
கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கிய மு.க. ஸ்டாலின், இலங்கை பிரச்சனை தொடர்பாக பேசும் போது,
மகன் மேற்கண்டவாற கூற, அதிர்ந்துப்போன அப்பா (மு. கருணாநிதி)
"இலங்கை அரசுக்கு நமது கண்டனத்தைத் தெரிவிக்கவும், ஈழத்தில் மாண்டு மடிந்து கொண்டிருக்கின்ற தமிழர்களைக் காப்பாற்றவும் மத்திய அரசு ஒரு நொடியும் தாமதிக்காமல் இலங்கையில் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்வதற்காக, திமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் கட்சிவேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட நிலையில் தமிழ் பெருங்குடி மக்கள் அனைவரும் அவர்களாகவே முன்வந்து 23ம் தேதி (நாளை) காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை அமைதியான முறையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்."
இப்படிக் கூறியுள்ளார்.
தி.மு.க.வின் இன்றைய முதல்வரும், வருங்கால முதல்வரும் இலங்கை பிரச்சனை தொடர்பாக என்னதான் நினைக்கிறார்கள். அல்லது தமிழக மக்கள் இலங்கைத் தொடர்பாக தீரத்துடன் எதிர்கொள்ளும் மனநிலையை உதாசீனப்படுத்தும் விதமாக மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார். அத்துடன் நிற்காமல், ஏற்கனவே இருந்த தோழமைக் கட்சிகள் தற்போது இல்லாமல் போனதால் செலவு மிச்சமாம்! அது அவருக்கே வெளிச்சம். தேர்தல் செலவுகளுக்காக மார்க்சிஸ்ட்டுகள் ஒருபோதும் திமுகவிடமோ அல்லது வேறு கட்சிகளிடமோ கையேந்தி கிடந்த வரலாறு கிடையவே கிடையாது? மொத்தத்தில் திமுகவின் தேர்தல் ஜனநாயகமே பணநாயகமாகத்தான் உள்ளது என்பதை ஸ்டாலினே அம்பலப்படுத்தியுள்ளார்.
ஆரம்பத்தில் பிரபாகரனை பயங்கரவாதி என்ற கருணாநிதி, பின்னர் எனது நெருங்கிய நன்பர் என்று கூறினார். காங்கிரசிலிருந்து எதிர்ப்பு கிளம்பவே மாற்றிக் கொண்டு பத்திரிகை மீடியா திரித்து விட்டதாக கூறியதோடு, நான் அவ்வாறு கூறவில்லை என்று நாளொரு பல்டி அடித்துக் கொண்டுள்ளார். காங்கிரசசோ தற்போது ஒரு அடி முன்னே பாய்ந்து திமுகவின் பந்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை பிரச்சனையை தீர்க்க வேண்டிய மத்திய ஆட்சியாளர்களே வெட்கம் கெட்ட முறையில் பந்த்தை ஆதரிக்கிறோம் என்று வேஷம் போடுவது ஏனோ? அதனால்தான் "மார்க்சிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் சென்னை பொதுக்கூட்டத்தில் கேள்வி எழுப்பினார். அமெரிக்காவுடன் அணு உடன்பாட்டிற்காக வருடக் கணக்கில் காதல் கொண்டீரே அதில் ஒரு பகுதி நேரத்தையாவது இலங்கை பிரச்சனை தீர்வதற்கு செலவிட்டீரா? என்று கேள்வி எழுப்பினார்." மொத்தத்தில் தமிழக மக்கள் இந்த தேர்தல் களத்தில் காங்கிரஸ் - திமுகவை பல்டி அடிக்க செய்வார்கள்.
திமுகவின் தேர்தல் சாகசம் கண்டு நாடே சிரித்துக் கொண்டிருக்கிறது!