August 21, 2007

123 உடன்பாடும் அமெரிக்க நீலிக் கண்ணீரும்!


இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு நாடு முழுவதும் பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. உலகம் முழுவதும் உள்ள நாடுகள் அடுத்து என்ன நடைபெறப் போகிறது என்று நம்மை உற்று நோக்கியுள்ளன. அடுத்து நாம் என்ன செய்யப் போகிறோம். குறிப்பாக இடதுசாரிகள் முன்வைத்துள்ள - எழுப்பியுள்ள கேள்விகளுக்கு - சந்தேகங்களுக்கு அரசு என்ன தீர்வு காணப்போகிறது?

தற்போது ஏற்பட்டுள்ள இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு யாருடைய நலனை முன்னிறுத்தியுள்ளது? எதிர்காலத்தில் எப்படிப்பட்ட விளைவுகளை நாம் சந்திக்க வேண்டியுள்ளது? இதுவரை நாம் கடைப்பிடித்து வந்த அணி சேரா கொள்கை முதல் சுயேச்சையான வெளியுறவு கொள்கை வரை அனைத்தும் கேள்விக்குறியாகி உள்ளது!

2005 ஆகஸ்டில் புஷ் - மன்மோகன் கூட்டறிக்கை வெளியிட்ட போதே இடதுசாரிகள் தங்களது அதிருப்தியை தெரிவித்தனர். இது நம்முடைய சுயேச்சையான அணு சக்தி மற்றும் இராணுவம் சார்ந்த நலனை பாதிக்கும் என்று அறுதியிட்டு கூறி வந்தன.

இந்த 123 உடன்பாட்டின் மூலம் நமக்கு என்ன கிடைக்கப் போகிறது? அமெரிக்காவுக்கு என்ன கிடைக்கப் போகிறது? இத்தகைய உடன்பாட்டை மேற்கொள்வதன் மூலம் ஏகாதிபத்திய சிலந்தி வலையில் நம்மை எவ்வாறு சிக்க வைக்க அமெரிக்கா முனைகிறது என்பதே பிரதானமானது.

இந்தியாவின் மின் சக்தி தேவையை பூர்த்தி செய்வதற்கு அணு மின் நிலையங்களாலேயே முடியும் என நமது ஆட்சியாளர்கள் கருதுகின்றனர். எனவே அத்தகைய மின் உற்பத்தியை விரிவுபடுத்துவதற்கும் - அணு உலைகளை இயக்குவதற்கும் தேவைப்படும் யுரேனியம் மற்றும் அணு தொழில்நுட்பத்தை இதுபோன்ற ஒப்பந்தத்தின் மூலம் பெற முடியும் என்று கருதுகின்றனர். மேலும் அணு தொழில்நுட்பத்திலும் - அணு குண்டு சோதனையிலும் வெற்றிகரமாக செய்து முடித்துள்ள இந்தியாவை உலக நாடுகள் அணு சக்தியுள்ள நாடாக அங்கீகரிக்கவில்லை. எனவே அத்தகைய தனிமைப்படுதலிலிருந்தும் இது உதவும் என்று நமது ஆட்சியாளர்கள் கருதுகின்றனர்.

அதே சமயம் தற்போது இந்தியாவின் மின் சக்தியை பூர்த்தி செய்வதில் அணு மின்சாரத்தின் பங்கு என்பது வெறும் 3 சதம் மட்டுமே. 2020க்குள் இதனை 7 சதமாக உயர்த்த வேண்டும் என்பதே நமது ஆட்சியாளர்களின் கனவாக உள்ளது. இந்த குறைந்தபட்ச மின் தேவையை - அணுவை பயன்படுத்துவதற்காக சர்வதேச அளவில் நாம் எத்தகைய விலையை கொடுக்க வேண்டும் என்பதே தற்போது முன்னெழுந்துள்ள கேள்வி?

இது ஒரு புறம் இருக்க அமெரிக்காவோ இந்தியா பொக்ரானில் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் அணு வெடிப்பு சோதனை செய்வதற்காக பல்வேறு விதமான தடைகளை விதித்தது. மேலும் இந்தியா இதுவரை நம்முடைய சுயேச்சையான அணு சக்தி நலனை காப்பதற்காக அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாமல் நமது சுயேச்சையான பாதையில் நடைபோட்டு வருகிறோம். அமெரிக்கா நீண்ட காலமாக NPT-யில் யையெழுத்திட நீண்ட காலமாக நம்மை நிர்ப்பந்தித்து வருகிறது.

அமெரிக்காவைப் பொறுத்தவரை அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத எந்த நாட்டுடனும் அணு சக்தி தொடர்பான ஒப்பந்தத்தை செய்து கொள்வதில்லை நிலையை தற்போது இந்தியா விசயத்தில் தளர்த்தியுள்ளது. சர்வதேச அளவில் புதிய முரண்பாட்டை தோற்றுவித்துள்ளதோடு - அமெரிக்காவே அந்த என்.பி.டி.க்கு சவக்குழி தோண்டி புதைத்து விட்டது என்று விமர்சிக்கப்படுகிறது.

அமெரிக்காவுக்கு இந்தியா மீது ஏன் இந்த திடீர் கரிசனம் என்ற கேள்வியைத்தான் நாம் முதலில் எழுப்ப வேண்டியுள்ளது? மாறியுள்ள உலகச் சுழ்நிலையில் - ஆசியாவில் ஒரு வலுவான கூட்டாளி தேவை என அமெரிக்கா கருதுகிறது. அதன் அடிப்படையிலேயே அது இந்தியாவோடு தற்போது கூடி கொஞ்சுகிறது. தற்போது பொருளாதார ரீதியாகவும் - தொழில்நுட்ப - இராணுவ ரீதியாகவும் ஒரு பலமான நாடாக உருவெடுத்து வரும் சீனாவை எதிர் கொள்வதற்கு யுத்த தந்திர ரீதியாக இந்தியாவை பயன்படுத்துவதே அதன் நோக்கமாக மிஞ்சுகிறது. மேலும் தற்போது மத்திய ஆசியாவில் ஏற்பட்டு வரும் அரசியல் - பொருளாதார மாற்றம் குறிப்பாக ஈராக் ஆக்கிரமிப்பு. ஈரானை மிரட்டிக் கொண்டிருப்பது. ஆப்கானிஸ்தான் கைவசம் என தனது ஏகாதிபத்திய ஆக்டோபஸ் கரத்தை விரிவுபடுத்திடும் திட்டத்தில் இந்தியாவை பயன்படுத்துவது என்பதும் அதன் நோக்கமாக இருக்கிறது.

இந்த பின்னணியில்தான் இந்தியாவை தனது நம்பகமான கூட்டாளியாக அமெரிக்கா தேர்ந்தெடுத்துள்ளது. இந்த அடிப்படையிலேயே அணு சக்தி உடன்பாட்டை அமெரிக்கா மேற்கொண்டுள்ளது.

இது தவிர இத்தகைய உடன்பாடு அமலுக்கு வரும் பட்சத்தில் இராணுவ ரீதியான வர்த்தகத்தில் இந்தியாவை ஈடுபடுத்துவதன் மூலம் 100 பில்லியன் டாலர் வரை அமெரிக்க நிறுவனங்கள் வர்த்தகத்தில் ஈடுபடுவதற்கான வாய்பும் கிடைக்கும். இதைத் தொடர்ந்து ஆயுத வியாபாரத்தில் நாம் இதுவரை கடைப்பிடித்து வந்துள்ள நிலையில் தலை கீழ் மாற்றம் ஏற்படும். இவ்வாறான ஆயுத போட்டியை ஏற்படுத்துவன் மூலம் ஆசியாவில் தங்களது ஆயுத வியாபாரத்தை வலுவாக நிலைநாட்ட உதவும் என கருதுகிறது.

இத்தகைய உள்ளார்ந்த நலன்கள் அமெரிக்காவிடும் இருக்கும் நிலையில் 123 அணு சக்தி உடன்பாட்டின் முலம் அது லகானை தன்னுடைய கையில் வைத்துக் கொண்டே இந்தியாவை இந்த உடன்பாட்டில் சிக்க வைத்துள்ளது.

இந்த 123 என்பது அமெரிக்க அணு சக்தி சட்டம் 123 பிரிவின் கீழ் வருவதால். அந்த பிரிவின் அடிப்படையில் - இந்தியாவை கட்டுப்படுத்த முடியும். அதாவது எதிர்காலத்தில் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி இந்த உடன்பாட்டையே முடிவுக்கு கொண்டுவருவதற்கான ஆபத்தும் உள்ளது. அப்புறம் என்ன வழக்கமான சண்டித்தனம்தான்.

இந்த 123 தவிர இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டிற்காக ஹைட் ஆக்ட் (Hendry Hyde Act) ஒன்றை கொண்டு வந்துள்ளது. இந்த ஹைடு சட்டத்தின் மூலம் இந்தியாவை அனைத்து விதத்திலும் கட்டுப்படுத்த முடியும்.
குறிப்பாக எதிர் காலத்தில் இந்தியா அணு வெடிப்பு சோதனை எதிலும் ஈடுபடக் கூடாது என்பதும்.

அமெரிக்கா மற்ற நாடுகள் மீது புரியும் சண்டித்தனத்திற்கு துணை போக வேண்டும் என்பதும்.

குறிப்பாக ஈரான் விசயத்தில் அமெரிக்க நலன் சார்ந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பதும். தற்போது ஈரானோடு செய்து கெண்டுள்ள ஈரான் - பாகிஸ்தான் - இந்தியா குழாய் வழி எரிவாயு திட்டத்தை தூக்கி எறிய வேண்டும் என்பது உட்பட நிர்ப்பந்திக்கபடுகிறது.

மேலும் நமது சுயேச்சையான வெளியுற கொள்கையை காற்றில் பறக்க விட்டு விட்டு. அமெரிக்கா சொல்படி கேட்கும் சட்டாம் பிள்ளைத் தனத்திற்கு உட்பட வேண்டும் என ஹைடு சட்டம் வலியுறுத்துகிறது.

இவ்வாறு ஹைடு சட்டம் என்பது பல்வேறு அமெரிக்க நலன் சார்ந்த மறைமுக அஜண்டாகை கொண்டுள்ளது. எனவேதான் இந்த ஹைடு சட்டத்தை விரிவாக பரிசீலிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட இதர இடதுசாரிகள் வலுவாக எதிர்ப்பு குரல் எழுப்பி வருகின்றனர்.

இதற்கெல்லாம் மேலாக இது ஒரு அணு சக்தி ஒப்பந்தம் மட்டும் அல்ல. புவிசார் அரசியல். இராணுவம். யுத்த தந்திரம். பொருளாதாரம். வெளியுறவு கொள்கை என அனைத்து அம்சங்களையும் கொண்டது. மொத்தத்தில் இந்திய இறையாண்மையையே கேள்விக்கு உள்ளாக்கும் படு பயங்கரமான அதாள பாதாள உடன்பாடு இந்த 123. எனவேதான் இடதுசாரிகள் இதனை ஏற்க முடியாது என்று கூறியுள்ளனர். மேலும் இது தொடர்பான இதர நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடக் கூடாது என வலியுறுத்துகின்றனர்.

அதாவது இந்த 123 உடன்பாடு அமெரிக்காவோடு செய்து கொண்டாலும் இதனை முழுமையாக்க வேண்டும் என்றால் சர்வதேச அணு சக்தி கழகம் மற்றும் அணு சக்தி வழங்கும் குழுமத்துடன் ஒரு உடன்பாட்டை இந்தியா மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு மேற்கொள்ளும் பட்சத்தில் IAEA-ஐ.ஏ.இ.ஏ. நமது அணு உலைகளை அவர்களது கண்காணிப்பிற்கு உட்படுத்த வேண்டி வரும். மேலும் அணு சக்தியை கையாளுவது என்ற நமது சுதந்திர தன்மையை முற்றிலுமாக நாம் இழக்க வேண்டி வரும். எனவேதான் இந்திய அரசு இந்து உடன்பாடு குறித்து மேற்கண்ட நிறுவனங்களோடு எந்த பேச்சுவார்த்தையும் நடத்தக் கூடாது என உறுதியாக எதிர்த்து வருகிறது.

இந்தியாவின் சுயாதிபத்தியம் மற்றும் இறையாண்மை குறித்த அடிப்படை அம்சமாக இருப்பதால் இந்த விசயத்தில் சமரசம் என்பதை ஏற்க முடியாது. இதனை இடதுசாரிகள் தெளிவாக வலியுறுத்தி வருகின்றனர். இது தொடர்பாக இந்திய பாராளுமன்றத்தில் விரிவான விவாதத்தையும் முழுமையாக நடத்த வேண்டும் என்று இடதுசாரிகள் வலியுறுத்துகின்றனர். பா.ஜ.க.வுக்கு இந்த விசயத்தில் அரசு எப்போது கவிழும் திண்ணை எப்போது காலியாகும் என்ற ஆர்வத்தை தவிர இந்திய இறையாண்மை குறித்த நலன்கள் எல்லாம் ஏதும் இல்லை. அதனால்தான் அவர்கள் பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புடன் கூடிய விவாதத்தை கோருகின்றனர். இந்த விசயத்தில் பாராளுமன்றத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் அரசின் நிலையை இந்த இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாட்டை ஏற்கவில்லை என்பது வெளிப்படையாக இருக்கும் போது ஓட்டெடுப்பு என்ற கேள்வியே எழவில்லை. அதனால்தான் இந்திய அரசு தார்மீக ரீதியாக பெரும்பான்மையான உறுப்பினர்களின் உணர்வுக்கு மதிப்பளித்து இந்த உடன்பாட்டை முழுமையான சந்தேகங்கள் தீரும் வரை அமலாக்க கூடாது என்று வலியுறுத்துகின்றனர்.

மேலும் தற்போதைய இந்திய அரசின் நிலைக்கு வழியமைத்து கொடுத்தவர்கள் இந்துத்துவ பா.ஜ.க.வினர் என்பதையும் நாம் மறக்க கூடாது.

இது தவிர சர்வதேச அளவில் ஈரான் NPT-என்.பி.டி.யில் கையெழுத்திட்ட நாடு. அந்த நாடே தன்னுடைய வளர்ச்சி பணிக்காக சிவில் அணு சக்தியை பயன்படுத்துவதற்கு அமெரிக்கா எத்தகைய முட்டுக் கட்டைகளை போட்டு வருகிறது என்பதை வெளிப்படையானது. அவர்களின் நிலைபாட்டுக்கு ஆதரவாக இந்தியாவை இரண்டு முறை ஐ.ஏ.இ.ஏ.வில் வாக்களிக்க வைத்தார்கள். இது இந்தியாவுக்கு வைக்கப்பட்ட ஆசிட் டெஸ்ட் என்று வேறு கூசாமல் கூறியது அமெரிக்கா. இதன் மூலம் அமெரிக்காவின் ஒரு கண்ணில் வெண்ணை - ஒரு கண்ணில் சுண்ணாம்பு என்ற இரட்டை கொள்கை அதன் வளர்ச்சிக்கும் - அதன் நலன் காப்பதற்குமே உதவிடும்! இதனை மன்மோகன் போன்ற அமெரிக்க ஆதரவாளர்களால் உணர முடியாது!

16 comments:

சிவபாலன் said...

சந்திப்பு

உங்கள் பதிவைத் தான் எதிர்பார்த்திருந்தேன். வழக்கம் போல் நல்ல பதிவு!

நம் நாட்டில் 120 கோடிக்கு மேல் இருக்கிறோம். 2025ல் இது எங்கே போய் நிற்கும் என்று தெரியவில்லை.

சரி, இந்திய அமெரிக்க உடன்பாடே வேண்டாம், பெருகிவரும் மின் தேவைக்கு என்ன மாற்று வழிவைத்திருக்கிறீர்கள்.

யாரும் ஆசையோடு போய் அடிமையாக இருக்க மாட்டாங்க இல்லையா?

உண்மையில் ஒரு புரிதலுக்கு வேண்டியே கேட்கிறேன். வாதத்திற்கு அல்ல. ஏனென்றால், இந்த விசயத்தில் எனக்கு ஒன்றுமே தெரியாது என்பது தான் உண்மை.

நன்றி!

சந்திப்பு said...

நன்றி சிவபாலன் தங்களது ஆதரவுக்கு. கொஞ்சம் தாமதமாகி விட்டது இந்த பதிவை வெளி வருவதற்கு. ஏனென்றால் நானும் இது குறித்து அடிப்படையான புரிதலுக்கு வரவேண்டும் என்பதாலேயே இந்த தாமதம். தங்களது கேள்வி மிக நியாயமானது. தற்போதைய குளோபல் வாமிங் - சுற்றுச் சுழல் பாதிப்புக்கு அனல் மின் நிலையங்கள் கூட காரணம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அணு சக்தியோடு ஒப்பிடும் போது இது செலவு மிச்சம். பெருகி வரும் தேவைக்கு அணு சக்தி மட்டுமே தீர்வை வழங்கும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமிருக்க முடியாது. அதே சமயம் இதற்கான அணு தேவையை ஒரு நியாயமான உடன்பாட்டின் மூலம் - அதாவது இரு தரப்புக்கும் பயனளிக்கும் முறையில் உடன்பாடு காண்பதே தீர்வாக இருக்கும். மேலும் தற்போதைய இந்திய சுழலில் அணு மின்சாரம் என்பது கூட 2020 வாக்கில் வெறும் 7 சதம் அளவுக்கு மட்டுமே எட்டும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இது மிகக் குறைந்த அளவுதான். தற்போது நாம் 3 சதம் இதன் மூலம் பெறுகிறோம். கூடுதலாக 4 சதம் பெறப்போகிறோம். அந்த அடிப்படையில் பார்த்தால் தற்போதைய இந்திய - அமெரிக்க ஒப்பந்தம் நமக்கு உதாவது என்பது வெள்ளிடை மலை. எதிர் காலத்தில் இது விசயத்தில் ஒரு நல்ல உடன்பாடு ஏற்படும் என்று சொன்னால் அதனை நாம் ஏற்கலாம். அதுவரை அனல் மின் நிலையங்களையும் - நீர் மின் நிலையங்களையும் இன்னும் கூடுதலாக பொதுத்துறை - தனியார் மற்றும் கூட்டுத்துறை மூலமாக நாம் விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளை மேற்கொள்வதே பொருத்தமாக இருக்கும். அதற்குள் நமது விஞ்ஞானிகள் நமது நாட்டில் கிடைக்கும் தோரியத்தைக் கொண்டு இன்னும் சிறப்பாக அணு மின் நிலையங்களை இயக்குவதற்கான ஆராய்ச்சியில் வெற்றி பெறுவதற்கும் வாய்ப்பு உள்ளது. எனவே இந்த விசயத்தில் மன்மோகன் அரசு அவசரப்படாமல் - நிதானமாக இயங்க வேண்டும் என்பதே நமது வாதமாக முன் வைக்கலாம்.
மிகுந்த நன்றி சிவபாலன்... ஐய்யோ நானும் கத்துக் குட்டிதான்...

Anonymous said...

தோரிய அடிப்படையிலான அணு உலைகள் அமைக்கும் பணிகள் கல்பாக்கத்தில் ஏற்கனவே துவங்கிவிட்டன என்று அறிகிறேன். (இயக்குநரின் பேட்டி சமீபத்தில் எங்கோ படித்த நினைவு) ஆனால் அவை நடைமுறைக்கு வர ஐந்தாண்டுகள் வரை ஆகலாம் (2012 அல்லது அதற்கு மேலும்).

அதை இன்னும் துரிதப்படுத்தி 2010-க்குள் சாதித்தோமானால், இதுபோன்ற ஒப்பந்தங்களே தேவையில்லை எனும் நிலை கூட வரலாம். இந்தியாவிலேயே ஏராளமான தோரிய வளம் உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது (உலக தோரிய வளத்தில் கால் பங்கிற்கும் அதிகமாகவே)

அன்புடன்
முத்துக்குமார்

சந்திப்பு said...

அன்பு முத்துக்குமார்

மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். நமது ஆட்சியாளர்களுக்கு தேச நலனை விட - நாம் ஒரு பெரிய ஜாம்பவானோடு உறவு கொண்டுள்ளதில் மட்டுமே திருப்தி அடையபவர்களாக உள்ளனர். அமெரிக்க மோகம் நமது ஆட்சியாளர்களுக்கும் உள்ளது சிந்திக்கப்பட வேண்டியதாக உள்ளது. நமது சொந்த அறிவியல் தொழில்நுட்பத்தின் மூலமே அணு சக்தி விவகாரத்தில் நாம் முன்னேற முடியும். அதனால்தான் நமது விஞ்ஞானிகளில் கணிசமானவர்கள் இதனை கடுமையாக எதிர்த்துள்ளனர். வாழ்த்துக்கள். தங்களது கருத்துக்கள் முன்னெடுத்துச் செல்ல வேண்டிய ஒன்று. வாழ்த்துக்கள். நன்றி.

அறிவியல் பார்வை said...

அன்பு நன்பருக்கு வணக்கம்,
அறிவியல் பார்வையுடன் கூடிய சமூக பொறுப்புள்ள பதிவு இது.

உடன் பாட்டை முறித்து கொள்ளும் பட்ச த்தில் அது வரை நாம் பயன் படுத்தி தீர்த்து விட்ட யுரேனியத்தை அமெரிக்கா திரும்ப கேட்கும் அபாயம் கூட உள்ளது.
அ ந்த யுரேனியத்திற்க்கு அவர்கள் எவ்வளவு வேண்டுமானாளும் நிர்ணயிக்கும் நிலை கூட வரலாம்

அது சரி நண்பா, இ ந்த ஒப்ப ந்தத்தை எதிப்பவர்களை "தலை இல்லாத கோழிகள்" என்று விமர்சித்துள்ளதே "சொரனை இல்லா த நாயீ" ஒன்று அதை என்ன செய்ய போகிறீர்கள்?

Anonymous said...

அமெரிக்காவுடனான இந்தியாவின அணு சக்தி உடன்பாட்டை இடதுசாரிக் கட்சிகள் இவ்வளவு முனைப்புடன் எதிர்க்கின்றன. இதை காங்கிரஸ் கட்சிகளுடனான மோதலாக பல ஊடகங்கள் சித்தரிக்கின்றன. உடன்பாட்டால் நாட்டிற்கு எந்த பாதகமும் இல்லை என்று பிரதமர் கூறுகிறார். இந்தப் பின்னணியில், இடதுசாரிகளின் எதிர்ப்புக்கு என்ன காரணம் என்பதைப் பல்வேறு கோணங்களில் புரியவைக்கவும், அந்த எதிர்ப்புக்கு ஆதரவாக மக்கள் கருத்தைத் திரட்டவும் வேண்டியுள்ளது. அதில் தங்களது கட்டுரையும் நல்ல பங்காற்றுகிறது.
ஒன் ... டூ ... த்ரீ ... என்று சொல்லி அமெரிக்கா நம் நாட்டை எந்த ஓட்டத்துக்குத் தயார்ப்படுத்துகிறது? அதன் நம்பகமான அடியாளாக இருக்க யாருக்குத் தகுதி என்று தேர்பு செய்ய ஒரு ஓட்டப் பந்தயம். அதற்காக!
இது வெறும் அமெரிக்க மோகம் அல்ல. அதையும் தாண்டி கடுமையானது ...
உலக முதலாளித்துவத்தின் போர்வைக்குள் விரும்பி நுழைந்துகொண்டதன் விலை.

அ. குமரேசன்

சந்திப்பு said...

அறிவியல் பார்வை ஆமாம் தாங்கள் குறிப்பிட்டதும் சரிதான் அமெரிக்கா விரும்பவில்லை என்றால் ஏதாவது ஒரு காரணத்தை கூறி 123 என்று அந்த உடன்பாட்டை முறித்துக் கொள்வதோடு. அவர்கள் கொடுத்ததையும் திருப்பி கேட்பார்கள்.

மண்டைக்குள் களி மண்ணை வைத்துக் கொண்டுள்ள ரொணன் சென்னிடம் வேறு எதை எதிர் பார்க்க முடியும். அமெரிக்க போதை வெறி மண்டைக்குள் ஏறி விட்டால் நம்மை பார்த்து அறுத்துப் போட்ட கோரியாட்டம் ஏன் துடிக்கிறாய் என்று கேட்கத்தான் செய்யும். சென்னின் வாலை ஒட்ட நறுக்கினால்தான் இதுபோன்ற பேச்சுக்கள் அடங்கும்.

சந்திப்பு said...

நன்றி குமரேசன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டமைக்கு.

Anonymous said...

COM SELVAPERUMAL
UNGAL KATTURAI PADITHEN NALLA PADHIVU THODARGA
MYLAIBALU

Anonymous said...

அமெரிக்க அடிமை நாய் மன்மோகன் வழங்கும் 123 அல்லது அடிமை சாசனம் !!




1945 ஆம் வருடம் ஆகஸ்ட் 6 ஆம் தேதி ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசி 70,000 மக்களைக் கொன்று குவித்ததுடன் இன்றுவரை அங்கே பிறக்கும் குழந்தைகள் ஊனமுற்றவர்களாகப் பிறக்கும் அளவுக்கு பாதிப்புகளை ஏற்படுத்தியது அமெரிக்கா. அதற்கு 3 நாட்களுக்குப் பிறகு இன்னொரு ஜப்பானிய நகரமான நாகசாகியில் தனது கொலைவெறியை அரங்கேற்றி 74,000 மக்களைக் கொன்று குவித்தது.



மனித குலத்தையே வேரறுக்கக் கூடிய இந்த அணு ஆயுதத்தை முதன்முதலில் மனிதன் மீது பிரயோகித்த பெருமையைத் தன்னுடைய தாக்கிக் கொண்டாலும், அந்த அணுசக்தியிலிருந்து பலன் பெற்று மின்சாரம் தயாரிக்கும் வழிமுறை அமெரிக்காவிடம் இல்லை. சோவியத் ரஷ்யாவில்தான் 1954 ஆம் ஆண்டு முதன் முதலில் அணுசக்தியிலிருந்து மின்சாரம் தயாரிக்கப்பட்டது. ஆனால் அதற்கு மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, 1951 ல் இருந்தே இந்தியாவில் அணுசக்தி குறித்த ஆராய்ச்சிகளையும், அணு உலைகளை அமைத்து அணுசக்தியை மக்கள் நலனுக்குப் பயன்படுத்துவது பற்றியும் இந்திய அணுசக்தித் துறையின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளார்.



அப்போதிருந்தே உலக அளவில் அணுசக்தித் துறையில் மற்ற நாடுகளுடன் இந்தியா போட்டி போட்டு வளர்ந்து வருகிறது. இன்றளவும் அதிவேக ஈனுலைகள் என்ற அணுசக்தித் தொழில்நுட்பத்தில் இந்தியா தான் முதலிடத்தில் உள்ளது. தோரியம் எனும் தனிமத்தைக் கொண்டு இயங்கக் கூடிய இந்த "அதிவேக ஈனுலைகள்" யுரேனியம் கொண்டு இயங்கும் மற்ற நாட்டு அணு உலைகளை விட 600 மடங்கு அதிக சக்தியைக் கொண்டது என்று முன்னாள் இந்திய அணுசக்தித்துறைத் தலைவர் சிதம்பரம் கூறியுள்ளார்.



இது மட்டுமின்றி வேறெந்த நாட்டின் உதவியுமின்றி சொந்தநாட்டிலேயே தயாரித்து, இதுவரை இரண்டு முறை அணு குண்டு வெடித்துச் சோதனை நடத்தியுள்ளது இந்தியா.இவ்வாறு மின்சாரத் தேவைக்கான அணுசக்தி ஆராய்ச்சி தொடங்கி, பக்கத்து நாடுகளை மிரட்டி அணுகுண்டு வெடிப்பது வரை இந்தத் துறையில் சொந்தத் தொழில்நுட்பத்தையே இந்தியா பயன்படுத்தி வந்துள்ளது.



ரஷ்யாவின் உதவியுடன் கல்பாக்கத்திலும், அமெரிக்காவின் உதவியுடன் தாராப்பூரிலும் அணுமின் நிலையங்களை நிறுவினாலும் அவை முற்றிலும் இந்திய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டவையாகவே இருந்துள்ளன.


..
ஆனால் இப்போது '123 ஒப்பந்தம்' என்ற பெயரில் அமெரிக்காவுடன் இந்தியா செய்துள்ள அணுசக்தி ஒப்பந்தம் இந்தியாவின் இறையாண்மைக்கு ஆப்பறையும் விதத்தில் வந்துள்ளது.



இந்த ஒப்பந்ததின்படி அடுத்த 40 ஆண்டுகளுக்குத் இந்தியா அமெரிக்காவிடமிருந்து யுரேனியத்தை இறக்குமதி செய்து கொள்ளும். அப்படி இறக்குமதி செய்யும் யுரேனியத்தைக் கொண்டு மின்சாரம் மட்டுமே தயாரிக்க வேண்டும், அணுகுண்டு தயாரிக்கக் கூடாது. மீறி அணுகுண்டு தயாரித்தால் அமெரிக்கா கொடுத்த யுரேனியத்தை திரும்பப் பெற்றுக் கொள்ளும். இந்த யுரேனியத்தை நம்பி இந்தியா பல லட்சம் கோடி செலவில் அணு உலைகளை உருவாக்கியிருந்தாலும் அது பற்றி அவர்களுக்குக் கவலையில்லை. அணுகுண்டு வெடிக்காவிட்டாலும் அமெரிக்காவின் அனைத்து ராணுவ நடவடிக்கைகளுக்கும், வெளிநாட்டுக் கொள்கைகளுக்கும் இந்தியா ஒத்துழைப்புத் தரவேண்டும்.



ஏற்கனவே இரண்டு முறை ஈரான் -க்கு எதிராக ஐ.நா வில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு இந்தியா வாக்களித்து உள்ளது.



இப்போது ஈரானை தாக்க அமெரிக்கா திட்டமிட்டு வருகிறது. அவ்வாறு தாக்குதல் தொடுக்குமானால் அப்போது இந்தியா கூலிப்படை அனுப்பி உதவ வேண்டும்.



அதேபோல மற்ற நாடுகள் அனுமதிக்காத 'நிமிட்ஸ்' போர்க் கப்பலை இந்தியக் கடலோரத்தில் இந்தியா அனுமதித்து உள்ளது. அந்த கப்பல் போர்க்கழிவுகளை கொட்டிவிட்டு சென்றதாக கூறப்படுகிறது.



இதேபோல எதிர்காலத்திலும் இதுபோன்ற கப்பல்களை தங்கு தடையின்றி வந்து போக அனுமதிக்க அமெரிக்கா நிர்பந்திக்கிறது.



அணு ஆராய்ச்சியை இந்திய விஞ்ஞானிகளைக் கொண்டு, குறைந்த விலைக்கு நடத்தித் தர அமெரிக்கா கோருகிறது.அணு உலைகளை கண்காணிக்க நிபுணர்குழுவினை இந்தியாவுக்குள் வந்து போக அணுமதிக்க வேண்டும் என்று நிர்பந்திக்கிறது..



இப்படிப்பட்ட நாசகார, மோசடியான ஒப்பந்தத்தை தாய்நாட்டின் மீது பற்றுக் கொண்ட யாரும் ஏற்றுக் கொண்டிருக்க மாட்டார்கள்.



ஆனால் அமெரிக்க அடிமை நாயாய் சேவகம் செய்யும் மன்மோகன் சிங் இதனை ஏற்று கொண்டுவிட்டார். மக்களையே சந்திக்காமல், தேர்தலிலேயே நிற்காமல் இந்த நாட்டின் பிரதம மந்திரியாய் உட்கார்ந்து கொண்டு இப்படி தாய்நாட்டை அமெரிக்காவுக்கு விலை பேசியுள்ளார்.



"நீ என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள், உன்னால் என்ன செய்ய முடியுமோ செய்து கொள். ஆனால் ஒப்பந்தத்தை திரும்ப பெற முடியாது. குறைந்த பட்சம் இது குறித்து விவாதம் செய்ய முடியாது." என்று மன்மோகன் சிங் கூறிகிறார்.



அமெரிக்க எஜமானன் போட்ட உத்தரவை இந்திய அடிமைகள் பரிசீலிப்பதா என்று இவர் விடும் அறிக்கைகளைப் படிக்கும் போது சிறிதளவேனும் தேசப்பற்றுடைய எவருக்கும் ரத்தம் கொதித்துப் போகும்.



இதையெல்லாம் விட்டுவிட்டு அணு குண்டு வெடிக்க முடியாது என்று கூறி இதனை எதிர்க்கிறது பா.ஜ.க. இந்த தேசவிரோத ஒப்பந்தம் நிறைவேறனுமா, வேண்டாமா என்று இவர்கள் கூறுவதில்லை. என்ன செய்ய முடியும், காங்கிரஸ் அல்சேஷன் என்றால் பா.ஜ.க டாபர்மேன் இல்லையா?



இந்த ஒப்பந்தத்தை குறித்த பேச்சுவார்த்தையை ஆரம்பித்துவைத்ததே வாஜ்பாயிதான் என்று குட்டை உடைத்துவிட்டார் எம்.கே.நாராயணன் (இந்திய பிரதமரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்) அத்தோடு இவர்களின் குலைக்கும் சத்தம் ஓய்ந்துவிட்டது.



"ஒப்பந்ததை ரத்து செய்யாவிட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மிரட்டிய போலிக் கம்யூனிஸ்டுகளைப் பார்த்து" மன்மோகன் சிங் "உங்களால் என்ன செய்ய முடியும், ஆட்சிக்கு ஆதரவை வாபஸ் வாங்கிக் கொள்வீர்கள்; வாங்கிக் கொள்ளுங்கள்" என்று கூறிவிட்டார்.



எனது எஜமானனுக்குச் சேவை செய்ய முடியாத ஆட்சி இருந்தாலென்ன போனால் என்ன கருதுகிறார் போலும்.



இந்தப் பிரதமர் பதவி அமெரிக்கா எனக்குப் போட்ட பிச்சை, 123 ஒப்பந்தத்திற்காக அதனை இழக்கவும் நான் தயங்கமாட்டேன் என்று கூறிய உடன் போலிக் கம்யூனிஸ்டுகளுக்கு பா.ஜ.க வின் மதவெறி நினைவுக்கு வர ஆட்சியையெல்லாம் கவிழ்க்க மாட்டோம் சும்மா இது பற்றி விவாதம் மட்டும் பண்ணினால் போதும், ஓட்டெடுப்பு கூட வேண்டாம் என்று இறங்கிவந்தார்கள்.



ஆனால் மன்மோகன் சிங்கோ தான் பிடித்த அமெரிக்க உச்சாணிக் கொம்பில் நின்று கொண்டு சிறிது கூட இறங்காமல் உனக்கும் பெப்பே உங்கப்பனுக்கும் பெப்பே என விவாதம்கூட செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.



உடனே 'தோழர்கள்' கடுமையான விளைவுகள் நேரிடும் என்று திரும்பவும் லாவணிபாட ஆரம்பித்து விட்டனர்.



கடந்த 100 ஆண்டுகளில் 50க்கும் மேற்பட்ட போர்களில் ஈடுபட்டு, உலகம் முழுவதிலும் பல லட்சம் மக்களைக் கொன்று குவித்த ஒரு ரத்தவெறி பிடித்த ஏகாதிபத்திய மிருகம் அமெரிக்கா. அதன் காலடியில் நமது நாட்டை,அதன் இறையாண்மையை, நமது எதிர்காலத்தை, மற்ற நாடுகளுடன் நமது உறவை அடமானம் வைக்கும் அடிமைச்சாசனம்தான் 123 ஒப்பந்தம்.



இந்த உண்மை எல்லா அரசியல்வாதிக்கும் தெரியும்.

Anonymous said...

அமெரிக்க-இந்திய அணுசக்தி ஒப்பந்தம் ! அடிமை அடியாள் அணுசக்தி !!



அடிமையாக மாட்டோம்,அடியாளாக மாட்டோம் !

மறுகாலனியாக்கம் என்ற படுகுழிக்குள் இந்தியாவைத் தள்ளிய காட் ஒப்பந்தமும் இப்படித்தான் நம் மீது திணிக்கப்பட்டது, 1994-இல் அமைச்சரவைக்கும் நாடாளுமன்றத்துக்கும் தெரியாமல் ஒரு அதிகாரிகள் குழுதான் அதிலும் கையெழுத்திட்டது. பிறகு நாடாளுமன்றம் அதற்குத் தலையாட்டியது. அந்த மறுகாலனியாக்கம்தான் இன்று நாள் தோறும் மக்களை மரணக்குழியில் தள்ளி வருகிறது.

மறுகாலனியாதிக்க அடிமைத்தத்தின் கோரமான உச்சக் கட்டம்தான் இந்த அனுசக்தி ஒப்பந்தமும் இந்திய அமெரிக்க இராணுவ ஒப்பந்தமும்! மறுகாலனியாதிக்கக் கொள்கை பொதுத்துறைகளைப் பன்னாட்டு முதலாளிகளுக்குத் தாரைவார்த்திருக்கிறது. விளைநிலங்களைப் பிடுங்கி பன்னாட்டு முதலாளிகளுக்குப் பட்டா போட்டுக் கொடுத்திருக்கிறது. விவசாயிகளைத் தற்கொலைக்குத் தள்ளியிருக்கிறது. இப்போது அது நம்முடைய மானத்தையும், பெயரளவு இறையாண்மையையும் கூடத் காவு கேட்கிறது. ஆக்கிரமிப்பு வெறி பிடித்த அமெரிக்க வல்லரசுக்கு நம்மையும் நம் நாட்டையும் அடியாளாக மாறச் சொல்கிறது. இதை நாம் அனுமதிக்கப் போகிறோமா? இந்த அவமானத்தைச் சகித்துச் கொள்ளப் போகிறோமா?

நாட்டுபற்றும் தன்மான உணர்ச்சியும் கொண்ட ஒவ்வொரு வரும் சிந்திக்க வேண்டும். இந்தத் துரோக ஒப்பந்தத்தை முறியடிக்கக் களத்தில் இறங்க வேண்டும்.
அணுசக்தி ஒப்பந்தத்தைத் தூக்கியெறிவோம்!

அமெரிக்க - இந்திய இராணுவ ஒப்பந்தத்தை கிழித்தெறிவோம்!

அமெரிக்க மேலாதிக்க எதிர்ப்பின் ஆசியத்தளமாக இந்தியாவை மாற்றியமைப்போம்!

சந்திப்பு said...

நன்றி தோழர் மயிலை பாலு. இந்த விசயத்தை எளிமையாக மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டிய அவசியம் உள்ளது. நன்றி.

சந்திப்பு said...

அனானி தோழரே தங்களது கருத்துக்கள் நியாயமானது. சரியானது. இந்த தகவல்கள் அனைத்தும் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டியவைகளே. இதில் மாற்றுக் கருத்து இல்லை.

நீங்கள் சொல்லக்கூடிய போலிக் கம்யூனிஸ்ட்டுகளால்தான் இந்த ஒப்பந்தமே என்ன என்று மக்களுக்கு தெரிய வந்துள்ளது. இதன் அபாயம் குறித்து தற்போது பேசப்படுவதற்கும் அவர்கள்தான் அடிப்படை காரணமாக இருக்கிறார்கள். அதே சமயம் இடதுசாரிகளைப் பொறுத்தவரை இந்த பிரச்சனைக்கு தீர்வு காணுவதுதான் தற்போது முன்னுள்ள பிரதான கடமை. மேலும் தங்களைப் போன்ற திண்ணை வேதாந்த சீர்குலைவுவாத கம்யூனிஸ்ட்டுகளால் இந்த நாட்டிற்கு - இதுபோன்ற பிரச்சனைகளில் உருப்படியாக ஒன்றும் நிகழப்போவதில்லை. இந்த விசயத்தில் தங்களால் ஒளிந்துக் கொண்டு கூச்சலிடுவதைத் தவிர வேறு என்ன செய்ய முடியும். சந்தடி சாக்கில் இடதுசாரிகள் மீது சேற்றை வாரிப் பூசுவது அரசியல் கழிசடைத்தனம். மக்கள் இந்த விசயத்தை தீவிரமாக அலசிக் கொண்டிருக்கையில் அதற்கான விசயத்தை - அதற்கான எதிர்பை வலுவாக காட்டுவதை விட்டு விட்டு அவர்கள் போலி என்று பிரச்சனையை திசை திருப்பி குழப்பத்தை உண்டாக்குவதன் மூலம் உங்களுக்கு ஹார்வர்டு பல்கலைக் கழகத்தில் உண்மை கம்யூனிஸ்ட்டுகள் என்று யாரும் பட்டம் சுட்டப் போவதில்லை தோழர்களே. இந்த பின்னூட்டத்தை நான் தவிர்த்திருக்கலாம். ஆனால் அவ்வாறு செய்யவில்லை. ஏனென்றால் அதில் ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கான விதை இருப்பதால்தான் அதனை அனுமதித்துள்ளேன். உங்களது போலி வாதத்தினை இனிமேல் அடுத்தவர்களின் பின்னூட்டத்தில் பதிவிடுவதை தவிருங்கள் அதுவே வலையுலகத்தில் ஆரோக்கியமான விவாதத்திற்கு அடி கோலும். உண்மை கம்யூனிஸ்ட்டுகள் நாங்கள்தான் என்று மார் தட்டிக் கொள்ளும் நன்பர்களே. உங்களை மக்கள் நம்பத் தயாராக இல்லை. உங்களது உண்மைகள் எல்லாம் வெறும் வெற்றுக் கூச்சலும் குழப்பல்வாதமே என்பதை மக்கள் உணர்ந்துக் கொண்டுள்ளார்கள்.

Anonymous said...

இது தொடர்பான எனது பதிவு....

http://pangaali.blogspot.com/2007/08/123.html

சந்திப்பு said...

பங்காளி தங்களது பதிவை படித்தேன். மன்மோகன் மீதான தங்களது விசுவாசம் போற்றுதலுக்குரியது. அது தேசத்தின் மீதானதாக இல்லாததது வருத்தத்திற்குரியதாக பார்க்கிறேன்ன். தாங்கள் இந்த ஒப்பந்தம் குறித்து என்ன கருதுகிறீர்கள். இடதுசாரிகள் மேலே எழுப்பியுள்ள கருத்தில் தாங்கள் எந்த இடத்தில் வேறுபடுகிறீர்கள் என்பதை விவாதிக்கலாமே அதுதானே சரியான வழியாக இருக்கும்.

சந்திப்பு said...

இணையத்தில் தாங்கள் மட்டுமே உண்மையான கம்யூனிஸ்ட்டுகள் என்று கூறிக் கொண்டு கம்யூனிச எதிர் பிரச்சாரம் செய்யும் அமெரிக்க ஏஜன்டுகளின் பதிவுகளுக்கு பதிலாக இங்கே இந்த அறிக்கை வெளியிடப்படுகிறது.

கம்யூனிச எதிர்ப்பு அமெரிக்க ஏஜன்டுகளே... இதோ கீழே இருக்கும் அறிக்கையை படியுங்கள்.... இடதுசாரிகள் 2005ஆம் ஆண்டு வெளியிட்ட கூட்டறிக்கை. இந்திய - அமெரிக்க இராணுவ உடன்பாட்டிற்கு எதிரானது. கண்ணை மூடிக் கொண்டு கம்யூனிச அவதூறை பரப்புவதன் மூலம் நீங்கள் உண்மையான கம்யூனிஸ்ட்டுகளாகி விடமுடியாது. காட்டுக்குள்ளே இருப்பவர்களக்கு நாட்டுக்குள் நடப்பது என்ன வென்று புரியாது. அதனால்தான் கல்லை கண்ணாடி வீட்டுக்குள் உட்கார்ந்து கொண்டு எரிகிறீர்கள்.

LEFT PARTIES PROTEST INDO-US AGREEMENT



Reject This Framework Of Indo-US Relations: Karat


Characterising the new framework for India-US defence relationships as against the security and strategic interests of the country, the Left parties have urged the government not to proceed with it any further. The defence minister had signed the framework during his recent US visit.


The Left parties organised a public meeting against the “New Framework For The India-US Defence Relationship” on July 8, at the Constitution Club in New Delhi. The meeting commenced by observing two-minute silence to condole the death of innocent persons in London bomb blasts.



The meeting held in the Constitution Club was presided over by CPI general secretary A B Bardhan, while CPI(M) general secretary Prakash Karat was the main speaker of the meeting. He detailed the implications of signing the framework for the security of the nation. Asserting that the framework is against the understanding incorporated in the CMP of the UPA government, Karat called upon the Left parties to conduct a nationwide campaign to educate people about the dangerous implications of the framework.



A B Bardhan objected to the fact that the defence minister, who had ostensibly gone on an “exploratory” visit, had ended up with signing the agreement. Anand Bazar Patrika has headlined the signing of the agreement as “burning the ghost of NAM” The CPI leader took strong exception to the formulation in the framework which allow cooperation with the US in multilateral actions outside the framework of the United Nations. He emphasised that it may end up trying up India with US like Japan. Another aspect of the agreement is to encircle China.



The meeting was also addressed by the RSP leader Abani Roy and the Forward Bloc leader Shyamacharn Gaur.



Below we are reproducing the text of the speech delivered by CPI(M) general secretary Prakash Karat at the Left parties’ meeting.



THE framework agreement on Indo-US Defence Relations signed in Washington recently is a major step to harness India to serve the US strategic goals in Asia.



The Indo-US military collaboration began in January 1992, during the Narasimha Rao government. An India-US Army Executive Steering Committee was set up. This was followed by the setting up of the Joint Steering Committee of the two navies. Joint naval exercises were conducted in 1992. In 1994, the Joint Steering Committee of the two air forces was set up.



The Indo-US Military Cooperation Agreement was signed in 1995. This agreement, the first of its kind, provided for officers of the Indian armed forces being sent to the United States for training programmes, staff exchanges and joint exercises.



The BJP-led government took forward the military collaboration to the level of a strategic alliance. This was in keeping with the Vajpayee government’s declaration that India was a natural ally of the United States.



After the interruption caused by the sanctions imposed by the United States after the Pokhran explosion in 1998, the BJP-led government proceeded rapidly to cement a strategic alliance with the United States. This involved regular joint exercises between the defence wings of the two armed forces and resumption of the International Military Exchange and Training (IMET) programme for the Indian armed forces.



The BJP-led government offered port and airport facilities for the US armed forces when they began their military operations in Afghanistan after the September 11 terrorist attacks. The Vajpayee government was disappointed when the United States decided to make Pakistan the frontline state and ally. The BJP-led government redoubled its efforts to make India act as a junior partner for the US strategic interests in the region.



It is in this period that the Indian government allowed the FBI to set up its office in Delhi. It was the first country to welcome the National Missile Defence programme announced by President Bush. The BJP-led government agreed to use Indian naval ships to escort US ships through the straits of Malacca.



The current agreement takes this strategic and military cooperation further. There are four major features which stand out and which are not in India’s security and strategic interests.



Firstly, the agreement says the two defence establishments will “collaborate” in multinational operations when it is in their common interests. There is no mention of the United Nations auspices for such operations. By this clause, India has accepted the US concept of multinational operations in third countries without UN mandate. It is well known that such operations such as the multinational force in Iraq are commanded solely by the United States military. The UPA government should explain what are the multinational operations outside the purview of the United Nations in which India can participate with the United States.



Secondly, the agreement states that both countries will expand collaboration relating to missile defence. It is well known that the United States is actively trying to build a missile defence shield by drawing in Asian countries as part of its National Missile Defence system. Japan has already agreed to be part of the system.



The United States cannot be offering the Patriot missile system without expecting India to be part of this overall missile defence system.



One should remember that in the 1990s the United States sought to prevent India developing its missile defence system. Two instances can be cited. In 1992 the US pressurised Russia to cancel the sale of the cryogenic rocket engines to India by threat of sanctions against the Russian space agency, Glavkasmos. In August 1993, the USA alongwith G7 countries issued a diplomatic note to India not to deploy the Prithvi missiles and to stop the Agni programme.



If the United States is today offering the Patriot missile system to India, it is only with the motive of interlocking India in its missile defence system.



India and the United States have gone beyond just talking about ballistic missile defence. In a report in The Hindu dated October 9, 2004 by Amit Baruah, an interview to the October issue of Force magazine by David Mulford, the US ambassador to India has been cited. “Asked if he saw the possibility of the two countries going beyond merely talking about such defences, the ambassador was quoted as saying, `Yes, I think that is what is under discussion now. There has already been a discussion about technology and systems.’ Do you think that ballistic missile defences would destabilise the entire region? No, the ambassador responded, stressing that these were defensive systems. `The only problem that I see is that it is a technically complicated subject and there are different generations of systems available. So the issue is to figure out which system is needed where. This is a complicated process.’ Mr Mulford said.”



Thirdly, the agreement talks about shared security interests in protecting free flow of commerce via land, air and sea lanes alongwith preventing the spread of weapons of mass destruction and associated materials, data and technology. It is unfortunate that the UPA government does not view security issues in Asia as those which can be discussed and resolved among the Asian countries but seeks to advance US interests in the region. For instance, the security of the sea lands is an issue in which the US has already involved the US Navy in the Malacca straits.



It is significant that Malaysia and Indonesia took the stand that they can cooperate with Singapore to ensure the security of the sea-lanes in their region when the later proposed to involve the United States. The formulations in this section seek to involve India in the proliferation security initiative sponsored by the US. The US has set up a Regional Maritime Security Initiative (RMSI) in which Australia and Singapore are participants.



The littoral states of the straits of Malacca are Malaysia, Indonesia and Singapore. Both Malaysia and Indonesia are opposed to the introduction of external armed forces in guarding the Malacca straits. Unlike Singapore, which wants the involvement of the US, the two countries have been advocating a joint regional initiative in the ASEAN.



The chief of the Indonesian navy stated in January 2004 that “Indonesia deems it not necessary to include troops from outside countries including the United States – to be involved in safeguarding the strategic waterway” (Jakarta Post, June 17, 2004).



Fourthly, the prospects for co-production of defence equipment are mentioned. This is clearly meant to allure India to buy F16 fighter planes and open the market for US weaponary. But we find no specific commitment on lifting the curbs on supply of high technology, which has been raised by India continuously.



The UPA government should know the track record of the United States in using weapons supply as a political tool. Time and again the US has cut off supplies or imposed sanctions through decisions of the US Congress or the administration whenever it perceives a country as not willing to accept its policies and strategic goals.



The United States wishes to see India as its reliable ally like Japan, South Korea and Philippines. That is why it offered to station an Indian officer in the Pacific Command and the Central Command. The demand that India should have a position in the Central Command was being made by the BJP-led government and the pro-American strategic experts. Further, the agreement displays USA’s interests to make the two armed forces compatible for joint operations through “inter-operatability.”



The UPA government, in its Common Minimum Programme, has committed to pursue an independent foreign policy and promote multipolarity in international relations. Regarding the United States, the CMP states, “Even as it pursues closer engagement and relations with the USA, the UPA government will maintain the independence of India’s foreign policy positions on all regional and global issues.”



Can the defence minister and the UPA government explain whether this agreement is in consonance with this approach in the CMP?



The Indo-US defence agreement comes at a time when the US is actively working to contain China. It is pressurising the European Union not to lift its embargo on supply of arms to China. Donald Rumsfeld, the US secretary of defence, has recently in Singapore voiced concern about China’s defence expenditure and acquisition of arms. The United States does not see China as a strategic partner but as a strategic rival. In contrast, the US approach manifested in this agreement is to prop up India as a counterweight.



It is clear that India will be given concessions only if it plays the role the US has designated for it in its global and Asian strategy.



The union defence minister Shri Pranab Mukherjee, before leaving for the United States, told the media that he is going on an “exploratory” visit. If such an “exploration” has resulted in this agreement, one shudders to think of what will be the outcome of a substantive visit.



This agreement has come just before the first official visit of our prime minister to Washington this month. There are apprehensions. The government is anxious to get US support for the permanent membership of the Security Council. The government should be warned not to give further concessions to the United States.



The stand of the Left parties on defence, security and foreign policy issues is resented by the BJP. L K Advani had warned the UPA government not to allow the communists to meddle in security matters. This was stated when we protested against the chief minister of Assam saying that the FBI is welcome to investigate the bomb blasts in the state last year. Advani had justified the FBI being involved in such enquiries. After all, this is the gentleman who in 1999 welcomed the first India-US joint naval exercises. And this is the gentleman who was the first home minister to pay a visit to the CIA headquarters at Langley. It is not surprising, therefore, that the BJP has welcomed this agreement wholeheartedly.



We are rejecting the contention that the Left cannot have any say in security, defence and foreign policy issues. It is our intervention that rallied the opposition against sending troops to Iraq at a time when the Vajpayee government was on the verge of deciding to do so. We shall not hesitate to express our opinion. Matters of security, defence and foreign affairs cannot be treated as a holy cow and kept away from public debate and scrutiny.



The framework of the Indo-US defence relations should be rejected. Let it remain just a framework skeleton. It should not be fleshed out.