Showing posts with label முன்நவீனத்துவம். Show all posts
Showing posts with label முன்நவீனத்துவம். Show all posts

October 14, 2008

ஜெயமோகனுக்கு முன்நவீனத்துவ பயித்தியம்!



ஜெயமோகன் தமிழக எழுத்தாளர்களில் முன்னணியில் இருப்பவர். பல்வேறு நாவல்கள் மூலம் தமிழக இலக்கிய உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருப்பவர். இவரது எழுத்து மற்றும் கருத்து குறித்து விமர்சனங்கள் இருந்தாலும், தமிழகத்தில் இவர் ஒரு அங்கீகரிக்கப்பட்ட (ரப்பர்) ஸ்டாம்பாகி (எழுத்தாளர்)விட்டார்.

பல்வேறு தருணங்களில் தனது அதிரடியான கருத்துக்கள் மூலம் தனது அறிவு ஜீவித்தனத்தை காட்டி அனைத்து எழுத்தாளர்களையும் கெக்கலிக்க வைப்பார். இதில் எப்போதும் பலே கில்லாடி...

இருப்பினும் இந்த முதிர்ச்சியான எழுத்தாளர் எப்போதும் சங்பரிவாரத்தின் உற்ற நன்பனாகவே வலம் வருவதைப் பற்றி யாராவது பேசினால், அவருக்கு மன்னாங்கட்டி பட்டம் சூட்டி வீட்டுக்கு அனுப்பும் கலையில் கூட இவர்தான் வல்லவராம்.

இந்த முதிர்ச்சியடைந்த எழுத்தாளரின் எழுத்து வல்லமைக்காக இந்த வருடம் நோபல் பரிசுக் கூட கிடைக்கும் என்று இவரது நன்பர்கள் சொன்னால்.... சீ... சீ.... இந்தப் பழம் புளிக்கும் என்று கூறி புல்லரிக்க வைத்து விட்டாராம்...

அவரது சமீபத்திய காமெடி - மன்னிக்கவும் இலக்கிய ஆளுமையை தீராநதி அக்டோபர் மாதம் வெளியான தமிழ் இலக்கியம் ஓர் விவாதம் - உட்கார்ந்து யோசிக்கும்போது கட்டுரையை வாசித்து முடித்தவுடன்.... எனக்கு இப்படித்தான் தோன்றியது. ஐயோ பாவம்... இந்த தமிழகத்தின் புகழ் பெற்ற இலக்கியவாதிக்கு ஏன் இந்த நிலை! இவருக்கு போய் இப்படி ஒரு நிலைமை வரலாமா? என்றே என்னத் தோன்றியது. இந்த இலக்கிய பேதைக்கு பைத்தியம் முத்திவிட்டதாகத்தான் எனக்குத் தோன்றியது. இதற்காக யாராவது ஜெயமோகன் மீது வருத்தப்பட்டால் உடனடியாக நல்ல கேரள மாந்தீரிகவாதியிடம் கொண்டுச் சென்று நன்றாக மந்திரித்தால்தான் இவருக்கு இந்த வியாதி தெளியும் என்று தெரிகிறது.

அதிலும் இந்த இலக்கிய வேதாந்திக்கு முன்நவீனத்துவம்தான் பிடிக்கும் என்று அறிந்தபோது உள்ளூர வருந்தாமல் இருக்க முடியுமா? அதனை அப்படி முந்தி... முந்தி... எழுதித்தள்ளியிருக்கிறார்.. இந்த முன்நவீனத்துவ முண்டம்.

இனியும் தெரியாமல் கூட இந்த பேதையின் நாவல்களையோ, படைப்புகளையோ தொடுவதில்லை... என்று முடிவெடுத்து விட்டேன்.... நீங்களும் தொடாமல் இருப்பதுதான் நல்லது.