November 21, 2005

எது பண்பாடு? காப்பவர்கள் யார்?






நடிகை குஷ்பு - சுகாசினி - சானியா மிர்சா ஆகியோர் வெளியிட்ட கருத்தை வைத்துக் கொண்டு பக்கம் பக்கமாக செய்தி வெளியிட்டு கனஜோராக பத்ரிகை வியாபாரம் செய்யும் பத்ரிகை வியாபாரிகளின் வேடம் நகைப்புக்குரியதாகவே உள்ளது. நச்சுன்னு இருக்கு... பத்திரிகையைப் பார்த்தாலே தெரியும் தமிழ் பண்பாட்டின் மீது எத்தகைய காதல் கொண்டிருக்கிறது என்று. நாலாந்தர படத்தினை பக்கத்திற்கு பக்கம் போடும் பத்திரிகைகள்தான் தமிழ் பண்பாட்டையும், கலாச்சாரத்தையும் காப்பாற்றப்போகிறதா? குடும்ப நாடகம் என்ற பெயரில் சன் தொலைக்காட்சி வெளியிடும் நிகழ்ச்சிகளைப் பார்த்தாலே இவர்களின் பண்பாடு புரியும். இரண்டு மனைவிகள், இரண்டு கனவன்மார்கள் அல்லது கணவன் மீது ஆசைப்படும் இளம் பெண்... என்று வக்கரித்துப் போன காட்சிகளை வெளியிட்டு பண்பாட்டை அரிக்கும் புல்லுரிவிகள்தான் பண்பாட்டை காப்பார்களா?

No comments: