Showing posts with label பா.ஜ.க. Show all posts
Showing posts with label பா.ஜ.க. Show all posts

September 24, 2007

பா.ஜ.க. விரும்பும் ஜனநாயகம்!


இந்திய அரசியல் தற்போது கடும் நெருக்கடியை சந்தித்துக் கொண்டிருக்கிறது. மூன்று முக்கிய விசயங்கள் தற்போது மையம் கொண்டுள்ளது.

1. இந்திய இறையாண்மை தொடர்பான இந்திய - அமெரிக்க அணு சக்தி உடன்பாடு.

2. உலகமய பொருளாதார கொள்கைகளால் நாசமாகும் மக்கள் வாழ்வு.

3. சேது சமுத்திர திட்டம் - பா.ஜ.க. எதிர்ப்பு.

பா.ஜ.க. பாதையை பின்பற்றும் தற்போதைய மத்திய அரசின் பொருளாதார கொள்கைகளால் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் வாங்கும் சக்தி வெகுவாக குறைந்துள்ளது. ஏழைகள் பரம ஏழைகளாகவும் - நடுத்தர மக்களின் வாழ்க்கை ஆட்டம் கண்டும் - செல்வந்தர்களின் நிலை உயர்த்திற்கு செல்வதாயும் உள்ளது. விவசாயிகள் கடுமையான நெருக்கடியை சந்தித்துக் கொண்டுள்ளனர். பல மாநிலங்களில் கிரிக்கெட் ஸ்கோரை விட வேகமாக தற்கொலைகள் நடைபெற்று வருகிறது. வேலையிண்மை ஒரு பக்கம். இப்படி பல்வேறு சிக்கலான பொருளாதார நிலைமைகளில் பொறுப்புள்ள எதிர் கட்சியான மதவாத பா.ஜ.க. இதற்கு எதிராக எந்தவிதமான ஆர்ப்பாட்டமோ அல்லது மக்கள் இயக்கங்களோ நடத்துவதில்லை என்பதோடு இது சார்நத் விசயங்கள் முன்னுக்கு வருவதைக் கூட விரும்பாமல் ராமர் என்கினற் திரையைப் போட்டு மூடி மறைத்து இந்திய பெரும் முதலாளிகளுக்கு கூஜா தூக்கி குளிர் காய்ந்து வருகிறது.

அடுத்து அணு சக்தி உடன்பாடு தொடர்பாக பா.ஜ.க.வின் நிலை இதுதான் என்று அந்தக் கட்சிக்கு உள்ளே இருப்பவர்களால் கூட சொல்ல முடியில்லை. நாளுக்கு நாள் வேறு வேறு அறிக்கைகளைக் கொடுத்து மக்களை குழப்பி வருகிறது. இந்த உடன்பாட்டிற்கான துவக்கமே பா.ஜ.க.தான் என்பதை மக்கள் அறிவார்கள். தற்போதைய போபார் தீர்மானத்தின் ஒரு பகுதியாக அத்வானி பேச்சில் கூட அமெரிக்காவை நேச சக்தி என்று அழைத்துள்ளார். எனவே இந்திய இறையாண்மை - சுயச்சார்பு - தொழில்நுட்ப வளர்ச்சி போன்ற விசயங்களில் எல்லாம் மதவாத பா.ஜ.க.கவுக்கு உண்மையான அக்கறை இல்லையென்பதையே காட்டுகிறது. மேலும் நாடாளுமன்றத்தில் அணு சக்தி தொடர்பான விவாதத்தை முறையாக நடத்துவதற்கு மாறாக - காட்டுமிராண்டிகளின் கூச்சல் மற்றும் சீர்குலைவு நடவடிக்கையால் பாராளுமன்ற நடவடிக்கையே முடங்கியுள்ளது. இந்த விசயத்தில் கடுமையாக அம்பலப்பட்டுப் போன பா.ஜ.க. ராமரையே மீண்டும் துருப்புச் சீட்டாக பயன்படுத்துகிறது.

சேது சமுத்திர திட்டம் என்பது இன்றைக்கு வகுக்கப்பட்டதல்ல 150 ஆண்டுகளுக்கு முன்னால் பிரிட்டிஷ் கடற்படை தளபதியால் வகுக்கப்பட்டது. இதனால் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மற்றும் புதிய வேலைவாய்ப்பு ஏற்படுவதற்கான வாய்புகள் உண்டு. இந்த திட்டம் தமிழக மக்களின் வெகுநாள் கனவு. இதற்காக குரல் கொடுக்காத அரசியல் கட்சியே தமிழகத்தில் இல்லை. ஏன் பா.ஜ.க.வின் தமிழக தேர்தல் அறிக்கைகளில் கூட இது வெகுவாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. 2001 சட்டமன்ற பா.ஜ.க. தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதை இங்கே கொடுப்பது பொருத்தமாக இருக்கும்.

தமிழ்நாட்டில் கிழக்கிலிருந்து மேற்கும். மேற்கிலிருந்து கிழக்கும் செல்லும் சர்வதேச கப்பல் போக்குவரத்து இலங்கையை சுற்றி வர வேண்டியிருக்கிறது. இதை தவிர்க்கும் வகையிலும் கப்பல் பயணத்தின் தூரத்தை குறைத்திடும் வகையிலும் மற்றும் பயணிகள். சரக்கு கட்டணங்கள் குறைத்திடும் வகையிலும் பாக் ஜலசந்தியில் சேது சமுத்திர திட்டம் அமைக்கும் பணியினை துரிதப்படுத்தப்படும்.

2001 தேர்தலின் போதெல்லாம் ராமர் பாலத்தை - ராமர் கட்டியதாக பா.ஜ.க. மற்றும் சங்பரிவாரத்திற்கு ஞானோதையம் ஏற்படவில்லை. அப்போது அவர்களுக்கு அயோத்தி ராமர் துணையாக இருந்தார். தற்போது உத்திரபிரதேசத்தில் 500 ஆண்டுகள் பழமையான பாபர் மசுதியை குடித்து தரைமட்டமாக்கி பல ஆயிரக்கணக்கான மக்களை படுகொலைக்கு உள்ளாக்கி ஒரு காட்டுமிராண்டி நடவடிக்கையை மேற்கொட் சங்பரிவாரத்தின் ஜனநாயக நடவடிக்கை இதுதான். தற்போது அதே உத்திர பிரதேசத்தில் பா.ஜ.க.வை மக்கள் கை கழுவி விட்டதோடு - அவர்களை நான்காவது இடத்திற்கு தள்ளி விட்டனர். இந்த நிலையில் அயோத்தி ராமர் கைவிட்டால் என்ன இருக்கவே இருக்கிறார் தென்னக இராமர்!


தற்போது சேது சமுத்திர திட்டம் தொடங்கப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கையில் ராமர் பாலம் என்ற ஒரு கற்பனையான நடவடிக்கையில் பா.ஜ.க. எழுப்பி வருகிறது. இது விஞ்ஞானத்திற்கு விடப்பட்ட சவால். ஏன் தமிழகத்தில் உள்ள 7 கோடி மக்களில் பெரு:ம பகுதியினர் கிட்டதட்ட 99.9 சதவீதம் பேர் சேது சமுத்திர திட்டத்தை ஆதரிக்கின்றனர். அணு சக்தி தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழுவை அமைக்க வேண்டும் என்று கோரும் பா.ஜ.க. தமிழக மக்களின் உணர்வுகளை - ஜனநாயகத்தை மதிப்பதேயில்லை. மேலும் பா.ஜ.க.வின் ஜனநாயகம் என்பது உணர்வு பூர்வமான விசயத்தை முன்னிறுத்தி மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தி - கலவரத்தை தூண்டி ஜனநாயகத்தை சீர்குலைத்து மோடியிச பாணியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்பதுதான். இட்லர் இந்த பாணியை பின்பற்றிதான் அப்போது ஜர்மனியில் ஆட்சிக்கு வந்தான். தற்போது எதிர் வரும் பாராளுமன்ற தேர்தலை மனதில் கொண்டு பா.ஜ.க. தென்னக ராமரை முன்னிருத்துகிறது. தமிழக மக்கள் மட்டுமல்ல இந்திய மக்களும் ஏமாற மாட்டார்கள்.

சங்பரிவாரத்தின் வால் முன்னாள் எம்.பி. ராம்விலாஸ் வேதாந்தி என்ற காட்டுமிராண்டி கலைஞரின் தலையை வெட்ட வேண்டும். நாக்கை அறுக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறான். அதற்கு பகவத் கீதையையும் துணைக்கு அழைக்கிறான். அதாவது தன்னுடைய செயலுக்கு நியாயம் கற்பிக்கிறான்.
இந்த விசயத்தில் மாற்றுக் கருத்தை வெளியிட்ட முதல் கருணாநிதியின் மகள் வீடு மீது தாக்குதல். பேருந்து ஒன்றிற்கு தீ வைத்து - இரண்டு பேர் உயிரோடு எரித்துக் கொல்லப்பட்டது சங்பரிவாரத்தால். இறந்தவர்கள் யாரும் கடவுள் நம்பிக்கையற்றவர்கள் அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. பா.ஜ.க. ராமர் வன்முறையை கையிலெடுக்கும் ராமர் என்பதை மக்கள் உணர்ந்தே உள்ளனர்.

ராமர் என்கின்றன விஷ விதையை சமூகத்தில் விரைதத்து வன்முறையை தூண்டி - கலவரத்தை ஏற்படுத்து முனையும் பா.ஜ.க. தன்னுடைய அலுவலகம் தாக்கப்பட்டதாக ஜனநாயகம் பேசுவது கேலிக் கூத்தானது. ஜனநாயகம் - மற்றவர்களின் உணர்வை மதிப்பது என்ற சித்தாந்தம் சங்பவரிவாரங்களிடம் துளியையும் எதிர்பார்க்க முடியாது. ராம பக்தரான மகாத்மாவையே கொன்றவர்கள் அல்லவா இவர்கள். இவர்களது ராமர் கோட்சேயிஸ ராமர். இவர்களின் ஜனநாயகம் என்பது மோடித்துவ ஜனநாயகமே! பா.ஜ.க. இதைத்தான் விரும்புகிறது.

குஜராத்தில் 3000க்கும் மேற்பட்ட சிறுபான்மை மக்களை கொலை செய்த பாசிச கும்பலல்லவா இந்த இந்துத்துவ கும்பல். இவர்களுக்கும் உண்மையான இந்து மத பக்தர்களுக்கும் வித்தியாசம் உண்டு. அவர்கள் வள்ளலார் வழியில் வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்ற நம்பிக்கை வழி வந்தவர்கள். இவர்களோ வாடிய பயிரை தீக்கிரையாக்கி இன்பம் காணும் மோடியிஸ்ட்டுகள்.