Showing posts with label விதர்பா. Show all posts
Showing posts with label விதர்பா. Show all posts

September 20, 2007

போலி மெடலும் விவசாயிகள் தற்கொலையும்!


போலி என்கவுன்டர். போலி பத்திரம். போலி ரூபாய் நோட்டு என போலிகள் வரிசையில் கடைசியாக சேர்ந்திருப்பது போலி மெடல்.

என்ன ஆசிரியமாக இருக்கிறதா? ஆமாங்க! இந்த போலி மெடலை வழங்கியது வேற யாரும் இல்ல. சாட்சாத் நம்ம மகாராஷ்டிர மாநில காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் அரசுதான்.

மகாராஷ்டிர மாநிலம் விதர்பா என்றாலே விவசாயிகள் தற்கொலைதான் ஞாபகத்திற்கு வரும். அதாவது நம்ம ஐயா நரசிம்மராவ் - வாஜ்பாய் - மன்மோகன் சிங் வகையறாவின் உலகமயமாக்கல் - தாராளமயமாக்கல் பொருளாதாரக் கொள்கையால் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட பரிசுதான் அவர்கள் முடிவை அவர்களே தேடிக்கொள்வது என்ற தற்கொலை வடிவம்.

விவசாயிகளின் பாரம்பரிய விவசாயத்திற்கு மூட்டை கட்டி விட்டு. அந்த இடத்தில் பணப் பயிரான பருத்தியை விளைவிக்கச் சொல்லி - விவசாயிகளுக்கு ஆசை காட்டி ஒரே வருடத்தில் நீங்கள் மில்லினியராக ஆகிவிடலாம் என்று கதைக்கட்டி கடைசியில் இருக்கின்ற கோவணத்தையும் விட்ட கதையாக அந்த விவசாயிகள் கடன் தொல்லை தாள முடியாமல் தற்கொலை செய்து கொள்வது மிசச் சாதாரண விசயமாக மாறி விட்டது மகாராஷ்டிராவில். 2002 முதல் இதுவரை 5000 விவசாயிகள் இதுபோன்று தற்கொலை செய்துக் கொண்டதாக இந்து பத்திரிகை கூறுகிறது.

அப்படிப்பட்ட இடத்தில் ஒரு விவசாயி தாதாஜி என்பவர் அரும்பாடு பட்டு விவசாயத்தில் சாதனை படைத்து விட்டார். அதுவும் புது ரக நெல் விளைச்சலில் சாதனை படைத்து விட்டார். இந்த விவசாயியின் அரிய சாதனையை கெளரவிக்க கிரிசி பூஷன் விருது வழங்கப்படும் என அறிவித்தது. இந்த விருது 14 கராட் தங்கத்தால் 50 கிராம் எடையுடன் கூடியது என அறிவித்தது. இதன் விலை ரூ 32,250. விருது வழங்கும் விழா மகாராஷ்டிர கவர்னர் மாளிகையில் கடந்த அக்டோபர் 13 ஆம் தேதி நடைபெற்றது. இது போன்ற விருதினை பலருக்கும் வழங்கியது. நம்ம விவசாயி தாதாஜி தற்போது விவசாயத்தில் நட்டம் அடந்து விட்டதால் அந்த விருதை வைத்துக் கொண்டு என்ன பண்ணுவது என்ற முடிவுக்கு வந்து. அதை விற்பதற்காக ஒரு ஜிவல்லரிக்கு சென்றபோதுதான் உண்மை வெளிச்சத்திற்கு வந்தது. அதாவது அந்த மெடல் வெறும் விலை குறைந்த வெள்ளியால் செய்யப்பட்டதாம். அதன் மேல் வெறும் கோல்டு எனாமல் பூச்சு மட்டும் பூசப்பட்டுள்ளதாம். மொத்தத்தில் அதன் விலை ரூ. 500 க்கு மேல் போகாது என கூறிவிட்டார்.

ஆஹா இவர்கள் அல்லவா விவசாயிகளை காக்க வந்த மகா உத்தமர்கள்! காங்கிரஸ் முதல்வர் விலாஸ்ராவ் தேஷ்முக் முழி பிதுங்கி நிற்கிறார்!