற்றதற்கு பிறகு பாகிஸ்தான் அரசு இந்திய
எல்லைக்குள் தொடர்ச்சியாக ஆயுதந் தாங்கிய தீவிரவாதிகளையும், தற்கொலை படைகளின்
ஊடுருவலையும் அதிகப்படுத்தி வருகிறது. இதன் விளைவாக காஷ்மீரில் துப்பாக்கி
வெடிச்சத்தமும், வெடிகுண்டுத் தாக்குதல்களும், இந்திய இராணுவத்தின் முகாம்களை
தாக்குவது என்று பல்வேறு வடிவங்களில் வன்செயல்கள் புதிய பரிணாமமெடுத்து இரு
நாட்டு உறவுகளை மிகவும் சீரழிவுக்கு உள்ளாக்கியுள்ளது. இதன் விளைவாக இரு நாட்டு
எல்லையில் பெருமளவிலான படைகள் குவிக்கப்பட்டு போர் பதட்டம் தணியாத சூழலே
நிலவுகிறது.




இதன் விளைவாக இப்பிரச்சனையில் சர்வதேச நாடுகளின் தலையீடுகள் சமீபகாலத்தில்
அதிகரித்த வண்ணம் அமைந்துள்ளது. குறிப்பாக அமெரிக்க, பிரிட்டன் ஆட்சியாளர்கள்
நாளுக்கு ஒருவர் வீதம் ரம்ஸ்பெல்டு, ஜாக்ஷெராக், காலின்பெவல் என காஷ்மீர்
விவகாரத்தின் தங்களது மூக்கை நுழைத்து முயற்சித்து வருகின்றனர்.




மனித உரிமைகள் :




காஷ்மீரில் ஆயுதம் தாங்கிய ஊடுருவல்காரகளின் வன்செயல்களால் ஏதுமறியாத அப்பாவி
மக்கள் பல்லாயிரக்கணக்கில் பலியாகின்றனர். அத்துடன் அவர்களது உடமைகள் பொரும்
பாதிப்பிற்கு உள்ளாகின்றது. மதஅடிப்படைவாதிகளின் பல்வேறு கட்டுப்பாடுகளால்
அவர்களது அடிப்படை உரிமைகள் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகின்றன.




இதே போல் இந்திய இராணுவமும், எல்லைப் பாதுகாப்புப் படையும் விசாரணை என்ற பெயரால்
துன்புறுத்தப்படுவதும், பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு உள்ளாக்கப்படுவதும்,
விலைமதிப்பற்ற அப்பாவி மக்களது உயிர்கள் பறிக்கப்படுவதும், அவர்ளது இயல்பு
வாழ்க்கைக்கு பெரும் இடையூறாகவும் இருப்பதை தேசிய, சர்வதேசிய மனித உரிமை
அமைப்புகள் சுட்டிக்காட்டுகின்றன.




சமீபத்திய கருத்துக்கணிப்பு:




சமீபத்தில் லண்டனை தலைமையாகமாகக் கொண்ட மோரி என்ற அமைப்பு பல்வேறு கருத்துக்களை
முன்வைத்து நடத்திய கருத்துக் கணிப்பு கூட இன்றைக்கும் காஷ்மீர் மக்கள்
இந்தியாவின் மீது பல்முனைகளில் நம்பிக்கை வைத்துள்ளனர் என்பதையே காட்டுகிறது.




காஷ்மீர் மக்களில் 61 சதவீதம் பேர் அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும்
பாதுகாப்பானது இந்தியாவுடன் இணைந்து இருப்பதே என்றும், வெறும் 6 சதவீதம் பேர்
மட்டுமே பாகிஸ்தானுடன் என்றும், 33 சதவீதம் பேர் கருத்து ஏதும் கூறவில்லை.




76 சதவீத மக்கள் இந்தியாவும் - பாகிஸ்தானும் மோதிக் கொள்வதை விரும்பவில்லை. மாறாக
நிரந்தர தீர்வுக்கு வழியேற்பட வேண்டும் என்று விரும்புகின்றனர்.




காஷ்மீரியம் என்று அழைக்கப்படக்கூடிய பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சார
பகுதிக்குட்பட்டே தீர்வு காணப்பட வேண்டும் என்று 81 சதவீதம் பேர்
வலியுறுத்தியுள்ளனர்.




92 சதவீதம் பேர் காஷ்மீரை மதவழியிலோ, வட்டார வழியிலோ பிரிக்க வேண்டும் என்ற
எண்ணத்தை எதிர்த்துள்ளனர்.




ஜம்மு-காஷ்மீரில் வெளிநாட்டைச் சேர்ந்த ஆயுதம் தாங்கிய படைகளே பெரும் சீரழிவை
உண்டாக்குகின்றன என்று 65 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர்.




93 சதவீதம் பேர் பொருளாதார மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்பை உருவாக்குவதற்கான
நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும், ஆயுதம் தாங்கிய வன்முறைகளுக்கு முடிவு
கட்டவேண்டும் என்றும் 86 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர். எல்லைத் தாண்டிய
ஊடுருவலை நிறுத்த வேண்டும் என்று 88 சதவீதம் பேர் வலியுறுத்தியுள்ளனர்.




இதேபோன்று பாகிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர் மக்களுடனும் தங்களது வர்த்தக - தொழில்,
கலாச்சார உறவுகளை மேம்படுத்த வாய்ப்புக்களை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
இக்கருத்துக்கணிப்பு பல்வேறு அம்சங்களை சிறப்பான முறையில் பிரதிபலிக்கிறது.




பிரச்சனை தீர:




காஷ்மீர் பிரச்சனை தீர அதனை வரலாற்றுக் கண்ணோட்டத்தோடு அணுகுவதன் மூலமே
சாத்தியப்படும். காஷ்மீரியம் என்பது பல்வேறு இன, மொழி, மத அடையாளங்களைக் கொண்ட
பன்முகத் தன்மைக் கொண்ட கலாச்சார அடிப்படையைக் கொண்டது. இம்மக்களின் மனங்களில்
நம்பிக்கையை விதைக்கும் விதத்தில் குறுகிய மனப்பான்மையோடு அணுகாமல், அம்மக்களை
நம்பிக்கையோடும், அரவணைப்போடும் அவர்களது கலாச்சார, பொருளாதார, அரசியல் உரிமைகளை
பாதுகாக்கவும், பாகிஸ்தானின் ஊடுருவலை தடுத்து நிறுத்தவும், உரிய நடவடிக்கைகளை
எடுக்க வேண்டும்.




காஷ்மீரில் செயல்படும் தீவிரவாத, பிரிவினைவாத அமைப்புகள் வலியுறுத்துவது போல்
காஷ்மீர் தனிநாடாக மாறுமானால், ஆப்கானைப் போல் இஸ்லாமிய மத அடிப்படைவாதிகளின்
கைகளுக்கே அது செல்லும். அத்துடன் தாலிபானிய கட்டுப்பாடுகள் அங்கும்
அமல்படுத்தப்படும் அவர்களது உயர்ந்த கலாச்சாரமான காஷ்மீரியம், மதச்சார்பின்மை
நசுக்கப்படுவதோடு, கல்வி உரிமைகள் மறுக்கப்படும், பொருளாதார பிரச்சனைகளும் பெரும்
கேள்விக்குள்ளாகும். அத்துடன் ஏகாதிபத்தியங்கள் தங்களது கைப்பாவையாகவே காஷ்மீரை
மாற்றி தனது பொம்மை ஆட்சியாளர்களை கொண்டு ஆசிய நாடுகளை அச்சுறுத்தவே
பயன்படுத்திக் கொள்வார்கள். எனவே காஷ்மீர் தனிநாடு என்பதோ, பாகிஸ்தானுடன் இணைவது
என்பதோ பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையாது. மாறாக பிரச்சனையை மேலும் சிக்கலாக்கும்.




தீர்வுக்கு மார்க்சிஸ்ட் கட்சி முன்வைக்கும்
ஆலோசனை :




இப்பிரச்சனைகளுக்கான தீர்வாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பல்வேறு தருணங்களில்
தொடர்ந்து வலியுறுத்தும் முக்கிய அம்சங்கள்




¬ காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியே.




¬ பாகிஸ்தான் புனித போர், மறைமுகபோர் (Proxy
War", "Holly War")
என்ற ஆயுதம் தாங்கிய தீவிரவாதிகளின் ஊடுருவலை உடனடியாக
தடுத்த நிறுத்த வேண்டும்.




¬ இடதுசாரி கட்சிகள் இணைந்து வலியுறுத்தியதுபோல் “பயங்கரவாத நடவடிக்கைகள்
குறித்த, ஐ.நா.வின் 1373வது தீர்மானத்தின் அடிப்படையில்” சமீபத்தில்
நம்முடைய நாடாளுமன்றத்தின் மீது நடைபெற்ற தாக்குதல் குறித்த உரிய ஆவணங்களையும்,
பாகிஸ்தானின் பயங்கரவாதச் செயல்களையும் ஐ.நா.வின் முன்வைக்க இந்திய அரசு
நடவடிக்கை எடுக்க வேண்டும்.




¬ இந்திய அரசு அண்டைநாடுடன் உறவுகளை மேம்படுத்துவது என்ற கொள்கையுடன் அணுக
வேண்டும்.




¬ காஷ்மீர் பிரசச்னை குறித்து இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளுக்கு
இடையிலேயே பேசித் தீர்த்துக் கொள்ள வேண்டும். மூன்றாவது நாட்டிற்கு இதில் இடம்
தரக்கூடாது.




¬ 1972ம் ஆண்டு இந்திராகாந்திக்கும் - சுல்பிகர் அலி பூட்டோவிற்கும் இடையே
சிம்லாவில் நடைபெற்ற உடன்பாட்டை அடிப்படையாகக் கொண்டே பாகிஸ்தானுடன்
பேச்சுவார்த்தை மேற்கொள்ள வேண்டும்.




¬ காஷ்மீருக்கென்று வடிவமைக்கப்பட்ட இந்திய அரசியல் சாசனத்தின் சிறப்பு
பிரிவு 370-ல் வழங்கப்பட்ட உரிமைகள் காப்பாற்றப்பட வேண்டும்.




¬ உண்மையான ஜனநாயக ரீதியில் தேர்தலை நடத்த வேண்டும்.




¬ மதச்சார்பின்மையுடன் கூடிய காஷ்மீரியம் என்று அழைக்கப்படக்கூடிய உயர்ந்த
கலாச்சாரம், மொழி, பொருளாதாரம், தனித்தன்மை, வேலைவாய்பு, சுற்றுலா போன்றவற்றை
மேம்படுத்தவும், பாதுகாக்கவும் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.




¬ மாநிலத்திற்கு என்று உயர்ந்தபட்ச சுயாட்சி அதிகாரத்தை வழங்குவதோடு, ஜம்மு
பகுதிக்கும், லடாக் பகுதிக்கும் பிரதேச சுயாட்சி அதிகாரத்தை வழங்கிட வேண்டும்.




¬ பாகிஸ்தான் - இந்தியா இருநாடுகளுக்கிடையிலான உறவினை மேம்படுத்த வேண்டும்.
தீர்க்கப்படாமல் உள்ள பிரச்சனைகளை இருநாடுகளுக்கிடையிலேயே அமைதி வழியில்,
பேச்சுவார்த்தையின் மூலமே தீர்த்துக் கொள்ள வேண்டும்.






பயன்படுத்தப்பட்ட நூல்கள்:






“காஷ்மீரி துயரம்”




“காஷ்மீர் மீதான பாரதத்தின் யுத்தம்”




Kashmir; Towards Insurgency,
Puri, Balraj




Save Kashmir, HKS
Surjith




பீப்பிள்ஸ் டெமாக்ரஸ


ி


காஷ்மீர் குறித்த இணையதளங்கள்






ஆகஸ்ட் 2002, மார்க்சிஸ்ட் மாத இதழில் வெளியான
என்னுடைய கட்டுரையே இங்கே வழங்கப்பட்டுள்ளது. காஷ்மீர் குறித்த சரியான நிலைபாட்டை
எடுத்திட இக்கட்டுரை உதவும் என்று கருதுகிறேன்.






- கே. செல்வப்பெருமாள்


April 19, 2006

மே-8 வெடிக்கப் போகும் குண்டு!

ஐய்யய்யோ, என்னங்க இது மே 8-ஆம் தேதி தமிழகம் முழுவதும் தேர்தல் நடக்கப்போகுது. அந்த நேரத்துல குண்டு வெடிக்குமா? இது ஏதோ தீவிரவாதிகளின் சதிச் செயல், அப்படி, இப்படி என்று மூளையை குழப்பிக் கொள்ள வேண்டாம். இது வேலையில்லா வாலிபர்கள் அம்மா ஆட்சிக்கு எதிராக வாக்குகளாக வைக்கப் போகும் குண்டு. அப்பாடா, இப்பத்தான் உசிரே வந்தது.

அம்மா ஜெயலலிதா இருக்காங்களே, அவங்க ரொம்ப தாயுள்ளம் படைத்தவங்க அதனாலதான் 1991 தேர்தல் அறிக்கையில “வேலையில்லாத் திண்டாட்டம் என் மடியில் கட்டியிருக்கிற வெடிகுண்டுன்னு” சொன்னாங்க. அந்த 5 ஆண்டு காலத்துல வேலைகேட்ட வாலிபர்களுக்கு போலீசின் தடியடியைத்தான் பரிசாக கொடுத்தாங்க.

அத்தோட விட்டாக்கூடப் பரவாயில்லைங்க... “வேலையா கிடைக்கல, நீங்க திருப்பூருக்குப் போயி பாருங்க,பல இடங்கள்ல வேலைக்கு ஆள் தேவைன்னு” போர்டு போட்டிருக்குன்னு ஒரே போடா போட்டாங்க! அத மட்டுமா செஞ்சாங்க “வேலையில்லா கால நிவாரணம்” அதெல்லாம் கொடுத்தா வாலிபர்கள் சோம்பேறியா போயிடுவாங்கன்னு அதையும் புடுங்கிட்டாங்க. அப்புறம் என்ன அடுத்த தேர்தல்ல அம்மா ஆட்சிக்கு வரமுடியவில்லை!

சரி 2001-ல என்ன சொன்னாங்க! வருடத்துக்கு ஒரு லட்சம் பேருக்கு வேலை தருவோம்னு சொன்னாங்க! அம்மாவின் அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரத்தில் ஒரே புள்ளிவிவர வாடைதான் அடிக்குது. ஆனால் இந்த ஆட்சியில எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்தாங்கன்னு மட்டும் சொல்ல மாட்டேங்குறாங்க.

ஆனா, ஆட்சிக்கு வந்ததும் மறக்காம ஒன்ன மட்டும் செஞ்சாங்க, அது என்ன தெரியுமா “வேலைக்கு ஆள் எடுக்க தடை” இப்படி ஒரு சட்டத்தை போட்டதால, அரசுத்துறையில இருந்த ஒரு லட்சம் காலி இடங்கள் இன்னமும் காலியாகவே இருக்குது! அம்மாவின் தாயுள்ளம் அத்தோடு நின்றதா? கஜானா காலி பண்ணிட்டாங்க, அரசு ஊழியர்களுக்கே பட்ஜெட்ல 98 சதவீதம் செலவு பண்றோம். அதனால ஆசிரியர்களில் 30 சதவீதம் பேரை வீட்டுக்கு அனுப்பப்போறோம்னு இன்னொரு போடு போட்டாங்க... இதுதாங்க அம்மா...

அம்மா ஆட்சியில வேலைவாய்ப்பு அலுவலகத்தில்பதிவு செய்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?

வருடம் ஆண்டுப் பதிவு மொத்தப் பதிவு வேலை கொடுத்தது
2001 5,94,580 49,23,296 20,138
2002 4,43,566 50,57,420 10,303
2003 3,34,879 48,76,380 30,714
2004 5,67,619 41,51,170 16,700
2005 6,09,370 37,56,372 18,782

தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் அம்மா ஆட்சியில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து வருவதைத்தான் இந்த புள்ளி விபரம் காட்டுகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்வதே வீணான வேலை என்று வாலிபர்கள் கருதுவதால்தான் - தங்களை வேலையில்லாதவர்களாக புதுப்பித்துக் கொள்வதில் எந்தவிதமான பயனும் இல்லை என வெறுத்துப் போயுள்ளதையும் இது காட்டுகிறது. ரேஷன் கார்டு உள்ளவர்கள்தான் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு கொள்ள முடியும் என்ற அம்மாவின் உத்திரவும் இதில் அடங்கும். ஒவ்வொரு ஆண்டும் புதியதாக பதிவு செய்வோர் கடந்த ஐந்தாண்டு காலமாக 6 லட்சம் பேர் வரை பதிவு செய்கிறார்கள். ஆனால் வேலை வழங்குவது மட்டும் வெறும் 20 ஆயிரம் பேருக்கு மட்டுமே! அதாவது 100 பேர் பதிவு செய்தால் 3 பேருக்கு மட்டுமே வேலை. இந்த புள்ளிவிபரத்தை மொத்தமாக பதிவு செய்தவர்களில் எவ்வளவு பேருக்கு வேலை கொடுத்துள்ளார் என்று பார்த்தால் அரை (0.5) சதவீதம்தான். தமிழகத்தில் கிராமப்புறத்தில் உள்ள வேலையில்லாத இளைஞர்களையும் சேர்த்தால் ஒரு கோடிபேருக்குமேல் வேலையில்லா பட்டியலில் இணைந்துள்ளனர். பதிவு செய்துள்ளவர்களில் 17 லட்சம் பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தேசிய மாதிரி சர்வே அமைப்பு (NSSO) நாடு முழுவதும் வேலையில்லாத் திண்டாட்டம் குறித்து எடுத்த புள்ளி விவரப்படி தமிழகத்தில் வேலையின்மை விகிதம் 11.78 சதவிகிதமாக உள்ளதாக கூறியுள்ளது. இது தேசிய அளவில் 7.1 சதவிகிதம் மட்டுமே. அதாவது தேசிய அளவை விட 5 சதவீத அளவிற்கு வேலையின்மை தமிழகத்தில் அதிகரித்துள்ளது. எதற்கெடுத்தாலும் தமிழகம் முதல் மாநிலம் என்று அலறும் ஜெயலலிதா! வேலையின்மையை ஒழிப்பதில் முதல் மாநிலமாக்கினாரா?

முதல் மாநிலமாக்கினார் எதில் தெரியுமா? வேலையில்லாமல் வாழ்க்கைக்காக ஏங்கித் தவிக்கும் இந்த வாலிபர்களை போராடும் அரசு ஊழியர்களுக்கு எதிராக பயன்படுத்துவதில், மிரட்டுவதில் முதல் முன்மாதிரி மாநிலமாக்கியுள்ளார் அம்மா ஜெயலலிதா! அது மட்டுமா? படித்த இளைஞர்களுக்கு சாராயக் கடைகளில் வேலை கொடுத்துள்ளார். அதுவும் எப்படி வாழ்க்கைக்கே நாதியற்றவர்களிடம் டெபாசிட் தொகையாக ரூ. 10,000 பெற்றுக் கொண்டு, அவர்களுக்கு மாதம் ரூ. 1500 சம்பளமாக வழங்கியதில் நிச்சயம் தமிழகம்தான் முதல் மாநிலமாக இருக்க முடியும். இந்த வேலையில் சேருவதற்கே ரூ. 50,000 வரை ஊழல் நடைபெற்றதையும் ஊரரியும். அம்மாவின் ஆசியால், கருணையுள்ளத்தால் தமிழக வாலிபர்கள் ஏற்றம் பெற்றதை இதற்கு மேலும் அறிய வேண்டுமா?

இப்போது சொல்கிறார் ஐ.டி. துறையில் 5 லட்சம் பேருக்கு வேலை தருவோம் என்று, சிறு தொழில் துவங்க கடன் உதவி, புதிய தொழில்களை துவங்கப்போவதாகவும் அதிமுக தேர்தல் அறிக்கையில் அடுக்கியிருக்கிறார். அம்மாவின் தாயுள்ளத்தை 10 ஆண்டு ஆட்சியில் புரிந்து கொண்ட வாலிபர்கள் தற்போது வாக்குகளாய் வெடிக்கத் தயாராக உள்ளனர் மே 8-ல். வாலிபர்களை வஞ்சித்த அம்மா ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப, புதிய ஆட்சியை மலரச் செய்ய!

April 18, 2006

திண்னையில் ஓர் பதிவு

பிரான்சில் நடைபெற்ற மாணவர் - வாலிபர் எழுச்சி குறித்த என்னுடைய கட்டுரை ஒன்று திண்ணையில் வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த கட்டுரை பிரான்சு போராட்டம் உச்சகட்டத்தில் இருந்தபோது பதியப்பட்டது. தற்போது
பிரான்சு அரசு, வாலிபர்களை வஞ்சிக்கும் அந்த அரக்கத்தனமான சட்டத்தை திரும்பப் பெற்றுக் கொண்டது. உலகமய சூழலில் மக்களின் பெருந்திரள் போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றி இது. இன்றைய தேவை இதுபோன்ற பெருந்திரள் மக்கள் போராட்டங்களே!

April 17, 2006

அம்மாவின் பொற்கால ஆட்சி!

  1. மின்சார டெபாசிட் கட்டண உயர்வு பல மடங்கு ரூ. 400லிருந்து ரூ. 1000 உயர்த்தியது.

  2. சுயநிதி பொறியியல் கல்லூரி மாணவர்கள் பிரச்சினை - ஒவ்வொரு ஆண்டும். தமிழக அரசின் மாணவர் அலைகழிப்பு கொள்கை.

  3. அரசியல் கட்சித் தலைவர்கள் மீது வழக்கு - கைது, கருணாநிதி, நல்லகண்ணு, என். வரதராஜன், வைகோ, நெடுமாறன்...

  4. காவிரி பிரச்சினையில் ஜனநாயக அணுகுமுறை இல்லாத போக்கு, அனைத்து கட்சி கூட்டம் எந்தக் காலத்திலும் கூட்டப்படவில்லை.

  5. உள்ளாட்சி அமைப்பு நிதி நிலை - உள்ளாட்சி அமைப்புகளுக்கும் மின் கட்டண உயர்வு, உள்ளாட்சி ஊழியர் பற்றாக்குறை. உள்ளாட்சிக்கு தேவையான நிதி ஒதுக்கவில்லை.

  6. சென்னை மாநகராட்சி - நகராட்சி ஜனநாயகம் சீர்குலைப்பு.

  7. பொடா சட்டம் - டெஸ்மா சட்டம் வைகோ, நெடுமாறன், நக்கீரன் கோபால் உட்பட பலர் கைது! அரசு ஊழியர்கள் மீது டெஸ்மாவை பாய்ச்சியது.

  8. 2001 முதல் போக்குவரத்து, மின்வாரியம், பொதுவிநியோகம் போன்ற துறைகளில் போன° பிரச்சினை 2004ஆம் ஆண்டு வரை தீர்க்கப்படவில்லை. வெறும் 8.33 சதவீதம் மட்டுமே போன° என்று தன்னிச்சையாக அறிவிப்பு. வழக்கமாக 20 சதவீதம் இருக்கும். போராடிய 20,000 ஊழியர்கள் சிறையில் அடைப்பு.

  9. கட்டண உயர்வுகள்


    பஸ் கட்டணம்


    பால் விலை உயர்வு


    மின்சாரக் கட்டண உயர்வு


    ரேசன் அரிசி 3.50இல் இருந்து ரூ. 9.00 என உயர்த்தியது. பின்னர் 6.50 ஆக ஆக்கியது.


    சர்க்கரை விலை உயர்வு.


    சிமெண்ட் விலை உயர்வு.


    யூரியா விலை உயர்வு


    கல்வி கட்டணம் உயர்வு.


    அரசு மருத்துவமனை நுழைவுக் கட்டணம் ரூ. 5 வசூல்


    க்குவரத்து கட்டணம் உயர்வு


    மாணவர்களுக்கான இலவச பஸ்° பாஸ் ரத்து.


    அரசு ஊழியர் - ஆசிரியர்கள் 30 சதவீதம் குறைப்பு.

  10. மொத்தத்தில் 10,000 கோடி அளவுக்கு கட்டணங்களை உயர்த்தி கொள்ளையடித்தது.

  11. கள்ளச் சாராய சாவுகள்: 50க்கும் மேற்பட்டோர் இந்த ஆட்சியில் இறந்த கொடுமை: பின்னர் அரசே டா°மாக்கை ஏற்று நடத்தியது. அந்த ஊழியர்கள் கொத்தடிமைகள் போல் வேலை வாங்கப்படுகின்றனர். வேலையில் சேர்ந்த வாலிபர்களிடமே டெபாசிட் கட்டணம் என வசூல் செய்யப்பட்டது. ஆளுங்கட்சிக்காரர்கள் இதில் பெரும் கொள்ளையடித்தனர். நிரந்தரம் இல்லை. சாராயம் தயாரிப்பது தனியார் நிறுவனங்கள். இதில் சசிகலாவிற்கு பங்குண்டு.

  12. சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது தடியடி. 24 மாணவர்கள் மண்டை உடைப்பு. 35 மாணவர்கள் மீது 10 பிரிவுகளில் வழக்குப் போட்டது. ஹா°டலில் நுழைந்து - போலீஸ்° அத்துமீறல்.


    டி.பி.ஐ. முன்னால் மாணவர்களின் கல்விப் பிரச்சினை குறித்து போராட்டம் நடத்தியவர்கள் மீது போலீ° காட்டுமிராண்டித்தனமான தாக்குதல்.

  13. ரூ. 5000 வருமானம் உள்ளவர்களுக்கு ரேஷன் வழங்க மறுப்பு. கலர் - கலர் அட்டைகள் வெளியிடப்பட்டது. கௌரவ ரேஷன் அட்டையை அறிமுகப்படுத்தி கேவலப்படுத்தியது.

  14. விவசாயிகள் மீது தடியடி - கொள்முதல் மையங்களை திறக்க கோரி போராடியவர்கள் நூற்றுக்கணக்கில் கைது.

  15. தஞ்சை மாவட்டங்களில் விவசாயிகள் பட்டினிச் சாவு, எலி கறியை தின்றது. கஞ்சித் தொட்டிகளை திறக்க வைத்தது. இறந்த விவசாயிகளை கேலி பேசியது. விவசாயிகளுக்கு ஆதரவாக பேசிய நல்லகண்ணு மீது வழக்கு.

  16. ஒரே கையெழுத்தில் 2 லட்சம் அரசு ஊழியர்கள் வேலை நீக்கம். அரசு குடியிருப்பில் இருந்து உடனடியாக காலி செய்ய வேண்டும் என்று இரவில் பெண்களை அச்சுறுத்தியது. இறுதியில் உச்சநீதி மன்றத்தின் தலையீட்டின் மூலம் வேலை கிடைத்தது. அப்படியிருந்தும் கூட 6072 பேருக்கு வேலை மறுப்பு. அரசு ஊழியர்கள் அலுவலகங்கள் சீல்வைப்பு. அரசு ஊழியர் சங்கங்களுக்கு தடை விதிப்பு. டெஸ்மா பாய்ந்தது.


  17. வீராணம் திட்டம் - வீணாண திட்டம் ரூ. 720 கோடி முதலீடு - கடலூர் மாவட்ட விவசாயிகள் பாதிப்பு. நிலத்தடி நீர் கொள்ளைக்கு வழிவிட்டது. கோகோ - பெப்சி கொள்ளை திருநெல்வேலி தாமிரபரணி முதல் வைகை ஆறு வை தனியாருக்கு தாரை வார்ப்பு. சென்னை போன்ற பெரு நகரங்களில் தண்ணீர் லாரிகள் மூலம் கோடிக்கணக்கான ரூபாய் கொள்ளை.

  18. ­ கடல் நீரை குடிநீராக்க மத்திய அரசு உதவி ரூ. 1000 கோடி ஒதுக்கீடு இதுவரை இதற்கான திட்டத்தை தமிழக அரசு வழங்கவில்லை. ஏற்கனவே இதுபோன்ற ஒரு திட்டத்தில் ரஷ்ய நிறுவனத்தில் லஞ்சம் கேட்டது - வழக்கு நிலுவையில் உள்ளது.

  19. 10,000 சாலைப் பணியாளர்கள் வேலை நீக்கம் 4 வருடமாக அலை கழிப்பு உச்சநீதி மன்ற தீர்ப்பைக்கூட மதிக்காத மாநில அரசு. 50க்கும் மேற்பட்டோர் தற்கொலை. பல குடும்பங்கள் சீர்குலைந்து போனது.

  20. சட்டமன்ற ஜனநாயகம் அப்பட்டமாக சீர்குலைக்கப்பட்டது. எதிர்கட்சியினை பேச விடாமல் முடக்கியது. விதி 110 என முதல்வர் குறுக்கீடு.

  21. பட்ஜெட் கூட்டத் தொடர் 40 நாள் நடக்க வேண்டியது வெறும் 6 நாட்கள் மட்டுமே நடத்தியது. வரலாற்றில் மிகப்பெரிய அவலம் என்றுத்தான் இதைக் கூற வேண்டும்.

  22. போலீஸ்°துறை சட்டத்தை தாங்களே கையில் எடுத்துக்கொண்டது:

  23. போலீசாரா கொலை, கொள்ளைகளில் ஈடுபட்டது. ஜெயலட்சுமி விவகாரம் காவல்துறையில் ஏற்பட்டுள்ள சீரழிவை வெளிக்கொண்டு வந்தது. ஷெரீனா விவகாரம் கஞ்சா வழக்கு பதியப்பட்டது.

  24. வைகோ நடை பயணம் - தடை செய்யப்பட்டது.

  25. தீண்டாமை - தமிழகம் முழுவதும் தலைவிரித்தாடுகிறது. சைக்கிளைத் தந்த ஜெயலலிதா சைக்கிள் ஓட்டுவதற்கு தடை விதிப்பதற்கு எதிராக என்ன செய்தார்?

  26. நாட்டார் மங்கலம், கொட்டக்கச்சியேந்தல், கீரிப்பட்டி, பாப்பாப்பட்டி என தலித் பஞ்சாயத்துக்களில் ஜனநாயகம் நிலை நாட்டப்பட்டதா? இந்தியாவிலேயே இந்த விஷயத்தில் தமிழகம்தான் முதலிடத்தில் உள்ளது.

  27. 50 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தனியார் முதலாளிகளுக்கு தாரைவார்ப்பு. இந்த இந்த விஷயத்தை மழுப்புவது.

  28. மேதின விழாவிற்குகூட தடை விதித்த அரசு - 2002


  29. வேலை நிறுத்தம் செய்ய தடை விதிக்கப்பட்டது. வேலை நிறுத்தம் சட்டவிரோதம் என அறிவிப்பு. ஊர்வலம் - பொதுக்கூட்டம் நடத்துவதற்கு அனுமதி மறுப்பு. மெரீனா பொதுக்கூட்ட இடம் மறுக்கப்பட்டது.

  30. பழங்குடியினர் பிரச்சினை 140 பழங்குடியின மக்களை மத்திய அரசு பட்டியல் செய்து அறிவித்தது. ஆனால் தமிழகத்தில் பல பழங்குடி இனங்களை பட்டியலில் இன்னும் சேர்க்கவில்லை.

  31. போக்குவரத்து தனியார்மய முயற்சி, மினி பஸ் சென்னை போன்ற பெரு நகரங்களில் அனுமதிக்க முயற்சி.

  32. மூன்று ஆண்டுகளாக வேட்டி - சேலை - பொங்கல் காலங்களில் அளிக்கப்படவில்லை. இதனால் 25,000 கைத்தறி நெவாளர்கள் பாதிக்கப்பட்டனர். அத்துடன் 100 ரூபாய் பட்டுவாடா செய்யாதததால் மிகவும் துன்பத்திற்கு உள்ளானார்கள்.

  33. கூட்டுறவு ஜனநாயகம் கடந்த 5 ஆண்டுகளாக பறிக்கப்பட்டது.

  34. வேலையின்மை 55 லட்சம். வேலை நியமனத் தடைச் சட்டம், வேலையில்லா கால நிவாரணம் மறுப்பு, தமிழகத்தில் வேலையிண்மை 11 சதவீதம், தேசிய அளவில் 7 சதவீதம். போலீசுக்கு ஆள் எடுக்கும் போது தடியடி.

  35. பத்திரிகைகள் மீது வழக்கு, இந்து, முரசொலி, தீக்கதிர், தினகரன், நக்கீரன் என பத்திரிகைககளின் குரல்வளை நெறிக்கப்பட்டது.

  36. சட்டமன்றமே நீதிபதியாக மாறியது சபநாயகர் பத்திரிகைகள் மீது நடவடிக்கை எடுத்தது.

  37. தலைமைச் செயலாளர்கள் மாற்றம். காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி பந்தாடப்பட்டது. மந்திரிகள் ஆண்டுக்கு ஒரு முறை தொடர்ந்து மாற்றம்.

  38. போலீஸ் என்கவுன்டர் கொலைகள்.

  39. சிறுசேரி நில விற்பனையில் ஊழல் குற்றச்சாட்டு. தற்போது இந்த நில விற்பனையை ரத்து செய்துள்ளது. இதன் மூலம் தமிழக அரசின் இன்னொரு டான்சியாக இந்த விவகாரம் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.

  40. உணவுக்கு வேலைத் திட்டம் காண்டிராக்ட் விட்டு கொள்ளை. முறையாக அமலாக்கிட வில்லை.

  41. ஆடு - கோடி பலியிட தடை, மதமாற்றத் தடைச் சட்டம்.

  42. சேது சமுத்திரத்திற்கு எதிர்ப்பு.
  43. கடற்கரையோர பிரதேசங்களில் உள்ள மீனவர்களை அகற்றிவிட்டு - மலேசியா - சிங்கப்பூர் போல பெரும் ஹோட்டல்கள் - சுற்றுலா தலமாக்கிட முயற்சி. அதே போல் கூவம் கரையோர மக்கள் வெளியேற்ற முயற்சி.

April 15, 2006

சுடலைமாடனின் 5 ஆண்டு ஐ.ஐ.டி. அனுபவம்

நன்பர்களே, பிராமணர் ஆதிக்கமா நிலவுகிறது ஐ.ஐ.டி.யில் என்ற பதிவிற்கு பல நன்பர்கள் சூடாக தங்களது கருத்துக்களை முன்வைத்துள்ளனர். இதில் பாசிட்டிவ், நெகட்டிவ் இரண்டும் இருந்தது. ஐ.ஐ.டி. வளாகத்திற்குள் என்ன நடக்கிறது என்பதை நன்பர் சுடலைமாடன் என்னுடைய பதிவிற்கு பின்னூட்டம் இட்டிருந்தார். எனவே அந்த பின்னூட்டத்தை உங்கள் முன்னூட்டமாக பதிகிறேன். நன்றி சுடலை மாடன்.
ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு செய்வது அந்நிறுவனங்களின் சுதந்திரமான இயங்கலுக்குத் தடையாக இருக்குமா இல்லையா என்று விவாதிப்பது வேறு. ஆனால் இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களில் எல்லாமே உயர்வாக இருக்கின்றன, அவை புனிதமானவை, விமர்சிக்கக் கூட யாருக்கும் உரிமையில்லை, விமர்சிப்பவர்கள் எல்லோரும் பிராமணர் வெறுப்பாளர் என்று திரும்பத் திரும்ப கொஞ்சம் கூட எந்தவித ஆதாரமும் இல்லாமல் பேசி வருவது வேறு.
முன்னது அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்தக் கருத்தை விவாதித்து ஒரு முடிவுக்கு வர இயலும். பின்னது வெறும் சாதிய அரசியலின் வெளிப்பாடு, எந்தப் பயனுமில்லை. வெளிப்படையாக தங்களது சாதிய அடையாளத்தின் அடிப்படையிலேயே எல்லாவற்றையும் விவாதிக்கும் டோண்டு போன்றவர்களையும், மூளையைக் கழட்டி வைத்து விட்டு வெற்றுக் கூச்சல் இடும் சில வெண்ணைகளையும் விட விஞ்சி நிற்கும் இரவி ஸ்ரீநிவாஸ் உண்மையிலேயே ஒரு இடதுசாரிதானா என்று கேள்வி எழுகிறது.
நான் ஐ.ஐ.டி. சென்னையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் தங்கிப் படித்திருக்கிறேன். அங்கு எப்படி மாணவர்கள் வருகிறார்கள், எப்படி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப் படுகிறார்கள், பிற பணிகளில் எப்படி நியமிக்கப் படுகின்றனர், ஆசிரியர்களும், பிற பணியாளர்களும் எப்படிப் பணியாற்றுகிறார்கள், பதவி உயர்வு எந்த அடிப்படையில் கொடுக்கப் படுகிறது, துறைத்தலைவர்கள், டீன்கள் போன்ற பதவிகளுக்கு எப்படி ஆசிரியர்களை நியமிக்கிறார்கள், ஆராய்ச்சிக்கான மான்யங்கள் எப்படி பகிர்ந்து கொள்ளப் படுகின்றன என அனைத்து விவரங்களையும் கண்கூடாகப் பார்த்திருகின்றேன்.
இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் ஐ,ஐ,டி.க்களைப் புனிதப் பசுக்களாக சித்தரிப்பது எல்லாம் பொய். எல்லாக் கல்வி நிலையங்களிலும், பல்கலைக் கழகங்களிலும் நடந்து வரும் அற்ப அரசியலும், மொழி, சாதி, இனப் பாகுபாடுகளும், பெண்களின் மீதான பாலியல் வக்கிரங்களும் அங்கும் உண்டு. ஒரே வேறுபாடு அவற்றின் அளவும், அவை கையாளப் படும் சாதுரியமும்தான். மேலும் மற்ற கல்வி நிலையங்களைப் போன்று அரசியல்வாதிகள், காவல் துறை, பத்திரிகைகள் நேரடியாக தலையீடு செய்ய முடியாது, அதில் பெரும் நன்மை உண்டு என்றாலும், ஐஐடி-யின் புனிதப் பெயர் கெட்டு விடக் கூடாது என்று மூடி மறைக்கப்பட்ட சம்பவங்களும் உண்டு.
மேலும் பாதிக்கப் பட்டவர்கள் இந்தப் புனிதப் பெயரை மீறி எதுவும் செய்ய நினைத்தால் அவர்களின் மீதான நம்பகத்தன்மையை மேலும் கேள்விக்குள்ளாக்கப் பட்டு தங்களை இன்னும் தர்மசங்கடங்களுக்குள் ஆளாக விரும்புவதில்லை.சாதிய ரீதியிலான ஒடுக்குமுறையும், பாகுபாடும் மற்ற கல்வி நிலையங்களைப் போலவே ஐ.ஐ.டி.யிலும் உண்டு. மற்ற பல்கலைக்கழகங்களில் பிராமணரல்லாத மேல்/நடுச் சாதியினர் ஆதிக்கம் போலவே, ஐ.ஐ.டியில் பிராமணர்களின் ஆதிக்கம் உண்டு. இன்னும் சொல்லப் போனால் தெலுங்குப் பிராமணர், தமிழ்ப் பிராமணர் மற்றூம் கன்னடப் பிராமணர் என்று அவர்களுக்குள்ளும் தங்கள் குழு மனப் பான்மையையும், ஆதிக்கத்தையும் காண்பிப்பதுண்டு.
சென்னை ஐ.ஐ.டி.யின் எதிரே இருக்கும் CLRI-யில் தமிழ் அய்யர் - தமிழ் அய்யங்கார் என்றும் கூடப் பதவிப் போட்டிகளில் வெளிப்படையாக நடந்து கொண்டதைப் பார்த்திருக்கிறேன். பிராமணர் இல்லாத சாதியினர் திறமையிருந்தும் புறக்கணிக்கப் பட்டதற்கு, இழிவாக நடத்தப் பட்டதற்கு பல உதாரணங்கள் சொல்லலாம்.
கணிதப் பேராசிரியர் வசந்தா கந்தசாமி வெளிப்படையாக எதிர்த்துப் போராடி வருகிறார். அவர்கள் அல்லாமல், வேதியியல் பேராசிரியர்கள் பி.டி. மனோகரன், இயந்திரவியல் பேராசிரியர் வேலுசாமி போன்றவர்கள் எப்படியெல்லாம் நடத்தப் பட்டார்கள் என்று அவர்களது துறையில் உள்ள மாணவர்களையும், ஊழியர்களையும் கேட்டால் தெரியும்.
மேலும் பெரும்பாலான துறைகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்வதிலெல்லாம் தகுதியின் அடிப்படையில் அல்லாமல் தங்களுக்கு வேண்டியவர்களையும், தங்களுக்குச் சால்ராப் போடுபவர்களையும் போட்டு நிரப்பி வந்துள்ளனர். இதில் பிராமணர்களில் தகுதியான பலர் கூட நிராகரிக்கப் பட்டுள்ளனர். இதையெல்லாம் நான் சொல்லுவதன் காரணம், பிராமணர்கள் மேல் மட்டுமேயான காழ்ப்புணர்ச்சியால் அல்ல. வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் பெரும்பாலோர் திறமைக்கு முக்கியம் தராமல், சட்டத்துக்குப் புறம்பாகக் கூட தகுதியில்லாதவர்களை பதவிகளில் நிரப்புகின்றனர். அதற்கு சாதிய மேலாதிக்கக் குணமும் ஒரு காரணம்.
எனவே இரவி ஸ்ரீநிவாஸ் போன்றவர்கள் இட ஒதுக்கீட்டினால் ஐ.ஐ.டிக்களின் தரம் குறைந்து விடும் என மீண்டும், மீண்டும் ஒப்பாரி வைப்பது அவருடைய குறுகிய சாதியடிப்படையிலான வெளிப்பாடுதான்.
நன்றி - சொ. சங்கரபாண்ட

April 13, 2006

பிராமணர் ஆதிக்கமா நிலவுகிறது ஐ.ஐ.டி.யில்?

திறமைக்கு மதிப்பு இருக்காது: ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். சர்ச்சை! என்ற பதிவைத் தொடர்ந்து - எழுந்த விவாதத்திற்கு பதிலளிக்கும் முகமாகவும், உண்மையில் ஐ.ஐ.டி.யில் நடப்பது என்ன என்பதை அறிந்து கொள்வதன் மூலம்தான் மத்திய அரசு அமலாக்கவுள்ள ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீடு நியாயமானதா? இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும். மேலும், இந்த பதிவு ஐ.ஐ.டி.யில் நடக்கும் உண்மையை நிலையை வெளிக்கொணரும் முகமாக பதியப்படுகிறதே தவிர, ஒரு குறிப்பிட்ட (பிராமண) சமூகத்திற்கு எதிரான பதிவு அல்ல என்பதையும் முதலில் தெளிவுபடுத்தி விடுகிறேன்.

உயர் கல்வி நிறுனங்களான நாடு முழுவதும் உள்ள ஆறு ஐ.ஐ.டி.களுக்கு நம்முடைய மத்திய அரசு ஆண்டுதோறும் 500 கோடி ரூபாய் மானியமாக வழங்குகிறது. இதில் சென்னை ஐ.ஐ.டி. மட்டும் 88.64 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதாக, 2000ம் ஆண்டு வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. மொத்தத்தில் ஐ.ஐ.டி. - ஐ.ஐ.எம். - ஐ.ஐ.எ°. போன்ற உயர் கல்வி நிறுவனங்கள் மானியமாக பெறுவது 90 சதவீதத்திற்கும் மேலான தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் செலுத்திய வரியின் ஒரு பகுதிதான் என்பதை முதலில் தெளிவுபடுத்திடுவோம். இருப்பினும், இந்நிறுவனங்களில் இம்மக்களுக்கு உள்ள நியாயமான உரிமைகள் உத்திரவாதப்படுத்தப்பட்டதா? என்பதுதான் நம் கேள்வி!

இன்றைக்கு நாடு முழுவதும் 7 ஐ.ஐ.டி.க்கள் செயல்படுகின்றன. 1950களுக்கு பிறகு இந்தியாவில் உயர் தொழில்நட்ப கல்வி தேவையைத் தொடர்ந்து உருவாக்கப்பட்டவைகள்தான் இந்த ஐ.ஐ.டி.க்கள். பிரிட்டிஷ் இந்தியாவில் - இந்திய ஆட்சியதிகாரத்தின் பெரும் பகுதியாக தங்களை கட்டியமைத்துக் கொண்ட பிராமணர்கள். இத்தகைய உயர் கல்வியிலும் தங்களை ஆரம்பம் முதலே நிலை நிறுத்திக் கொண்டனர். தற்போது இந்த கல்வி நிறுவனங்களில் 30,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயில்கின்றனர். இது தவிர பல ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி மாணவர்களும் உள்ளனர்.

இந்த கல்வி நிறுவனங்களில் முழுக்க - முழுக்க மேல்ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது என்று பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்புக்குரல்கள் வந்ததைத் தொடர்ந்துதான் முதன் முதலில் கல்வியில் 1973இல் தாழ்த்தப்பட்ட - பழங்குடியின மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யப்பட்டது. கிட்டத்தட்ட 53 ஆண்டுகாலம் இந்த மக்களை ஐ.ஐ.டி. வளாகத்திற்கு உள்ளேயே அனுமதிக்காமல் பெரும் இரும்புத்திரையைப் போட்டு இறுக்கி வைத்திருந்தது மேல்ஜாதியாதிக்கம். அரசு இடஒதுக்கீட்டை கொண்டு வந்திருந்தாலும், அந்த இடஒதுக்கீடும் முழுமையாக அமலாகவில்லை என்ற குற்றச்சாட்டு இன்று வரை நிலவுகிறது. அடுத்து, ஐ.ஐ.டி.க்களில் பேராசிரியர்களாக பணியாற்றுபவர்களில் 100 சதவீதம் பிராமணர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. ஆசிரியர்கள் விஷயத்தில் இன்னும் இடஒதுக்கீடு என்ற விஷயத்தையே முழுமையாக பின்பற்றுவதில்லை.

உதாரணமாக, சென்னை ஐ.ஐ.டி.யில் மட்டும் பணிபுரியும் 427 ஆசிரியர்களில் இரண்டுபேர் மட்டுமே தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சார்ந்தவர்கள். 20 பேர் ஓ.பி.சி., மீதி 400 பேர் பிராமணர்கள். இதில் எங்காவது சமூக நீதி இருக்கிறதா என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். இதைத்தான் உள்வட்டம் என்று என்னுடைய முதல் பதிவில் தெரிவித்து இருந்தேன். இன்றைக்கு 90 சதவீத பிராமணர்களின் ஆதிக்கத்தின் கீழ் பணிபுரியும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சார்ந்த ஆசிரியர்கள் பல்வேறு அவமானங்களுக்கும், ஒதுக்குதல்களுக்கும் உள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது. மாணவர்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மத்திய அரசு, இவர்களுக்கான ஆசிரியர்களை ஒதுக்குவதிலும் கட்டாயம் ஒதுக்கீட்டை உடனடியாக அமுலுக்கு கொண்டு வரவேண்டியுள்ளது. இதை வைத்துதான் ஐ.ஐ.டீ.யை செல்லமாக இவ்வாறு அழைக்கின்றனர் ஐயர் - ஐயங்கார் டெக்னாலஜி என்று. இந்த ஆசிரியர்களில் ஒருவர் கூட இசுலாமிய மதத்தைச் சார்ந்தவர்கள் இல்லை என்பது இன்னொரு கொடுமை! இவர்களில் பெண் ஆசிரியர்கள் எவ்வளவு பேர் என்பதும் கேள்விக்குறியே!

இது தவிர சென்னை ஐ.ஐ.டி.யில் 1983 ஆண்டு கணக்குப்படி 800 தலித் தொழிலாளர்கள் பணிபுரிகின்றனர். அவர்களில் 796 பேர் துப்புறவு பணியாளர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தீண்டாமையின் வடிவம் எப்படி இருக்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையா? உயர் கல்வி, நிறுவனங்களின் உயர் பதவிகள், அரசின் உயர் மட்டம் என பல இடங்களிலும் இன்றைக்கும் உயர் ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. சுதந்திர இந்தியாவில் எத்தகைய மாற்றம் இன்னும் நிகழ வேண்டியிருக்கிறது என்பதை இதன் மூலம் உணரலாம்.

அதே போல் வினாய் கிர்பால் - மீனாட்சி குப்தா ஆகியோர் இணைந்த மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வில் 1989 - 1992 காலகட்டத்தில் 5868 மாணவர்களில் 616 பேர்தான் தலித் - பழங்குடி மாணவர்கள். அதாவது வெறும் 10.49 சதவீதம்தான். தலித் - பழங்குடியினருக்கு ஒதுக்கப்பட்ட இடஒதுக்கீட்டின் அளவு 22.5 சதவீதம். ஆனால் அமலாக்கப்பட்டதோ வெறும் 10 சதவீதம்தான். மத்திய அரசு இடஒதுக்கீடு என்று அறிவித்த பின்பே நிலவும் உண்மை என்ன? என்பதை வெளிச்சம் போட்டு காட்டுகிறது இந்த விபரம். இடஒதுக்கீடு என்ற ஒன்று இல்லையென்றால் என்ன நிகழும். 100 சதவீதமும் மேல்ஜாதி ஆதிக்கமே நிலவுவதற்கு வழி வகை செய்யும். எனவே மத்திய அரசு தற்போது கொண்டு வரும் ஓ.பி.சி.க்கான இடஒதுக்கீட்டை எந்தவிதமான காலதாமதமும் இன்றி இந்த கல்வியாண்டிலேயே அதை அமலாக்கிட வேண்டும். இதுவே இந்திய மக்களில் 90 சதவீதம் பேரின் எதிர்பார்ப்பு.

இது தவிர தலித் - பழங்குடி மக்களை அடையாளப்படுத்துவதற்கான முயற்சியும் நடைபெறுவதாக கூறப்படுகிறது. அதாவது வழங்கப்படும் விண்ணப்பங்கிலேயே இரண்டு விதமான கலர் உபயோகப்படுத்தப்படுகிறது. அதே போல் கேள்வித்தாள்களிலும் இந்த முறை அமலாக்கப்படுகிறது. இதுவே தலித் - பழங்குடி மக்களை அடையாளம் காட்டும் கருவியாக மாற்றப்படுகிறது. எனவே மத்திய அரசு உயர் கல்வி மட்டுமல்ல எந்தவிதமான விண்ணப்பமாக இருந்தாலும் அதில் சமத்தன்மையை கடைப்பிடிக்க வேண்டும். மேலும் ஆசிரியர் விகிதத்தில் தலித் - பழங்குடி - ஓ.பி.சி. காம்பினேஷன் சரி செய்யப்படாமல், என்னதான் இடஒதுக்கீட்டை வைத்தாலும், அதுவே தடையரன்களாகி விடுவதற்கான வாய்ப்பாக உள்ளது. எனவே இந்த தடையரனையும் மத்திய அரசு தூக்கியெறிய வேண்டும்.

இறுதியாக பெண்கள். தற்போது மத்திய அரசு அறிவிக்கும் இடஒதுக்கீட்டின் அளவு மொத்தமாக 49.5 சதவீதம்! இந்த இடஒதுக்கீட்டின் அளவு 50 சதவீதத்திற்கு மேல் போகக்கூடாது என்று சட்டம் இருக்கிறது. இந்தச் சட்டத்தையும் உடனடியாக திருத்திட வேண்டும். அல்லது மாநில அரசுகள், அந்தந்த மாநில நிலைமைகளுக்கு ஏற்ப திருத்திக் இடஒதுக்கீட்டை அமலாக்குவதற்கு சட்டத்தில் வாய்ப்பளிக்க வேண்டும். இப்போதுகூட மத்திய அரசு அமலாகவுள்ள இடஒதுக்கீட்டின் மூலம் அநிதியே நிலவுகிறது. அதாவது முழுக்க முழுக்க உயர் ஜாதியினருக்கு 50 சதவீதம் செல்வதற்குத்தான் வாய்ப்பு வழங்கப்படுகிறது. எனவே மத்திய அரசு 49.5 சதவீத இடஒதுக்கீடு போக, மேலும் பெண்களுக்கு என்று 50 சதவீத இடஒதுக்கீடும், உயர் ஜாதியினரில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் இருப்பவர்களுக்கு என்று 5 சதவீத இடஒதுக்கீடும் அளித்தால்தான் சமூகத்தில் உயர் கல்வியில் ஒரு சமத்தன்மையை எட்டிட முடியும்.

இது தவிர இந்தியாவில் தற்போது பல கல்விமுறைகள் பின்பற்றப்படுகிறது. அதாவது, State Board, Matriculation, CBSC.... எதற்காக இப்படி பல்வேறு கல்விமுறைகள் ஒரு நாட்டில் பின்பற்றப்படுகிறது. இதுதான் உயர் ஜாதி ஆதிக்கத்தை மத்திய அரசே நிலைநாட்டிட மத்திய அரசே ஏற்படுத்தி தரும் வாய்ப்பாகி விடுகிறது. எனவே, முதலில் இந்த முறையை மாற்றி நாடு முழுவதும் ஒரே கல்விமுறையை கொண்டு வரவேண்டும். இதில் ஒரே பாடத்திட்டம் பின்பற்றப்பட வேண்டும்.

இவையெல்லாம் இருந்தாலும் கூட, இன்றைக்கும் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் இருக்கும் பிராமண சமூகம் பொருளாதார ரீதியில் 97 சதவீதம் உயர்ந்த இடத்தில் இருக்கிறது. அதே சமயம் 90 சதவீதம் இருக்கம் ஒடுக்கப்பட்டவர்கள் பொருளாதார ரீதியாக 3 சதவீதம் கூட இல்லை! இந்த ஏற்றத்தாழ்வை - சரிப்படுத்திட அனைத்து மட்டத்திலும் உரிய மாற்றங்களை ஏற்படுத்த மத்திய - மாநில அரசுகள் உரிய திட்டங்களை செய்திட வேண்டும். ஒடுக்கப்பட்ட மக்களிடையே இதுகுறித்து விழிப்புணர்ச்சி அதிகப்படும்போதுதான் இவைகள் காலம் கடந்தாவது அமலுக்கு வரும்!
Thanks:
Dalit Media Network, Chennai

April 08, 2006

திறமைக்கு மதிப்பு இருக்காது: IIT-IIM சர்ச்சை

சமீபத்தில் மத்திய அரசும். மனிதவள மேம்பாட்டுத்துறையும் மத்திய அரசின் நிதி உதவிப்பெற்று செயல்படும் உயர் கல்வி நிறுவனங்களான IIT, IIM, IIS போன்ற உலக முக்கியத்துவம் வாய்ந்த கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு 27 சதவீத இடஒதுக்கீட்டை கொண்டு வந்துள்ளது.மத்திய அரசின் இந்த முடிவு இந்திய நாட்டில் உள்ள 97 சதவீதம் மக்கள் மிகுந்த எழுச்சியோடு வரவேற்கின்றனர். மற்றொரு புறம் இந்த உயர் கல்வி நிறுவனங்களில் தொடர்ந்து தங்களது ஆதிக்கத்தை தக்க வைத்துக் கொண்டிருந்த மேல் ஆதிக்க ஜாதியினர் தற்போது குய்யோ, முய்யோ என்று கூக்கூரல் எழுப்புகின்றனர்.

அவர்கள் கூறும் வாதமென்ன? உயர் தொழில்நுட்பம், விஞ்ஞானம், ஆராய்ச்சி போன்ற அதி முக்கிய துறைகளில் படிப்பதற்கு திறமைக்குத்தான் முதலிடம் கொடுக்க வேண்டும். இடஒதுக்கீடு கூடாது - எனவே மத்திய அரசின் இந்த இடஒதுக்கீட்டின் முலம் இத்துறைகளில் திறமை குறைந்தவர்கள் நுழைவதற்கு வாய்ப்பு ஏற்படும். இதன் முலம் இத்துறைகள் பின்னுக்கு தள்ளப்படும் என்று அங்கலாய்க்கின்றனர்.

திறமை என்று சொன்னாலே அதற்கு நிரந்தர குத்தகையை யார் இவர்களுக்கு அளித்தார்கள் என்று தெரியவில்லை. இவ்வளவு காலம் IIT, IIM, IIS போன்ற வளாகத்திற்கு உள்ளேயே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களை அனுமதிக்காமல், உள்வட்டம் - வெளிவட்டம் வைத்துக் கொண்டு அனைத்து தேர்வுகளிலும் இடம் பிடித்து அதன் முலம் அந்த இடத்தை ஆக்கிரமித்து வைத்துக் கொண்டு சமுகத்தில் சமநிலை நிலவுவதை தடுத்து வந்தவர்கள் முன்னேற்றத்தைப் பற்றியோ, திறமையைப் பற்றியோ பேசுவது அபத்தமாக உள்ளது.

பல்லாயிரம் ஆண்டுகளாக தாழ்த்தப்பட்டவர்களையும், பிற்படுத்தப்பட்டவர்களையும், சிறுபான்மையினரையும் கல்வி கற்பதற்கே அனுமதிக்காதவர்கள் தற்போது இம்மக்கள் அனைத்து துறைகளிலும் குறிப்பாக கணிணித்துறையில் வெறும் படிப்புத் திறமை மட்டும் போதாது? அங்கே கொஞ்சும் வித்தியாசமாக - Critical-ஆக சிந்திக்க வேண்டும். இன்று இத்துறைகளில் இந்திய அளவில் பல லட்சக்கணக்கானோர் தாழ்த்தப்பட்டவர்களும், பிற்படுத்தப்பட்டவர்களும் முன்னேறி வருகின்றனர். பல திறமைசாலிகள் உலகளவில் பணிபுரிந்து வருகிறார்கள்.

ஆனால் இப்போதும் கூட இந்த திறமைகளையெல்லாம் உள்வட்டத்தின் முலம் பின்னுக்குத் தள்ளிவிட்டு States-க்கு சென்று விடுவதும், அங்கும் தங்களது ஆதிக்கத்தை நிலை நிறுத்திக் கொள்ள முயல்வதும் உலகறிந்த விசமாக மாறிவிட்டது.

இந்த நிலையில் எப்படியாவது இந்த உயர்கல்வியில் இடஒதுக்கீட்டு விசயத்தை பின்னுக்குத் தள்ளலாம் என்று பா.ஜ.க. - சங்பரிவாரம் உட்பட உயர்ஜாதி ஆதிக்க கட்சி சார்ந்த நிறுவனங்களும், அமைப்புகளும், கட்டுரையாளர்களும் முயற்சிப்பது சமுகத்தில் மேலும் ஏற்றத் தாழ்வை உருவாக்கி, எதிர்காலத்தில் அதுவேகூட பெரும் பதட்டத்திற்கு வழிவகுப்பதாக மாறும்.
தினமும் பல கண்டுபிடிப்புகளை சாதாரண மக்கள் நிகழ்த்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். அது நீரில் செல்லும் சைக்கிள், ஆட்டோமெட்டிக் ஸ்பீடு கண்ட்ரோல் செய்யும் டு வீலர்கள்... இப்படி பல விசயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுத்தான் வருகிறது. இவர்களெல்லாம் IIT, IIMல் படிக்கவில்லை. மாறாக தங்களது சொந்த அனுபவ அறிவின் முலம் இதை நிகழ்த்துகிறார்கள். எனவே இத்தகைய மக்களுக்கு இந்த உயர்கல்வியில் வாய்ப்புக் கொடுப்பது இந்தியாவின் வெகுவிரைந்த ஐ-டெக் கனவு நினைவாவதற்கு உதவிடும்.

இந்த இடஒதுக்கீட்டினை பல பத்து வருடங்களுக்கு முன்பே அமலாக்க வேண்டும் என்று மண்டல் வலியுறுத்தியிருந்தார். அதுவே உள்வட்டம் - வெளிவட்டங்களால் பல ஆண்டுகள் து£சு படிந்து தற்போதுதான் அமலாகிறது. மண்டலுக்கு நன்றிகள் கூறுவோம்.

இதைவிட முக்கியமான விசயத்தை மண்டல் கூறியிருக்கிறார் அது என்ன தெரியுமா? உண்மையிலேயே தாழ்த்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்கள் முன்னேற வேண்டுமானால் நில விநியோகம் செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். இதையும் மத்திய அரசு ஒரு சட்டத்தின் முலம் அமலாக்கிட முன்னுக்கு வரவேண்டும். தமிழகத்தில் புதியதாக அமையவுள்ள ஆட்சியும் இதை உறுதியாக அமலாக்கிட வேண்டும் இதுவே மண்டலுக்கு செய்யும் தொண்டாகும்.

April 07, 2006

பெரியாரும் தலித்துக்களும்

------------------------------------------------------------------------------------------------------

நக்கீரன் வெளியீடான, இனிய உதயம் நாவலில் வெளியான மதிப்புமிகு சிவகாமி ஐ.ஏ.எ°. அவர்களின் பேட்டி வெளியாகியுள்ளது. அதில் இரண்டு கேள்விக்கு அவர் அளித்த பதிலை இங்கே பதிகிறேன். விவாதத்திற் காகத்தான்:

------------------------------------------------------------------------------------------------------

கேள்வி : தந்தை பெரியார் பார்ப்பனியத்துக்கு எதிராக உயர் ஜாதி இந்துக்களைத்தான் முன்னிறுத்தினார். தலித்துகளை இல்லை என்ற ஒரு கருத்து தற்போது பேசப்படுவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?


பதில் : திராவிட பேரரசியலில் தலித் என்ற நுண் அரசியல் கரைந்து விட்டது. பெரியார் இதற்கு ஒரு வகையில் காரணமானவர். தலித்துகளுக்கான எந்த வேலைத் திட்டங்களையுமே முன்னெடுக்காத அவர் தலித்துக்களுக்காகப் பாடுபட்டார் என்ற பெயர் பெற்றுள்ளார். இது விசாரணைக்கு உட்படுத்த வேண்டிய விஷயமே.


கேள்வி : பெரியாருடைய சிந்தனைகள் மக்களிடம் பரவலாகச் சென்றடைந்தது போல, அயோத்தியதாசரின் சிந்தனைகள் மக்களிடம் சென்றடையாததற்கு என்ன காரணம்?

பதில் : அயோத்தியதாசர் ஒரு தாழ்த்தப்பட்ட இனத்தில் பிறந்தது தான் அவரது படைப்புகள் மூழ்கடிக்கப்பட்டதற்கான காரணம்.


------------------------------------------------------------------------------------------------------

விவாதத்திற்காக என்று கூறிவிட்டு நான் ஒதுங்கிக் கொள்ள முடியாது. எனவே எனது கருத்தையும் இங்கே சொல்லி விடுகிறேன். சிவகாமி அவர்களின் கருத்தோடு எனக்கு முழு உடன்பாடு உண்டு.

------------------------------------------------------------------------------------------------------

April 05, 2006

மரணத்துடன் போராடும் மேத்தா

காலவரையற்ற உண்ணாவிரதத்தை நடத்தி வருகிறார் மேத்தா பட்கர், மத்திய பிரதேசத்தில் உள்ள நர்மதா அணையின், சர்தார் சரோவர் அணையின் உயரத்தை 110 மீட்டர் உயரத்தில் இருந்து 121 மீட்டர் உயரத்திற்கு உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மார்ச் 29 முதல் இந்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். கடந்த 8 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் மேத்தா பட்கர் தற்போது மயங்கிய நிலையில் - தன்னுடைய உடல் பலம் இழந்த நிலையிலும் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்கிறார்.
ஏன் இந்தப் போராட்டம்

நர்மதா நதியின் குறுக்கே பல அணைகளை கட்டுவதற்கு உலக வங்கியின் உதவியுடன் மிகப் பெரிய திட்டம் தீட்டப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. 50,000 கோடி முதலீடு கொண்ட இத்திட்டத்திற்கு பின்னால், பல ஏகபோக, பன்னாட்டு நிறுவனங்களின் இலாப வேட்கை மறைந்து இருக்கிறது. இது மட்டுமல்ல இந்த அணைக்கட்டு திட்டத்தால், மூன்று லட்சத்திற்கும் மேற்பட்ட பழங்குடி மக்களும், பல நூற்றுக்கணக்கான கிராமங்களும் பாதிக்கப்படுகின்றன. மேலும் மிக அரிய வகையான காடுகளில் உள்ள தாவர இனங்களும் பெரும் அழிவுக்கு உள்ளாகின்றன.

எனவேதான் நர்மதா அணையின் இத்திட்டத்திற்கு எதிராக நர்மதா பச்சாவோ அந்தலோன் என்ற எதிர்ப்பு இயக்கம் 1985இல் துவக்கப்பட்டு தொடர்ச்சியாக இயக்கம் நடத்தப்பட்டு வருகிறது. பாதிக்கப்படக்கூடிய இலட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கைக்கு எந்தவிதமான உத்திரவாதமும், மாற்று ஏற்பாடும் செய்யாமல் இத்திட்டத்தை நிறைவேற்றுவது யாருடைய நலனுக்காக என்ற கேள்வி வலுவாக எழுந்துள்ளது.இதன் தொடர்ச்சியாகத்தான் தற்போது சர்தார் சரோவர் அணையின் உயரத்தை உயர்த்துவதன் மூலம் மேலும் 35,000 மக்கள் பாதிக்கப்படவுள்ளனர். எனவேதான் இந்த அணையின் உயரத்தை உயர்த்தக்கூடாது என்று எதிர்ப்புத் தெரிவித்து மேத்தா பட்கர் தன்னுடைய உயிரையும் பொருட்படுத்தாமல் மக்கள் வாழ்க்கைக்காக தன்னையே அர்ப்பணித்து உண்ணாவிதத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரது உண்ணாவிரதப் போராட்டம் சுதந்திரப்போராட்டக் காலத்தில் பகத்சிங்குடன் 63 நாள் உண்ணாவிதப் போராட்டம் இருந்து உயிர் நீத்த ஜதீன்திரதாசையும், தமிழ்நாடு என்று பெயர் வைக்க வேண்டும் என்று உயிர் நீத்த தியாகி சங்கரலிங்கனாரையும் நினைவுப்படுத்துகிறது.

ஆட்சியாளர்களுக்கு மக்கள் நலனுக்காக உண்ணாவிரதம் இருப்பவர்களை விட அவர்கள் எடுத்த முடிவை எப்படியாவது அமலாக்குவதிலேதான் குறியாக வரலாற்று முழுக்க இருந்து வருகிறது. இருப்பினும் வரலாறு என்றும் அவர்கள் பக்கம் இருந்ததில்லை என்பதை வரலாறு நிரூபித்துள்ளது.

மேத்தா பட்கரின் உண்ணாவிரதத்தை கைவிடுமாறு பிரதமர் மன்மோகன் சிங் வேண்டிள்ளார். இத்தகைய கோரிக்கைகளை விடுவதை மன்மோகன் சிங் கைவிட்டு, அந்த அணையின் உயரத்தை உயர்த்துவதற்கு தடைவிதிப்பதே மேத்தாவுக்கும், மக்களுக்கும் செய்யும் பெரும் நன்மையாகும்.

April 04, 2006

பொறியில் மாட்டிய எலிகளும், தியாகி சோனியாவும்!

ஆதாயம் அடையும் பதவி குறித்து எழுந்த சர்ச்சையில் பா.ஜ.க.வின் அரசியல் சித்து விளையாட்டு சோனியாவுக்கு எதிராக திரும்பிவுடன் பூமராங்காக செயல்பட்டு தனது இரட்டை பதவிகளையும் ராஜினாமா செய்து தன்னை தியாகியாக வெளிக் காட்டிக் கொண்டார் சோனியாஜி. தற்போது மீண்டும் ரேபரலியில் அவர் போட்டியிடுகிறார். இதற்கான தேர்தலை தேர்தல் கமிஷன் மிக சூடாக, அவசர, அவசரமாக அறிவித்து மே 8 அன்று வாக்கு பதிவு நடைபெறும் என்று அறிவித்துள்ளது.

ஆதாயம் தரும் பதவி குறித்து விவாதமோ, அதற்கான சட்ட திருத்தமோ இன்னும் பாராளுமன்றத்தில் கொண்டு வரப்படவும் இல்லை. இது குறித்த விவாதம் மக்கள் மத்தியில் சென்றடைவதற்கு முன்னாலேயே தேர்தல் கமிஷன் ஏன் சோனியாவுக்காக மிக அவசரமாக செயல்படுகிறது என்பது புதிராக இருக்கிறது.

உண்மையில் சோனியாஜி தன்னை தியாகியாக காட்டிக் கொண்டாலும், ஒரு சட்டம் குறித்து நெருக்கடியான சூழல் ஏற்படும் போது, அதை நேருக்கு நேராக சந்திப்பதற்கு முன்னால் தன்னிச்சையாக ராஜினாமா செய்வது அவருக்கு வேண்டுமானால் பயன் தரலாம். ஆரோக்கியமான அரசியலுக்கு அல்ல. இதே புகாரைத்தான் சோம்நாத் சாட்டர்ஜி மீதும், இன்னும் பல எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதும் எழுப்பப்பட்டிருக்கிறது. எல்லோரும் சோனியா போல் தன்னிச்சையாக செயல்பட்டால் என்ன ஆகும்? இந்த ஆட்சியே காணாமல் போகும். சோனியா இதைத்தான் எதிர்பார்க்கிறாரா? அவருக்கே வெளிச்சம்!

குறிப்பாக இடதுசாரிகள் இந்த விஷயத்தில் மிக உறுதியாக அதை பாராளுமன்றத்திற்குள் தீர்த்திட வேண்டும் என்று கூறுவதோடு, நாங்கள் யாரும் ராஜினாமா செய்ய மாட்டோம் என்று உறுதியாக தெரிவித்ததுதான் சரியான அரசியல் நடவடிக்கையாகும். அரசியலில் ஓடி ஒளிவது எப்போதும் வெற்றியைத் தராது.

அதே சமயம் பொறியில் மாட்டிய சுண்டெலி எம்.பி.க்கள் (அதாங்க பாராளுமன்றத்தில் கேள்வி கேட்பதற்கே லஞ்சம் பெற்றவர்கள்) பதவியில் இருந்து நீக்கப்பட்டது இந்திய வரலாற்றில் இதுதான் முதல் முறை! அந்த ஊழல் எம்.பி.க்களின் பதவி பறிபோய் விட்டது. குறிப்பிட்ட எம்.பி.க்களின் தொகுதிகள் காலியாக கிடக்கிறது. இந்த இடத்தில் தேர்தலை நடத்துவதற்கு தடை விதித்துள்ளது உச்ச நீதிமன்றம். இது சரியான நடவடிக்கையா? அல்லது நாடாளுமன்றம் பெரியதா? நீதிமன்றம் பெரியதா என பெரியண்ணன் பாணியில் உச்சநீதிமன்றம் செயல்படுகிறதா? அது அவர்களுக்கே வெளிச்சம்!

ஜனநாயகத்தில் இரண்டு நடைமுறைகள் இருக்க முடியாது! சோனியாவுக்கு என்றால் உடனே தேர்தல், எம்.பி.க்களே இல்லாத இடங்களில் உச்சநீதிமன்றத்தின் கருணையில்தான் தேர்தல் நடக்கும் என்றால் - இது என்ன ஜனநாயகம்! தேர்தல் கமிஷன் எல்லா விஷயத்திலும் வீராதி, வீரராக செயல்படும் போது, இந்த விஷயத்தில் அதன் நிலையென்ன! டாண்டன் சொல்வாரா? அல்லது டன்டனக்கா டன்டனக்கா என்று ஆடுவாரா?

April 03, 2006

துக்ளக் ராஜ்யம்

வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல், மீண்டும் துக்ளக்கான்னு பார்க்காதீங்க! இந்த துக்ளக் நம்ம துக்ளக் இல்லீங்க.

வேற யாருன்னு பாக்றீங்களா? அதாங்க ஏப்ரல் 1 அன்று அமெரிக்காவின் அதி முட்டாள் யாருன்னு எடுத்த சர்வேயில் இடம் பிடிச்ச துணை ஜனாதிபதி டிக் செனி (2வது முட்டாள்), ஜனாதிபதி ஜார்ஜ் புஷ் (இவர் 3வது முட்டாள்).

நோல் பரிசு யாரு, யாருக்கோ வழங்கறாங்க... இந்த சர்வே எடுத்தவங்களுக்கு வழங்கனும்னு நான் பரிந்துரைக்கிறேன். அநேகமா நீங்க கூட பரிந்துரைப்பீங் கன்னு நினைக்கிறேன்.

நம்ம ஒரிஜினல் துக்ளக் தலை நகரைத்தான் மாத்தினாரு, ஆனா மி°டர். டேன்ஜர் (புஷ்யை தற்போது மிக செல்லமாக அழைக்கிறார் வெனிசுலா ஜனாதிபதி சாவே°) பயங்கரவாதிகளுக்கு எதிராக உலகளாவிய போர் என்று கூறிக் கொண்டு ஒவ்வொரு வருடமும் எந்த நாட்டை புடிக்கலாம்ன்னு திட்டம் தீட்டி வருகிறார்.

ஒரு நாட்டுல ஒரு துக்ளக் இருந்தாலே தாங்க முடியாது. ஆனா அமெரிக்காவிலோ இரண்டு துக்ளக் இருக்காங்களே, சும்மா இருக்கு முடியுமா?

குரங்கு கையில பூமாலை கிடைச்சா மாதிரி அமெரிக்கா மட்டுமல்ல, உலகமே இவங்கே கையில மாட்டிக்கினு அவதிப்படுது.

ஆப்கானி°தான், ஈராக் இந்த ரெண்டு நாடும் இவங்க கைக்கு வந்தாச்சு! அடுத்த என்னன்னு எதிர்கால துக்ளக்கா மாறப்போகும் கண்டலிசா ரைசோடே சேர்ந்து திட்டம் போடுறாங்க!

அதனாலத்தான் இப்ப புதுக் கரடி விடுறாங்க ஈரான் அணு ஆயுதம் தயாரிக்குது. அய்யய்யோ குரங்கு வால்ல தீ பிடிச்சுக்குச்சு... உலகமே எரியப்போகுதுன்னு சொன்னா மாதிரி லபோ, திபோன்னு கத்துறார் புஷ்...
ஈரானை புடிக்கனும், அப்புறம் என்ன? ரவுடி நாடுகள்னு ஒரு பட்டியலே கையில வைச்சிருக்காங்க அதுல,

கியூபா,

வடகொரியா

வெனிசுலா,

சிரியா.... ன்னு பெரிய பட்டியல்...

இந்த நாட்டையெல்லாம் பிடிச்சப்புறம் என்னப்பன்னலாம்னு, இப்ப புது பாட்னர தேடிக்கிட்டே இருக்காங்க!

யாரு அந்த புது பாட்னருன்னு பாக்குறீங்களா, வேற யாரு நம்ம மன்மோகன்தாங்க....

பொருளாதாரத்துல அமெரிக்காவை விட முரட்டுக் காளைய வளர்ந்து வர்ற சீனாவை ஒரு கை பார்க்கனும்னு நம்ம மன்மோகனை வளைச்சிருக்காங்க... இவரும் மண்டையை, மண்டையை ஆட்டிக்கிட்டு அமெரிக்காவோடு சேர்ந்து கிட்டாரு.

முதல் முட்டாள் யாருன்னு உங்களுக்கே தெரியும். அதுவும் கடந்த 4 வருடமா? அவரு அந்த இடத்தை தக்க வைச்சிருக்காரு - அவருதாங்க மைக்nல் ஜாக்ஷன்.

இப்பே புஷ்ஷூக்கு மைக்கேல் ஜாக்ஷன் பெயரைக் கேட்டால அலர்ஜியா இருக்கு. பொறாமையா இருக்கு! எப்படியாவது அடுத்த வருடம் முதல் இடத்தை புடிக்கிறது உங்க கிட்ட ஏதாவது ஐடியா இருந்தா அவருக்கு சொல்லுங்க....