March 08, 2006

நந்தவனத்தில் ஒரு ஆண்டி

தமிழக சட்டமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து போட்டியிட முடிவு செய்துள்ளதாக வெங்கய்யா நாயுடு அறிவித்துள்ளார். மூன்று நாள் ஆராய்ச்சிக்குப் பின் இந்த முடிவிற்கு வந்துள்ளனர்.
உண்மை என்ன? யாராவது பா.ஜ.க.வை கூட்டணிக்கு அழைத்தார்களா? இல்லையே! ஏன் விஜயகாந்த்கூட பா.ஜ.க.வை சீண்ட வில்லையே! இவர்களாகவே வலியப் போய் நாங்கள் விஜயகாந்தின் தே.மு.தி.க.வுடன் கூட்டணி வைப்போம் என்று கடந்த 6 மாதமாக பேசி வந்தனர். ஆனால் விஜயகாந்த் பக்கம் இருந்து மூச்சுக் காற்றுக்கூட இவர்கள் மீது படவில்லை.அது மட்டுமா! பா.ஜ.க. எம்.பி. திருநாவுக்கரசர் அதிமுகவுடன் கூட்டு சேர்வோம் என்று அறந்தாங்கியில் பொதுக்கூட்டத்தில் முழங்கினார். போய° கார்டன் பக்கமே இவர்கள் தலைகாட்டக்கூடாது என்று அம்மா தரப்பில் கூற! அலறியடித்துக் கொண்டு ஓடி வந்து விட்டனர்.
பா.ஜ.க.வில் சேர்ந்த பு.தா. இளங்கோவன் கூட, ஐயோ இந்த கும்பலோடு சேர்ந்துட்டோமே என்று வருத்தப்பட்டு புதிய கட்சி துவங்கி விட்டார்.
நேற்று முளைத்த கட்சிகள் கூட பா.ஜ.க.வை சீண்டத் தயாராக இல்லாத போது, தாங்கள் தனித்தே போட்டியிடுவோம் என்று வெங்கய்யா கூறியிருப்பதை தேர்தல் ஜோக்கில் சேர்த்துக் கொள்ளலாம்!பா.ஜ.க.வின் மதவாத அரசியல் காலாவதியாகிப் போனதைத்தான் இந்த தேர்தல் எடுத்துக் காட்டுகிறது.
மதத்தை அரசியலில் கலப்பதை இந்திய நாட்டில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். மத்திய அரசு இது குறித்த ஒரு சட்டத்தை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்தால் மிகச் சிறப்பாக இருக்கும். இது இசுலாமிய மதஅடிப்படைவாத கட்சிகளுக்கும், கிறித்துவ மத அடிப்படைவாத கட்சிகளுக்கும் பொருந்தும்.
மதம், ஜாதி இவைகள் தனிநபர் விருப்பாக மட்டும் இருக்கட்டும்! பொது வாழ்வில் இவைகள் தலை காட்டுவது தேச நலனிற்கு தீங்கானது!.
நந்தவனத்தில் ஒரு ஆண்டி
அவன் நாலாறு மாதமாய் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி
அதை கூத்தாடி கூத்தாடி
போட்டு உடைத்தாண்டி
என்ற கதையாகிப் போனது பா.ஜ.க.வின் நிலை...

2 comments:

siva gnanamji(#18100882083107547329) said...

ba.ja.ka(b.j.p) ya?
appdeenna ennango?

சந்திப்பு said...

Siva

Really you want to know this? (BJP - Bharathia Janatha Party) It's a communal - violence - terrorist party.

Thankyou