அமெரிக்காவில் உள்ள நாசா விண்வெளித்துறையில் பயில்வதற்கான ஜுனியர் ஆய்வாளருக்கான தேர்வில் மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூரைச் சேர்ந்த தலித் மாணவன் சீரதன் காம்ளி (வயது 17) வெற்றி பெற்று தேர்வாகியுள்ளார். சாதாரண விவசாய குடும்பத்தைச் சேர்ந்த சீதரன் உலகின் மிகவும் அந்தஸ்து பெற்ற அறிவியத்துறையான நாசாவிற்கு செல்வது பாராட்டுக்குரிய அம்சமாகும். இதன் மூலம் இவருக்கு மாதம் 1000 டாலர் உதவித் தொகையாக நாசா வழங்கும். நான்கு வருட காலம் படிப்பிற்கான தொகை 50000 டாலர் செலவாகிறதாம். இதற்காக மகாராஷ்டிர அரசும் - சமூகத்தில் உள்ள பெரியவர்களும் உதவத் தயாராக முன்வந்திருக்கிறார்கள். சீதரன் 2004 ஆம் ஆண்டு பாபா அணு சக்தி கழகத்தின் சார்பில் இளம் சயின்டிஸ்ட் பட்டத்தை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. சமூகத்தின் அடித்தட்டிலிருந்து இத்தகைய உயர்ந்த இடத்திற்கு செல்லும் இம்மாணவணின் முயற்சி பாராட்டுக்குரியது. வாழ்த்துக்கள் சீதரன். இந்தியாவில் இன்றைக்கும் ஐ.ஐ.டி. உட்பட பல்வேறு உயர் கல்வி நிறுவனங்களில் கோலோச்சுகிறது ஜாதியம். உயர்ஜாதி ஆதிக்கவாதிகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான வாய்ப்புகளை பல்வேறு வழிகளில் அடைத்து வருகின்றனர். வாய்ப்புக் கிடைத்தால் அடித்தட்டு சமூகத்தைச் சேர்ந்தவர்களும் - ஒடுக்கப்பட்ட - பிற்படுத்தப்பட்ட மக்களும் வானில் பறக்க முடியும். சாதனைகளை படைக்க முடியும் என்பதைத்தான் சீதரனின் தேர்வு உணர்த்துகிறது. தொடரட்டும் இந்த சாதனைப் படிகள்.
Showing posts with label ஐ.ஐ.டி.. Show all posts
Showing posts with label ஐ.ஐ.டி.. Show all posts
May 21, 2008
Subscribe to:
Posts (Atom)

