August 11, 2006

உலகமயமாகும் நிலச்சீர்திருத்த அரசியல்

‘உலகமயம்’ இது பன்னாட்டு பெருவணிக நிறுவனங்களின் கோஷம். ஏகாதிபத்திய நவீன சுரண்டலின் புதிய வடிவம். உலகமக்கள் வெறுக்கும் விரிவாக்கம்; இந்த ஏகாதிபத்திய சுரண்டலுக்கு எதிராக உலகளவில் தொழிலாளர்களும், ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகளும், இடதுசாரி - ஜனநாயக அமைப்புகளும் போராட்ட இயக்கங்களை கட்டியெழுப்பி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக ‘உலக சமூக மாமன்றம்’ போன்ற அமைப்புகள் விரிந்த சங்கிலி இணைப்புகளை உருவாக்கி, விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றன. 1848-இல் ‘உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள்’ என்று மார்க்சும் - ஏங்கெல்சும் கம்யூனி°ட் அறிக்கையில் முன்வைத்த முழக்கம் இன்று நிஜமாகி வருகிறது.ஏகாதிபத்திய - முதலாளித்துவ சக்திகள் தொழில்நுட்ப ரீதியிலும், அறிவியல் ரீதியிலும், பொருளாதார ரீதியிலும் ஈபிள் கோபுரம் அளவிற்கு சாதனைகளை நிகழ்த்தியிருந்தாலும், உலக மக்களின் வறுமையை அவர்களால் தீர்க்க முடியவில்லை. மாறாக உலக மக்களை வறுமையின் புதைக்குழிகளுக்கே தள்ளி வருகின்றன. குறிப்பாக கிராமப்புற விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் மிகக் கொடூரமான சுரண்டலுக்கு உள்ளாவதோடு, பட்டினிச் சாவுகளுக்கும், தற்கொலைகளுக்கும் இட்டுச் செல்லக்கூடிய அளவிற்கு அவர்களது வாழ்நிலை மிகவும் சீரழிந்து வருகிறது.
இந்த பின்னணியில்தான் இந்தியா உட்பட, லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டு வரும் இடதுசாரிகளின் எழுச்சி விவசாயிகள் - தொழிலாளர்கள் வாழ்க்கையில் நம்பிக்கை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளது. அதோடு வெனிசுலா, பிரேசில், பொலிவியாவில் நடைபெற்று வரும் இடதுசாரி அரசுகளின் நிலச்சீர்திருத்த இயக்கம் விவசாயிகளுக்கு நம்பிக்கையூட்டி வருகிறது.இந்தியாவில் இடதுசாரி அரசுகளான கேரளம், மேற்குவங்கம், திரிபுராவில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தமிழகத்திலும் “நிலச்சீர்திருத்தம்” ஒரு அரசியல் கோஷமாக முன்னுக்கு வந்துள்ளது.உலகிலேயே முதன் முதலில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப் பட்ட நாடு சோசலிச சோவியத்யூனியன்தான்; தற்போது நடைபெற்று வரும் இந்த இயக்கங்களுக்கு முன்னோடி என்பதை நாம் இங்கே நினைவுகூர்ந்திட வேண்டும். சீனா, வடகொரியா, வியட்நாம் உட்பட சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கைகள் இன்றைக்கு விரிவடைந்து தென்னாப்பிரிக்கா, தென்கொரியா உட்பட பல்வேறு நாடுகளில் தீவிரமாக மேற்கொள்ளப்படுகிறது. குறிப்பாக ‘நிலச் சீர்திருத்தம்’ என்பது உலகளவில் ‘அரசியல் கோஷமாக’ உலக மக்கள் விரும்புகிற உலகமயமாகி வருகிறது.உலக உழைப்பாளி மக்களின் வறுமைக்கு அடிப்படையாக அமைந்திருப்பது உற்பத்தி கருவிகள் சுரண்டும் வர்க்கங்களின் கைகளில் குவிந்திருப்பதுதான். அதிலும் குறிப்பாக கிராமப்புற நிலவுடைமை இன்றைக்கும் பெரும் பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலும், நிலப்பிரபுக்களின் கைகளிலும்தான் குவிந்திருக்கிறது. இந்த உற்பத்தி கருவிகளிலும், உற்பத்தி உறவுகளிலும் அடிப் படையான மாற்றத்தை ஏற்படுத்திடாமல் கிராமப்புற வறுமைக்கு தீர்வு காண முடியாது.
உலக விவசாயிகளின் நிலைஉலக மக்கள் தொகையில் சரி பாதி பேர் விவசாயத்தையே நம்பியுள்ளனர். 45 சதவீத மக்களது வாழ்க்கை விவசாயத்தோடு இணைக்கப்பட்டுள்ளது. அவர்களது வாழ்நிலை, வருமானம், பாதுகாப்பு என அனைத்தும் விவசாயத்தைச் சார்ந்தேயுள்ளது.இவர்களது வாழ்க்கை பாதுகாப்பிற்கு மையக் கேள்வியாக இருப்பது ‘நிலம்’. குறிப்பாக வளரும் நாடுகளில் உள்ள 50 கோடி மக்களுக்கு நிலமோ அல்லது நிலத்தின் மீதான உறவோயின்றி, விவசாயத் தொழிலாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இதில் மிகக் குறைந்த பகுதியினர்தான் குத்தகை விவசாயிகளாக உள்ளனர். இவர்கள் நிலவுடைமையாளர்களால் கடுமையாக சுரண்டப் படுவதோடு, கந்துவட்டி, குறைந்தகூலி, ஆண்டுமுழுவதும் சீரான வேலையின்மை, அதிகமான நிலவாடகை என பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகி வருகின்றனர். குறிப்பாக விவசாயிகள் அதிகமாக உள்ள நாடுகளான இந்தியா, பாகி°தான், பங்களாதேஷ், இந்தோனேஷியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா, கொலம்பியா மற்றும் தென்னமெரிக்க நாடுகளில் உள்ள கிராமப்புற மக்கள் கடுமையான வறுமைக்கு ஆளாகியுள்ளனர்; சுகாதாரம், கல்வி, வீடு மற்றும் அடிப்படைத் தேவைகள்கூட கிடைக்காத பகுதியினராக திகழ்கின்றனர்.அதே சமயம், சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான முன்னாள் சோசலிச நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்தத்தால் 58 கோடி மக்கள் பெரும் முன்னேற்றம் அடைந்துள்ளனர். சீனா, வடகொரியா, வியட்நாம், கியூபா உட்பட சோசலிச நாடுகளில் நிலச்சீர்திருத்தம் மேற்கொள்ளப்பட்டு கிராமப்புற பொருளாதாரத்தில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளன. இந்தியாவிலும் மேற்குவங்கம், கேரளம், கர்நாடகா போன்ற மாநிலங்களில் நிகழ்த்தப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக் கைகயால் கிராமப்புற மக்களின் வாழ்க்கைத்தரம், வாங்கும் சக்தி, உள்ளாட்சி நிர்வாகத்தில் பங்கேற்பு என பன்முனைகளில் ஜனநாயக ரீதியான மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன என்று கிராமப்புற வளர்ச்சி நிறுவனத்தின், 21ஆம் நூற்றாண்டில் நிலச்சீர்திருத்தம் என்ற ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.பிரேசில் விவசாயிகள் எழுச்சியும் நில மீட்பும்உலகில் வளம் பொருந்திய நாடுகளில் ஒன்று பிரேசில், ஆனால், அதே அளவிற்கு வறுமையையும் கொண்டுள்ளது; இந்த நாட்டின் வளங்களை சுரண்டிச் செல்வதிலும், அதற்கேற்ப பொம்மை ஆட்சியாளர்களை அமர்த்துவதிலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைங்கரியம் உண்டு. குறிப்பாக பிரேசிலில் உள்ள மூன்றில் இரண்டு பகுதி விவசாய நிலங்கள், வெறும் மூன்று சதவீதம் பேருக்கு சொந்தமானது. அதிலும் குறிப்பாக 1.6 சதவீதம் பேரிடம் பிரேசிலின் 46.8 சதவீத விவசாய நிலங்கள் குவிந்திருக்கிறது. இவர்களின் கையில்தான் மொத்த விவசாயமும் - விவசாய கொள்கையை தீர்மானிக்கும் சக்தியாக திகழ்கின்றனர். இந்த நவீன விவசாய பண்ணைகளில் 2.5 கோடி மக்கள் தங்களது வாழ்க்கைக்காக விவசாயம் சார்ந்த வேலைகளையே நம்பியிருக்கின்றனர். நிலமற்ற விவசாயிகளாக - அத்துகூலிக்கு வேலை செய்யும் ஆட்களாக, வறுமைக் கோட்டிற்கு கீழே வாழும் மக்களாக, சத்தற்ற நடைபிணங்களாக ஆக்கியது கடந்தகால ஆட்சியாளர்களின் கொள்கைகள்.வெளிச்சத்தை கொண்டு வந்த விவசாய இயக்கம்1984இல் துவங்கப்பட்ட கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில் (MST-Movimento dosTrabalhadores Rurais Sem Terra in Portuguese - Landless Workers Movement) 1.5 கோடி பேர் உறுப்பினர்களாக உள்ளனர். எம்.எ°.டி. என்று அழைக்கப்படும் கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்தில், 10 முதல் 15 குடும்பங்களைச் சார்ந்தவர்கள் ஒரு கிளையாக செயல்பட்டு வருகின்றனர். இந்த கிளைகளில் இருந்து மேல் கமிட்டிக்கு ஒரு ஆண், ஒரு பெண் என இரண்டு உறுப்பினர்களை தேர்வு செய்கின்றனர். இந்த இயக்கத்தில் பெண்களின் பங்கு குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த இயக்கம் பிரேசில் முழுவதும் உள்ள 27 மாநிலங்களில் 23 மாநிலங்களில் தங்களது கிளைகளை விழுதுகளாக ஆழப் பதித்திருக்கிறது.2003ஆம் ஆண்டு லூலா தலைமையில் அமைந்த இடதுசாரி அரசாங்கம் “கிராமப்புற நிலமற்ற விவசாயிகள் இயக்கத்திற்கு” பெரும் ஆதர்ச சக்தியாக திகழ்கிறது. கடந்த 20 ஆண்டு காலமாக அவர்கள் நடத்தி வரும் நிலமீட்பு போராட்டம், லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள நிலமற்ற விவசாயிகளுக்கு ஒரு முன்னுதாரனமாக திகழ்கிறது. இந்த இயக்கம் கிராமப்புற மக்களின் ஆத்மாவாக, நம்பிக்கை நட்சத்திரமாக செயல்படுவதோடு, மிக அதிக அளவிலான விவசாயிகளைக் கொண்ட பேரியக்கமாக செயல்பட்டு வருகிறது.நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கத்தின் அடிப்படை நோக்கமே வேலையில்லாத் திண்டாட்டத்தை ஒழிப்பது, ஜீரோ வேலையில்லாத் திண்டாட்டம் என்பதுதான். அத்துடன் செல்வத்தை பகிர்வது, சமூக நீதி, சம உரிமை ஆகியவற்றை அடிப்படையாக வைத்து செயல்படுகிறது.பிரேசிலில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 60 சதவீத விவசாய நிலம் தரிசு நிலம். இத்தகைய தரிசு நிலத்தை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கக் கோரி நடத்திய விவசாயிகளின் வீரஞ்செறிந் போராட்டத்தின் மூலமாக, இதுவரை இரண்டரை லட்சம் குடும்பங்களுக்கு 15 மில்லியன் ஏக்கர் (1.5 கோடி ஏக்கர்) நிலம் கிடைத்துள்ளது. இந்த போராட்டத்தின் போது பல இடங்களில் நில முதலாளிகளின் தாக்குதல்களுக்கு 2000த்துக்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் பலியாகியுள்ளனர்.விவசாயிகள் இயக்கம் நிலமீட்பு போராட்டத்தை மட்டும் நடத்துவதோடு நிறுத்திக் கொள்ளவில்லை. மீட்கப்பட்ட நிலத்தில் வர்த்தக பயிர்*களை தவிர்த்து, மாற்று கொள்கைகளை உருவாக்கி, புதிய விவசாய கலாச்சாரத்தை உருவாக்கி, செயல்படுத்தி வருகிறது. விவசாயம் உணவுப் பாதுகாப்பை உத்திரவாதப்படுத்துவதோடு, வேலையின்மைக்கு முற்றுப் புள்ளி வைப்பதாகவும் அமைய வேண்டும் என்ற நோக்கோடும், பொருளாதார தேவைகளை உயர்த்துவதாகவும், அவர்களது வறுமைக்கு தீர்வு காண்பதாகவும் இருக்க வேண்டும் என்ற முனைப்போடு எம்.எ°.டி. செயல்பட்டு வருகிறது. இதற்காக 60 உணவு கூட்டுறவு அமைப்புகளையும், சிறிய விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளையும் உருவாக்கி, உணவுக்கும் - வேலைக்கும் உத்திரவாதத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறது.இது தவிர, கிராமப்புற விவசாய மக்களிடையே உள்ள எழுத்தறிவின்மையை போக்குவதற்கு “எழுத்தறிவு இயக்கத்தை” தொடர்ந்து நடத்தி வருகிறது. கிட்டத்தட்ட 600க்கும் மேற்பட்ட எம்.எ°.டி. ஊழியர்கள் எழுத்தறிவு இயக்கத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 2002 - 2005 கால கட்டத்தில் மட்டும் 56,000 கிராமப்புற மக்களுக்கு கல்வியறிவை புகட்டியுள்ளனர். அதேபோல் 1000க்கும் மேற்பட்ட ஆரம்ப பள்ளிகளையும் இந்த இயக்கம் நடத்தி வருகிறது. இதில் 2000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், 50,000 குழந்தைகளும் பயின்று வருகின்றனர்.இவ்வாறான விழிப்புணர்வின் மூலம் போராட்டத்தின் வாயிலாக பெற்ற நிலத்தை தாங்களே பாதுகாத்துக் கொள்ளவும், உணவு பாதுகாப்பையும், உணவுத் தேவையையும் பூர்த்தி செய்து கொள்ளவும், குடும்ப பாதுகாப்பையும், பொருளாதார மேம் பாட்டையும் உத்திரவாதப்படுத்திக் கொள்ள இத்தகைய செயல்பாடு பயன்படுகிறது.
சமீபத்தில் பிரேசில் தலைநகரில் நடத்தப்பட்ட பிரம் மாண்டமான இயக்கத்தில் பல்லாயிரக்கணக்கான எம்.எ°.டி. ஊழியர்கள் கலந்து கொண்டுள்ளனர். லூலா தேர்தல் காலத்தில் நான்கு லட்சம் குடும்பங்களுக்கு நில விநியோகம் செய்வதாக தேர்தல் வாக்குறுதி அளித்திருந்தார். அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதில் தற்போதைய வேகம் போதாது என்று எம்.எ°.டி. இயக்கம் விமர்சிக்கிறது. அதே சமயம் லூலா மீது தங்களுக்கு நம்பிக்கை இருப்பதாகவும், லூலா எங்கள் இயக்கத்தில் ஒருவர்; அவர் தங்களது நன்பர் என்றும் எம்.எ°.டி. இயக்கம் நம்பிக்கை கொள்கிறது.பிரேசில் பிரம்மாண்டமான நிலவளத்தை கொண்டிருந் தாலும், அதனுடைய உணவுத் தேவைக்கு இறக்குமதியையே நம்பியிருக்கிறது. ஒரு நாட்டில் அதிகமான நிலம் இருப்பதால் மட்டும் அங்குள்ள விவசாயிகளுக்கும், மக்களுக்கும் உணவு கிடைக்கும் என்பதற்கு உத்திரவாதமில்லை. அந்நாட்டு அரசுகள் பின்பற்றும் கொள்கை, குறிப்பாக நிலவுடைமையாளர்கள் - பண்ணைகள் தங்களது நிலங்களில் உணவுப் பயிர்களுக்கு பதிலாக வர்த்தகப் பயிர்களையே விளைவிக்கின்றனர். மறுபுறத்தில் விவசாயத் தொழிலாளர்களுக்கு போதுமான கூலி கிடைக்காமல் வறுமையின் சுழலுக்குள் சிக்கி, சின்னாபின்னமாவதுதான் நடக்கிறது.நிலமற்ற விவசாயிகளுக்கு நிலம் என்பது, அந்த விவசாயிகளின் வாழ்க்கையில் தன்னம்பிக்கை ஏற்படுத்துவதோடு, அவர்களது உணவுக்கான உத்திரவாதத்தையும் ஏற்படுத்திக் கொடுக்கிறது. அந்த அடிப்படையில் தற்போது பிரேசிலில் நடந்துவரும் நிலமற்ற கிராமப்புற விவசாயிகள் இயக்கம் லத்தீன் அமெரிக்க நாடுகளில் உள்ள விவசாயிகளுக்கு முன்மாதிரியாக திகழ்கிறது.நிலச்சீர்திருத்தம் வெனிசுலா காட்டும் பாதைஅமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு சிம்ம சொப்பனமாக திகழ்வது கியூபாவும் - பிடலும். லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க சுரண்டலுக்கு எதிராக சிங்கத்தின் கர்ஜனையோடு பிடலுடன் கைகோர்த்திருப்பவர் வெனிசுலா அதிபர் யூகோ சாவே°. உலக எண்ணெய் வளத்தில் 5வது இடத்தை வகிப்பது வெனிசுலா.வெனிசுலா பெட்ரோலிய ஏற்றுமதியில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது. அமெரிக்கா தன்னுடைய எண்ணெய் தேவையில் 25 சதவீதத்தை வெனிசுலாவில் இருந்து பெற்றுக் கொள்கிறது. வெனிசுலாவின் பொருளாதாரத்தில் மிக முக்கியமான இடத்தை வகிப்பது அதன் எண்ணெய் உற்பத்தியே; 80 சதவீத வருமானம் இதனை நம்பியே உள்ளது. அமெரிக்கா வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கொள்ளைக் கொண்டதோடு, தனது நவீன காலனியாக பயன்படுத்தி வந்தது. சாவே° ஆட்சிப் பொறுப் பேற்றதும், வெனிசுலாவின் எண்ணெய் வயல்களை அரசுடைமை யாக்கி, அமெரிக்க நிறுவனங்களின் சுரண்டலுக்கு முற்றுப் புள்ளி வைத்தார்.1999இல் ஆட்சிக்கு வந்த சாவே° “நிலச் சீர்திருத்தம்தான் எனது அரசின் முக்கிய இலக்கு” என்று அறிவித்தார். “விவசாயிகளின் உணவுப் பாதுகாப்பிற்கு அவர்களுக்கான நிலவுரிமையை உத்திரவாதப்படுத்துவதே எனது நோக்கம்” என்று பிரகடனப் படுத்தினார். அத்தோடு நிற்காமல், வெனிசுலாவின் அரசியல் சாசனத்தையும் திருத்தியமைத்தார் சாவே°.அதிபர் சாவேசின் புரட்சிகர நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத ஏகாதிபத்திய ஆளும் வர்க்கம், சாவேசை ஆட்சியில் இருந்து கவிழ்ப்பதற்கு பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு மூக்கை உடைத்துக் கொண்டது. ஓராண்டுக்கு முன் கிறித்துவ மதப் பிரசங்கம் செய்யும் பாதிரியார், சாவேசை கொல்ல வேண்டும் என்று வெளிப்படையாக மதப் பிரசங்கத்திலேயே அறிவித்தார் ஏகாதிபத்திய சுரண்டும் வர்க்கம் சாவே° அரசை கவிழ்ப்பதற்கு எத்தகைய சீரழிந்த நடவடிக்கைகளை கைக்கொள்கிறது என்பதற்கு இதைவிட வேறு உதாரணம் தேவையில்லை.வெனிசுலாவில் உள்ள மொத்த விவசாய நிலத்தில் 75 சதவீத நிலம் 5 சதவீதத்தினர் கையில் உள்ளது. இத்தகைய நில முதலைகள் ஒவ்வொருவரிடமும் 1000 ஹெக்டேர்களுக்கு மேல் நிலம் குவிந்துள்ளது. இங்கும் பிரசிலில் நடைபெற்றது போல் பருத்தி, சோயா, கோக்கோ போன்ற வர்த்தகப் பயிர் விளைச்சல்தான். மறுபுறம் ஐந்தில் மூன்று பங்கு விவசாயிகள் நிலமற்ற கூலி விவசாயிகளாக உள்ளனர். மேலும் லத்தீன் அமெரிக்க நாடு களிலேயே கிராமப்புற மக்கள் தொகை குறைவாக கொண்ட நாடு வெனிசுலாதான். கடந்த 35 ஆண்டு காலமாக கிராமப்புறத்தில் இருந்த மக்கள் நிலங்களில் இருந்து விரட்டப்பட்டு, நகரங்களில் குவிந்துள்ளனர். 1960களில் 35 சதவீதமாக இருந்த கிராமப்புற மக்கள் தொகை படிப்படியாக குறைந்து 1990களில் 12 சதவீதத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இது 2000ஆம் ஆண்டில் 8 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது.
வர்த்தகப்பயிர் உற்பத்தி மற்றும் நவீன விவசாய கருவிகளை கையாள்வதன் மூலமும், கிராமப்புற விவசாய மக்கள் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் தவறான கொள்கைகளின் விளைவாக எப்படி நிலத்தில் இருந்து அகற்றப்படுகிறார்கள் என்பதற்கு வெனிசுலா சிறந்த உதாரணமாகத் திகழ்கிறது. வெனிசுலாவின் விவசாய உற்பத்தி அதன் மொத்த ஜி.டி.பி.யில் வெறும் 6 சதவீதம் மட்டுமே. மொத்தத்தில் வெனிசுலா தன்னுடைய உணவுத் தேவைக்கு 88 சதவீதம் இறக்குமதியையே நம்பியுள்ளது.ஒரு பக்கத்தில் வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை சுரண்டுவதும், மற்றொரு புறத்தில் தங்களது விளை பொருட்களை வெனிசுலா தலையில் கட்டுவதுமாக இருபுற சுரண்டலை அமெரிக்க ஏகாதிபத்தியவாதிகள் மேற்கொண்டு வந்தனர்.கிராமத்திற்கு திரும்புவோம்!சாவே° ஆட்சிக்கு வந்ததும் “கிராமத்திற்கு திரும்புவோம்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். இதன் மூலம் பெரும் நிலப் பண்ணைகளை வைத்திருப்பவர்களுக்கு எதிரான போராட்டம் வெனிசுலாவில் தீவிரமடைந்தது. 60 சதவீதத்திற்கும் மேற்பட்ட மக்கள் வறுமையில் உழலும் வெனிசுலாவில் 75 சதவீத விவசாய நிலங்கள் 5 சதவீத நிலவுடைமையாளர்கள் வசம் இருந்தது. இதில் எ°டேட் என்று அழைக்கக்கூடிய 44 நவீன விவசாய பண்ணை களை நடத்தும் முதலாளிகளிடம் மட்டும் 6,20,000 ஏக்கர் நிலங்கள் குவிந்திருக்கிறது. இந்த நிலக்குவியல்தான் வெனிசுலாவின் அரசியல் அதிகார மையமாக இருக்கிறது. இந்த நிலக்குவியலை தகர்க்கும் உளியாக செயல்படுகிறார் சாவே°.சாவே° ஆட்சிக்கு வந்தவுடன், அரசியல் சட்டத்தை திருத்தியதோடு, நிலவுடைமை குறித்த சட்டத்தையும் திருத்தி அமைத்தார். இதன் மூலம் தரிசு நிலங்களை கைப்பற்றுவது உள்ளிட்ட நடவடிக்கைகள் வெகுவேகமாக நிறைவேற்றப்பட்டு வருகிறது.18 வயதில் இருந்து 35 வயதுக்கு உட்பட்டவர்கள் குடும்பத் தலைவரோ அல்லது தனி நபரோ நிலம் வேண்டி அரசுக்கு விண்ணப்பித்தால், அவர்களுக்கு உரிய நிலம் அளிக்கப்படும். அவருக்கு கிடைக்கும் நிலத்தில் மூன்று ஆண்டுகள் தொடர்ந்து விவசாயம் செய்து வந்தால், அந்த நிலம் அவருக்கு முழு உரிமையாக்கப்படும். அதே சமயம் அத்தகைய நிலத்தை யாருக்கும் விற்கவோ, அதேபோல் வேறு நிலங்களை வாங்கவோ சட்டத்தில் இடமில்லை. 2003ஆம் ஆண்டு 60,000 நிலமற்ற விவசாய குடும்பங்களுக்கு 5.5. மில்லியன் ஏக்கர் (55 லட்சம் ஏக்கர்) நிலத்தை விநியோகம் செய்து, அந்த மக்களுக்கு சட்ட உத்திரவாதம் வழங்கியுள்ளது வெனிசுலா அரசு. இந்த ஆண்டில் அரசின் இலக்கு 3.5 மில்லியன் ஏக்கர் நிலத்தை விநியோகிப்பது என்பதுதான்; அரசின் உறுதியான நடவடிக்கையால் இலக்கையும் மிஞ்சியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.2004ஆம் ஆண்டு மட்டும் 1.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்கள் 1,30,000 குடும்பங்களுக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 6,50,000 பேர் பயனடைந்துள்ளனர் என்று வெனிசுலா நிலவிநியோக புள்ளி விவரம் கூறுகிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு குடும்பத் திற்கும் 11.5 ஹெக்டேர் நிலம் கிடைத்துள்ளது. வரும் ஆண்டுகளில் இந்த எண்ணிக்கையை 2 மில்லியன் ஹெக்டேர் அளவுக்கு விநியோகிக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து வருகிறது.இத்தகைய நிலவிநியோக நடவடிக்கையால், கிராமப் புறங்களில் நிலவுடைமை வர்க்கங்கள் நடத்திய தாக்குதல்களில், வன்முறைச் சம்பவங்களில் 150க்கும் மேற்பட்ட விவசாய இயக்கத்தினர் கொல்லப்பட்டுள்ளனர். வெனிசுலாவில் முதலாளித் துவ ஆட்சியாளர்கள் கிராமப்புற விவசாயிகளை நிலத்தைவிட்டு விரட்டியுள்ளதால், அங்கே விவசாயிகள் இயக்கம் என்பது கூடுதல் வலுப்பெறாத நிலையுள்ளது. பலமான விவசாயிகள் இயக்கம் வெனிசுலாவில் இருந்திருக்குமேயானால், சாவேசின் புரட்சிகர நடவடிக்கை மேலும் வெகுவேகமாக செயல்படுத்துவதற்கு உத்வேகமாக அமையும்.வெனிசுலாவில் நடைபெறும் நிலச் சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து நேரில் பார்வையிட்ட பிரேசில் நிலமற்றோர் இயக்கத் தலைவர் ஜோஹோ பெட்ரன் கூறுகையில், “நான் காதுகளில் கேட்பதை விட கண்களில் பார்ப்பது அதிகம்” என்று புகழ்ந்துரைத்துள்ளார்.நிலச் சீர்திருத்தம் பொலிவேரியன் பாதைலத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வேகமாக சுழன்று அடித்துக் கொண்டிருக்கிறது. புரட்சி வீரன் சே குவேரா சுடப்பட்ட மண்ணில் இன்றைக்கு இடதுசாரி சிந்தனைகொண்ட ஈவோ மொரேல்° தலைமையிலான ஆட்சி நடைபெற்றுக் கொண்டி ருக்கிறது. ஈவோ மொரோல்° மற்றொரு சாவேசாக உருவெடுத்து வருகிறார். பிடல், சாவே°, மொரோல்° கூட்டு ஏகாதிபத்திய அமெரிக்காவின் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருக்கிறது.இவர் ஆட்சிக்கு வந்தவுடன் எடுத்த முதல் நடவடிக்கையே பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுவை அரசுடைமை யாக்கியதுதான். பொலிவியாவில் நிலவுடைமை மிக வித்தியாச மானது. அங்கே இரண்டு விதமான நிவுடைமை நிலவுகிறது. ஒன்று மினிபன்டா° என்று அழைக்கக்கூடிய விவசாய நிலம் மேற்கு பகுதியிலும், லாட்டிபண்டா° என்று அழைக்கக்கூடிய தொழிற்சாலை நிலங்கள் கிழக்குப் பகுதியிலுமாக பிரிக்கப்பட்டு ஆதிக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.இங்கும், விவசாய நிலங்களில் ஏகாதிபத்திய வர்த்தகப் பயிர்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயம் என்றாலே அது உள்நாட்டு மக்களின் தேவைக்கு என்பது மாறி, அது ஏற்றுமதி செய்வதற்கு என்ற நிலையினை தோற்றுவித்துள்ளது ஏகாதிபத்திய கட்டமைப்பு.சின்னஞ்சிறு பொலிவியாவில் 35 லட்சம் கிராமப்புற மக்கள் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர். இதில் 40 சதவிகித விவசாயிகள் கடுமையான வறுமையில் உழல்வதாக கூறப்படுகிறது. இவர்களது ஆண்டு வருமானம் வெறும் 600 டாலர் மட்டுமே. அதாவது, ஒரு நாளைக்கு இரண்டு டாலருக்கும் குறைவு.பொலிவியாவில் எழுந்த நிலத்துக்கான இயக்கம்பிரேசிலிய அனுபவத்தைத் பின்பற்றி “பொலிவியன் நிலமற்றோர் இயக்கம்” இன்றைக்கு வெகு வேகமாக பரவி வருகிறது. பொலிவியாவில் உள்ள தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்கு வழங்கிட வேண்டும் என்ற கோரிக்கையோடு இந்த இயக்கம் செயல் பட்டு வருகிறது. இந்த இயக்கத்தின் வளர்ச்சியைப் பொறுத்துக் கொள்ள முடியாத முதலாளித்துவ நில பண்ணை முதலாளிகள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை கொலை செய்து வருகின்றனர்.இந்த நிலப் பண்ணைகள் குறித்து கூறும் போது பரான்கோ மார்னிக்கோவ் என்ற ஒரே ஒரு நிறுவனம் மட்டும் 14,000 ஹெக்டேர் நிலத்தை தன் வசம் வைத்துள்ளது. இதிலிருந்து அங்குள்ள பண்ணைகளின் ஆதிக்கத்தை அறியலாம். இதேபோல் 100 குடும்பங்கள் மட்டும் 25 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை தன்வசம் வைத்துக் கொண்டுள்ளது.அதே சமயம் 2 மில்லியன் மக்கள் (20 லட்சம் பேர்) தங்கள் வசம் வெறும் 5 மில்லியன் ஹெக்டேர் நிலத்தை மட்டுமே வைத்துள்ளனர்.மொரேல்° அரசு “நிலச்சீர்திருத்த நடவடிக்கையை” நிறைவேற்றுவதற்கு முதல் கட்டமாக அரசியல் சட்டத்தில் அடிப்படையான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. முதல் கட்டமாக பொலிவியாவில் உள்ள 4.5 மில்லியன் ஹெக்டேர் நிலங்களை விநியோகிக்க திட்டமிடப்பட்டுள்ளது.பொலிவிய அரசின் நில விநியோகத் திட்டத்தை எப்படியும் தடுத்துவிட வேண்டும் என்ற நோக்கோடு நிலமுதலைகள் “நில பாதுகாப்பு கமிட்டி” அமைத்துள்ளனர். இவர்கள் நிலமற்ற விவசாயிகளுக்கு எதிராக வன்முறைத் தாக்குதல்களைத் தொடுப் பதற்கும் தயாராகி வருகின்றனர்.மொரேல்° அடிப்படையில் கோக்கோ பயிரிடும் விவசாயிகள் இயக்கத்தின் தலைவர். மேலும், அவரது இயக்கமான “சோசலிசத்தை நோக்கி” (ஆடிஎநஅநவே வடிறயசன ளுடிஉயைடளைஅ - ஆடிஎiஅநைவேடி யட ளுடிஉயைடளைஅடி, ஆஹளு) என்ற கட்சியும் நிலச் சீர்திருத் தத்தை உறுதியாக மேற்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்து வருகிறது. முதற் கட்டமாக தரிசு நிலங்களை நிலமற்ற விவசாயி களுக்கு விநியோகிப்பதற்கான நடவடிக்கை துவங்கப் பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.மொத்தத்தில் லத்தீன் அமெரிக்க நாடுகளில் இடதுசாரி அலை வீசுவதோடு, கிராமப்புற மக்களின் விடிவெள்ளியாக திகழ்கிறது. இந்த நாடுகளில் மேற்கொள்ளப்படும் நிலச்சீர்திருத்த நடவடிக்கை, லத்தீன் அமெரிக்கா முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி யுள்ளது.
இது எதிர்காலத்தில் அந்த கண்டம் முழுவதையுமே மாற்றியமைக்கும் நடவடிக்கைக்கு கொண்டுச் செல்லும். உலகம் முழுவதும் இருக்கும் உழைப்பாளி மக்களுக்கும், இடதுசாரி எண்ணம் கொண்டவர்களுக்கும் லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் மாற்றங்கள் ஒரு ரசாயன மாற்றத்தை ஏற்படுத்துவ தோடு, அந்தந்த நாடுகளில் ஒரு இடதுசாரி, சோசலிச எண்ணத்தை கட்டமைப்பதில் மேலும் புது உத்வேகத்தை ஏற்படுத்தியுள்ளது.விவசாயிகள் தற்கொலையும், வங்க பஞ்சமும்இந்தியாவின் ஆத்மா கிராமப்புறத்தில் உள்ளது. இந்தியா பெரும் விவசாய நாடுகளில் ஒன்று. 70 சதவீத மக்கள் கிராமப்புறத்தை நம்பியே உள்ளனர். உலகமயமாக்கல், உலக வர்த்தக அமைப்பு டனான ஒப்பந்தம் போன்ற புதிய பொருளாதார கொள்கைகளால், இந்தியாவின் விவசாய கொள்கையில் பெரும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்த கொள்கைகள் யாரை வாழ்விப்பதற்காக என்ற கேள்வி பலமாக எழுந்துள்ளது. “பசுமைப்புரட்சி கண்ட இந்தியா” என்று பீற்றிக் கொண்ட நாட்டில்தான் தற்போது உலகிலேயே விவசாயிகள் தற்கொலை அதிகமாக நடைபெற்று வருகிறது.சமீபத்தில் பிரதமர் மன்மோகன் சிங் மகாராஷ்டிரத்தில் உள்ள விதர்பா மாவட்டத்திற்கு சென்று 3750 கோடி அளவிலான நிவாரணங்களை வழங்கியுள்ளார்.
பரிதாபம் என்னவென்றால், பிரதமர் ஒருபுறம் நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருக்கும் போதே, தற்கொலைகளும் சமகாலத்தில் நிகழ்ந்து கொண்டிருந்தது தான். மகாராஷ்டிரம், ஆந்திரா, கர்நாடகம், கேரளம், பஞ்சாப் என பல மாநிலங்களில் ஆண்டுக்கு 4000 விவசாயிகள் தற்கொலைக்கு உள்ளாகின்றனர். இந்த எண்ணிக்கை இதைவிட அதிகம் இருக்கும் என்று கூறப்படுகிறது.ஏன் இந்த நிலைமை?இந்திய ஆட்சியாளர்கள் கடந்த 20 ஆண்டு காலமாக அமெரிக்க மற்றும் மேற்கத்திய நாடுகளின் செல்லப்பிள்ளையாக மாறியதும், உலக வர்த்தக அமைப்பு மற்றும் உலகவங்கியின் கட்டளைக்கு அடிபணிந்து பன்னாட்டு முதலாளிகளுக்கு சேவகம் செய்யும் கொள்கையை கடைப்பிடித்ததன் விளைவுதான் இன்றைக்கு இந்திய விவசாயிகளை இந்த நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏற்றுமதியை நோக்கமாக கொண்ட வர்த்தக பயிர் (பருத்தி, சோயா...) உற்பத்தியில் ஈடுபடுமாறு விவசாயிகளை ஆசை காட்டி மோசம் செய்ததோடு, உள்நாட்டில் உற்பத்தியாகும் 800க்கும் மேற்பட்ட விவசாய பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்ய அனுமதித்தது போன்ற தவறான விவசாய கொள்கைகளால் இந்திய விவசாயிகள் ஓட்டாண்டியாக்கப்பட்டுள்ளனர்.குறிப்பாக, மகாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் மான்சாண்டோ என்கிற பன்னாட்டு நிறுவனங்களின் போல்கார்ட் பருத்தி விதைகளை பயன்படுத்தி பருத்தி விவசாயத்தில் ஈடுபட்டதும், உற்பத்தி செய்த விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்காததும், உரவிலை உயர்வு, மின்சார கட்டணம், தண்ணீரின்மை, கடன் சுமை, கந்து வட்டி என்று தொடர் சங்கிலியாக பருத்தி விவசாயிகள் கட்டுண்டு கிடக்கின்றனர். இதிலிருந்து மீள்வது எப்படி என்று வழி தெரியாத விவசாயிகள் தங்களுக்கான விடுதலை ஆயுதமாக தற்கொலையை தேர்ந் தெடுக்கின்றனர்.1987இல் ஆந்திராவில் மட்டும் 0.4 மில்லியன் ஹெக்டேரில் பருத்தி விவசாயம் மேற்கொள்ளப்பட்டது. 2005இல் இது 1.2 மில்லியன் ஹெக்டேர் பரப்பளவு விரிவடைந்துள்ளது.
அதாவது, வர்த்தகப் பயிர் உற்பத்தி எந்த அளவிற்கு விவசாயிகளை பொறியில் சிக்க வைத்துள்ளது என்பதை இந்த விவரம் காட்டுகிறது. மேலும் வர்த்தகப் பயிர் உற்பத்தியில் ஈடுபட்ட நிலங்கள் தற்போது வேறு எந்தவிதமான பாரம்பரிய நெல், கோதுமை போன்ற உணவுப் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத சூழலுக்கு தள்ளியுள்ளது. “பணப் பயிர்” (வர்த்தகப் பயிர்) என்ற சொல்லே ஒரு ஏமாற்றுதான். முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் இந்த சொல்லை வைத்து விவசாயிகளை ஏமாற்றுகிறார்கள். உணவுப் பாதுகாப்பு குறித்த உணர்வற்ற சுரண்டும் கூட்டத்திற்கு, விவசாயிகளை சுரண்ட இந்த ஏமாற்றுச் சொல் பயன்படுகிறது.மேற்கண்ட அனைத்து நடவடிக்கைகளையும் மிஞ்சும் வகையில் மன்மோகன் சிங் அரசு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, அந்நிய நாட்டில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங்கள் இந்திய நாட்டிற்குள் விவசாயம் செய்துக் கொள்வதற்கு 100 சதவீதம் அனுமதிக்கப்போவதாக அறிவித்துள்ளது. உள்நாட்டு நவீன பண்ணையார்களை சமாளிப்பதற்கே கடினமாக உள்ள சூழ்நிலையில், விவசாயத்தில் அந்நியரை அனுமதிப்பது என்பது இந்திய நாடே தற்கொலைப் பாதைக்கு செல்வதற்கு ஒப்பாகும். நிலவிநியோகம் குறித்து அதிகமான விழிப்புணர்வு ஏற்பட்டு வரும் நேரத்தில் கார்ப்பரேட் விவசாய முதலாளிகள் இந்திய கிராமப்புறத்தில் உள்ள ஒட்டுமொத்த நிலத்தையும் சுரண்டிச் செல்வதற்குத்தான் இந்த அறிவிப்பு பயன்படும்.இறக்குமதியாகும் உணவு தானியம்தற்போது மத்தியில் உள்ள மன்மோகன் சிங் அரசு 5 லட்சம் டன் கோதுமையை ஆ°திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்துள்ளது. இந்த உணவு தானிய இறக்குமதி குறித்து ஆட்சியாளர்கள் பல்வேறு நொண்டிச்சாக்குகளை கூறி வருகின்றனர். அதாவது, நம்முடைய உணவு தானிய கையிருப்பை சமப்படுத்துவதாக கூறுகின்றனர். அதுவும் இறக்குமதி செய்யப்பட்டுள்ள கோதுமையில் பூச்சுக் கொல்லி மருந்துகள் சாதாரண அளவைவிட கூடுதலாக இருப்பதாக நாடாளுமன்றத்திலேயே குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 70 சதவீதத்திற்கும் மேற்பட்ட கிராமப்புறத்தை கொண்ட ஒரு நாட்டில் தானிய இறக்குமதி என்ற கொள்கை எதை நோக்கிச் செல்லும் என்பதே நமது கேள்வி! நமது விவசாயம் திவாலாகி வருவதையும், உட்டோ (றுகூடீ) உடன்பாட்டின் அடிப்படையில் விவசாய பொருட்களை இறக்குமதி செய்யவும், நமது மார்க்கெட்டை பன்னாட்டு நிறுவனங்களுக்கு திறந்து விடும் மோசமான போக்கைத்தான் இது வெளிப்படுத்துகிறது. மேலும் நமது நாட்டு விளை பொருளான பருப்பு போன்றவற்றின் ஏற்றுமதிக்கு தடை விதித்து வருவதையும் கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.விவசாயத்துறையில் அந்நியர்களை ஈடுபட அனுமதித்தால் நம்நாட்டில் உற்பத்தி செய்து, அதை வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்து, அங்கிருந்து நாம் இறக்குமதி செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவோம். இத்தகைய ஆபத்துக்களை நமது பொருளாதார புலி சிதம்பரம் வகையறாக்களுக்கு தெரியாததல்ல; எல்லாம் ஏகாதிபத்திய - உலகவங்கியின் அடிமைத்தன விசுவாசம்தான் இத்தகைய செயல்பாடுகளில் அவர்களை தீவிரமாக ஈடுபடத் தூண்டுகிறது.கடந்த வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் 6 லட்சம் டன் உணவு தானியம் கையிருப்பில் உள்ளதாக கூறிக் கொண்டு, இது நம்முடைய கையிருப்பு தேவையை விட அதிகமாக இருக்கிறது என்று கூறி, பொது விநியோகத்திற்கு வழங்கப்படும் தொகையை விட மிகக் குறைவான அளவுக்கு வெளி நாடுகளுக்கு ஏற்றுமதி செய்தது.24 சதவீதம் பேர் வறுமைக்கோட்டிற்கு கீழே உள்ள நம் நாட்டில், ஒரு புறத்தில் பட்டினிச் சாவுகளும், விவசாயிகள் தற்கொலைகளும் நடைபெற்று வருவது மத்திய அரசு கடைப் பிடிக்கும் புதிய விவசாய கொள்கை நம் மக்களை வாழ்விக்காது என்பதை பட்டவர்த்தனமாக உணர்த்துகிறது.வங்கப் பஞ்சம் படிப்பினை!பிரிட்டிஷ் இந்தியாவில் 1943இல் வங்கத்தில் ஏற்பட்ட கடுமையான பஞ்சமும், அதனால் 50 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறப்புக்கும் யார் காரணம்? இதன் மூலம் இந்திய அரசு பெற்ற அனுபவம் என்ன? இது குறித்து ஜவஹர்லால் நேரு, தன்னுடைய கண்டுணர்ந்த இந்தியாவில் எழுதியவற்றை பார்ப்போம்:“அதிகாரிகளின் தொலைநோக்கின்மையும், அலட்சிய மனோபாவமும் போரின் பின் விளைவும்தான் இப்பஞ்சத் திற்கு காரணம். சாதாரணமான அறிவுடையவர்களாலேயே பஞ்சத்தின் அறிகுறியைக் கணிக்க முடிந்தது. உணவு நிலையைச் சரிவரக் கையாண்டிருந்தால், இத்தகைய பஞ்சத்தைத் தவிர்த்திருக்க முடியும். போரால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நாட்டிலும், போரால் விளையும் இத்தகைய பொருளாதார சிக்கலை, போர் தொடங்கும் முன்னரே கணித்துத் தயார் நிலையில் இருந்திருக்கிறார்கள். இந்தியாவில் போர் தொடங்கி மூன்றரை ஆண்டுகள் கழித்தே உணவுத்துறை துவக்கப்பட்டது.”மேலும், இந்தியாவில் உணவுப் பற்றாக்குறை 40 லட்சம் டன் என்று கணிக்கப்பட்ட சூழ்நிலையில், பிரிட்டிஷ் - இந்திய அரசு 10 லட்சம் டன் உணவுதானியத்தை ஏற்றுமதி செய்தது. விலை யேற்றம் 10 சதவீதத்திற்கும் அதிகமாக ஏறிக் கொண்டே சென்றது. மக்களின் வாங்கும் சக்தி முற்றிலும் பறிக்கப்பட்டு, உணவுக்காக கடுமையாக சுரண்டப்பட்டனர். பசியும், பட்டினியுமாக கிடந்த மக்கள் வாழ வழித்தெரியாமல் கடுமையான நோய்களுக்கு ஆளாகி, எலும்பு கூடுகளாய் - நடைபிணங்களாய் மாறி தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்களை பலிகொண்டது வங்கப் பஞ்சம். “ஒரு புறம் எந்த உணவுப் பொருட்களும் கிடைக்காததால் பஞ்சம் வந்ததோ, அந்த பொருட்களை விற்பனை செய்ததால் கிடைத்த கொள்ளை லாபத்தில் ஆளும் வர்க்கம் சுகம் கண்டு கொண்டிருந்தனர்.!”வங்கப் பஞ்சம் குறித்தும், அதனுடைய கொடுமைகள் குறித்தும், மக்களது துன்ப - துயரங்களை விளக்கியும் பங்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலைப் படித்தால் அதன் முழுமையான பரிணாமத்தை உணர முடியும்.மொத்தத்தில் அரசுகளின் தவறான உணவுக் கொள்கையும், விவசாய கொள்கையும் மக்களை பசி - பட்டினிச் சாவுகளுக்கு கொண்டுச் செல்லும் என்பதைத்தான் வங்கப் பஞ்சம் உணர்த்து கிறது. இதன் பின்னணியில் தற்போது இந்திய அரசின் செயல் பாடுகளை ஒப்பு நோக்கும் போது, இந்திய அரசின் விவசாய கொள்கை எதை நோக்கிச் செல்கிறது என்பதை உணரலாம்.தற்போது மேற்குவங்கத்தில் இந்த பஞ்சத்தின் அனுபவங்களை உணர்ந்த இடதுசாரி அரசு செய்த நிலச்சீர்திருத்தத்தின் விளைவாக 14 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் விநியோகிக்கப்பட்டு 26 லட்சம் நிலமற்ற விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 56 சதவீதம் பேர் தலித் மற்றும் பழங்குடியின மக்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவில் ஒட்டுமொத்தமாக மேற்கொள்ளப்பட்ட நில விநியோகத்தில் மேற்குவங்கத்தில் மட்டும் வழங்கப்பட்டது 20 சதவீதம் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் விளைவாக மேற்கு வங்கத்தில் உணவு உற்பத்தி மிக கணிசமான அளவுக்கு பெருகி யிருக்கிறது. இதேபோல் கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளது.தமிழகத்தில் நில விநியோகம்சமீபத்தில் நடந்து முடிந்த தமிழக தேர்தலில் வெற்றி பெற்ற திமுக தனது தேர்தல் அறிக்கையில் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலங்களை இரண்டு ஏக்கர் விதம் 26 லட்சம் குடும்பங்களுக்கு விநியோகம் செய்யப்போவதாக அறிவித்துள்ளது. திமுக அரசின் நில விநியோக அறிவிப்பை மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சி வரவேற்றுள்ளது. இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றி பெறச் செய்வதில் மார்க் சி°ட்டுகளுக்கு மிக முக்கியமான பங்குள்ளது. கிராமப்புறத்தில் உள்ள நிலமற்ற விவசாய தொழிலாளர்களை அணிதிரட்டி, அரசுக்கு சொந்தமான தரிசு நிலங்களை அடையாளம் காணுவதோடு, அதற்காக எழுச்சிமிக்க வலுவான விவசாய இயக்கத்தை நடத்துவதன் மூலம்தான் இந்த நில விநியோக நடவடிக்கையை வெற்றிகரமாக பூர்த்தி செய்ய முடியும்.கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் அம்மையார் ஜெயலலிதா இந்த 55 லட்சம் ஏக்கர் நிலத்தை பெரும் கார்ப்பரேட் நிறுவனங் களுக்கு தாரைவார்க்க திட்டமிட்டிருந்தார். ஆனால், இப்போது கூறுகிறார் 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலம் தமிழகத்தில் இல்லவே இல்லையென்று. ஜெயலலிதாக்களின் விசுவாசம் நிலமற்ற கூலி விவசாயிகள் மீதல்ல; கார்ப்பரேட் பண்ணைகளிடத்தில்தான்.மேலும், தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டத்தை அமலாக்குவதில் திமுக அரசு உரிய - தீவிர நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். இதைத்தான் இடதுசாரிகளும், மக்களும் விரும்புகின்றனர். நிலச்சீர்திருத்த சட்ட அமலாக்கம் குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் 26வது மாநில மாநாடு முன்வைத்த அறிக்கையில் உள்ள பகுதியை இங்கே சுட்டிக்காட்டுவது பொருத்தமாக இருக்கும்.“தமிழகத்தில் நிலச்சீர்திருத்த சட்டம் என்பது முற்றிலும் முடமாக்கப்பட்ட நிலையிலேயே இருக்கிறது. உச்சவரம்பு சட்டத்தின் மூலம் 20 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக கிடைக்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், சட்டம் நிறைவேற்றப்பட்டு 40 ஆண்டுகளுக்கு பின்னரும் கையகப்படுத்தியுள்ள நிலம் 1.9 லட்சம் ஏக்கர் எனவும் அரசு தெரிவித்துள்ளது.”அதே போல்,“தலித் மக்களுக்கென்றே ஒதுக்கப்பட்ட சுமார் 3 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலம் அம்மக்களிடமிருந்து அபகரிக்கப்பட்டு பலருடைய அனுபவத்தில் உள்ளது. இந்நிலங்களை மீட்டு தலித்துக்கள் வசம் ஒப்படைக்க சட்டரீதியான தடைகள் ஏதுமில்லை”தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மேற்கண்ட கூற்று, தமிழக நிலச்சீர்திருத்தத்தில் செய்ய வேண்டிய இலக்கினை மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளது. தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்துள்ளபடி 55 லட்சம் ஏக்கர் தரிசு நிலத்தை விநியோகிப்பதோடு நிற்காமல், நில உச்சவரம்பு சட்டத்தில் உள்ள ஓட்டைகளை அடைத்து, நிலச்சீர்திருத்த நோக்கிலான நிலஉச்சரம்பை கொண்டு வரவேண்டும். காமராஜர் ஆட்சிகாலத்தில் 30 °டாண்டர்டு ஏக்கர் என்று இருந்ததை கலைஞர் ஆட்சிக்காலத்தில் 15 °டாண்டர்டு ஏக்கராக மாற்றப் பட்டது. இருப்பினும் இந்த உச்சவரம்பு சட்டத்தில் நிலவுடை மையாளர்களது நிலங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்து நபர்களின் பெயர்களிலும், பினாமிகள் பெயர்களிலும் மாற்றம் செய்யப்பட்டு அனுபவித்து வரப்படுகிறது. அதோடு விவசாய நிலங்கள் கரும்பு விளைச்சல் நிலம், பழத்தோட்டங்கள், பால்பண்ணைகள், டிர°டுகள், தர்ம °தாபனங்கள் என்று பல்வேறு வடிவங்களில் சட்டத்தில் உள்ள ஓட்டைகளை பயன்படுத்தி அனுபவித்து வருகின்றனர். இதனாலேயே இந்தச் சட்டம் ‘உச்சரம்பா, மிச்ச வரம்பா’ என்ற கேலிக்கும் இட்டுச் சென்றது. எனவே கடந்தகால அனுபவத்தை கணக்கில்கொண்டு நிலஉச்சவரம்பு சட்டத்தை முழுமையாக அமலாக்கி நிலமற்ற விவசாய தொழிலாளர்களது வாழ்வில் அடிப்படையான மாற்றத்தை கொண்டுவருவதன் மூலம் தமிழக வரலாற்றில் புதிய சகாப்தத்தை ஏற்படுத்திட முடியும். இத்தகைய அடிப்படையான விஷயங்களுக்கு மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியும், இடதுசாரி - ஜனநாயக சக்திகளும் களத்தில் உறுதியாக துணை நிற்கும்.நிலம் - உணவு - வேலைக்கான இயக்கம்ஜூன் 8 - 10, 2006 நடந்து முடிந்த மார்க்சி°ட் கம்யூனி°ட் கட்சியின் மத்திய கமிட்டி ஆக°ட் மாதத்தில் உணவு - நிலம் - வேலை என்ற மூன்று முழக்கத்தை முன்வைத்து நாடு தழுவிய இயக்கம் நடத்துவதற்கு அறைகூவல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.நிலச்சீர்திருத்த நடவடிக்கை என்பது கிராமப்புற மக்களின் வேலைவாய்ப்பு, உணவு தேவை போன்றவற்றை பூர்த்தி செய்யும் இணைப்பு சங்கிலியாக செயல்படும் மிக முக்கியமான நடவடிக்கை! லத்தீன் அமெரிக்காவில் நடைபெறும் நிலச்சீர்திருத்த நடவடிக்கையும், இந்தியாவில் மேற்குவங்கம் - கேரளத்தில் மேற்கொள்ளப்பட்ட நிலச்சீர்திருத்த நடவடிக்கையும் நாடு முழுவதும் உள்ள விவசாய தொழிலாளர் களுக்கும், கிராமப்புற விவசாயிகளுக்கும் நம்பிக்கையூட்டும் நிகழ்வாகும்.“நிலச்சீர்திருத்தம்” உலக அரசியல் அரங்கின் முக்கிய அஜண்டாவாக மாறி வருவதைத்தான் மேற்கண்ட லத்தீன் அமெரிக்க அனுபவங்கள் உணர்த்துகின்றன. இந்திய அரசியலிலும் நிலச்சீர்திருத்த முழக்கத்தை ஒரு பௌதீக சக்தியாக மாற்றுவது மார்க்சி°ட்டுகளின் வரலாற்று கடமையாகிறது.
தகவல் ஆதாரம்
http://www.venezuelanalysis.com
Rural Development Institute, Land Reform in the 21st Century
http://www.rdiland.org
நிலப்பிரபுத்துவத்தை ஒழிக்க நாம் காட்டும் பாதை,
தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வெளியீடு - 1974.

August 05, 2006

ஏகாதிபத்திய குழந்தைகள் ஏற்படுத்திய அழிவு!

அல்கொய்தா, பின்லேடன், பயங்கரவாதம் ஆகிய சொற்கள் லண்டனையும், வாஷிங்டனையும் மட்டுமின்றி உலக மக்களையே அச்சத்தின் பிடியில் தள்ளியுள்ளன. பயங்கரவாத பிசாசை ஓட்ட வந்த மந்திரவாதியாக அமெரிக்காவும், இங்கிலாந்தும் புனித கூட்டு சேர்ந்து ஈராக்கையும், ஆப்கானிஸ்தானையும் ஏப்பம் விட்டு விட்டன. தற்போது தன்னுடைய சிஷ்யப் பிள்ளை இசுரேலை ஏவி விட்டு பாலஸ்தீனத்தையும், லெபனானையும் சின்னாபின்னமாக்கி வருகின்றனர். அடுத்து ஈரான், சிரியா, வடகொரியா, கியூபா என்று பெரும் பட்டியலை வைத்துள்ளது அமெரிக்கா. ஜார்ஜ் புஷ்தான் இன்றைக்கு உலக ஜனநாயக காவலராக புனிதவேடமிட்டுள்ளார். அமெரிக்கா இன்றைக்கு மட்டுமல்ல அது தோன்றிய நாள் முதலே பூமி பந்திற்கே ஆபத்தை உருவாக்கி வருகிறது. எனவே அமெரிக்காவின் புனித வேடத்தை இந்நாளில் அலச வேண்டியது வரலாற்று கடமையாகிறது.


பயங்கரவாத மந்திரத்தை ஓயாமல் ஓதிக் கொண்டிருக்கும் அமெரிக்கா, 60 ஆண்டுகளுக்கு முன் ஜப்பானிய நகரங்களான ஹிரோஷிமா, நாகாசாகி மீது அணு குண்டை வீசி 3,50,000 மக்களை கொன்று குவித்த ஏகாதிபத்திய பயங்கரவாதத்தை வரலாற்றின் பக்கங்களில் இருந்து அகற்றி விட முடியாது.

ஹிட்லரின் நாஜிப்படைகள் சரணடைந்து இரண்டாம் உலகப் போர் முடிவுக்கு வந்த நிலையில், ஜப்பானும் போரை முடிவுக்கு கொண்டு வர இசைந்து விட்ட பின்னணியில் 1945 ஆகஸ்ட் 6 அன்று அமெரிக்கா எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய ஹிரோஷிமா நகரத்தின் மீது காலை 8.15 மணியளவில் அமெரிக்க விமானப் படையின் “பி-29 விமானம்” சுமந்து வந்த “லிட்டில் பாய்” Little Boy என்று பெயரிடப்பட்ட யுரேனிய அணுகுண்டை நகரத்தின் மையப்பகுதியில் வீசியது. அணுகுண்டு வீசிய சில மணித்துளிகளிலேயே 80,000த்திற்கும் அதிகமான மக்கள் எரிந்து சாம்பலாயினர். பல லட்சக்கணக்கான மக்கள் என்ன நடைபெறுகிறது என்று அறிவதற்கு முன்பே தங்களது தோல்கள் கழண்டு விழுவதையும், கை, கால், முகம் என அனைத்தும் சிதைந்து உருக்குலைந்து போவதைக்கூட உணர முடியாதவர்களாயினர். அணுகுண்டு வீசப்பட்டதால் ஏற்படுத்திய வெப்பம் 5000 டிகிரி செல்ஸியசை விட மிக அதிகம். தொடர்ச்சியாக ஏற்படுத்திய அணுக்கதிர் வீச்சு நகரத்தின் புல், பூண்டுகளையும், காற்று, தண்ணீர் என அனைத்தையும் உருத்தெரியாமல் சிதைத்து விட்டது.

“லிட்டில் பாய்” ஏற்படுத்திய தாக்கத்தில் திருப்தியடையாத அமெரிக்கா மூன்று நாள் கழித்து ஆகஸ்ட் 9 அன்று “பேட் பாய்” Fat Boy (குண்டு பையன்) என்று பெயரிடப்பட்ட புளுட்டோனிய அணுக்குண்டை “நாகாசாகி” நகரின் மீது வீசியது. அங்கும் ஹிரோஷிமாவில் ஏற்பட்ட அதே நிலைமை குண்டு வீசப்பட்ட கண்ணிமைக்கும் நேரத்தில் 40,000 பேரை மோட்சத்திற்கு அனுப்பியது அமெரிக்கா.

“ஈராக்கில் பேரழிவு மிக்க ஆயுதங்கள் இல்லாமல் போனாலும், அமெரிக்கா ஈராக் மீது தொடுக்கப்பட்ட போர் நியாயமானதே” என்று வெட்கமில்லாமல் கூறிக் கொள்ளும் இதே அமெரிக்காதான். ஜப்பான் மீதும் எந்தவிதமான போர்கால நியதிகள் துளியுமின்றி, சாதாரண அப்பாவி மக்கள் வசிக்கக்கூடிய பெரு நகரங்கள் மீது, எந்தவிதமான முன்னறிவிப்பும் இன்றி, கோழைத்தனமான தாக்குதலை நடத்தியது.

இது குறித்து அமெரிக்க பல்கலைக் கழகத்தின் நியூக்ளியர் கல்வி மைய இயக்குனர் பீட்டர் குஸ்னிக் கூறும் போது, “அமெரிக்க ஜனாதிபதி ஹாரி ட்ரூமனின் இந்த செயல், போர்க்கால குற்றம் மட்டுமல்ல; மனித குலத்திற்கே எதிரான பெருங்குற்றமாகும்” என்று தன்னுடைய மனக் கொதிப்பை வெளிப்படுத்தினார்.

உண்மையில், அமெரிக்காவின் இந்த நீசத்தனமான செயலுக்கு அடிப்படை காரணம், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கட்டுக்குள் உலகம் இருக்க வேண்டும் என்ற மேலாதிக்க உணர்வு, கம்யூனிஸ்ட் இயக்கம் மேற்கொண்டு பரவுமானால் அணுகுண்டு வீசவும் தயங்க மாட்டோம் என்று எச்சரிக்கவும் ட்ரூமன் விரும்பினார். இரண்டாம் உலகப் போர் முடிந்த பிறகும் கொரியா, வியட்நாம், பிலிப்பைன்° போன்ற நாடுகளில் அமெரிக்க ராணுவ முகாமாக்கிட அமெரிக்க ஏகாதிபத்தியம் நடத்திய யுத்தத்தை உலகமறியும்; யுத்த சீரழிவுகளில் மாட்டிக் கொண்ட சோவியத் யூனியன் புனர் நிர்மானம் செய்ய மிகவும் சிரமப்பட்டது. பின்னால் உருவான தவறான போக்குகளும் சேர்ந்து சோவியத் பின்னடைவை வேகப்படுத்தி விட்டன.

சோசலிச சோவியத் யூனியனின் பின்னடைவுக்கு பின்னால், இன்றைக்கு தானே நவீன இளவரசன் என வலம் வந்துக் கொண்டிருக்கும் அமெரிக்கா, உலகம் முழுவதும் நூற்றுக்கணக்கான இடங்களில் இராணுவத் தளங்களை செயல்படுத்திக் கொண்டுள்ள அமெரிக்காவின் ஆண்டு இராணுவச் செலவு எவ்வளவுத் தெரியுமா? 455 பில்லியன் டாலர்; இது மட்டுமின்றி ஈராக்கையும் - ஆப்கானி°தானையும் ஒடுக்குவதற்கு தனியாக 82 பில்லியன் டாலர் செலவிடுகிறது. உலகம் முழுவதும் அதனுடைய முதலீடுகளும், பங்கு சந்தை விளையாட்டுக்களும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு ராணுவச் செலவு செய்ய பணத்தை குவிக்கிறது.

தன்னைத் தவிர வேறு யாரும் அணு ஆயுதங்களை பயன்படுத்தக்கூடாது, என்பதோடு மின்சார உற்பத்தி போன்றவற்றிற்கு கூட அணு சக்தியை பயன்படுத்துவதை ஆந்தை கண் கொண்டு பார்க்கும் அமெரிக்கா, “புதிய அமெரிக்க நூற்றாண்டு திட்டத்தை”
(PNAC - The Project for the New American Century) விரைந்து செயல்படுத்தி வருகிறது. இராணுவ ரீதியிலும், பொருளாதார ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உலக நாடுகளை தன்னுடைய காலுக்கடியில் கொண்டு வருவதே இதன் திட்டம்.

ஏகாதிபத்தியத்தின் மாயவலைகளாக செயல்படும் உலகவங்கி, ஐ.எம்.எப். உலக வர்த்தக ஸ்தாபனம் மற்றும் “பயங்கரவாதத்திற்கு எதிரான உலகளாவிய போர்” என்ற போர்வையில் அரசியல் மற்றும் இராணுவ ஒப்பந்தங்கள் மூலம் ஆப்பிரிக்கா, ஆசியா, ஐரோப்பா என பூமிப் பந்து முழுவதும் தனது கழுகுக் கால்களை பரப்பும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கு எதிராகவும், நாடுபிடிக்கும் போர் வெறிக்கு எதிராகவும், அணு ஆயுதங்களுக்கு எதிராகவும் மக்களை விழிப்புறச் செய்திடுவதே இன்றைய தேவையும், கடமையுமாகும்.

August 03, 2006

உறவுகளின் வேர்!


உறவுகள் மிகப் புனிதமானவை. மனிதகுலம் அறிவு வளர்ச்சிப் பெற்றதிலிருந்து உறவுகள் ஒவ்வொரு சமூகத்திற்கும் ஏற்ப வரையறுக்கப்பட்டு, கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. அதே சமயம், புராதன காலத்தில் இருந்த மனித உறவுகளுக்கும், தற்போதைய நவீன காலத்தில் இருக்கும் மனித உறவுகளுக்கும் இடையில் பெரும் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளது. சமூக வளர்ச்சிப் போக்கிற்கேற்ப இந்த உறவுகள் தொடர்ந்து மாறுதலுக்கு உட்பட்டு வருகிறது என்பது வரலாற்று உண்மை. இந்த மாறுதல் உன்னதமான நிலையை நோக்கி பரிணாமடையும்.



உறவுகள் என்பது குறித்து ‘கிரியா தமிழ் பேரகராதி’ இவ்வாறு வர்ணிக்கிறது. “தாய்வழியாகவோ, தந்தை வழியாகவோ அல்லது திருமண உறவுகள் மூலமாகவே ஏற்படுவதே உறவுகள்” எனவே இந்த பொருளில் ‘உறவுகள்’ குறித்து விவாதிப்பதுதான் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். மேலும் நண்பர்களை உறவாக நம் தமிழ் சமூகத்தில் கருதுவதில்லை. இங்கே இரத்த உறவுகள்தான் பிரதானப்படுத்தப்படுகிறது.



குறிப்பாக, நம் தமிழ் சமூகத்திலும், இந்திய நிலவுடைமை சமூகத்திலும் இரத்த உறவுகள் என்பது 99 சதவீதம் ஜாதிய ரீதியான உறவாகத்தான் இருக்கிறது. அதாவது, இந்த ஜாதிய சமூக அமைப்பை நீடிக்கும் நிலவுடைமை சிந்தனைக் கொண்ட ஒரு உறவாகத்தான் இது அமைந்துள்ளது. அதே சமயம் மேலை நாடுகளில், ஐரோப்பிய நாடுகளில் இத்தகைய கட்டமைப்பு இல்லை என்பது இங்கே சுட்ட வேண்டியுள்ளது.




சரி! நம்முடைய தமிழ் சமூகத்தில் தாய், தந்தை, சகோதரன், சகோதரி, கணவன், மனைவி, மாமன், கொழுந்தியா, சித்தப்பா, பெரியப்பா என பலவாறு உறவுகள் மலர்கிறது. உண்மையில் இந்த உறவுகள் எதை ஆதாரமாக கொண்டு இயங்குகிறது? அதனுடைய மூல வேர் எது? என்பதுதான் என்னுடைய பிரதான கேள்வி!



நாள்தோறும் செய்தித்தாள்களில் உறவுகள் குறித்து பல்வேறு செய்திகள் வருகின்றன.




  • சொத்து தகராறு அண்ணனை கொன்ற தம்பி தலைமறைவு!


  • வேலை வாங்கித் தராததால் தந்தை கொலை! மகன் வெறிச் செயல்!!


  • தந்தையின் பிணத்தை வீட்டுக்குள் அனுமதிக்க மறுப்பு! பாகப்பிரிவினையில் வஞ்சகம் செய்ததால் மகன் வீட்டைப் பூட்டிச் சென்றார்!


  • கணவனை கொன்ற மனைவி!


  • மனைவியை கொலை செய்த கணவன்!



இவ்வாறு பல கோணங்களில் பல செய்திகளை நீங்களும் படித்திருப்பீர்கள்...



உறவு என்பது மிகவும் மென்மையானது. அது எல்லோருக்கும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என்பதில்லை. எனவே, உறவு என்பது இடிக்க முடியாத சுவரும் அல்ல! தகர்க்க முடியாத கோட்டையுமல்ல!!



மொத்தத்தில் இந்த உறவுகள் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். அந்த எதிர்பார்ப்பு அல்லது பலன் கிடைக்காத போது உறவுகள் முறிகிறது. முறிக்கப்படுகிறது. பல நேரங்களில் இது கொலைகளிலும் சென்று முடிகிறது.



இவ்வாறு எழுதுவதால் பலருக்கு முகம் சுளிப்பு வரலாம். இருப்பினும் உறவுகள் குறித்த ஒரு அலசலை இத்தகைய கோணத்தில் செய்யாமல் இருந்தால், அதில் தவறிழைத்து விடுவோம் என்பதற்காகத்தான் இந்த கோணத்தை எடுத்துக் கொண்டுள்ளேன்.



புராதன பொதுவுடைமை சமூகம் என்று அழைக்கப்பட்ட மனித குலத்தின் ஆரம்பகால சமூகத்தில் உறவுகளே இருந்ததில்லை. மனிதர்களில் யாரும், யாருக்கும் வித்தியாசமானவர்களில்லை. ஏன் தாய் - மகன் உறவு கூட மலரவில்லை என்பது குறிப்பிடவேண்டியுள்ளது.



பின்னர் இந்த சமூகம் ஆண்டான், அடிமை சமூகமாக மாறியபோது இந்த உறவு முறை அடிமைக்கும், அடிமைகளை ஆளுபவருக்குமான உறவாக மாறியது. இங்கே அடிமைகள் ஒரு சமூகமாகவும், ஆண்டைகள் ஒரு சமூகமாகவும் இருந்தனர். இவர்களுக்கு உள்ள உறவுகளும் அவ்வறே இருந்தன. அப்போது மாமன், மைத்துனி உறவெல்லாம் ஏற்படவில்லை.



இந்த சமூகமும் மாற்றமடைந்து நிலவுடைமை சமூகமாக மாறியபோது, நிலத்தை உடமையாக வைத்து உறவுகள் மலர்ந்தது. அதாவது, தங்களுடைய நிலம் யாருக்கும் அல்லது யாருடைய கைகளுக்கும் சென்று விடக்கூடாது; அந்த குடும்பத்திற்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஆணாதிக்க சமூக உறவு ஏற்படுத்தப்பட்டது. இந்த சமூகத்தில் நிலமே உறவை தீர்மானிக்கும் பிரதான கருவியாக மாறியது. இந்த சமூகத்தில்தான் நாம் தற்போது அனுபவித்துக் கொண்டிருக்கும் உறவுகள் மலர்ந்தன. சொத்து கைமாறாமல் இருப்பதற்காகத்தான் இந்த ஜாதிய சங்கிலியும் மனிதர்கள் மீது பூட்டப்பட்டது.




அடுத்து, முதலாளித்துவ சமூகம்: இச்சமூகத்தில் உறவுகள் சுதந்திரமானதாக மாறியது. இந்த முதலாளித்துவ அமைப்பு இந்தியாவில் இன்னமும் முழுமையாக மலரவில்லை. எனவே இங்கே இரண்டும் கெட்டான் உறவுகள்தான் இன்னமும் நீடிக்கிறது. முதலாளித்துவ சமூகத்தில் ஜாதிகளைக் கடந்த உறவுகள் மலர்ந்திருக்க வேண்டும். ஆனால், மலரவில்லை. அதே போல் இங்கே மனிதர்களுக்கு இடையிலான உறவுகள் என்பது, ‘பணத்தை பிரதானமாக’ வைத்துதான். எனவேதான் இந்த சமூகத்தில் உறவுகள் வெறும் பண உறவாய் மாறிப்போய் உள்ளது. பணமில்லாத அடித்தட்டு மக்களிடையே இந்த உறவுகள் காலாவதியாகிப்போய் விட்டது. அல்லது காலாவதியாகிக் கொண்டிருக்கிறது. அதே சமயம் எங்கே பணம் இருக்கிறதோ அங்கேதான் இந்த உறவுகள் நிலைநாட்டப்படுகிறது. பணம் இல்லாதவன் பிணத்திற்கு சமமாக மதிக்கப்படுகிறான். ஒரே குடும்பத்தில் அண்ணன் தம்பிகள், சகோதர, சகோதரிகள் என யாராக இருந்தாலும் பணம்தான் பெரும்பகுதி மக்களுக்கு உறவை தீர்மானிக்கும் கருவியாக உள்ளது.




இதைத்தான் காரல் மார்க்ஸ் தன்னுடைய கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையிலேயே மிகத் தெளிவாக கூறியிருக்கிறார்.






“இன்றைய குடும்பம், பூர்ஷ்வா குடும்பம், எதை அஸ்திவாரமாகக் கொண்டிருக்கிறது? மூலதனத்தை; தனிநபரின் லாபத்தை. இத்தகைய குடும்பம், பூர்ண வளர்ச்சி அடைந்த வடிவத்தில் பூர்ஷ்வாக்கள் மத்தியில் மட்டுமே இருக்கிறது. ஆனால் இத்தகைய நிலைமைக்கு அனுபந்தமாக நாம் காண்பதென்ன? பாட்டாளிகள் மத்தியில், அநேகமாக, குடும்பம் இல்லாமலிருப்பதும் வெளிப்படையான விபச்சாரமும்தாம்.”




“பூர்ஷ்வா குடும்பத்தின் அனுபந்தம் மறையும்பொழுது, பூர்ஷ்வா குடும்பம் இயல்பாகவே மறைந்து விடும்; மூலதனம் மறையும் பொழுது இரண்டும் மறைந்து விடும்”



எனவே, நாம் விரும்புகிற புனிதமான உறவுகள் இன்றைக்கு இல்லை என்பதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் புரிந்து கொள்ள முடியும்.




மனித சமூகத்தில் ஒரு மனிதன், இன்னொரு மனிதனை புரிந்து கொண்டு “இயnசு பிரான் கூறுகிறாரே அதுபோல, அதாவது, நீ உன்னைப்போல் பிறரை நேசி” என்ற உறவு உண்மையில் மலர வேண்டும் என்றால், பணத்தை - சுரண்டலை அடிப்படையாக கொண்ட இந்த சமூகத்தை மாற்றியமைப்பதன் மூலம்தான் உண்மையான உறவுகளை நம்முடைய சமூகம் பெற்றிடும். எனவே, இந்த போலி உறவுக்கு முடிவு கட்டுவது என்பது இந்த நிலப்பிரபுத்துவ - முதலாளித்துவ சமூகத்தை தூக்கியெறிவதோடு பிணைக்கப்பட்டுள்ளது. இந்த கடமையை நிறைவேற்றுவதே, தோழமையான உறவுக்கு உரமூட்டும், உண்மையான உறவுக் கடமையாகும்.

August 01, 2006

கலாச்சாரம்-1 வழியனுப்புதல்

தமிழகத்தில் பல்வேறு ஜாதி, சமயத்தில் உள்ள மக்களிடத்தில் பல்வேறு கலாச்சாரங்கள் நிலவுகின்றன. குறிப்பாக கிராமப்புறங்கள் கலாச்சாரத்தை நீடிக்கச் செய்திடும் மையங்களாக திகழ்கிறது. தமிழக கிராமப்புறங்களில் பின்பற்றப்படும் கலாச்சாரங்களில் முற்போக்கானதும், பிற்போக்கானதும் கலந்து நிலவுகிறது. மொத்தத்தில் பல்வேறுபட்ட மக்களின் கலாச்சார உறவுகளையும், நிகழ்ச்சிகளையும் வாய்ப்பு கிடைக்கும் போது தொகுப்பது பயனுள்ளதாக இருக்கும். இது நாம் வாழும் சமூகத்தை புரிந்து கொள்வதற்கு உதவியாக இருப்பதோடு, இதில் முற்போக்கானதை மேலும் செழுமைப்படுத்திடவும், பிற்போக்கானதை அகற்றி, அந்த இடத்தில் புதிய கலாச்சார விதைகளை விதைத்திடவும் பயன்படும் என்ற அடிப்படையில் இதனை பதிவு செய்யலாம் என கருதியுள்ளேன். அதன் ஒரு பகுதியாக மாமல்லபுரத்திற்கு அருகில் உள்ள பெரிய நெம்மேலி என்ற கிராமத்தில் உள்ள ஒரு குறிப்பிட்ட ஜாதியினர் பின்பற்றும் கலாச்சாரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.


(வீட்டில் சுமங்கலிப் பெண் ஒருவர் இறந்து விட்டால், அவருக்கு செய்யப்படும் சடங்கு குறித்து இங்கே விவரிக்கப்படுகிறது. இது ஒரு வித்தியாசமான - வியப்பூட்டும் - சிலிக்க வைக்கும் அனுபவ நிகழ்வு என்றால் மிகையாகாது.)

வழக்கம் போல் இறந்தவர்கள் வீட்டில் 16வது நாள் ஈமகாரியங்கள் நிறைவேற்றப்படுகிறது. இந்த ஈம காரியங்களில் பங்காளிகளாக இருக்கும் ஆண்களுக்குத்தான் முக்கியத்துவம் தரப்படுகிறது. இறந்த சுமங்கலிப் பெண் வீட்டில் நடைபெறும் ஈமகாரியத்தின் ஒரு பகுதியாக, இறுதியில், அந்த வீட்டில் உள்ள ஐந்து உறவுக்கார பெண்களை அழைத்து, இரண்டு முறங்களில் ஒரு சுமங்கலிப் பெண் எதையெதையல்லாம் பயன்படுத்துவாரோ, அதையெல்லாம் வைக்கின்றனர். முதலில் இரண்டு முறங்களுக்கும் அந்த ஐந்து பெண்களால் மஞ்சள் பூசப்பட்டு, குங்குமம் வைக்கப்படுகிறது, பிறகு அதற்கு பூக்களும் சூடப்படுகிறது. இவ்வாறு அலங்கரிப்பட்ட அந்த முறங்களில் சுமங்கலிப் பெண் பயன்படுத்தும் புடவை, ஜாக்கெட், மஞ்சள், குங்குமம், பவுடர், வளையல், கண்ணாடி, மஞ்சளுடன் கூடிய தாலி கயிறு மற்றும் பணம் (ரூ. 100 முதல்...) போன்ற பொருட்கள் வைக்கப்படுகிறது.


இவ்வாறு தயார் செய்யப்பட்ட பொருட்களைக் கொண்ட முறத்தினை உறவுக்காரர் அல்லாத ஒரு சுமங்கலிப் பெண்ணிடம் கொடுக்கின்றனர். பொதுவாக இதுபோன்ற சடங்குகளில் அடித்தட்டு பெண்கள் கூட கலந்து கொள்ள அஞ்சுவார்கள் (அடித்தட்டு மக்கள் கூட கலந்து கொள்வதில்லை). எனவே, இந்த சடங்குகளில் பிராமண வகுப்பைச் சார்ந்த சுமங்கலி பெண்களைத்தான் பயன்படுத்துகிறார்கள். (இவர் அந்த சமூகத்தில் ஏழையாக இருப்பதால் - குறைந்தபட்சம் ரூ. 100 அல்லது 200 கிடைக்குமே என்பதற்காககத்தான் கலந்து கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.)அதாவது, வெளியில் இருந்து அழைத்து வரப்படும் இந்த பெண்ணை இறந்து விட்ட சுமங்கலிப் பெண் போல் பாவிக்கிறார்கள். இறந்த பெண்ணின் பெயரை வைத்து இவரை அழைப்பார்கள். அப்போது இந்த சடங்கில் கலந்து கொள்ள வரும் பெண்ணுக்கு நூற்றுக்கணக்கான பெண்கள் - ஆண்கள் சுற்றி இருக்கையில் அவரை மையத்தில் உட்கார வைத்து, அவருக்கு மஞ்சள், குங்குமம், பூச்சூடி, கண்ணாடி வளையல்கள் அணிவிக்கப்படுகிறது. இந்த வளையல் அணியும் போது அதை மிக பக்குவமாக அணிகிறார்கள்; உடைந்துவிடக்கூடாதாம், பிறகு அவரிடம் தாலியை கொடுத்து கட்டிக் கொள்ளச் சொல்கிறார்கள். அவரது கழுத்தில் ஏற்கனவே அவரது கணவனால் கட்டப்பட்ட தாலியும் இருந்தது குறிப்பிடவேண்டிய அம்சம். (ஒரே நேரத்தில் இரு தாலிகள்) இந்த சடங்கு முடிந்ததும் அவரிடம் தயாராக வைக்கப்பட்டுள்ள இரண்டு முறத்தில் உள்ள பொருட்களை, முறத்தோடு சேர்த்து கொடுத்து வழியனுப்புகிறார்கள். இந்த பொருட்களை வாங்கிக் கொண்ட பெண் திரும்பிப் பார்க்காமல் செல்ல வேண்டும். அப்படிச் சென்றுக் கொண்டிருக்கும் அந்த பெண்ணை மீண்டும் இறந்தவர் பெயரைக் சொல்லி மூன்று முறை உரக்க அழைப்பார்கள். அவர் திரும்பிப் பார்க்காமல் செல்வார்.
குறிப்பு : இந்த சடங்கு உணர்த்துவது என்னவென்றால், இறந்த சுமங்கலிப் பெண்ணுக்கு அவர் வீட்டிலிருந்து எந்தவிதமான குறையும் வைக்காமல் நிரந்தரமாக வழியனுப்பி வைக்கப்படுகிறார். அவருக்கு செய்ய வேண்டிய அல்லது கொடுக்க வேண்டிய அனைத்தும் கொடுக்கப்பட்டு விட்டதாக இங்கே கருதப்படுகிறது. இவ்வாறு நிரந்தரமாக வழியனுப்பியதோடு, அவருக்கும் அந்த வீட்டுக்கும் உள்ள மொத்த உறவும் துண்டிக்கப்படுவதாக உணர்த்தப்படுகிறது.


இந்த சடங்கு நிகழ்த்தும் போது ஒரு உணர்ச்சி வயப்பட்ட நிலை நீடிக்கிறது. இதில் பங்கேற்கும் ஐந்து பெண்களின் மனநிலையில் பயத்துடன் கூடிய சிலிர்ப்புணர்வு தூண்டப்படுகிறது.அதேபோல் இதில் நூற்றுக்கணக்காணோருக்கு மத்தியில் இந்த கிராமத்தோடோ, அல்லது மக்களோடா பரிட்சயமில்லாத சுமங்கலி பெண் இறந்தவரைப் போல் பாவிப்பது ஒரு கொடுமையான - வர்ணிக்க முடியாத உணர்ச்சியை ஏற்படுத்துகிறது.


இந்த நேரத்தில் அந்த பெண்ணின் மனதில் ஏற்படும் உணர்ச்சியும், ஒருவேளை அந்த இளம் பெண்ணின் கணவர் அந்த நிகழ்ச்சியை பார்க்க நேர்ந்தால், அதன் மூலம் ஏற்படும் உணர்ச்சியையும் எப்படி விவரிப்பது - அதனால் ஏற்படும் மனோ ரீதியான விஷயங்கள் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.


ஏறக்குறைய வெளியில் இருந்து வரும் அந்த சுமங்கலிப் பெண்ணை இறந்தவரின் ஆவியாகத்தான் ஒப்பிட்டுப் பார்க்கப்படுகிறது.


இப்படிப்பட்ட கொடுமையான ஒரு சடங்கில் கலந்து கொள்ளும் பெண் ஒரு பிராமண குடும்பத்தை சேர்ந்தவர் என்பது இங்கே அழுத்தமாக பதியப்பட வேண்டியுள்ளது. சமூகத்தில் நலிந்த நிலையில் உள்ள பிராமண பெண்களைத்தான் இத்தகைய நிகழ்ச்சியில் பயன்படுத்துகிறார்கள் என்பது குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று. (இவர் ஒடுக்கும் வர்க்கத்தின் ஒடுக்கப்பட்ட பிரதிநிதியாக நிற்கிறார்.)