April 06, 2007

இலங்கை: புதிய அரசியல் திட்டம் மே 1ல் வெளியீடு

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் வகையிலான புதிய அரசியல் திட்டத்தை இலங்கை அரசு அடுத்த மாதம் வெளியிடுகிறது. மே 1ம் தேதி இந்த புதிய அரசியல் திட்டத்தை அதிபர் ராஜபக்ஷே வெளியிடுகிறார்.
இந்த திட்டத்தின் முக்கிய அம்சமாக, அதிபருக்குரிய அதிகாரங்கள் குறைக்கப்பட்டு, பிரதமர் பதவி, நாட்டின் செயல் தலைவர் பதவியாக மாற்றப்படவுள்ளது. இதுகுறித்து இலங்கை அரசின் தலைமைச் செயலாளற் மைத்ரிபாலா சிரிசேனா கூறுகையில், மே 1ம் தேதி புதிய அரசியல் திட்டம் வெளியிடப்படவுள்ளது. இதில் முக்கிய அம்சமாக நாட்டின் செயல் தலைவர் பதவியாக பிரதமர் பதவி மீண்டும் மாற்றப்படவுள்ளது. அவரே இனி நாடாளுமன்றத்திற்குப் பதில் அளிக்கக் கூடிய தலைவராக இருப்பார்.
தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்க இலங்கை சுதந்திராக் கட்சி விருப்பம் தெரிவித்துள்ளது. அதேசயம், ஒருங்கிணைந்த இலங்கையின் கீழ்தான் இந்த அதிகாரப் பகிர்வு இருக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தியுள்ளது என்றார் அவர். ராஜபகக்ஷே அரசின் புதிய அரசியல் திட்டத்தின் பிற விவரங்களை அவர் தெரிவிக்க மறுத்து விட்டார்.
Thanks:www.thatstamil.com

No comments: