December 02, 2008

த சண்டே இந்தியன் தலையங்கம் மீதான என் விமர்சனம்!


திரு. அரிந்தம் சவுத்ரியின் 26/11... குறித்த தலையங்கம் படித்தபோது, "த சன்டே இந்தியனனில் நாங்கள் யதார்த்தமாகவும், நேர்மையாகவும் இருப்பதை நம்புகிறோம்" என்ற வாதம் அந்த தலையங்கத்திற்குள்ளேயே நகைப்புக் கிடமாக கிடந்ததை கண்டு நான் வருத்தமுற்றேன்.

ஆசிரியர் அரிந்தம் சவுத்ரி இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு என்பதைக் கூட மறந்து மெய்மறந்த நிலையிலேயே இந்த தலையங்கத்தை தீட்டியிருக்கிறாரோ என்ற சந்தேகத்தைத்தான் எழுப்பியது. அதாவது, "மும்பையில் நடைபெற்ற தாக்குதல் சம்பவங்களையொட்டி மீடியாக்களில் எழுந்த விவாதங்கள் அனைத்தும் இந்துக்களுக்கு எதிராக இருந்ததாகவும், இந்து வெடிகுண்டுகளைப் பற்றி பேசியதாகவும், இந்து பயங்கரவாதம்" என்று திசை திருப்பியதாகவும் கண்ணீர் வடித்துள்ளார்.

மறுபுறத்தில், "இந்தியாவில் எந்த ஊடகமும் இதுவரை முஸ்லீம் பயங்கரவாதி என்றோ அல்லது முஸ்லீம் வெடிகுண்டு என்றோ அழைத்ததாக நினைவுக்கு இல்லை" என்று பச்சையாக ஒரு பொய்யை - அணு குண்டாக தூக்கி வீசி பத்திரிகை தர்மத்தையே கேலிக்கூத்தாக்கியுள்ளார்.

திரு. அரிந்தம் சவுத்திரி தன்னை இந்தியாவில் உள்ள பெரும்பான்மை சமூகமான இந்துக்களுடன் அடையாளப்படுத்திக் கொள்ளும் அரசியலை மிக லாவகமாக செய்வதோடு, இதுபோல் இசுலாமியர்கள் பெரும்பான்மையாக வாழும் நாட்டில் நடைபெறுமா? என்று பா.ஜ.க.வின் ஸ்போக்ஸ் பர்சன் போல கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் "இந்துக்கள் நிஜத்தில் பயங்கரவாதி அல்ல" என்று ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் வழங்குவதன் மூலம் மறைமுகமாக இசுலாமிய சமூகத்தின் மீது அந்த பழியை அற்புதமாக சுமத்துகிறார். அத்துடன் "இந்துக்கள் வெடிகுண்டு தயாரிப்பவர்கள் அல்ல" என்று கூறுவதன் மூலம் மறைமுகமாக இசுலாமியர்கள் வெடிகுண்டு தயாரிப்பவர்கள் என்று பழியை சுமத்த முற்படுகிறார் அரிந்தம் சவுத்திரி.

அது, இந்த விவரம் அறிந்த பத்திரிகையாளர் இந்தியாவில்தான் உள்ளாரா? அல்லது 10க்கு 10க்கு ஏ.சி. அறைக்குள் உட்கார்ந்துக் கொண்டு லாப்-டாப்பின் வழியாக இந்தியாவை தரிசிக்கிறாரா? என்றுத் தெரியவில்லை. சமீபத்தில் மும்பயையில் நடைபெற்ற பயங்கரவாதிகளுக்கு எதிரான தாக்குதலில் பலியான ஹேமந்த் கார்க்கரே தலைமையிலான ஏ.டி.எஸ். குழுவினர் மகாராஷ்டிராவில் நடைபெற்ற மலேகான் குண்டு வெடிப்பில் சாத்வி பிராக்யாவுக்கும், இராணுவ அதிகாரி புரோகித்துக்கும் தொடர்பிருப்பதையும் இவர்கள் அனைவரும் இந்துத்துவ அமைப்புகளான வி.எச்.பி. - ஆர்.எஸ்.எஸ். - பஜ்ரங் தள் வகையறாக்கள் என்பதையும் நிரூபித்ததையெல்லாம் இவர் மறந்து விட்டாரா?

வேண்டும் என்றால் இங்கே என்னுடைய வாதத்தை இப்படி பதிய விரும்புகிறேன். இந்துக்களுக்கு ஒரு போதும் பயங்கரவாத சிந்தனை வராது என்பது உண்மையாக இருக்கலாம். ஆனால் இந்துக்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறிக் கொள்ளும் இந்துத்துவாவாதிகள் இந்த தேசத்தின் பயங்கரவாதிகள் என்பதில் எந்தவிதமான கருத்து வேறுபாடும் இருப்பதற்கில்லை. இறுதியாக இந்த தலையங்கத்தின் மூலம் அரிந்தம் சவுத்திரி த சன்டே இந்தியன் பத்திரிகை மறைமுகமாகக் கூட அல்ல நேரடியாகவே இந்துத்துவாவுக்கு ஆதரவானதுதான் என்பதை காட்டி விட்டார்.

1 comment:

butterfly Surya said...

அந்த ஆள் சரியான் லூசு போல... இவனுக்கெல்லாம் ஒரு மறுப்பா..??