July 11, 2008

அம்பலத்துக்கு வந்த இரகசியம்!

ஐ.ஏ.இ.ஏ. ஒப்பந்த வரைவு தேச நலனிற்கு கேடானது: அணு சக்தி விஞ்ஞானிகள்!

இந்திய-அமெரிக்க அணு சக்தி ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை நடைமுறைக்குக் கொண்டுவர பன்னாட்டு அணு சக்தி முகமையின் (IAEA) ஒப்புதலுக்கு இந்தியா தயாரித்து அனுப்பியுள்ள கண்காணிப்பு ஒப்பந்த வரைவு நமது தேச நலனிற்கு குந்தகம் விளைவிக்கக்கூடியது என்று அணு சக்தி விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.“இந்த ஒப்பந்த வரைவு அணு ஆயுதம் பெற்றிராத நாடுகளுடன் பன்னாட்டு அணு சக்தி முகமை செய்துகொள்ளும் கண்காணிப்பு ஒப்பந்தம் போன்றதே தவிர எந்த விதத்திலும் இந்தியாவிற்கென்று சிறப்பாக வரைவு செய்யப்பட்டதில்லை” என்று இந்திய அணு சக்தி ஆணையத்தின் முன்னாள் தலைவர் பி.கே. ஐயங்கரும், அணு சக்தி ஒழுங்குமுறை ஆணையத்தின் முன்னாள் தலைவர் ஏ. கோபாலகிருஷ்ணனும் கூறியுள்ளனர்.இதே கருத்தை பாபா அணு சக்தி ஆய்வு மையத்தின் முன்னாள் தலைவரும் விஞ்ஞானியுமான ஏ.என். பிரசாத்தும் கூறியுள்ளார்.
அணு சக்தி ஒத்துழைப்பின் கீழ் நமது அணு உலைகளுக்கு யுரேனியம் எரிபொருள் வழங்கப்படுவது நிறுத்தப்பட்டால், அதற்கு மாற்று நடவடிக்கைகள் (corrective measures) எடுக்கும் உரிமையைப் பெறுவோம் என்று நாடாளுமன்றத்தில் பிரதமர் அளித்த உறுதியின்படி அது ஒப்பந்த வரைவில் இடம்பெற்றுள்ளதைத் தவிர, இந்தியாவிற்கென்று சிறப்பாக வடிவமைக்கப்பட்ட ஒப்பந்தமாக இது இல்லையென்றும், அணு ஆயுதத்தைப் பெற்றிராத நாடுகளுடன் (சுற்றறிக்கை 66ன் கீழ்) செய்துகொள்ளும் ஒப்பந்தம் போன்றே இதுவும் என்று விஞ்ஞானி கோபாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.
இந்த ஒப்பந்த வரைவு நமது அணு ஆயுத ஆராய்ச்சியில் தலையிடவில்லை என்பதைத் தவிர எந்தவிதத்திலும் நமக்கு சிறப்பு நிலையை அளிக்கவில்லையென்றும், அணு சக்தி ஒத்துழைப்பின் முக்கிய அம்சமான தொடர்ந்து எரிபொருள் வழங்கல் உறுதிமொழி அளிக்கப்படவில்லை என்றும் விஞ்ஞானி பி.கே. ஐயங்கர் கூறியுள்ளார்.
“அமெரிக்க இணையத் தளம் ஒன்று இந்த ஒப்பந்த வரைவை வெளியிட்ட பிறகே நமது அரசு அதனை வெளிப்படுத்தியுள்ளது சுதந்திரம் பெற்று 60 ஆண்டுகள் ஆன பிறகும் தொடரும் காலனிய அடிமைப் புத்தியையே காட்டுகிறது” என்று ஐயங்கர் வருத்தத்துடன் கூறியுள்ளார்.
“மத்திய அரசால் நேற்று ரகசியமான ஆவணம் என்று வர்ணிக்கப்பட்டது இன்று பொது மக்கள் பார்வைக்கு வெளியிடப்பட்டுள்ளது சுவராஸ்யமாகவுள்ளது” என்றும் ஐயங்கர் கூறியுள்ளார்.அணு சக்தி முகமையின் தீவிரமான கண்காணிப்பிற்கு வழவகுக்கும் அதன் விதிமுறைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கூடுதல் ஒப்பந்தம் குறித்தும் விவாதித்திருக்கலாம் என்று விஞ்ஞானி பிரசாத் கூறியுள்ளார்.

2 comments:

Anonymous said...

http://indiancommunisthistory.blogspot.com/

இது - நெருப்ப்பின் சுவடுகள் (அகில இந்திய மாநாட்டில்போடப் பட்ட கண்காட்சி) திரட்டு - உங்கள் வலைப் பக்கத்தில் இதற்கான சுட்டி அமைத்து - அந்த பக்கத்தை பிரபலப் படுத்தி உதவுங்கள்.

தோழரே இன்று இரவு உங்களுக்கான அழைப்பை அனுப்புகிறோம் - நீங்களே அவ்வப்போது பதிவுகளை பதிந்து வாருங்கள் - எங்களை பற்றிய அறிமுகத்தையும் இன்று இரவு அனுப்புகிறோம் தோழா

PROLETARIAN said...

சந்திப்பு அவர்களே , ஏற்கனவே நீங்கள் கன்டறிந்த மூன்றாம் அணி (சமஜ் வாடி) பணத்துக்காக எதிரி கிட்ட சரணடைந்து விட்டது. அப்படிப்பட்ட மொல்லமாறிகளை தான் இத்தனை நாளா மாட்று சக்தி சொன்னீங்க ? இப்ப மீதி இருக்கற கட்சிகளை கூட்டணி வச்சி வோட்டு கேட்டு ஜெயிச்சிடறீஙன்னு வையுங்க ? அவனும் இதே மாதிரி நாட்டை கூட்டி குடுத்தா திரும்ப 2014 இல் யாருடன் கூட்டணி வைப்பீங்க? சரி இப்போ உங்களை (சி.பி.ஐ, சி.பி.எம்) பேச்சை கேட்டு தி.மு.க, பா.ம.க , ம.தி.மு.க, கங்கிரசு க்கு வோட்டு போட்டவன் எல்லாம் என்ன கேனையனா? எந்த மூஞ்ச்சிய வச்சி கிட்டு மறுபடி வோட்டு கேட்க போறிங்க ?

ஊரெல்லாம் உங்க பொழைப்பு சிரிப்பா சிரிக்குது. சந்திர பாபு என்ன நல்லவனா? அவன் கூட கூட்டணி? மக்கள் கிட்ட எங்கேயும் போய் சி.பி.எம் பற்றி கேட்டால் காறி துப்புவாங்க ?

கடைசியா என்ன சொல்ல போற ?