September 22, 2007

பா.ஜ.க.வின் சுரண்டல் ஆயுதமே ராமர்!


அயோத்தியில் ராமருக்கு கோயில் இது நேற்றைய அரசியல் முழக்கம் பா.ஜ.க.வுக்கு. உத்திரபிரதேச மக்கள் ராம பக்தர்களாக இருந்தாலும் பா.ஜ.க.வின் பித்தர்களாக இருக்க விரும்பவில்லை. ராமரை பா.ஜ.க.விடமிருந்து காப்பாற்றி விட்டனர். அதனால்தான் அவர்களை ஆட்சியில் இருந்தும் ஓரம் கட்டி விட்டனர். ஏன் பா.ஜ.க.வை நான்காவது இடத்திற்கே தள்ளி விட்டனர். அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன?
தென்னக இராமர் இருக்கிறால் அல்லவா? அதனால்தான் இன்றைக்கு பா.ஜ.க.வின் புதிய அரசியல் முழக்கமாக ராமர் பாலத்தை முன்வைத்து தேசத்தில் பெரும் மதக்கலவரத்தை தூண்டும் உள்நோக்கத்தோடு பா.ஜ.க. செயல்பட்டு வருகிறது.
அந்த அடிப்படையிலேதான் மாற்றுக் கருத்தை தெரிவித்த தி.மு.க. தலைவர் கலைஞரின் அன்பு மகள் செல்வியின் வீட்டில் தாக்குதலை தொட்டுள்ளார்கள். பெட்ரோல் குண்டுகளை வீசி தாக்குதலை தொடுத்துள்ளனர் மதவெறி சங்பரிவார கும்பல். மேலும் தமிழகத்திற்கு வந்து கொண்டிருந்த பேருந்தை மறித்து தீ வைத்து கொளுத்தி இரண்டு பேரை கொன்றுள்ளனர் இந்த இந்துத்துவவாதிகள்.
தற்போது வி.எச்.பி. ராம்விலாஸ் வேதாந்தி முதல்வர் கருணாநிதியின் தலைமை துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் வழங்கப்படும் என்றும்ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும் - நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றும் அறிவித்துள்ளார்.
ராமர் பாலம் விசயத்தை பயன்படுத்தி எப்படியும் ஆட்சிக் கட்டிலை பிடிக்க வேண்டும் என்ற வெறியோடு இந்த காட்டுமிராண்டி கும்பல் அலைந்து கொண்டிருக்கிறது. இதற்காக மாற்றுக் கருத்துத் தெரிவிப்பவர்களுக்கு எதிராகவும் பாசிச தாக்குதல் தொடுத்திடவும் சங் பரிவாரம் தயாராகி வருவதைத்தான் காட்டுகிறது. இதனை நாம் மிக எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.
மகாத்மா காந்தியை கொன்ற கோட்ஷேவின் வாரிசுகள் இவர்கள் என்பதை நாம் மறக்க கூடாது. மேலும் காமராஜருக்கு எதிராகவும் - அவரை கொல்வதற்கும் முயன்ற கும்பல்தான் இந்த சங்பவரிவார கும்பல்.
எனவே மதச்சார்பற்ற கட்சிகள் - ஜனநாக சக்திகள் - இடதுசாரிகள் என அனைத்து தரப்பும் மிகவும் எச்சரிக்கையோடு செயல்பட்டு இந்த காட்டுமிராண்டி கும்பலின் அனைத்துவிதமான சதிகளையும் முறியடிப்பதோடு - இவர்களது இந்துத்துவ தத்துவத்தை இந்த தேசத்திலிருந்தே விரட்டியடிக்க வேண்டியுள்ளது.
இந்த காட்டுமிராண்டிகள் இன்றைக்கு விடுத்துள்ள அறிக்கையில் ராமராஜ்யத்தை அமைப்பதாக கனவு கண்ட மகாத்மாவின் உணர்வுகளை கூட மதிக்கவில்லை என்று வேஷம் போட்டுள்ளனர்.
மகாத்மா கனவு கண்ட ராம ராஜ்யமும் - பா.ஜ.க. - சங்பரிவாரத்தின் ராம ராஜ்ய கனவும் ஒன்றா? இவர்கள் அகன்ட பாரதம் என்ற பெயரில் ஆப்கானிஸ்தான் முதல் பாகிஸ்தான் வரை அனைத்தையும் ஆக்கிரமிக்கும் நோக்கோடு செயல்படும் வெறிகொண்ட காட்டுமிராண்டி கும்பலே இந்த சங்பரிவார கும்பல் என்பதை நாம் மறப்பதற்கு இல்லை.
மகாத்மா காந்தி அவர்கள் இந்தியா - பாகிஸ்தான் என்று பிரிக்கப்படுவதற்கு எதிராக உறுதியாக போராடியவர். இந்துக்களும் - இசுலாமியர்களும் இந்தியத் தாயின் ஒரே பிள்ளைகள் என்று வலியுறுத்தியவர். மதனினை மனிதன் மதிக்க வேண்டும் என்ற உன்னதமான சாத்வீக தத்துவ நெறியோடு - அகிம்சையை தன் வாழ்நாள் முழுவதும் கடைபிடித்தவர். இந்த சங்பரிவாரங்களின் நெறி எது? அடிப்படை கோட்பாடு எது? இந்த அமைப்பு தோன்றியது முதல் கொலை வெறியையும் - மதவெறியையும் மட்டுமே தனது நோக்கமாக கொண்டு ஆதிக்க வெறியோடு செயல்படும் சங்பரிவாரம் ராம ராஜ்யம் குறித்து பேசுவது வெட்கக் கேடானது.
மதச்சார்பற்ற இந்து பக்தர்கள் - கடவுள் பக்தி கொண்டவர்கள் ராமரை தங்களுடைய சுரண்டல் கேடயமாக பயன்படுத்தும் இந்த மதவெறியர்களிடம் இருந்து மீட்க வேண்டிய தருணம் வந்து விட்டது. கோடிக்கணக்கான இந்து பக்தர்கள் - மசுதிக்கும் - தேவலாயத்திற்கும் சகோதர உணர்வோடு - உண்மையான பக்தியோடு நாள்தோறும் சென்றுக் கொண்டுதான் இருக்கிறார்கள்! இந்தியாவின் ஒற்றுமைக்கு வேட்டு வைக்கும் இந்த காட்டுமிராண்டிகளுக்கு எதிராக ஒரே குரலில் இந்திய மக்கள் எழுந்து நிற்க வேண்டிய சரியான தருணம் இதுவே!

No comments: