மேற்குவங்கத்தில் மார்க்சிஸ்ட்டுகள் துப்பாக்கிமுனையில் வாக்குகளை பெறுவதாக குற்றம் சுமத்திய கருணாநிதியின் தேர்தல் ஜனநாயகம் எப்படி உள்ளது என்பதை இன்றைய தினமணியில் வெளியான கீழ்க்கண்ட செய்தியினை படித்து அறிந்து கொள்ளவும். இதுதான் கருணாநிதியின் உண்மை முகம்!
மேலும், இலங்கை விவகாரத்தில் ஏப்ரல் 23 அன்று பொதுவேலை நிறுத்தம் என்று நாடகம் ஆடியுள்ளார் கருணாநிதி. உண்மையென்னவென்றால், அன்றைய தினம் மதுரையில் 59வது வார்டு கவுன்சிலரான தோழர் லீலாவதி கொலை செய்யப்பட்ட தினம். அன்றைய தினத்தில்தான் அதிமுக தலைமையிலான கூட்டணிக் கூட்டம் மதுரையில் பிரம்மாண்டமான பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதிமுக பொதுச் செயலாளர் செல்வி ஜெயலலிதா அவர்களும் உரையாற்ற உள்ளார்கள். இந்நிலையில் அந்தப் பொதுக்கூட்ட நிகழ்வை அன்றைய தினத்தில் சீர்குலைக்கும் நோக்கோடுதான் கருணாநிதி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அவரது அரசியல் சாதூர்யம் யாருக்கு வரும்! அவருக்கு நிகர் அவரே! அவரது சாணக்கியத்தனம் எல்லாம் நாட்டு மக்களுக்கானதா? அல்லதது தனது மக்களுக்கானதா? என்பதை மக்கள் சிந்திக்கத் துவங்கி விட்டார்கள். அதுமட்டுமா? இன்றைய தினம் விலைவாசி உயர்வு என்பது இந்தத் தேர்தலில் முதன்மையான பிரச்சனையாக முன்னுக்கு வந்துள்ளது. ஆன்லைன் டிரேடிங் என்பதும் பதுக்கல் பேர்வழிகளாலும்தான் விலைவாசி விண்ணுக்கு ஏறியது. மத்திய அரசியல் இருந்த கருணாநிதி என்றைக்காவது ஒருநாளாவது இது குறித்து கவலைப்பட்டிருப்பாரா? இன்றைய தினம் அவரது கலையெல்லாம் இந்தத் தேர்தலில் எப்படி கரையேறுவது என்பதுதான். காங்கிரசுடன் சேர்ந்து பயணிக்கும் திமுக ஒரு மூழ்கும் கப்பல் என்பதை தமிழக மக்கள் எப்போதோ தீர்மானித்துவிட்டனர்.

