September 17, 2008

கேரளாவில் கண்டதும்! கேட்டதும்!


ஒருமுறை கேரளா சென்ற விவேகானந்தர் அதனை பைத்தியக்கார விடுதி என்று அழைத்தார். அதாவது அந்த அளவிற்கு அங்கே சாதிய ஏற்றத்தாழ்வு மண்டியிருந்தது. ஆனால் தற்போது என்ன நிலைமை?

குறிப்பாக நான் சென்றது கண்ணூர் மாவட்டம் - தலச்சேரி பகுதிக்கு. அங்கு ஜாதி முற்றிலும் ஒழிக்கப்பட்டு விட்டது. திருமணங்கள் ஜாதியை பார்த்து நிச்சயிப்பதில்லை. மேலும் அன்றாட வாழ்விலும் அவர்கள் ஜாதியை கடைப்பிடிப்பதில்லை. அங்கு ரிக்கார்டில் மட்டுமே ஜாதி இருப்பதாக அங்குள்ள பொதுநலவாதிகளும், மக்களும் கூறுகின்றனர். யாராவது தான் இந்த ஜாதி என்று சொல்லாத பட்சத்தில் அதனை யாரும் பொருட்படுத்துவதில்லை. தமிழகத்தில் பிறப்பு முதல் இறப்பு வரை ஜாதி குறுக்கே நிற்கிறது.

அடுத்து முக்கியமான விசயம் தமிழகத்தில் தெருவுக்கு இரண்டு கோவில்களும், சந்து முனைக்கு ஒரு பிள்ளையார் கோவிலும் கோலோச்சுகிறது. இங்கே நாளொரு மேனி பொழுதொரு வண்ணம் கோவில் கட்டுவது தொடர்ந்து நடந்தேறி வருகிறது. ஆனால் கேரளாவில் அப்படி யாரும் தெருவுக்கு தெரு கோவில் கட்டுவதில்லை. ஊருக்கு ஒரு கோவில் இருப்பதே பெரிய விசயம்தான். அதுவும் திருவிழா காலங்களில் வருடத்திற்கு ஒரு முறை மட்டுமே அதனை மக்கள் நினைக்கின்றனர். அந்த அளவிற்குதான் அங்கே கோவிலுக்கும் - பொது வாழ்விற்கும் - மக்களுக்கும் உள்ள நிலை.

பெரியார் பிறந்த மண் என்று பெருமை பேசும் தமிழகத்தில் இந்த இரண்டும் தலைகீழ்தான். மேலும் தற்போது திராவிட இயக்கங்களும் - அதன் நிர்வாகிகளும் - அமைச்சர்களும் - எம்.எல்.ஏ.க்களும் பணத்தை கொடுத்து கோவில் கட்டுவதும் - கோவில் விழாக்களில் கலந்து கொண்டு தங்கள் முகத்தை காட்டி பலப்படுத்திக் கொள்வதும் மிகச் சாதாரண நடைமுறையாகி விட்டது. எனவே தமிழகத்தில் மூட நம்பிக்கையை பரப்புவதில் திராவிட இயக்கத்திற்கு முக்கிய பங்குண்டு என்று இந்நேரத்தில் குறிப்பிட்டுச் சொல்ல முடியும்.


அடுத்து, வீடுகள் அனைத்தும் நல்ல காற்றோட்டமாக - விசாலமாக கட்டப்பட்டுள்ளது. தண்ணீருக்கு மக்கள் ஏங்குவதில்லை. குறிப்பாக அங்கே கரண்ட் கட் வெறும் 1/2 மணி நேரம் மட்டுமே. (30 நிமிடம்) ஒரு நாளைக்கு. மேலும் வீடு கட்டுவதற்கு அரசாங்கமே 40 - 50 வரை இலவசமாக வழங்குகிறது. மேற்கொண்டு தொகையைப் போட்டு வீட்டைக் கட்டிக் கொள்ள வேண்டியதுதான். இது ஒரு சிறப்பான திட்டம். தமிழகத்தில் கூட அந்த திட்டத்தை அப்படியே கொண்டு வர தி.மு.க. அரசு முயலலாம். இதனையும் அண்ணா நூற்றாண்டு சாதனையில் சேர்த்தால் சிறிது ஓட்டும் கூடும். ஆனால் நிலத்திற்கு எங்கே போவது என்று கேட்கதீர்கள். அங்கு அநேகமாக வீடு இல்லாத மக்களே இல்லை. இங்குகூட குறைந்தபட்சம் வீடு கட்டுவதற்கு ஒரு கிரவுண்ட் நிலம் கொடுத்து - இதுபோன்ற உதவித் தொகையும் கொடுக்கலாம்.

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டம் - கிராமப்புற வேலை உறுதித் திட்டம் கேரளாவில் சிறப்பாக செயல்படுகிறது. அங்கே ஒரு நாளைக்கு ரூ. 125 கூலியாக தரப்படுகிறது. இந்த வேலைக்கே அங்கு ஆட்கள் கிடைப்பதில்லை என்று கூறப்படுகிறது. அதாவது அந்த அளவிற்கு அங்கு வாழ்க்கைத்தரம் உயர்ந்துள்ளது. தமிழகத்தில் ரூ. 80 மட்டுமே கூலி. அதுவும் பல இடங்களில் ரூ. 40 முதல் 60 மட்டுமே தரப்படுகிறது. இன்னும் சில இடங்களில் காண்டிராக்ட் விடப்பட்டு கொள்ளையடிக்கப்படுகிறது. அல்லது எந்திரத்தை பயன்படுத்தி திருட்டுக் கணக்கு எழுதப்படுகிறது. அதைவிட முக்கியமானது. தமிழகத்தில் உழைக்காமல் சம்பளம் பெறப்படுவதாக எதிர்கால முதல்வர் கூறுகிறார். உழைக்கின்ற மக்களுக்கு நியாயமான கூலியை ஏமாற்றமால் வழங்க வேண்டும் என்று இடதுசாரிகள் கேள்வி எழுப்பினல் அவர்களை புரோக்கல் - தரகர் என்று ஏசுகிறார் எதிர்கால முதல்வராக கனா கண்டு கொண்டிருக்கும் மு.க. ஸ்டாலின்.

அங்கே சங்பரிவாரம் பல இழிவான வேலைகளில் ஈடுபட்டு எவ்வளவுதான் வலுப்படுத்திக் கொள்ள முயன்றாலும் அரசியல் ரீதியாக வெற்றிபெற முடிவதில்லை. இதற்கு அடிப்படை காரணம் திராவிட இயக்கங்கள் போல் யாரும் சங்பரிவார சன்னியாசி கூட்டத்துடன் கூட்டணி வைத்துக் கொள்வதில்லை. இங்கே வெத்து மதவாத எதிர்ப்பும் - வெத்து மதச்சார்பற்ற கொள்கையும் கடைப்பிடிக்கப்படுகிறது. அங்கேயுள்ள இடதுசாரிகள் தீவிரமாக போராடி இந்துத்துவா மற்றும் இசுலாமிய அடிப்படைவாதத்தை பின்னுக்குத் தள்ளி வருகின்றனர். மேலும் இசுலாமியர்கள் - கிறித்துவர்கள் - கணிசமாக இருந்தாலும் மதக்கலவரம் ஏற்படாமல் பார்த்துக் கொள்கின்றனர். இதையெல்லாம் இந்த அண்ணா நூற்றாண்டு சிந்தனையில் சீர்தூக்கி பார்த்து தன்னை மாற்றிக் கொள்ளுமா திராவிட இயக்கங்கள்.

இவற்றையெல்லாம் விட முக்கியமானது. அங்கே கட்டப் பஞ்சாயத்து இல்லை. அதாவது, கிராமப்புறங்களில் அரச மரத்தடியிலோ அல்லது ஆல மரத்தடியிலோ அந்த ஊரில் உள்ள பெரிசுகள் அல்லது ஆதிக்க சக்திகள் தங்களைத் தாங்களே கிராம நிர்வாகிகளாக தேர்வு செய்துக் கொண்டு தமிழகத்தில் செயல்படுவது போன்ற பஞ்சாயத்து அமைப்பு இல்லை. அது முற்றிலும் ஒழிந்து விட்டது. அங்கே தேர்வு செய்யப்பட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களின் செயல்பாட்டிற்ககு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அல்லது காவல் நிலையத்தில் புகார் கொடுத்து பிரச்சினை அணுகப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் என்ன நிலைமை இந்த கட்டப் பஞ்சாயத்துக்களுக்கு தலைமை தாங்குவதே மந்திரிகளும், அதன் சொம்புகளும், தடிகளும், குண்டர்களும்தான். ஊரில் உள்ள கட்டப் பஞ்சாயத்து முறையை தனக்கு சாதகமாக வைத்துக் கொள்வதில் கவனமாக இருக்கின்றனர் இங்குள்ள ஆதிக்கவாதிகள் அது ஜாதியின் பெயராலும் பணத்தின் பெயராலும், அரசியல் செல்வாக்கின் பெயராலும் அல்லது ரவுடித்தனத்தின் பெயராலும். இதுதான் தமிழக ஜனநாயகததின் மையமான செயல்பாடு. கேரளாவில் அதற்கு இடமே இல்லை.

பெரியார் பிறந்த மண் - அண்ணா பிறந்த மண் என்று மார் தட்டிக் கொள்வதில் எந்த விளைவும் ஏற்படப் போவதில்லை. அவர்களது கொள்கைகளுக்கு குழி தோண்டி புதைத்து விட்டு. எனவே மேற்கண்ட இரண்டு பெரியவர்களும் சென்ற வழியை குறைந்தபட்சம் கடைப்பிடிக்கவும் - அதனை பரப்பவும் முயற்சி எடுக்க வேண்டும் இங்குள்ள திராவிட இயக்க சல்லி வேர்கள்.

ஒருவேளை விவேகானந்தர் தற்போது உயிருடன் இருந்து தமிழகத்திற்கும் - கேரளாவிற்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்தால் இந்தக் கருத்தை தமிழகத்திற்கு மாற்றியிருப்பார்.

20 comments:

லக்கிலுக் said...

தோழர் சந்திப்பு!


நாயர் என்பதெல்லாம் கல்லூரியில் படித்து வாங்கிய பட்டம் என்பது இப்போது தான் எனக்கு புரிந்தது. இவ்வளவு நாட்களாக அது சாதி என்று நினைத்து கொண்டிருந்தேன்.

திருமணங்கள் கேரளாவில் சாதியை பார்த்து நிச்சயிப்பதில்லை என்பது அருமையான கண்டுபிடிப்பு. சென்னையில் டீக்கடைகளில் வேலை பார்க்கும் மலையாளிகள் கூட கேரளாவுக்கு போய் அவரவர் சாதியிலே தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது மயிலாப்பூர் டமாரு குமாருக்கு கூட தெரியும்.

அப்புறம் தமிழகத்தில் தெருவுக்கு தெரு பிள்ளையார் கோயில் இருப்பதால் கேரளா தான் பகுத்தறிவில் சிறந்த மாநிலம் என்ற உங்கள் கருத்து நேர்மையானதாக இருக்கிறது. சபரிமலை கேரளாவில் இருப்பதாகவும், அங்கே பக்தியின் பெயரால் ஆண்டுக்கு பல கோடி மோசடி நடப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது உங்கள் பதிவை வாசித்தப் பிறகு தான் தெரிகிறது, அதுவும் தமிழ்நாட்டுக்குள் தான் இருக்கிறது என்பது.

கேரளாக்காரர்கள் யாருமே இப்போது நெற்றியில் சந்தனம் பூசுவதில்லை, முழுக்க முழுக்க பகுத்தறிவாளர்கள் ஆகிவிட்டார்கள் என்பதையும் தங்கள் மூலமாக அறிய முடிகிறது. கபோதிகள் கேரளாவை போய் கடவுளின் தேசம் என்கிறார்கள். அது பகுத்தறிவு மண் என்பதை நீங்கள் நேரில் அறிந்து கண்டு உலகுக்கு தைரியமாக தெரிவித்திருக்கிறீர்கள்.

கேரளாவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பது குறித்த உங்கள் நேரடி ரிப்போர்ட் அபாரம். அங்கே பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக இங்கிருக்கும் திராவிட ஊடகங்கள் தான் திரித்து எழுதி நாட்டை கெடுக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் அமைச்சர்கள் மீதெல்லாம் பாலியல் வதந்திகள் வருகின்றன, அதெல்லாம் முழுப்பொய்யென்று உங்களது நேரடி விசிட் ரிப்போர்ட் மூலமாக தெரிந்துகொண்டேன்.

ஒட்டுமொத்தமாக நல்ல நகைச்சுவையான பதிவினை தந்து வயிறு குலுங்க என்னை சிரிக்க வைத்திருக்கிறீர்கள். நன்றி!!

ஜோ/Joe said...

லக்கி :)))

சந்திப்பு said...


நாயர் என்பதெல்லாம் கல்லூரியில் படித்து வாங்கிய பட்டம் என்பது இப்போது தான் எனக்கு புரிந்தது. இவ்வளவு நாட்களாக அது சாதி என்று நினைத்து கொண்டிருந்தேன்.



லக்கி உங்களுக்கு எப்பவுமே கிழம் - கட்டைகளோடுதான் பழக்கமா? அதான் இந்த நாயர் புராணமோ? உண்மையை தேட முயற்சிக்கவும். கலைஞரின் ஆழ்வார் புராணம் போலத்தான் இதுவும்.


சென்னையில் டீக்கடைகளில் வேலை பார்க்கும் மலையாளிகள் கூட கேரளாவுக்கு போய் அவரவர் சாதியிலே தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் என்பது மயிலாப்பூர் டமாரு குமாருக்கு கூட தெரியும்.


மயிலாப்பூரில் உள்ள டமாரு, குமாரின் அக்கா - தங்கைகளை டீக்கடை தோழர்களுக்கு கட்டிக் கொடுக்கத் தயார் என்றால் ஒருவேளை அவர்கள் இங்கேயே திருமணம் செய்துக் கொள்ளலாம். எதற்கும் லக்கி இதற்கு முயற்சித்து - பரிட்சித்துப் பார்க்கலாம். வெற்றிபெற வாழ்த்துக்கள்.



அப்புறம் தமிழகத்தில் தெருவுக்கு தெரு பிள்ளையார் கோயில் இருப்பதால் கேரளா தான் பகுத்தறிவில் சிறந்த மாநிலம் என்ற உங்கள் கருத்து நேர்மையானதாக இருக்கிறது. சபரிமலை கேரளாவில் இருப்பதாகவும், அங்கே பக்தியின் பெயரால் ஆண்டுக்கு பல கோடி மோசடி நடப்பதாகவும் கேள்விப்பட்டிருந்தேன். இப்போது உங்கள் பதிவை வாசித்தப் பிறகு தான் தெரிகிறது, அதுவும் தமிழ்நாட்டுக்குள் தான் இருக்கிறது என்பது.


தமிழகத்தில் தெருவுக்கு தெரு கோவில் இருக்கிறது என்பதற்கும், சபரி மலைக்கும் என்னச் சம்பந்தம். இதுதான் முழங்காலுக்கும் - மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது. அங்கே கோவிலே இல்லை என்று எங்கேயாவது சொல்லியிருக்கேனா? தெருவுக்குத் தெரு, சந்து முனைக்கு சந்துமுனை கோவில் இல்லை. எனவே அவர்கள் முன்னேறியிருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்ள பெரியார்தாசர்களுக்கு மனம் இல்லை. அதாவது பகுத்தறிந்து பார்க்கும் மனம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?


கேரளாவில் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருப்பது குறித்த உங்கள் நேரடி ரிப்போர்ட் அபாரம். அங்கே பாலியல் குற்றங்கள் அதிகமாக நடப்பதாக இங்கிருக்கும் திராவிட ஊடகங்கள் தான் திரித்து எழுதி நாட்டை கெடுக்கின்றன என்பதை புரிந்துகொள்ள முடிகிறது. அதுவும் அமைச்சர்கள் மீதெல்லாம் பாலியல் வதந்திகள் வருகின்றன, அதெல்லாம் முழுப்பொய்யென்று உங்களது நேரடி விசிட் ரிப்போர்ட் மூலமாக தெரிந்துகொண்டேன்.


சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அங்கே வாழ்க்கைத்தரம் உயர்ந்துதான் இருக்கிறது. நீங்களும் நேரடியாக போய் பாருங்களேன்.

பாலியல் தொழில் சென்னையிலும் தமிழகத்திலும் முற்றிலும் ஒழிந்தா போய்விட்டது? அதுவல்ல இங்கே விவாதம். அங்கே அவர்கள் தமிழகத்தை விட ஒரு படி மேலே போயிருக்கிறார்கள். எனவே கண்ணில் உள்ள திராவிட முகமூடிகளை கழற்றி விட்டு பாருங்கள். அப்போது தெரியும் உண்மை.

சந்திப்பு said...

கூடுதல் விவரம் லக்கி

அங்கே விவசாயத்தையும், மண்ணையும் அழிக்கும் வேலிகாத்தான் என்ற முள் மரங்கள் இல்லை. இதனை அவர்கள் சமூக இயக்கமாக மேற்கொண்டு முற்றிலும் ஒழித்து விட்டதாக தகவல். தமிழகத்தில் நீங்கள் கூட இப்படியொரு இயக்கம் ஆரம்பிக்கலாம்.

அதேபோல் மலேரியாவை பரப்பும் கொசுவை ஒழிப்பதிலும் அவர்கள் முன்னணியில் நிற்கின்றனர். இதனையும் சமூக இயக்கமாக மாற்றியுள்ளனர். குறிப்பாக வயநாட்டில் உள்ள கொசுக்கள் மலேரியாவை பரப்புவதில் முக்கிய பங்காற்றுகின்றனர். இதனை அவர்கள் தற்போது கட்டுப்படுத்தியுள்ளனர்.

அதைவிட கூடுதலான விசயம் - முக்கியமான விசயம் அங்கே மலத்தை அள்ளுவதற்கு என்று தனியாக ஆட்கள் இல்லை. குறிப்பாக கிராமப்புறத்தில் கண்ட இடத்தில் கழிக்கும் கலாச்சாரத்திற்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளனர். ஆறுகள் - குளங்கள் பராமரிப்பில் கிராமத்தில் ஒற்றுமை நிலவுகிறது. வீட்டிற்கு வீடு நன்கு கட்டப்பட்ட கழிவறைகள் உள்ளன. ஆனால் தமிழகத்திலும் - சென்னையிலும் ஓப்பன் டாய் லெட்டுகள்தான் கண்கொள்ளா காட்சியாக உள்ளது. ஒருவேளை கூவம் கேரளாவில் இருந்திருந்தால் இந்நேரத்தில் அது வளம் கொண்ட நதியாக மாறியிருக்கலாம். பெரியார் பகுத்தறிவு பரப்பும் கொள்கை மறவர்கள் சிந்தித்தால் சரிதான்.

லக்கிலுக் said...

தோழர் சந்திப்பு!

//லக்கி உங்களுக்கு எப்பவுமே கிழம் - கட்டைகளோடுதான் பழக்கமா? அதான் இந்த நாயர் புராணமோ? உண்மையை தேட முயற்சிக்கவும். கலைஞரின் ஆழ்வார் புராணம் போலத்தான் இதுவும்.//

Nayar, CPI(M) என்று கூகிளில் போட்டு குலுக்கி தேடவும். உங்களுக்கு இதய அதிர்ச்சியே வரக்கூடிய விஷயங்கள் நிறைய கிடைக்கும் :-)

உங்களைப் போன்றவர்களோடு தான் பழகுகிறேன். நீங்களெல்லாம் கிழம், கட்டை பிரிவில் வருவீர்களா என்று தெரியாது :-)))

நான் முன்பு வேலை பார்த்துக் கொண்டிருந்த ஒரு நிறுவனத்தில் சேச்சி ஒருவர் ரிஷப்சனிஸ்டாக இருந்தார், அவர் பெயர் அனிதா நாயர். அவருக்கு வயது 24.


//மயிலாப்பூரில் உள்ள டமாரு, குமாரின் அக்கா - தங்கைகளை டீக்கடை தோழர்களுக்கு கட்டிக் கொடுக்கத் தயார் என்றால் ஒருவேளை அவர்கள் இங்கேயே திருமணம் செய்துக் கொள்ளலாம். எதற்கும் லக்கி இதற்கு முயற்சித்து - பரிட்சித்துப் பார்க்கலாம். வெற்றிபெற வாழ்த்துக்கள்.//

டமாரு குமாருவுக்கு நாயர் வீட்டில் பெண் கொடுத்தால் பதிலுக்கு டமாரு குமாருவின் தங்கையை நாயருக்கு கட்டி கொடுக்கலாம். பெண் கொடுத்து பெண் எடுப்பதில் டமாரு குமாருக்கு பிரச்சினையே இல்லை.


//தமிழகத்தில் தெருவுக்கு தெரு கோவில் இருக்கிறது என்பதற்கும், சபரி மலைக்கும் என்னச் சம்பந்தம். இதுதான் முழங்காலுக்கும் - மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடுவது. அங்கே கோவிலே இல்லை என்று எங்கேயாவது சொல்லியிருக்கேனா? தெருவுக்குத் தெரு, சந்து முனைக்கு சந்துமுனை கோவில் இல்லை. எனவே அவர்கள் முன்னேறியிருக்கிறார் என்பதை ஒத்துக் கொள்ள பெரியார்தாசர்களுக்கு மனம் இல்லை. அதாவது பகுத்தறிந்து பார்க்கும் மனம் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாமா?//

அப்படியெல்லாம் எடுத்துக் கொள்ள வேண்டாம் தோழர். கேரளாவில் தெருவுக்கு தெரு சின்னதாக பிள்ளையார் கோயில் இருந்தாலும், ஊருக்கு ஊர் பெரிய, பெரிய கோயில்கள் நிறைய உண்டு. தமிழ்நாட்டிலோ காஞ்சிபுரம், மதுரை என்று குறிப்பிட்ட சில நகரங்களில் தான் பெரிய கோயில்கள். சபரிமலையில் ஒரு சீஸனுக்கு ஆகும் கலெக்சனை தமிழக அறநிலையத்துறை எடுக்க கால்நூற்றாண்டு இங்கே பிடிக்கும். சிறிய மாநிலமான கேரளாவில் இருக்கும் பெரிய கோயில்களை காண இந்த சுட்டியை உபயோகப்படுத்தவும் : http://www.templenet.com/kerala.html

//சொன்னாலும் சொல்ல வில்லை என்றாலும் அங்கே வாழ்க்கைத்தரம் உயர்ந்துதான் இருக்கிறது. நீங்களும் நேரடியாக போய் பாருங்களேன்.
//

தோழர்! இஷ்டத்துக்கும் நீங்கள் டகுலு உட்டால் அதை கேட்டுக் கொண்டு போக நானென்ன தெருமுனை பிரச்சாரத்தையா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

இந்தியாவிலேயே க்ரைம் ரேட் அதிகமாக இருக்கும் மாநிலம் கேரளம். ஒரு லட்சம் மக்களுக்கு 322.9 குற்றங்கள் நடைபெறும் மாநிலம். இந்தியாவின் சராசரியே ஒரு லட்சத்துக்கு 169 குற்றங்கள் தான்.

குற்றங்கள் அதிகமாக இருக்கும் ஒரு மாநிலத்தில் மக்களின் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது, நிம்மதியாக இருக்கிறார்கள் என்றெல்லாம் சொன்னால் அதை நம்பிக்கொண்டு போக நானென்ன ஆடு, மாடா?

இந்தியாவில் தற்கொலை செய்துகொள்பவர்களின் சதவிகிதமும் கேரளாவில் தான் அதிகம் என்பதையாவது உங்களுக்கு பயிற்சியில் சொன்னார்களா? இல்லையா?

நீங்களெல்லாம் ஒப்புக்கொண்டாலும், ஒப்புக்கொள்ளாவிட்டாலும் நீங்கள் ஆளும் மாநிலங்களை விட பன்மடங்கு அமைதிப்பூங்காவாக தான் தமிழ்நாடு இருக்கிறது. அதனால் தான் இங்கிருக்கும் மக்களுக்கு நீங்கள் தேவைப்படுவதில்லை.

தோழர்!

இன்னும் எத்தனை காலத்துக்கு தான் கேரளாவையும், மேற்குவங்காளத்தையும், சீனாவையும், க்யூபாவையுமே பார்த்துக் கொண்டிருக்கப் போகிறீர்கள். தமிழ்நாட்டையும் கொஞ்சம் பாருங்கள். தனித்து நிற்பதற்கான பலமாவது கிடைக்கும்.

லக்கிலுக் said...

தோழர் சந்திப்பு!

கேரளாவில் அது இருக்கிறது தமிழ்நாட்டில் இருக்கிறதா என்பது மாதிரியான உங்களது கேள்விகள் இன்னும் கூடுதல் நகைச்சுவையை அளிக்கிறது.

தமிழ்நாட்டில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம், கேரளாவில் வழங்கப்படுகிறதா?

தமிழ்நாட்டில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசி நியாய விலைக்கடைகளில் மாதம் இருபது கிலோ வழங்கப்படுகிறது. கேரளாவில் இந்த நிலை இருக்கிறதா?

தமிழ்நாட்டில் கைரிக்‌ஷா இல்லை. மேற்கு வங்காளத்தில் இன்னமும் கையில் தான் ரிக்‌ஷா ஓட்டுகிறார்கள்.

இந்த மாதிரியெல்லாம் கேரளாவில் இருக்கு ஓரிரு நல்லவிஷயங்களை ஒப்பிட்டு உங்களை நீங்களே ஏமாற்றிக் கொள்ளாதீர்கள்.

முடிந்தால் தினமும் நூற்றுக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் கேரளத்தவர்களின் உயிரை காப்பாற்ற ஏதாவது திட்டம் போடுங்கள்.

சந்திப்பு said...


தோழர்! இஷ்டத்துக்கும் நீங்கள் டகுலு உட்டால் அதை கேட்டுக் கொண்டு போக நானென்ன தெருமுனை பிரச்சாரத்தையா வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறேன்.


தோழர் லக்கி கீழ்க்கண்ட விவரத்தை சற்று நோக்குங்கள். கேரளாவில் சுகாதாரம் மற்றும் உடல் நலத்தில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்கள் என்பது புரியும். உலக சுகாதார அமைப்பு கேரளா குறித்து தெரிவித்துள்ள கருத்தை கீழே கொடுத்துள்ளேன். படிக்கவும்.

http://www.igovernment.in/site/Health-scenario-in-Kerala-improving-WHO/?section=Heaடவா/

Health scenario in Kerala improving: WHO
Kerala is really doing well to improve its health scenario, the WHO said. It said inequalities in living standards are responsible for health problems

Published on 8/29/2008 1:33:30 PM


New Delhi: Kerala is really doing well to improve its health scenario, the World Health Organisation (WHO) said on Thursday while pointing out that inequalities in living standards are responsible for the death of people on a 'grand scale' across the world.

"Our children have dramatically different life chances depending on where they were born. In Japan or Sweden they can expect to live more than 80 years, in Brazil 72 years, India 63 years, and in one of several African countries fewer than 50 years," the WHO said in a fresh report.

The toxic combination of bad policies, economics, and politics is, in large measure responsible for the fact that a majority of people in the world do not enjoy the good health that is biologically possible, reports IANS quoting the global health watchdog.

Wealth alone does not have to determine the health of a nation's population, WHO said.

"Some low-income countries such as Cuba, Costa Rica, China, state of Kerala in India and Sri Lanka have achieved levels of good health despite relatively low national incomes," WHO added.

However, the report stopped sort of spelling out achievements of Kerala, the most literate state of the country.

India's Self-Employed Women's Association Social Security Coordinator Mirai Chatterjee said, "The report suggests avenues for action from the local to national and global levels. Policy makers, health officials, grassroot activists and their community-based organizations have eagerly awaited it."

The association is a trade union of over nine lakh self-employed women in the country.

"Much of the research and evidence is of particular relevance to the Southeast Asian region, where too many people struggle daily for justice and equity in health. The report will inspire the region to act and develop new policies and programmes," Chatterjee said.

WHO's Commission on the social determinants of health that prepared the report informed WHO Director General Margaret Chan that the social injustice is killing people on a grand scale.

Central to the commission's recommendations is creating the conditions for people to be empowered, to have freedom to lead flourishing lives, the Commission Head Michael Marmot said.

"Nowhere is lack of empowerment more obvious than in the plight of women in many parts of the world. Following our recommendations would dramatically improve the health and life chances of billions of people," Marmot sயனை.



கீழ்கண்ட பதிவினையும் படியுங்கள். அவர்கள் எந்த அளவிற்கு வாழ்க்கைத்தரத்தில் முன்னேறியுள்ளார்கள் என்பது புரியும்.

http://query.nytimes.com/gst/fullpage.html?res=9F0CE1DD103DF93BA1575AC0A965958260&sec=&sடிிn=


Your front-page article Sept. 7 raises the question of whether or not there is a link between repression and improvements in the quality of life in China. While China may not be democratic, you point out, life there is better for millions than in the more democratic country of India.

But India is a varied country and statistics for the whole nation do not hold for all the individual states. Kerala, in the extreme southwest corner of India, has the lowest per capita gross national product of any Indian state, yet its quality-of-life indicators compare very favorably to China's.

For example, life expectancy is 68; infant mortality, 27 per 1,000; the literacy rate is 90 percent, and there is virtually no female infanticide, which is not the case in China. These impressive facts are the result of far-reaching reforms that have occurred in Kerala, achieved through the organized efforts of its people.

While these successes did not come easily, there was no sacrifice of democracy. Kerala shows that popular participation, the essence of democracy, is a major part of improving life. BARBARA H. CHASIN Upper Montclair, N.J., Sept. 20, 1993 The writer, professor of sociology at Montclair State College, is co-author of "Kerala: Radical Reform as Development in an Indian Staவந."


ஆடுத்து தோழர் லக்கி. கேரளாவில் செயல்படும் உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு 40 முதல் 50 சதவிகிதம் நிதி ஒதுக்கப்படுகிறது. தமிழகத்தில் இது வெறும் 9 சதவிகிதம் மட்டுமே. அங்கே மக்கள் நேரடியாக தங்களை ஆட்சி செய்கிறார்கள். இங்கே எதிர்கால மன்னர்கள் ஆட்சி புரிகிறார்கள். இதுதான் வித்தியாசம். அது சரி! நீங்கள் தமிழகத்தை இதுபோல் மாற்ற என்ன செய்யப்போகிறீர்கள்?


நீங்கள் சொன்னதில் ஒரு விசயம் தற்கொலை அதிகம் என்பது. அதற்கு வறுமை காரணம் அல்ல.பட்டினியால் யாரும் சாவதில்லை. அல்லது விவசாயம் நொடிந்ததால் சாவதில்லை.

தமிழகம் அமைதி பூங்கா என்பது உண்மைதான். அதை மக்கள்தான் நம்பத் தயாராக இல்லை. சென்னையில் மட்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கொலை - கொள்ளைகள் அதிகமாக நடந்தேறியுள்ளது. இதுவும் இந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைதான்.

லக்கிலுக் said...

தோழர் சந்திப்பு!

//தோழர் லக்கி கீழ்க்கண்ட விவரத்தை சற்று நோக்குங்கள். கேரளாவில் சுகாதாரம் மற்றும் உடல் நலத்தில் எந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்கள் என்பது புரியும். உலக சுகாதார அமைப்பு கேரளா குறித்து தெரிவித்துள்ள கருத்தை கீழே கொடுத்துள்ளேன். படிக்கவும்.//

சும்மா சும்மா காமெடி செய்யவேண்டாம். உங்கள் கேரளாவை ஒரிஸ்ஸாவோடோ அல்லது பீகாரோடோ ஒப்பிட்டு சிலாகித்துக் கொள்ளவும்.

சுகாதாரத்துறையில் தமிழ்நாடு கடந்த இருபதாண்டுகளில் செய்திருக்கும் சாதனைகளை இந்திய அளவில் எந்த மாநிலமுமே செய்ததில்லை. அளவில் சிறிய கேரளாவில் கூட எத்தனை ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவம் செய்யும் வசதி இருக்கிறது.

தமிழ்நாட்டில் 1400க்கும் மேற்பட்ட எல்லா ஆரம்ப சுகாதார நிலையமுமே பிரசவ நிலையங்களாக தரம் உயர்த்தப்பட்டிருக்கிறது தெரியுமா? இந்தியாவிலேயே தமிழ்நாட்டுக்கு மட்டும் தான் இந்தப் பெருமை உண்டு.

தமிழக பொதுசுகாதாரம் பற்றி இந்த இணையத்தில் காணுங்கள். நிறைய தகவல்கள் கிடைக்கக் கூடும். உங்களுக்கு இணையத்தில் வாசிக்க கடினமாக் இருந்தால் சொல்லுங்கள், நமது நண்பர் ஒருவர் பொதுசுகாதாரத் துறையில் பணியாற்றுகிறார். அவரை அழைத்து உங்களுக்கு சொல்லச் சொல்கிறேன்.

http://www.tnhealth.org/information.htm

தம்மாத்தூண்டு கேரளாவை நிர்வகிக்கவே திணறிக்கொண்டிருக்கும் உங்கள் அரசு தமிழ்நாட்டோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வது என்பது எறும்பு யானையோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வதற்கு இணையானது.


//கீழ்கண்ட பதிவினையும் படியுங்கள். அவர்கள் எந்த அளவிற்கு வாழ்க்கைத்தரத்தில் முன்னேறியுள்ளார்கள் என்பது புரியும்.//

வாழ்க்கைத்தரத்தில் முன்னேறுபவர்கள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்வார்களா? என்ற அடிப்படைக்கேள்வி கூட உங்களுக்கு எழாத அளவுக்கா இயக்கத்தில் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள்?


//சென்னையில் மட்டும் தி.மு.க. ஆட்சிக்கு வந்ததற்கு பிறகு கொலை - கொள்ளைகள் அதிகமாக நடந்தேறியுள்ளது. இதுவும் இந்த தி.மு.க. ஆட்சியின் சாதனைதான்.//

பொத்தாம்பொதுவாக கொலை, கொள்ளையென்று கூப்பாடு போடுவதுதான் மார்க்சிஸ்டுகளுக்கு வழக்கமாகி விட்டது. புள்ளிவிவரங்களோடு சொல்லி இருந்தேன் க்ரைம் ரேட்டில் இந்தியாவிலேயே அதிகமாக இருப்பது கேரளா என்று. முடிந்தால் அதுபோன்ற புள்ளிவிவரத்தை சொல்லிவிட்டு தமிழ்நாட்டை பற்றி பேசுங்கள்.

உங்கள் ஆட்சியில் இருக்கும் மாநிலம் காறி உமிழப்பட்டிருக்கிறது. பாருங்கள்

http://news.indiainfo.com/2008/01/13/0801131225_india_crime_record.html

அறிவகம் said...

திரு. சந்திப்பு கேரளாவை மிக அருமையாக புரிந்து எழுதியுள்ளீர்கள். இது உங்களுக்கு.

அடுத்து லக்கிலுக் போன்ற சில சின்னபுத்திகளுக்கு

லக்கிலுக் போன்ற சிலருக்கு பிரிவினை பால் பேசியே பழக்கப்பட்டுவிட்டது. தெரியாமல் கேட்கிறேன் சாதிபெயரில் பிரித்தார்கள், மதப்பெயரில் பிரித்தாரர்கள் என வசைபாடும் சில போலி பகுத்தறிவுவாதிகளே நீங்கள் கட்சியின் பெயரில் பிரிப்பது மட்டும் தீண்டாமையாக தெரியவில்லையா?

சிலர் ஜாதியில் மதத்தில் பிரிவினை கொண்டாடுகிறார்கள். நீங்கள் கட்சி பெயரில் கொண்டாடுகிறீர்கள். இரண்டுக்கும் என்ன வித்தியாசம். ஒரு உண்மை தெரியுமா? சாதி மதம் பெயரால் சண்டையிடும் போது எந்த பக்கத்துவீட்டுக்காரனும் அடித்துக்கொள்ள மாட்டான். ஆனால் நீங்கள் கட்சி பெயரில் மனித தன்மையற்ற மிருகத்தனமான கொலைவெறியாட்டங்கள் ஆடுகிறீர்களே அப்போது பார்க்கமுடிகிறது உங்கள் சமத்துவம்.

திரு. லக்கிலுக்கின் சில பின்னூட்டங்கள் மனதை கொதிப்படைய வைத்துவிடுகிறது. கோபத்தை வெளிக்காட்டாமல் இருக்க முடிவதில்லை. இன்னும் தமிழ்நாட்டை ஏமாற்றாதீர்கள்.
கேரளா என்றால் என்ன தெரியும் உங்களுக்கு?

தமிழ்நாட்டில் ஒரு மளையாள மொழி பேசுபவர் எனக்கு மளையாளத்தில் அரசு ஆவனங்களை தாருங்கள் என கேட்டால் உடனே தந்துவிடுவீர்களா? கேரளாவை பாருங்கள் கேட்காமல் தருகிறார்கள்.

தமிழக்த்தில் எத்தனை மலையாள அரசு பள்ளிகள் உள்ளது? கேரளாவில் உள்ள தமிழ்பள்ளி, கல்லூரி, பல்கலைகழகங்களை ஒருமுறை வந்து பாருங்கள் கல்வி தரத்தை. கேரள அரசு விளம்பரங்கள் மற்றும் அறிவிப்புகளை தமிழிலேயே தமிழ், மலையாள பத்திரிக்கைளில் தருகிறது.

அறிவிக்கப்படாமல் அரைமணி நேரம் மின்வெட்டு என்றால் அடுத்த நாள் மின்சாரதுறை அமைச்சர் நீதிமன்றத்தில் பதில் சொல்லியாக வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில்....?

சிக்கன்கூனியா பரவி ஒரு உயிர் இழந்ததற்காகவே சுகாதார அமைச்சர் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்த அதே நாள்தான் தமிழகத்தை சேர்ந்த மத்திய சுகாதார துறை அமைச்சர் இந்தியா நாட்டிலேயே சிக்கன் கூனியாவே இல்லை என வாதிட்டார். இதில் யார் சொல்வது உண்மை என உலகுக்கே தெரியும்.

அதே போல இந்தியாவில் ஜனநாயகத்துக்கு கம்பீரம் சேர்க்கும் பல முக்கிய திருப்புமுனை தீர்ப்புகள் கேரளநீதிமன்றங்களில் இருந்து வந்தது தான்.

கேரள முதல் அமைச்சர் மாதத்திற்கு மூன்று முறையாவது தன் தொகுதிக்கு வந்து செல்கிறார். சனிக்கிழமை தோறும் பகல் 12 மணிக்கு அரசு தொலைகாட்சியில் மக்கள் குறைகளை நேரடியாக கேட்டறிந்து ஆன்லைனிலேயே அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கிறார். இதை நேரடி ஒளிபரப்பாக வாரவாரம் கேரள அரசு(D.D) தொலைகாட்சியில் பார்க்கலாம். அமைச்சர்கள் பஸ்சிலும் ஆட்டோவிலும் பயணம் செய்கிறார்கள். ஐம்பது அம்பாசிட்டர் கார்கள் பின்னாடி சங்கூதிக்கொண்டு வருவதில்லை.

இதெல்லாம் முதல்வன் பட கதையல்ல. கேரளாவில் அன்றாடம் சர்வசாதாரணமாக நடக்கும் நிகழ்ச்சிகள்.

இங்கு நான் கேரளாவில் பிரிவினை இல்லை. சாதிதீண்டாமை இல்லை. கேரளாவை விட தமிழகம் மோசமானது என்று சொல்கிறேன் என்று உங்கள் சின்ன புத்தியை காட்டிவிடாதீர்கள்.

கேரளாவாகட்டும் தமிழகமாகட்டும் எல்லா மாநிலங்களிலும் நாட்டிலும் குறை நிறைகள் இருக்கிறது. ஆனால் கேரளன், மலையாளி, அந்த கட்சி, இந்த கட்சி என வசைபாடும் உங்களை போன்ற சிலரின் அறியாமை தமிழுக்கும் தமிழருக்குமே அவமானம்.

நான் மலையாளம் மற்றும் தமிழ் வலைதளங்களை சரிசமமாக பார்வையிடுபவள். எந்த மலையாள தளத்திலும் தமிழர்களை கேவலப்படுத்தி எழுதுய எழுத்துக்களை பார்க்கவிலலை. ஆனால் உங்களை போன்ற சிலரின் வலைதளங்களில் இனத்தீண்டாமையே மேலோங்கி நிற்கிறது. சமீபத்தில் மலையாளத்தானுக... மலைநாட்டு மச்சான் போன்ற கேவலமான பதிவுகளை கூட பார்க்க நேர்ந்தது.

ஏன் உங்களுக்கு இந்த சின்ன புத்தி. கொஞ்சம் அறிவுடமையுடன் எழுதுங்கள்.

நன்றி.

அறிவகம் said...

திரு. லக்கிலுக்...

எயிட்ஸ் நோய் முதல் முதலில் கண்டறியப்பட்ட போது இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் எயிட்ஸ் நோய் அதிகம் என்றார்கள். அது எதற்காக? அப்போது தமிழகத்தில் தான் எயிட்ஸ் பரிசோதனைகள் அதிகம் செய்யப்பட்டது. அதனால் எயிட்ஸ் நோயாளிகள் அதிகம் அடையாளம் காணப்பட்டார்கள். மற்ற மாநிலங்களில் அவ்வளவாக பரிசோதனை செய்யாததால் எயிட்ஸ் நோயாளிகள் அடையாளம் காணப்படவில்லை.

அதற்காக மற்ற மாநிலங்களை விட தமிழகத்தில் தான் எயிட்ஸ் நோய் அதிகம் என சொல்லமுடியுமா? அதே போல தான் கேரளாவில் குற்றங்களும்.

இங்கு குற்றங்கள் உடனுக்குடன் அடையாளம் காணப்பட்டு வெளிக்கொணரப்படுகிறது. ஆனால் உங்களை போன்றோர் குற்றங்களை மூடி மறைக்கவே ஒரு சாப்ட்வேர் கண்டுபிடித்து வைத்துள்ளீர்கள்.

உங்கள் டி. ஆர். பி ரேட்டிங் போல அல்ல புள்ளி விபரங்கள் கொஞ்சம் ஆழமாக யோசியுங்கள்.

சந்திப்பு said...

Thanks

அறிவகம். I will put brief comment next day.

Anbudan
K. Selvaperumal

சந்திப்பு said...


தம்மாத்தூண்டு கேரளாவை நிர்வகிக்கவே திணறிக்கொண்டிருக்கும் உங்கள் அரசு தமிழ்நாட்டோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வது என்பது எறும்பு யானையோடு தன்னை ஒப்பிட்டுக் கொள்வதற்கு இணையானது.


எறும்பாக இருந்தாலும் யானையாக இருந்தாலும் அது பலமாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கிறதா? என்பதுதான் பிரச்சினை! யானை பலமாக இருக்க வேண்டும் என்பது நம் எல்லோருடைய எதிர்பார்ப்பு. இருப்பினும் இங்கே விவாதிக்கக்கூடிய விசயம் என்ன? கேரளா பல விசயங்களில் முன்னேறியுள்ளது. இதனால் அம்மக்கள் பல நலன்களை பெற்றுள்ளார்கள் என்பதுதான். ஆனால் தமிழகத்தில் திராவிட முன்னேற்ற கர்த்தாக்களின் குடும்பங்கள் மட்டுமே முன்னேறியுள்ளது. மந்திரிகள் எல்லாம் இன்றைக்கு ரியல் எஸ்டேட் கொள்ளையர்களாக மாறி் விட்டார்கள். இதனைதான் நீங்கள் யானையோடு ஒப்பிடுகிறீர்களா என்று சந்தேகிக்கிறேன் லக்கி. எனவே தமிழகத்தில் நிறையே இல்லை என்று இங்கு யாரும் வாதடவில்லை. இருப்பினும் செல்ல வேண்டிய தூரம் நிறைய இருக்கிறது. உதாரணம் கேரளாவலி் 1957லேயே நிலச் சீர்திருத்தம் செய்து தலித் உட்பட பெருவாரியான நிலமற்ற கூலி விவசாயிகளுக்கு நிலம் கிடைத்திருக்கிறது. ஆனால் தமிழகம்? இன்றைக்கும் கிராமப்புறத்தில் நிலப்பிரபுத்துவம் கோலோச்சுகிறது. ஏன் ஒவ்வொரு மந்திரிக்கும் எவ்வளவு நிலம் இருக்கிறது என்று வெளிப்படையாக கணக்கு காட்ட முடியுமா? அதை விடுவோம் 50 லட்சம் ஏக்கர் நிலம் உபரியாக இருக்கிறது என்று கணக்கு காட்டிய தி.மு.க. இன்றைக்கு அப்படியே பல்டி அடிக்கிறது. ஆட்சிக்கு வந்து இதுவரை வெறும் ஒரு லட்சம் ஏக்கர் மட்டும்தான் விநியோகித்துள்ளார்கள். மீதம் உள்ள நிலம் என்ன ஆச்சு? கேரளாவில் இப்படியெல்லாம் யாரும் ஏமாற்றுவதில்லை.


வாழ்க்கைத்தரத்தில் முன்னேறுபவர்கள் அதிகளவில் தற்கொலை செய்துக் கொள்வார்களா? என்ற அடிப்படைக்கேள்வி கூட உங்களுக்கு எழாத அளவுக்கா இயக்கத்தில் மூளைச்சலவை செய்திருக்கிறார்கள்?


வாழ்க்கைத்தரத்தில் முன்னேறியவர்கள் தற்கொலை செய்து கொள்ள மாட்டார்கள் என்பது உங்களது புதிய கண்டு பிடிப்பா? அப்படியானல் இந்த வருடம் இதற்காக தமிழக அரசின் விருதை உங்களுக்கு வழங்க நான் பரிந்துரைக்கிறேன்.

சந்திப்பு said...

அறிவகம் தங்களது பதிலுக்கு மிக்க நன்றி.

இவாளுக்கு எப்போதும் பிரிவினைவாதம், சாதியவாதம் என்றால் கொள்ளைப் பிரியம். எப்போதெல்லாம் கொள்கை வேட்டி காணாமல் போகிறதோ? அப்போதெல்லாம் இவை தேவைப்படுகிறது. இதுதான் தி.மு.க.வின் அடிப்படை கொள்கை.

Anonymous said...

தோழர் சந்திப்பு சினிமா படப்பிடிப்பிற்காக கேரளா என்று
பெயரிடப்பட்ட அரங்கிற்கு சென்று
அங்கு இருந்தவர்களைப் பார்த்து,அங்கு இருப்பதை பார்த்து வந்திருக்கிறார்.அவர் அதைச் சொல்ல மறந்துவிட்டார்.

முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு போய்விட்டு வந்து அது பூலோக சொர்க்கம், அங்கு மக்கள் மகிழ்ச்சியாக,நிம்மதியாக,
சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று
எழுதினார்கள் அல்லவா.அது போல்தான் இதுவும்.

லக்கிலுக் said...

தோழர் சந்திப்புக்கும், பெயரில் மட்டுமே அறிவை கொண்டிருக்கும் நண்பருக்கும்...

http://mediaservice.digitaltoday.in/indiatoday///images/stories/Anjali/080912043948_states-lead1_Enlarge_1.gif

திமுக ஆட்சியில் தமிழகம் முன்னேறுவதும், கம்யூனிஸ்டுகள் ஆட்சியில் கேரளம் பின்னேறுவதும் தெளிவாக ஆதாரங்களோடு போடப்பட்டிருக்கிறது.

நீங்கள் பூனைகள், கண்ணை மூடிக்கொண்டே பூலோகத்தை பார்த்துக் கொண்டிருங்கள் :-))))))))

சந்திப்பு said...

தோழர் லக்கி இங்கே நாம் மோதிக் கொள்வது விதண்டாவாதம் செய்வதற்காக அல்ல. நாடு முழுவதும் முன்னேற வேண்டும் என்பதற்காகத்தான். அதே சமயம் தமிழகத்தில் பெரியார் - அண்ணா நூற்றாண்டுகளை கொண்டாடும் நேரத்தில் சில விஷயங்களைக் கூட பரிசீலித்தால் அதில் எந்த அளவிற்கு உண்மை இருக்கிறது என்பதை பரிசீலிக்க மாட்டீர்களா? எனவே எதிர்பார்ப்புக்கும் ஏமாற்றத்திற்கும் உள்ள வித்தியாசத்தை உணருங்கள். கேரளாவில் எதிர்பார்ப்பை விட அதிகமாக முன்னேறியிருக்கிறார்கள் என்பது உண்மை.

நீங்கள் கொடுத்துள்ள புள்ளி விவரத்திலேயே கேரளா இரண்டாவது இடத்தில் உள்ளது. தமிழகம் நான்காவது இடத்தில் உள்ளது. இதைவிட வேறு ஆதாரம் தேவையா? என்ன? அல்லது உங்களுக்கு ஒரு கண்ணில் வெண்ணையும் - இன்னொரு கண்ணில் சுண்ணாம்புடம் தடவிக் கொண்டுதான் பார்ப்பீர்களா?


ஒருவருக்கு அறிவேயில்லை என்பது பகுத்தறிவு பாலகனின் கண்டு பிடிப்பா? சூப்பர்!...........

சந்திப்பு said...

அறிவகம் எழுப்பியுள்ள எந்த கேள்விக்கும் பதிலைச் சொல்லாமல் நழுவி விட்டு... அவருக்கு அறிவு இல்லை என்று கூறுவது புதிய நாகரீகமா? இல்லை ஒருவேளை நீங்கள் எப்போதும் அறிவாளிகளோடுதான் விவாதிப்பீர்களா? விளக்கவும்.

சந்திப்பு said...


முன்பெல்லாம் ரஷ்யாவிற்கு போய்விட்டு வந்து அது பூலோக சொர்க்கம், அங்கு மக்கள் மகிழ்ச்சியாக,நிம்மதியாக, சுதந்திரமாக இருக்கிறார்கள் என்று எழுதினார்கள் அல்லவா.



மன்னாங் கட்டி. அன்று ரஷ்யா சொர்க்கமாக இருந்தது உண்மைதான். இதனை சொல்வதற்கு ஒரு கம்யூனிஸ்ட் தேவையே இல்லை. பெரியார் முதல் நேரு வரை பலரும் ரஷ்யா சென்று வந்த பிறகுதான் தங்களது கருத்தையே மாற்றிக் கொண்டார்கள். இன்றைக்கு ரஷ்யா இல்லாமல் போனதற்கு வேறு சில காரணங்கள் உண்டு. அது இந்த விவாதத்தில் தேவையற்றது.

அதுபோலத்தான் இப்போது கேரளாவும் மனித வளத்தில் உயர்ந்து வருகிறது. இந்த கருத்தை சொல்வதற்கே முகமூடி தேவைப்படுகிறது என்றால் சமூகத்தில் நீங்களெல்லாம் என்னத்தப் பண்ணப்போறீங்களோ?

லக்கிலுக் said...

தோழர் சந்திப்பு!

எதையும் மேம்போக்காக தான் பார்ப்பீர்களா? நான் கொடுத்த சர்வேயை சொன்னேன்.

2008ல் தமிழ்நாடு, கேரளா இரண்டுக்காம இடம் என்று பாருங்கள். கடந்த வருடங்களை நினைத்தே அசைப்போட்டுக் கொண்டிருக்காதீர்கள்.

காங்கிரஸ் ஆட்சியில் இருந்த காலத்தில் கேரளா 2வது இடத்திலும், இப்போதைய கம்யூனிஸ்டுகளின் ஆட்சி லட்சணத்தில் 4வது இடத்துக்கும் வந்திருப்பதை பாருங்கள்!!!

அதிகமான மக்கள் தற்கொலை செய்துகொள்ளும் மாநிலத்தில் வாழ்க்கைத்தரம் உயர்ந்திருக்கிறது என்று பேசுவது தான் விதண்டாவாதம் :-)

திமுக ஆட்சிக்கு வரும்போதெல்லாம் தமிழகம் சகல் துறைகளிலும் முன்னேறிக் கொண்டே வருகிறது என்பது தான் வரலாறு, நீங்கள் ஒத்துக்கொண்டாலும், ஒத்துக்கொள்ளாவிட்டாலும்...


அப்புறம்

//அடுத்து லக்கிலுக் போன்ற சில சின்னபுத்திகளுக்கு//

இந்த மாதிரி எழுதும் புண்ணாக்குகளிடம் விவாதித்து என்னத்தை ஆகப்போகிறது :-)

இந்த புண்ணாக்குகள் பேச்சை எவனும் கேட்காமல் அதுங்களாகவே தங்களுக்கு தாங்களாகவே பேசி பிழைப்பை ஓட்டுக் கொள்ளவேண்டுமென்பது தான் இந்த நாட்டாமையின் தீர்ப்பு!! :-)))))

அறிவகம் said...

திரு. லக்கிலுக்...

சின்னபுத்தி என்றால் குறுகிய அறிவு உள்ளவர்கள் அதாவது குறுகிய கண்ணோட்டம் உள்ளவர்கள் என்று பொருள். தவறான அர்த்தம் தங்களுக்கு புரிந்திருந்தால் மனப்பூர்வமாக மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். நன்றி.