November 23, 2007

கோயபல்ஸ் சிஷ்யர்களின் முகமூடி கிழிந்தது!

நந்திகிராம நிகழ்வுகள் குறித்து நாடாளுமன்ற மக்கள வையில் விவாதம் நடைபெற்றது. வியாழனன்று மாநிலங்களவையில் விவாதம் நடைபெற்றது. விவாதத்தை துவக்கி வைத்து பேசிய பாஜக உறுப்பினர் சுஷ்மா சுவராஜ் மேற்கு வங்க அரசை கலைத்துவிட்டு, குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்த வேண்டுமென்று கோரினார்.
இதைத் தொடர்ந்து இடதுசாரி கட்சி உறுப்பினர்களுக்கும், பாஜக உறுப்பினர் களுக்கும் இடையில் கடும் மோதல் ஏற்பட்டது நந்தி கிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் இல்லை என்று மாநில உள்துறை அமைச்சர் கூறியிருப்பதாக சுஷ்மா கூறினார். இதை வன்மையாக மறுத்த சீத்தாராம் யெச்சூரி, மாநில உள்துறை செயலாளர் அவ்வாறு கூறவில்லை. மேலும், தேசிய பாதுகாப்புத்துறை ஆலோசகர் எம்.கே. நாராயணனே நந்திகிராமத் தில் மாவோயிஸ்ட்டுகளின் கைவேலை உள்ளது என்று சுட்டிக் காட்டியுள்ளார் என்று கூறினார். நேபாளத்தில் மாவோயிஸ்ட்டுகளை ஆதரிக்கும் மார்க்சிஸ்ட்டுகள், நந்திகிராமத்தில் மட்டும் எதிர்ப்பது ஏன் என்று சுஷ்மா சுவராஜ் அபத்தமாக உளறிக் கொட்டினார்.
இதற்கு உடனடியாக பதிலளித்த சீத்தாராம் யெச்சூரி, நேபாள மாவோயிஸ்ட்டுகளையும், நந்திகிராமத்தில் மாவோயிஸ்ட்டுகள் என்ற பெயரில் சீர்குலைவு வேலை களில் ஈடுபட்டுள்ளவர்களையும் ஒன்றுபடுத்தி பேசக்கூடாது என்று குறிப்பிட்டார். நேபாள மாவோயிஸ்ட்டுகள் ஜனநாயகத்திற்காக போராடுகிறார்கள். நந்திகிராமத்திலோ இவர்கள் மக்களை படுகொலை செய்கிறார்கள் என்று குறிப்பிட்டார். எனினும், மாவோயிஸ்ட்டுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த இடது முன்னணி அரசு தயாரா கவே உள்ளது என்றும் அவர் கூறினார். நந்திகிராமத்திற்கு துணை ராணுவப்படையினரை அனுப்புவதில் மத்திய அரசு தாமதம் செய்ததாக யெச்சூரி குற்றம் சாட்டினார். மேற்குவங்க மாநிலத்தில் 341 பிளாக்குகள் உள்ளன. ஒரு பிளாக்கிலும், மற்றொரு பிளாக்கில் சிறு பகுதியிலும்தான் பிரச்சனை உள்ளது. இதற்காக மாநில அரசையே கலைக்க வேண்டுமென்று பாஜக கூறுகிறது. குஜராத் மாநிலத்தையே கலவர பூமியாக்கிய பாஜகவினருக்கு இதைக் கூற உரிமையில்லை என்று யெச்சூரி கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான அரசை கவிழ்ப்பதற்காகவே பாஜக, ஆர்எஸ்எஸ், திரிணாமுல் காங்கிரஸ், அன்னிய நிதி உதவியுடன் செயல்படும் தொண்டு நிறுவனங்கள் என மகா கூட்டணியை அமைத் துள்ளனர் என்று குற்றம் சாட்டிய யெச்சூரி, உள்நாட்டு பாதுகாப்பு குறித்து பாஜக அடிக்கடி பேசுகிறது.
ஆனால், நந்திகிராமத்தில் மட்டும் மாவோயிஸ்ட்டுகளை பாதுகாத்து அவர்களை உற்சாகப்படுத்துகிறது. இது தான் உள்நாட்டு பாதுகாப்பு குறித்த அக்கறையா என்று அவர் கேள்வி எழுப்பினார். மாவோயிஸ்ட்டுகள் கூட் டத்தில் அத்வானி பேசியதை சுட்டிக் காட்டிய யெச்சூரி, நக்சலைட்டுகள் குறித்த தங்களது நிலையை பாஜக தெளிவுபடுத்த வேண்டும் என்று கூறினார்.
யெச்சூரி பேசிய போது, உரிய பதிலளிக்க முடியாத பாஜகவினர் கூச்சல் எழுப்பி ரகளையில் ஈடுபட்டனர்.

2 comments:

Anonymous said...

eppidi sir ippidi sappi kattu katreenga:))

சீனு said...

முடியல...