Showing posts with label தஸ்லீமா நஸ்ரின். Show all posts
Showing posts with label தஸ்லீமா நஸ்ரின். Show all posts

August 10, 2007

தஸ்லீமாவை தாக்கிய இசுலாமிய காட்டுமிராண்டி கூட்டம்!


வங்கதேச புகழ் பெற்ற பெண் எழுத்தாளர் தஸ்லீமா நஸ்ரின் வங்க மொழியில் எழுதிய ஷூத் என்ற நாவல் தெலுங்கில் மொழிபெயர்க்கப்பட்டு செல்லுக்கு செல்லு என்ற பெயரில் நேற்றைய தினம் ஆந்திர மாநிலம் ஹைதராபாத்தில் பத்திரிகையாளர் மையத்தில் வெளியிடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தஸ்லீமா நஸ்ரினும் கலந்து கொண்டார்.


இந்நிலையில் மஜிலீஸ் இத்திஹதுல் முஸ்லீமன் என்ற இசுலாமிய மத அடிப்படைவாத அமைப்பைச் சார்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் அப்சல்கான். அஹமத் பாசா. மோசம் கான் புத்தக வெளியீட்டு அரங்கத்திற்குள் நுழைந்து மிக மோசமான. தகாத வார்த்தைகளால் தஸ்லீமா நஸ்ரினை திட்டியதோடு அவரை கடுமையாக தாக்கியுள்ளனர். அரங்கத்தில் இருந்த பத்திரிகையாளர்கள். நிகழ்ச்சி ஏற்பாடு செய்தவர்கள் தலையிடாமல் இருந்திருந்தால் அவர்கள் கொலையும் செய்தீருப்பார்கள் போலும். அந்த அளவிற்கு கொலை வெறித்தனத்தோடு அதுவும் சட்டமன்ற உறுப்பினர்களாக இருப்பவர்கள் குண்டர் படையாக மாறி கையில் கிடைத்த பூத்தொட்டிகள். புத்தகம். சேர் என அனைத்தையும் தூக்கி வீசியுள்ளனர். இந்த தாக்குதலில் தஸ்லீமா நஸ்ரின் படுகாயம் அடைந்துள்ளார். அத்துடன் நிகழ்ச்ி ஏற்பாடு செய்தவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


தஸ்லீமாவின் புத்தகம் இசுலாமுக்கு எதிரானது என்ற பெயரில் புனித தாக்குதல் நடத்தியுள்ள இந்த பாசிச குண்டர்களின் செயல் காட்டு மிராண்டித்தனமானது. அதுவும் ஒரு பெண்ணைப் போய் தாக்குவதற்கு துணிந்த இந்த பேடிகளை - கேடிகளை கழுவில் ஏற்ற வேண்டும்.


பாசிசம் இந்து மதத்தின் வடிவில் மட்டுமல்ல அது இசுலாமிய மதத்தின் அடிப்படையிலும் வரலாம். மொத்தத்தில் எந்த மத அடிப்படைவாதமாக இருந்தாலும் அது மனித குலத்திற்கே விரோதமானது. இந்த விசயத்தில் சிறுபான்மை - பெரும்பான்மை என்று பார்க்க கூடாது.


தஸ்லீமா மீது தாக்குதல் தொடுத்த இந்த காட்டு மிராண்டிகளின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக சட்டரீதியான உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட எம்.எல்.ஏ.க்களின் பதவியையும் பறிக்க வேண்டும்.


ஜனநாயக இந்தியாவில் ஒரு கருத்துக்கு எதிராக மாற்றுக் கருத்தை முன் வைத்தால் அதை கருத்து ரீதியாக எதிர் கொள்ள திராணியற்ற பாசிஸ்ட்டுகள் வன்முறையை கையிலெடுப்பது - கொலை வெறியோடு பாய்வது போன்ற நடவடிக்கைகள் அவர்களது இரத்தத்தில் ஊறியது.

இந்திய அரசியல் சாசனத்திற்கு உட்பட்டு சட்டமன்ற உறுப்பினராக பதவியேற்ற இந்த காட்டு மிராண்டிகள் இந்திய அரசியல் சட்டம் வழங்கியுள்ள கருத்து சுதந்திரம் - வெளிப்பாட்டு உரிமைக்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளனர். எனவே இத்தகைய காட்டு மிராண்ட எம்.எல்.ஏ.க்களை இந்திய அரசியல் சாசனத்தை மீறய குற்றத்திற்காகவும் - பொது இடத்தில் கொலை வெறித் தாக்குதல் நடத்திய குற்றத்திற்காகவும் கைது செய்து கடுமையான நடவடிக்கைகளை மாநில அரசு எடுக்க வேண்டும். பல விசயங்களில் மூக்கை நுழைக்கும் நீதித்துறை இந்த விசயத்தில் வேடிக்கை பார்க்காமல் களத்தில் இறங்குமா?


இப்படித்தான் குஜராத்தில் சந்திர மோகன் என்ற மாணவனின் ஓவிய சுதந்திரத்திற்கு எதிராக சங்பரிவார பாசிஸ்ட்டுகள் தாக்குதலை தொடுத்தனர்.
பாசிச சிந்தனை வளர்ச்சிக்கு எதிரான என்பது மட்டும் அல்ல ஜனநாயகத்திற்கும் - மனித நேயத்திற்கும் கூட எதிரான. இத்தகைய பாசிஸ்ட்டுகளை கலைஞர்கள் - ஜனநாயக எண்ணம் கொண்டோர் மற்றும் முற்போக்கு சக்திகள் அனைத்தும் ஒன்றினைந்து வலுவாக எதிர்க வேண்டும்.

பாசிச தாக்குதலின் இன்னொரு முகம்

கலாச்சார பாசிசத்தின் நிர்வாண சிந்தனை!