June 28, 2007

ஆவி வழி அரசியலுக்கு அடிபோடும் பிரதீபாஜி!

இந்திய குடியரசுத் தேர்தலில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி - இடதுசாரி வேட்பாளரான பிரதீபா பாட்டிலின் வெற்றி உறுதியாகி விட்டது. பிரதீபா பாட்டிலின் அரசியல் வாழ்க்கையே, அவரை இந்த பதவிக்கு தேர்வு செய்ய முதன்மைத் தகுதியாக அமைந்தது.

இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி என்ற அந்தஸ்த்தை பெறவுள்ள பிரதீபா பாட்டில் குறித்து கலங்கிக் கிடக்கும் பா.ஜ.க. உள்குத்து, சதிவேலைகளில் இறங்கி வருகிறது. இதையெல்லாம் அரசியல் ரீதியாக எதிர் கொள்ளும் கடமையை காங்கிரசும், அதன் தோழமை கட்சிகளும் செய்து வருகிறது.

ஆனால் சமீபத்தில் பிரதீபா பாட்டில், தொலைக்காட்சி சானல் ஒன்றிற்கு அளித்த பேட்டி சர்ச்சைக்கு உரியதே! அதாவது, "இந்த ஜனாதிபதி பதவிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதை முன்கூட்டியே பாபாஜி ஆவியாக வந்து அருள் வாக்கு கூறினார்" என்று தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறிய செய்தி கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மகுமாரிகள் ஆன்மீக பல்கலைக்கழகத்திற்குச் சென்று அங்கு தாதிஜியை(அவர்தான் அமைப்பின் தலைவர்) சந்தித்துப் பேசினேன். அப்போது தாதிஜி உடலில், பாபா ஆவி ரூபத்தில் புகுந்து எனக்கு அருள் வாக்கு சொன்னார். அப்போது பாபா, தாதிஜி மூலமாக, நீ அதிர்ஷ்டசாலி, மிகப் பெரிய பொறுப்பு எனக்கு காத்துள்ளதாகவும் அருள் வாக்கு சொன்னார். அந்த சமயத்தில்தான் குடியரசுத் தலைவர் தேர்தலில் என்னை நிறுத்த முடிவு செய்துள்ளதாகவும், அதற்கு எனது சம்மதம் தேவை என்றும் சோனியா காந்தியிடமிருந்து தகவல் வந்தது என்றும் பிரதீபா பாட்டீல் கூறியுள்ளார். (Thanks: http://www.thatstamil.com/)

பிரதீபா ஜிக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் நம்பிக்கை உட்பட, எந்த நம்பிக்கைகள் வேண்டுமானாலும் இருக்கட்டும். அது அவர் உரிமை. அதே சமயம், இந்திய நாட்டின் உயர் பொறுப்பிற்கு வரும் ஒருவர் பேசும் பேச்சுக்கள் மற்றும் வெளிப்படுத்தும் கருத்துக்கள் சர்ச்சைக்கு உரியதாகவும் - மூடநம்பிக்கைக்கு உட்பட்டதாகவும் அமைவது ஏற்கத்தக்கதல்ல. சரியானதும் அல்ல.
இந்திய ஜனாதிபதியாக பல மகத்தான தலைவர்கள் பொறுப்பு வகித்துள்ளனர். குறிப்பாக தத்துவார்த்த துறையில் பெயர்பெற்ற டாக்டர் இராதாகிருஷ்ணன் மற்றும் கே.ஆர். நாராயணன் போன்றோரை சுட்டிக் காட்டலாம். அத்தகைய உயர்ந்த இடத்தில் பொறுப்பேற்கும் பிரதீபா, இனியாவது நாம் எந்த கருத்தை வெளிப்படுத்துகிறோம் என்பதை நிதானித்து வெளிப்படுத்த வேண்டும்.

கடந்த காலத்தில் ஜனாதிபதியாக இருந்த கே.ஆர். நாராயணன், தன்னுடைய பதவிக் காலம் முடித்து வெளியே வரும் போது, ஒரு கருத்தை சுட்டிக் காட்டினார். அதாவது, "அவர் பதவியில் இருந்த காலத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகளில் எந்த இடத்திலும் மதம் சார்ந்த தலைவர்களின் கொட்டேஷனை பயன்படுத்தியதே இல்லை என்று குறிப்பிட்டார். (உதாரணமாக விவேகானந்தர். இராமகிருஷ்ணர் போன்றவர்கள்)" இப்படி மிகத் தெளிவாக செயல்பட்டவர்கள் இடத்தில் பொறுப்பேற்கும் பிரதீபா, ஆவிகளுக்கு மயங்க ஆரம்பித்தால், ஆட்சியே நடத்த முடியாத நிலை ஏற்படும். எதிர் காலத்தில் இந்திய அரசை, அரசியல் வழி நடத்துவதற்கு பதிலாக, ஆவிகளின் வழி நடத்தும் துன்ப நிலைக்கு தள்ளப்படலாம். (இதனை மக்கள் ஏற்க மாட்டார்கள் என்பது தனிக்கதை) ஆவிகள் தனிப்பட்ட முறையில் உங்களுக்கு பலத்தை தரலாம். ஆனால், நாட்டிற்கு அது பலவீனத்தையே கொண்டு வரும்!

பிரதிபா ஜியிடம் அரசியல் ரீதியாக பல விஷயங்கள் பாசிட்டிவாக இருந்தாலும், இதுபோன்ற நெகட்டிவான விஷயங்கள் புறக்கணிக்க கூடியதல்ல. ஏடறியா - எழுத்தறியா மக்களை, மூட நம்பிக்கைகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் இந்நேரத்தில், நீங்களே அதன் புதை சேற்றுக்குள் மூழ்குவதை ஏற்க முடியாது. ஆவி வழி அரசியல் அயோக்கியர்களுக்கே பயன்படும். மதவாத சக்திகள் தலை விரித்தாடும் இந்த நேரத்தில் இதுபோன்ற கருத்துக்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இது பிற்போக்கு சக்திகள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளவே வழிவகுக்கும். இதற்கு இந்திய மக்கள் இடம் கொடுக்க மாட்டார்கள்.
ஆவி, முன் ஜன்மம், கடவுள் போன்ற கருத்தாக்கங்கள் வெறும் கற்பனையானது என்பதைத் தவிர வேறு ஒன்றுமே அதில் இல்லை. இதனை ஆதிகால அடிமைச் சமூகத்தில் இருந்து ஆளும் வர்க்கம் தன்னுடைய சொத்தாக போற்றி பாதுகாத்து வருகிறது. இத்தகைய கருத்திற்கு நாம் இறையானால் நம்முடைய சிந்தனையை நாமே செயலிழக்க வைக்கிறோம் என்று பொருள் கொள்ளலாம்.

10 comments:

Anonymous said...

ஆக உங்க திருமகள் இப்போ பேய் மகளாகிட்டாருன்னு சொல்லுங்க.....

Anonymous said...

சரியாகத்தான் சொன்னீர்கள் கே.எஸ்.பி.
இவர்கள் பாட்டுக்கு ஆவி கீவி என்று எதையாவது அவிழ்த்துவிட்டுப்
போய்விடுவார்கள். அப்புறம் அதைப் பிடித்துக் கட்டிப் போடுகிற வேலை
கம்யூனிஸ்ட்டுகள் தலையில் வந்து விடியும்! ஆளுக்காள் ‘‘என்ன உங்க
வேட்பாளர் ஆவி கதை விடுகிறார்? அதை நீங்க ஏத்துக்கிடுறீங்களா,’’ என்று
இடது சாரிகளைக் குடைய ஆரம்பித்துவிடுவார்கள்!
பிரதிபாவுடன் இருக்கிற அன்பர்கள் இதை அவர்களுக்கு எடுத்துக் கூறட்டும்.
‘அரசியல் அல்லாத’ கலாமை ஏற்க மறுத்துவிட்டதால் ஏற்பட்ட கோபத்தை,
இது போன்ற சின்னப்புள்ளத்தனமான பேட்டிகளைக் கேலி செய்வதன் மூலமாக
ஆற்றிக் கொள்ளவும், ஐமுகூ-இடதுசாரி வேட்பாளரை மட்டம் தட்டவும் இது
போன்ற நிகழ்வுகளைப் பரவசத்தோடு பயன்படுத்திக்கொள்ள ஊடக மாமணிகள்
துடிப்பார்கள்.
இதையெல்லாம் புரிந்துகொண்டு பிரதிபா செயல்படுவாராக.

அ.குமரேசன்
This Comment through email :

சந்திப்பு said...

ஐயா அனானி அவர் பேய் மகளாகி விட்டால் - காத்து - கருப்புகளை ஓட்ட வேண்டியது உங்கள் பொறுப்பல்லவா?

சந்திப்பு said...

அன்பு நன்பர் குமரேசன் மிக அழகாக சொல்லியிருக்கிறீர்கள். தங்கள் வருகைக்கு நன்றிகள்.

kumaresan said...

பிரதிபா பாட்டீலின் தனிப்பட்ட நம்பிக்கைகள் வேறு, அரசியல் - சமூக நிலவரங்களில் அவர் என்ன நிலை எடுக்கிறார் என்பது வேறு. மத நம்பிக்கையாளரான அவர் இத்தகைய நம்பிக்கைகளைக் கொண்டிருப்பது ஒன்றும் வியப்புக்குரியதல்ல. சொல்லப்போனால் முழு வளர்ச்சியும் அடையாத, அதே நேரத்தில் தேங்கியும் விடாத இந்திய சமூக நிலையின் சரியான எடுத்துக்காட்டு பிரதிபா. அவர் பகுத்தறிவுவாதியென்று நாமும் கருதவில்லை, காங்கிரசும் சொல்லவில்லை. அது ஒரு நிபந்தனையுமில்லை. ஆனால் அவர் மதச்சார்பற்றவராக, மதப்பகைமையற்றவராக இருக்கிறார் என்பது முக்கியமானது. பாஜக வகையறாக்களுக்கு உறுத்திக்கொண்டிருப்பது.
Kumaresan

Anonymous said...

pradeepaji neenka president avura mothal penmani enkirathala mattum illa, idathu saarikal athadrikka koodia candidate enpathalum unkal mel enkalukku mariyathai koodiyathu
unkalai patri mathaveri bjp pala kuitra chatukkalai sumathiya pothellam unkalai candidate aka arivika kalaizhanar thaan karanam enru thambattam atithu konda utan pirapukkal vai moodi mavni anarkal
antha kutra chatukkalukellam leftistkal pathil soli kondu iruntharkal.. karanam, arasiyalukku apparpatta abdul kalam ai kaatilum, bjp koota thai saarntha sehavathi kaatilum neenka mikavum porutham anavarkal enpathaal thaan madamji, iniyavathu unkalai atharikum nallavarkalai ninaithu ethayum pesunkal

Anonymous said...

நீங்கல் ஜனாதி பதி அக போகும் முதல் பென்மனி என்பதாலும்,அப்துல்கலாம் அரசியல் தெரியாத அப்துல்கலாம், மதவாதி செகாவத் ஆகியொரை காட்டிலும் பல்வேரு பொருப்புகலில் இருந்தவர் என்பதான காரனத்தினாலும், மேலும் நல்ல வர்கலை மட்டுமெ ஆதரிக்கும் இடது சாரிகலின் ஆதரவு உங்கலுக்கு உல்லது என்பதினாலும் உன்கலை என்பொன்ட்ரவர்கல் ஆதரிக்க முடிவு செய்தோம். ஆனல் உன்கல் பெசில் நீங்கல் வகித்த பதவிகலின் மேன்மையும் உன்கலை ஆதரிக்க முடிவு செய்தவர்கலின் தனி தன்மை வெலிபடவில்லை,
தயவு செய்து இனியும் இப்ப்டி பித்துகுலி தனமாக பேசி விடாதிர்கல்

Anonymous said...

நீங்கல் ஜனாதி பதி அக போகும் முதல் பென்மனி என்பதாலும்,அப்துல்கலாம் அரசியல் தெரியாத அப்துல்கலாம், மதவாதி செகாவத் ஆகியொரை காட்டிலும் பல்வேரு பொருப்புகலில் இருந்தவர் என்பதான காரனத்தினாலும், மேலும் நல்ல வர்கலை மட்டுமெ ஆதரிக்கும் இடது சாரிகலின் ஆதரவு உங்கலுக்கு உல்லது என்பதினாலும் உன்கலை என்பொன்ட்ரவர்கல் ஆதரிக்க முடிவு செய்தோம். ஆனல் உன்கல் பெசில் நீங்கல் வகித்த பதவிகலின் மேன்மையும் உன்கலை ஆதரிக்க முடிவு செய்தவர்கலின் தனி தன்மை வெலிபடவில்லை,
தயவு செய்து இனியும் இப்ப்டி பித்துகுலி தனமாக பேசிவிடாதிர்கல்

Anonymous said...

உண்டியல் குழுக்கிய காம்ரேடுகள் கோடியில் புழங்கும் அதிசயம்!

பாமரன் பாணியில்எழுதுவதென்றால் நம்ம கேரள சேட்டன்கள் ரொம்ப அட்வான்ஸா புரட்சி செய்யறாங்கன்னு தான் சொல்லனும். தேசாபிமானிகள் சும்மா ஒரு 2 C ( ரெண்டு கோ.....டிங்கோ!) பணத்தை லாட்டரி அதிபர் ( தமிழக போலீசால் தேடப்பட்டுவரும்!) மார்ட்டினிடம் வாங்கியிருக்கிறார்களாம்!

அதை வெளிக்கொணர்ந்த மாத்ருபூமி இதழைக் கேரள காம்ரேடுகள் பரேடு வாங்கியிருக்கிறார்கள்... உறுப்படியான பதிலளிக்க முடியாமல்! அதை விடுங்க. நம்மூரு அளவுக்குஎரிக்கலையேன்னு சந்தோசமா விட்டுரலாம். ஆனா தமிழக மக்களுக்கு ஒரு வ்வேண்டுகோள். இனிமேல்எந்த செவ்வாடைத் தொண்டரையும் ( குறிப்பா சொன்னா CPIM ) உண்டியல் குலுக்கின்னெல்லாம் கேவலமா திட்ட வேண்டாம். தோழர்கள் ரெஞ்சே இப்ப வேற!

கவுண்டமணி பாஷைல சொல்லனும்னா .. "ப்ளடி இடியட், நான் அஞ்சுக்கும் பத்துக்கும் பிச்சையெடுப்பவன்னு நினைச்சியாடா சொறித்தலையா...என் ரேன்ஞ்சே வேறடா இப்ப... ஒன்லி குரோர்ஸ். டாட்டா" என்று சொல்லும் நிலைமைக்கு வந்துவிட்டார்கள்!

பிகு: தீக்கதிர்க்கு யார் கொடுக்கிறார்கள் என்று தெரிந்தவர்கள் சொன்னால் தேவலை!

எழுதியவர் OSAI Chella at



4 பின்னூட்டங்கள்:
Anonymous said...
ஒருவாரம்-பத்துநாட்களுக்குள்ளே சந்திப்பு என்ற பதிவர் செவ்வாடை தோழர்களை ஆகா, ஓகோ என்று புகழ்ந்து, அவர்களைப் போல் ஒரு ஞயாயவான்களைக் காணமுடியாதென்றும் கூறினார்....அவர் முகம் காண தற்போது ஆசையாக இருக்கு...


உண்மைத் தமிழன்(15270788164745573644) said...
கட்சிகள் நன்கொடை பெறுவது சட்டவிரோதமில்லையே செல்லா. இந்தியாவில் இருக்கின்ற அனைத்துக் கட்சிகளின் அடிப்படை நோக்கமே நன்கொடை பெற்று தில் வாழ்வதுதான்.. பெரிய கட்சிகளுக்கு நிறைய கிடைக்கும். மாநிலக் கட்சிகளுக்கு அதனதன் தராதரத்திற்கு ஏற்ப கிடைக்கிறது. இதிலும் இப்போது அதை சட்டப்பூர்வமாக வேறு ஆக்கிவிட்டார்கள். நன்கொடை என்று.. ரசீது கொடுத்துவிட்டால் போகிறது.. அது டாட்டாவிடமிருந்து வருகிறதா அல்லது மார்ட்டினிடம் இருந்து வருகிறதா என்றெல்லாம் பார்க்க்ககூடாது என்பது கட்சிகளின் கருத்து. அவர்களுக்கும் ஆயிரம் செலவுகள் இருக்கிறதே அவர்களுக்கு..

இப்பொழுது குற்றவாளியாகத் தேடப்படும் ஒருவரிடமிருந்து 2 கோடி ரூபாய் நன்கொடையா என்றுதான் அங்கு கேள்வி எழுந்துள்ளது. வாங்கிய 2 கோடியை திருப்பிக் கொடுக்கும்படி கட்சி மேலிடம் உத்தரவு இட்டுள்ளதாம். அதனால் மார்ட்டினை தமிழக போலீஸைவிட அதிகமான வலை வீசி தேடிக் கொண்டிருக்கிறது கேரள போலீஸ். தமிழக போலீஸிடம் பிடித்துக் கொடுக்க ல்ல.. வாங்கிய பணத்தைத் திருப்பிக் கொடுக்க.. இது எப்படி இருக்கு? படிச்சாலே அதிருதுல்லே..?


OSAI Chella said...
பெருந்தொழிலதிபர்களிடம் நன்கொடை வாங்காத கட்சி என்று இமேஜ் வைத்துப் பெருமைப்பட்டவர்கள்... பாவம்!


Anonymous said...
//பெருந்தொழிலதிபர்களிடம் நன்கொடை வாங்காத கட்சி என்று இமேஜ் வைத்துப் பெருமைப்பட்டவர்கள்//

எந்த புண்ணியவான் அது?....

கரத், மற்றும் மத்திய கம்யூனிஸ்ட்களை பாருங்க, அவங்க போட்டிருக்கும் டிரஸ் ஒன்றே போதும் அவர்கள் உழல் பேர்விழிகள் என்று கூற...அத்தனை டாம்பீகம்....நல்லகண்ணு போல் இன்னொருவர் உண்டா?

Anonymous said...

நானு ஆவி பேசுறன். நாங்களும் ஒரு காலத்தில ஓட்டு போட்டு இந்திய ஜனனாயகத்தை வாழ வச்சவங்க தான். நம்ம சொல்ல பிரதீபாஜி கேட்டா என்ன தப்பு?



புள்ளிராஜா