April 23, 2008

ம.க.இ.க. தத்துவக் குருடர்களும் புரட்சிகர அரசியலும்!


ம.க.இ.க.வின் மறைமுகத் தலைமையான (மாநில ஒருங்கிணைப்புக்குழு - இந்திய பொதுவுடைமை கட்சி - மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) தன்னை ஒரு கம்யூனிஸ்ட் கட்சியென அழைத்துக் கொண்டு திரிபுவாதத்தையும், சீர்குலைவுவாதத்தையுமே முதலாக கொண்டு ஏகாதிபத்தியத்திற்கு அடிவருடியாக செயலாற்றிக் கொண்டு வருவதை முன்பதிவுகளில் பார்த்தோம்.

இந்திய அரசியலையும் - அதன் வர்க்கத் தன்மையையும் புரிந்து கொள்வதில் ஏற்பட்ட தடுமாற்றமே, அதன் ஒட்டுமொத்த நடைமுறை தந்திரம் தொடர்பான நிர்ணயிப்புகளுக்கும் அடிப்படைத் தவறாக அமைந்துள்ளது.

இந்திய சுதந்திரத்தை போலி சுதந்திரமாக பார்ப்பதும், இன்னமும் இந்தியா அரை காலனி - நான்கு நாட்டு அடிமை சேவகம் - மறு காலனி என்று தொடர்ந்து காலனி மோகத்தில் குளிர் காய்வதால் இந்திய பாராளுமன்ற அரசியலிருந்து துறவறம் மேற்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தத்தில் அதன் தத்துவ ஊனம் அடங்கியுள்ளது. அதைத் தொடர்ந்து “பாராளுமன்றம் பன்றித் தொழுவம்”, “போலி தேர்தல்”, “போலி பாராளுமன்றம்”, “ஓட்டுப் பொறுக்கிகள்” என்று அடுக்கடுக்காக வாய்ஜாலம் பேசி தேர்தல் அரசியலில் ஈடுபடுபவர்கள் எல்லாம் இந்திய மக்களின் விரோதிகள் நாங்கள் மட்டுமே புரட்சிக்காரர்கள் என்று மார்தட்டிக் கொள்ளும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை பம்மாத்து செய்வதோடு அதற்கு மாற்றாக ஆயுதப் புரட்சி என்று கூறி அவமானப்படுத்துகிறது.

இவர்களது பாராளுமன்ற அரசியல் குறித் குறித்து எஸ்.ஓ.சி. திட்டம் 26வது பிரிவு கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது:

“இந்தியப் பிற்போக்கு ஆளும் வர்க்கங்கள் தங்களின் கொடுங்கோன்மைச் சர்வாதிகாரத்தை மூடி மறைக்கும் பொருட்டு நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் முகத்திரையைப் பயன்படுத்துகின்றன. சாராம்சத்தில் பிற்போக்கு ஆளும் வர்க்கங்களின் விசுவாசமான ஊழியர்களான திரிபுவாதிகளும், நவீன திரிபுவாதிகளும் நாடாளுமன்ற ஜனநாயகம் என்று அழைத்துக் கொள்ளும் அதிகாரமற்ற அமைப்பை மக்களின் விருப்பங்களுக்கான கருவி என்று ஒப்பனை செய்கிறார்கள். சோசலிசத்திற்கான பாதைiயாக சமாதான நாடாளுமன்றப் பாதையைக் காட்டுகிறார்கள். அவர்களது துரோகத்தனத்தை ‘சோசலிசத்திற்கான இந்தியப் பாதை’ என்று வர்ணிக்கிறார்கள். வர்க்கமற்ற அரசியல், வர்க்கமற்ற சோசலிசம் என்று வழிகாட்டுதல் நமது நாட்டின் பரந்துபட்ட மக்களை புரட்சிகர ஆயுதப் போராட்டப் பாதையிலிருந்து திசை திருப்பும் முதலாளியத் தந்திரமாகும்....”

இவ்வாறு கூறுவதன் மூலம் மற்ற கம்யூனிஸ்ட் கட்சிகளிலிருந்து தன்னை மிக உயர்வுகாக காட்டிக் கொள்ள முனைகிறது இந்த தத்துவ குருட்டுப் பூனை. மேலும் திரிபுவாதிகள் என்று இடதுசாரிகளை குற்றம் சுமத்துவது சாட்சாத் இவர்களுக்கே மிகச் சரியாக பொருந்துகிறது. குறிப்பாக, இவர்களது வாதப்படியே யார் வர்க்கமற்ற அரசியல் என்று சொல்கிறார்கள்? சமாதானமான நாடாளுமன்றப் பாதை மட்டுமே புரட்சிகரப் பாதை என்று வர்ணித்துள்ளார்கள்? என்று நமக்குத் தெரியவில்லை! சி.பி.எம். தனது கட்சித் திட்டத்திலோ அல்லது கொள்கை அறிக்கையிலே இவ்வாறு எதையும் கூறவில்லை. இவர்களது கற்பனை கோட்டைக்கு அளவில்லாமல் போனதன் விளைவும் தனது அணியினை திருப்திப்படுத்துவதற்காக ஆயுதப் போராட்டம் ஒன்றே தீர்வு என்று கூறி திண்ணை வேதம் ஓதுகிறது இந்த பார்ப்பனீயத் தலைமை!

பாராளுமன்ற அரசியல் குறித்து மாமேதை லெனின் என்ன கூறுகிறார் என்பதைப் பார்ப்போம்! விஞ்ஞானப் பூர்வ கம்யூனிசத்திற்கு பாதை அமைத்தவர் தோழர் லெனின். ரஷ்ய மற்றும் உலக அனுபவங்களின் மூலம் கம்யூனிச தத்துவத்திற்கு பாதையமைத்த லெனின் “இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு” என்ற புத்தகத்தில் - முதலாளித்துவ பாராளுமன்றங்களில் நாம் பங்கெடுத்துக் கொள்ளலாமா? என்ற துணைத் தலைப்போடு இது குறித்து விரிவாக ஆராய்கிறார். அதன் முக்கிய அம்சங்கள் குறித்து பார்ப்போம்:

“முதலாளித்துவப் பாராளுமன்றங்களையும், இதர வகையான பிற்போக்கு நிறுவனங்கள் அனைத்தையும் அகற்றிலும் பலம் உங்களிடம் இல்லாத வரை, அவற்றில் நீங்கள் வேலை செய்த ஆகவேண்டும்”

தோழர் லெனின் அவர்களின் மேற்கண்ட நிலைபாடு ம.க.இ.க. மறைமுகத் தலைமைக்கு மட்டும் பொருந்தாது! ஏனெனில் இவர்கள் இந்தியப் புரட்சியை வெறும் கற்பனையில் மட்டும் பார்ப்பதால் - தங்களது கற்பனை வளத்தின் மூலமே இந்திய அரசை வெகு சீக்கிரத்தில் தூக்கியெறியும் அசுர பலத்தோடு இவர்கள் இருப்பதாக எண்ணிக் கொண்டு, வெகுஜனங்களின் எளிய உணர்வுகளை அரக்கத்தனமான காலில் போட்டு மதித்து விட்டு, போலி பாராளுமன்றம் என்று புரளி பேசி, மக்களின் அரசியல் உணர்வுகளை ஆரம்பத்திலேயே கிள்ளியெறியும் - திசை திருப்பும் செயலினைத்தான் இவர்களிடம் பார்க்க முடிகிறது.

மேலும் இதுபோன்ற வாய்ச்சவடால் அமைப்புகள் குறித்து லெனின் கீழ்வருமாறு உரைக்கிறார்:

“பாதிரிமார்களால் ஏமாற்றப்பட்டும், கிராம வாழ்க்கை முறையின் பிற்பட்ட நிலைமைகளால் முடக்கப்பட்டும் வரும் தொழிலாளர்களை இவற்றில்தான் இன்னமும் நீங்கள் காண்பீர்கள். இவ்வாறு வேலை செய்யாவிடில், நீங்கள் வாய்வீச்சடிப்பதைத் தவிர வேறு எதற்கும் உதவாதோராய் மாறிவிடும் அபாயம் ஏற்படும்.”

அதாவது, ஜெர்மானிய நிலைமையை முன்வைத்து அவரது வாதம் இங்கே கட்டமைக்கப்பட்டாலும், தற்போதைய இந்திய நிலைமைக்கும் இது முற்றிலும் பொருந்தும். இந்தியாவில் உள்ள 110 கோடி இந்திய மக்களில் பெரும் பகுதியினர் கல்வியறிவு பெறாதோராய், மிகவும் வறிய நிலையில் வெந்ததை தின்று விதி வந்தால் சாவோம் என்ற நிலையில் இருப்பதைத்தான் காண்கிறோம். எனவே இத்தயை எளிய மக்களின் அரசியல் உணர்வு மட்டம் தனிபர் ஹீரோயிசம் சார்ந்ததாகவே இருக்கும்.

எனவே இத்தகைய எளிய மக்களிடம் வெளிப்படையாக செயலாற்றி அவர்களது அரசியல் உணர்வு மட்டத்தை உயர்த்துவதற்கு மாறாக, ஆயுதப் புரட்சி என்று பேசுவது தொழிலாளி வர்க்கத்தின் குரலை வெளிப்படுத்துவதாக அமையாமல் தங்களின் உள்ளுனர்வு அடிப்படையில் இயங்கும் கற்பனாவாத தத்துவத்தைதான் ம.க.இ.க.வினரிடம் காண முடிகிறது. இது குறித்து தோழர் லெனின் கூறுவதை நோக்குங்கள்.

“ஜெர்மனியிலும் (ஹாலந்திலும்) உள்ள “இடதுசாரிகள்” இந்தக் கடமையை நிறைவேற்றவும், கண்கூடான தமது பிழையை ஆராய்வதில் முக்கிய கருத்தும் கவனமும் செலுத்தவும் தவறியதன் மூலம் தாம் ஒரு சிறு குழுவே அன்றி ஒரு வர்க்கத்தின் கட்சி அல்ல என்பதையும், அறிவுத்துறையினரையும் அறிவுத்துறைவாதத்தின் மோசமான இயல்புகளைக் காப்பியடிக்கும் ஒருசில தொழிலாளர்களையும் கொண்ட சிறு குழுவேயன்றி வெகுஜனங்களது கட்சியல்ல என்பதையும் நிரூபித்துக் கொண்டு விட்டனர்.”

மேற்கண்ட நிர்ணயிப்பின்படி நாம் தொடர்ந்த வலியுறுத்துவது போல் ம.க.இ.க. நக்சலிச கும்பல் ஒரு குழுவேயன்றி பாட்டாளி வர்க்க கட்சியல்ல என்பது நிருபனமாகிறது.

மேலும் தோழர் லெனின் கூறுவதை கேளுங்கள்:

“வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மை இல்லாமல், இந்த மனப்பான்மை வளர்வதற்கு அனுசரணையான நிலைமைகள் இல்லாமல், புரட்சிகரப் போர்த்தந்திரம் ஒரு நாளும் செயல் நிலைக்கு வளர்ச்சியுற முடியாது என்பதைக் கூறத் தேவையில்லை. ஆனால் ருஷ்யாவில் நீண்ட நெடிய கொடிய அனுபவமானது, புரட்சிகரப் போர்த்தந்திரத்தைப் புரட்சிகர மனப்பான்மையின் அடிப்படையில் மட்டும் உருவாக்கி விட முடியாதென்ற உண்மையை எங்களுக்கு போதித்துள்ளது.”

ம.க.இ.க. குழுவினர் லெனினின் பிறந்த நாளுக்கு அவரது எண்ணங்களில் ஒருசிலவற்றை போட்டு விட்டு தங்களைப் புரட்சிகரமானவர்களாக நிலைநாட்டிக் கொள்ளலாம். ஆனால் நடைமுறையில் அவரது சிந்தனையை குழிதோண்டிப் புதைப்பதைத்தான் இவர்கள் செய்து வருகின்றனர். இவர்கள் இந்தியாவுக்கான புரட்சியை சீன பாணியைக் கொண்டு காப்பியடிக்க முற்படுகிறார்களே ஒழிய எதார்த்த அனுபவங்களை எந்த உரை கல்லிலும் பரிசீலிப்பதில்லை. இவர்களைப் போன்றே நக்சலிசம் பேசிய லிபரேசன் குழுவினர் தங்களது ஒட்டுமொத்த திட்டத்தையும் தற்போது தலைகீழாக மாற்றி விட்டனர் என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டியுள்ளது. ஆனால் இவர்களது கற்பனையில் மட்டும் இந்தியாவில் ஏதோ மாபெரும் புரட்சிகர எழுச்சி நிலவி வருவதாகவும் அதற்கு தடையாக மற்றவர்கள் இருப்பதாகவும் கணா கண்டுக் கொண்டிருக்கிறது.

ம.க.இ.க. தலைமை வெகுஜனங்களிடையே புரட்சிகர மனப்பான்மையை காண்பதற்கு பதிலாக தங்களுக்குள் மட்டுமே அது உயர்வாக இருப்பதாக மதிப்பிடுவதே அதன் சீர்குலைவை வெளிப்படுத்துகிறது. மேலும் இவர்களது போலி பாராளுமன்ற வாதம் எப்படிப்பட்ட அயோக்கியத்தனமானது என்பதை லெனினின் வார்த்தைகள் மூலமே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

“பாராளுமன்ற சந்தர்ப்பவாதத்தைத் தூற்றுவதால் மட்டுமோ, பாராளுமன்றங்களில் பங்கெடுத்துக் கொள்வதை நிராகரிப்பதால் மட்டுமோ ஒருவர் தமது “புரட்சிகர” மனோபாவத்தை வெளிப்படுத்திக் கொண்டு விடுவது மிக மிகச் சுலபம். ஆனால் இந்தச் சுலபத்தின் காரணமாய், இது கடினமான, மிக மிகக் கடினமான ஒரு பிரச்சினைக்குரிய தீர்வாகி விடுவதில்லை.”

மேலும் தோழர் லெனின் இது குறித்து விளக்கும் போது,

“நீங்கள் ஒரு புதிய சமுதாயம் சமைக்க விரும்புகிறீர்கள். ஆயினும் திடநம்பிக்கையும் பற்றுதியும் கொண்ட வீரமிக்க கம்யூனிஸ்ட்டுகளாலான சிறந்த பாராளுமன்றக் குழு ஒன்றினைப் பிற்போக்குப் பாராளுமன்றத்தில் நிறுவிக் கொள்வதிலுள்ள சிரமங்களைக் கண்டு அஞ்சுகிறீர்கள்! இது சிறு பிள்ளைத்தனமானதல்லவா?”

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிலவும், ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து - மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே மக்கள் பங்கேற்கும் நாடாளுமன்ற அரசியலிலும் பங்கேற்கிறது. அதற்காக நாடாளுமன்ற பாதையின் மூலமாகவே புரட்சியை நடத்தி விடுவோம் என்று எங்கும் சி.பி.எம். கூறவில்லை. மேலும் முதலாளித்துவ நாடாளுமன்றத்தில் பங்கெடுப்பதன் மூலம் முதலாளித்துவ ஆட்சியாளர்களின் மக்கள் விரோத கொள்கைகளை அவர்களது கூடாரத்திற்குள்ளே நின்று வெகுவாக அம்பலப்படுத்த முடியும் என்பதோடு, சில - பல விஷயங்களில் ஏழை - எளிய மக்களுக்கான நிவாரணத்தையும் பெற்றுத்தர முடியும் என்ற கடமையைத்தான் சி.பி.எம். நிறைவேற்றிக் கொண்டிருக்கிறது. அதற்காக மத்திய அரசியல் பதவிக்காக நாக்கை தொங்கப் போட்டுக் கொண்டு அலையவில்லை! இரண்டு முறை பிரதமர் பதவி உட்பட மத்திய மந்திரிப் பதவிகள் தேடி வந்த போது அதை வேண்டாம் என்று உதறித் தள்ளிய கட்சி சி.பி.எம்.! இதையெல்லாம் வேண்டும் என்றே புறம் சொல்லி - தரம் தாழ்த்தும் குணம் படைத்த ம.க.இ.க. தலைமை தங்களது தொண்டர்களை தேர்தல் பாதைக்கு தள்ளி விட்டால் அவர்கள் முதலாளித்துவ கட்சிகளைப் போல் சீரழிந்து விடுவார்களோ என்ற சந்தேகப் பார்வைதான் விஞ்சுகிறது!

மேலும், முதலாளித்துவ பாராளுமன்ற தேர்தல்களில் பங்கெடுப்பதற்காக தேர்தலில் வெறும் சீட்டுக்காகவும், பெற்ற சீட்டுக்காக கோடிக்கணக்கில் தனிநபரே செலவழிக்கும் இழிவான முதலாளித்துவ செயலை சி.பி.எம். மேற்கொள்வதில்லை. எந்த இடத்திற்கு - யாரை கட்சி நிறுத்துகிறதோ அவர்களுக்கான தேர்தல் செலவு முழுவதையும் கட்சியே ஏற்கிறது. (மக்கள் பணம்) அவ்வாறு தேர்வு செய்யப்படும் சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொடுக்கும் சம்பளம் முழுவதையும் கட்சியிடமே ஒப்படைத்து விட வேண்டும். அதுதான் இதுவரை நடந்துக் கொண்டிருக்கிறது. முழுநேர ஊழியர் முதல் நாடாளுமன்ற - சட்டமன்ற உறுப்பினர் வரை புதியதாக வீடு கட்ட வேண்டும் என்று சொன்னால் கூட கட்சியிடம் அனுமதி பெற்ற பிறகே கட்ட முடியும்! எனவே பாராளுமன்றத்தை பன்றித் தொழுவம் என்று கூறி சி.பி.எம். மீது சேறை அள்ளி வீசும் வாய்ஜாலத்தால் மட்டும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை புரட்சிகர சக்தியாக மாறி விட முடியாது! மாறாக அதன் அரசியல் நடைமுறைத் தந்திரம் ஏகாதிபத்திய சீரழிவிற்கும் - கம்யூனிசத்தை மக்களிடம் இருந்து பிரிக்கும் தந்திரத்திற்குமே வழிவகுக்கும். மொத்தத்தில் சீரழிந்த அரசியலுக்கு மொத்த குத்தகை எடுத்திருப்பவர்களே ம.க.இ.க. குழுவினர்.

மேலும் ரஷ்யாவில் போல்ஷ்விக்குகள் ஜார் காலத்தில் இருந்த படு பிற்போக்கான டூமாவில் சில நேரங்களில் புறக்கணித்தும் சில நேரங்களில் ஆதரித்தும் பணியாற்றி வந்தனர். இதற்கான அடிப்படையாக அமைந்தது. ஒரே காரணிதான். ஒட்டுமொத்த தொழிலாளி வர்க்கம் புரட்சிகர எழுச்சி பெற்றிருக்கும் தருணத்தில் டூமாவை புறக்கணித்தது. மாறாக, புரட்சிகர தாகவும் சோர்வுற்றிருந்த தருணத்தில் பாராளுமன்றத்தை பயன்படுத்தியது. இத்தகைய எந்த அனுபவத்தையும் நாங்கள் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்று அடம் பிடிப்பது ம.க.இ.க.வின் இளம் பிள்ளை வாதத்தைத்தான் காட்டுகிறது!

தத்துவமற்ற நடைமுறை குருட்டுத்தனமானது! நடைமுறையற்ற தத்துவம் மலட்டுத்தனமானது! என்று மார்க்சிய ஆசான் ஸ்டாலின் கூறியதற்கு மொத்தமாக பொருந்துபவர்கள் ம.க.இ.க. குழுவினரே!

14 comments:

Anonymous said...

நீங்கள் இருவரும் ஒரே ஆள் எழுதிய புத்தகத்தை வைத்துக்கொண்டு ஆளுக்காள் வெவ்வேறு மேற்கோள்களை உருவிக்கொண்டு சண்டை போடுவது நகைச்சுவையாக இருக்கிறது.

லெனின் எழுதியது வேதவாக்கு. அங்கே இந்த இடத்தில் கமா போட்டிருக்கிறார். இங்கே பாராளுமன்றத்தில் சேரச்சொல்லியிருக்கிறார் என்று நீங்கள் போடும் குத்த்தாட்டமும், இல்லை இந்த இடத்தில் அதனை பன்றித்தொழுவம் என்று கூறியிருக்கிறார் என்று அவர்கள் போடும் குத்தாட்டமும் தாங்க முடியவில்லை.

கொஞ்சம் விலகி நின்று பாருங்கள். இது உள் முரண்பாடுகள் நிறைந்த பைபிளையும் குரானையும் வைத்துக்கொண்டு பலவேறு பிரிவுகள் சண்டை போடுவது போல இல்லையா?

Reformed church என்று ஒருவரும்,orthodox church என்று மற்றவரும் சண்டை போடுவதற்கு முன்னால், கருத்து நேர்மையுடன் கம்யூனிஸம் உண்மையில் அறிவியற்பூர்வமானதா என்று சிந்தித்து பாருங்கள்.

தமிழ்மணியோடு வாதிட முடியாமல் ஓடி போனார்கள். அவர் எங்கல்ஸ், லெனின் ஆகியோர் எப்படி உளறியிருக்கிறார்கள் என்று காட்டியபோது கவுந்தடித்து படுத்துக்கொண்டார்கள்.

இப்போது, மத ரீதியான வரட்டு பிடிவாதத்துடன் லெனினின் மேற்கோள்களில் சண்டை போட்டுக்கொள்கிறீர்கள்.

வேடிக்கையாக இருக்கிறது.

சந்திப்பு said...

ஏமாறாத நன்பரே! வணக்கம்.

இதுவரை இருந்து வந்திருக்கிற வரலாறுகள் அனைத்தும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே என்றார் மார்க்ஸ். எனவே சமூகத்தில் இருவேறுபட்ட நலன்களைக் கொண்ட கருத்துக்களுக்கிடையே மோதல் எழுவதுதான் சரியானது. நீங்கள் எந்த மோதலும் வேண்டாம் இருக்கக் கூடிய நாறிப்போன சமூக அமைப்பு அப்படியே இருக்கட்டும் என்கிறீர்கள் அப்படித்தானே! மேலும் ஒரே நபர் எழுதிய புத்தகத்தை வைத்துக் கொண்டு இப்படி அடித்துக் கொள்கிறீர்களே என்பதும் சரியான கருத்தல்ல. அந்த புத்தகத்திற்குள் இரண்ட வர்க்கங்களின் நலன்களையும் - முரண்பாடுகளையும் தான் அவர் சுட்டியுள்ளார். எனவே இது தவிர்க்க முடியாதது. கடவுள் என்ற கற்பனையான கருத்தாக்கத்திற்குள்ளேயே ஆயிரத்தெட்டு முரண்பாடுகள் நிலவும் போது - நிலவும் மனித விரோத சுரண்டல் சமூகத்தை மாற்றியமைப்பதில் கருத்து வேறுபாடுகள் எழாமல் இருக்க வேண்டும் என்று கருதுவது தங்களது அப்பாவித்தனத்தைதான் வெளிப்படுத்துகிறது.

அடுத்து தங்கமணியுடன் தோற்று ஓடியவர்கள் என்ற கருத்திற்கு அவர்கள்தான் பதில் கூற வேண்டும். ஒரு விசயம் மட்டும் உண்மை. அவர்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினையில் கேள்வி எழுப்பினால் அதிலிருந்து நழுவி வேறு விஷயத்திற்கு தாவி விடுவார்கள் இந்த திரிபுவாதிகள். இதுவரை நான் சுட்டியுள்ள அவர்களது கட்சித் திட்ட கோளாறுகள் குறித்து எதையும் பேசாமல். பழைய கட்ரைகளை தோண்டி எடுத்து புதுப்பித்து வருகிறார்கள். இருப்பினும் இந்த தத்துவப்போர் தொடரும்...

Anonymous said...

//மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நிலவும், ஏகாதிபத்தியத்துடன் சமரசம் செய்துக் கொண்டுள்ள பெரு முதலாளிகள் தலைமையிலான முதலாளித்தவ - நிலப்பிரபுத்துவ சமூகத்தை தூக்கியெறிந்து - மக்கள் ஜனநாயக புரட்சியின் மூலம் பாட்டாளி வர்க்க அரசை ஆட்சியில் அமர்த்துவது என்ற உயரிய நோக்கத்தோடு செயலாற்றுகிறது. இந்த இலக்கை நிறைவேற்றுவதற்கான நடைமுறைத் தந்திரத்தின் ஒரு பகுதியாகவே மக்கள் பங்கேற்கும் நாடாளுமன்ற அரசியலிலும் பங்கேற்கிறது. அதற்காக நாடாளுமன்ற பாதையின் மூலமாகவே புரட்சியை நடத்தி விடுவோம் என்று எங்கும் சி.பி.எம். கூறவில்லை.. //

ஒவ்வொரு அரசியல் கட்சியும், ஏன் ஒவ்வொரு வேட்பாளரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு உட்பட்டு நடப்பதாக உறுதியளித்த பிறகு தான் தேர்தலில் பங்கேற்கவே முடியும். ஒவ்வொரு தேர்தலின் போதும் சிபிஎம் மும் அப்படித்தான் சொல்கிறது. அப்படி இருக்க, நீங்கள் அரசியலமைப்பு சட்டத்தை தூக்கி எறிவதுதான் உங்கள் செயல் திட்டம் என்று கூறுகிறீர்களே.
1. எனக்கு இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் நம்பிக்கை இல்லை, நாங்கள் தேர்தலின் போது கொடுப்பது பொய் வாக்குமூலம்
2. எங்களுக்கு நம்பிக்கை உண்டு. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் கொடுத்த உறுதிமொழி உண்மை.

இரண்டில் எது சரி?

சந்திப்பு said...

அனானி நன்பரே! மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடப்பிலுள்ள சமூக அமைப்பை முற்றிலுமாக மாற்ற வேண்டும் என்ற நோக்கோடு செயல்படுகிறது புரட்சிகர கட்சியே. இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக மக்களை அணித்திரட்ட எந்தவிதமான சதித்திட்டத்திலும் சி.பி.எம். பங்கேற்கவில்லை. பகிரங்கமாக எங்களது திட்டத்தை வெளியில் கூறியுள்ளதோடு. அதற்காக இந்திய மக்களை அணித்திரட்டுவதற்காக சட்ட பூர்வமான வேலைகள் அனைத்திலும் பங்கேற்கிறது மார்க்சிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி. இந்த அடிப்படையிலேயே தேர்தலிலும் பங்கேற்கிறது. அதற்காக தேர்தல் வாக்குறுதியாக பாலாறும் - தேனாறும் பாயும் என்று எங்கும் வாக்குறுதி கொடுப்பதில்லை. தற்போதைய முதலாளித்துவ சட்ட - திட்டங்களுக்கு உட்பட்டு மக்களின் நலன் காப்பதற்காக என்ன செய்ய முடியுமோ அதனை முழுமையாக நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளது. இவ்வாறு கட்சியின்பால் நம்பிக்கை கொள்ளும் மக்களை அரசியல் ரீதியாக மேலும் அணிதிரட்டுவதன் மூலம் ஒரு மக்கள் ஜனநாயக புரட்சியை நோக்கி அவர்களை ஈர்க்க முடியும்... ஆனால் பலர் - குறிப்பாக நக்சலைட்டுகள் - ம.க.இ.க. மறைமுகத் தலைமை நாங்கள் ஆயுதப் புரட்சியின் மூலம் ஆட்சியைப் பிடிக்கப்போகிறோம் என்று கத்திக் கொண்டு தங்கள் கட்சிப் பெயரைக் கூட வெளியில் சொல்ல முடியாமல் ஒளிந்துக் கொள்வதும் - கேட்டால் அவர்கள் வெளிப்படையாக வேலை செய்வதாக பம்மாத்துக் காட்டுவதும் யாரை ஏமாற்றுவதற்காக? இத்தகைய சீர்குலைவாளர்கள் தற்போது ஆளும் வர்க்கத்திற்கு தேவைப்படுகிறது. எனவே அவர்களை இந்த ஆளும் வர்க்கம் அனுமதித்து செயலாற்றுகிறது.

Anonymous said...

// the Russian experience (see above) of the importance of combining legal and illegal struggle.//

This is from the same book:
“இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு”

What is CPM's Illegal Path?

சந்திப்பு said...

அனானி நன்பரே மிகச் சரியாக சுட்டிக்காட்டியுள்ளீர்கள். சட்டப்பூர்வ வேலையையும் - சட்டப்பூர்வமற்ற வேலைகளையும் இணைக்க வேண்டும் என்று இடதுசாரி கம்யூனிசம் இளம் பருவக் கோளாறு என்ற புத்தகத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். இது குறித்து சி.பி.எம். நிலையை கேட்டுள்ளீர்கள்.

இந்திராவின் எமர்ஜென்சி அடக்குமுறையின் போது இத்தகைய சட்டபூர்வமற்ற வேலைகளையும் - சட்டப்பூர்வமான வேலைகளையும் சி.பி.எம். மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கூட நக்சலிசவாதிகள் தங்களை சீனாவின் ஏகப்பிரதிநிதிகளாகவும் அவர்கள் வழிவந்தவர்களாகவும் மார்தட்டிக் கொண்டனர். அதே போல் சி.பி.ஐ. ரஷ்யப் பிரதிநிதியாக தோள் உயர்த்திக் கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த இரண்டு ஆதரவுகளையும் நிராகரித்து தன்னந்தனியாக களத்தில் நின்று போராடி தற்போது முன்னேறியுள்ளது.

சரி, விசயத்திற்கு வருவோம். மேலும் கம்யூனிஸ்ட் கட்சி 1920களில் துவக்கப்பட்ட காலத்திலிருந்தே தலைமறைவாகவும் - காங்கிரஸ் இயக்கத்திற்குள் சட்டப்பூர்வமாகவும் செயல்பட்டு வந்துள்ளது என்பது வரலாறு. எனவே சட்டப்பூர்வமற்ற வேலைகள் குறித்து யாரும் யாருக்கும் பாடம் நடத்தத் தேவையில்லை என்று கருதுகிறேன்.

மேலும், தற்போதைய சுழல் ஆளும் வர்க்கம் உங்களை சட்டப்பூர்வமாக செயலாற்ற அனுமதிக்கும் காலத்தில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு மக்களை சந்தித்து அரசியல் ரீதியாக அவர்களை வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புகளை கட்டியெழுப்பாமல் - சட்டப்பூர்வமற்ற புரட்சிகர வேலையை செய்கிறோம் என்று காட்டுக்குள் ஒளிந்துக் கொல்வதால் எந்தப் பயனும் ஏற்படப்போவதில்லை. ஒவ்வொரு கால கட்டத்திற்கு ஏற்பவே நம்முடைய நடைமுறைத் தந்திரம் அமைய வேண்டும். எனவே தற்போதைய கட்டத்தில் நக்சலிச சித்தாந்தம் வழக்கொழிந்த ஒன்றாகும் - பயங்கரவாதத்தை மேற்கொள்ளும் அமைப்பாகவும் - மக்களிடம் இருந்து தனிமைப்பட்ட அமைப்பாகவும் - சீர்குலைவு வாதத்தையே தனது தொழிலாகவும் கொண்டு செயலாற்றுகின்றது. தமிழகத்தில் சட்டபூர்வமற்ற புரட்சிகர வேலை செய்வதாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க. மறைமுகத் தலைமை எஸ்.ஓ.சி. இதுவரை எங்காவது தனது தளப்பிரதேசங்களை ஏற்படுத்தியுள்ளதா? எனவே சொல்லும் - செயலும் வேறு வேறாக இருக்க கூடாது கம்யூனிஸ்ட்டுகளுக்கு (அது ம.க.இ.க.வுக்கு பொருந்தாது)

Anonymous said...

Lenin says the importance of combining legal and illegal struggle. Not choosing between Legal and Illegal struggle(either one of them). And to be precisely the article just stresses the need of an legal struggle not proscribing illegal struggle all togather or minimising(as an option) Illegal strugle against Legal strugle to secondary alternate value as you put in your example of Emergency period.

This can be well understood by the fact that this is the only book that advocates so vehemently on parliamentary politics(Emphasis on Parliament politics is more as it is directed towards the Left's of Capitalists countries completely boycotting Parliament). and from the fact that lenin frequently and continuesly criticise severly on parties that ignore rejects illegal struggle(like CPM/CPI).

Anonymous said...

Lenin says the importance of combining legal and illegal struggle. Not choosing between Legal and Illegal struggle(either one of them). And to be precisely the article just stresses the need of an legal struggle not proscribing illegal struggle all togather or minimising(as an option) Illegal strugle against Legal strugle to secondary alternate value as you put in your example of Emergency period.

This can be well understood by the fact that this is the only book that advocates so vehemently on parliamentary politics(Emphasis on Parliament politics is more as it is directed towards the Left's of Capitalists countries completely boycotting Parliament). and from the fact that lenin frequently and continuesly criticise severly on parties that ignore rejects illegal struggle(like CPM/CPI).

Anonymous said...

Lenin says the importance of combining legal and illegal struggle. Not choosing between Legal and Illegal struggle(either one of them). And to be precisely the article just stresses the need of an legal struggle not proscribing illegal struggle all togather or minimising(as an option) Illegal strugle against Legal strugle to secondary alternate value as you put in your example of Emergency period.

This can be well understood by the fact that this is the only book that advocates so vehemently on parliamentary politics(Emphasis on Parliament politics is more as it is directed towards the Left's of Capitalists countries completely boycotting Parliament). and from the fact that lenin frequently and continuesly criticise severly on parties that ignore rejects illegal struggle(like CPM/CPI).




//I cannot attempt here to formulate the conditions under which a boycott is useful, since the object of this pamphlet is far more modest, namely, to study Russian experience in connection with certain topical questions of international communist tactics. Russian experience has provided us with one successful and correct instance (1905), and another that was incorrect (1906), of the use of a boycott by the Bolsheviks.//

Here in this example lenin quotes the status of Bolshevik's participation in parliament only post 1905. He is not at all considering pre 1905 setup of russia




Next to the line quoted in the first comment comes the below lines:

""
This question is of immense importance both in general and in particular, because in all civilised and advanced countries the time is rapidly approaching when such a combination will more and more become—and has already partly become—mandatory on the party of the revolutionary proletariat, inasmuch as civil war between the proletariat and the bourgeoisie is maturing and is imminent, and because of savage persecution of the Communists by republican governments and bourgeois governments generally, which resort to any violation of legality (the example of America is edifying enough), etc. The Dutch, and the Lefts in general, have utterly failed to understand this highly important question.
""

The combination of Legal and Illegal struggle become more and more important as the war is maturing. and he clearly says it is in "Advanced and Civilised" Countries the question become even more prominant. This participation of Parliament is mandotory to prevent(hinder) the savage persecution of Communists by republican governement.

What for the "Non Advanced and Civilised" countries is not discussed in that article, as lenin himself says he restrict the article only on the experience of Russian revolution and this part of the article addresses specifically "Advanced and Civilised Country" called Germany and Italy etc.

The question of whether 'Participating in Parliament or not' is not prominanat until the revolutionary party stood strong among people. It is the Legal activity of mobilising people to revolutionary politics that matters and that is not necessarily a parliamnet activity.

The likes of CPM never able/try to differentiate Revolutionary Politics, Illegal/Legal Struggle, and Parliamentaty participation. You like to put everything in a Singly bucket and Simplify things as you need a simplified Marxism.


""
which has all too long been vainly and impatiently awaited; perhaps that is why people so easily yield to that mood. Certainly, without a revolutionary mood among the masses, and without conditions facilitating the growth of this mood, revolutionary tactics will never develop into action.
""

Lenin is absolutely correct but this is no where says Parliamentary tactics is the alternative. Lenin use this sentence to criticise the parties that limits themself only to Revolutionary tactics. Down the line when he talks about "Advanced and Civilised countries"(By comparing with Russia) he talks about parlimanet participation. But your article try to put these two views as closely related. though they are related but not in tha sense you try to portray.

let us consider the above lenin's quote. The CPI(Maoist) who in recent pasts (now a days they are doing some mass line activities as well) did only revolutionary tactics are the ones deserve criticism with this lines. The alternative to this is nothing but legal activity(working among Mass to politicise them with in the legal spectrum). This doesn't necessarly mean a Parliament politics.

And when lenin Criticise some Left, it is those who ignore Parliament politics and embrace only revolutionary politics and he defenitely not addressing those who embrace only Parliament politics and Ignore Revolutionary politcs completly(the likes of CPM/CPI). He names the likes of CPM/CPI as something else and Not definitely as Left.


""
the backward masses of the workers and—to an even greater degree—of the small peasants are much more imbued with bourgeois-democratic and parliamentary prejudices than they were in Russia because of that, it is only from within such institutions as bourgeois parliaments that Communists can (and must) wage a long and persistent struggle, undaunted by any difficulties, to expose, dispel and overcome these prejudices
""

The above lines says, in an 'Advanced and Civilised' Country the people love the state's Democratic institution and practices hence it is mandatory to participate in the System to expose it. The question of participation become prominant as for as the belief of people on the Parliament become prominant, like it is in Nepal. In India in recent pasts the parliament is exposed a lot for accepting pribe and to its utter corruptions and Anti people activities. All this exposition never have shook the very mass of this country(Just imagine the same thing happen in Capitalist countries). They didn't and never would react because people are already well perceived about this system and this exposition is not new to them and because the majority of the people are culturaly/economically enslaved - ie. they are not democratised.

In India the Working people(I am not talking about the Middle Classes) never in good opinion about this state mechanism - The Politicians, The Police, The Authorities, The Judiciary. And where comes then Indian masses so vehemently believe in Parliament politics? If it is true that Indian mass believe so much in Parliament (representative government) then during the Emergency period the people must have engaged in street fight. Even Indra lost her next election only because of the atrocities of emergnecy not because she abolished Parliament. For example if she just restricted herself only to just abolishing the parliament and allowed the state mechanism to run as it is before, then Indian people would never have bothered about emergency. But this truth the Childish Theorists never understand.

Anonymous said...

//தமிழகத்தில் சட்டபூர்வமற்ற புரட்சிகர வேலை செய்வதாக கூறிக் கொள்ளும் ம.க.இ.க. //


எங்கே அப்படிச் சொல்கிறது என்று சந்திப்பு சொல்லவாரா?



//உங்களை சட்டப்பூர்வமாக செயலாற்ற அனுமதிக்கும் காலத்தில் அதனை முழுமையாக பயன்படுத்திக் கொண்டு மக்களை சந்தித்து அரசியல் ரீதியாக அவர்களை வளர்த்தெடுத்து புரட்சிகர அமைப்புகளை கட்டியெழுப்பாமல் - சட்டப்பூர்வமற்ற புரட்சிகர வேலையை செய்கிறோம் என்று காட்டுக்குள் ஒளிந்துக் கொல்வதால் //


ம க இக காட்டுக்குள் வேலை செய்கிறதா?

மக்களை அணிதிரட்டி அவர்களிடையே செயல்படுவதைத்தான் ம க இக செய்கிறது. மாறாக பாராளுமன்றத்தில் ஒளிந்து கொண்டு மக்களுக்கு எந்த பதிலும், விளக்கமும் கொடுக்காமல்(Ex: Nandirgam) பிற வோட்டு கட்சிகள் போலவே செயல்படும் CPM, மக்களை ஒவ்வொரு பிரச்சினைக்கும் அனுகும் ம க இகவினரை காட்டுக்குள் அரசியல் செய்வதாக சொல்வது நகைப்பை வரவழைக்கிறது.

Anonymous said...

Santhipu, Would you please answer my observations If u believe you are soooo Honest ;-)

ஏகலைவன் said...

///Santhipu, Would you please answer my observations If u believe you are soooo Honest ;-)///

He never done this, he'll not ever give answers honestly. If you expect honest from him, you are forcing him to buy honest from some where.

As, he is not a communist, he is an escapist thats all.

He is an official agent of CPIM to escape its worng and worst political stand amid us and the public.

There are more our answers are still with him, but not yet been published by him. There are so many questions put by us against their stand, still not yet answered.

He is always refusing arguements with us. That is their official policy too, generally.

Comradely,
Yekalaivan.

Anonymous said...

//

இந்திராவின் எமர்ஜென்சி அடக்குமுறையின் போது இத்தகைய சட்டபூர்வமற்ற வேலைகளையும் - சட்டப்பூர்வமான வேலைகளையும் சி.பி.எம். மேற்கொண்டது. அன்றைய காலகட்டத்தில் கூட நக்சலிசவாதிகள் தங்களை சீனாவின் ஏகப்பிரதிநிதிகளாகவும் அவர்கள் வழிவந்தவர்களாகவும் மார்தட்டிக் கொண்டனர். அதே போல் சி.பி.ஐ. ரஷ்யப் பிரதிநிதியாக தோள் உயர்த்திக் கொண்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே இந்த இரண்டு ஆதரவுகளையும் நிராகரித்து தன்னந்தனியாக களத்தில் நின்று போராடி தற்போது முன்னேறியுள்ளது.

//

எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்

ஏகலைவன் said...

////எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்...எமெர்ஜென்சியிலே போராடிக்கிட்டுக் கிடந்தது எல்லாம் சரிதான். உங்க தலைவர் பி.ராமமூர்த்தியை மட்டும் எமெர்ஜென்சி நெருங்கவே இல்லையே அது ஏன்? திடீர் திடீரென்று பத்திரகாளி இந்திராவின் உணவு மேசையில் பி.ஆர். அச்சமயத்தில் காணப்பட்டாரே அது ஏன்? அப்போதெல்லாம் ‘இந்திராவே காம்ரேட் பி.ஆரைக் கூப்பிட்டு ஆலோசனை நடத்தி இருக்கார்” என்று மேற்கண்ட 2 கேள்விகளைக் கேட்ட காம்ரேடுகளிடம் தலைமை புளுகியதே அது ஏன்? அதற்கெல்லாம் ஒரே பதில்தான்.. உங்கள் தலைமையே எமெர்ஜென்சியின்போது தொண்டர்களுக்குத் துரோகம் செய்தது.. ஆதரவு தருவதற்கு தனக்கு ராஜ்யசபா சீட் வேண்டும் என்று தொண்டர்களின் தியாகத்தை பி.ஆர். பேரம் பேசினார். இப்போது எமெர்ஜென்சியை எதிர்த்த மாதிரி பம்மாத்து செய்கிறீர்கள்.

கட்டபொம்மன்/////

மேற்கண்ட இந்தக் கேள்விக்கு உங்களை பதிலலிக்கச்சொல்லி பலமுறை நானும் பின்னூட்டமிட்டுவிட்டேன். இதுவரை நீங்கள் அந்த பின்னூட்டங்களை பதிப்பிக்காதது மட்டுமில்லாமல், பதிலும் சொல்லாதது உமது சந்தர்ப்பவாத போலித்தனத்தின் நிஜமுகத்தை மீண்டுமொருமுறை நிரூபித்திருக்கிறது.

நாளைக்குள் இதற்கு பதிலலிக்க துப்பில்லாவிட்டாலும் பரவாயில்லை, எமது பின்னூட்டங்கள் அனைத்தையும் குறைந்தபட்சம் பதிப்பிக்கவேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இல்லாவிட்டால் இதற்காகவே (பி. ராமமூர்த்தி அய்யருக்காகவே) தனிப்பதிவு ஒன்றை நான் எழுதவேண்டியிருக்கும் என்பதனையும் தெரிவித்துக் கொள்கிறேன்.