July 24, 2007

இந்திய புரட்சியும் முப்பெரும் எதிரிகளும்!

ஸ்டாலின் விடுத்த அழைப்பும் அவரது கேள்வியும் மிக முக்கியமானது என்பதால் இதனை உடனடியாக பதிவிட்டுள்ளேன். அவருக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். அவரது ஒரே ஒரு கேள்வியும் எனது பதிலும்!

//மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள், நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?//


மக்கள் எப்போது புரட்சிக்கு தயாராவர்கள்?


இனியும் நடப்பில் இருக்கும் முதலாளித்துவ - நிலப்பிரபுத்துவ அமைப்பில் தங்களுடைய வாழ்க்கையை தொடர முடியாது என்ற நிலை வரும்போது மக்கள் புரட்சிக்கு தயாராவார்கள்.


நீங்கள் அவர்களை தயார் செய்வீர்களா? அல்லது அவர்களே தயாராகி விடுவார்களா? நீங்கள்தான் தயார் செய்வீர்கள் எனில் எந்த வழியில்?


நீங்கள் என்ற பொருளை தாங்கள் எந்த அர்த்த்தில் குறித்துள்ளீர்கள் என்று தெரியவில்லை. இருப்பினும் நீங்கள் என்பதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) என்ற பொருளில் நான் புரிந்து கொள்கிறேன். அதையே இங்கு உபயோகப்படுத்துகிறேன்.
சமூகத்தில் பல்வேறு முரண்பட்ட கூறுகள் மோதிக் கொண்டுள்ளன. குறிப்பாக தொழிலாளிக்கும் - முதலாளிக்குமான முரண்பாடு. விவசாய தொழிலாளிக்கும் - நிலப்பிரபுவுக்கும் உள்ள முரண்பாடு. சிறு முதலாளிகளுக்கும் - பெரும் முதலாளிகளுக்கும் இடையிலான முரண்பாடு. பெரும் முதலாளிக்கும் - அந்நிய முதலாளிக்கும் உள்ள முரண்பாடு. இப்படி இன்னும் பல்வேறு முரண்பாடுகள் சமூகத்தில் நிலவுகிறது. இந்த முரண்பாடுகளில் ஒருவருக்கு ஒருவர் எதிரியாக இருந்தாலும் - அடித்தட்டு மற்றும் சுரண்டப்படும் வர்க்கங்களுக்கும் - நடுத்தர மற்றும் சிறு - குறு முதலாளிக்கும் இடையில் முரண்பாடுகளுக்கு முதன்மையான எதிரியாக இருப்பது. அதாவது. அவர்களது தலைவிதியை தீர்மானிக்கும் பொது எதிரியாக இருப்பது அந்நிய ஏகபோக முதலாளிகளும். இந்திய பெரும் முதலாளிகளும் - நிலப்பிரபுக்களும் இந்த எதிரி வர்க்கங்களின் ஏஜண்டுகளாக - காவல் புரியும் காங்கிரசு மற்றும் பா.ஜ.க. அல்லது இன்னபிற முதலாளித்துவ கட்சிகள் ஏவல் நாய்களாக செயல்பட்டு இறுதியில் திவாலாகும் நிலைக்கு தள்ளப்படும். இத்தகைய முப்பெரும் பொது எதிரியை வீழ்த்துவதற்கு தொழிலாளிகள் - விவசாயிகள் - நடுத்தர வர்க்கம் - சிறு முதலாளிகள் என பலதரப்பட்ட வர்க்கங்களின் கூட்டு செயல்பாடுகளாலும். போராட்டங்களாலும் ஒற்றுமையாலுமே இவை சாதிக்கப்படும்.

அந்த அடிப்படையில் மக்களின் பொது எதிரியாக இருக்கும் அந்த முப்பெரும் சக்திகளை வீழ்த்துவதற்கு உறுதி கொண்டிருக்கும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் இத்தகைய எதிரிகளை முறியடிப்பதற்கு விரிந்த அளவிலான நட்பு சக்திகளை ஒருங்கிணைத்து ஒரு ஐக்கிய முன்னணியை உருவாக்கி அந்த முப்பெரும் சக்திகளை இறுதியில் உறுதியாக வீழ்த்தும்.இத்தகைய ஐக்கிய முன்னணியை உருவாக்குவது என்பது ஜி... பூம்பா என்றால் ஒரே நாளில் உருவாகி விடாது. அது நடப்பில் உள்ள காலத்திலும் அதற்கான வேலைகளை செய்ய வேண்டும். அதனை சி.பி.ஐ.(எம்) செய்து வருகிறது.

இந்தியாவில் உள்ள கோடிக்கணக்கான தொழிலாளிகளை தொழிற்சங்கத்திலும். விவசாயிகள் - விவசாய தொழிலாளர்களை அந்தந்த சங்கத்திலும். பெண்கள்.வாலிபர்கள். மாணவர்கள். நடுத்தர வர்க்கம். அறிவு ஜிவிகள் என சமூகத்தில் உள்ள அனைத்து மக்களையும் அவர்கள் சந்திக்கும் பிரச்சினையின் அடிப்படையில் கோடிக்கணக்கில் வெகுஜன இயக்கத்தில் திரட்டிட வேண்டும். இவ்வாறு திரளும் மக்களை அரசியல் ரீதியாக விழிப்புணர்வு ஏற்படுத்தி. அதிலிருந்து வரும் சக்திகளை தொழிலாளி வர்க்கத்தின; தளகர்த்தர்களாக போராட்ட தளபதிககளாக உயர்த்திட வேண்டும். இவ்வாறு ஒரு வெகுஜன பிரளயத்தையே ஏற்படுத்திட வேண்டும். அத்தோடு நட்பு சக்திகளான இடதுசாரிகளோடும். இதர ஜனநாயக சக்திகளோடும் இணைந்து இயக்கம் காண்பதும் அவர்களுக்க பின்னால் உள்ள மக்களையும் புரட்சிக்கு ஆதரவாக திரட்டுவதும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் சி.பி.ஐ.(எம்) தன்னுடைய பாதையில் உறுதியாக முன்னேறி வருகிறது.

முப்பெரும் எதிரி சக்திகளுக்கு வேட்டு வைத்து மக்கள் ஜனநாயக புரட்சியை நடத்தவும் உறுதி கொண்டுள்ளது.


மேலும் இந்திய ஆளும் வர்க்கம் தன்னுடைய அதிகாரத்தை தானாக விட்டுக் கொடுக்காது. எனவே தன்னுடைய அதிகாரத்தை - எமர்ஜன்சியைப் போர் சர்வாதிகாரமாக எடுத்துக் கொள்ள அனைத்து விதமான ஜனநாயக அடக்குமுறைகளையும் அது மேற்கொள்ளும். அத்தகைய அடக்குமுறைகளை ஒடுக்கி தொழிலாளி வர்க்கத்தின் தலைமையில் அதிகாரத்தை பெறுவதற்கும் அதனை முறியடிப்பதற்கும் அது எத்தகைய ஆயுதத்தை எடுக்கிறதோ அதே ஆயுதத்தை தொழிலாளி வர்க்கமும் ஏந்தும்.

இவைகள் எல்லாம் ஹாரி பாட்டர் கதை என்று நீங்கள் நினைத்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. உலக புரட்சிகளின் அனுபவம் மற்றும் இந்திய நிலைமைக்கு ஏற்ப இந்திய விடிவிலான மக்கள் ஜனநாயக புரட்சியை தெழிலாளி வர்க்கம் எதிர் காலத்தில் நடத்தும்.

இந்திய புரட்சிக்கான சி.பி.ஐ.(எம்) திட்டம் - ஆங்கிலத்தில்

July 20, 2007

பயங்கரவாத ஆய்வுக்கூடம்!


சமீபத்தில் லண்டன் மற்றும் கிளாஸ்கோவில் நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களில் பங்களூரைச் சேர்ந்த மருத்துவர்கள் சம்பந்தப்பட்டிருப்பது நம் அனைவருக்கும் கடும் அதிர்ச்சியை அளித்துள்ளது. நம் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களை அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் தன்னுடைய மனைவிக்கு அறிமுகப்படுத்தும் சமயத்தில், ‘‘20 கோடி முஸ்லீம்களைக் கொண்டுள்ள நாடாக இருந்தாலும் அதில் ஒ ருவர் கூட அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர் இல்லாத நாட்டின் பிரதமர்’’ என்று கூறியதாகச் சொல்லப்பட்டதை நாமும் நம்பி, இதுநாள்வரை, நாட்டில் அல்குவைதா போராளிகள் எவரும் இல்லை என்று தவறாக நம்பிக்கொண்டிருந்திருக்கிறோம். அதிபர் புஷ் அவ்வாறு சொன்னாரா இல்லையா என்பது ஒருபுறம் இருந்தாலும், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களே இரு ஆண்டுகளுக்கு முன் சிஎன்என் தொலைக்காட்சி அலைவரிசைக்கு அளித்த பேட்டி ஒன்றின்போது, ‘‘அல்குவைதா இயக்கத்தில் எந்த இந்தியரும் சேரவில்லை’’ என்றும், ‘‘ஏனெனில் இந்தியா ஒரு செயல்பூர்வமான ஜனநாயகத்தைக் (கரnஉவiடிniபே னநஅடிஉசயஉல)க் கொண்டிருக்கிறது’’ என்றார்.
ஆயினும், ‘இந்தியா பயங்கரவாதிகளின் தாக்குதல்களிலிருந்து பாதுகாப்பாக இருக்கிறது’ அல்லது ‘இம்மண்ணில் பயங்கரவாதிகள் உருவாகும் சூழல் இல்லை’ என்று பலரால் கூறப்படும் கூற்றுக்களால் அவ்வாறு முடிவுக்கு வருவதென்பது, தவறு மட்டுமல்ல, ஆயிரக்கணக்கானவர்களைப் பறிகொடுத்து, பாதுகாப்பான சூழ்நிலையில் தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருக்கிற நம்முடைய துயரார்ந்த சொந்த அனுபவங்களுக்கும் எதிரானதாகும். இந்தியாவில், எவ்விதமான பகுப்பாய்வுக்கும் உட்படாத வகையில் பல்வேறு விதமான பயங்கரவாத அமைப்புகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. நம்முடைய விரிந்தகன்ற சமூக அமைப்பின் விளைவாகக் கூட அது இருக்கலாம்.
இந்தியாவில் அல்குவைதா இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் இருக்கலாம் அல்லது இல்லாமலும் இருக்கலாம். ஆனால் இங்கிலாந்தில் நடைபெற்ற இத்தகைய தாக்குதல்களில் இந்தியர்களும் சம்பந்தப் பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி, நம்முடைய நாட்டில் சென்ற ஆண்டு ஜூலை 11 அன்று மும்பையில் ரயில் வெடிவைத்துத் தகர்க்கப்பட்டு, 187 அப்பாவி உயிர்கள் கொல்லப்பட்ட மற்றும் 817 பேர் ஊனமாக்கப் பட்ட நிகழ்ச்சியின் முதலாம் ஆண்டு நினைவுதினத்தை அனுசரிக்கும் சமயத்தில் வந்துள்ளது என்பது உண்மை. இதுநாள்வரை, அந்தச் சம்பவத்திற்குக் காரணமான வர்களைக் கண்டுபிடிக்கக்கூடிய வகையில் ஒரு துப்பும் கிடைத்திடவில்லை.
நாடு, ஓர் இந்து பயங்கரவாதியின் துப்பாக்கிக் குண்டுகளுக்கு நாட்டின் தந்தை மகாத்மா காந்தியைப் பலிகொடுத்தது. சீக்கிய தீவிரவாதிகளால் நம் பிரதமர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். மற்றொரு பிரதமர் (அவரது மகன்) எல்டிடிஇ-இனரால் படுகொலை செய்யப்பட்டார். ஜம்மு - காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல்களின் விளைவாக நூற்றுக்கணக்கானோர் தங்கள் உயிர்களை இழந்துள்ளனர், ஆயிரக்கணக்கானோர் தொடர்ந்து பாதுகாப்பற்ற சூழ்நிலையில் அஞ்சி அஞ்சி வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். உல்பா மற்றும் பல்வேறு தீவிரவாதக் குழுக்கள் வட கிழக்கு மாநிலங்களில் தொடர்ந்து பேரழிவு நடவடிக்கைகளைத் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. இவையல்லாமல், நாடு முழுதும், குஜராத் மாநிலத்தில் முஸ்லீம் சிறுபான்மையினர் இனப்படுகொலைகளுக்காளானது போல, மதவெறியர்களும் அப்பாவி மக்களின் உயிர்களைப் பறிக்கும் மதமோதல்களில் ஈடுபடுவது தொடர்கிறது. நாடாளுமன்றம், செங்கோட்டை, அக்சர்தம் கோவில், ரகுநாதர் கோவில் (இருமுறை) முதலானவற்றில் ஏற்கனவே நடைபெற்ற பயங்கரவாதத் தாக்குதல்களன்னியில், இந்த ஆண்டும் சம்ஜாதா எக்ஸ்பிரஸ், ஹைதராபாத்தில் உள்ள மெக்கா மசூதி, கோரக்பூர் முதலான இடங்களில் பயங்கரவாதிகளின் தாக்குதல்களை இதுவரைப் பார்த்திருக்கிறோம்.
நாம் இதனை அச்சுக்குக் கொடுத்துக்கொண்டிருக்கக்கூடிய சமயத்தில், சட்டீஸ்கார் மாநிலத்தில் மாவோயிஸ்ட்டுகளால் 24 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்டிருக் கிறார்கள். இந்தியாவும் பல்வேறு பயங்காவாதக்குழுக்களின் தளங்களாக மாறியிருக்கிறதென்கிற உண்மையை அழுத்தத்துடன் குறிப்பிடுவதற்காகவும், அல்குவைதாவின் உறுப்பினர்கள் இங்கு இல்லை என்ற மாயையுடன் ஆறுதல் பெற்று நாம் வாளாவிருந்திட முடியாது என்பதற்காகவும்தான் இவை அனைத்தையும் இங்கு குறிப்பிடவேண்டிய தேவை ஏற்பட்டது. இங்கிலாந்தில் நடைபெற்றுள்ள சமீபத்திய பயங்காரவாதத் தாக்குதல்களில் இந்தியர்களும் சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்பது இப்போது நம்முன் வந்திருக்கிறது.
இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் உறுதிபடக் கண்டிக்கப்படத்தக்கது, அதில் ஈடுபட்டுள்ளவர்கள் கைது செய்யப்பட்டு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதுமட்டுமல்ல, இத்தகைய பயங்கரவாதத்தைச் சமாளிப்பதற்குச் சரியான உபாயங்களைக் கையாளுவதும் இவை வெற்றிபெற அனுமதிக்கப்படக்கூடாது என்பதும் அவை விட மிக முக்கியமாகும். அரசு பயங்கரவாதமும் தனிநபர் பயங்கரவாதமும் ஒன்றை ஒன்று ஊட்டி வளர்க்கின்றன என்று பலமுறை நாம் இப்பகுதியில் கடந்த காலங்களில் குறிப்பிட்டிருக்கிறோம். இத்தகைய தனிநபர் பயங்கரவாதத் தாக்குதல்களை உக்கிரமான அரசு பயங்கரவாதத்தின் மூலமாக சமாளிப்பதென்பது எதிர்விளைவையே கொடுக்கும் என்பதுமட்டுமல்ல, தனிநபர் பயங்கரவாதத்தையும் செயலூக்கமானதாக மாற்றிடும். உலகம் பூராவும் நடைபெறும் வளர்ச்சிப் போக்குகள் இன்றைய தினம் இதனை உறுதிப்படுத்தியிருக்கின்றன. லண்டனில் இருந்து வெளிவரும் ‘எகனாமிஸ்ட்’ இதழ் கூட அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ‘பயங்கரவாதத்திற்கெதிரான உலக அளவிலான யுத்தம்’ (ழுறுடீகூ - படடியெட றயச டிn வநசசடிச), உலகில் பல்வேறு பயங்கரவாதக் குழுக்களை உருவாக்கி அதனைத் தொடர்ந்து மரணங்களையும் விளைவித்திருக்கின்றன என்று இப்போது ஒப்புக்கொள்ள வேண்டியிருந்திருக்கிறது. அது மேலும், ‘‘குவாட் அல்குவைதாவுக்கு எதிராக ராணுவப் பிரச்சாரத்தைப் பற்ற வைத்திருக்கிறது. பின்னர் இரு ஆண்டுகளுக்குப் பின்னர் பழைய எதிரியான, சதாம் உசேனேத் தூக்கி எறிந்திருக்கிறது. உண்மையில் செப்டம்பர் 11 சம்பவத்திற்கும் இவருக்கும் நிச்சயமாக எந்தத் தொடர்பும் கிடையாது. ஈராக்கிற்குள் அத்துமீறி அமெரிக்கா நுழைந்ததன் காரணமாகவே, ஈராக் அல்குவைதாவின் ஈர்ப்பு மையமாக மாறியிருக்கிறது.’’
உண்மையில், ஒரு நோக்கத்துடன் பயங்கரவாதத்தை ஏதேனும் ஒரு மதத்துடன் தொடர்புபடுத்த முயற்சிப்பது அல்லது நம்புவது, பயங்கரவாதத்திற்கெதிரான போராட்டத்தை மேலும் சிரமத்திற்குள்ளதாக்கிவிடும். ‘பயங்கரவாதம் என்பது ஒரு குற்றச்செயல், இதற்கு மதமோ நாடோ கிடையாது’ என்பதைத் திரும்பத் திரும்பக் கூற வேண்டியது அவசியமாகிறது. ஏகாதிபத்தியத்தின் சித்தாந்தக் குறிக்கோள்கள் மற்றும் உலக அளவிலான பொருளாதார மேலாதிக்கத்தைப் பெற வேண்டும் என்கிற அதன் தாகம் குறித்து ஏற்கனவே பலமுறை இங்கே நாம் விவாதித்திருக்கிறோம். அமெரிக்க ஏகாதிபத்தியமும் பிரிட்டன் போன்ற அதன் நேச நாடுகளும் உலக அளவிலான பயங்கரவாத அச்சுறுத்தல்களுக்கான முக்கிய காரணிகள் என்கிற உண்மை நீடிக்கிறது.
இந்தியாவில் உள்ள பலர், லண்டன் மற்றும் கிளாஸ்கோ தாக்குதல்கள் சம்பந்தமாக வந்துகொண்டிருக்கும் செய்திகளைக் கேட்டு மிகவும் திகிலடைந்துபோயிருக்கிறார்கள். ‘எப்படி இருந்த பங்களூரு இப்படி ஆகிவிட்டதே’ என்று சிலர் புலம்புகிறார்கள். நன்கு மேல்நோக்கி வளர்ந்துகொண்டிருக்கும் இந்திய மத்திய வர்க்கம், அதன் தொழில்நுட்ப வல்லுநர்கள், எவ்வாறு பயங்கரவாதிகளாக மாறிப்போனார்கள் என்று சிலர் ஆச்சர்யப்படுகிறார்கள். உயிர்களைக் காக்க வேண்டிய டாக்டர்கள், உயிர்களைக் கொல்பவர்களாக மாற எப்படி முடிந்தது? இவ்வாறு அவநம்பிக்கை மக்கள் மத்தியிலிருந்து பல்வேறு விதங்களிலும் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
1993க்கும் 2005க்கும் இடையில் சர்வதேச அளவில் நடைபெற்றுள்ள ஐந்து பெரிய பயங்கரவாதத் தாக்குதல்களுக்கு மூளையாக இருந்து மதிநுட்பத்துடன் செயல்பட்டவர்கள் அனைவருமே பல்கலைக் கழக அளவில் படித்தவர்கள் என்பதும் அவர்களில் எவருமே மதராசாக்களில் படித்தவர்கள் அல்ல என்பதும் கவனிக்க வேண்டிய ஒன்று. எனவே, பயங்கரவாதிகளை சமூகத்தின் பிற்பட்ட பகுதிகளிலும் சேரிகளிலும் தேடுவதென்பது ஒருவரின் கருணையற்ற வர்க்க சார்பேயாகும். உண்மையில், மதராசாக்களை விட நவீன மேற்கத்திய பல்கலைக் கழகங்களே பயங்கரவாதத்துடன் ஜீவனுள்ள தொடர்பு கொண்டிருந்திருக்கின்றன.
தொழில்நுட்ப வல்லுநர்கள் பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவதென்பதைப் பொறுத்தவரை, அதிர்ச்சியடையக் கூடிய ஒன்றல்ல. கில்லட்டின் எந்திரத்தைக் கண்டுபிடித்தவரே மிக உயர்படிப்பு படித்திருந்த ஒரு டாக்டர்தான் என்பதை நினைத்துப்பாருங்கள். (அவர் பெயரால்தான் அந்த எந்திரத்திற்கு கில்லட்டின் என்று பெயர் வைக்கப்பட்டது.) மனதில் கிலி ஏற்படுவது என்பது ஒரு மனநிலை. பயங்கரவாதம் அத்தகைய மனநிலையை உருவாக்குவதற்கான உத்தியாகும். அதிக அளவில் மேம்படுத்தப்பட்ட தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி உத்திகளை வகுக்கும்போது, மனத்தளவில் கிலி உண்டாக்குவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகிறது.
சரி, அப்படியானால் பயங்கரவாதத்தை எப்படி ஒழிக்கப்போகிறோம்? பயங்கரவாதத்திற்கெதிராக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை நிச்சயம் நாம் குறைத்திட முடியாது. இத்தகைய பயங்கரவாதத் தாக்குதல்கள் மீண்டும் ஏற்படாமல் தடுத்திட, அனைத்துத் தேவையான துப்பறியும் நடவடிக்கைகளையும் மேலும் தீவிரமாக்குவது அவசியம். நம் பிரதமர் சென்ற வாரம் கூறியிருப்பதைப்போல, ‘‘பயங்கரவாதம் உருவாவதற்கான சூழ்நிலையை உருவாக்கக் கூடாது’’ என்பதும் மிக முக்கியமாகும்.
இதைத்தான் நாம் அடிக்கடி இப்பகுதியில் திரும்பத் திரும்ப விவாதித்து வந்திருக்கிறோம். சமூகத்தில் நடைமுறையில் உள்ள ஒடுக்குமுறையும் மற்றும் அதனுடன் இணைந்துள்ள அநீதிகளும் மறையும்போதுதான், இறுதிக் கட்டமாக, பயங்கரவாதத்திற்கான அடிப்படையையும் சமூகத்திலிருந்து நீக்கப்பட முடியும்.
பதிலாக, பிரிட்டனில் குடியேறுபவர்கள் குறித்து அதிகக் கட்டுப்பாடுகளைக் கொண்டுவருவதற்கு அழைப்பு விடுத்தல் அல்லது அங்கள்ள அப்பாவி மக்களைத் தொல்லைக்காளாக்குதல் நிலைமையை மேலும் மோசமாக்கத்தான் இட்டுச் செல்லுமேயொழிய எதிர்காலத்தில் ஆற்றல்வாய்ந்த பயங்கரவாதிகள் உருவாவதைத் தடுத்திடாது. (இப்போது ஃபைசா (குணைய) போன்ற இந்தியப் படங்கள் எப்படி பயங்கரவாதம் உருவாகிறது என்பதை நன்கு ஆவணப்படுத்தி இருக்கிறது.) இத்தகைய கெடுபிடியான பரிசோதனைகள் எதுவும் கிளாஸ்கோ தாக்குதலைத் தடுத்திருக்க முடியாது. ஏனெனில், அத்தகைய பயங்கரவாதச் செயலைச் செய்வதற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் பிரட்டனைச் சேர்ந்தவர்களே.
நாம் இதனை அச்சுக்குக் கொடுக்கும் சமயத்தில், இஸ்லாமாபாத்தில் லால் மசூதி முற்றுகையிடப்பட்டு, அங்கிருந்த பயங்கரவாதிகளை அப்புறப்படுத்தும் அரசின் தாக்குதலில் 88 தீவிரவாதிகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசு எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஊக்குவித்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்தியாவின் அண்டை நாடுகளின் வளர்ச்சிப்போக்குகள் மற்றும் இந்தியாவில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு அவை அளித்துவரும் ஆதரவு காரணமாக, நம் நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் தொடர்கின்றன. சர்வதேச சூழ்நிலையில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் குவாட் மிகவும் மோசமான நிலையை உருவாக்கி இருக்கிறது. இந்தியாவில் நாமும் நம் நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பையும் வலுப்படுத்த வேண்டிய நிலையில் இருக்கிறோம். அதோடு, பயங்கரவாதத்தினைப் பேணி வளர்க்கும் சூழலைத் தடுத்திடக்கூடிய வகையில் அதற்குத் தீனிபோடும் நீண்டகாலப் பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வுகாண்பதற்கும் நடவடிக்கைகளில் இறங்கிட வேண்டும்.
உடனடியாகச் செய்யவேண்டியது என்னவெனில், இந்திய அரசாங்கம் பிரிட்டிஷ் மற்றும் சர்வதேச அதிகாரக்குழுமங்களுக்கு பயங்கரவாதத்திற்கு எதிராகக் கடுமையான நடவடிக்கைகள் எடுப்பதற்குத் தேவையான அனைத்து ஒத்துழைப்பையும் நல்கிட வேண்டும். அதேசமயத்தில் இந்தியப் பிரதமர் சமீபத்தில் கூறியதைப்போல, ஒருசில பயங்கரவாதிகளின் கிரிமினல் நடவடிக்கைகளுக்காக அந்த சமூகம் முழுமையையும் கறைப்படுத்திட முயலக்கூடாது என்பதையும் வலியுறுத்திக் கூறிக்கொள்கிறோம்.



தமிழில்: ச। வீரமணி

July 17, 2007

அமைதியிழந்த அமெரிக்காவும்! அமைதியின் எதிரிகளும்!!


உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அமைதி குறித்து முதன் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வினை
எகனாமிSட் பத்திரிகை குழுமம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களை கொண்டு நடத்தியது. இதன் மூலம் 121 நாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றிற்கான சர்வதேச அமைதி குறியீட்டு எண் (Global Peace Index Ranks) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வல்லரசு நாடுகள் முதல் - வலுவிழந்த நாடுகள் வரை செல்ல வேண்டிய தூரத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியுள்ளது.
உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருப்பது நார்வே, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (2), டென்மார்க் (3), ஐயர்லாந்து (4), ஜப்பான் (5).
உலகில் அமைதியிழந்த நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை வகிப்பது ஈராக் (121 வது இடம்). அதைத் தொடர்ந்து சூடான் (120), இ°ரேல் (119), ரஷ்யா (118), நைஜீரியா (117) என அவ்வரிசை தொடர்கிறது.
இவ்வரிசையில் இந்தியாவிற்கு 109 வது இடமே கிடைத்துள்ளது. உலக நாடுகளின் ஜாம்பவான் அமெரிக்கா 96 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட எகனாமி°ட் இன்டிலிஜன்° குழு, நாடுகளின் அமைதி குறித்து அளவிடுவதற்கு 24 கூறுகளை உள்ளடக்கி ஆய்வினை மேற்கொண்டது. இதில், மனித உரிமை, வறுமை, கல்வி, உள்நாட்டு கலவரம் மற்றும் குற்றச்செயல்கள், இராணுவச் செலவுகள், அண்டை நாடுகளுடனான உறவு, அண்டை நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் மரணம், ஊழல், வெளிப்படையான அரசு நிர்வாகம் மற்றும் ஜனநாயக பரவலாக்கம் போன்று பல்வேறு அடிப்படையான முக்கிய அளவீடுகளை உள்ளடக்கி, நடைபெற்ற இவ்வாய்வின் மூலம் 121 நாடுகளில் நிலவும் அமைதி குறித்து பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உலகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்க கூடிய மக்கள் தொகை பெருக்கம், தட்ப வெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.இதன் மூலம், “உலக அமைதிக்கான அர்த்தம் மிக விரிவான பொருள் கொண்டதாக மாறியுள்ளதாகவும், அதனை எவ்வாறு அடைவது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. போரின்மை என்பது மட்டும் அமைதியல்ல; வன்முறையின்மை என்பதே அமைதி” என இவ்வமைப்பின் தலைவர் திரு. கிளைடு மெக்காங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனித குலத்தின் சீரான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அமைதி மிக முக்கியமானது. அதே சமயம், உலகமயமாக்கல், ஓர் உலக கோட்பாடு பின்னணியில் இவற்றை நாம் அலசும் போது, உலக அமைதி குறியீட்டில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஈராக்கின் இந்நிலைக்கான காரணம் யார்? அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார்? என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே! மேலும் அம்மக்களுக்கு உள்ளே ஷியா, சன்னி, குர்து என பிரிவினையை உண்டாக்கி, மோதலை ஏற்படுத்தி, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்து நிலைகுலைய செய்து, அதன் அமைதியை அழித்தது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட அமெரிக்கா என்பதை இந்நேரத்தில் பரிசீலிக்காமல் இருக்க முடியாது.
அதே போல் அணு சக்தியை காரணம் காட்டி, தற்போது ஈரானையும், வடகொரியாவையும் மிரட்டி வரும் அமெரிக்கா, ரவுடி நாடுகள் - மூர்க்க நாடுகள் என சோசலிச கியூபா, சிரியா, வெனிசுலா என பட்டியலிட்டு தன்னுடைய அடுத்த கட்ட ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ள எந்தவிதமான தயக்கத்தையும் அமெரிக்கா காட்டியதில்லை. மொத்தத்தில் பனிப்போர் ஒய்ந்து விட்டாலும், அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புகளை விடுவதாக இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஏவுகணை தடுப்பு திட்டம் என்ற பெயரில் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக தன்னுடைய களத்தை தயார் படுத்துகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகி°தான் என பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைத்து தன்னுடைய பெரியண்ணன் தனத்தை காட்டும் அமெரிக்காவே உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், பின்லேடன் தேடுதல் வேட்டை என்று ஆப்கானி°தானின் அமைதியை அழித்த அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் வாலை நுழைத்து வருகிறது. அமெரிக்காவின் இத்தகைய கொள்கையின் விளைவாக தலையெடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னணியாக கொண்ட பின்லேடனிசம், ஜிகாத்திசம் போன்றவை எல்லாம் அமெரிக்க கொள்கையின் செல்ல குழந்தைகளே என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.
உலக அமைதிக் குறியீட்டு பட்டியலில் 96வது இடத்தை பிடித்துள்ள அமெரிக்கா உலக அமைதிக்கு எதிராக இருக்கும் அதே சமயம், தன்னுடைய நாட்டு மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்பதே இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது. சீனாவில் மனித உரிமை மீறல் என ஊளையிடும் அமெரிக்கா இந்த அறிக்கையின் மூலம் அதனுடை கொடூமையான மனித உரிமை மீறல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குறிப்பாக பள்ளிகளிலேயே துப்பாக்கி கலாச்சாரம் - அதன் மூலம் படுகொலைகள் நடைபெறுவது அமெரிக்காவின் சீரழிந்த ஆயுத கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே மிகஅதிகமானோர் உள்நாட்டு சிறைகளில் வாடும் நாடுகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இது தவிர தன்னுடைய ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிட, நாடு பிடிக்கும் ஆசைக்கு தன்சொந்த நாட்டு இராணுவ வீரர்களை மிக அதிகமாக பலிகொடுத்து வருகிறது. அத்தோடு சொர்க்கபுரி அமெரிக்கா என்று கூறிக் கொண்டாலும், அங்கே நிலவும் இன வேற்றுமை, வேலையின்மை, மனித உரிமை மீறல், கருப்பின மக்கள் வசிக்கும் மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு போன்றவை அமெரிக்க சமூகம் உள்ளூர நாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சீரழிந்த முகத்தையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
இதேபோல்தான் சூடானில் ஏகாதிபத்தியவதிகள் டர்புரில் நடத்தும் உள்நாட்டு ஆக்கிரமிப்பு கலவரத்தின் விளைவாக உலகிலேயே மிகப்பெரும் அளவில் அமைதியிழந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முரட்டு நாடுகள் என பட்டியலிடும் அமெரிக்கா வளர்க்கும் முரட்டு குழந்தையான இ°ரேல் இவ்வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இ°ரேலின் பிரதான தொழிலே பால°தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம் செய்வதே பெரும் தொழிலாய் போயுள்ளது.
இந்த வரிசையில் 106வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அமைதியிழப்பிற்கு 2020 தீர்வாகுமா? பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே! இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம் பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? அமைதிக்கான மாற்றை மக்களிடம் கொண்டுச் செல்வதே அமைதிக்கு அடிப்படையாகும்.
மேலும், இந்த வரிசையில் உலகில் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனா 60வது இடத்திலும், பாகி°தான் 115 வது இடத்திலும், இலங்கை 111வது இடத்திலும் இருக்கின்றன. சோசலிச கியூபா 59 வது இடத்திலும், வியட்நாம் 35 இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ள சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும், வேலையின்மையை தீர்ப்பதிலும் அவர்கள் வெகுவாக முன்னேறியுள்ளனர். கியூபா மருத்துவத்துறையில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. நமது ஆட்சியாளர்களோ 2020 என பேசி பொழுதை கழிக்கிறார்கள்! ஆரோக்கியமான மக்கள் நல அரசியலே அமைதிக்கான மாற்று வழி என்பதை உலகம் உணர வேண்டும்.

July 14, 2007

அமைதியிழந்த அமெரிக்காவும்! அமைதியின் எதிரிகளும்!!

உலகளவில் ஒவ்வொரு நாட்டிலும் நிலவும் அமைதி குறித்து முதன் முறையாக ஆய்வு நடத்தப்பட்டது. இவ்வாய்வினை எகனாமிSட் பத்திரிகை குழுமம், சர்வதேச அளவில் புகழ்பெற்ற வல்லுனர்களை கொண்டு நடத்தியது. இதன் மூலம் 121 நாடுகள் பட்டியலிடப்பட்டு, அவற்றிற்கான சர்வதேச அமைதி குறியீட்டு எண் (Global Peace Index Ranks) வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம், வல்லரசு நாடுகள் முதல் - வலுவிழந்த நாடுகள் வரை செல்ல வேண்டிய தூரத்தை மிகச் சரியாக அடையாளம் காட்டியுள்ளது.
உலகின் மிக அமைதியான நாடுகளின் பட்டியலில் முதலிடத்தை பெற்றிருப்பது நார்வே, அதைத் தொடர்ந்து நியூசிலாந்து (2), டென்மார்க் (3), ஐயர்லாந்து (4), ஜப்பான் (5).உலகில் அமைதியிழந்த நாடுகளின் பட்டியலில் கடைசி இடத்தை வகிப்பது ஈராக் (121 வது இடம்). அதைத் தொடர்ந்து சூடான் (120), இ°ரேல் (119), ரஷ்யா (118), நைஜீரியா (117) என அவ்வரிசை தொடர்கிறது.
இவ்வரிசையில் இந்தியாவிற்கு 109 வது இடமே கிடைத்துள்ளது. உலக நாடுகளின் ஜாம்பவான் அமெரிக்கா 96 வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வினை மேற்கொண்ட எகனாமி°ட் இன்டிலிஜன்° குழு, நாடுகளின் அமைதி குறித்து அளவிடுவதற்கு 24 கூறுகளை உள்ளடக்கி ஆய்வினை மேற்கொண்டது. இதில், மனித உரிமை, வறுமை, கல்வி, உள்நாட்டு கலவரம் மற்றும் குற்றச்செயல்கள், இராணுவச் செலவுகள், அண்டை நாடுகளுடனான உறவு, அண்டை நாடுகளில் பணியாற்றும் இராணுவ வீரர்களின் மரணம், ஊழல், வெளிப்படையான அரசு நிர்வாகம் மற்றும் ஜனநாயக பரவலாக்கம் போன்று பல்வேறு அடிப்படையான முக்கிய அளவீடுகளை உள்ளடக்கி, நடைபெற்ற இவ்வாய்வின் மூலம் 121 நாடுகளில் நிலவும் அமைதி குறித்து பட்டியலிடப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.
மேலும், உலகம் இன்றைக்கு சந்தித்துக் கொண்டிருக்க கூடிய மக்கள் தொகை பெருக்கம், தட்ப வெப்ப நிலை மாற்றம் போன்ற பிரச்சினைகள் மிக முக்கியமானது என சுட்டிக்காட்டியுள்ளது.இதன் மூலம், “உலக அமைதிக்கான அர்த்தம் மிக விரிவான பொருள் கொண்டதாக மாறியுள்ளதாகவும், அதனை எவ்வாறு அடைவது என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. போரின்மை என்பது மட்டும் அமைதியல்ல; வன்முறையின்மை என்பதே அமைதி” என இவ்வமைப்பின் தலைவர் திரு. கிளைடு மெக்காங்கி கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மனித குலத்தின் சீரான வளர்ச்சிக்கும், மேம்பாட்டிற்கும் அமைதி மிக முக்கியமானது. அதே சமயம், உலகமயமாக்கல், ஓர் உலக கோட்பாடு பின்னணியில் இவற்றை நாம் அலசும் போது, உலக அமைதி குறியீட்டில் கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டுள்ள ஈராக்கின் இந்நிலைக்கான காரணம் யார்? அம்மக்களின் அமைதியை அழித்தவர்கள் யார்? என்பது குறித்து அலசாமல் இருக்க முடியாது. பேரழிவு மிக்க ஆயுதங்களை வைத்திருப்பதாக பொய்யான குற்றம் சுமத்தி, அந்நாட்டை ஆக்கிரமித்து அதனை சின்னாபின்னமாக்கியது அமெரிக்காவும், அதன் தோழமை நாடுகளுமே! மேலும் அம்மக்களுக்கு உள்ளே ஷியா, சன்னி, குர்து என பிரிவினையை உண்டாக்கி, மோதலை ஏற்படுத்தி, ஐந்து இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களை கொன்றொழித்து நிலைகுலைய செய்து, அதன் அமைதியை அழித்தது ஆக்கிரமிப்பு எண்ணம் கொண்ட அமெரிக்கா என்பதை இந்நேரத்தில் பரிசீலிக்காமல் இருக்க முடியாது.
அதே போல் அணு சக்தியை காரணம் காட்டி, தற்போது ஈரானையும், வடகொரியாவையும் மிரட்டி வரும் அமெரிக்கா, ரவுடி நாடுகள் - மூர்க்க நாடுகள் என சோசலிச கியூபா, சிரியா, வெனிசுலா என பட்டியலிட்டு தன்னுடைய அடுத்த கட்ட ஆக்கிரமிப்பு நோக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ள எந்தவிதமான தயக்கத்தையும் அமெரிக்கா காட்டியதில்லை. மொத்தத்தில் பனிப்போர் ஒய்ந்து விட்டாலும், அமெரிக்கா தன்னுடைய பொருளாதார மற்றும் அரசியல் ரீதியான ஆக்கிரமிப்புகளை விடுவதாக இல்லை. இதன் தொடர்ச்சியாகத்தான் ஏவுகணை தடுப்பு திட்டம் என்ற பெயரில் தற்போது ரஷ்யாவுக்கு எதிராக தன்னுடைய களத்தை தயார் படுத்துகிறது. இதற்கு ரஷ்யாவும் பதிலடி கொடுத்துள்ளது. அதேபோல், இந்தியா, இலங்கை, பங்களாதேஷ், பாகி°தான் என பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விஷயங்களில் மூக்கை நுழைத்து தன்னுடைய பெரியண்ணன் தனத்தை காட்டும் அமெரிக்காவே உலக அமைதிக்கு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது.
இரட்டை கோபுரத் தாக்குதலுக்குப் பின், பின்லேடன் தேடுதல் வேட்டை என்று ஆப்கானி°தானின் அமைதியை அழித்த அமெரிக்கா, பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர் என்று பல்வேறு நாடுகளின் உள்நாட்டு விவகாரங்களுக்குள் வாலை நுழைத்து வருகிறது. அமெரிக்காவின் இத்தகைய கொள்கையின் விளைவாக தலையெடுக்கும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னணியாக கொண்ட பின்லேடனிசம், ஜிகாத்திசம் போன்றவை எல்லாம் அமெரிக்க கொள்கையின் செல்ல குழந்தைகளே என்பதை நினைவில் நிறுத்த வேண்டியுள்ளது.
உலக அமைதிக் குறியீட்டு பட்டியலில் 96வது இடத்தை பிடித்துள்ள அமெரிக்கா உலக அமைதிக்கு எதிராக இருக்கும் அதே சமயம், தன்னுடைய நாட்டு மக்களுக்கும் எதிரானதாக அமைந்துள்ளது என்பதே இந்த ஆய்வின் மூலம் வெளிப்பட்டுள்ளது. குறிப்பாக பள்ளிகளிலேயே துப்பாக்கி கலாச்சாரம் - அதன் மூலம் படுகொலைகள் நடைபெறுவது அமெரிக்காவின் சீரழிந்த ஆயுத கலாச்சாரத்திற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. அதுமட்டுமின்றி உலகிலேயே மிகஅதிகமானோர் உள்நாட்டு சிறைகளில் வாடும் நாடுகளில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளது அமெரிக்கா. இது தவிர தன்னுடைய ஏகாதிபத்திய அரசியல் ஆதிக்கத்தை நிலைநாட்டிட, நாடு பிடிக்கும் ஆசைக்கு தன்சொந்த நாட்டு இராணுவ வீரர்களை மிக அதிகமாக பலிகொடுத்து வருகிறது. அத்தோடு சொர்க்கபுரி அமெரிக்கா என்று கூறிக் கொண்டாலும், அங்கே நிலவும் இன வேற்றுமை, வேலையின்மை, மனித உரிமை மீறல், கருப்பின மக்கள் வசிக்கும் மாநிலங்களில் நிலவும் ஏற்றத்தாழ்வு போன்றவை அமெரிக்க சமூகம் உள்ளூர நாறிக் கொண்டிருக்கிறது. இத்தகைய சீரழிந்த முகத்தையே இவ்வறிக்கை வெளிப்படுத்துகிறது.
இதேபோல்தான் சூடானில் ஏகாதிபத்தியவதிகள் டர்புரில் நடத்தும் உள்நாட்டு ஆக்கிரமிப்பு கலவரத்தின் விளைவாக உலகிலேயே மிகப்பெரும் அளவில் அமைதியிழந்த நாடுகளில் இரண்டாவது இடத்தில் உள்ளது. முரட்டு நாடுகள் என பட்டியலிடும் அமெரிக்கா வளர்க்கும் முரட்டு குழந்தையான இ°ரேல் இவ்வரிசையில் மூன்றாவது இடத்தை பெற்றுள்ளது. இ°ரேலின் பிரதான தொழிலே பால°தீனத்தை நிர்மூலமாக்குவதும், அரபு நாடுகளை மிரட்டும் பேட்டை ரவுடித்தனம் செய்வதே பெரும் தொழிலாய் போயுள்ளது.
இந்த வரிசையில் 106வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் அமைதியிழப்பிற்கு 2020 தீர்வாகுமா? பெரும் மக்கள் தொகை கொண்ட நம் நாட்டில் 60 ஆண்டு சுதந்திற்கு பின்னும் 35 சதவீத மக்கள் எழுத்தறிவு பெறாதது, கிராமப்புறத்தில் நிலவும் வறுமை, தீண்டாமை கொடுமை, ஜாதிய ஏற்றத்தாழ்வுகள், நிலவுடைமை ஆதிக்க சக்திகளின் கைகளிலேயே இருப்பது, சுகாதாரமின்மை, முறையான ஆரம்ப பள்ளிக்கூடங்கள் இன்மை, நிர்வாகத்தின் அனைத்து மட்டத்திலும் நடைபெறும் ஊழல், இதனால் மக்கள் நலத் திட்டங்கள் உரிய பலனை கொடுப்பதில்லை என்பன போன்று பல விஷயங்களை பட்டிலியட முடியும். இவ்வரிசையில் இந்துத்துவ பாசிச கொள்கை இந்திய மக்களின் அமைதிக்கு எதிரானது என்பதையும் இந்நேரத்தில் சுட்டாமல் இருக்க முடியவில்லை. சங்பரிவாரம் குஜராத்தில் நிகழ்த்திய சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாசிச கோரத்தாண்டவம் சிறுபான்மை மக்களை அச்சத்தின் பிடிக்குள் தள்ளியுள்ளது என்பதை மறுக்க முடியாது. மத அடிப்படைவாதம் என்பது எந்த வடிவத்தில் இருந்தாலும் அது மக்களின் அமைதிக்கு எதிரானதே! இது மட்டுமின்றி மத்திய அரசு பின்பற்றும் உலகமயக் கொள்கை அதன் விளைவாக எழும் வேலையிழப்புகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் என்ற பெயரால் நிகழும் ஏகபோக நிலக் கொள்ளை, கிராமப்புற விவசாயம் பாதிப்பு போன்ற சீர்கேடுகளாலும் இந்தியா அமைதியை இழக்க நேர்ந்துள்ளது என்பதை பார்க்கத் தவற கூடாது. இதற்கான மாற்றை இந்திய ஆட்சியாளர்களிடம் எதிர்பார்க்க முடியுமா? அமைதிக்கான மாற்றை மக்களிடம் கொண்டுச் செல்வதே அமைதிக்கு அடிப்படையாகும்.
மேலும், இந்த வரிசையில் உலகில் பெரிய மக்கள் தொகை கொண்ட நாடான சீனா 60வது இடத்திலும், பாகி°தான் 115 வது இடத்திலும், இலங்கை 111வது இடத்திலும் இருக்கின்றன. சோசலிச கியூபா 59 வது இடத்திலும், வியட்நாம் 35 இடத்திலும் இருப்பது குறிப்பிடத்தக்கது. மக்கள் தொகை பெருக்கம் அதிகமாக உள்ள சீனாவிடம் இருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டியது ஏராளம் உள்ளது. கல்வியிலும், சுகாதாரத்திலும், வேலையின்மையை தீர்ப்பதிலும் அவர்கள் வெகுவாக முன்னேறியுள்ளனர். கியூபா மருத்துவத்துறையில் உலகிற்கே முன்னோடியாக திகழ்கிறது. நமது ஆட்சியாளர்களோ 2020 என பேசி பொழுதை கழிக்கிறார்கள்! ஆரோக்கியமான மக்கள் நல அரசியலே அமைதிக்கான மாற்று வழி என்பதை உலகம் உணர வேண்டும்.

July 09, 2007

பெண் சுரண்டலின் உச்சகட்டம் சுமங்கலி!


உலகமயமாக்கல் பெற்றுத் கொடுத்த நவீன சுரண்டல் முறையே ‘சுமங்கலி’. தமிழகத்தில் சுமங்கலி என்ற சொல்லுக்கு ஒரு மந்திரத்தன்மை உள்ளதோடு, புனிதமானதாக அதை தமிழ் பெண்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். திருமணம் ஆனவர்களை சுமங்கலி என்று அழைக்கிறோம். ஆனால், தற்போது உலகமயச் சூழலில், இவ்வார்த்தை சுரண்டலோடு இணைத்துக் கொண்டுள்ளது. சுமங்கலி என்று சொன்னால் அது பெண்ணியச் சுரண்டலின் உச்சகட்டம் என்று அர்த்தப்படுகிறது.

சுமங்கலி திட்டம் என்றால் என்ன?

தமிழகத்தில் கோவை, திருப்பூர், ஈரோடு, தேனி, திண்டுக்கல் என மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பஞ்சாலைகளில் பணியாற்றுவதற்கு ‘சுமங்கலி திட்டம்’ என்ற பெயரில் 15 முதல் 20 வயதுக்கு உட்பட்ட வளர் இளம் பருவ பெண்களை மூன்று வருட காண்ட்டிராக்ட் அடிப்படையில் வேலைக்கு அமர்த்துகின்றனர்। மூன்று வருடம் முடிந்தவுடன் அவர்களுக்கு சம்பளமாக ரூ. 30,000 முதல் ரூ. 50,000 வரை வழங்கப்படுகிறது. இந்த மூன்று வருடமும் அவர்கள் அப்ரண்டீ° என்ற நிலையிலேயே வைக்கப்படுவர். மூன்று வருடம் கடந்த பின்பு அவர்கள் நிரந்தரமாக்கப்படுவதில்லை. அவர்கள் வேலையில் இருந்து நீக்கப்டுவார்கள். அவர்களுக்கு கிடைக்கும் தொகையைக் கொண்டு அவர்களது திருமணத்தை நடத்திக் கொள்ளலாம் என்பதுதான் திட்டத்தின் உள்ளடக்கம்.

பார்ப்பதற்கு கவர்ச்சிகரமாக இருக்கும் திட்டம், இளம் பெண்களை மிகக் கடுமையாக சுரண்டும் முதலாளித்துவ கொடுமையின் உச்சகட்டமாகவே இருக்கிறது।

இத்திட்டத்தில் நாகை, இராமநாதபுரம், தேனி போன்ற மிகவும் பின்தங்கிய மாவட்டத்தில் இருந்து, வறுமை வாட்டும் குடும்பத்தில் உள்ள இளம் பெண்களை குறிவைத்து, பெரும்பாலும் தலித் குடும்பங்கள் என்பது குறிப்பிடத்தக்கது। அவர்களுக்கு ஆசை வார்த்தைகள் காட்டி இத்திட்டத்தில் சேர்க்கின்றனர். இதற்காக ஒவ்வொரு நிறுவனமும் ஆட்களைப் பிடிப்பதற்காக ஏஜண்டுகளை வைத்துள்ளது. ஒரு இளம் பெண்ணை வேலையில் சேர்த்து விட்டால் அவருக்கு ரூ. 500 கமிஷனாக வழங்கப்படுகிறது.

கிராமப்புற வேலையின்மையால், நிலமற்ற கூலித் தொழிலாளிகளின் குடும்பங்கள் கொத்துக் கொத்தாக பஞ்சை, பராரிகளைப் போர் ஊரை விட்டு வெளியேறி நகர்ப்புறம் நோக்கி தங்கள் வயிற்றுப் பிழைப்புக்காக தஞ்சமடைந்து வருகின்றனர்। பல்லாயிரக்கணக்கான மக்கள் மாநிலத்தை விட்டு, வேறு மாநிலங்களை நோக்கியும் செல்கின்றனர். பல கிராமங்கள் மக்களின்றி வெறிச்சோடி போயுள்ளது.

குடும்பத்தின் வறுமை காரமணாக பள்ளிக் கல்வியைக் கூட முடிப்பதில்லை। 5ஆம் வகுப்பு முதல் 10ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகள் இடையிலேயே நிறுத்தப்பட்டு, குடும்ப பாரத்தை அவர்களும் பகிர்ந்து கொள்ளவேண்டிய சூழலில், சுமங்கலி திட்டம் என்ற சிலந்தி வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லாத சூழலே தமிழக கிராமப்புறங்களில் நிலவுகிறது.

வட்டமடிக்கும் வண்ணத்துப் பூச்சிபோல் தங்களின் இளம் பருவ வாழ்வின் எதிர்கால கனவுகளோடு, துள்ளி விளையாடும் இந்த இளம் மங்கைகளை திருமணம் என்ற ஆசை வார்த்தையாலும், குடும்ப வறுமை காரணமாக இதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையில் வேலைக்கு சேரும் இப்பெண்களின் திருமண கனவுகள் பஞ்சோடு பஞ்சாவதைத்தான் இந்த மூன்றாண்டு காலத்தில் அவர்கள் எதிர் கொள்கின்றனர்।

வேலையில் சேரும் பெண்களுக்கு 8 மணி நேர வேலை என்பது வெறும் கனவு மட்டுமே। அவர்கள் 24 மணிநேரமும் வேலை செய்வதற்கு தயாராக இருக்க வேண்டும். குறைந்தது 12 மணி நேரம் முதல் 16 மணி நேரம் கூட தங்களது கடுமையான உழைப்பை செலுத்துகின்றனர். உழைத்து களைத்தவர்களுக்கு தங்குவதற்கும், உறங்குவதற்கும் கூட சரியான சுகாதாரமான இடமின்மை கொடுமையிலும் கொடுமையாக அமைகிறது. வெறும் 10 அடிக்கு 10 அடி என்ற அறைகளில் 8 முதல் 12 பேர் வரை அடைத்து வைக்கப்படுகின்றனர். மேலும் அவர்களுக்கு வழங்கப்படும் உணவு சுவையானதாகவோ, சத்தானதாகவோ இருப்பதில்லை. வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையிலேயே இப்பெண்களின் வாழ்வு கரைகிறது. இது மட்டுமின்றி இப்பெண்கள் பல்வேறு பாலியல் துன்புறுத்தல்களுக்கு உள்ளாக வேண்டிய கொடுமையான நிலையும் நீடிக்கிறது.

இவ்வாறு வேலைக்கு சேரும் பெண்கள் முதல் மூன்று மாதத்தில் டிரெய்னிங் என்ற பெயரில் மிக கடுமையான வேலை வாங்கப்படுகின்றனர்। இக்காலத்தில் அவர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூ. 34 மட்டுமே சம்பளமாக வழங்கப்படுகிறது. அதில் ரூ. 20 அவர்களது தங்குமிடம், உணவு போன்றவற்றிற்கு பிடித்துக கொள்ளப்படும். மேலும், இவர்கள் எந்த நேரத்திலும் உழைப்பதற்கு தயாராக இருக்க வேண்டும். அவர்கள் தூங்கிக் கொண்டிருக்கும் போதே சூப்பர்வைசர்கள் எழுப்பி வேலைக்கு அழைத்தால் எந்தவிதமான மறுப்பும் இன்றி வேலையை கவனிக்க வேண்டும். இரவு நேரத்தில் பெண்களை வேலைக்கு அமர்த்தக்கூடாது என்ற நெறிகூட கடைப்பிடிக்கப்படுவதில்லை.

இந்த மூன்று மாத காலத்திற்கு பின் அவர்கள் தேர்ந்த தொழிலாளியாகவே மாறி விடுகின்றனர். இப்படிப்பட்ட தொழிலாளிக்கு ஆண்டொன்றிக்கு ரூ. 2 மட்டும் அதிகமாக வழங்கப்படுகிறது. மொத்தத்தில் அவர்களது மாதச் சம்பளம் ரூ. 1200 லிருந்து 1500 தாண்டுவதில்லை. இவர்களுக்கு தொழிலாளி என்ற அந்த°தோ, தொழிலாளர்களுக்கு உள்ள உரிமைகளோ கொடுப்பதில்லை. ஏன்? தீபாவளி, பொங்கல் போன்ற நேரங்களில் கூட அவர்கள் தங்கள் ஊர்களுக்கு செல்ல முடியாது! அவர்கள் நிரந்தர ஊழியர்கள் இல்லை. உலகமயத்தின் நவீன கொத்தடிமைகளாகவே இப்பெண்களின் வாழ்க்கை அடிமைத்தனமாக மாற்றப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகள், தொழிலாளர் நலத்துறை என அனைத்து அரசு இயந்திரங்களும் பஞ்சாலை தொழிலாளிகளின் இந்த கொடூரமான சுரண்டலுக்கு பக்கபலமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கின்றனர். மக்களை காக்க வேண்டிய அரசுகளே இளம் பெண்களின் வாழ்வை சூறையாடும் இந்த அசுரத்தனத்திற்கு எதிராக விரலைக்கூட அசைப்பதில்லை.
மேலும், மூன்று ஆண்டுகள் எந்தப் பிரச்சினையும் இன்றி வேலை செய்யும் பெண்களுக்கு மட்டுமே அவர்கள் நிர்ணயித்த ரூ। 30,000 கொடுப்பார்கள். இடையில் விலகினாலோ, அல்லது வேறு ஏதாவது காரணத்தை காட்டி நிர்வாகம் விலக்கினாலோ அவர்களுக்கு இந்த தொகைகூட கிடைக்காது. பல்வேறு பஞ்சாலை நிர்வாகங்கள் மூன்று வருட காலம் முடிவதற்கு உள்ளாக ஏதாவது ஒரு காரணத்தை காட்டி அவர்களை வேலையில் இருந்து விரட்டி விடுவார்கள். இவ்வாறு வறுமையின் விதியால் வேலைக்கு வந்த பெண்களின் ஆரோக்கியமற்றதாகவும், பெண்களுக்கே உரிய பல்வேறு பலகீனத்திற்கு உள்ளாகி, கடும் நோய்கள் தாக்கும் அபாயத்திற்கே செல்கின்னர். சுமங்கலி திட்டம் என்ற பெயரில் திருமண கனவுகளோடு நுழைந்தவர்கள் திருமணத்திற்கு லாயக்கற்றவர்களாகவே அவர்களை திருப்பியனுப்புகிறது.

கோவை, திருப்பூர், ஈரோடு போன்ற மாவட்டங்களில் மட்டும் 35,000த்திற்கும் மேற்பட்ட இளம் பெண்கள் வேலை செய்வதாக அரசு தரப்பில் கூறப்படுகிறது। இருப்பினும் இது ஒரு லட்சத்தை தாண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர். சுமங்கலி கனவுகளோடு இந்த சிலந்தி வலையில் சிக்கும் பல பெண்கள் இடையில் தப்பித்தால் போதும் என்று உயரமான மதில் சுவர்களை ஏறி குதித்து, அடி பட்டு, உதைப்பட்டு வரும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றுள்ளது.

இந்த இளம் பெண்கள் நிர்வாகத்தின் கடுமையான கண்காணிப்புக்கு உட்படுத்துவதோடு, அவர்களை சந்திக்க வரும் பெற்றோர்களை கூட பல நிர்வாகங்கள் அனுமதிப்பதில்லை। சிலர் மனுப் போட்டு விட்டு மூன்று நாள் காத்திருந்த பின்பே சந்திக்கின்றனர். தங்கள் மகளை ஆவலோடு காண வரும் பெற்றோர்கள் எலும்பும், லோலுமாக வெளிறிப்போன உருவங்களைக் கன்டு மனநோயாளிகாளகவே மாறுகின்றனர். குற்றம் செய்து விட்டு தண்டனை அனுபவிக்கும் கைதிகளுக்கு கூட அளவான வேலையும், தரமான உணவும் வழங்கப்படுகிறது. அவர்களுக்கு தேவைப்பட்டால் மருத்துவ வசதியையும் ஏற்படுத்தி கொடுக்கிறது சிறை நிர்வாகம். ஆனால், இங்கே மருத்துவ வசதி கூட பெரும்பாலும் மறுக்கப்படுகிறது. வறுமையின் சூழலில் சிக்கித் தவிக்கும் இம்மக்கள் இதன் கோரப்பிடியில் சிக்கி அவர்களின் வாழ்வையே அர்த்தமற்றதாக்குகின்றனர்.

மேலும் குழந்தை தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி தயாரிக்கப்படும் பொருட்களை நாங்கள் வாங்க மாட்டோம் என்று ஐரோப்பிய நிறுவனங்கள் ஜம்பமாக அறிவித்திருந்தாலும், நடைமுறையில் இவை அமலாக்கப்படுவதில்லை। இத்தகைய இளம் பெண்களின் உழைப்பை சுரண்டும் முதலாளித்து அரக்கர்களிடம் இருந்து குறைந்தபட்ச பாதுகாப்பை கூட சர்வதேச தொழிலாளர் சட்டங்களும், உள்நாட்டு சட்டங்களும் பெற்றுத் தருவதில்லை.

இத்தகைய அவலங்கள் குறித்து தொழிற்சங்க அமைப்புகளும், சமூக நல அமைப்புகளும் பல்வேறு போராட்டங்களை தொடர்ந்து நடத்திய பின்னணியில் அனைத்து நிறுவனங்களிலும் இத்தொழிலாளர்களின் துன்பங்களை அறிந்துக் கொள்வதற்கு தபால் பெட்டிகளை வைக்க வேண்டும் என்று கூறியது। இதனை 99 சதவீதம் நிறுவனங்கள் இதுவரை அமலாக்கவில்லை. மாநில ஆட்சியாளர்களும் அது குறித்து அலட்டிக் கொள்வதில்லை. தற்போது இந்நிறுவனங்களில் நடைபெறும் அத்துமீறல்கள், மனித உரிமை மீறல்களுக்கு எதிராக என்ன நடைபெறுகிறது என்று கண்காணிக்க கண்காணிப்பு குழுக்களை அமைக்க வேண்டும் என்று குரலெழுப்பி வருகின்றன. இத்தகைய கண்காணிப்பு குழுக்களுக்கு உண்மையான அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும். இதில் தொழிற்சங்க அமைப்புகள் உட்பட பல்வேறு சமூக நலப் பிரதிநிதிகள் அடங்கியதாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

மத்திய, மாநில அரசுகள் இந்த சுமங்கலிச் சுரண்டலுக்கு முற்றிலுமாக முற்றுப் புள்ளி வைக்க வேண்டும்। இதில் பணிபுரியும் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். இளம் பெண்களை அப்ரன்டீ° என்ற பெயரில் மூன்று ஆண்டுகளுக்கு சுரண்டுவதற்கு முற்றுப் புள்ளி வைக்க வேண்டும். தொழிலாளர் சட்டங்களுக்கு உட்பட்டு இவர்கள் நடத்த வேண்டும். அவ்வாறு நிறைவேற்றாத நிறுவனங்களின் அனுமதியை ரத்து செய்திட வேண்டும். இதனை நமது ஆட்சியாளர்கள் நிறைவேற்றுவார்களா?

சுமங்கலி திட்டத்திற்கு எதிராக மாநிலம் முழுவதும பரவலாக விழிப்புணர்வும், கண்டன இயக்கங்களும் வலுவாக நடைபெற்றால் மட்டுமே ஆட்சியாளர்கள் அசைவார்கள்.

July 03, 2007

திரும்பிப் போடா நிமிட்டே

திரும்பிப் போடா நிமிட்டே

எவன்டா கொடுத்தான் பர்மிட்டு

ஹார்பார விட்டு வெக்கேட்டு

இல்லனா உடுவோம் ராக்கெட்டு



என்ற கோஷம் விண்ணைப் பிளந்தது நேற்று மாலை. யு.எஸ்.எஸ். நிமிட்ஸ் அணு ஆயுத கப்பல் வருகைக்கு எதிராக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் இணைந்து நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாணவர்கள். வாலிபர்கள். பெண்கள். குழந்தைகள். தொழிலாளர்கள். நடுத்தர வர்க்கத்தினர். பத்திரிகையாளர்கள். அறிவு ஜிவிகள் என அனைத்து தரப்பினரும் கலந்து கொண்டு அமெரிக்க போர் வெறிக்கு எதிராகவும். உலக ரவுடித்தனத்திற்கு எதிராகவும் போர் முழக்கமிட்டனர். 1500 பேருக்கு மேல் இவ்வார்பாட்டத்தில் கலந்து கொண்டது முத்தாய்ப்பானது. அமெரிக்காவின் போர் வெறிக்கு எதிராகவும். ஈராக் மக்களையும். ஆப்கன் மக்களையும். பனாமா மக்களையும் கொன்றொழித்து அந்நாடுகளை பிடித்துக் கொண்ட நாட்டாண்மைத்தனத்துக்கு எதிராகவும். வளரும் நாடுகளையும். தனக்கு போட்டியான நாடுகளையும் அரசியல் மற்றும் பொருளாதார - இராணுவ ரீதியாக பந்தாடும் ஏகாதிபத்திய போர் வெறித்தனத்திற்கு எதிராக போர்க்குரல் எழுப்பினர். இந்தியாவிற்கு எதிராக 7ஆம் படை கப்பலை அனுப்பிய அமெரிக்கா இன்றைக்கு உலகை ஆக்கிரமிக்கும் கப்பலை வரவேற்கும் மத்திய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் கடும் கண்டனத்துடன் கோஷங்கள் முழங்கப்பட்டன. தலைவர்களின் பேச்சும் ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வுக்கு உரமூட்டுவதாக அமைந்தது.
தங்களது ஆவேசமூட்டும் எதிர்ப்புணர்வை மாணவர்கள் ராக்கெட்டுக்களை விட்டு வெளிப்படுத்தியது ஆரவாரமூட்டியது। அத்துடன் இரண்டு போர் வெறி நிமிட்ஸ் கப்பல் அடையாளமாக கொண்டு வரப்பட்டு செருப்படி கொடுத்து - தீக்கிரையாக்கி தங்கள் எதிர்ப்புணர்வை தெரிவித்தது குறிப்பிடத்தக்கது. ஆட்சியாளர்கள் உங்களை வரவேற்கலாம். ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்கள் - இந்திய மக்கள் உங்களை ஒரு போதும் வரவேற்க மாட்டோம் என அற்புதமாக வெளிப்படுத்தினர்.

மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் என்.வரதராஜன் உரை

ஆஸ்திரேலியாவிலும், ஆப்பி ரிக்க நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் அனுமதி மறுக் கப்பட்டு விரட்டப்பட்ட கப்பல் இது என்பதை சுட்டிக்காட் டினார்। இராக் மக்களை கொன்று குவித்து ஈரான் நாட்டை அச்சுறுத்தி வருகிற இந்த கொடூரமான கப்பலை இந்திய அரசு ஏன் அனுமதிக் கிறது என்று அவர் வினவினார்। இரு நாடுகளுக்கும் இடையே அணுசக்தி உடன் பாடு கையெழுத்தானதைத் தொடர்ந்து இத்தகைய சீரழிவு கள் ஏற்படும் என இடதுசாரி கட்சிகள் அன்றிலிருந்தே எச்சரித்து வந்துள்ளன। அந்த சீர்கேட்டின் அடையாளமா கவே சென்னைக்கு நிமிட்ஸ் கப்பல் வந்துள்ளது என்றார் அவர்। இதைத் தாங்கி நிற்பது நாட்டின் பெரு முதலாளித் துவக் கூட்டம்। உலகமய, தாராளமய, தனியார்மய ஒப் பந்தங்கள் நாட்டை சீரழிக் கின்றன। அதற்கான ஒரு எச்ச ரிக்கைதான் நிமிட்ஸ் வருகை என்றும் அவர் கூறினார். இந்திய அரசின் பொரு ளாதாரக் கொள்கைகளோடு இக்கப்பலின் வருகை இணைந் திருக்கிறது. இந்தப் போக்கு தொடருமானால் அரசியல் ரீதியாக மக்கள் பாடம் கற்றுக் கொடுப்பார்கள். இந்த ஆர்ப் பாட்டம் அந்த கப்பலிலிருந்து அணுக்கதிர் விஷ வாயு வெளியேறும் என்ற அச்சத்தால் நடைபெறுவது அல்ல. ஏக போக கூட்டங்கள் ஏகாதிபத்தி யத்திற்கு அடிபணிந்து சீர் குலைவுக் கொள்கைகளை செயல்படுத்த அனுமதிக்க மாட் டோம் என்று இடதுசாரி இயக் கங்களின் ஒற்றுமை அடையா ளமே இந்த ஆர்ப்பாட்டம் என்றார் அவர். அமெரிக்க அரசு கப்பலை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இந்திய அரசு அதனை திருப்பி அனுப்ப வேண்டும் என்றும் வரதராஜன் குறிப்பிட்டார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாநிலச் செயலாளர் தா. பாண்டியன் உரை

"வந் திருப்பது சரக்கு கப்பலோ, மருத்துவ உதவி கப்பலோ அல்ல. ஒரு ரவுடி தனது ரவுடித் தனத்தை காட்டுவதற்காக அனுப்பப்பட்டிருக்கிற கப்பல் தான். அதை மன்மோகன் சிங் அரசு இலைப்போட்டு வரவேற் பது மானக்கேடு," என்றார். பல நெருக்கடியான பிரச் சனைகள் வந்தபோது உலக விவகாரங்களில் நடுநிலை யான நிலையை மேற்கொண்டு புகழ்பெற்ற நாடு இந்தியா. இப்போது இடதுசாரிகளின் ஆத ரவோடு அமைந்திருக்கிற ஒரு அரசு அமெரிக்க ஏகாதிபத்தியத் தின் கப்பலை வரவேற்கிறது என்றால் அந்த அவமானத்தை பொறுத்துக் கொள்ள முடியாது என்றார் அவர்.அமெரிக்காவிலேயே ஏழு மாநிலங்களின் அரசுகள் தங் களது துறைமுகங்களில் அந்த கப்பலை அனுமதிக்க மறுத்து விட்டன. ஏமாந்தவர் யார் என்று பார்த்து இந்தியாவிற்கு அது அனுப்பப்பட்டுள்ளது. நிமிட்ஸ் கப்பலின் கேப்டனுக்கு, இந்தி யாவில் யார் என்ன கேட்டாலும் எதுவும் சொல்ல வேண்டாம் என அமெரிக்க அரசு உத்தரவு போட்டிருக்கிறது. அதனால் தான் அந்த கேப்டன், கப்பலில் அணு ஆயுதம் இருக்கிறதா என்பது பற்றி எதுவும் சொல்ல மாட்டேன் என்று சொல்கிறான். ஆனால் இங்குள்ள துறைமுகத் தலைவரும் இந்திய கப்பற் படைத் தளபதியும் அந்த கப்ப லில் அப்படி எதுவும் இல்லை என்று சொல்கிறார்கள். இதை விட அவமானம் என்ன இருக்க முடியும் என்றும் அவர் கேட் டார்.


July 02, 2007

மீடியா ஏகபோகமும், துணை போன திராவிட இயக்கமும்!

நூல் விமர்சனம்
திரு।சாவித்திரி கண்ணன் எழுதிய ‘சன் குழுமச் சதிகளும் தி.மு.க.வின் திசைமாற்றமும்’ என்ற நீண்ட கட்டுரை முதலில் அவரது இன்டர்நெட் - வலைப்பதிவில் பதிவிடப்பட்டு, தற்போது தமிழர் கண்ணோட்ட வெளியீடாக புத்தக வடிவம் பெற்று வெளிவந்துள்ளது அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.
தினகரன் நாளிதழ் வெளியிட்ட கருத்துக் கணிப்பும், அதனைத் தொடர்ந்து மதுரையில் நிகழ்த்தப்பட்ட வன்முறை வெறியாட்டங்களும், அதன் தொடர்ச்சியாக மூன்று உயிர்கள் பலி, மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் தயாநிதி மாறன் பதவிப் பறிப்பு, கட்சியிலிருந்து வெளியேற்றம், மு.க. அழகிரிக்கு அரசியல் அந்த°து என ஒரு சங்கிலித் தொடர் நிகழ்வாக தி.மு.க.வுக்குள் நடைபெறும் வாரிசு அரசியல் போட்டியும் - வியாபார போட்டியும் வெளியுலகிற்கு பட்டவர்த்தனமாக வெளிப்பட்டது. இதனைப் பின்னணியாக வைத்தே சாவித்திரி கண்ணன் சன் டி.வி. குழுமத்தின் அசுர வளர்ச்சியையும், அதற்காக பின்னிய சதிவலைகளையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
மாறன் குழுமத்திற்கு 14 தொலைகாட்சி சேனல்கள், 2 பிரபல நாளிதழ்கள், 3 பருவ இதழ்கள், 4 வானொலி நிலையங்கள், 2 ஜெட் விமானங்கள், 40,000 கோடிகளுக்கு அதிபதிகள் என மீடியா ஜாம்பவானாக வலம் வரும் மாறன் குழுமம், இந்தியாவில் 20 பணக்காரர்களில் ஒருவராக கலாநிதி மாறன் மாறிய அசுர வளர்ச்சியை அற்புதமாக படம் பிடித்துள்ளார்.
1989இல் பூமாலை என்ற வீடியோ இதழ் மூலம் மீடியா உலகில் தடம் பதித்த மாறன் குடும்பம், தன்னுடைய தொழில் வளர்ச்சிக்காக எப்படியெல்லாம் ஆக்டோப° கரங்களை விரித்தது என்பதை விரிவாக விளக்கியுள்ளார். அதே சமயம், இவர்களது வளர்ச்சி திறமையின் மீதான வளர்ச்சியும் இல்லை என்பதை சுட்டவும் தவறவில்லை. பூமாலை வீடியோ இதழ் யாரும் விரும்பாத, மணம் வீசாத பிணத்தின் மீது சாத்தப்பட்ட மாலையாக மண்ணோடு, மண்ணானதோடு, அது கலை நேர்த்தியற்று தொடுக்கப்பட்ட மாலையாக - உதிர்ந்தது கண்டு வீடியோ வியாபாரிகள் மகிழ்ச்சியுற்றதையும் பதிவு செய்துள்ளார்.
கருவின் குற்றத்தையும், கர்த்தாவின் குற்றத்தையும் நன்கு உணர்ந்தவர்கள் மாறன் குடும்பத்தினர். அதனால்தானோ என்னவோ, சன் டி.வி. யின் துவக்கம்கூட அப்படியே அமைந்து விட்டதை இந்நூலில் நன்கு விளக்கியுள்ளார்; ஜீ டி.வி.யின் வருகைத் தொடர்ந்து, மாறன் குடும்பத்திற்கு அதன் மேல் ஏற்பட்ட மோகமும், பத்திரிக்கையளர் சசிகுமார் மேனன் கூறிய தகவலை வைத்துக் கொண்டு, அவருக்கே தெரியாமல் அந்த வாய்ப்புகளை எப்படி உருவாக்கிக் கொண்டனர் என்பதை தெளிவாக அம்பலப்படுத்தியுள்ளார் ஆசிரியர்.
1993இல் துவக்கப்பட்ட சன் டி.வி.யின் சேட்டிலைட் ஒளிபரப்பிற்கு செலுத்த வேண்டிய தொகை நாளுக்கு நாள் அதிகரித்தக் கொண்டே சென்ற நிலையில், ஆபத்பாந்தவனாக உதவியது தி.மு.க.வின் கட்சிப் பணம். இலட்சியத்திற்காக இலட்சங்களை வழங்கிய உடன்பிறப்புகளின் கட்சி நிதி, கும்பகோணம் சிட்டி யூனியன் வங்கியில் போடப்பட்டு, அதே வங்கியிலிருந்து சன் டி.வி.க்கு நிதியுதவி பெற்ற கதை மெய்சிலிர்க்க வைக்கிறது.
இப்படியாக துவங்கிய அவர்களது பயணம், மேக்னம் டாட்டியா என்ற தொழிலதிபருக்கு புருனே சுல்தான் வழங்கிய ரஷ்ய சேட்டிலைட் - டிரான்°பாண்டரை முரசொலி மாறன் எப்படி இறைஞ்சிக் கேட்டுப் பெற்று தனது வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார் என்ற ரகசியத்தையும் அம்பலப்படுத்தியுள்ளார்.
அது மட்டுமல்ல; மீடியா கார்ப்பரேட் தாதாவான சன் குழுமம் கட்சியை மட்டுமல்ல கட்சிப் பத்திரிகையான முரசொலி மற்றும் குங்குமத்தில் பணியற்றிய ஊழியர்களையும் மிகக் குறைந்த ஊதியத்தை கொடுத்து தங்களது தொலைக்காட்சி வளர்ச்சிக்கு எப்படியெல்லாம் சுரண்டிக் கொண்டனர் என்பதையும் சுட்டத் தவறவில்லை.
மாறன் குடும்ப வளர்ச்சிக்கு கட்சி மட்டுமா பயன்பட்டது ஆட்சியும் தான்! முரசறைந்துள்ளார் சாவித்திரி கண்ணன். வெகுஜனங்களை கவர்ந்த ஊடகமாக தூர்தர்ஷனே கொடிகட்டி பறந்த காலத்தில் சன் டி.வி.யால் அதன் தாக்கத்தை சமாளிக்க முடியவில்லை. அப்புறம் என்ன? இருக்கவே இருக்கிறது அய்யாவின் ஆட்சி 1996 இல் அமைந்தவுடன் முதலில் செய்த காரியமே தூர்தர்ஷனின் தமிழ் ஒளிபரப்பை சீர்குலைப்பதுதான் அதற்கு துணை நின்றவர் அப்போதைய தூர்தர்ஷன் டைரக்டர் நடராஜன். மக்கள் பங்கேற்ற வெகுஜன நிகழ்ச்சிகளையெல்லாம் எப்படியெல்லாம் சீர்குலைத்தார்கள் அதன் மூலம் தனது பார்வையாளர்களை சன் தொலைக்காட்சி பக்கம் விரட்டியடித்த கதையெல்லாம் விலாவாரியாக விளக்கியுள்ளார்.
இது மட்டுமா? சென்னை மாநகரில் உள்ள 60 சதவீத கேபிள் நெட்வொர்க்கை தன்வசம் வைத்திருந்த ‘ஹாத்வே’ நிறுவத்தை எப்படியெல்லாம் மிரட்டினார்கள். அவர்களது கேபிள் ஒயர்களை ஆங்காங்கே வெட்டியெறிந்ததையும், அதன் மூலம் மாநகர கேபிள் நெட்வொர்க்கை சுமங்கலி கேபிள் விஷன் எனும் ஒரே குடையின் கீழ் கொண்டு வந்ததையும், அதற்கு அடிபணியாத கேபிள் ஆப்பரேட்டர்களை மிரட்டி பணிய வைத்ததையும், சுமங்கலி கேபிள் ஏகபோகத்திற்கு மாநகர °டாலின் நிர்வாகம் எப்படி பயன்படுத்தப்பட்டது என்பதை புட்டுப் புட்டு வைத்துள்ளார் நூலாசிரியர். இவர்களது ஆதிக்கத்தால் புதிதாக தோன்றி தமிழன் டி.வி., பாரதி டி.வி., தினத்தந்தியின் செய்தி சேனல் என பல தொலைக்காட்சி சேனல்கள் தொல்லைக்கு உள்ளாக்கி தொலைக்கப்பட்டதையும் துழாவியுள்ளார்.
பொதுத்துறையை சீரழித்த தயாநிதி
முரசொலி மாறனுக்கு பின் அரியணை ஏறிய தயாநிதி மாறன் தாத்தாவின் நிர்ப்பந்தத்தால் கேட்டுப் பெற்ற தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தை பயன்படுத்தி தன்னுடைய தொலைக்காட்சி தொழிலை மேம்படுத்திக் கொண்டதையும், பன்னாட்டு ஏகபோகத்திற்கு சேவை செய்த தயாநிதியை தூக்கிப் பிடித்த பத்திரிகைகளையும் சாட்டையடி தந்துள்ளதோடு, தயாநிதி அமைச்சகத்தின் கீழிருந்த பி.எ°.என்.எல். ரிலையன்° போன்ற ஏகபோக நிறுவனங்களுக்கு ஆதரவாக சீரழிக்கப்பட்டதையும் அம்பலப்படுத்தியுள்ளார். தயாநிதி மாறனின் திறமை பி.எ°.என்.எல். வளர்ச்சிக்கு பயன்பட்டதா? வீழ்ச்சிக்கு பயன்பட்டதா என பட்டிமன்றமே நடத்தியுள்ளார், ஓரிடத்தில் 50,000 கோடிக்கு மேல் கையிருப்புள்ள பி.எ°.என்.எல். நிறுவனம், “கடந்த டிசம்பர், ஜனவரி, பிப்ரவரி, மார்ச் ஆகிய நான்கு மாதங்களில் தனியார் நிறுவனங்கள் 8,82,000 புதிய இணைப்புகளை தந்துள்ள நிலையில் பி.எ°.என்.எல். வெறும் 5,006 இணைப்புகள் மட்டுமே தந்துள்ளது” என வலுவான ஆதாரத்தை கொண்டு அம்பலப்படுத்தியுள்ளதோடு தயாநிதியின் திறமை குறித்து வலுவான கேள்வி எழுப்பியுள்ளார்!கட்சிக்கும் - ஆட்சிக்கும் காவலாக அடையாளப்படுத்திய தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான சேனலாக வலம் வந்த சன் டி.வி. பெரியார் - அண்ணா கொள்கைகளையும் எப்படி புதை குழிக்கு அனுப்பியது என்பதையும், பில்லி, சூனியம், ஜோசியம், மாயாவாதம், மந்திரவாதம், தந்திரவாதம், வேப்பில்லைக்காரி முதல் கோட்டை மாரியம்மன் வரை தன்னுடைய திராவிட பரிணாம வளர்ச்சியை எப்படியெல்லாம் மாய்ந்து மாய்ந்து தமிழகம் முழுவதும் கொண்டு சென்ற சேவையையும் மறக்காமல் குட்டியுள்ளார்.
மூத்த பத்திரிகையாளர்கள், பிரபல திரைப்பட இயக்குநர்கள் உட்பட சன் டி.வி.யின் வளர்ச்சிக்காக உழைத்தவர்களை எப்படியெல்லாம் அவமானப்படுத்தினார்கள், வெளியேற்றினார்கள், இவர்களது ஊழலும், ஊதாரித்தனமும், ஆடம்பர தம்பட்டங்களும் ஊரறியாத ரகசியங்களாக வைக்கப்பட்டிருந்ததை ஊரறிய பறைசாற்றியுள்ளார் சாவித்திரி கண்ணன்.
மாறன் குடும்பத்தின் அசுர வளர்ச்சியும் - அரசியல் வளர்ச்சியும் கழக குடும்பத்திற்குள் ஏற்படுத்திய சலசலப்பும் சன் குழும சொத்துப் பிரிப்புக்களுக்கு பின்னால் உள்ள ரகசியங்களையும் தொட்டுக் காட்டியுள்ள ஆசிரியர்। மாறன் குடும்பத்தின் இத்தனை அராஜகங்களையும் பொறுத்துக் கொண்ட கலைஞர் இப்போது ஏன் பொங்கி எழுந்தார் என்று கேள்வி எழுப்புவதோடு நிற்காமல் வாரிசு அரசியலின் உற்றுகண்ணே இதற்கு அடிப்படை என்று ஆணித்தரமாக வாதம் செய்யும் ஆசிரியர் ஊடக ஏகபோகத்தை உடைத் தெறிய அரசியலையும் - ஊடகத்தையும் தனித்தனியே நிற்க வைக்க வேண்டும் என்று வலியுறுத்துவதோடு, தமிழகம் முழுவதும் உள்ள கேபிள் நெட்வொர்க்கை அரசே ஏற்று நடத்திட வேண்டும் என்று அக்கறையோடு சுட்டியுள்ளார். மேலும் தமிழகத்தில் ஒரு ஆரோக்கியமான கலாச்சார, பண்பாட்டுத் தளங்களுக்கு வித்திடும் ஊடக போக்குகளை ஊக்குவிக்கும் முகமாகவே இந்நூலை கொண்டு வந்துள்ள ஆசிரியரின் துணிச்சலை எத்தனை பாராட்டினாலும் தகும்! இந்நூலை வண்ண அட்டைப்படத்தோடு மிகச் சிறப்பாக வடிவமைத்து வெளியிட்ட தமிழர் கண்ணோட்டமும் பாராட்டுக்குரியது. ஊடக ஏகபோகத்திற்கு எதிரான சவுக்கடியாக பயன்படும் இந்நூல், எதிர் கால வெளிச்சத்திற்காக பல்லாயிரக்கணக்கில் தமிழ் மக்கள் வாங்கிப் பயன்படுத்திட வேண்டும். இது சன்குழும ஏகபோகத்திற்கு எதிரான நூல் மட்டுமல்ல; அதற்கு துணை போன திராவிட இயக்க சீரழிவுக்கும் எதிரானது!
புத்தகம் பேசுது இதழுக்காக எழுதப்பட்ட கட்டுரையே இங்கு வெளியிடப்பட்டுள்ளது.