Showing posts with label சேது சமூத்திர திட்டம். Show all posts
Showing posts with label சேது சமூத்திர திட்டம். Show all posts

September 17, 2007

மணலை கயிராக திரிக்கும் பா.ஜ.க.


சேது சமூத்திர திட்டம் தமிழக மக்களின் 150 ஆண்டு கனவு. மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு இத்திட்டத்திற்கு பச்சைக் கொடி காட்டி அதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. தமிழக மக்கள் அனைவராலும் வரவேற்கப்பட்ட திட்டம். தேசத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் - தமிழகத்தின் வறண்ட மாவட்டங்களின் வேலை வாய்ப்புக்கும் - வளர்ச்சிக்கும் உதவும் திட்டம்.
பா.ஜ.க.வின் விரக்தி அரசியலுக்கு கிடைத்திருக்கும் துருப்புச் சீட்டுதான் ராமர் பாலம் விவகாரம். ஆதம் பாலம் என அழைக்கப்படும் இடத்தில் உள்ள மணல் திட்டுப் போன்ற பகுதி ராமரால் கட்டப்பட்டது என்று மணலை கயிராக திரித்து தங்களது மதவாத அரசியலுக்கு மெருகூட்ட முனைந்திருக்கின்றனர்.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு. இந்திய அகழ்வாய்வுத்துறை சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டு - ஆதம்பாலம் என்பது இயற்கையாக உருவானது. அது மனிதனால் உருவாக்கப்பட்டது அல்ல. அதற்கான எந்த ஆதாரம் அங்கு இல்லை என்று நிறுவியுள்ளது.
வரலாற்று ரீதியாகவும். இலக்கிய ஆதாரங்களின்படியும் கூட ராமர் பாலத்திற்கான எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று நிறுவப்பட்டுள்ளது. இருப்பினும் பா.ஜ.க. இந்த விசத்தை மக்கள் நம்பிக்கை என கயிராக திரித்து - மத உணர்வுகளை தூண்டி விட்டு அரசியல் ஆதாயம் தேட முனைகிறது.
இராமாயணம் - மகாபாரதம் போன்றவைகள் இந்திய இலக்கியத்தின் ஒரு பகுதிதானே ஒழிய அதற்கும் வரலாற்றறிற்கும் எந்தவிதமான சம்பந்தமும் இல்லை. இது குறித்து பல்வேறு வரலாற்று அறிஞர்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியுள்ளனர். தந்தை பெரியார் இது குறித்து கூறும் போது இவைகள் எல்லாம் வரலாற்று புரட்டும் - குப்பையும்தான் என கூறியதே இந்நேரத்தில் நிள னைவுக்கு வருகிறது.
நாடு முழுவதும் அணு சக்தி விவகாரத்தில் அமெரிக்காவுடன் செய்து கொண்ட உடன்பாடு சுடான விவாதத்தை தூண்டிக் கொண்டிருக்கையில். அந்த விசயத்தில் அம்பலப்பட்டுப் போயுள்ள பா.ஜ.க. ராமர் பாலம் விவகாரத்தை கையில் எடுத்துக் கொண்டு திசை திருப்ப முனைகிறது.
தேசத்தின் மீதான இவர்களது அக்கறை போலித்தனமானது என்பது வெளிப்பபடையானது. இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் இருந்தே இதனை சங்பரிவாரம் மேற்கொண்டு வருகிறது. மொத்தத்தில் சங்பரிவார வேர்களை வேரறுக்கும் வரையில் இந்திய நாட்டின் வளர்சிக்கு விடிவுகாலம் இல்லை.