March 27, 2006

தனியார்மயம்: பலியாகும் மனித உயிர்கள்

உலகமயக் கொள்கை உழைக்கும் மக்களின் உயிருக்கு உலை வைத்து வருவது நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் உள்ள - கங்காவரத்தில் புதிதாக கட்டப்படவுள்ள தனியார் துறைமுக கட்டுமானத்தால் பல ஆயிரக்கணக்கான மக்கள் தலைமுறை, தலைமுறையாய் ஆண்டு, அனுபவித்து வந்த இடத்தைவிட்டு வலுக்கட்டாயமாக வெளியேற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை எதிர்த்து போராடிய மக்களை போலீசார் குருவிகளை சுடுவது போல் சுட்டுத் தள்ளியுள்ளனர். போலீசாரின் இந்த குண்டுக்கு ஒரு பெண் உட்பட 2 பேர் பலியாகியுள்ளனர். மேலும் 60க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

விசாகப்பட்டினத்தில் உள்ள, கங்காவரம் மற்றும் திப்பாலம் கிராமம் இருக்கும் இடத்தில், டி.வி.எ°. ராஜூ நிறுவனமும் - துபாய் துறைமுக நிறுவனமும் இணைந்து முழுக்க, முழுக்க தனியார்களால் நிர்வகிக்கப்படும் ஒரு துறைமுக திட்டத்திற்கு அனுமதி அளித்தார் அமெரிக்க தாசர் சந்திரபாபு நாயுடு. 2000 கோடி ரூபாயிலான இத்திட்டத்தை நிறைவேற்றுவதற்கு குறிப்பிட்ட கிராம மக்களிடம் இருந்து பலமான எதிர்ப்பு கடந்த ஓராண்டு காலமாகவே எழுந்து வருகிறது.


உலகமயம் எவ்வளவு வேகமாக உலகத்தை சூறையாடுகிறதோ, அதே வேகத்தோடு இந்த கிராம மக்களின் வாழ்வைப் பறிப்பது ஒன்றும் பெரிய விஷயமாக படவில்லை அவர்களுக்கு. கிட்டத்தட்ட 18,000க்கும் மேற்பட்ட மக்கள் இந்த துறைமுகத் திட்டத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்த மக்கள் கேட்டதெல்லாம் வேறு ஒன்றும் அல்ல; நாங்கள் பல நூறாண்டுகளாக - தலைமுறை, தலைமுறையாக இங்கேயே வாழ்ந்து வருகிறோம். எங்களுக்கு மீன்பிடித் தொழிலைத் தவிர வேறு எதுவும் தெரியாது! எனவே எங்களுக்கு இதே போல் பாதுகாப்பான மாற்று இடத்தை வழங்கிட வேண்டும் என்றும், இடப் பெயர்வுக்காக குடும்பம் ஒன்றுக்கு ரூ. மூன்று லட்சம் வழங்கிட வேண்டும் என்று கேட்டனர்.

தனியார் முதலாளிகளுக்கு இந்த ஏழைகளின் குரல்கள் வெறும் எட்டவா போகிறது? இவர்களை அடித்து விரட்டினால் ஓடி விடப்போகிறார்கள் என்ற வன்மம்தான் இன்றைக்கு அகோர வடிவம் எடுத்து, அந்த சாதாரண ஏழை மக்களை இரும்பு கரம் கொண்டு தாக்கியதோடு, துப்பாக்கியாலும் சுட்டுத் தள்ளியுள்ளது. இரண்டு அப்பாவி மக்களின் உயிர்கள் இருந்த இடம் தெரியாமல் சென்றுவிட்டது.

இதெல்லாம் இந்த முதலாளிகளுக்கு திட்டத்தை துவக்குவதற்கு முன்னால் கொடுக்கப்படும் பலிகள் எண்ணிக்கையின் ஒரு பகுதியாக மாறலாம்! எந்த திட்டமாக இருந்தாலும் மக்களின் ரத்தத்தை பிழிந்து விட்டு, உயிர்களை சக்கையாக்கிவிட்டு முடித்து விடலாம் என்று திட்டமிட்டால், அவர்களின் கனவு பலிக்காது!

இந்திய நாட்டில் கங்காரவத்தில் மட்டுமல்ல; குஜராத்தில் நர்மதா அணைக்கட்டு, ஒரிசாவில் போ°கோ திட்டம் என்று தொடர்ச்சியாக உலகமாக்கல் பெயரால் மனிதர்களின் வாழும் உரிமைகள் பறிக்கப்படுவது தொடர் கதையாகியுள்ளது. உலக பன்னாட்டு முதலாளிகளுக்கு இந்தியா பணம் காய்க்கும் சொர்க்க பூமியாக காட்சியளிக்கிறது. பிரான்சைப்போல் இந்தியாவிலும் அனைத்து தரப்பு மக்களும் இதுபோன்ற அநீதிகளுக்கு எதிராக குரலெழுப்பும்போதுதான் புதிய இந்தியாவிற்கு பூபாளம் அமைக்க முடியும்!

3 comments:

சந்திப்பு said...

Thankyou Barathee

அசுரன் said...

இதற்க்கு எந்த பொலிடிகலி இன்கரக்ட் பயலும் வந்து பின்னூட்டம் போடவில்லையே? ஏன்.

அதனால்தான் அவர்கள் வலைப்பூக்களில் அவர்களை மக்கள் விரோதிகள் என்கிறோம்.

மறுகாலனியாதிக்கதின் தகிப்பு அனைத்து வர்க்கத்தையும் கொதித்தெழச்செய்யும். அது தவிர்க்கவியலாத வரலாற்று நிகழ்வு.


வாழ்த்துக்கள்,
அசுரன்

அசுரன் said...

இதற்க்கு எந்த பொலிடிகலி இன்கரக்ட் பயலும் வந்து பின்னூட்டம் போடவில்லையே? ஏன்.

அதனால்தான் அவர்கள் வலைப்பூக்களில் அவர்களை மக்கள் விரோதிகள் என்கிறோம்.

மறுகாலனியாதிக்கதின் தகிப்பு அனைத்து வர்க்கத்தையும் கொதித்தெழச்செய்யும். அது தவிர்க்கவியலாத வரலாற்று நிகழ்வு.


வாழ்த்துக்கள்,
அசுரன்