December 30, 2008

வினவு - வினை செய்! மாமா வேலை செய்வோருக்கு எதிராய்!

ம.க.இ.க. - மக்கள் கலை இலக்கிய கழகம் கடந்த 30 ஆண்டுகளாக ஆள் பிடிக்கும் வேலையில் ஈடுபட்டு தோல்வி கண்ட நிலையில், தற்போது கணிணித் திரையின் மூலம் மாய வலையை வீசி வருகிறது. அதாவது தற்போது இணையத்தின் மூலமே புரட்சியை நடத்தி விடலாம் என்ற கொள்கை முடிவுக்கு வந்து விட்டது. மேலும் ம.க.இ.க.-வின் உண்மை முகம் என்ன என்று நமது வாசகர்களுக்கு தெரியாதல்லவா? அதனால் அது தன் அமெரிக்க மறைமுக எசமான் இட்ட கட்டளைகளை தற்போது நன்கு நிறைவேற்றி வருகிறது. இது குறித்த விமர்சனங்களுக்கு செல்வதற்கு முன் அதன் உண்மை முகத்தை கிழித்து அடையாளப்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது.
அதாவது ம.க.இ.க. என்கிற அமைப்பு ஏதோ பெரிய புரட்சிகர அமைப்பு போல பண்ணையார் அரசியல் செய்து வருகிறது. அதாவது பண்ணையார் வைத்ததே சட்டம். அதனை யாரும் கேள்வி கேட்கக் கூடாது. என்கிற நிலப்பிரபுத்துவ - ஏகாதிபத்திய மனோபாவம் வெளிப்படுத்துவதை இணையவாசிகள் நன்கு உணர்ந்தே உள்ளனர்.
சரி, ஒரு புரட்சிகர அமைப்பிற்கு அடிப்படை ஒரு புரட்சிகர கட்சி! தன்னை ஒரு புரட்சிகர அமைப்பு என்று கூறிக் கொள்ளும் ம.க.இ.க. என்கிற ஒரு கலை அமைப்பு பிரதானப்படுத்தக்கூடிய அரசியல் அமைப்பு எது என்று யாராவது கேட்டால், இது உளவுத்துறை கேட்கும் கேள்வி! என்று ஒரே வரியில் முடித்துக் கொள்வார்கள்.
உண்மையில் இந்த அமைப்பின் பின் இயங்கும் அரசியல் சக்தி - ம.க.இ.க. மறைமுகத் தலைமை CPI-ML [SOC] என்பதே. இன்றைய நவீன ஜனநயாக உலகில் - தங்களை நக்சலைட்டுகள் என்று பகிரங்கமாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க. அதன் கட்சிப் பெயரை மட்டும் வெளியில் சொல்லவே சொல்லாதாம். உண்மை இங்குதான் இருக்கிறது. தன்னுடைய கட்சி இது என்று கூறிவிட்டால் அப்புறம் வரக்கூடிய இடிகளை யார் தாங்குவது என்கிற அவநம்பிக்கையான அரசியல்தான் காரணம்.
சரி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகத்தான தலைவர்கள் மார்க்சும், எங்கெல்சும் 1847 இல் வெளியிட்ட கம்யூனிஸ்ட் அறிக்கையில் என்ன கூறியிருக்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
பகிரங்கமாய் அனைத்து உலகும் அறியும் வண்ணம் கம்யூனிஸ்டுகள் தமது கருத்துக்களையும் தமது நோக்கங்களையும் தமது போக்குகளையும் வெளியிட்டு, நேரடியாய் கட்சியின் அறிக்கை மூலம் கம்யூனிசப் பூதமெனும் இந்தக் குழந்தைப் பிள்ளைக் கதையை எதிர்க்க வேண்டிய தருணம் வந்து விட்டது.
அதாவது கம்யூனிஸ்ட்டுகள் தங்களது நோக்கம் இதுதான் என்று உலகறிய பறைசாற்ற வேண்டும் என்று கூறுகிறார்கள். ஆனால், இந்த ஏகாதிபத்திய தரகர்கள் இந்தியாவில் உள்ள போலீஸ் மற்றும் உளவுத்துறை கண்களில் எல்லாம் மண்ணைத் தூவி விட்டு அரசியல் நடத்துகிறார்களாம்! இதைவிட கோமாளித்தனமானது எதாவது இருக்க முடியுமா?
சரி, ஒரு புரட்சிகர அரசியல் ஸ்தாபனத்தின் அடிப்படை அம்சைமே ஜனநாயக மத்தியத்துவ கோட்பாடு.
அதாவது அந்த அமைப்பின் கிளைகள் முறையாக கூட வேண்டும். குறிப்பாக கட்சி மேலிருந்து கட்டப்படுவது. அந்த அமைப்புக்கான மாநாடுகள் திட்டமிட்ட கால அளவில் நடத்தப்பட வேண்டும். அதில் தேர்வு செய்யப்பட்ட பிரதிநிதிகள் கூடி விவாதித்து ஆவணங்களை இறுதிப்படுத்த வேண்டும். இந்த அடிப்படைகளை மேற்கண்ட அமைப்பு பிரதிநிதித்துவப்படுத்தும் எஸ்.ஓ.சி. குழு எப்படி மேற்கொள்கிறது! பரலோகத்திலா? அல்லது இணையத்தின் மூலமே ஏதாவது சாட்டிங் கான்பிரன்ஸ் மூலம் நடத்துகிறீர்களா? என்ற கேள்வி எழுவது இயல்பானதே!
நேபாளத்தில் தற்போது ஆட்சியைப் பிடித்துள்ள நேபாள மாவோயிஸ்ட்டுகள் கூட தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆட்சியாளர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை நடத்தினார்கள். அத்துடன் தற்போது ஜனநாயக முறையிலான தேர்தலிலும் பங்கெடுத்துக் கொண்டு ஆட்சியாளர்களாகவும் மாறியிருக்கிறார்கள்?
அது மட்டுமா? இந்தியாவில் உள்ள பல நக்சல் அமைப்புகள் மற்றும் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் அமைப்புகள் தங்களது கொள்கை என்ன என்பதை வெளிப்படையாக அறிவித்து விட்டு ஆயுதம் ஏந்திய போராட்டத்தை நடத்துகிறார்கள். (இதில் எனக்கு வித்தியாசம் உண்டு அது பற்றி இங்கே விவாதிக்கவில்லை.)
ஆனால், தங்களை பெரிய புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதும், தாங்களே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று உளறுவதும், நக்சலைட்டுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் தங்கள் கட்சியின் பெயரைக் கூட சொல்வதற்கு ஏன் தொடை நடுங்குகிறது என்றுத் தெரியவில்லை? கேட்டால் உங்களுக்கு போலீஸ் அடக்குமுறை பற்றி தெரியாது என்று வேறு அங்கலாய்ப்பார்கள்! சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன் தனது உயிரை என்றைக்கும் ஒரு பொருட்டமாக மதித்தது கிடையாது! ஆனால் நீங்கள் பேசுவது நக்சலிசம் - சொகுசான நக்சலிசம். திண்ணை வேதாந்தம்.
மேலும், தற்போது ம.க.இ.க.வில் செயல்படும் யாருக்கும் சொந்தப் பெயர் கிடையாது! போலிகள்தான். அனானிகள்தான். அது மட்டுமா இணையத்தில் கூட அனானியாக பெயர் வைத்துக் கொண்டு அமெரிக்காவுக்கு புரட்சிகர மாமா வேலை பார்ப்பதுதான் இவர்கள் வேலை.
அது மட்டுமல்ல; ஒரே ஒரு ம.க.இ.க. ஆட்களாவது தாங்கள் குடி இருக்கும் இடத்தில் செயல்படுகிறார்களா? என்றால் இருக்கவே இருக்காது. அப்புறம் சாயம் வெளுத்து விடுமே! அதனால்தான் சி.பி.எம். செயல்படற இடமா பார்த்து பிரச்சாரம் செய்வது - பிரச்சனை செய்வது என்பது இவர்களின் தொடர் கதையாகிப் போயுள்ளது. வீண் வம்புக்கு இழுப்பது இவர்கள்தான் எல்லா இடத்திலும். சி.பி.எம். கூட்டம் போட்டால் அங்கே இவர்களது புத்தகத்தை தூக்கிக் கொண்டு வந்து விடுவார்கள். அதாவது சீர்குலைவு அரசியலின் உச்சகட்ட சீரழிவே ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பலின் சீரழிந்த அரசியல்.
இவர்களது வர்க்க எதிரி யார் என்று கேட்டால் இன்று வரைக்கும் தெரியாது? ஏனென்றால் இவர்களிடம் கட்சித் திட்டமே கிடையாதே! அதனால்தான் தற்போது இவர்கள் "இந்தியா மறுகாலனியாவதை எதிர்க்கிறார்களாம்". அது சரி உங்கள் அமைப்போ எஸ்.ஓ.சி. மாநில அமைப்பு கமிட்டி. அப்படியென்றால் உங்களது அகில இந்திய தலைமை எது? இதுவரை தெரியாது? அது மட்டுமா? இவர்களது அரசியல் அபத்தம் "தமிழில் பாடு இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு ஓடு" என்று அரசியல் முழக்கம் வைத்த ஓடுகாலிகள்தான் இந்த ம.க.இ.க.-வினர் என்பதை நாம் மறக்க கூடாது.
இந்திய புரட்சி பற்றி பேசும் இந்த புரட்கிர ஓநாய் கூட்டம் தமிழில் பேசாத மக்களை எந்த நாட்டிற்கு கடத்தக் கோருகிறது என்று கேட்டால் பல்ளிளிப்பார்கள். இதுதான் கேள்வி! உங்கள் இயக்கம் புரட்சிகர இயக்கமா? அல்லது பிழைப்புவாத இயக்கமா? உங்கள் புரட்சி தமிழகத்தில் மட்டுமா? அல்லது நாடு தழுவியதா? என்றெல்லாம் நாம் கேட்கக் கூடாது. இதுவெல்லாம் உளவுத்துறை கேட்கும் கேள்வி என்று பசசப்புவார்கள்.
அடுத்து, இவர்களது முதன்மையான எதிரி யார் தெரியுமா? சி.பி.எம்.தான். அதாவது பா.ஜ.க. மற்றும் காங்கிரசை எதிர்ப்பதெல்லாம் சும்மா பெயருக்கு புரட்சி என்று காட்டிக் கொள்ளத்தான். அதாவது இந்தியாவில் தனிப்பெரும் கம்யூனிஸ்ட் கட்சியாக சி.பி.எம். வளர்வதை இந்திய முதலாளிகள் மட்டுமல்ல ஏகாதிபத்திய சக்திகளும் விரும்பவில்லை. அதனால்தான் அவர்கள் புரட்சியைப் பேசிக் கொண்டே சி.பி.எம்.யை எதிர்க்க வேண்டும் என்ற மறைமுகத் திட்டத்தோடு செயலாற்றுகிறார்கள். இதுதான் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பலின் உண்மையான அரசியல்.
அது மட்டுமா? ஊருக்குதான் உபதேசம் என்பது இவர்கள் பழிமொழி இவர்களது அமைப்பு நடத்தும் கீழைக் காற்று புத்தக நிலையத்திற்கு செல்லுங்கள். அங்கே சோம வள்ளியப்பனின் பங்கு மார்க்கெட் புத்தகம் கொடிகட்டி செம ஜோராக விற்பதை பார்க்கலாம். அதாவது இவர்களது தொண்டர்களுக்கு புரட்சியை சொல்லிக் கொடுக்கிறார்களாம். அதாவது பங்கு மார்க்கெட்டில் எப்படி சூதாடலாம் என்று சொல்லிக் கொடுக்கிறார்கள் என்று அர்த்தம்.
மேலும் இந்த அமைப்பில் சேர்ந்து செயலாற்றிய பல தொண்டர்கள் 3 ஆண்டுகளுக்கு கூட இந்த அமைப்பpல் நீடிப்பதில்லை என்பது உண்மையானது. அந்த அளவிற்கு இவர்களது அரசியல் சாக்கடை வீசும். தற்போது இவர்களது உறுப்பினர் எண்ணிக்கை எவ்வளவு என்று சொன்னால் அதைவிட இரண்டு மடங்கு தொண்டர்கள் இவர்கள் அரசியல் சாக்கடையைப் பார்த்து ஓடி விட்டார்கள். மேலும் தற்போது இவர்கள் வினவு - வினை செய் என்று இணையத்தில் தூண்டில் வீசுகிறார்கள். உன்னுடைய உண்மையான முகம் என்ன என்று வினவுங்கள் நன்பர்களே. இன்னே வினை செய்யுங்கள். இந்த ஏகாதிபத்திய தாசர்களுக்கு எதிராக.
இவர்களது நிஜ முகத்தை அறிந்து கொள்ள இதையும் படிக்கவும்.

அழுகி வரும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை!
பயங்கரவாதிகள் கொடுக்கும் பயங்கரவாத பட்டம்!
அடிமைக்கு மகாராஜா பட்டம் சூட்டும் ம.க.இ.க.!
தலித்துகளை குட்டிபூர்ஷ்வாவாக்கிய ம.க.இ.க.!
ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்...

கூரையேறி கோழி பிடிக்காதவர்கள்!

கற்பனாவாதத்தை புரட்சியாக கொண்டதே ம.க.இ.க.!

தோலுரிக்கபட்ட ம.க.இ.க.

16 comments:

விடுதலை said...

மகஇக சாயம்
வெளுத்து போச்சு டிங் டிங் டிங்

பன்னி வேசம்
கலஞ்சு போச்சு டிங்டிங்டிங்

புதியசனநாயகம். புதிய கலாச்சாரம்
குப்பையாச்சு டிங்டிங்டிங்

வினைவுக்கு
பைத்தியம் முத்தி டிங்டிங்டிங்

தமிழ் நர்ட்டுக்கு மட்டும்
புரட்சி என்கிறான் டிங்டிங்டிங்

அவன் கட்சி பெயர கேட்டாமட்டும்
எல்லாத்தையும் மூடிக்குறான் டிங்டிங்டிங்

Anonymous said...

//தங்களை பெரிய புரட்சிக்காரர்கள் என்று சொல்லிக் கொள்ளுவதும், தாங்களே எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் என்று உளறுவதும், நக்சலைட்டுகள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. கும்பல் தங்கள் கட்சியின் பெயரைக் கூட சொல்வதற்கு ஏன் தொடை நடுங்குகிறது என்றுத் தெரியவில்லை? கேட்டால் உங்களுக்கு போலீஸ் அடக்குமுறை பற்றி தெரியாது என்று வேறு அங்கலாய்ப்பார்கள்! சமூக மாற்றத்திற்காக தங்களை அர்ப்பணித்துக் கொண்ட ஒருவன் தனது உயிரை என்றைக்கும் ஒரு பொருட்டமாக மதித்தது கிடையாது! ஆனால் நீங்கள் பேசுவது நக்சலிசம் - சொகுசான நக்சலிசம். திண்ணை வேதாந்தம்//

good writting, they are fighting against left democrat parties not for the people.In india they could get people support at least a panchayat , how they will go for revolution.

Hariharan

சந்திப்பு said...

நன்றி ஹரிஹரன் மிகச் சுருக்கமாக அருமையாக சொல்லியுள்ளீர்கள். ம.க.இ.க. - எஸ்.ஓ.சி. குழு "இடது மற்றும் ஜனநாயக சக்திகளுக்கு" எதிரானது என்று. அதைவிட ஒரே ஒரு கிராம ப;"சாயத்தில் கூட செல்வாக்கை பெற முடியாத அவர்கள் எப்படி புரட்சி செய்வார்கள் என்ற கேள்விக்கு அவர்களிடம் நாம் எந்த பதிலையும் எதிர்பார்க்க முடியாது.

மீண்டும் நன்றி நன்பரே!

Anonymous said...

ஹயா எனக்கு நாலு பிண்ணூட்டம் வந்திருச்சு

Anonymous said...

i expect the criticism in poltical view and stand.

neengal en jeya vudan serntheergal ena niyappaduthungal muthalil..

Anonymous said...

ok pa we will discuss our plans by each and every line ok

1. we found our existing system is semi colonial, semi feudal and semi capitalist system. What is your/cpm view and how it is correct?

2. so in india, new democratic revolution is possible. what is your view?

3. what is your view on eelam and kashmir and north-eastern problems..

CITU celebrate AYUTHA PUJA. Gow you justify it.
cpm now join with aliance of jeya. is it ok for your revolution..
are you accept the varnaashramatharmaa.. if not why your peoples call such peoples as BRAHMNAAS (son of brahmmaas)...
Thirunelveli city's cpm secratary was join in sarathkumar party.. he complainted that crs. were womanisers, bankers, castist...etc in last kumudham reporter. how it is possible...
why you cant grow in many states except few.
your aliances ie aliance parties were differ from state to state. it is not our comment only. peoples generally ask ..tell maa.. how it is use to your revolution

Anonymous said...

ok pa we will discuss our plans by each and every line ok

1. we found our existing system is semi colonial, semi feudal and semi capitalist system. What is your/cpm view and how it is correct?

2. so in india, new democratic revolution is possible. what is your view?

3. what is your view on eelam and kashmir and north-eastern problems..

CITU celebrate AYUTHA PUJA. Gow you justify it.
cpm now join with aliance of jeya. is it ok for your revolution..
are you accept the varnaashramatharmaa.. if not why your peoples call such peoples as BRAHMNAAS (son of brahmmaas)...
Thirunelveli city's cpm secratary was join in sarathkumar party.. he complainted that crs. were womanisers, bankers, castist...etc in last kumudham reporter. how it is possible...
why you cant grow in many states except few.
your aliances ie aliance parties were differ from state to state. it is not our comment only. peoples generally ask ..tell maa.. how it is use to your revolution

Anonymous said...

ok pa we will discuss our plans by each and every line ok

1. we found our existing system is semi colonial, semi feudal and semi capitalist system. What is your/cpm view and how it is correct?

2. so in india, new democratic revolution is possible. what is your view?

3. what is your view on eelam and kashmir and north-eastern problems..

CITU celebrate AYUTHA PUJA. Gow you justify it.
cpm now join with aliance of jeya. is it ok for your revolution..
are you accept the varnaashramatharmaa.. if not why your peoples call such peoples as BRAHMNAAS (son of brahmmaas)...
Thirunelveli city's cpm secratary was join in sarathkumar party.. he complainted that crs. were womanisers, bankers, castist...etc in last kumudham reporter. how it is possible...
why you cant grow in many states except few.
your aliances ie aliance parties were differ from state to state. it is not our comment only. peoples generally ask ..tell maa.. how it is use to your revolution

சந்திப்பு said...


ஹயா எனக்கு நாலு பிண்ணூட்டம் வந்திருச்சு

லாவலி பாடும் கூட்டத்தை வைத்திருந்தால் 40 கூட வரும்!

சந்திப்பு said...

ஆங்கில அறிவு ஜீவி. உன்னுடைய முகமூடியை முதலில் கழற்றி வைத்து விட்டு வா? நீர் எந்தப் பிரிவிலிருந்து வருகிறாய்? நான் இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது ம.க.இ.க.வுக்கு பின்னுள்ள முகமூடி குறித்து.... முதலில் உங்கள் அமைப்பின் பெயரிலிருந்து துவங்கலாமே? திட்டம் இருக்கிறதா? எப்போது அப்டேட் செய்யப்பட்டது? எந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? இது தமிழக அளவில் புரட்சி நடத்தப் போகிறதா? அல்லது இந்திய அளவிலா? அப்புறம்... அப்புறம் இடஒதுக்கீட்டில் உங்கள் நிலை என்ன? ஈழம் பிரச்சனையில் உங்கள் நிலை என்ன?

மணி said...

//ஆங்கில அறிவு ஜீவி. உன்னுடைய முகமூடியை முதலில் கழற்றி வைத்து விட்டு வா? எனக்கு முகமூடியா .. என் பேரு தெரியனும்னா 1995 ல் தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் உங்களுடைய மூட்டா ஆசிரியர்களுடைய (அன்றைய மூட்டா செயலர். ஜேம்ஸ் வில்லியம்) பேச்சைக் கேட்டு நிர்வாகத்திடம் மாணவர்களுடைய தன்னெழிச்சியான போராட்டத்தை காட்டிக் கொடுத்த SFI ன் அன்றைய மாநில செயலர் சுந்தர ராஜனிடம் கேளுங்கள் .. நான் (தளபதி) யார் எனச் சொல்வார்.நீர் எந்தப் பிரிவிலிருந்து வருகிறாய்? நான் இங்கே விவாதித்துக் கொண்டிருப்பது ம.க.இ.க.வுக்கு பின்னுள்ள முகமூடி குறித்து.... முதலில் உங்கள் அமைப்பின் பெயரிலிருந்து துவங்கலாமே? திட்டம் இருக்கிறதா? எப்போது அப்டேட் செய்யப்பட்டது? எந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டது? எந்தப் பிரிவு, எந்த மாநாடு, சொந்தமா கட்டிடம் இருக்கா, வாடகை வீடா, போயசு கார்டன்ல மரியாத உண்டா ... இதெல்லாம் சொன்னாத்தான் பேசுவீங்களா? அய்யா, நான் எந்தப் பிரிவும் கிடையாது. சரியான நபர்களால் புரட்சி நடக்கணும்பகிறதுதான் என் ஆசை. அத நடத்துறவன் பேரு ஊரு சாதி எல்லாம் எனக்கு முக்கியமில்ல... முடிந்தால் அரசியல் ரீதியாக எனக்குள்ள ஐயங்களை மேலே கேட்டுள்ளேன். பதில் கூறினால் சரியான கட்சியைத் தேர்வுசெய்து இணைந்து பணியாற்ற எனக்கு உதவியாக இருக்கும். ... சந்திப்பு போல மணி என்பது இணையத்திற்கான புனைபெய்ர். இதை ஏன் சொல்கிறேன் என்றால் இதையே கேள்வியாக்குவீர்கள் என்பதால்தான்இது தமிழக அளவில் புரட்சி நடத்தப் போகிறதா? அல்லது இந்திய அளவிலா?< அப்புறம்... அப்புறம் இடஒதுக்கீட்டில் உங்கள் நிலை என்ன? ஈழம் பிரச்சனையில் உங்கள் நிலை என்ன?//இந்திய புரட்சிதான் சாத்தியம். இட ஒதுக்கீடு, ஈழம் பற்றி தங்களது கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்.

Sempulam said...

சந்திப்பு எப்படி இதெல்லாம்...
நீங்களே கேள்வு கேட்டு நீங்களே பதில் சொல்லி...ஒன்னும் புரியலையே
ஆமாம் யாரு தளபதி, யாரு சுந்தர்ராஜன் யாரு இங்க லூசு மாதிரி டிங் டிங்குன்னு மணியடிக்கறது..
இப்படியெல்லாம் நாம நமக்குள்ளார அடிச்சுகிட்ட எப்படி...ஏதாவது பேசி செய்யலாம் பாசு!

சந்திப்பு said...

செம்புலம். மேற்கண்ட பின்னூட்டங்கள் சந்திப்பு என்ற பெயரில் (அநேகமாக குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. போலியாக உலா வருபவர்களுக்கு இது ஒன்றும் பெரிய விசயம் இல்லையே). வெளியாகியுள்ளது. அவருக்கு வேண்டுகோள் விடப்பட்டுள்ளது. இல்லையென்றால் மக்கள் மத்தியில் பேசுவோம்! அப்புறம் என்ன நடக்குதுன்னு பார்க்கலாம்? சாரி, உங்களுக்கு மக்கள்னு சொன்னாலே வயித்தை கலக்கும் என்ற விசயம் ஊருக்கு தெரிந்ததுதான்.

Anonymous said...

அய்யா போலி சந்திப்பு பேர மாத்திட்டு வாப்பே...இல்ல சீபீஎம் காரணுக்கும் உனக்கும் வித்தியாசம் இல்லாம பூடும்!

மணி said...

நண்பனே எனது இயற்பெயருக்கு தளத்தை மாற்றி விட்டேன். உன்னோட இயற்பெயரில் உன்னுடைய வார்த்தைக்காவது நீ கட்டுப்பட்டு நடப்பாய் என நம்புகிறேன். எனக்குத் தேவையான புரட்சியை எப்படி நடத்தப் போகிறோம் என்பது பற்றிய உனது சித்திரத்தை என்னைப் போன்ற பாமரர் பலருக்கும் புரியும் வண்ணம் எடுத்து வைப்பாய் என நம்புகிறேன். இத்தகைய உனது முயற்சியில் இடையில் நான் ஏதாவது சந்தேகம் கேட்டால் பதில் அளிப்பீர்கள் என நம்புகிறேன். கேள்வி கேட்டாலே நக்சலைட் மக.இகன்னு பேசாதீர்கள். உங்களைப் போலவே நானும் புரட்சியை நேசிப்பவன். சரியான கட்சிதான் தெரியவில்லை. ஏன் நீங்கள் சரியானவர்கள் என்பதையும் விளக்குங்கள். மற்றபடி உங்களது கட்சி உறுப்பினர்கள் பற்றி நான் நிறைய பேரை அறிந்ததால் விமர்சனம் உண்டு. ஆனால் அது தனிப்பட்ட மனிதர்கள் பற்றியது. நமக்கோ தேவை புரட்சி. எனவே அரசியல திசைவழி பற்றி பேசுவோம்.

ஐபி அட்ரஸ் மூலமாக யார் எனப் பார்த்ததில் எனது அலுவலக நண்பர்கள் பலர் எழுதுகின்றனர், படிக்கின்றனர். எனவே விவாதியுங்கள்.

சந்திப்பு said...

நன்றி தோழரே!