March 03, 2006

அணு அடிமைகளாகும் நாடுகள்...

புஷ்-மன்மோகன் சந்திப்பின் போது அணுசக்தி விவகாரம் தொடர்பாக உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக :
  • அணுசக்தியை இராணுவம் சார்ந்து பயன்பாடு, இராணுவம் சாராத (சிவில் உபயோகம்) பயன்பாடு என பிரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
  • இதன் மூலம் சர்வதேச அணுசக்தி ஏஜென்சியின் கண்காணிப்பின் கீழ் சிவில் உபயோகம் சார்ந்த 14 இந்திய அணு உலைகள் கொண்டு வரப்படும்.
  • இவ்வுடன்பாட்டில் பா°ட் பீரிடர் (அதிவே ஈனுலை) அணு உலைகளை கொண்டுவரவில்லை என்று கூறப்படுகிறது.
  • மேலும் அணு உலை செயல்பாட்டிற்கு அமெரிக்காவிடம் இருந்து யுரேனியம் பெறுவதற்கு வழிவகுத்துள்ளதாக கூறப்படுகிறது.
  • இது தவிர வர்த்தகம், விவசாயம், மருத்துவம் என பலதுறைகளில் இந்தியா - அமெரிக்க ஒத்துழைப்பு - உதவி குறித்தும் உடன்பாடு எட்டப்பட்டதாக கூறப்படுகிறது.
  • மிக முக்கியமாக ஜூலை 18 அன்று மன்மோகன் சிங் அமெரிக்கா சென்றிருந்தபோது எட்டப்பட்ட அணுசக்தி உடன்பாடு அமலாக்கம் குறித்து உறுதிபடுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கிறார்கள்.
  • தீவிரவாதத்திற்கு எதிராக அமெரிக்கா - இந்தியா கூட்டாக போராடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாம் எழுப்பும் கேள்விகள்:
அ. மன்மோகன் சிங் அரசு இந்திய பாராளுமன்றத்திற்கும் - மக்கள் மன்றத்திற்கும் ஜூலை 18 அன்று அமெரிக்காவுடன் செய்துக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை முதலில் பகிரங்கமாக வெளியிட வேண்டும்.
ஆ. நேற்றைய உடன்பாட்டின் மூலம் இந்தியாவை “அணு ஆயுதங்களை வைத்திருக்கும்” நாடாக அமெரிக்கா அங்கீகரிக்கவில்லை. மாறாக அணுவை ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தும் நாடுகளின் பட்டியலின் கீழ்தான் நம்மை வைத்துள்ளது. இதன் மூலம் எதிர்காலத்தில் நாம் அணு ஆயுத சோதனை உட்பட - அணு ஆயுதங்கள் தயாரிப்பதற்கு தடை - கட்டுப்பாடுகள் வரலாம்!
இ. அமெரிக்கா இன்றைக்கு உலகை மூன்றாக பிரித்து விட்டது. அணு ஆயுதங்கள் உள்ள நாடு, இந்திய பாணி அணு ஆயுதங்கள் அற்ற நாடு, அணுவே இல்லாத நாடுகள்.... என பிரித்துள்ளது. இது எதிர்கால உலகில் அணு சார் பொருளாதார சூழலை உருவாக்கலாம். அல்லது உலக நாடுகளின் அணு அடிமைகளாக ஆக்கப்படலாம்...
ஈ. தீவிரவாதத்திற்கு எதிராக இந்தியா - அமெரிக்கா போராடும் என்று கூறப்பட்டுள்ளது. அமெரிக்காவோ --சிரியா, வடகொரியா, கியூபா-- என பல சின்னஞ்சிறிய மிகக் குட்டி நாடுகளையெல்லாம் தீமைகளின் அச்சு என்று வர்ணித்துள்ளது. இந்த நாடுகளையெல்லாம் இந்தியா எதிர்க்கப்போகிறதா? என்ற கேள்வியும் எழுகிறது...
அதைவிட இந்த நூற்றாண்டின் மகா கேலமான சம்பவம் எது என்றால் அகிம்சாவாதி மகாத்மாவின் சமாதியில் - உலக கொலைகாரன் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டதுதான்! அகிம்சாவாதிகளின் வரலாற்றில் இது பெரும் கரை... இது குறித்து தமிழ் வலைப்பூவில் கவிதை வடிவில் வாசித்தால்தான் அதன் சாரத்தை உடலிலும் - உள்ளத்திலும் ஏற்ற முடியும்...

இந்தியாவின் புதிய நம்பகமான கூட்டாளியாக இந்தியா மாறி வருவது உலக பொருளாதாரத்தில் வளர்ந்து வரும் சீனாவை மிரட்டுவதற்குதான்.

15 comments:

Amar said...

சந்திப்பு,

உடல் நிலை சரியாகிவிட்டதா?

அ.ஜுலை'18 ஆம் தேதி மன்மோகன் சிங்-புஷ் கையெழுத்து போட்ட ஒப்பந்தம் ஜுலை'19ஆம் தேதியே அனைத்து பத்திரிக்கைகளிலும் வந்து விட்டது.

அடுத்த commentல் முழு Joint Press Releaseயும் paste செய்கிறேன்.

:-)

ஆ.இந்தியா தன்மீது voluntary moratorium ஒன்றை ஏற்று கொண்டுள்ளது.அதாவது இனிமேல் நாங்கள் அணுஆயுத சோதனை செய்ய வேண்டியது இல்லை, அதனால் இனிமேல் சோதனை செய்ய மாட்டோம் என்று அறிவித்துட்டது.

அதனால் நாம் இப்போதைக்கு சோதனை எதுவும் செய்ய போவதில்லை.

1998ஆண்டில் இருந்தே கலாம்,சிதம்பரம்,ராமன்னா,வாஜ்பாய்,மன்மோகன் சிங் - இவர்கள் அனைவரும் இதே கருத்தை திரும்ப திரும்ப சொல்லியிருக்கிறார்கள்.

கம்யூனிஸ்டகளின் காதில் மட்டும் எனோ இது மாதிரி விஷயங்கள் விழுவதில்லை. :-)

இ. இது உங்கள் கற்பனை.

கற்பனைகளுக்கு சர்வதேச உறவுகளில் இடம் இல்லை.

(வேண்டுமானால் கம்யூனிஸ்ட்கள் சீனாவும் இந்தியாவும் முத்தமிட்டு கொள்வது போல கற்பனை செய்து கொள்ளலாம் - முதுகின் பின்னால் கத்தி இருக்கிறது என்பதை மறந்து)

ஈ.எதிரிக்கு எதிரி நன்பன்.
ஒசாமாவுக்கு இந்தியா ஒரு மதசார்பற்ற நாடாக இருப்பது பிடிக்கவில்லை."இஸ்லாமிய சாம்ராஜ்யம்" அமைக்க வேண்டும் என்று இந்தியா மீது ஜிகாத் அறிவித்துள்ளான்.அமெரிக்கா மீதும் அறிவித்துள்ளான்.எதிரிக்கு எதிரி நன்பன்.

சீனாவுக்கும் இந்திய-அமெரிக்கா இரண்டு நாடுகளுக்கும் போட்டி.
(பொருளாதாரா போட்டி அல்ல, இது geo-strategic influence and power projection)

(பி.கு:

சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு பற்றி மட்டும் ஏனோ கம்யூனிஸ்ட்கள் பேசுவதில்லையே)

Amar said...

ஒப்பந்தம் : Full Text.

For Immediate Release
Office of the Press Secretary
July 18, 2005

Joint Statement between President George W. Bush and Prime Minister Manmohan Singh

Prime Minister Manmohan Singh and President Bush today declare their resolve to transform the relationship between their countries and establish a global partnership. As leaders of nations committed to the values of human freedom, democracy and rule of law, the new relationship between India and the United States will promote stability, democracy, prosperity and peace throughout the world. It will enhance our ability to work together to provide global leadership in areas of mutual concern and interest.

Building on their common values and interests, the two leaders resolve:

To create an international environment conducive to promotion of democratic values, and to strengthen democratic practices in societies which wish to become more open and pluralistic.
To combat terrorism relentlessly. They applaud the active and vigorous counterterrorism cooperation between the two countries and support more international efforts in this direction. Terrorism is a global scourge and the one we will fight everywhere. The two leaders strongly affirm their commitment to the conclusion by September of a UN comprehensive convention against international terrorism.
The Prime Minister's visit coincides with the completion of the Next Steps in Strategic Partnership (NSSP) initiative, launched in January 2004. The two leaders agree that this provides the basis for expanding bilateral activities and commerce in space, civil nuclear energy and dual-use technology.
Drawing on their mutual vision for the U.S.-India relationship, and our joint objectives as strong long-standing democracies, the two leaders agree on the following:

FOR THE ECONOMY

Revitalize the U.S.-India Economic Dialogue and launch a CEO Forum to harness private sector energy and ideas to deepen the bilateral economic relationship.
Support and accelerate economic growth in both countries through greater trade, investment, and technology collaboration.
Promote modernization of India's infrastructure as a prerequisite for the continued growth of the Indian economy. As India enhances its investment climate, opportunities for investment will increase.
Launch a U.S.-India Knowledge Initiative on Agriculture focused on promoting teaching, research, service and commercial linkages.
FOR ENERGY AND THE ENVIRONMENT

Strengthen energy security and promote the development of stable and efficient energy markets in India with a view to ensuring adequate, affordable energy supplies and conscious of the need for sustainable development. These issues will be addressed through the U.S.-India Energy Dialogue.
Agree on the need to promote the imperatives of development and safeguarding the environment, commit to developing and deploying cleaner, more efficient, affordable, and diversified energy technologies.
FOR DEMOCRACY AND DEVELOPMENT

Develop and support, through the new U.S.-India Global Democracy Initiative in countries that seek such assistance, institutions and resources that strengthen the foundations that make democracies credible and effective. India and the U.S. will work together to strengthen democratic practices and capacities and contribute to the new U.N. Democracy Fund.
Commit to strengthen cooperation and combat HIV/AIDs at a global level through an initiative that mobilizes private sector and government resources, knowledge, and expertise.
FOR NON-PROLIFERATION AND SECURITY

Express satisfaction at the New Framework for the U.S.-India Defense Relationship as a basis for future cooperation, including in the field of defense technology.
Commit to play a leading role in international efforts to prevent the proliferation of Weapons of Mass Destruction. The U.S. welcomed the adoption by India of legislation on WMD (Prevention of Unlawful Activities Bill).
Launch a new U.S.-India Disaster Relief Initiative that builds on the experience of the Tsunami Core Group, to strengthen cooperation to prepare for and conduct disaster relief operations.
FOR HIGH-TECHNOLOGY AND SPACE

Sign a Science and Technology Framework Agreement, building on the U.S.-India High-Technology Cooperation Group (HTCG), to provide for joint research and training, and the establishment of public-private partnerships.
Build closer ties in space exploration, satellite navigation and launch, and in the commercial space arena through mechanisms such as the U.S.-India Working Group on Civil Space Cooperation.
Building on the strengthened nonproliferation commitments undertaken in the NSSP, to remove certain Indian organizations from the Department of Commerce's Entity List.
Recognizing the significance of civilian nuclear energy for meeting growing global energy demands in a cleaner and more efficient manner, the two leaders discussed India's plans to develop its civilian nuclear energy program.

President Bush conveyed his appreciation to the Prime Minister over India's strong commitment to preventing WMD proliferation and stated that as a responsible state with advanced nuclear technology, India should acquire the same benefits and advantages as other such states. The President told the Prime Minister that he will work to achieve full civil nuclear energy cooperation with India as it realizes its goals of promoting nuclear power and achieving energy security. The President would also seek agreement from Congress to adjust U.S. laws and policies, and the United States will work with friends and allies to adjust international regimes to enable full civil nuclear energy cooperation and trade with India, including but not limited to expeditious consideration of fuel supplies for safeguarded nuclear reactors at Tarapur. In the meantime, the United States will encourage its partners to also consider this request expeditiously. India has expressed its interest in ITER and a willingness to contribute. The United States will consult with its partners considering India's participation. The United States will consult with the other participants in the Generation IV International Forum with a view toward India's inclusion.

The Prime Minister conveyed that for his part, India would reciprocally agree that it would be ready to assume the same responsibilities and practices and acquire the same benefits and advantages as other leading countries with advanced nuclear technology, such as the United States. These responsibilities and practices consist of identifying and separating civilian and military nuclear facilities and programs in a phased manner and filing a declaration regarding its civilians facilities with the International Atomic Energy Agency (IAEA); taking a decision to place voluntarily its civilian nuclear facilities under IAEA safeguards; signing and adhering to an Additional Protocol with respect to civilian nuclear facilities; continuing India's unilateral moratorium on nuclear testing; working with the United States for the conclusion of a multilateral Fissile Material Cut Off Treaty; refraining from transfer of enrichment and reprocessing technologies to states that do not have them and supporting international efforts to limit their spread; and ensuring that the necessary steps have been taken to secure nuclear materials and technology through comprehensive export control legislation and through harmonization and adherence to Missile Technology Control Regime (MTCR) and Nuclear Suppliers Group (NSG) guidelines.
The President welcomed the Prime Minister's assurance. The two leaders agreed to establish a working group to undertake on a phased basis in the months ahead the necessary actions mentioned above to fulfill these commitments. The President and Prime Minister also agreed that they would review this progress when the President visits India in 2006.

The two leaders also reiterated their commitment that their countries would play a leading role in international efforts to prevent the proliferation of weapons of mass destruction, including nuclear, chemical, biological and radiological weapons.

In light of this closer relationship, and the recognition of India's growing role in enhancing regional and global security, the Prime Minister and the President agree that international institutions must fully reflect changes in the global scenario that have taken place since 1945. The President reiterated his view that international institutions are going to have to adapt to reflect India's central and growing role. The two leaders state their expectations that India and the United States will strengthen their cooperation in global forums.

Prime Minister Manmohan Singh thanks President Bush for the warmth of his reception and the generosity of his hospitality. He extends an invitation to President Bush to visit India at his convenience and the President accepts that invitation.

இது ஒரு முறை Google செய்தால் கிடைக்கிறது.

இதில் என்னமோ பெரிய இரானுவ ரகசியம் இருப்பது போல கற்பனை செய்து கொண்டு நீங்கள் எழுதுவது ரொம்ப தமாசாக இருக்கிறது சந்திப்பு அவர்களே.

கொஞ்சம் பொறுமையாக rhetoricஐ தவிர்த்து எழுதுங்கள், Please.

சந்திப்பு said...

நன்றி சமுத்ரா. நலம்.

1. ஐயா நான் கூறியது அவர்கள் வெளியிட்ட கூட்டு பத்திரிகை செய்தியல்ல. இது அதனுள் இருக்கும் சில விஷயங்களை மட்டுமே மேலோட்டமாக தெரிவிக்கிறது. எனக்குத் தெரிந்தவரை ஜூலை 18 ஒப்பந்தத்தை இந்திய பாராளுமன்றத்தில்கூட இன்னும் சமர்ப்பிக்கவில்லையென்பதே!

2. அணு சோதனையை நாமாக நிறுத்திக் கொள்வது என்பது நம்முடைய உரிமை. அதுவே அமெரிக்க மூக்கை நுழைத்து நிறுத்தக்கூடாது. இது எதிர்காலத்தில் நடக்கும். அதேபோல் பொக்ரான் அணு சோதனையை பொதுவுடைமை கட்சியினர்தான் வலுவாக எதிர்த்தனர். இந்திரா காந்தி 74 செய்யப்பட்ட சோதனையே போதுமானது. இன்னொரு சோதனை தேவையில்லை. இது தெற்காசிய பிராந்தியத்தில் பதட்டத்தை ஏற்படுத்தும் என்று கூறினார். ஆனால் வாஜ்பாய் சுயநல அரசியல் காரணமாக பொக்ரானில் வெடிக்க - பாகிசுதானும் பதிலுக்கு சோதனை செய்தது. அணு குண்டு பாகிசுதான் கையில் இருந்தாலும், இந்தியா கையில் இருந்தாலும் அது ஆபத்தானது என்பதுதான் பொதுவுடைமை கட்சியினரின் நிலை! அணு ஆக்கத்திற்கு பயன்பட வேண்டுமே தவிர அமெரிக்காவின் பேட் பாய் - லிட்டில் பாய் போல ஹிபாகுஷாக்களை உருவாக்கக்கூடாது. மனித குலத்தை அழிப்பதாக இருக்கக்கூடாது. அதனால் தவறான கருத்தை இங்கே விதைக்காதீர்!

3. நல்ல ஜோக்! உண்மையை ஏற்பதற்கு தனி மனம் வேண்டும். அது சரி! இன்றைக்கு உலகம் அணு ஆயுதம் உள்ள நாடுகள் - ஆயுதமற்ற நாடுகள் - அதை நினைத்துக்கூட பார்க்க முடியாத நாடுகள் என்று பிரிந்துக் கிடக்கிறதா இல்லையா! இதில் உங்கள் நிலை என்ன? அணு குண்டுகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? நீங்கள் எந்தப் பக்கம்! நான் சமாதானத்தின் பக்கம்.

4. வாஜ்பாய்தான் முதலில் ஈராக்கிற்கு இந்திய படைகளை அனுப்ப துடித்தவர். தற்போது மன்மோகன் அந்த கேவலமான வேலையை தொடர்கிறார் - ஈரான் விஷயத்தில் அதுதான் நடந்தது. அதனால்தான் இசுலாமிய உலகம் இந்தியாவை அமெரிக்க உறவினராக பார்க்கிறது. எதிரிக்கு எதிரி நன்பன் என்கிறீர்களா? இந்தியாவுக்கு யார் எதிரி? ஈராக்கா, ஈரானா... பொய்யான எதிரிகளை உருவாக்குவதில் சங்கும்பல் படு கெட்டிக்காரர்கள்.

5. சீனா ஆக்கிரமித்ததா? எங்கே? எப்போது? எதை?....

இறுதியாக கூகிள் ரகசியத்திற்கு நன்றி!

Amar said...

சந்திப்பு,

எதை இரு நாடுகளும் ஏற்றுகொண்டு இருக்கின்றனவோ அதை வெளியிட்டு விட்டார்கள்.

வேறு எதாவது treaty கையெழுத்தாகி இருந்தால் அது அமெரிக்க பாராளமன்றம் ratify செய்ய வேண்டும் என்பதால் எதையும் ரகசியமாக நடத்திவிட முடியாது.

இங்கே எதையும் மறைக்கவும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.

//இது எதிர்காலத்தில் நடக்கும்//

ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.உங்களுக்கு ?

//அணு குண்டு பாகிசுதான் கையில் இருந்தாலும், இந்தியா கையில் இருந்தாலும் அது ஆபத்தானது என்பதுதான் பொதுவுடைமை கட்சியினரின் நிலை!//

சீனாவின் கையில் இருந்தால்?
ரஷ்யாவின் கையில் இருந்தால்?
க்யூபாவின் கையில் இருந்தால்?

//74 செய்யப்பட்ட சோதனையே போதுமானது. இன்னொரு சோதனை தேவையில்லை//

யார் சொன்னது அப்படி?

அப்போது வெடிக்கபட்ட அணுகுண்டு weaponise செய்யபடாத ஒன்று.

சில டன்கள் எடை இருந்தது.

1998ஆம் ஆண்டு தான் இந்திய Weaponised Nuclear Deviceகளை சோதனை செய்தது.

அதை கொண்டு தான் எதிரிகளை தாக்க முடியும்.1974 ஒரு சோதனை ஓட்டம் மட்டுமே.

19890களில் இந்திரா காந்தி அணுகுண்டு சோதனை நடத்த முயற்ச்சி செய்தார்.

பின்னர் நரசிம்மா ராவும் முயற்ச்சி செய்தார்.

பாகிஸ்தான் கோரி ஏவுகனை சொதனை செய்த பின்னர் தான் வாஜ்பாய் அணுகுண்டு சோதனை செய்ய உத்தரவிட்டார்.

இந்த கோரி சீனாவில் இருந்த வந்த ஒரு ஏவுகனை.

கம்யூனிஸ்ட்டுகள் சீனாவின் செயலை எப்போது கண்டிப்பார்கள்? இந்தியா முழுவதும் சுடுகாடு ஆன பின்னரா?

//அணு குண்டுகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? நீங்கள் எந்தப் பக்கம்! நான் சமாதானத்தின் பக்கம்.
//

நான் இந்தியாவின் பக்கம்.
வலிமையான இந்தியாவின் பக்கம்.

சீனா தயாரிக்காததை நிறுத்தாத போது,அமெரிக்கா தயாரிக்காத்ததை நிறுத்தாத போது - இந்தியா நிறுத்தாது.

இந்தியா அணுகுண்டுகள் தயாரிக்க கூடாது என்று சொல்லும் துரோகிகள் இல்லாத பக்கம் தான் நான்.

//இந்தியாவுக்கு யார் எதிரி? ///

ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தானிடம் அணுஆயுதம் வாங்கும் ஈரான்

பாகிஸ்தான் நமது எதிரி இல்லை என்று சொன்னால் நான் இங்கே எழுதி எந்த பயனும் இல்லை.

//அதனால்தான் இசுலாமிய உலகம் இந்தியாவை அமெரிக்க உறவினராக பார்க்கிறது//

உலகத்திலும் இந்தியாவிலும் இஸ்லாமியர்களை தவிற மற்ற மக்களும் உள்ளனர்.

//சீனா ஆக்கிரமித்ததா? எங்கே? எப்போது? எதை?....//

ஆம்.
எங்கே : காஷ்மீரில்.
எப்போது : கி.பி.1962 ஆம் ஆண்டு.
எதை : அக்சாய் சின்

மொத்தம் 37,555 சதுர கி.மீ.


பின்னர் பாகிஸ்தானிடம் ஒரு ஒப்பந்தம் போட்டு அவர்கள் வசம் உள்ள காஷ்மீரிலும் கொஞ்சம் ஏப்பம் விட்டுவிட்டது.

முழு அருனாச்சல் பிரதேசமும் அவர்களுடையது என்றும் இந்தியாவை வட-கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்ச்சி செய்து வருகிறார்கள்.

Amar said...

சந்திப்பு,

எதை இரு நாடுகளும் ஏற்றுகொண்டு இருக்கின்றனவோ அதை வெளியிட்டு விட்டார்கள்.

வேறு எதாவது treaty கையெழுத்தாகி இருந்தால் அது அமெரிக்க பாராளமன்றம் ratify செய்ய வேண்டும் என்பதால் எதையும் ரகசியமாக நடத்திவிட முடியாது.

இங்கே எதையும் மறைக்கவும் இல்லை, அதற்கான தேவையும் இல்லை.

//இது எதிர்காலத்தில் நடக்கும்//

ஜோசியத்தில் எனக்கு நம்பிக்கையில்லை.உங்களுக்கு ?

//அணு குண்டு பாகிசுதான் கையில் இருந்தாலும், இந்தியா கையில் இருந்தாலும் அது ஆபத்தானது என்பதுதான் பொதுவுடைமை கட்சியினரின் நிலை!//

சீனாவின் கையில் இருந்தால்?
ரஷ்யாவின் கையில் இருந்தால்?
க்யூபாவின் கையில் இருந்தால்?

//74 செய்யப்பட்ட சோதனையே போதுமானது. இன்னொரு சோதனை தேவையில்லை//

யார் சொன்னது அப்படி?

அப்போது வெடிக்கபட்ட அணுகுண்டு weaponise செய்யபடாத ஒன்று.

சில டன்கள் எடை இருந்தது.

1998ஆம் ஆண்டு தான் இந்திய Weaponised Nuclear Deviceகளை சோதனை செய்தது.

அதை கொண்டு தான் எதிரிகளை தாக்க முடியும்.1974 ஒரு சோதனை ஓட்டம் மட்டுமே.

19890களில் இந்திரா காந்தி அணுகுண்டு சோதனை நடத்த முயற்ச்சி செய்தார்.

பின்னர் நரசிம்மா ராவும் முயற்ச்சி செய்தார்.

பாகிஸ்தான் கோரி ஏவுகனை சொதனை செய்த பின்னர் தான் வாஜ்பாய் அணுகுண்டு சோதனை செய்ய உத்தரவிட்டார்.

இந்த கோரி சீனாவில் இருந்த வந்த ஒரு ஏவுகனை.

கம்யூனிஸ்ட்டுகள் சீனாவின் செயலை எப்போது கண்டிப்பார்கள்? இந்தியா முழுவதும் சுடுகாடு ஆன பின்னரா?

//அணு குண்டுகளை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? எதிர்க்கிறீர்களா? நீங்கள் எந்தப் பக்கம்! நான் சமாதானத்தின் பக்கம்.
//

நான் இந்தியாவின் பக்கம்.
வலிமையான இந்தியாவின் பக்கம்.

சீனா தயாரிக்காததை நிறுத்தாத போது,அமெரிக்கா தயாரிக்காத்ததை நிறுத்தாத போது - இந்தியா நிறுத்தாது.

இந்தியா அணுகுண்டுகள் தயாரிக்க கூடாது என்று சொல்லும் துரோகிகள் இல்லாத பக்கம் தான் நான்.

//இந்தியாவுக்கு யார் எதிரி? ///

ஒசாமா பின் லேடன் மற்றும் பாகிஸ்தானிடம் அணுஆயுதம் வாங்கும் ஈரான்

பாகிஸ்தான் நமது எதிரி இல்லை என்று சொன்னால் நான் இங்கே எழுதி எந்த பயனும் இல்லை.

//அதனால்தான் இசுலாமிய உலகம் இந்தியாவை அமெரிக்க உறவினராக பார்க்கிறது//

உலகத்திலும் இந்தியாவிலும் இஸ்லாமியர்களை தவிற மற்ற மக்களும் உள்ளனர்.

//சீனா ஆக்கிரமித்ததா? எங்கே? எப்போது? எதை?....//

ஆம்.
எங்கே : காஷ்மீரில்.
எப்போது : கி.பி.1962 ஆம் ஆண்டு.
எதை : அக்சாய் சின்

மொத்தம் 37,555 சதுர கி.மீ.


பின்னர் பாகிஸ்தானிடம் ஒரு ஒப்பந்தம் போட்டு அவர்கள் வசம் உள்ள காஷ்மீரிலும் கொஞ்சம் ஏப்பம் விட்டுவிட்டது.

முழு அருனாச்சல் பிரதேசமும் அவர்களுடையது என்றும் இந்தியாவை வட-கிழக்கில் இருந்து ஆக்கிரமிப்பு செய்ய முயற்ச்சி செய்து வருகிறார்கள்.

Amar said...

//வாஜ்பாய்தான் முதலில் ஈராக்கிற்கு இந்திய படைகளை அனுப்ப துடித்தவர். தற்போது மன்மோகன் அந்த கேவலமான வேலையை தொடர்கிறார் - ஈரான் விஷயத்தில் அதுதான் நடந்தது.//

ஈராக்கில் உள்ள ஷியாக்களை கொன்று குவித்த சதாமை இந்தியா ஆதரிக்க வேண்டுமா என்ன?

1991 ஆண்டு மார்ச் மாதம் ஈராக் பாஸ்ரா நகரில் நடந்த ஷியாக்களில் புரட்சியை சதாம் சில ஆயிரம் மக்களை கொன்றுகுவித்து அடக்கியதை இந்தியா அதரிக்க வேண்டுமா?

இல்லை, நம்மிடம் சிரித்து பேசி கொண்டே திருட்டு தனமாக பாகிஸ்தானிடம் இருந்து centrifugeகளை வாங்கிய ஈரானை ஆதரிக்க வேண்டுமா?

Centrifuge என்றால் என்னவென்று அறிய அமெரிக்க நிறுவனமான Googleஇன் உதவியை நாடவும்.அதே அமெரிக்க நிறுவன தயாரிப்பை ஒன்றை(Blogger) இப்போது நீங்கள் பயன்படுத்துவதால் அதையும் செய்ய தயங்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.

நீங்கள் சொல்வதும், பார்ப்பது மட்டுமே உன்மையாகிவிடாது சந்திப்பு அவர்களே.

சதாம் கொன்று குவித்த, ஈரானின் மத குருக்கள் கொன்று குவித்த இஸ்லாமியர்களை விட அமெரிக்கா அதிகம் கொன்றுவிடவில்லை.

இதே இஸ்லாமியர்களின் புனித மசூதிகளை சதாமிடம் இருந்து 1991 ஆம் ஆண்டு காப்பாற்றியதும் அமெரிக்கா தானே?

சீனர்கள் கலாச்சார புரட்சியின் பெயரால், ஸ்டாலின் சோவியத்தின் பெயரால் கொன்று குவித்ததை விட அமெரிக்கா கொன்றுவிடவில்லை.

கம்யூனிஸ்ட்டுகள்ரஷ்யாவில் உள்ள செசன்ய மக்களை கொன்று குவித்த அளவுக்கு அமெரிக்காவில் எந்த மாகானத்திலும் யாரும் யாரையும் கொன்று குவிக்கவில்லை.

சந்திப்பு said...

சமுத்ரா நான் ஏற்கெனவே கூறி விட்டேன் - அணு அயூதம் யார் கையில் இருந்தாலும் - எதிர்க்கப்பட வேண்டியதே! அதே சமயம் இந்த அணு ஆயுத கலாச்சாரத்தின் பிரம்மாவே அமெரிக்காதான். தவிர, உலகில் முதன் முதலில் அணுவால் மனிதனை பொசுக்கியதும் அதே அமெரிக்காதான். சோவியத் யூனியனோ, இந்த கேடுகெட்ட உலக ரவுடியிடம் இருந்து உலக மக்களை காப்பதற்காகத்தான் அணு ஆயுதத்தை தயாரித்தது. உலகமும் பாதுகாக்கப்பட்டது. இன்று! சோவியத் இல்லாத சூழலில் தன்னை பேட்டை பிசுத்தாவாக காட்டிக் கொள்கிறான் புஷ்.

வாஜ்பாயின் அணு சோதனைதான் முதலில் நடந்தது. பாகிசுதான் தான் செய்தது என்று தாங்கள் கூறுவது பச்சைப் பொய்!

நல்ல விஷயம் சமுத்ரா அமெரிக்கா தயாரிக்காததை நிறுத்தாத போது, இந்தியாவும் நிறுத்தக்கூடாது! யார் தவறு என்று சொன்னது?

பாகிசுதான்தான் எதிரியா? அட்டைக் கத்திவை வைத்துக் கொண்டு கனவில் சண்டைப் போடுங்கள்... பாகிசுதான் நட்பு நாடு. நம்மை விட சிறிய நாடு. நம்முடைய உறவினர்கள் அங்கே இன்னமும் இருக்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் இன்னமும் இந்தியாவில் இருக்கிறார்கள். இரண்டு நாடுகளும் சண்டை போட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுதான் என்றால், நீங்கள் என்ன அமெரிக்காவின் கைகூலியா? என்று மக்கள் எண்ணிவிட வாய்ப்புண்டு...

சீனா - இந்தியா மோதல் என்பதே! இல்லாத கோட்டிற்கு சண்டை போட்டதுதான். இந்தியா என்ற நாட்டையும், அதன் எல்லைகளையும் வரையறுத்தது இங்கிலாந்துதான். அந்த விஷயமும் அப்போதே முடிந்து இரண்டு நாடுகளுக்கும் தற்போது எந்த எல்லை தகராறும் இன்றி சுமூகமாக இருப்பது உங்களுக்கு பிடிக்காதோ?

சமுத்ரா சீனா, ரஷ்யா கலாச்சார புரட்சி... அது இது என்று கற்பனையாக உளறாதீர்! நம்முடைய சமகால உலகில் அமெரிக்கா ஈராக்கில் 2 லட்சம் பேரை கொன்று, பல லட்சம் பேரை அனாதைகளாக்கி விட்டதே அதனை என்னவென்று கூறுகிறீர்கள். அவர்களெல்லாம் அப்பாவி மக்கள் அல்லவா?

Amar said...

//சோவியத் யூனியனோ, இந்த கேடுகெட்ட உலக ரவுடியிடம் இருந்து உலக மக்களை காப்பதற்காகத்தான் அணு ஆயுதத்தை தயாரித்தது. உலகமும் பாதுகாக்கப்பட்டது/

ஓ அதனால் தான் ஹிடலருடன் உடன்படிக்கை செய்து கொண்டாரா ஸ்டாலின் என்ற திவிரவாதி?

அமெரிக்கா அணுஆயுத அராய்ச்சியில இறங்கும் முன்னர் ஏன் சோவியத் யூனியன் அணுஅராய்ச்சியில் இறங்கியது?

//வாஜ்பாயின் அணு சோதனைதான் முதலில் நடந்தது. பாகிசுதான் தான் செய்தது என்று தாங்கள் கூறுவது பச்சைப் பொய்!///

என்ன சந்திப்பு அவர்களே!

எனக்கு அலுப்பாக உள்ளது.

கோரி என்பது ஒரு பாகிஸ்தான் எவுகனை.

இது கூட தெரியாமல் எப்படி நீங்கள் இந்திய அணுஆயுதங்களை பற்றி எழுதவந்தீர்கள்?

எல்லோருக்கும் தெரியும் இந்தியா சோதனை செய்த பின்னர் தான் பாகிஸ்தான் அணுகுண்டு சோதனை செய்தது என்று.

அதையாவது (வேண்டுமென்றே அல்லது சுத்தமாக அதை பற்றி தெரியாது என்பதால்) புரிந்துகொள்ளாமல் அதை பற்றி நான் சொல்வது தான் சரி என்று அடம் பிடித்தால் எப்படி?

கொஞ்சமாவது எழுதுவதை பற்றி ஒரு முறை படித்து தான் பாருங்களேன்.

அன்றூ ஒருவர் அப்படி தான் இந்தியாவும் பாகிஸ்தானும் NPTஐ எற்றுகொண்டு தான் அணுகுண்டு சோதனை நடத்தினார்கள் என்று எழுதுகிறார்.

இந்திய அரசு நெஞ்சு நோக கத்தி கொண்டு இருக்கிறது NPT எங்களுக்கு சமாதானாமில்லை என்று.


வாஜ்பாயின் அணுகுண்டு சோதனையல்ல சந்திப்பு அவர்களே இந்திய திருநாட்டின் அணுகுண்டு சோதனை.

சீன ஆக்கிரமிப்புக்கு எதிராக விழித்து எழுந்த இந்தியாவின் அணுகுண்டு சோதனை.

//சமுத்ரா சீனா, ரஷ்யா கலாச்சார புரட்சி... அது இது என்று கற்பனையாக உளறாதீர்! //

சீன கலாச்சார புரட்சி நடந்ததா இல்லையா?

Ten Years of Calamity என்று சரித்திர ஆசிரியர்கள் கூறும் காலம் கலாச்சார புரட்சியின் காலம் தானே?

இது நடந்த காலம் 1966-1976.
(The Great Leap Forward)

இது பற்றி உங்களுக்கு வேறு என்ன தெரிய வேண்டும் ?

கம்யூனிஸ்ட்டுகளால இந்த காலத்தில் கொல்லபட்ட மக்களின் என்னிக்கை மட்டும் 30 லட்சம் இருக்கும் சந்திப்பு அவர்களே.

சீனர்களை தவிற எல்லோரும் எற்றுகொள்ளும் உன்மை தான் இது.

ஜொஸப் ஸடாலினின் The Purgeல் கொல்லபட்ட மக்களின் என்னிக்கை ஒரு கோடியை தாண்டும்.

Genocideகளை பற்றி ஆய்வு செய்யும் யாரை வேண்டுமானாலும் கேட்டு பாருங்கள்.

இதை பற்றி இந்திய கம்யூனிஸ்ட்டுகள் உங்களை போன்ற சாதாரன மக்களிடம் எடுத்து சொல்வது இல்லை சந்திப்பு சார்.

அமெரிக்கா இரண்டு லட்சம் மக்களை கொன்றது என்பதற்க்கு எந்த ஆதாரமும் இல்லை என்றாலும் அமெரிக்காவின் ஈராக் அக்கிரமிப்பை நான் எதிர்க்கின்றேன்.

நீங்கள் ஏன் இந்தியாவின் ஆக்கிரமிப்பை கூட எதிர்க்க மறுக்கின்றீர்கள்?

Amar said...

//அப்போதே முடிந்து இரண்டு நாடுகளுக்கும் தற்போது எந்த எல்லை தகராறும் இன்றி சுமூகமாக இருப்பது உங்களுக்கு பிடிக்காதோ?
//

அக்சாய் சின்.

Amar said...

//பாகிசுதான்தான் எதிரியா? அட்டைக் கத்திவை வைத்துக் கொண்டு கனவில் சண்டைப் போடுங்கள்... பாகிசுதான் நட்பு நாடு. நம்மை விட சிறிய நாடு. நம்முடைய உறவினர்கள் அங்கே இன்னமும் இருக்கிறார்கள். அவர்களின் மூதாதையர்கள் இன்னமும் இந்தியாவில் இருக்கிறார்கள். இரண்டு நாடுகளும் சண்டை போட வேண்டும் என்பது அமெரிக்காவின் விருப்பம். உங்கள் விருப்பமும் அதுதான் என்றால், நீங்கள் என்ன அமெரிக்காவின் கைகூலியா? என்று மக்கள் எண்ணிவிட வாய்ப்புண்டு...///

சந்திப்பு அவர்களே,

இதற்க்கு என்னிடம் எந்த பதிலும் வராது.

நல்லது.

இன்று வரை எனது மனதில் இருந்த சந்திப்பு வேறு நாளை முதல் இருக்கம் போகும் சந்திப்பு வேறு.

Muthu said...

சமுத்ரா,
சுருக்கமாக,
தானே முன்வந்து அணு ஆயுத சோதனை செய்யபோவதில்லை என்பதெல்லாம் மீசையில் மண் ஒட்டாத கதைதான். நீங்களே நாளையே நாம் மீண்டும் பரிசோதனை செய்தால் இந்தியாவின் சாதனை என்று பதிவு போடுவீர்கள்.:))))))
அணு அடிமை கான்செப்ட்டை அவ்வளவு சுலபமாக ஒதுக்கிதள்ளிவிட முடியாது.ஒசாமா பற்றி நீங்கள் கூறுவது சரி.

//சீனாவின் இந்திய ஆக்கிரமிப்பு பற்றி மட்டும் ஏனோ கம்யூனிஸ்ட்கள் பேசுவதில்லையே//
இதுப்பற்றி நீங்கள் கொடுத்த தகவல்கள் எனக்கு பத்தவில்லை.இன்னும் விளக்கமாக கொடுக்கமுடியுமா?
ஜாயிண்ட் ஸ்டேட்மெண்ட் வேறு..ஒப்பந்தம் வேறு என்பதுதான் என் சிறுமூளைக்கும் தோன்றுகிறது.
பொதுவாக நீங்கள் அரசாங்கம் எடுக்கும் எல்லா நிலைகளையும் ஆதரிப்பவர் போல் தோன்றுகிறது.தேசிய நீரோட்டத்தில் நீந்துவது சுலபம்.ஆனால் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீந்துவது அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நீந்துவது சரியா?

Amar said...

//தானே முன்வந்து அணு ஆயுத சோதனை செய்யபோவதில்லை என்பதெல்லாம் மீசையில் மண் ஒட்டாத கதைதான். நீங்களே நாளையே நாம் மீண்டும் பரிசோதனை செய்தால் இந்தியாவின் சாதனை என்று பதிவு போடுவீர்கள்.:))))))//

நிதர்சனமான உன்மை அது தான் தமிழினி.

நாம் இப்போதைக்கு ஆணுஆயுத சோதனை செய்ய வேண்டியது இல்லை.

தேவையான warhead designகளை 98ஆம் ஆண்டே சொதித்து முடித்து விட்டார்கள்.

இப்போதைக்கு இந்தியாவின் பார்வை பொருளாதாரத்தில் மட்டுமே.

Raj Chengappa எழுதிய Weapons of Peace என்ற புத்தகம் கிடைத்தால் வாங்கி படித்து பாருங்கள்.

மீண்டும் சோதனை செய்ய வேண்டிய நிலை எப்போது வரும்?

நமது adversaries புதிய ரக ஆணுஆயுதங்களை அறிமுகபடுத்தும் போது.

அப்போது நிச்சயமாக நாம் நமது arsenalலை விரிவுபடுத்த சோதனை நடுத்துவோம்.

நம்மை எதுவும் அப்போது தடுக்காது.

இன்றைய நிலையில், நமது Voluntary Moratorium அமலில் உள்ளது.

நீங்கள் கோவை வந்தால் நானே என்னிடம் உள்ள அந்த புத்தகத்தை கொடுக்கிறேன்.

//இதுப்பற்றி நீங்கள் கொடுத்த தகவல்கள் எனக்கு பத்தவில்லை.இன்னும் விளக்கமாக கொடுக்கமுடியுமா?
//

அக்சாய் சின் பற்றியா அல்லது அருனாச்சலம் பற்றியா?

எல்லாமே Google செய்தால் கிடைக்கும், இருந்தாலும் குறிப்பாக எதை பற்றி அதிகம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்லுங்கள் என்னிடம் இருக்கும் எல்லா தகவல்களையும் தருகிறேன்.


//ஜாயிண்ட் ஸ்டேட்மெண்ட் வேறு..ஒப்பந்தம் வேறு என்பதுதான் என் சிறுமூளைக்கும் தோன்றுகிறது//

தமிழினி, treaty என்று எதுவும் கையெழுத்தாகவில்லை.

அமெரிக்க தனது நாட்டு சட்டங்களை மாற்ற ஒப்புகொள்கிறது.நாமும் அதற்க்கு பரிஉபகாரமாக சில உலைகளை சோதனைகளுக்கு திறந்து விடுகிறோம்.

இதை இரண்டு நாடுகளு joint statementஆக் வெளியுடுகின்றனர்.

Treatyக்கு இங்கு வேலையே இல்லை.

அப்படியே treay இருந்தாலும் அதை அமெரிக்க பாராளமன்றம் ratify செய்ய வேண்டும்.அப்படி இருக்கும் போது எப்படி அது ரகசியம் ஆக இருக்க முடியும்?

//பொதுவாக நீங்கள் அரசாங்கம் எடுக்கும் எல்லா நிலைகளையும் ஆதரிப்பவர் போல் தோன்றுகிறது
//

இதே அரசு "பார்க்"ஐ சோதனைகளுக்கு திறந்து விட்டு இருந்தால் நான் அரசுக்கு எதிராக ஆர்பாட்டம் செய்து கொண்டு இருப்பேன்.

அணுசக்தி/அணுஆயுத விஷயத்தில் இதுவரை மோரார்ஜி தேசாய் உட்பட யாருமே தவறே செய்தது இல்லை.
(லிபியாவிடம் ஒரே முறை ஒரு சிறு தவறு நடந்துவிட்டது)

இதே சந்திப்பு அவர்களின் பதிவி தான் நிலச்சீர்த்தங்களை பற்றியும், மானியங்களை பற்றியும் நான் பின்னூட்டங்கள் எழுதியுள்ளேன்.
(WTO பதிவுகளில் எங்கோ இருக்கும் என்று நினைக்கிறேன்)

//ஆனால் ஆழத்தில் என்ன இருக்கிறது என்று தெரியாமல் நீந்துவது அல்லது தெரிந்தும் தெரியாதது போல் நீந்துவது சரியா
//

எனக்கு தெரியாத விஷயங்களை பற்றி நான் பொதுவாக பேசியது கிடையாது.
இலக்கியம் பற்றியோ தமிழக சாதி அரசியலை பற்றியோ நான் பேசி நீங்கள் பார்த்தது உண்டா? :-)

சந்திப்பு said...

முத்து
இசுலாமிய பயங்கரவாதத்தை நான் ஆதரிக்கவில்லை. இசுலாமிய பயங்கரவாதம் மட்டுமல்ல நக்சலிச பயங்கரவாதமாக இருந்தாலும் அதை ஆதரிக்க முடியாது. பயங்கரவாதத்தின் வடிவம் மோடித்துவாவாக இருந்தாலும் சரி, வேறு எந்த வடிவமாக இருந்தாலும் அதை நான் ஆதரிப்பதில்லை. ஆதரிக்க மாட்டேன். அது எந்த ஒரு பிரச்சினைக்கும் தீர்வும் அல்ல.

சமுத்ரா எல்லை வரையறுப்புகளைப் பொறுத்தவரை நம்முடைய இந்திய மாநிலங்களுக்குள் பிரச்சினைகள் எழுந்ததை தாங்கள் அறியவில்லையா? ஏன் கேரளத்திற்கும் - தமிழகத்திற்கும் - ஆந்திரத்திற்கும் - தமிழகத்திற்கும் இப்படி பல பிரச்சினைகள் இருந்தது. எனவே இந்திய - சீன எல்லைப் பிரச்சினை என்பது ஆக்கிரமிப்போடு சம்பந்தப்பட்டது இல்லை. (இது பனாவை, ஈராக்கை, ஆப்கானை அமெரிக்கா அபகரித்து விட்டதே அது போன்று அல்ல).

அதேபோல் நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பாகிசுதான் நம்முடைய நட்பு நாடு, சகோதர நாடுதான். பாகிசுதான் மக்கள் நம் சகோதரர்கள்தான். அதே சமயம் பாகிசுதான் அரசுகள் இந்தியாவிற்கு எதிராக - அமெரிக்காவின் சூழ்ச்சியோடு பயங்கரவாத செயல்களை தொடர்ந்து செய்து வருவதை நாம் அனுமதிக்க முடியாது. அத்தகைய செல்களை நிச்சயம் எதிர்த்தே ஆக வேண்டும். இதில் எந்தவிதமான சமரசத்திற்கும் இடமில்லை.

கலாச்சார புரட்சி தவறான ஒன்று என்று அந்த நாடே முடிவு செய்து. அதை திரும்பப் பெற்றுக் கொண்டது. எந்த ஒரு நாட்டிலும் அமலாக்கத்தில் தவறுகள் நடக்கலாம். அந்த தவறுகளில் இருந்து அவர்கள் பாடம் கற்கிறார்களா என்பதுதான் பிரச்சினை? குறிப்பாக இந்தியா - பாகிசுதான் பிரிவினைக்கு அடித்தளம் இட்டவர்களே சங்பரிவார கும்பல்கள்தான். மதத்தை அரசியலோடு கலந்து - இந்துத்துவ இந்தியாவாக மாற்ற துடித்ததன் விளைவுதான் பாகிசுதான் உருவாக்கம் பெற்றது. இன்னும் கூற வேண்டுமானால் சுதந்திரப்போராட்டத்தின் ஆரம்ப கட்டத்தில் பல ஆயிரக்கணக்கான இசுலாமிய சகோதரர்களின் இரத்தம் - உயிர் இந்திய மண்ணிற்காக அர்ப்பணம் செய்யப்பட்டுள்ளது. வரலாற்று பாடப் புத்தகங்கள் இதை அப்பட்டமாக மறைத்தும் விட்டன... வரலாறு மறக்காது. ஒரு வரலாற்றில் இருந்து பாடம் கற்காமல் சங்பரிவார - மோடித்துவ கும்பல் இன்றைக்கும் இசுலாமியர்களை - கிறித்துவர்களை இரண்டாம்தரமாக நடத்துவதையும், அவர்கள் எல்லாம் ஏதோ வேறு நாட்டைச் சார்ந்தவர்கள் போல பேசுவம் - தாக்கும் எதிர் விளைவுகளை உருவாக்காதா?

Amar said...

//அதேபோல் நீங்கள் விரும்பினாலும், விரும்பா விட்டாலும் பாகிசுதான் நம்முடைய நட்பு நாடு, சகோதர நாடுதான். பாகிசுதான் மக்கள் நம் சகோதரர்கள்தான். //

அப்படியா!
நல்ல கண்டுபிடிப்பு.

இதை போன்ற என்னம் உள்ள மக்கள் இந்தியாவில் மத்தியில் ஆட்சிக்கு வரபோவது இல்லை என்பதால் உங்களின் இந்த் கருத்துக்களை பற்றி அதிகம் கவலை இல்லை.

என்ன மூட்டாள்கள் கலாம் போன்ற இந்திய விஞானிகளும், அதிகாரிகளும், அக்னி-I-SR என்ற ஏவுகனையை பாகிஸ்தானுக்காகவே special ஆக தயாரித்து கொண்டு!

அவர்கள் சந்திப்பு போன்றவர்களின் பேச்சை கொஞ்சமாவது கேட்க வேண்டும்.

அவர்களுக்கு அனுபவமும்,அறிவும் பத்தாது சந்திப்பு அவர்களே.

//கலாச்சார புரட்சி தவறான ஒன்று என்று அந்த நாடே முடிவு செய்து///

அதாவது தங்களின் எதிரிகளை ஒழித்து கட்டியபின்னர் "அய்யோ தவ்று செய்துவிட்டோம்" என்றூ புலம்பினார்களாம், அதை நாங்கள் நம்ப வேண்டுமாம்.

Amar said...

// - சீன எல்லைப் பிரச்சினை என்பது ஆக்கிரமிப்போடு சம்பந்தப்பட்டது இல்லை//

அக்சாய் சின்னில் என்ன எல்லை பிரச்சனை என்று கூற முடியுமா?

எப்படியோ சீனாவுக்கு தொண்டு செய்வது என்று முடிவுகட்டியாகி விட்டது.

அதற்க்கு தேவையான excuseகளை தேடி அலையும் போது கிடைத்ததை எல்லாம் செர்த்து கொள்ளவேண்டியது தான்.

இரண்டாம் உலக போரிலும், அதற்க்கு பின்னரும்-முன்னரும்(ஸ்டாலின் வாய் அசைவுக்கு தகுந்த மாதிரி) இந்திய கம்யூனிஸ்ட்டுகள் இந்தியாவுக்கு செய்த துரோகங்களை பற்றியும் நாங்கள் படித்துள்ளோம் சந்திப்பு.

வரலாற்றை பற்றி எனக்கு பாடம் நடந்த வேண்டாம்.