March 16, 2006

அணுசக்தி உடன்பாடும் தாராப்பூர் அணுமின் நிலையமும்

அணுசக்தியை இருகூறாக்கி மக்கள் பயன்பாட்டுக் கான திட்டங்களை சர்வதேச அணுசக்தி முகமையின் சோதனை வரம்புக்குள் இட்டு சென்றது மத்திய அரசு. இந்த இருகூறாக்கும் திட்டம் நமது சுயேட்சையான அணுசக்தி திட்டங்களைச் சீர்குலைத்துவிடும் என இடதுசாரிகள் எச்சரிக்கை செய்தபிறகும் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ் பயணத்தின்போது மத்திய அரசு ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தின் மை உலரும் முன்பே அமெரிக்கா தனது சுயரூபத்தைக் காட்டத் துவங்கி விட்டது.
தாராப்பூர் அணுமின் நிலையம் சுதந்திர இந்தியாவில் நிறுவப்பட்ட முதல் அணுமின் நிலையமாகும். இந்த அணுமின் நிலையத்திற்கு எரிபொருள் தருவதாக முதலில் அமெரிக்கா ஒப்புக்கொண்டது. அதன் கட்டுமானப்பணி முடியும்வரை காத்திருந்தது. ஆனால் வழக்கம்போல் கடைசி நேரத்தில் காலை வாரிவிட்டது. அப்போதைய பிரத மர் நேரு சோவியத் யூனியனின் உதவியை நாடினார்.
சுதந்திரக் காற்றை சுவாசிக்கத் தொடங்கியிருந்த இந்தியா போன்ற நாடுகளுக்கு உதவுவதைத் தனது கடமை யாகக் கொண்டிருந்த சோவியத் யூனியன், மறுப்போ நிபந்தனையோ கூறாமல் உடனடியாக எரிபொருள் யுரேனியத்தைத் தந்து உதவியது.
தாராப்பூர் அணுமின் நிலையத்தைத் தடுக்க முடியா மல் போனபின் இந்தியாவின் அணுசக்தித் திட்டங்களின் வளர்ச்சி கண்டதும், அணுமின் நிலையங்கள் அதிக அள வில் அமைக்கப்பட்டு மின் உற்பத்தித் திறனை அதிகப் படுத்தியதும் அமெரிக்காவின் பொறாமைத் தீயை வளர்த் தது. செர்னோபில் அணுமின் நிலைய விபத்தைப் பயன் படுத்திக்கொண்டு, இந்தியாவில் அணுமின் நிலையங்களே துவங்காத அளவுக்கு பீதியூட்டும் பிரச்சாரத்துக்குப் பின்னணியில் இருந்து தூண்டியது. கல்பாக்கம் அணு மின் நிலையமும் கூடங்குளம் அணுமின் நிலைய திட்டமும் எத்தனைத் தடைகளைத் தாண்ட வேண்டியிருந்தது என்பதை வரலாறு சொல்லும்.
இந்தச் சூழ்நிலையில்தான் தாராப்பூர் அணுமின் நிலைய விவகாரம் சக்கரத்தின் முழுச் சுற்றைப்போல மீண் டும் உருவாகியுள்ளது. இந்த அணுமின் நிலையத்திற் கான எரிபொருள் மாற்றப்பட வேண்டிய நிலையில் உள் ளது. இதற்கு எரிபொருள் தருமாறு மத்திய அரசு அமெரிக் காவிடம் கேட்டது. ஆனால் இந்தியாவிற்கு யுரேனியம் எரி பொருள் வழங்க, சட்டத்தில் இடமில்லை என்று அமெரிக்கா கைவிரித்து விட்டது.
இதன்பின்னர் வழக்கம்போல் ரஷ்யாவின் உதவியை நாடியுள்ளது மத்திய அரசு. ரஷ்யாவும் முந்தைய சோவி யத் யூனியன்போலவே இந்தியாவுக்கு ஆதரவுக்கரம் நீட்டி 60 டன் யுரேனியத்தை வழங்க முன்வந்துள்ளது. ரஷ்யப் பிரதமரின் இந்தியப் பயணத்தின்போது (மார்ச் 16) இதற் காக ஒப்பந்தமும் கையெழுத்தாகவிருக்கிறது. இந்த யுரேனியம் கிடைத்தால்தான் தாராப்பூர் அணுமின் நிலை யத்தை தொடர்ந்து இயக்க முடியும்; மேற்குப் பகுதி மின் தொகுப்புக்கு மின்சாரம் கிடைக்கும். மும்பை போன்ற தொழில் நகரங்களுக்கு உதவிகரமாக இருக்கும்.
இந்நிலையில் ரஷ்யாவிடமிருந்து இந்தியா எரிபொருள் பெறுவது தங்களுடனான உடன்பாட்டை மீறுவதாகும் என்று அமெரிக்கா அலறத் துவங்கியுள்ளது. அதாவது யுரேனியத்தை இந்தியாவுக்கு வழங்கவும் அமெரிக்கச் சட்டம் இடம் தராது; ரஷ்யாவிடமிருந்து வாங்கினால் அது உடன்பாடு மீறல்; வாங்காவிட்டால் தாராப்பூர் அணுமின் நிலையத்தை மூடவேண்டியதுதான்.

அமெரிக்காவுடன் மத்திய அரசு செய்துகொண்ட ஒப்பந்தத்தின் பலன் எத்தகைய விளைவை உடனடியாக ஏற்படுத்தியிருக்கிறது என்பதை தேசத்தின் மீது பற்று கொண்ட ஒவ்வொருவரும் எண்ணிப் பார்க்க வேண்டும். அமெரிக்க ஏகாதிபத்தியப் புலி என்னதான் பசு வேடம் போட்டாலும் அதன் கோர வரிக்கோடு வெளிப்படவே செய்கிறது. தாராப்பூரில் துவங்கியுள்ள அணுமின் நிலைய எரிபொருள் சர்ச்சை கூடங்குளம் வரை நீண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. மக்கள் விழிப்புடன் இருந்து அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சூழ்ச்சி வலையை நறுக்கிப் போடுவது மிகமிக அவசியம்.
நன்றி:http://www.theekkathir.com

No comments: