January 25, 2008

பாரத ரத்னா நஹி


இந்திய தேசத்தின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று மத்திய அரசு முடிவு செய்துள்ளது. தேச மக்களுக்கு நிம்மதியைக் கொடுத்துள்ளது. இந்தியாவில் பாரத ரத்னா விருது குறித்து எப்போதும் இல்லாத வகையில் சர்ச்சையை துவக்கி வைத்தது சங்பரிவாரக் கூட்டம்.
அத்வானிஜி - அடல்ஜிக்குத்தான் பாரத ரத்னா வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு கடிதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து இந்த வரிசையில் கன்சிராம் - ஜகஜிவன்ராம் - சச்சின் டெண்டுல்கர். ஓவியர் உசைன் ஆகியோருக்கு வழங்கலாம் என பலதரப்பில் இருந்து மத்திய அரசுக்கு கோரிக்கைகள் எழுந்தன.
தேசத்தின் உயரிய சேவையை செய்ததற்காக வழங்கும் இந்த மகத்தான விருதை சங்பரிவார இந்துத்துவ கூட்டம் தன்னுடைய சுயநலத்திற்காக அரசியலாக மாற்றி அதன் நோக்கத்தையே கொச்சைப்படுத்தி விட்டது.
மொத்தத்தில் மத்திய அரசு இந்த ஆண்டு விருதை யாருக்கும் வழங்கப்போவதில்லை என்று அறிவித்து விட்டது சற்று ஆறுதலை அளிக்கிறது. இல்லையென்றால் யாருக்கு விருது வழங்கியிருந்தாலும் அது களங்கப்படுத்தப்பட்டிருக்கும்.
இந்திய சுதந்திரப் போராட்டத்தின் போது வாஜ்பாய் அவர் வாழ்ந்த ஒரு கிராமத்தையே காட்டிக் கொடுத்தவர். அவரது குரு சவார்க்கர் பிரிட்டிஷாரிடம் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொடுத்து விட்டு தேசத்திற்கு துரோகம் செய்தவர்கள். இந்தப் பாரம்பரியத்தில் வந்தவர்களுக்கு விருது கொடுக்கப்பட்டிருக்கும் என்றால் தேசத்தின் மீதான சேவையே கேள்விக்குறியாக மாறியிருக்கும்.
மத்திய அரசின் சமயோஜித புத்தியை பாராட்டாமல் இருக்க முடியாது!
Read this also....

No comments: