October 25, 2008

மலேகான் குண்டு வெடிப்பும் மாட்டிக் கொண்ட சங்பரிவாரமும்!


9/11 உலகை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. அமெரிக்காவை அதிர்ச்சியில் உறைய வைத்த சம்பவம். பின்லேடனின் - தாலிபான் அமைப்பினர் நடத்திய இரட்டை கோபுரத்தின் மீதான தாக்குதல் யாராலும் மறக்க முடியாத பயங்கரவாத சம்பவம். உலகமே இதற்கு கண்டனக் குரல் எழுப்பியது. பின்னர் இதை வைத்தே அமெரிக்கா பல நாடுகளை கபளிகரம் செய்து வருகிறது. இது ஏகாதிபத்திய பயங்கரவாத அரசியல்.
9/8 இது இந்தியாவை உலுக்கிய சம்பவங்களில் ஒன்று. மகாராஷ்டிரர்களை நடுங்க வைத்த சம்பவம். மும்பையிலிருந்து 300 கிலோ மீட்டர் தொலைவில உள்ள மலேகனில் செப்டம்பர் 8, 2006 - வெள்ளிக்கிழமை பகல் 2.00 மணியளவில் இசுலாமயர்கள் தொழுகை நடுத்தும் இடமும், அடக்கம் செய்யப்படும் கல்லறைகளுக்கு அருகில் நிகழ்த்தப்பட்ட தொடர் குண்டு வெடிப்புகள்... இசுலாமிய மக்கள் அதிகமாக வாழும் இந்த பகுதியில் திட்டமிட்டு நடத்தப்பட்ட குண்டு வெடிப்பு.
இந்த பயங்கரவாத தாக்குதலில் 38 பேர் உயிரிழந்தனர் 125க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். முடமாகினர். சைக்கிள்களில் குண்டு வைத்து வெடிக்கப்பட்டது. சைக்கிள்கள் சாதாரண மக்களின் வாகனம் என்பதிலிருந்து அது பயங்கரவாதிகளின் ஆயுதமாகவும் மாற்றப்பட்டுள்ளது. மலேகன் நகரமே ரத்தமயமானதோடு - பிய்ந்துப்போன சதைகளுடன்... மனிதப் பிண்டங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்ததை இன்னும் யாரும் மறக்கவில்லை.
இந்த சம்பவம் நடைபெற்றவுடன் இது வெளிநாட்டு இசுலாமிய பயங்கரவாதிகளின் சதி என்று கதை கட்டி விடப்பட்டது. இதில் ஐ.எஸ்.ஐ. அமைப்பினர் தொடர்பு உள்ளதாக கூறப்பட்டதோடு, அந்த அமைப்பைச் சார்ந்தவர்கள் கைதும் செய்யப்பட்டனர். லஷ்கர் - ஈ - தொய்பா போன்ற அமைப்புகளுக்கும் தொடர்பு இருந்தது என்று கூறப்பட்டது. நாடு முழுவதும் பா.ஜ.க.வினர் இசுலாமிய பயங்கரவாதம் என்று கூக்குரல் எழுப்பினர். இருப்பினும் இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்களை சரியாக அடையாளம் காண முடியாத நிலை இருந்தே வந்தது.

இந்நிலையில் இந்த குண்டு வெடிப்பு குறித்த விசாரணை ATS - Anti-Terrorist Squad பயங்கரவாதத்திற்கு எதிரான நடவடிக்கை குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்தக் குழுவினர் மலேகன் குண்டு தொடர் குண்டு வெடிப்பில் தொடர்புடையவர்கள் யார் என்று கண்டு பிடித்து அதிர்ச்சியூட்டும் தகவலை அளித்துள்ளனர்.
அதாவது, இந்தக் குண்டுப் வெடிப்பை நிகழ்த்தியது முழுக்க முழுக்க இந்துத்துவ பயங்கரவாத அமைப்பான இந்து ஜாக்ரன் மன்ச் என்ற பயங்கரவாத அமைப்புதான் இந்த பயங்கரவாத நாசவேலையில் ஈடுபட்டுள்ளது.
இதில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக சாத்வீ புரூனா என்ற பெண் உட்பட இரண்டு பேரை கைது செய்துள்ளனர். இவர் யார் என்றால், தற்போது சன்னியாசியாக வேடம் தரித்துக் கொண்டுள்ள இந்துத்துவ பயங்கரவாதி. இந்த சாத்வீ புரூனா இவர் ஏற்கனவே பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி. அமைப்பில் வேலை செய்துள்ளார். தற்போது இவர் இந்து ஜாக்ரன் மன்ச்சில் சன்னியாசியாக பணிபுரிந்து வருகிறார். அதாவது இவர் சன்னியாசி என்றால் ஏதோ அமைதியை விரும்பும் சன்னியாசியல்ல. மக்களின் அமைதியைக் குலைக்கும் பயங்கரவாதியாக காவியுடையில் வேடம் தரித்துள்ளார்.
அதாவது, இந்த இந்துத்துவவாதிகளின் மதவாத அரசியல் இந்தியாவில் காலாவதியாகிக் கொண்டிருப்பதால் தங்களது இசுலாமியர்கள் மற்றும் கிருத்துவர்களுக்கு எதிரான குரூரக் குரலை சாதாரண இந்து மக்கள் மத்தியில் விதைப்பதற்காக இதுபோன்ற வெடிகுண்டுகளை இவர்களே வெடித்துக் கொண்டு மதக்கலவரத்தை ஏற்படுத்தி அரசியல் ஆதாயம் தேட முனைவதுதான்.
இது ஏதோ மலேகனில் மட்டும் நடந்த ஒன்றல்ல. தமிழகத்தில் - திருநெல்வேலி மாவட்டம் - தென்காசியில் ஆர்.எஸ்.எஸ். அலுவலகத்திற்கு அருகிலும் இதுபோன்ற குண்டு வெடிப்பைச் செய்ததும் ஆர்.எஸ்.எஸ். மதவாதிகள்தான் என்று கண்டுப் பிடிக்கப்பட்டு அவர்களது பயங்கரவாத தீச் செயல் கிழிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் இந்து முன்ன‌னியை சேர்ந்த ரவி, கே.டி.சி.குமார், இலட்சுமி நாரயண சர்மா ஆகிய மூன்று பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதுதான் நவீன இந்துத்துவா இவர்கள் கோட்சேவின் வாரிசுகள்தான் என்பதை நமக்கு அடிக்கடி நினைவூட்டி வருகிறார்கள். தேசப் பிதா மகாத்மாவை கொலை செய்த கோட்சே தனது பெயர் இஸ்மாயில் என்று பச்சைக் குத்திக் கொண்டதோடு, சுன்னத்தும் செய்துக் கொண்டுதான் மகாத்மாவை சுட்டுக் கொன்றான். இதன் மூலம் இசுலாமிய மக்கள்தான் காந்தியைக் கொன்றாலர்கள் என்று பழியை சுமத்தி இசுலாமியர்களுக்கு எதிராக ஒட்டுமொத்தமாக கொலை வெறித் தாக்குதல் தொடுக்க திட்டமிட்ட அமைப்புதான் ஆர்.எஸ்.எஸ். எனவே இந்த முகாமிலிருந்து வெளிவரும் மாணவர்கள் எப்படி இருப்பார்கள்? அவர்களிடம் நாம் அகிம்சையை எதிர்பார்கக் முடியுமா? அவர்கள் விதைப்பது உள் மனதில் இம்சைதானே.
குறிப்பாக கேரளத்தில் ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் பல இடங்களில் வெடிகுண்டு தயாரிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அங்கு கம்யூனிஸ்ட்டுகளுக்கு எதிராக அவர்கள் ஈடுபடும் கொலை வெறிச் செயல்களை உலகம் அறியம். இருப்பினும் அந்த மண்ணில் இவர்களால் கால் வைக்க முடியவில்லை. எனவே பாசிஸ்ட்டுகளின் வளர்ச்சி இந்திய மக்களின் அழிவு என்று அர்த்தம். எனவே இந்த இந்துத்துவா என்பது மக்களின் - மதச்சார்பின்மையின் - சகிப்புத்தன்மையின் எதிரி என்பதை நாம் மக்களிடம் கொண்டுச் செல்ல வேண்டும். இதன் தத்துவம் மனிதத்திற்கு விரோதமானது என்பதையும் சொல்ல வேண்டியுள்ளது. இவர்கள் ஹீட்லரின் தத்துவத்தை கடன் வாங்கிக் கொண்டு வந்து அதனை இந்தியாவில் செயலாக்க துடிக்கும் இந்துத்துவ பயங்கரவாதிகள் என்பதை உலகம் அறிந்துக் கொண்டது. இதற்கு எதிராக பன்முகப்பட்ட மக்களை திரட்ட வேண்டும். இதுதான் காலத்தின் கட்டாயம்.
மேற்கண்ட பயங்கரவாத செயல்களைத்தான் மனிதாபிமானத்தின் உயர்ந்த தத்துவம் இந்துத்துவா என்று இல. கணேசன் கூறியுள்ளார் நேற்றைய தினமணியில். இந்துத்துவ பயங்கரவாதிகள் தங்களை மனிதாபிமானிகளாக வேடம் தரித்துக் கொண்டு தங்களது மதவெறியை விற்பனை செய்ய முனைகிறார்கள். எனவே இவர்களின் முகமூடியை மக்களிடம் காண்பிக்க வேண்டியது முற்போக்குவாதிகளின் கடமையாகிறது.

2 comments:

venu's pathivukal said...

One has to record one's appreciation for your prompt, instant and appropriate response to the unfolding story of conspiracy of Hindutva Fundamentalist groups. You have brought in sharply the Godse's episode also in a befitting context.

with warm regards

s v venugopalan

சந்திப்பு said...

Mr. S.V.
Thanks for your encouraging comment.