Showing posts with label ஈராக். Show all posts
Showing posts with label ஈராக். Show all posts

December 15, 2008

செருப்படி வாங்கிய ஜார்ஜ் புஷ்!

இன்று காலை 07.20 மணி இருக்கும் நான் என்னுடைய குழந்தைகளை பள்ளிக்கு அழைத்துச் செல்வதற்காக பேருந்தில் ஏறிவிட்டேன். அப்போது என்னுடைய நண்பர் அதிர்ச்சியாக டி.வி.யைப் பார்த்தாயா? என்று கேட்டார்? நான் என்னமோ? ஏதோ என்று பயந்து விட்டேன். ஏதாவது பயங்கரவாதிகள் இந்தியாவிற்கு குண்டு வைத்து விட்டார்களோ என்ற அச்சம்தான் முதலில் எனக்குத் தோன்றியது. நான் பார்க்கவில்லை என்ன விசயம் என்று கேட்டேன். புஷ்சை செருப்பால் அடித்து விட்டார்கள் என்று கூறினார். ஆச்சரியமாக இருந்தது! உடனே என்னுடைய குழந்தைகளை பேருந்தில் இருந்த மற்றொரு நன்பரிடம் அழைத்துச் செல்லச் சொல்லி விட்டு. தொலைபேசியில் அழைத்த நன்பர் வீட்டுக்குச் சென்றால், அந்த வீடே ஒரே குதுகலமாக இருந்தது. அப்போதுதான் மீண்டும் சன் நியூஸ் தொலைக்காட்சியில் ஜார்ஜ் புஷ் செருப்படி பட்ட காட்சியை மீண்டும், மீண்டும் காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த காட்சி குறித்து எனக்கு மட்டுமல்ல! உலகம் முழுவதற்கும் சில மணித்துளிகளில் எஸ்.எம்.எஸ். - செல்பேசி என்று பரஸ்பரம் பரிமாறிக் கொண்டதைத்தான் காண முடிந்தது! ஏகாதிபத்திய எதிர்ப்பின் - யுத்த வெறியன் மீதிருந்த எதிர்ப்புணர்வு எப்படியெல்லாம் வெளிப்படும் என்பதை இந்த காட்சி நன்கு புலப்படுத்தியது.!

உலகிலேயே செருப்படி வாங்கிய முதல் அமெரிக்க ஜனாதிபதி என்கிற சிறப்புக்குரிய தகுதியை பெற்றிருக்கிறார் ஜார்ஜ் புஷ். வெள்ளை மாளிகையில் இருந்து இன்னும் ஒரு மாதத்தில் வெளியேறப் போகும் இந்த பிணம் திண்ணி கழுகிற்கு இந்த செருப்படி வழியனுப்பு நிகழ்ச்சியை ஈராக் இளம் பத்திரிகையாளர் வழங்கி கெளரவித்திருக்கிறார்.

நேற்யை தினம் திடீரென்று - முன்னறிவிப்பு ஏதுமின்றி ஈராக்கிற்கு இறுதி யாத்திரை செய்திருக்கிறார் புஷ். ஈராக்கில் அமைதியை நிலைநாட்டுவதற்காகத்தான் தான் அந்த நாட்டின் மீது போர் தொடுத்ததாக கூறிய புஷ், ஈராக்கில் அமெரிக்க சேவகம் புரியும் அமெரிக்க போர் வீரர்களிடம் (வெறியர்களிடம்) அவர்களது வீரப்பிரதாபங்களை - தியாகங்களை! புகழ்ந்த புஷ் பின்னர். அந்நாட்டு பொம்மை பிரதமர் நூரி அல் மலிக்கியுடன் (Nuri al-Maடமைi) ஒரு சிறிய அறையில் மிகுந்த பாதுகாப்புக்கிடையே பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பின் போதுதான் இந்த வரலாற்று புகழ் மிக்க செருப்படியை ஈராக்கின் பாக்தாத்திய தொலைக்காட்சி ரிப்போர்ட்டர் முன்டாசிர் அல்-சைடி (Muntazir al-Zaidi) புஷ் பேசிக் கொண்டிருக்கும் போது திடீரென எழுந்து தனது காலனிகளை (shoes) கழற்றி ஜார்ஜ் புஷ்யை நோக்கி வீசினார். அந்த தாக்குதலில் தமிழ் வில்லன் நடிகர் நம்பியார் போல டபாய்ந்து (சுதாரித்து) விட்டார் புஷ். அடுத்த சில மணித்துளிகளில் மீண்டும் இன்னொரு காலனியையும் தூக்கி வீசி அந்த இளம் (புரட்சிகர) பத்திரிகையாளர், "இதுதான் உனக்கு வழியனுப்பு முத்தம், நாய்! நாய்!" என்று கம்பீரமாக முழக்கமிட்டார். அந்த இரண்டு செருப்படிகலும் ஜார்ஜ் புஷ் மீது படாவிட்டாலும் அது அமெரிக்க மற்றும் ஈராக் கொடிகளை முத்தமிட்டுச் சென்றது.





உடனடியாக அந்த வாலிபரை நாயின் காவற்படைகள் அப்படியே அமுக்கி அலாக்காக தூக்கிச் சென்றன.

இருப்பினும் இந்த செருப்படிபட்ட மானங்கெட்ட புஷ், தொடர்ந்து உரையாற்றுகையில் அது மக்களை திசை திருப்பும் செயல் என்று கூறிவிட்டு, இதற்கெல்லாம் தான் அசரப்போவதில்லை என்று உரையாற்றினார்.

இந்த காட்சியைப் பார்த்த உலக மக்கள் ஆனந்த பெரு வெள்ளத்தில் மிதந்த காட்சியைப் பார்க்க முடிந்தது. இருக்காதா? இந்த குட்டி நாய் (ஜார்ஜ் புஷ்) தன் வீட்டில் உள்ள நாய்க்கு இந்தியா என்று செல்லமாக பெயர் வைத்ததாம்!

அது மட்டுமா? இந்த ரத்தம் குடிக்கும் ஓநாய் ஆப்கானிஸ்தானையும், ஈராக்கையும், பாலஸ்தீனத்தையும் எப்படியெல்லாம் வேட்டையாடியது? ஈராக்கில் மட்டும் 30 லட்சம் மக்கள் இடம் பெயர்ந்து அண்டை நாடுகளில் குடிபெயர்ந்துள்ளனர். ஐந்த லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் உயிர்களை பலிகொண்டதோடு 15 லட்சம் ஈராக் மக்களின் உயிர்களை பறித்ததோடு ஒரு நாட்டின் தாய் மக்களை சியா, ஷன்னி, குர்து என்று பிரிவினையை தூண்டி அம்மகளுக்குள்ளேயே மோதலை உருவாக்கி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கும் சர்வதேச கிரிமினல் ஜார்ஜ் புஷ்ஷுக்கு செருப்படி கொடுத்து வழியனுப்பாமல் வேறு எதைக் கொடுத்து வழியனுப்புவார்கள்?

உலக நாடுகளை தனது அரசியல் ஆதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு தற்போது பயங்கரவாதத்திற்கு எதிரான உலகலாவிய போர் என்ற பெயரில் தற்போது ஈராக்கிற்கு அடுத்து ஈரானையும், அடுத்து சிறியாவையும், பாகிஸ்தான் மீதும் இலக்கு வைத்து செயல்படும் அமெரிக்கா, கியூபா, வடகொரியா, சிறியா போன்ற நாடுகளை முரட்டு நாடுகள் என்று பெயரிட்டு உலக மக்களின் எதிரிகயாக சித்தரிப்பதோடு, சீனாவில் மனித உரிமைகள் மீறப்படுகின்றன என்று பொய்யை - அவதூறை பரப்பி அரசியல் ஆதாயம் தேடிக் கொண்டிருக்கிறது.

இவர்களது ஏகாதிபத்திய நாடு பிடிக்கும் கொள்கைககளால் ஒரு புறம் மன நிறைவு கொள்ளும் இந்த போர் வெறியர்களின் நாடு தற்போது பொருளாதார திவால் பாதையில் சென்றுக் கொண்டிருக்கிறது. அந்நாட்டு மக்கள் தற்போது வீடிழந்து கடுங்குளிரில் வாடி வதங்கிக் கொண்டிருப்பதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் உலக நாடுகளை நாகரீக நாடகளாக மாற்றும் முயற்சியில் அமெரிக்கா தொடர்ந்து ஈடுபட்டால் செருப்படிதான் அதற்கு பரிசாக கிடைக்கும்!