September 04, 2008

நாட்டை ஆளும் ராஜாக்களுக்கு நாக்க முக்க... பாடல் கேட்குமா?


சமீபத்தில் இளம் வட்டங்களின் நரம்புகளை முறுக்கேற்றி நடனமாட விட்டுள்ள பாட்டு

நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க நாக்க முக்க 
நாக்க முக்க நாக்க முக்க

இந்தப் பாடலில் ஒலிக்கும் இசை ஆடாதவர்களையும் ஆடச் செய்யும். ஆனால் நமது ஆட்சியாளர்களைத் தவிர!

நாட்டுப் பிரச்சினைகளை, நாடு சந்தித்துக் கொண்டிருக்கும் பிரச்சினைகளை நாலு வரியில் சொல்ல முடியுமா? சொல்லியிருக்கிறது நாக்க முக்க...

கீழ்கண்ட வரிகளை சற்று நோக்குங்கள்... அதன் அர்த்தம் என்ன என்று புரிந்து விடும்.

ஆ.... ஆ....ஆ.... 
ஏய்.... அப்படி போடு... 
ஹா ...... ஆஹா.... 
ஏய் குத்தாங்கல்லு போட்டு வச்சு ஓலகுடிசை நிக்குது 
நட்டாங்கல்லு போட்டு வச்சு நாத்தாங்காலு இருக்குது 
அச்சச்சோ மூணுபோகம் ஒருபோகம் ஆச்சுடா... 
காயவச்ச நெல்ல்லு இப்போ கடைத்தெருவே போச்சுடா... 
நட்டு வச்ச நாத்து இப்போ கருவாடா ஆச்சுடா... 
அரவயிறு காவயிறு பசி தான் பட்டினி 
சாவு தான் எத்தினி... 
எங்கே டா இங்கேடா அடிங்கடா அடிங்கடா 
ராஜாவுக்கு கேக்கட்டும்.... 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 

தமிழகத்தில் கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு என்று அறிவித்து வரலாற்றில் அழியாத இடம் பெற்ற விட்டார். கருணாநிதி "இதை நான் போட்ட பிச்சை" என்று சொல்லாமல் இருந்தால் சரிதான்!

ஆனால் உண்மை நிலை என்ன? வெளி மார்க்கெட்டிலிருந்துதான் மக்கள் சமைப்பதற்கான அரிசியை மிக அதிகமாக உபயோகப்படுத்துகிறார்கள். அதன் விலையை குறைக்க ஆட்சியாளர்களை முயலுங்கள் என்று சொன்னால் பே.பே... காட்டி விட்டு ஆன் - லைன் கொள்ளையர்களுக்கு பச்சை கொடி காட்டி வருகிறார்கள்.

இன்னொருபுறத்தில் விவசாயத்தில் பெரும் நட்டம் ஏற்பட்டு தான் விளைவித்த கரும்பையும், பருத்தியையும் தானே நெருப்பிட்டு பொசுக்கும் அவலம் நடந்து வருகிறது. என்ன விஷயம் கட்டுப்படியான விலை கிடைக்கவில்லை. உழுதவன் கணக்குப் பார்த்தால் உழுக்குக் கூட மி;"சாது என்ற பழமொழிதான் நினைவுக்கு வருகிறது.

இதனால் மகாராஷ்டிரத்தில் மட்டும் கடந்த ஐந்து ஆண்டுகளில் ஒரு லட்சம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஏன் தமிழகத்தில் கூட க;"சித் தொட்டி திறக்கப்பட்டது தற்போதைய ஆட்சியாளர்களுக்கும் நினைவு இருக்கும்.


மக்களின் வாழ்க்கை தற்போது கருவாடாக கருகிக் கொண்டு வருகிறது. பசியாலும், பட்டினியாலும் மக்கள் மடிந்து கொண்டிருக்கிறார்கள். ஆட்சியாளர்கள் காதில் எவ்வளவுதான் ஊதினாலும் செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருக்கிறது.

தற்போது 

ராஜாவுக்கு கேக்கட்டும்.... 
அட்ரா அட்ரா நாக்க முக்க நாக்க முக்க 

என்ற அதிரும் அதிர்வேட்டுக்களாவது கேட்குமா? என்று சாதாரண விவசாயி ஏங்குகிறான். ஆட்சியாளர்களின் சிந்தனையோ ரகசிய கடிதங்கள் வாசிங்டன்னிலும், வியன்னாவிலும் அம்பலப்பட்டுப் போகிறதே என்ற கவலை ரேகைதான் தெரிகிறது.

அவர்களது கவலையெல்லாம் அணு சக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்ற 123... என்று ரேசில் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் தமிழகத்தை இருட்டில் அமிழ்த்தி கின்னஸ் சாதனை படைக்கிறார் தமிழக முதல்வர் கருணாநிதி. வீராசாமியின் காதுகளுக்கு ஒருபோதும் இந்த பாடல் வாரிகள் கேட்கப்போவதில்லை!

மக்களின் போராட்ட வரிகள்தான் இதற்கு பாடம் புகட்டனும்!

2 comments:

Anonymous said...

மேற்கு வங்காளத்தில் ஆளும் ராஜாக்களுக்கு இந்த பாட்டு ஏற்கனவே கேட்டுடிச்சா சந்திப்பு? விவசாயிகளை போலிஸை விட்டு அடித்து துரத்தும் காலிகளுக்கு இந்த பாட்டு கேட்டிருந்தா சரி.

யாத்ரீகன் said...

indha paadazhil thirupi thirupi kaetkavaiththa varigal idhu.. adheppadi yaarumey idhai kavanikalayanu nenachittu irunthaen.. hmmmmmm..