January 31, 2009

அனானியின் பின்னூட்டத்திற்கு சந்திப்பின் கண்ணோட்டம்

At 2:19 PM, Anonymous said...
அதெல்லாம் கெடக்கட்டும்னா.. ..நீங்க பேப்பர் வாங்கறேளா..இந்த Srilanka issue வுக்காக ஒரு பையன் உயிர மாச்சுண்டதாதகவல் வர்றதே.. நீங்க சித்த என்னன்னு கேட்டு எழுதப்படாதா..நன்னாஇருக்கு போங்கோ..

------------------------------------------
இலங்கைத் தமிழர் பிரச்சனைக்காக தனது உயிரை மாய்த்துக் கொண்ட முத்துக்குரனின் செயல் கடும் வருத்தத்தை உண்டாக்கக்கூடிய ஒன்றே. எனினும், தனிநபரின் இத்தகைய உணர்ச்சிவயப்பட்ட முடிவு... மேலும் சில உணர்வுகளை கிளறிவிடப் பயன்படலாம்! முற்போக்கு விதை தூவப்பட்ட மண் என்று பெருமையடித்துக் கொள்ளும் தமிழகத்தில் இவ்வாறான அரசியல் தற்கொலைகளும் மூடப்பழக்கத்தின் ஒரு வடிவமாகவே கருதுகிறேன். அரசியல் ரீதியாக - தனது கருத்துக்கு ஆதரவாக மக்கள் எழாதபோது ஏற்படும் விரக்தி கலந்த - உணர்ச்சி இதனை நோக்கி தள்ளியதோ என்றே சிந்திக்கத் தோன்றுகிறது. கொள்கை ரீதியாகவும் - அரசியல் ரீதியாகவும் - தத்துவார்த்த ரீதியாகவும் விவாதங்கள் இல்லாதபோது வெறும் இனவாத உணர்ச்சி மட்டுமே மேலிடும். இத்துடன் தனிநபர் வழிபாடும் மேலோங்கியிருப்பதைதான் அவ்வப்போது நடைபெறும் இதுபோன்ற நிகழ்வுகள் காட்டுகின்றது. அடுத்து நம்முடைய கலர் கலரான அரசியல்வாதிகள் இலங்கை இனப் பிரச்சனைக்கு அரசியல் ரீதியான தீர்வினை ஒன்றுபட்ட குரலோடு முன்வைப்பதற்கு மாறாக, தங்களது இனவாத அடையாள அரசியலுக்கு தூபம் போடுவதைத்தான் தமிழகத்தில் பார்க்க முடிகிறது. இலங்கையில் இனவாத பிரச்சனை கொழுந்து விட்டு எரிகிறது என்றால் தமிழகத்தில் தங்களது அடையாள அரசியலின் நெருக்கடியின் மணம் வீசுவதைத்தான் பார்க்க முடிகிறது. எனவே இலங்கை தமிழ் மக்களின் அரசியல் - பொருளாதார - சமூகப் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக தனி ஈழம் என்று முழக்கம் வைப்பதும், அதற்கு பயங்கரவாதத்தையே தனது தொழிலாய் மாற்றிக் கொண்ட எல்.டி.டி.இ.தான் தலைமை தாங்கும் என்று அதனை ஆதரிப்பதும், மறைமுகமாக ஆதரிப்பதுமாகவும், அங்கு சிங்கள இனவாதம் பேசினால் நாங்கள் என்ன குறைந்தவர்களா? என்று தமிழ் இனவாதம் பேசுவதும்தான் நடைபெறுகிறது. ஆனால் இதே எல்.டி.டி.இ.தான் இசுலாமிய தமிழ் மக்களுக்கும், மலையக தமிழ் மக்களுக்கும் எதிராக நின்றது என்பது மட்டுமல்ல அம்மக்கைளுயம் வேட்டையாடிது. அத்துடன் சக போராளி அமைப்பின் தலைவர்களையும் வேட்டையாடி தனது பயங்கரவாத குணத்தை வெளிக்காட்டியது. இதில் ராஜுவ் படுகொலையும் - 14 பேர் உட்பட பத்மநாப கொலையையும் தமிழ் மண்ணில் அரங்கேற்றியவர்கள்தான் இந்த பயங்கரவாதிகள் என்பதையெல்லாம் மறந்து விட்டு இன்றைக்கு கரடி போல் கத்துவதால் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாது. சந்தடி சாக்கில் புரட்சிகர அமைப்புகள்கூட மிகவும் பக்குவமாக தமிழ் இன அடையாளத்தை முன்வைத்துக் கொள்கிறது. பார்ப்பனீயம் எல்லாம் பேசி... தனது அணிகளை புல்லரிக்க வைக்கிறது. இந்த விசயத்தில் இதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கான மாநில சுயாட்சியும் - இதில் அரசியல் - பொருளாதார - சமூக உரிமைகளை உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவுமான ஒரு அரசியல் தீர்வே பொருத்தமானது. இதனை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும். மேலும் இந்த போரில் தமிழ் மக்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளையும் உறுதியாக நிறைவேற்ற வேண்டும். எல்.டி.டி.இ. தொடர்ந்து தமிழ் மக்களின் ஆதரவை இழந்து... அம்மக்களை ஆயுத முனையில் கவசமாக முன்வைத்து செல்வதிலிருந்து தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும். மத்திய அரசு இவ்விசயத்தில் ராஜீய ரீதியில் தலையிட்டு - ஒரு அரசியல் தீர்விற்கான முன்முயற்சியை எடுத்திட வேண்டும். இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும். எனவே தற்போதைய சூழ்நிலையில் தமிழ் மக்கள் மீதான தாக்குதல் மிக அதிகமான அளவில் வெறியூட்டக்கூடிய முறையில் மிகைப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது. இதனை தமிழக அரசியல் கட்சிகள் திட்டமிட்டு செயலாற்றி வருகின்றன. இங்குள்ள தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கு முகம் கொடுக்க அலறும் இந்த அரசியல் கட்சிகள்தான் இத்தகைய போதையூட்டும் வெறித்தனத்திற்கு தூபங்களைப் போட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதில் தங்களையும் இணைத்துக் கொண்டு குளிர் காய்பவர்கள் பலரும் உள்ளனர்...

35 comments:

Anonymous said...

உங்களை கேள்வி கேட்ட அனானியார் செந்தழல் ரவி இல்லை

முத்துகுமரன் said...

//. இந்திய அரசு வல்லாதிக்க மனப்பான்மையுடன் செயல்படுவதாக குற்றம் சுமத்துவது இலங்கையின் சுதந்திரத்தையும் - மக்களையும் கொச்சைப்படுத்துவதாகவே முடியும்.//

உங்களுக்கு எப்போது லங்க ரத்னா விருது கொடுத்தார்கள் சந்திப்பு. அதிமுகவுடன் கூட்டணி தான் வைத்திருக்கிறீர்கள் என்று எண்ணி இருந்தும். இப்போதுதான் புரிகிறது கூட்டுண்ணியாகி விட்டீர்கள் என்று.

ஈழத்தமிழரின் அரசியல், தத்துவம்,சுயௌரிமை எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்து விட்டு எப்படி உங்களை இன்னமும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உங்க சிவப்புச்சட்டையில் நந்திகிராம ரத்தமும் கலந்திருப்பதை மறந்து விட்டீர்கள் போலும். நீர்த்துப் போன ஒரு சிந்தனையாளனாகாத்தான் உங்களை காணமுடிகிறது. தனிப்ப்பட்ட முறையில் அதற்காக வருத்தப்படவும் செய்கிறேன்.

விடுதலை said...

இதுவரை ஈழ தமிழ் மக்களின் விடுதலைக்காக தற்கொலை செய்துகொண்டவர்கள் சாதித்தது என்ன? புரட்சி பற்றிய அறியாமையும் விடுதலைக்கான பாதையின் தெளிவின்மையும் எம் தமிழ் இன சகோதரர்களின் உயிரை அநியாயமாக காவு வாங்கி இருக்கிறது. என்பதே என்கருத்து முத்துகுமரனின் மரணம் தோல்வி அடைந்த சித்தாந்தத்தின் பின்னடைவு.

Anonymous said...

'இந்த விசயத்தில் இதற்கான தீர்வு என்பது ஒன்றுபட்ட இலங்கைக்குள் அதிக அதிகாரங்களைக் கொண்ட தமிழ் மக்களுக்கான மாநில சுயாட்சியும் - இதில் அரசியல் - பொருளாதார - சமூக உரிமைகளை உள்ளடக்கியதாகவும் விரிவானதாகவுமான ஒரு அரசியல் தீர்வே பொருத்தமானது. இதனை இலங்கை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும்.'

இதை இஸ்ரேலுக்கு சொல்வீர்களா?
அங்கு பாலஸ்தீனம் என்ற நாடு
வேண்டுமென்பீர்கள்.
இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதி ,பாலஸ்தீனியருக்கு ஒரு நீதி
என்பதுதான் உங்கள் கட்சியின்
சித்தாந்தம்.பாலஸ்தீனம் வாழ்க,
ஈழம் ஒழிக என்பதுதான் உங்கள்
கட்சி சொல்வது. காசாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரேலை எதிர்த்து நீங்கள் காட்டும் ஆவேசத்தில்
நூறில் ஒரு பங்கு கூட ஈழத்தமிழர்
பிரச்சினையில் இல்லை.ஏன்?.

Anonymous said...

விடுதலை(கள்) தெளிவாகவே இருக்கிறார்கள்.அவர்களின் கட்சி
அப்படி.பாலஸ்தீனம் என்றால்
வாய் திறந்து வசனம் பேசும்,
இஸ்ரேலுடன் உறவு கூடாது
என்று சொல்லும்.ஈழம் என்றால்
நமக்கு உபதேசம் செய்யும், போதிக்கும். மகிந்த பேசாமல் சிபிஐ(எம்)க் கட்சிக்கே ஒட்டுமொத்தமாக
லங்காரத்னா விருது தரலாம்.

சந்திப்பு said...

ழத்தமிழரின் அரசியல், தத்துவம்,சுயௌரிமை எல்லாவற்றையும் முற்றாக நிராகரித்து விட்டு எப்படி உங்களை இன்னமும் ஒரு கம்யூனிஸ்ட் என்று சொல்லிக்கொள்கிறீர்கள். உங்க சிவப்புச்சட்டையில் நந்திகிராம ரத்தமும் கலந்திருப்பதை மறந்து விட்டீர்கள் போலும். நீர்த்துப் போன ஒரு சிந்தனையாளனாகாத்தான் உங்களை காணமுடிகிறது. தனிப்ப்பட்ட முறையில் அதற்காக வருத்தப்படவும் செய்கிறேன்.

அன்புள்ள முத்துக்குமரன் வணக்கம். நீண்ட நாட்களுக்கு பின்பு நாம் இப்படி சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. நீங்கள் சுட்டிக்காட்டியுள்ளடி ஈழத் தமிழரின் அரசியல், சுயஉரிமை போன்றவற்றை நான் எங்குமே நிராகரிக்கவில்லை! மாறாக ஈழத் தமிழர்களின் வாழ்வில் புது வெளிச்சத்தை பாய்ச்சுவதற்கான தேடலை நோக்கித்தான் எனது பதிவும் அமைந்துள்ளது. நோக்கங்கள் வேறு வேறாக இருக்கலாம் அதில் எது சரி என்று வாதிக்கலாம் அதில் தவறில்லை. அதற்காக நொந்துக் கொள்வதில் எந்தப் பயனும் விளையப்போவதில்லை - ஆத்ம திருப்தியை விட.

சரி கிடக்கட்டும். இலங்கையில் இன்றைக்கு நடக்கும் பிரச்சனை என்ன? பெருவாரியான தமிழ் மக்களின் ஆதரவை இழந்த புலிகளின் பயங்கரவாத நடவடிக்கையால் இதுவரையில் அம்க்களுக்கு அரசியல் தீர்வு எட்டப்படுவது தொடர்ந்து தள்ளிப் போய்க்கொண்டே வருகிறது. மேலும் புலிகள் அமைப்பு சகோதர அமைப்புகளை மட்டுமல்ல தனக்கு உள்ளேயே போட்டியாக வளரும் தலைவர்களைக் கூட தொடர்ந்து வேட்டையாடியதை இந்த உலகம் அறியும் - ஈழ மக்கள் அறிவார்கள். இந்த நிலையில் மக்களுக்கான ஒரு தீர்வு எட்டப்பட வேண்டும் என்றால் புலிகள் அரசியல் தீர்வுக்கான ஒத்துழைப்பை நல்க வேண்டும். இதில் அங்குள்ள மற்ற அமைப்புகளுடன் இணைந்து ஒரு உறுதியான தீர்வினை வருவதற்கு முயற்சிக்க வேண்டும். மாறாக, புலிகள் தொடர்ந்து ஆயுத மோதலை கொண்டுச் செல்லும் சூழ்நிலையில் - இலங்கை அரசிற்கு அந்நாட்டின் பயங்கரவாத அமைப்பான புலிகளை முறியடிப்பதைத் தவிர வேறு வழியென்ன? அதே சமயம் புலிகளை முறியடிக்கிறோம் என்ற பெயரால் அங்கு அப்பாவி தமிழ் மக்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படுவதற்கு வழிவகுக்கக் கூடாது? அத்துடன் புலிகளும் அப்பாவி ஈழ தமிழ் மக்ககளை தனது கேடயமாக பயன்படுத்துவதால் ஏற்படும் விளைவுகளுக்கு அந்த அமைப்புதான் பொறுப்பு. அங்கிருந்து வெளியேற நினைக்கும் தமிழ் மக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதற்கு புலிகளுக்கு என்ன உரிமை உள்ளது? என்பதுதான் கேள்வி! மேலும் புலிகளின் ஈழ கனவு என்பது வெறும் முதலாளித்துவ கோரிக்கையே அங்கு ஒன்றும் அவர்கள் சோசலிச அரசை கொண்டு வரப்போவதும் இல்லை. அது அவர்களின் நோக்கமும் அல்ல. எனவே பிரச்சனைக்கு அரசியல் தீர்வை எட்டுவதற்கு புலிகள் பெரும் தடையாக உள்ளனர் என்பதுதான் அங்குள்ள பெரும்பாலான தமிழ் அமைப்புகளின் குற்றச்சாட்டு என்பதையெல்லாம் நீங்கள் கண்ணை மூடிக் கொண்டு உணர்வு அடிப்படையில் பார்க்கக்கூடாது. எனவேதான் அப்பாவி தமிழ் மக்களின் உயிர், வீடு, சுகாதாரம், உணவு உட்பட்ட பாதுகாப்பை இலங்கை அரசும் உத்திரவாதப்படுத்த வேண்டும். தற்போது கிழக்கு மாகாணத்தில் தமிழ் மக்களின் அரசு அமைந்துள்ளது. அங்குள்ள மக்களுக்கு தற்போதைய இலங்கை அரசுடன் முரண்பாடுகள் இருந்தாலும் அதனை அரசியல் ரீதியாக தீர்ப்பதற்கு தொடர் போராட்டங்கள் ஒன்றினைக்கப்பட வேண்டும். அதற்காக இலங்கை அரசியல் பிரச்சனையை காரணம் காட்டி தமிழகத்தில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சனையை பின்னுக்குத் தள்ளும் மோசடிதான் இங்கே நடைபெறுகிறது. என்பதையும் கவனத்தில் கொள்வது நல்லது நன்பரே! தற்போதைய நெருக்கடியில் புலிகள் முன்வைக்கும் அரசியல் தீர்வு என்ன? அவர்கள் தொடர்ந்து முறியடிக்கப்பட்டால் கூட நான் ஆயுதத்தை கீழே போடாமல் செத்துப் போவேன் என்பது ஒரு தீர்வா? அல்லது உடன் இருக்கும் மக்களையும் சேர்த்து கொல்லப்படுவதற்கு வழிவகுப்பேன் என்பதுதான் தீர்வா? என்பதையும் அவர்கள் விளக்க வேண்டும். மக்கள் ஆதரவை இழந்த நிலையில் அவர்களின் ஆயுதப் போராட்டம் வெறும் வரட்டு சித்தாந்தமாகிப்போனது... அதில் உங்களைப் போன்றவர்களின் சிந்தனை சிக்கலில் மாட்டிக் கொண்டு தவிப்பதைத்தான் என்னால் உணர முடிகிறது.

விடுதலை said...

அப்படியானால் அனானி கூட தற்கொலை செய்து கொள்ளலாமே அதன் மூலம் விரைவாக இலக்கை அடையலாமே .

நாங்கள் தெளிவாக இருப்பதாக சொன்னதற்கு மிக்க நன்றி அனானி

சந்திப்பு said...


இதை இஸ்ரேலுக்கு சொல்வீர்களா?
அங்கு பாலஸ்தீனம் என்ற நாடு
வேண்டுமென்பீர்கள்.
இலங்கைத் தமிழருக்கு ஒரு நீதி ,பாலஸ்தீனியருக்கு ஒரு நீதி
என்பதுதான் உங்கள் கட்சியின்
சித்தாந்தம்.பாலஸ்தீனம் வாழ்க,
ஈழம் ஒழிக என்பதுதான் உங்கள்
கட்சி சொல்வது. காசாவில் குண்டுமழை பொழியும் இஸ்ரேலை எதிர்த்து நீங்கள் காட்டும் ஆவேசத்தில்
நூறில் ஒரு பங்கு கூட ஈழத்தமிழர்
பிரச்சினையில் இல்லை.ஏன்?.


அனானி நன்பரே பாலஸ்தீனப் பிரச்சனையின் வரலாறு வேறு. இலங்கை இனப்பிரச்சனையின் வரலாறு வேறு. இரண்டையும் போட்டு குழப்பிக் கொள்ள வேண்டாம். இலங்கை இனப் பிரச்சனை ஒரே நாட்டிற்குள் இரண்டு பெரும் இனவாத முதலாளிகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட ஒன்று. அங்குள்ள வர்க்கப் போராட்டத்தை - சாதியத்திற்கு எதிரான போராட்டத்தை, சோசலிசத்திற்கு ஆதரவான இடதுசாரிப்போராட்டத்தை திசை திருப்புவதற்காக திட்டமிட்டு உருவாக்கப்பட்டதே இலங்கை பேரினவாதப் பிரச்சனை.

ஆனால், பாலஸ்தீனம் என்ற நாட்டை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் துணையோடு யூதர்களின் நாடாக இஸ்ரேலை உருவாக்கியதும். அத்துடன் நிற்காமல் தொடர்ந்து முழு பாலஸ்தீனத்தையும் விழுங்குவதற்கான சதியையும் - சொந்த மண்ணிற்குள்ளேயே அந்த மக்களை இஸ்ரேல் கொன்றுக் குவிப்பதும் அதற்கு அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் ஆசியும் இருப்பதும். அமெரிக்க ஏகாதிபத்தியமே நேரடியாக தலையிட்டு அதனை முன்னெடுத்துச் செல்வதற்கும் இதற்கும் வித்தியாசம் உண்டு. எனவே மார்க்சிஸ்ட்டுகளுக்கு மக்கள் எங்கு பாதிக்கப்பட்டாலும் - அதற்காக குரல் கொடுப்பவர்கள்தான். ஆனால் ஒரே வித்தியாசம் நீங்கள் எதிர்பார்ப்பது போல் பாசிசத்திற்கும் - பயங்கரவாதத்திற்கும் வக்காலத்து வாங்க வேண்டும் என்று நினைப்பதுதான் புரட்சிகரமானது என்ற மாயையில் இருப்பதற்கு நாங்கள் இரையாக முடியாது. தமிழகத்தில் புலிகளை ஆதரித்து தமிழ் பெரும் முதலாளித்துவ கட்சிகளே இன்றைக்கு புலிகளுக்காக வாதட முன்வரவில்லை என்பதிலிருந்தாவது உண்மையை தேடலாமே! மேலும் தற்போதைய புலி ஆதரவு என்பது அரசியல் பிழைப்புவாதமே! எனவே மார்க்சிஸ்ட்டுகளை தூற்றுகிறோம் என்ற பெயரில் புதைகுழிக்குள் மூழ்கிப்போவாதீர்கள்.

Anonymous said...

தோழர் சந்திப்பு அவர்களுக்கு வணக்கம்,

மிகச் செறிவானதும் உணர்சிகளுக்கு அடிமைப்படாத யதார்த பார்வைகொண்டதுமான உங்கள் கண்ணோட்டத்தை படித்தேன். காலத்தின் கட்டாயமான இக்கண்ணோட்டம் அனைத்து தரப்பு மக்களிடமும் சென்று சேரவேண்டுமென்பது எனது விருப்பம். ஆள்கூட்ட அரசியலுக்கு இடதுசாரி கட்சிகளும் உள்ளாகும் போது சி.பி.எம் மட்டுமே காலாகாலங்களில் சரியான அரசியல் நிலைபாடு எடுத்து வந்துள்ளது என்பதை இது தெளிவாக்குகிறது.

ம‌.க.இ.க நண்பர்கள் முத்துகுமாறின் இறுதி ஊர்வலத்தை பொது மக்கள் மத்தியிலும் இணையதள குழும விவாதங்களிலும் ஒருவிதமாகவும், தங்களின் பு.ஜ.இதழில் அறிவியல் போர்வை போர்த்தி வேறுவிதமாகவும் முன்வைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் சீர்குலைவு வாதிகளே என்பதை தங்களின் செயல் பாடுகள் மூலமும் முன்னுக்கு பின் முரணான கட்டுரைகள், பதிவுகள் மூலமும் உலகுக்குணர்த்துகிறார்கள்.

ஒருவர் கூறுகிறார் ‍‍‍".....நான் மிகவும் உணர்சி வசப்பட்ட நிலையிலிருந்ததால் அதை குறிப்பிட முடிய வில்லை" (விடுபட்ட தகவலை)என்று. கம்யூனிசத்தை இன்ஸ்டன்ட் ரெடி மிக்ஸ் புரட்சி மூலம் உருவாக்கி தருவதாக இணையதளங்களில் கெட்டவார்த்தைகளால் முழங்கிவருபவர்கள் உண்மையில் "ஹிஸ்டீரியா" நோய் பாதித்தவர்களாக்த்தான் இருக்கிறார்கள்.

பு.ஜ. கட்டுரையாளர் "பழைய புலி" திரு.இரயாகரன் கூறியதை கணக்கிலெடுத்தால் ம.க.இ.க தோழர்களைத் தான் முதலில் ஒரு சிறந்த மனநோய் மருத்துவரை காட்டி சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிற முடிவுக்கு அவர்களின் கேள்விகள், பொருத்தமற்ற ஆக்ரோஷம், கட்டுரைகள், பதிவுகள், வசவுகள் போன்றவற்றை படிக்கும் எவரும் வரமுடியும்.

தோழமையுடன்
Baappu

Unknown said...

iyya eelam engalin uurimai,, angeye vazhnthavarkalukku mattume purinthu kolla mudintha unmai,,,
thayavu seithu ungal arasiyal pechukkalal engal porattathai avamanapaduthathirkal

Unknown said...

iyya selvaperumal,, kathinal ketta seithikalai vaithu eelathai patri
ethaiyavathu sollikondrukathirkal,,
pulikalukku aatharavu illai endru umakku epdi therium athai nangal than solla vendum,,, neeraka karpanaiyai vazharthu kollatheerum,,, ootukkaka ethaim pesu ungalukkelam epdi purium engal porattamum, athan valium,,,

Unknown said...

iyya selvaperumal,, kathinal ketta seithikalai vaithu eelathai patri
ethaiyavathu sollikondrukathirkal,,
pulikalukku aatharavu illai endru umakku epdi therium athai nangal than solla vendum,,, neeraka karpanaiyai vazharthu kollatheerum,,, ootukkaka ethaim pesu ungalukkelam epdi purium engal porattamum, athan valium,,,

vimalavidya said...

dear santhippu sir, very correctly u said abt srilanka issue.many people think that if any body say anything abt the real truth of srilanka issue they will be considered anti tamilian.Such a atmosphere has been created by the LTTE supporters.In this matter jayalalitha madam is bold than the CPM party.Congress opposing LTTE.DMK not supporting LTTE. CPI-M opposing LTTE VIEWS..ADMK OPPOSING LTTE actions..here only few openly supporting LTTE..Will we support spiliting our country into pieces??No...It is applicable to SRILANKA ALSO.you rightly said that within united SRILANKA Tamilian should get equalities in all matters with the pressures of the world countries..I support your argument sir---Selvapriyan

hariharan said...

தற்போதுள்ள சூழ்னிலையில் எந்தவொரு நாட்டிலும் ஆயுதப்போராட்டத்தினால் விடுதலையோ அல்லது புரட்சியோ நடத்திவிடமுடியாது.ஈழத்தமிழ் மக்களுக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வுகாண இந்திய அரசு முயற்சியெடுக்கவேண்டும்.அதற்காக தமிழகத்தில் எந்தவொரு அரசியல் இயக்கமும் இந்திய அரசுக்கு நெருக்குதல் தரவில்லை.இந்திய அரசு இலங்கை பிரச்சனையை தீர்கவேண்டுமானால் தமிழகமக்கள் மட்டுமல்லாது அனைத்து இந்தியமக்களின் ஒத்துழைப்பை நல்கவேண்டியுள்ளது.

Anonymous said...

ஹமாஸ், மற்றும் PLO வன்முறையில் ஈடுபட்டதேயில்லையா, அப்பாவிகளை கொன்றதேயில்லையா?அவர்களை ஏற்கும்,நீங்கள் புலிகளை முற்றிலுமாக நிராகரித்து இலங்கை அரசினை ஆதரிக்கிறீர்கள்.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்கள்,
பேரினவாதத்தின் விளைவுகள் இவைகளையெல்லாம் கருத்தில்
கொள்ளாமல் கிளிப்பிள்ளை போல்
கட்சி சொல்லிக் கொடுத்ததை பேசுகிறீர்கள். உடனடியாக போர்
நிறுத்தம் தேவை.புலிகளுடான
போரில் பாதிக்கப்படுவது அப்பாவி
பொதுமக்கள்.48 மணி நேர நிறுத்தம்
என்பது கண் துடைப்பு.தமிழருக்கு
அங்கு பாதுகாப்பில்லை.இலங்கை அரசின் மனித உரிமை மீறல்களால்
அதிகம் பாதிக்கப்படுவது அவர்கள்தான். கிழக்கிலும் அதே
நிலைதான்.கருணாவின் அரசு பொம்மை அரசு.அது இலங்கை அரசின்
கைக்கூலி அரசு. இதையெல்லாம் உங்களுக்கு சொல்லித்தான் தெரியவேண்டுமா?. தீக்கதிர் தவிர
வேறு எதையும் படிப்பதில்லையா.
உங்கள் கட்சியின் Peoples Democracy
ஏட்டிற்கு இலங்கைத் தமிழ்ர் பிரச்சினையை விட பாலஸ்தீனம்தான்
முக்கியம். உண்மை எதுவாக இருந்தாலும் புலிகள் ஒழியட்டும்,தமிழர்கள்
இருந்தால் என்ன செத்தால் என்ன
என்ற நிலையை உங்கள் கட்சி
எடுத்து விட்டது.சிபிஐ பரவாயில்லை.
காங்கிரஸ்,சிபிஐ(எம்) இரண்டும்
இதில் ஒன்றாக உள்ளன.

Anonymous said...

சர்வதேசியத்தை கைவிட்டா ஈழப்போராட்டத்தை அணுக வேண்டும்!?



ஈழத் தமிழ் மக்களின் அவலம் இலங்கை இந்திய தமிழர்கள் மத்தியில், கொந்தளிப்பையும் உணர்ச்சியையும் உருவாக்கியுள்ளது. தொடரும் இன அழிப்பும், அதற்குள் மக்கள் பலியிடப்படல் என்ற எல்லைக்குள் அரசியல் செய்யப்படுகின்றது.
நீ தமிழன் என்றால், பாசிச புலியை ஆதரி என்று மிரட்டப்படுகின்றோம். இல்லையென்றால், பேரினவாத கைக்கூலிகள் என்று முத்திரை குத்தப்படுகின்றோம். சர்வதேசியத்தை கைவிட்டு, வர்க்கம் கடந்த தமிழனாக மாறி புலிப் பாசிசத்தை ஆதரிக்க மறுக்கும் நாம், தமிழ்நாட்டு சர்வதேசியவாதிகளிடம் இருந்து எமக்கான ஊக்கத்தை எதிர்பார்த்தோம். ஆனால் அங்கிருந்து அவை வெளிப்படுவதற்கு பதில்;, தமிழன் என்ற அடையாள உணர்வூடாக புலியை விமர்சிக்காத கருத்துக்களாக வெளிவருகின்றது. எமக்கோ கிடைப்பது நெத்தியடிதான்.

இன்றைய நிலைக்கு வலதுசாரிய பாசிசப் புலிகள் காரணம் என்பதும், அவர்கள் தம் தோல்வியை தடுக்க மக்களை பணயமாக வைத்து பலியிடுகின்றனர் என்பதும் வெளிப்படையான உண்மை.

இது இலங்கை அரசின் பொய்ப் பிரச்சாரமோ, இந்திய ஆளும் வர்க்கங்கள் முதல் பார்ப்பனியம் வரை இட்டுக்கட்டியவையல்ல. அதை அவர்கள் தமக்கு சாதகமாக எடுத்துச் சொல்வதால், ஒரு உண்மை பொய்யாகிவிடாது.

மாபெரும் உண்மைகளைக் கூட, கொச்சைப்படுத்திவிட முடியும். இலங்கையில் சர்வதேசியத்தை முன்நிறுத்தும் எம் நிலையைக் கொச்சைப்படுத்தி, அதை வெறும் புலம்பலாக மாற்றிவிடுகின்ற அளவுக்கு அவை மாறியிருப்பதை நாம் உணருகின்றோம்.

இந்தியா வை.கோ முதல் பெரியாரிஸ்ட்டுகள் வரை, புலிகளை முன்னிறுத்தியும், புலிகளின் பாசிச பிரச்சாரத்தை பொதுஅரசியல் அரங்கில் முன்னிறுத்துகின்ற சூழலில், சர்வதேசவாதிகள் இதற்கு மாறாக தம் அரசியல் நிலைப்பாட்டை முன்னிலைப்படுத்த வேண்டும்.

பொதுவான மையக் கோசத்தில், இந்திய ஆளும் வர்க்கம், இலங்கை ஆளும் வர்க்கம், இலங்கை தமிழ் மக்களுக்கு பிரிந்துசெல்லும் சுயநிர்ணய உரிமை என்பதை தெளிவாகவே, வேறுபடுத்தி நிற்கின்றனர். பலரும் தத்தம் கோசங்களுடன் களத்தில் இறங்குகின்றனர்.

ஆனால் புலிகள் விடையத்தில் இதை தெளிவுபடுத்தவில்லை. வேறுபடுத்தவில்லை. நடப்பது தமிழ் மக்களின் தேசிய விடுதலைப் போராட்டமா என்ற விடையத்தில், எந்த அரசியல் கோசத்தையும் உயர்த்தாதது ஏன்;? வை.கோ முதல் சர்வதேசியம் வரை, ஒரே பாதையில் நடப்பது போல் பாசாங்கு செய்வது அதிரவைக்கின்றது. முத்துக்குமாரன் அங்குமிங்குமாக தன் கருத்துக்களை அள்ளித்தெளிப்பதும், இதனால் தான்.

ஈழத்து தமிழ்மக்கள் வெறுமனே பேரினவாதிகளிடம் இருந்து மட்டும் ஒடுக்குமுறையைச் சந்திக்கவில்லை. மாறாக தமிழ் மக்களுக்காக போராடுவதாக கூறும் புலிகளிடமிருந்தும் தான். இதை தமிழக மக்கள் அறியக் கூடாதா!? அறிய வைப்பது சர்வதேசியத்தின் கடமையல்லவா!?

இலங்கை - இந்திய எதிரிகள் எதை தம் ஆயுதமாக பயன்படுத்துகின்றனர்? பாசிசப் புலிகளின் நடத்தைகளையும், தேசிய விடுதலைப் போராட்டமல்லாத அதன் பிற்போக்கு கூறுகளையும் முன்னிலைப்படுத்தியே அதைப் பிரச்சாரம் செய்கின்றான். அதை முறியடிப்பது என்பது, அதை கண்ணை மூடிக்கொண்டு மறுப்பதல்ல. மாறாக அந்த பிரச்சாரத்தின் பின் உள்ள உண்மைகளைத் தெளிவுபடுத்தி, ஆளும் வர்க்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்துவது அவசியம். இந்த வகையில் மக்கள் விரோத புலிகளின் செயலை விமர்சிப்பது அவசியம். இதன் மூலம் தான் தமிழ்நாட்டு சமூகத்தை, இரண்டு தளத்தில் விழிப்புற வைக்கமுடியும்.

1. எதிரி தன் பின் அணிதிரட்டும் மக்களை, சரியான பக்கத்துக்கு கொண்டுவர முடியும். அதாவது எதிரியின் எதிரி விடும் தவறுகளையும், அதன் மக்கள் விரோதக் கூறுகளையும் சரியாக சுட்டிக்காட்டும் போது மக்கள் இதில் இருந்து விழிப்புறுகின்றனர்.


2. தவறுகளையே தேசியப் போராட்டமாக காட்டி, ஒரு பாசிசத்தை தேசியமாக சித்தரிப்பதை அனுமதிப்பது சர்வதேசியமல்ல. நடக்கும் மனித அவலம் மீதான போராட்ட ஆதரவுத்தளத்தில், பின் உள்ள உண்மையான மனித விரோதக் கூறுகளை அம்பலப்படுத்தி தனிமைப் படுத்துவதன் மூலம், போராடும் மக்கள் உண்மையான நிலைமையை சார்ந்து நிற்கமுடியும்.

இதைச் செய்யவில்லை. இந்த நிலையில் சர்வதேசவாதிகள், இலங்கை தமிழ் பாட்டாளி வர்க்கத்துககு; என்னத்தை கூற முனைகின்றீர்கள். எந்த வகையில் உதவுகின்றீர்கள். சிங்கள பாட்டாளி வர்க்கத்துக்கு எந்த அறைகூவலை விடுகின்றீர்கள்.

பொதுவான தளத்தில் ஏற்பட்ட தெளிவற்ற விலகல், சர்வதேசியவாதியத்தை ஆதரிக்கின்ற அல்லது அதனுடன் உள்ள உறுப்புகள் வெறும் இனவுணர்வாக மாறி நிற்பதை காண்கின்றோம். ஈழத்தைச் சேர்ந்த நாம் என்றுமே பயன்படுத்தாத 'சிங்களவன்" என்ற புலிகளின் மலிவான வர்க்க விரோத பொது அடையாளப்படுதல்களின் ஊடாக சிங்கள மக்களையே எதிராக நிறுத்திப் பார்க்கின்ற குறுந்தேசிய உணர்வுகள் சர்வதேசியத்தின் கருத்தாக வருகின்றது. சிங்கள ஆளும் வர்க்கம் வேறு, சிங்கள மக்கள் வேறு. இதுபோல் தமிழ் ஆளும் வர்க்கம் வேறு, தமிழ் மக்கள் வேறு. எந்த இடைவெளியுமற்ற அரசியல், மக்களுக்கு எதிரானது. தமிழன் என்று வர்க்கம் கடந்த பார்வைகள், தற்கொலை செய்த முத்துக்குமரன் மீதான 'வீரத்தமிழன்" என்ற மதிப்பீடுகள் எல்லாம் சர்வதேசிய வர்க்க எல்லைக்குள் நின்று பார்க்கத் தவறிவிடுகின்றது. அதுவோ புலியிசமாக மாறிவிடுகின்றது.

முத்துக்குமரன் தற்கொலை செய்யத் தூண்டிய கருத்தின் பின் அவனின் அறியாமையும் உள்ளது. அவன் தமிழினத்தை காப்;பாற்ற நம்பும் தலைமை எது? அவன் கூறுகின்றான் 'களத்தில் நிற்கும் தமிழீழ மக்களே, விடுதலைப் புலிகளே… அனைத்துக் கண்களும் இப்போது முல்லைத்தீவை நோக்கி. தாய்த் தமிழகம் உணர்வுபூர்வமாக உங்கள் பக்கம்தான் நிற்கிறது. வேறு ஏதாவது செய்ய வேண்டும் எனவும் விரும்புகிறது. ஆனால் என்ன செய்வது உங்களுக்கு அமைந்தது போன்ற உன்னத தலைவன் எங்களுக்கில்லையே… ஆனால், நம்பிக்கையை மட்டும் கைவிடாதீர்கள். இதுபோன்ற கையறுகாலங்கள்தான். தமிழகத்திலிருந்து அப்படி ஒருவர் இந்தக் காலத்தில் உருவாகலாம் அதுவரை, புலிகளின் கரங்களை பலப்படுத்துங்கள்." தமிழகம் உதவ தமிழீழம். இங்கு அவன் கோருவது இந்திய தலையீடு. அது தமிழனுக்கு சார்பாக. இப்படி அவன் நம்புகின்ற அரசியல் எல்லைக்குள்ளா?, சர்வதேசியவாதிகள் உள்ளனர்.

அவன் நம்பும் தலைமை ஈழத்தமிழினத்தை அழித்துவிட்டது. அது அவனுக்கு தெரியாமல் போயிருக்கின்றது. இப்படி தமிழ்நாட்டுக்கே தெரியாமல் போயிருக்கின்றது. இன்றைய தலைமுறைக்கு சர்வதேசியவாதிகள் இதை தெளிவுபடுத்தவில்லை என்பதுதான் இங்கு உண்மை.

அவன் நம்பும் தலைமை பத்தாயிரத்துககு; மேற்பட்ட தமிழர்களையே கொன்று குவித்துள்ளது. வடக்கில் இருந்து ஒரு லட்சம் முஸ்லீங்களை 24 மணி நேரத்தில் போட்டு இருந்த உடுப்பைத் தவிர, அனைத்தையும் உருவிய பின் வடக்கில் இருந்து துரத்தியவர்கள் தான். இன்றும் அவர்கள் அகதி முகாமில்தான் வாழ்கின்றனர். பள்ளிவாசல் முதல் பல கிராமங்களில் வாழ்ந்த அப்பாவி மக்களை நூற்றுக்கணக்கில் வெட்டியும் சுட்டும் கொன்றவர்கள். தமிழ் மக்களின் கருத்து எழுத்து பேச்சு சுதந்திரம் கொடுத்;தால் புலிகள் 'அரசியல் அனைதையாகிவிடுவார்கள்" என்று கூறி, அதை தமிழ் மக்களுக்கு மறுத்தவர்கள். போராட்டத்தின் ஜக்கியத்தை மறுத்து, அவர்களை கொன்றவர்கள். இப்படி பல. இன்று மக்களை தம் கேடயமாக்கி பலியிடுகின்றனர். இவன் எப்படி தமிழினத்தைக் காப்பாற்றும் தலைவனாவான்.

இப்படி நம்பும் அப்பாவித்தனம், அதை தெளிவுபடுத்த தவறிய அரசியல், பொது அரசியல் தளமாகி சர்வதேசிய அரசியல் அடிப்படையை ஆட்டுகின்றது. இப்படி தலைவனாக நம்பும் எல்லைக்குள் சமூகம். இதை விழிப்புற வைக்காமை அடிப்படையான அரசியல் தவறல்லவா!?

அங்கு புலிகள் ஈழமக்களின் விடுதலைப் போராட்டத்தை நடத்துவதாக நம்புவதும், தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் பற்றிய மதிப்பீடுகளும், தற்கொலைக்கான குறுகிய அரசியலாக உள்ளது. மரணத்தில் உள்ள நோக்கம் எவ்வளவுதான் நேர்மையாக இருந்தாலும்;, அவனின் அரசியல் அடிப்படை தெளிவற்றது. இந்த வகையில் தமிழ்நாட்டு இளைஞர்கள் உள்ளனர் என்பதும், இதை தெளிவுபடுத்தும் அரசியல் அவர்களின் உணர்வுக்குள் இல்லை என்பதும் வெளிப்படையான உண்மை. அதை சர்வதேசியம் தன் கடமையாக முன்னிலைப்படுத்தி செய்யவில்லை.

அவர்களின் சமூக இயலாமை தற்கொலையாகின்றது. மறுபக்கத்தில் இந்திய அரசுக்கு எதிரான மையக் கோசம் சிந்திக்கத் தூண்டுகின்றது. இதுவும் உண்மை. ஆனால் அவர்களை அணிதிரட்டி அரசியல் அடிப்படைகள், புலியிசம் பற்றிய மதிப்பீடுகள், தமிழ் தேசியம் பற்றிய பொதுக் கண்ணோட்டம், ஈழத்தில் தமிழ் தேசியப் போராட்டம் நடப்பதாக நம்பும் அறியாமை, எல்லாம் தெளிவற்ற விம்பமாகி, அவை எதிர்ப்புரட்சிகரமானதாக உள்ளது. புரட்சிகரமான நிலைப்பாட்டை ஈடுபடுத்த சர்வதேசியம் தவறும் போது, ஈழத்து பாட்டாளி வர்க்கத்தை மேலும் ஒடுக்கவே அவை உதவுகின்றது.

பத்திரிகை செய்திகளை ஆதாரமாக கொள்ளுதல்

நம்ப முடியாத அபத்தங்கள்;, ஆபாசங்கள். தமிழக பத்திரிகைகள் செய்திகள் என்பது, புனைவுகள், உணாச்சியூட்டல், திரித்தல் எல்லாம் கொண்ட ஒரு சாக்கடை. இந்தியா முஸ்லீம் மக்கள் பற்றியும், தாழ்த்தப்பட்ட மக்கள் பற்றியும், நக்சலைட்டுகளைப் பற்றியும், பயங்கரவாதம் பற்றியும் அவர்கள் எழுதுகின்ற பொய்யும் பித்தலாட்டமும் உலகறிந்தது. இந்திய தோழர்களுக்கு இதை நாம் சொல்ல வேண்டிய தேவையில்லை.

ஈழத்து விவாகாரத்தில் இந்த சாக்கடை செய்தியாகவில்லையா? புலி ஆதரவு, புலி எதிர்ப்பு என்ற இரண்டு தளத்திலும் இது உள்ளது. இதற்கு மேலாக சிங்கள பேரினவாதம், தமிழ் புலியிசம் கட்டிவிடுகின்ற பொய்களும் புரட்டுகளும். இதை அடிப்படையாக கொண்ட கருத்துகள், போராட்டங்கள் அற்பத்தமானவையாக அமைகின்றன.

உண்மையை தெளிவுபடுத்துவதற்கு பதில், இதன் பின் ஒடுவது பொதுவான கண்ணோட்டமாகிவிட்டது. எதார்த்த உண்மைக்கு பதில் பொய்யை விதைத்து, தமிழ் மக்களின் உண்மை நிலைமையை மழுங்கடிக்க முடியாது.

ஈழத்து மக்களின் உண்மை நிலை பற்றி அக்கறையின்றி, மக்களின் நிலையில் நின்று எல்லாவற்றையும் பார்த்தல் என்ற விடையத்தை மறுப்பதை நாம் எண்ணிப் பார்க்கமுடியாது. சர்வதேசியத்தின் எல்லையைக் கடந்து நாம் செல்லமுடியாது.

முத்துகுமரனின் மரணத்தை நாம் வறட்சியாக பார்க்கின்றோம்!

அப்படி நாம் பார்க்கவில்லை. அதன் பின்னுள்ள அரசியல் போக்கை, ஒரு அலையின் பின்னால் புலிப் பாசிசம் நியாயப்படுத்தப்பட்டு, அது பலப்படுத்தப்பட்டு, அதனூடாக எம் மக்களுக்கு நிகழும் பொது அழிவைப் பார்க்கின்றோம். சிங்கள பேரினவாதத்தின் கோரமான குண்டு வீச்சுக்குள், தமிழ் மக்களை பலியிடும் புலியிசத்தை நியாயப்படுத்தும், அரசியல் பொதுப்போக்கை பார்க்கின்றோம். இதுவா எம் வறட்சி.

நாம் வறட்சியாக பார்க்கின்றோம் என்பது, உணர்ச்சியின் பின்னால் ஒடுவதல்ல. எழுச்சிக்கு பின்னால் வால்பிடிப்பதல்ல. தமிழன் என்ற அடையாளத்தின் பின்னால் ஒடுவதல்ல.

ஈழத் தமிழ் பாட்டாளி வர்க்கம் என்ன செய்வது? இந்த தற்கொலையை மற்றவர்கள் பார்ப்பதில் இருந்து, எப்படி நீங்கள் வேறுபாடாக பார்க்கின்றீர்கள்?

முத்துக்குமாரன் வைத்த அறிக்கையில் எதில் முரண்படுகின்றீர்கள்? அதை எங்கே எப்படி விளங்கப்பபடுத்தியுள்ளீர்கள்?

இதைச் செய்யாமல் போற்றுவது, கூட்டத்துடன் கூட்டமாக நிற்பது சர்வதேசியமல்ல. இது ஈழத்து அரசியலை தீர்மானிக்கின்றது. வர்க்கம் கடந்த தேசியத்தை எமக்கு திணிக்கின்றது. புலிப் பாசிசத்தை எற்க நிர்பந்திக்கின்றது. அதையா நாம் செய்வது!? சொல்லுங்கள் தோழர்களே!

பி.இரயாகரன்
01.02.2009

சந்திப்பு said...


ஹமாஸ், மற்றும் PLO வன்முறையில் ஈடுபட்டதேயில்லையா, அப்பாவிகளை கொன்றதேயில்லையா?


அனானி நன்பரே! நீங்கள் இன்னும் பாலஸ்தீனப் பிரச்சனையில் ஹமாசின் தீவிரவாத நடவடிக்கைகளையும், யாசர் அராபத்தின் பி.எல்.ஓ. அமைப்பின் நடவடிக்கையும் வேறு வேறானது. மார்க்சிஸ்ட்டுகள் ஹமாசின் நடவடிக்கையை தொடர்ந்து விமர்சித்து வருகிறோம். அதே சமயம் ஹமாசின் வன்முறை நடவடிக்கை என்பது இஸ்ரேல் அரசிற்கு எதிரானது என்பதை மறக்க வேண்டாம். ஆனால் எல்.டி.டி.ஈ.யின் நடவடிக்கை எப்படிப்பட்டது என்பதை இலங்கையில் உள்ள தளங்களுக்குச் சென்று படித்துத் தெரிந்துக் கொள்ளுங்கள். நான் சொன்னால்தான் உங்களுக்கு ஜீரனிக்க முடியாது. மேலும் இலங்கையில் உள்ள ஈழத் தமிழகர்கள் நேற்றைய தினம் ஒரு பிரம்மாண்டமான பேரணியை நடத்தியுள்ளார்கள் எதற்குத் தெரியுமா? தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து காப்பாற்றுங்கள் என்று! எனவே உண்மையை தேட இனவாத கொள்கை கண்ணாடி உங்களுக்கு தடையாக இருந்தால் அதனை தூக்கி எறியுங்கள்.

சந்திப்பு said...


தற்போதுள்ள சூழ்னிலையில் எந்தவொரு நாட்டிலும் ஆயுதப்போராட்டத்தினால் விடுதலையோ அல்லது புரட்சியோ நடத்திவிடமுடியாது.


நன்றி சோசசுந்தரம். மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரே ஒரு வித்தியாசம் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அது பரந்துப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்க வேண்டும். மக்களால் தீர்மானிக்க வேண்டிய ஒரு நடவடிக்கையை அமைப்புகள் தீர்மானித்து விட முடியாது. நன்றி நன்பரே!

சந்திப்பு said...


ம‌.க.இ.க நண்பர்கள் முத்துகுமாறின் இறுதி ஊர்வலத்தை பொது மக்கள் மத்தியிலும் இணையதள குழும விவாதங்களிலும் ஒருவிதமாகவும், தங்களின் பு.ஜ.இதழில் அறிவியல் போர்வை போர்த்தி வேறுவிதமாகவும் முன்வைக்கிறார்கள். மீண்டும் மீண்டும் அவர்கள் சீர்குலைவு வாதிகளே என்பதை தங்களின் செயல் பாடுகள் மூலமும் முன்னுக்கு பின் முரணான கட்டுரைகள், பதிவுகள் மூலமும் உலகுக்குணர்த்துகிறார்கள்


நன்றி பாபு... நீலச் சாயம் வெளுத்துப் போச்சு... டும்... டும்... என்றுதான் அடிக்கத் தோன்றுகிறது. எவ்வளவுதான் அவர்கள் புரட்சிகர வெளிவேசம் போட்டாலும் உண்மை வெளிவந்தே தீரும். ம.க.இ.க. முத்துக்குமரணின் பிணத்தின் மீது முதலாளித்துவ கட்சிகளே அருவெருக்கும் அளவிற்கு தமிழ் இனவாத அரசியலை நடத்தியுள்ளது. இவர்கள் ஒரு அகில இந்திய அமைப்பாக இருந்தால் இந்த இனவாத நொடி சற்று மங்கலாக இருக்கலாம். ஆனால் இது தமிழகத்தில் குண்டுச் சட்டியில் குதிரை ஓட்டும் அமைப்பாக இருப்பதால்தான்... இனவாத அடையாளத்தை - அப்பட்டமாக பயன்படுத்துகிறது. இது குறித்து இவர்களது அமைப்பின் ஆதரவாளரான இரயாகரன் எழுப்பிய கேள்விகளே போதுமானது. வினவு - ம.க.இ.க. - புதிய ஜனநாயகம் ஒரு மாய்மால அரசியலை கட்டியெழுப்ப முனைகிறது. அதனிடத்தில் ஜனநாகம் இல்லை. மேலும் ஓட்டுக் கட்சிகள் என்று தொடர்ந்து மற்றவர்களைப் பார்த்து விமர்சிக்கும் இந்த புரட்சிவாதிகள் முத்துக்குமரனின் சவத்தை எங்கே அடக்கம் செய்வது என்பது குறித்து அவர்களுடன் ஜோதியில் கலந்துக் கொண்டு புரட்சிகர கருத்தை தெரிவித்தார்களாம்!... தங்கள் அணிகளை திருப்திப்படுத்த ஓட்டுக்கட்சி என்றெல்லாம் கூட முழக்கம் இட்டார்களாம்!... அடித்துப் புரள்கிற வெள்ளத்தில் நீந்தலாம் என்பது அழிவுக்குதான் வழிவகுக்கும் என்பது இந்த புரட்டர்களுக்கு தெரியாததல்ல!

Sempulam said...

தோழர்.த.பாண்டியனும், தோழர்.நல்லகண்ணுவும் ஏன் முத்துக்குமாரின் பிணத்தருகில் அமர்ந்திருந்தார்கள் என்பதையும் சொல்லிவிடுங்கள் இல்லையேல் அதை ஓட்டுப்ப்பொறுக்கும் செயல் என இந்த ம.க.இ.க கூட்டம் பிரச்சாரம் செய்யப்போகிறது.

சந்திப்பு said...

அன்புள்ள தோழர் செம்புலம் வணக்கம்.

அதிதீவிர சீர்குலைவு அமைப்பான ம.க.இ.க. எந்தவிதமான கொள்கைத் தெளிவும் இன்றி சி.பி.ஐ. - சி.பி.எம். இரண்டையும் ஓட்டுப் பொறுக்கிகள் என்று வர்ணித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இடதுசாரிகள் யார் என்பதை மக்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். இலங்கை விசயத்தில் சி.பி.ஐ. நிலைபாட்டிற்கும் - சி.பி.ஐ.(எம்) நிலைபாட்டிற்கும் வித்தியாசம் இருந்தாலும் ஒருவர் விசயத்தில் ஒருவர் தலையிடுவது இல்லை. அதனை கருத்து ரீதியாக நாம் பகிர்ந்து கொள்கிறோம். மக்களிடம் கொண்டுச் செல்கிறோம். எனவே கருத்தை கருத்தாக பார்ப்பதற்கு மாறாக நாங்கே புரட்சிக்கு சொந்தக்காரர்கள் என்று அமெரிக்காவிடம் இருந்து தரச்சான்றிதழ் பெற்றுள்ள இந்த சீர்குலைவு கும்பல் முத்துக்குமரன் உடலை வைத்துக் கொண்டு உடலரசியலை நடத்தி தனது அடையாளத்தை தேட முனைந்தது வேடிக்கையானது அல்ல வேதனையானது. இதனால் அந்த அமைப்பின் ஆதரவாளர்களே தற்போது குழம்பிப் போய் உள்ளனர். இவர்களை இன்னும் சற்று நெருங்கி நோக்குபவர்களுக்குதான் இவர்கள் யார் என்று புரியும். அனுபவமும் - நடைமுறையும் உண்மையை உரக்கச் சொல்லும்.

Anonymous said...

Dear Writer,

I hope you have no information about the Sri Lankan Tamils and their freedom fight. Better try to know and lern about this before write anything.

hariharan said...

திரு.சந்திப்பு அவர்களே,
இது ஒரு ஆரோக்கியமான விவாதகளமாக இருக்கிறது.ஒவ்வொரு விமர்சனத்திற்கும் உங்களுடைய பதில் திருப்தியளிக்கும்படியாகயும் தெளிவாகவும் உள்ளது.

தமிழக மக்கள் இனவுணர்வை புறந்தள்ளி யதார்த்தமான தீர்வை ஆதரிக்க நம் மக்கள் முன்வரவேண்டும்.

வாழ்த்துக்கள்.

Unknown said...

santhippu,

I am so ashamed to have visited your blog. You must have been a dreaded worm. Shame on you people call yourself as Marxists.

Sokkalingam Karupanan,
Malaysia.

சந்திப்பு said...

Dear Anony Commentor

Thanks for your comment. Then, In this posting speaks only current situation and my perspective only not history. Then, You call it is a Freedom fight. It is totally wrong. It is a Ethnic conflict conly. So, we want a solution for that problem. Ok. you go and search better history. Thanks again.

சந்திப்பு said...

நன்றி திரு. சோமசுந்தரம் தொடர்ந்த தங்களது ஆரோக்கியமான விமர்சனத்தை வரவேற்கிறேன்.

சந்திப்பு said...

Sokkalingam Karupanan

I think already you people like blind. So, you never have a chance to eye opener.

Thnaks

சந்திப்பு said...

அனானி நன்பரே திரு. இரயாகரனின் கருத்து வரவேற்புக்குரியது.

நட்புடன் ரமேஷ் said...

முத்துக்குமாரின் மரணம் சொல்கிற சேதி ஒன்றே ஒன்றுதான் அது புலிகளை ஆதரியுங்கள். இது இலங்கையில் நிராகரிக்கப்பட்ட ஒன்று. ஆனாலும் இங்குள்ள பிண அரசியலை என்னசொல்வது. இன்னும் பலரை (தற்)கொலைக்கு தூண்டும் வேலை நடந்துக்கொண்டுதான் இருக்கிறது தமிழக இளைஞர்கள் ஜாக்கிரதை

சந்திப்பு said...

Thanks Ramesh

Anonymous said...

//தற்போதுள்ள சூழ்னிலையில் எந்தவொரு நாட்டிலும் ஆயுதப்போராட்டத்தினால் விடுதலையோ அல்லது புரட்சியோ நடத்திவிடமுடியாது.


நன்றி சோசசுந்தரம். மிகச் சரியாக குறிப்பிட்டுள்ளீர்கள். ஒரே ஒரு வித்தியாசம் எந்தப் போராட்டமாக இருந்தாலும் அது பரந்துப்பட்ட மக்களின் நம்பிக்கையைப் பெற்றதாக இருக்க வேண்டும். மக்களால் தீர்மானிக்க வேண்டிய ஒரு நடவடிக்கையை அமைப்புகள் தீர்மானித்து விட முடியாது. நன்றி நன்பரே!
//

ஆயுதப் போராட்டமா இல்லையா அப்படிங்கிறத எப்படி மக்கள் தீர்மானிப்பாங்களோ அப்படித்தான நாடாளுமன்றப் பாதையா இல்லையாங்கிறதையும் மக்கள்தான தீர்மானிப்பாங்க..எந்த இடத்துல மக்கள் இந்தியாவுல தீர்மானிச்சு நீங்க பாராளுமன்றம் போனீங்க

சந்திப்பு said...

இந்திய நாட்டில் உள்ள தேர்தல் ஜனநாயகத்தை மக்கள் ஏற்றுக் கொண்டுள்ளனர். அதன் மீது நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான் இந்த தேர்தல் ஜனநாயகம் இன்னும் உயிர் வாழ்ந்துக் கொண்டிருக்கிறது. இதன் மீது நம்பிக்கை வைத்துள்ள முதலாளித்துவ கட்சிகளும் உயிர் வாழ்வது இதனால்தான். நீங்கள் மக்கள் சிந்தனைக்கு மாறாக சிந்திப்பதால் உங்களை சீண்டுவாரில்லை. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தொடர்ந்து 30 ஆண்டுகளுக்கும் மேலாக

ஆயுதப் போராட்டமா இல்லையா அப்படிங்கிறத எப்படி மக்கள் தீர்மானிப்பாங்களோ அப்படித்தான நாடாளுமன்றப் பாதையா இல்லையாங்கிறதையும் மக்கள்தான தீர்மானிப்பாங்க..எந்த இடத்துல மக்கள் இந்தியாவுல தீர்மானிச்சு நீங்க பாராளுமன்றம் போனீங்க


மேற்குவங்கத்திலும், கேரளத்தில் 57 முதல் மாறி மாறி ஆட்சிக்கு வந்துக் கொண்டுள்ளனர். இதேபோல் திரிபுரா... தமிழகம், ஆந்திரம், ராஜஸ்தான் உட்பட உள்ள மாநிலங்களில் முன்னேறி வருகின்றனர். 30 ஆண்டுகளாக ஆயுதப் பாதையை முன்வைத்த நக்சல்பாரி பாதை இல்லாத இடம் தெரியாமல் போய் விட்டது. 72 குழுக்களாக பிரிந்து போனது. இன்னும் ம.க.இ.க. போன்ற குழுக்கள் தற்போது தமிழகத்தில் மட்டுமே சுருங்கி என்.ஜீ.ஓ. வேலை செய்துக் கொண்டுள்ளது.

சந்திப்பு said...

ஒரு அனானியின் அநாகரீகமான பின்னுட்டம் வெளியிடவில்லை. இருப்பினும் அவர் கேட்ட லிங் பேஸ்ட் செய்யாமல் விட்டதால் விடுபட்டு விட்டது என்பதை மட்டும் தெரிவித்துக் கொண்டு கீழே இரயாகரனின் லிங்கை கொடுத்துள்ளேன். அது குறித்த எனது விமர்சனம் மேலே உள்ளது.


http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=4934:2009-02-05-15-37-58&catid=277:2009

Anonymous said...

நான் கேட்டது புரியலியா ''கம்யூனிஸ்டுகளாகிய நீங்கள் ஜனநாயகப் பாதையில் செல்லுங்கள்'' என மக்கள் தீர்மானித்ததாக சொன்னீர்களே அதற்கு நடந்த ஓட்டெடுப்பு பற்றிய விபரம் கேட்டேன். மக்கள் சிந்தனைக்கு மாற்றாக நக்சல்பாரிகள் சிந்திப்பதாக சொன்னீர்கள். நடந்த திருமங்கலம் தேர்தலில் மக்கள் ஐயாயிரம் ரூபாய் கிடைத்ததை எண்ணி தான் 88.89% ஆக வரலாறு காணாத ஓட்டுப்பதிவை அளித்தனர். இதை மக்கள் சிந்தனை என்பதற்காக ஒரு கம்யூனிஸ்டாக கூட வேண்டாம் நியாயத்திற்கு கட்டுப்பட்ட மனிதனாக சொல்லுங்கள் ஆதரிப்பீர்களா. 72 அல்ல 7000 குழுக்களாகப் பிரிந்து சரியானதற்காக தனியாக குடியிருக்க வீடு கூட இல்லாமல் போராடுவது சரியா .... தான் கட்சி தொழிலாளர் அணில RSS member ஐ சேர்க்குமா சேர்க்காதா என்பது பற்றி கூட தெரிந்து கொள்ளாமல் உன்னைப் போனற நபர்களை யும் சேர்த்து கும்மியடிப்பது சரியா

Anonymous said...

நீங்கள் வெளியிட மறுத்த பின்னூட்டத்தை அது ஏன் அநாகரீகமானது என விளக்கி ஒரு பதிவு போட முடியுமா