July 04, 2006

ஜெயமாலாவும் - மீரா ஜாஸ்மீனும்

தென்னிந்திய மீடியாக்களில் முக்கிய இடத்தை பெற்றுள்ளன இந்த இரண்டு பெயர்கள். இந்த இருவருக்கும் சில ஒற்றுமைகள் இருப்பது மிக முக்கியமானது. இருவரும் நடிகைகள் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இருவரின் பெயர்களும் அடிபடுவதற்கு முக்கிய காரணம் ஒருவர் ஐயப்பன் சிலையை தொட்டு விட்டார் (1987இல்) என்பதும், இன்னொருவர் கிறித்துவர்; தான் இந்து என்று கூறிக் கொண்டு இந்து கோவிலுக்குள் சென்று தரிசித்து விட்டு வந்துள்ளார்.
சரி! இது ஏதோ பத்தோடு ஒன்று என்று விட்டு விடலாம் என்று பார்த்தால், இது அவ்வளவு சீக்கிரம் விடக்கூடிய பிரச்னையாக தெரியவில்லை.? என்ன காரணம் இந்து மதம் பெண்களை தீண்டத்தகாதவர்களாக கருதுகிறது; மனு தர்மம் பெண்களையும் தீண்டத்தகாதவர்கள் என்று கூறுகிறது. அந்த அடிப்படையைத்தான் தற்போதும் இந்து சனாதனவாதிகள் கடைப்பிடித்து வருகிறார்கள்.
கடவுளின் முன் அனைவரும் சமம்! என்பதெல்லாம் வெறும் வெற்று பேச்சுக்கள்தான். கடவுளின் சிலையை தொடுவது முதல் அதன் வெளி வாசலில் நின்று தரிசிப்பது வதை மனிதர்களுக்கு அளவுகோலை நிர்ணயித்துள்ளது இந்து மதம். அதிலும் இன்னும் கொடுமை என்ன வென்றால், பகலில் ஒரு சில ஜாதிகளைச் சேர்ந்த மனிதர்களை வெளியிலேயே வரக்கூடாது என்பதும் இந்திய மண்ணில் இருக்கிறது.
எனவே இந்து மதம் என்பது பார்ப்பன மேல்ஜாதி ஆதிக்கத்தோடு கட்டுண்டு கிடக்கிறது. இது கோடிக்கணக்கான மக்களை தீண்டத்தகாதவர்களாக ஆக்கியுள்ளது. ஜெயமாலாவின் செயலில் என்ன தவறு உள்ளது? அதுவும் இது 20 ஆண்டுகளுக்கு முன் நடந்த சம்பவம்; அப்படியிருக்கையில் இதற்காக தற்போது உயிர் கொடுப்பதன் நோக்கம் என்ன? குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பனிக்கர்கள் என்ற உயர்ஜாதி பிராமணர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. அதேபோல் இதர பார்ப்பன ஜாதிகளும் அங்கே பணிபுரிகின்றனர். இந்த விஷயத்தில் இதர பார்ப்பன ஜாதிகளின் மேல் குற்றம் சுமத்தி, அவர்களை விலக்கி வைக்கும் முயற்சியும் நடைபெறுவதாக கூறப்படுகிறது.
மேலும் ஜெயமாலா ஐயப்பனை தொட்டு விட்டதால் ஐயப்பனுக்கு கோபம் வந்து விட்டதாம், என்ன கதை இது! ஐயப்பனின் பிறப்பு குறித்தே சர்ச்சை உள்ளது. ஐயப்பன் ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவன் இது விஞ்ஞானத்திற்கு பொருந்தக் கூடியதா? ஏன் இந்து பக்தர்களாலேயே இதை நம்ப முடியுமா? இப்படி அருவருக்கத்தக்க வரலாறை கொண்டு ஐயப்பன் சிலையை (கல் சித்திரத்தை) ஜெயமாலா தொட்டு விட்டாராம், அதனால் ஐயப்பனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டதாம்? உலகில் இதைவிட வேறு ஏதாவது படு கேவலமான மூடநம்பிக்கை இருக்க முடியுமா? இந்த விஷயத்தில் ஐயப்பனை விட ஜெயமாலா விஞ்ஞானப்பூர்வமான பிறப்பை கொண்டுள்ளார். எனவே அவருக்கு இயல்பாகவே மனிதனுக்குரிய இயல்பான உயர்வு உண்டு. நம் பக்தர்கள் இதனை நம்பிக்கை என்று கூறலாம். சரி இது பக்தர்களின் நம்பிக்கையை புண்படுத்தும் நோக்கமல்ல. இது கடவுள் பெயரால் நடத்தப்படும் மனிதர்களுக்கு எதிரான மனித உரிமை மறுப்பு குறித்த அரசியல். ஜாதிய சனாதனவாதிகளின் ஆதிக்க அரசியல் இதனுள் புதைந்து கொண்டிருப்பதை பார்க்காமல் யாராவது இதனை இந்து மதத்தை புண்டுத்தும் நோக்கம் என்று குறிப்பிட்டால் அவர்கள் குறித்தும் நாம் வருந்துவதற்கு ஒன்றுமில்லை.
அடுத்து, மீரா ஜாஸ்மின் இவர் கிறித்துவர், இந்து என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்குள் சென்று விட்டார். இதனால் என்ன நேர்ந்து விட்டது? அந்த கோவிலுக்குள் இருக்கும் சிலை கண்ணீர் விடித்ததா? அல்லது அந்த பகுதியே பற்றி எரிந்து விட்டதா? ஒன்றும் நேரவில்லை. கடவுளுக்கு கூட இந்தியாவில் இருக்கும் மத அரசியல் தெரியுமா? புரியவில்லை! சரி அவர்கள் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி விட்டால் தீட்டு ஒழிந்து விடுமா? அப்படியென்றால் ஒரு தலித், தான் 10 ஆயிரம் ரூபாய் கட்டத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய முன்வந்தால், அதை நீங்கள் அனுமதிப்பீர்களா? இப்படி வாதிடுவதே கூட மனித உரிமை மீறல்தான். மனிதர்களுக்குள் என்ன வேற்றுமை இருக்கிறது.
கடவுளுக்கும், அதனை வழிபடும் மக்களுக்கும் இடையில் இடைத்தரகர்களாக செயல்படும் ஜாதிய ஆதிக்கவாதிகளை அந்த இடத்தில் இருந்து அகற்றிவிட்டால் இந்தியாவில் உள்ள 75 சதவீத பிரச்சினைகள் தீர்ந்து விடும். இடஒதுக்கீடு உட்படத்தான்.
இறுதியாக கூறவேண்டுமானல் இந்த பிரச்சினைகளுக்கு பின் சில மறைந்த பிற்போக்கு கைகள் இருக்கின்றன இவர்களின் நோக்கம் குறிப்பாக கேரளத்தில் உள்ள இடதுசாரி அரசாங்கத்திற்கு ஒரு நெருக்கடியைத் தரவேண்டும் என்பதுதான். கேரள மக்கள் இந்த விஷயத்தில் தெளிவாக இருக்கிறார்கள் அது குஜராத் அல்ல என்று!

22 comments:

அருண்மொழி said...

//குறிப்பாக ஐயப்பன் கோவிலில் பனிக்கர்கள் என்ற உயர்ஜாதி பிராமணர்களின் ஆதிக்கமே நிலவுகிறது. அதேபோல் இதர பார்ப்பன ஜாதிகளும் அங்கே பணிபுரிகின்றனர். //

பணிக்கர் தான் ஒரு non-brahmin என்பதால்தான் நான் சொல்வதை கேட்கவில்லை என்று திராவிட கருங்காலிகள் போல Sound விடுகிறார். அப்புறம் எப்படி ?

//இப்படி அருவருக்கத்தக்க வரலாறை கொண்டு ஐயப்பன் சிலையை (கல் சித்திரத்தை) ஜெயமாலா தொட்டு விட்டாராம்,//

ஜெயமாலா தொட்டது Orignial அய்யப்பனை இல்லை. பக்தர் எடுத்து சென்ற இன்னொரு அய்யப்பனின் மீது என்று ஒரு புது கதை வந்துள்ளது.

//மீரா ஜாஸ்மின் இவர் கிறித்துவர், இந்து என்று சொல்லிக் கொண்டு கோவிலுக்குள் சென்று விட்டார். இதனால் என்ன நேர்ந்து விட்டது?//

என்னங்க இது, எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே கேள்வி எழுப்புறீங்க? "தீட்டு பட்டு விட்டது சுவாமி".

Note: ஜெயமாலாவிற்காக கண்ணீர் வடிக்கும் நீங்கள் "அசின் அல்லாவை கும்பிட மசூதிக்கு போக முடியுமா" or "திரிஷா கர்த்தரை கும்பிட சர்ச்சுக்கு போக முடியுமா" என்ற கேள்விக்கான பதிலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும் :-)

இரா.சுகுமாரன் said...

அருண்மொழி சொன்னது......

//என்னங்க இது, எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே கேள்வி எழுப்புறீங்க? "தீட்டு பட்டு விட்டது சுவாமி".//

மீரா சாஸ்மின் உள்ளே வந்தால் தீட்டு பட்டுவிட்டது என்றால் அவர் காசைவாங்கி பூசை செய்தால் எப்படி தீட்டு போகும் அந்த ரூபாயில் தீட்டு இல்லையா?

******************************

/10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி விட்டால் தீட்டு ஒழிந்து விடுமா?/
/அப்படியென்றால் ஒரு தலித், தான் 10 ஆயிரம் ரூபாய் கட்டத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய முன்வந்தால், அதை நீங்கள் அனுமதிப்பீர்களா?/

சந்திப்பு சார்,

தீட்டு அப்படில்லாம் ஒன்னுமில்ல எதையாவது வச்சி காசு பண்ணனும். அது தான் இது. இவர்கள் சொந்த காசை வச்சி தீட்டு ஓட்ட வேண்டியது தானே?

இரா.சுகுமாரன் said...

அருண்மொழி சொன்னது......

//என்னங்க இது, எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே கேள்வி எழுப்புறீங்க? "தீட்டு பட்டு விட்டது சுவாமி".//

மீரா சாஸ்மின் உள்ளே வந்தால் தீட்டு பட்டுவிட்டது என்றால் அவர் காசைவாங்கி பூசை செய்தால் எப்படி தீட்டு போகும் அந்த ரூபாயில் தீட்டு இல்லையா?

******************************

/10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி விட்டால் தீட்டு ஒழிந்து விடுமா?/
/அப்படியென்றால் ஒரு தலித், தான் 10 ஆயிரம் ரூபாய் கட்டத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய முன்வந்தால், அதை நீங்கள் அனுமதிப்பீர்களா?/

சந்திப்பு சார்,

தீட்டு அப்படில்லாம் ஒன்னுமில்ல எதையாவது வச்சி காசு பண்ணனும். அது தான் இது. இவர்கள் சொந்த காசை வச்சி தீட்டு ஓட்ட வேண்டியது தானே?

இரா.சுகுமாரன் said...

அருண்மொழி சொன்னது......

//என்னங்க இது, எல்லாவற்றையும் தெரிந்து கொண்டே கேள்வி எழுப்புறீங்க? "தீட்டு பட்டு விட்டது சுவாமி".//

மீரா சாஸ்மின் உள்ளே வந்தால் தீட்டு பட்டுவிட்டது என்றால் அவர் காசைவாங்கி பூசை செய்தால் எப்படி தீட்டு போகும் அந்த ரூபாயில் தீட்டு இல்லையா?

******************************

/10 ஆயிரம் ரூபாய் அபராதம் கட்டி விட்டால் தீட்டு ஒழிந்து விடுமா?/
/அப்படியென்றால் ஒரு தலித், தான் 10 ஆயிரம் ரூபாய் கட்டத் தயாராக இருப்பதாக கூறிக் கொண்டு அந்த சிலைக்கு பூஜை செய்ய முன்வந்தால், அதை நீங்கள் அனுமதிப்பீர்களா?/

சந்திப்பு சார்,

தீட்டு அப்படில்லாம் ஒன்னுமில்ல எதையாவது வச்சி காசு பண்ணனும். அது தான் இது. இவர்கள் சொந்த காசை வச்சி தீட்டு ஓட்ட வேண்டியது தானே?

சீனு said...

இந்து மதத்தில் ஒரி பிரச்சினை என்றால் வரிந்து கட்டிக்கொண்டு இந்த "விவசாயிகள்" வந்துவிடுகின்றனர். பரவாயில்லை, இப்படிப்பட்ட பிரச்சினைகளும், இந்துமதம் தன்னை சுய பரிசோதனை செய்துக் கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள ஏதுவாகவே இருக்கும்.

Anonymous said...

//இந்துமதம் தன்னை சுய பரிசோதனை செய்துக் கொண்டு தன்னை மாற்றிக்கொள்ள ஏதுவாகவே இருக்கும்..//

எந்த இந்து மதத்த சொல்றீங்க சீனு? உங்கட இந்து மதத்தயா? ஜெயமாலாவோட இந்து மதத்தயா?

Anonymous said...

ஜெயாவுக்கு ஒரு பிரசினை என்றால் இந்த சீனு பல்லை இளித்துகொண்டு வரவில்லையா? அது போல் தான் அனானிமஸ்.

Anonymous said...

two actress need media coverage.
that's all. police must arrest them.

சீனு said...

//எந்த இந்து மதத்த சொல்றீங்க சீனு? உங்கட இந்து மதத்தயா? ஜெயமாலாவோட இந்து மதத்தயா? //

நீங்க குதர்க்கமாக கேட்கும் கேள்வி புரியவில்லை.

ஜெயமாலாவுக்கு செய்தது சரி என்று சொல்லவில்லை. அது தப்பு. திருத்தப்படவேண்டியது. ஜக்கிதேவ் சொன்னார், "பெண்ணை தீட்டு என்று ஒதுக்கி வைப்பது குற்றம். மாதவிலக்கு நின்று, அந்த தீட்டுப் பட்ட தண்ணிரில் தானே கருவும், குழந்தையும் வளருகிறது" என்று. அது தான் உண்மை. ஆனால், அதற்காக போவோர் வருவோரெல்லாம் முக்கை நுழைப்பது அறுவடைக்காகத்தான் தவிற நல்லெண்ணம் இல்லை என்பது என் கருத்து.

அசுரன் said...

//ஐயப்பன் ஆணுக்கும், ஆணுக்கும் பிறந்தவன் இது விஞ்ஞானத்திற்கு பொருந்தக் கூடியதா? ஏன் இந்து பக்தர்களாலேயே இதை நம்ப முடியுமா? இப்படி அருவருக்கத்தக்க வரலாறை கொண்டு ஐயப்பன் சிலையை (கல் சித்திரத்தை) ஜெயமாலா தொட்டு விட்டாராம், அதனால் ஐயப்பனுக்கு கோபம் பொத்துக் கொண்டு வந்து விட்டதாம்? உலகில் இதைவிட வேறு ஏதாவது படு கேவலமான மூடநம்பிக்கை இருக்க முடியுமா? இந்த விஷயத்தில் ஐயப்பனை விட ஜெயமாலா விஞ்ஞானப்பூர்வமான பிறப்பை கொண்டுள்ளார். எனவே அவருக்கு இயல்பாகவே மனிதனுக்குரிய இயல்பான உயர்வு உண்டு//

இதெல்லாம் நம்மாவாளோட சாஸ்திர சம்பிரதாயம்...

ஏன் அம்பி, நோக்கு இந்த வேலை?

"ஆயிரம் வருசத்துக்கு முன்பே உலகத்திலுள்ள அனைத்தையும் வேதத்தில் சொல்லிப்புட்டான்" அப்படிப்பட்ட பழுத்த பரம்பரை எங்களோடது.

புரியாத புதுமைபித்தன் போல சாஸ்திரத்தை இப்படி கேவலமா பேசப்படாது.

ஹிந்து மதத்த இப்படி சபிச்சுன்டே இருக்காதீரும் வோய்...

+++++++++++++

நல்ல கட்டுரை...உங்களுடைய கட்டுரைகள் பொதுவாக provokativeவாக விசயங்களை கையாளத நடையை கொண்டுள்ளது(விதிவிலக்கு: அமெரிக்க பயங்கரவாதி -கட்டுரை).

ஆனால், அப்படிப்பட்ட(அமெரிக்க பயங்கரவாதி) கட்டுரைதான் முரன்பாடுகளை உருவாக்கி சிந்திக்க தூண்டும்(எதிர் தரப்பினரை) என்று கருதுகிறென். இது எனது சொந்த அனுபவுமும் கூட.

வாழ்த்துக்கள்,
அசுரன்

Anonymous said...

Will you dare to question the birth of Christ and immaculate conception.Will followers of Periyar and Marx and folks like
Asurans dare to write like this
about islam and christianity.
Is there no supersition in them.
Are they giving equal rights to
women.The left which seeks the support of muslim fundamentalists like PDP and keeping mum on ban on Davini Code has no business to comment on Hindus and their practices.We Hindus will solve our
problems.

Anonymous said...

Will you dare to question the birth of Christ and immaculate conception.Will followers of Periyar and Marx and folks like
Asurans dare to write like this
about islam and christianity.
Is there no supersition in them.
Are they giving equal rights to
women.The left which seeks the support of muslim fundamentalists like PDP and keeping mum on ban on Davini Code has no business to comment on Hindus and their practices.We Hindus will solve our
problems.

aaradhana said...

சார், உலகத்தில் எவ்வளவு பிரச்சினைகள் இருக்கின்றன. இது நமக்கு தேவையா?. ஆனால் நன்றாக எழுதி உள்ளீர்கள். நன்றி.

aaradhana said...

பனிக்கர்கள் இல்லை, பண்ணி க்கர்கள். சரியா?

அருண்மொழி said...

சந்திப்பு,

//Will followers of Periyar and Marx and folks like
Asurans dare to write like this
about islam and christianity.
Is there no supersition in them.
Are they giving equal rights to
women. ...//

நான் சொன்ன மாதிரி கேள்வியெல்லாம் வருதா :-)

Anonymous said...

Politicians need ways. Media needs news. There is nothing more to this story.

There are enough dirtbags that use pilgrimages(to any holy site, in any religion) as a way to clean their corrupted conscience. I don't think Meera Jasmine or Mala are any worse than them.

I don't understand the concept of closing temples/rituals a certain sect of people. Afterall, it is my understanding that the Almighty has not given anyone particular party 'right' to say this or that on behalf of God :-)

-kajan

அப்பாவி said...

//அருண்மொழி சொன்னது......

ஜெயமாலாவிற்காக கண்ணீர் வடிக்கும் நீங்கள் "அசின் அல்லாவை கும்பிட மசூதிக்கு போக முடியுமா" or "திரிஷா கர்த்தரை கும்பிட சர்ச்சுக்கு போக முடியுமா" என்ற கேள்விக்கான பதிலை தயார் செய்து வைத்துக்கொள்ளவும் :-)//

நெனச்சேன்.. என்னடா இந்தப் பிரச்னையில யாரும் இதுவரைக்கும் இசுலாத்தை இழுக்கலையேன்னு..! அருண்மொழி சார்.. இப்ப நல்லா தூக்கம் வருமே உங்களுக்கு?

Anonymous said...

குசும்பன் வேறு
யாருமல்ல. வந்திய
தேவன் தான். வந்திய
தேவன் மறந்து போய்
குசும்பன் ஐடியில்
ஸ்ரீகாந்திற்கு
பதில்
சொல்லியிருந்தார்.
தான் குசும்பன்
என்பதை காட்டி
கொண்டு விட்டார்.
யாரோ தகவல் சொல்லி
இரண்டு நாள் கழித்து
அந்த பின்னூட்டத்தை
நீக்கியும்
விட்டார். இப்படி
வசமாய் மாட்டி
கொண்டு குசும்பன்
பதிவில் 'கடைசி
வார்த்தை' என்று
எழுதி அப்பன்
குதிருக்குள் இல்லை
என்று சொன்னார்.
யாருமே இதை
கவனித்ததாக
தெரியவில்லை.

சந்திப்பு said...

நன்றி அருண்மொழி, தீட்டு என்கிற வார்த்தையை, சொல்லை தீண்டாமல் இருந்தால் தீட்டு ஒழிந்து விடும் என நினைக்கிறேன். சரியா?

நன்றி சுகுமாறன், சரியாச் சொன்னீங்க... தீட்டு பட்ட காசுன்னு.. இதனை தீட்டு பூதம்னு சொல்லலாம். இதை ஓட்டுகிறோம் என்ற பெயரில் கறக்கிறார்கள்....

நன்றி சீனு, உங்களிடம் இருக்கும் நல்ல எதிர்ப்புக்கு நன்றி. இந்து மதம் இப்போதல்ல மூன்றாயிரம் ஆண்டுகளாக இதுபோல் பல விமர்சனங்களை சந்தித்துள்ளது. இருப்பினும் இந்து மதம் திருந்தின பாடு இல்லை. மாறாக அது முற்போக்காக உயர்ந்த பௌத்தம், ஜைனம் போன்ற மதங்களையெல்லாம் ஒழித்து விட்டது. வன்முறை, சதி இதுதான் இந்து மதத்தின் உள்ளாத்மா! எனவே நீங்கள் இந்து மதத்தில் இருந்து வெளியேறுவதும், மதச்சார்பற்ற தன்மையில் வாழ்வதுமே பிரச்சினைக்கு தீர்வாக இருக்கும்.

நன்றி அனானி, விவாதம்தான் தேவைப்படுகிறது. விதண்டாவாதம் அல்ல

நன்றி அசுரன், தங்களது விமர்சன பார்வைக்கு எனது நன்றிகள்... நம்மிடம் எப்போதும் ஆத்திரம் வராது. தேவைப்படும்போது நிச்சயம் வெளிப்படும்... அதுதான் அந்தக் கட்டுரை...

நன்றி அனானி, தங்களது இந்து மதம் மட்டுமல்ல, உலகில் உள்ள அனைத்து மதங்களும் பெண்களை இரண்டாம்தரமாகத்தான் பார்க்கிறது. அனைத்தும் பெண்ணடிமைத்தனத்தை தனக்கேயுரிய பாணியில் கையாள்கிறது. மதம் என்பது மனிதப் பிரிக்கும் மகத்தான ஆயுதம். இது ஆளும் வர்க்கங்களுக்கு தேவை! உழைக்கும் வர்க்கம் எப்போதும் இதற்கு எதிரானதுதான்.

நன்றி ஆராதனா, சரியாக சுட்டியுள்ளீர்கள். சமூகத்தில் ஒரு விஷயம் தாக்கத்தை ஏற்படுத்தும் போது, அது குறித்து நாமும் எழுதாமல் இருக்க முடியாது.


நன்றி அப்பாவி, குண்டக்க மண்டக்க... தங்களது எழுத்து வடிவம் யூனிகோடில் இல்லை என்று தெரிகிறது. அதை சரி செய்து அனுப்பி வைக்கவும்.

ஜெயமாலா, மீரா ஜா°மீன் விஷயம் ஏதோ சம்பவங்கள் அல்ல. இது நம் சமூகத்தில் புரையோடிப்போன பெண்ணடிமைத்தனத்தின் வெளிப்பாடு. இதற்கு ரணசிகிச்சை தேவைப்படுகிறது. இந்த சிகிச்சையை சமூகத்தில் உள்ள அனைவரும் சேர்ந்து செய்யும்போதுதான் இது ஆரும்...

அனைவருக்கும் நன்றிகள்...

-L-L-D-a-s-u said...

//திரிஷா கர்த்தரை கும்பிட சர்ச்சுக்கு போக முடியுமா"//

முடியும் ..

மேலும் இங்கே..
http://lldasu.blogspot.com/2006/07/blog-post.html

பாலசந்தர் கணேசன். said...

மீரா சாஸ்மின் உள்ளே வந்தால் தீட்டு பட்டுவிட்டது என்றால் அவர் காசைவாங்கி பூசை செய்தால் எப்படி தீட்டு போகும் அந்த ரூபாயில் தீட்டு இல்லையா?

நியாயமான கேள்வியாக தோன்றுகிறது. தீட்டு வார்த்தை என்பதில் எனக்கு சுத்தமாக நம்பிகை இல்லை. ஆனால் பொதுவாக அபராதம் விதிப்பது என்பது , ஒரு செயல் மீண்டும் நடப்பதை தடுப்பதற்காக, அல்லது ஒரு பய உணர்ச்சியை கிளப்ப விதிக்க படுவது.

Anonymous said...

ஒரு வருடத்துக்கு முன்பே இந்த பதிவை எழுதிவிட்டிர்களோ.நான் தான் தாமதமாக ஒரு வருடம் கழித்துப் படிக்கிறேனோ?