September 20, 2008

மொபைல் கல்ச்சர் மொக்கை சமாச்சாரமா?


உடுக்கை இழந்தவன் கைப்போல என்ற சொலவடை தமிழில் புகழ் பெற்றது. அதுவே இன்றைக்கு மொபைல் இல்லாதவன் கைப்போல என்று மாற்றிச் சொல்லக்கூடிய அளவுக்கு கல்ச்சர் வளர்ந்து விட்டது. மொபைல் இல்லாத இளையவர்களை பார்ப்பது அபுர்வமானது. அந்த அளவுக்கு அது அத்தியாவசியமான பொருளாகி விட்டது.

சரி, விசயத்திற்கு வருவோம்! மொபைல் போன் வெறுமனே பேசுவதற்கு மட்டுமே என்ற நிலையிலிருந்து மாறி அது பன்முகப் பயன்பாடுள்ள கருவியாகி நாளொரு மேனியாக பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது. இந்த வளர்ச்சி தேவையா? என்றால் தேவையதான். மொபைல் போன்ற தொழில்நுட்பம் வளர்ந்த அளவிற்கு நம்முடைய கலாச்சாரம் - பண்பாடு - கல்ச்சர் வளர்ந்துள்ளதா? அதாவது இந்த மொபையில் போன்ற வந்ததற்கு பிறகு உள்ளதும் போச்சுடா நொள்ளக் கண்ணா என்ற நிலைதான் நினைவுக்கு வருகிறது.

முன்பெல்லாம் இரயிலில் பயணம் செய்தால் பெரும்பாலானவர்கள் கையில் ஏதோ ஒரு புத்தகம் உரையாடிக் கொண்டிருக்கும். அது குமுதமாக இருக்கலாம்... அல்லது ஆனந்த விகடனாக இருக்கலாம்.... அமுதசுரபியாக இருக்கலாம்... இலக்கியம் முதல் இல்லறம் வரை இரயிலுக்குள் எப்போதும் சூடான விவாதம் நடந்துக் கொண்டே இருக்கும்.

அப்புறம் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வதன் மூலம் முகம் தெரியாதவர்களுடன் கூட புதிய நட்பு உலகம் கிடைத்துக் கொண்டே இருக்கும். கற்றுக் கொள்வதற்கு நிறைய வாய்ப்புகள் இருந்தது.

இப்ப என்ன நடக்கிறது. காதையும் - கண்ணையும் மூடிக் கொண்டு பக்தி பரவசமான நிலையில் உள்ளவர்களைப் போல் சினிமா பாடல்களைக் கேட்டுக் கொண்டேயிருக்கும் வாலிபர்களையும் - யுவதிகளையும்தான் பார்க்க முடிகிறது.

இதுல இந்த புதுசா நல்ல விலை உயர்ந்த மொபைல் போன் வாங்குறவங்கள் தொல்லை தாங்க முடியலை. அதாவது பக்கத்துல என்ன நடக்குது என்றுக் கூட தெரியாமல்... அவருடைய போனின் அருமை பெருமைகளை உலகுக்கே ஒலிபரப்பும் முயற்சியில் அதிகமான சவுண்டில் சினிமா பாடல்களைப் எல்லோருக்கும் கேட்கும்படியாக வைத்து விடுகிறார்கள். இதனால் இரயிலிலோ அல்லது பேருந்திலோ பயணம் செய்யும் பயணிகள் பாடு திண்டாட்டம்தான். அன்றாட பேப்பரைக் கூட படிக்க முடியாத நிலைக்கு தள்ளி விடுகிறார்கள்.

மற்றவர்கள் தங்களை ஒரு கேலிப் பொருள் போல பார்ப்பார்களே என்ற சிந்தனைக் கூட இல்லாமல் ... அடுத்தடுத்த பாடல்களை போட்டுக் கொண்டே வருகிறார்கள். யாருக்காவது ஒரு போன் கால் வந்தால்கூட இந்த சத்தத்தில் பேசவும் முடியாமல் முழிப்பதைப் பார்க்ணுமே!... அன்புமணி இராமதாஸ் பொது இடத்தில் சிகரெட் பிடிக்கக் கூடாது என்று சட்டம் கொண்டு வரப்போகிறார். அதுபோல மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை பொது இடத்தில் மொபைலில் பாட்டு வைக்க கூடாது என்று சட்டம் கொண்டுவந்தால் கூட நல்லாத்தான் இருக்கும். பாட்டு வேண்டும் என்பவர் அவர் காதுக்கு மட்டும் கேட்கக் கூடிய கருவியை மாட்டிக் கொண்டு எவ்வளவு சவுண்ட வைத்துக் கொண்டு கேட்டாலும் யாருக்கும் எந்த தொந்தரவும் இல்லை. இந்த உலகமய யுகத்தில் சிந்தனைக்கு சவால் இந்த மொபைல்தான். இதிலிருந்து விடுபடுமா? நம் தமிழ் சமூகமும்! இந்திய சமூகமும்!

குறைந்த பட்சம் நம்முடைய வலைப்பதிவுவாசிகளாவது இந்த கலாச்சாரத்தை பரப்பிட முயற்சி எடுக்கலாம். வாய்ப்பு இருப்பவர்கள் ஒரு துண்டுப் பிரசுரம் கூட அடித்து பையில் வைத்துக் கொண்டு போகிற இடத்தில் யாரெல்லாம் மொபைல் போன் வைத்திருக்கிறார்களோ அவங்களுக்கு விநியோகிக்கலாம்... எதற்றும் முயற்சிப்போமே!

2 comments:

Subash said...

நல்ல விடயம் நண்பரே.
நானும் இம்மாதிரியான விஷயங்களால் வெறுத்துப்போயிருக்கிறேன்.

மங்களூர் சிவா said...

அருமையான விசயம்.