January 31, 2006

அடங்கிப் போவாய்...

அடங்கிப் போவாய்...


நெருப்பே
ஏன் இந்த கோபம்!

தண்ணீர்தான் உனக்கு
வில்லன் என்பதாலா?

வனங்களிளும், மக்கள் வாழும்
இடங்களிலும் உன் தீண்டல்
செல்லுபடியாகலாம்...

இங்கு
உன் சக்தி விரயமாய்...

ஆக்கலுக்கு துணை நில்
அடக்கமாய்...

அழிவுக்கு துணைபோனால்
அடங்கிப் போவாய்...

January 26, 2006

contract to foreigners

பிரதமர் - ஜனாதிபதி பதவிகள்
அந்நியருக்கு காண்ட்டிராக்ட் விடப்படுமா?

மத்திய அரசு சில்லவரை வர்த்தகத்தில் அந்நியர்கள் 51 சதவீதம் அளவிற்கு முதலீடு செய்வதற்கு அனுமதித்துள்ளது. கடந்த 15 ஆண்டுகளாக இந்திய நாட்டில் குளிர்பானத்துறை உட்பட பல்வேறு நுகர்வுப் பொருட்களிலும் - தொழிலகளிலும் அந்நிய முதலீடு அனுமதிக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக நம்முடைய இந்திய நாட்டின் மொத்த குளிர்பான மார்க்கெட்டும் இன்றைக்கு பெப்சி- கோக் நிறுவனத்தின் கைக்கு தாவிவிட்டது. இதன் மூலம் இந்திய நாட்டில் குடிசைத் தொழிலாக இருந்த குளிர்பானத் தொழில் மூட்டைக் கட்டி பல ஆண்டுகள் ஆகிறது.

இதுமட்டுமின்றி தற்போது கோக்கும் - பெப்சியும் நம்முடைய குடிநீர் வளத்தை கொள்ளையடித்தும் வருகின்றனர். தாமிரபரணி - வைகை என இந்திய நாடு முழுவதிலும் உள்ள இயற்கைவளத்தை - குடிநீரை - நிலத்தடி நீரை சுரண்டி - கொள்ளை லாபம் ஈட்டி வருகின்றனர். இதற்கு நம்முடைய மத்திய மாநில அரசுகள் அமாம் சாமி போட்டு வருகின்றன.

தற்போது சில்லவரை வர்த்தகத்தில் அந்நியர் முதலீட்டை அனுமதித்தானது நம்முடைய இந்திய நாட்டில் உள்ள பல லட்கக்கணக்கான சில்லவரை வியாபாரிகளை ஊத்தி மூடச் செய்து விடும். தி. நகரில் ஒரு சரவணா ஸ்டோரை சமாளிப்பதற்கு முடியாமல் அங்கே உள்ள சிறு வியாபாரிகள் தத்தளித்துக் கொண்டு - வாழ்வா? சாவா என்ற போராட்டத்தை நடத்திக் கொண்டு வருகின்றனர். சரவணா ஸ்டோரில் காய், கறி முதல் கடுகு, மிளகு, உப்பு, சப்பு - புடவை, வேஷ்டி, நகைகள், பண்ட, பாத்திரங்கள்... இன்னும் எத்தனை இருக்கிறதோ அத்தனையும் ஏகபோகமாக்கப்பட்டு பெரும் வர்த்தகத்தில் ஈடுபடுவதால் தி. நகர் வியாபாரிகளின் பாடு திண்டாட்டமாக மாறி விட்டது.

இந்நிலையில் வால்மார்ட் போன்ற அமெரிக்க வர்த்தக நிறுவனங்கள் நம்மூரில் கடை திறக்க ஆரம்பித்தால் அதோ கதிதான்! அரசு என்பது மக்களை காப்பதற்கா? அல்லது உலக முதலாளிகளையும் - உள்ளூர் முதலாளிகளையும் காப்பதற்கா? என்பதை மன்மோகன் சிங்தான் விளக்க வேண்டும்.

அனைத்தையும் அந்நியருக்கு விட்டு, விடும் இந்த வெட்கம் கெட்ட அரசுகள் நாளைக்கு பிரதமர் - ஜனாதிபதி பதவிகளைக் கூட அந்நியருக்கு காண்ட்டிராக்ட் விடுவார்களா? என மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இன்றைக்கு நம்முடைய பட்ஜெட்டை தயாரிப்பதே உலகவங்கியும், அமெரிக்காவும்தான் என்ற குற்றச்சாட்டு பலமாக உள்ள நிலையில் இத்தகைய கேள்வி எழுவது நியாயமே!

இன்றைக்கு தேவை இன்னொரு காந்தியும், வலுவான சுதேசி இயக்கமும், புதிய மாற்றத்திற்கான சுதரந்திரப்போராட்டமுமே!

January 25, 2006

அதிமுகவுடன் கூட்டு சேரும் புதிய இடதுசாரி

பார்வர்டு பிளாக் கட்சி அகில இந்திய அளவில் செயல்படுகிறது. மேற்குவங்கத்தில் மார்சி°ட்டுகளோடு வலுவான கூட்டணி அமைத்து செயல்படுகின்றனர். தமிழகத்தில் இக்கட்சிக்கு தொண்டர்களும், சாரி தலைவர்களும் கிடைக்காத பரிதாப நிலையில் தேர்வர் இன மக்களை கொண்டு சரணாலயம் அமைக்கப்போவதாகவும், புதிய கட்சி துவங்கப்போவதாகவும் வாய்சவடால் அளித்த கார்த்திக் புதிய இடதுசாரியாக - புதிய வேடத்தை ஏற்று நடிக்கத் துவங்கியுள்ளார். அத்துடன் வரும் தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைக்கப்போவதாக கூறியுள்ளார் கார்த்திக்! ஹிட்லர் கூட தன்னை சோசலி°ட் என்றுதான் கூறிக்கொண்டான். நம் கார்த்திக் அப்படியில்லையென்றாலும், தமிழக ஹிட்லருக்கு துணைபோவதுதான் வேடிக்கை!
விஜயகாந்தின் (அ) நியாயம்!

அடுத்தவர்களின் சொத்துக்களை அப்புறப்படுத்துதற்கு ஆளாய்ப் பறக்கிறார்கள். பேரன் சொத்துக்கு பிரச்சினை என்றவுடன் ஓடோடி யார் யாரையோ பார்க்கிறார்கள், பதட்டப்படுகிறார்கள் என்று திமுக தலைவர் கருணாநிதியை கடுமையாக விமர்சித்துள்ளார் தேசிய ¬முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த்.

விஜயகாந்த் பேசுகையில், நான் சிரமப்பட்டு, உழைத்து சம்பாதித்த பணத்தில் கல்யாண மண்டபம் கட்டினேன். அதை இடிக்கப் போவதாக கூறுகிறார்கள். அது தொடர்பான உத்தரவு கூட எனக்கு இன்னும் வரவில்லை. கல்யாண மண்டபத்தை இடிப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.

மொத்தத்தில் விஜயகாந்த் திமுகவை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் கொள்கை பிரச்சினைகள் அல்ல. அவரது திருமண மண்டபம் (சாரி, கட்சி அலுவலகம்) பொது மக்களின் தேவைக்காக நெடுஞ்சாலைத்துறை இடிக்க உத்திரவிட்டுள்ளதே அதுதான்!

ஏழை - எளிய மக்கள் சிறுக, சிறுக சேர்த்து வாங்கிய எளிய கட்டிடங்கள் பல நெடுஞ்சாலைத்துறையால் இடிக்கப்படும்போதெல்லாம் இவர் எங்கே போய் இருந்தார்.இவர் மட்டும்தான் உழைத்து சம்பாதித்தார். மற்றவர்களெல்லாம் திருடினார்கள் என்று சொல்கிறாரா? இவரது ஒவ்வொரு படத்திற்கும் பின்னால் நூற்றுக்கணக்கான சினிமா உழைப்பாளிகளின் உழைப்பு சுரண்டப்பட்டதால்தான் இவர் அழகாக டைவ் அடிப்பது போலவும், சாகசங்கள் புரிவது போலவும் காட்சி அமைக்கப்பட்டது என்பதை வசதியாக மறந்து விடுகிறார்.

இவரது பிரதான தேர்தல் அறிக்கையே! தன்னுடைய திருமண மண்டபத்தை இடிக்கக்கூடாது என்பதாகத்தான் இருக்கும்!

January 24, 2006

தேவை உதவி
என்னுடைய வலைப் பதிவிற்கு ரேட்டிங் மற்றும் பி.டி.எப். வசதிகளைப் பெறுவதற்கு நானும் கடந்த இரண்டு வாரமாக முயற்சித்துப் பார்த்தேன். சரிவர இயங்கவில்லை. என்ன காரணம் என்றும் தெரியவில்லை. தமிழ்மணம் கூறியுள்ளபடி எல்லாம் செய்து பார்த்து விட்டேன். ஆனாலும் ரிசல்ட் இல்லை. என்ன தவறு செய்துள்ளன் என்பதை தெரிந்தவர்கள் கூறினால் உதவியாக இருக்கும். இதை சரி செய்வதற்கு உதவுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
சந்திப்பு : கே. செல்வப்பெருமாள்

January 21, 2006

புதிய மொந்தையில் பழை கல்
சங்பரிவாரின் புதிய திட்டம்
பா.ஜ.க.-வின் புதிய தலைவர் ராஜ்நாத் சிங், பா.ஜ.க.வுக்கு புதிய எழுச்சியை உண்டாக்கப்போவதாக அவர்களது தொண்டர்களிடையே கர்ஜித்திருக்கிறார். அதற்காக அவர் கீழ்கண்ட திட்டத்தை முன்வைத்துள்ளார்.
  1. இந்துத்துவா
  2. ஒரே சிவில் சட்டம்
  3. ராமனும் - கிருஷ்ணரும் தேசிய சின்னங்களாம்
  4. அயோத்தி மத தலைமை பீடம்
  5. 370வது சட்டப் பிரிவு
  6. ராமர் கோவில் அஜண்டா
  7. கலாச்சார தேசியம்
  8. இந்திய மாநிலங்கள் அரசியல் ரீதியானவை அல்ல
  9. கலாச்சார புவியியல் ரீதியனவை
இது தவிர பா.ஜ.க.வின் மூல மந்திரமாக அவர் கூறியிருப்பதுசுய கட்டுப்பாடு, ஒத்துழைப்பு, அரசியல் போராட்டம் மற்றும் தேச சேவை.
தமிழில் ஒரு பழமொழி உண்டு : “புதிய மொந்தையில் பழை கல்” என்று. ஏற்கனவே பா.ஜ.க. - சங்பரிவாரங்கள் ஓயாது ஊதி, மக்களிடம் எடுபடாமல் போன அதே பழைய விஷயங்களையே வாந்தி எடுத்துள்ளார் ராஜ்நாத் சிங். ஒவ்வொரு விஷயங்கள் குறித்தும் தீவிரமாக அலசலாம்.அதைவிட முக்கியமானது : புதிய தலைவருக்காவது மக்கள் மீது ஏதாவது பாசம் ஏற்படுமா என்ற எதிர்பார்ப்பு பொய்யாய்போனதுதான் வருத்தமானது.
இந்தியா ஒளிர்கிறது என்று மக்கள் பணத்தில் ஒளிரும் விளம்பரம் செய்து ஓய்ந்து - தேய்ந்து போன பா.ஜ.க.வும், அதன் மூகமூடி தலைவர்களும் தற்போது ராஜ்நாத் சிங் என்ற புதிய முகமூடி அணிந்த மதவாத - பாசிச எண்ணங்கொண்ட பழைய குரூர சிந்தனை கொண்ட தலையையே காண முடிகிறது.
  • இந்திய நாடு சுதந்திரம் பெற்று இன்னும் 34 கோடி பேருக்கு கல்வியறிவு கிட்டவில்லை.
  • 24 கோடி பேர் ஒரு வேளை சோற்றுக்கு வழியின்றி வறுமைக் கோட்டிற்கு கீழே வாழ்கின்றனர்.
  • முந்தைய - தற்போதைய அரசுகளின் கொள்கைகளால் - கடன் தொல்லைகளால் விவசாயிகள் தற்கொலை அதிகரித்துக் கொண்டே செல்கிறது.
  • வேலைவாய்ப்பற்ற வளர்ச்சி - வேலையில்லாத் திண்டாட்டம்
  • இன்னும் கூட ஜாதிய ஏற்றத் தாழ்வுகள்
  • வீடில்லா மக்களின் எண்ணிக்கை
என பல பிரச்சினைகள் நம்மைச் சுற்றி நிகழ்ந்துக் கொண்டிருக்கின்றன.ஆனால் புதிய தலைவர் ராஜ்நாத் சிங்கிற்கோ, சங்பரிவாரத்திற்கோ இதுவெல்லாம் பிரச்சினையே இல்லை. மக்களது குறுகிய - உணர்வுகளை பயன்படுத்தி கலவரத்தை தூண்டி, பிளவுபடுத்தி அதில் குளிர் காய்வதே பாசிச சிந்தனையின் போக்கு. இத்தகைய பாசிச சிந்தனைகள் உலகில் எந்த நாட்டிலும் எடுபட்டதில்லை. இந்தியாவிலும் ஏறக்குறைய அதற்கு சமாதி கட்டியாகி விட்டது. இன்னும் வேறோடு பிடிங்கி ஏறிய வேண்டிய வேலைதான் பாக்கியுள்ளது. அந்த வேலையை மிக வேகமாக செய்யத் துடித்துக் கொண்டிருக்கிறார் ராஜ்நாத் சிங்.
இந்திய மாநிலங்கள் நீண்ட நெடிய போராட்டத்திற்கு பின்னால் மொழிவழி மாநிலமாக அமைந்துள்ளது. மொழி அடிப்படையிலான கலாச்சாரமே இந்திய நாட்டின் அரசியல் - பொருளாதார உறவாக இதுவரை இருந்து வந்துள்ளது.
உலகிலேயே உயர்மொழி சம°கிருதம் என்று மற்ற தாய்மொழிகளை (சாரி - தந்தை மொழிகளை) மட்டம் தட்டும் சங்பரிவாரம் கலாச்சார தேசியம் என்று பேசுவதும், புவியியல் ரீதியான கலாச்சாரம் என்று பேசுவதெல்லாம் மக்களை குழப்புவதற்கே தவிர உண்மை அதுவல்ல. கோயாபல்சின் வாரிசுகளிடம் இதை தவிர வேறு எதை எதிர்பார்க்க முடியும்.
ராமரும் - கிருஷ்ணரும் தேசிய சின்னங்களாம்: தேசிய சின்னம் என்றுச் சொன்னால் இந்திய நாட்டில் வாழும் கோடிக்கணக்கான முசுலிம்களும், கிறித்துவர்களும், சீக்கியர்களும் கூட இதை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அர்த்தம்.
இந்திய நாட்டில் ஆணுக்கு பெண் சமம் என்பதை பல ஆயிரம் ஆண்டுகளாக நிலை நாட்டி வந்த சிவன் - பார்வதி (சிவலிங்கம்) ஏன் முன்னிறுத்தப்படவில்லை. (சிவலிங்கத்தை கடவுள் என்ற அர்த்தத்தில் நான் இங்கு குறிப்பிடவில்லை) சமத்துவ சமூகம் நம்முடைய இந்திய நாட்டின் பாரம்பரியம் என்பதை நிலைநாட்டவே.ஆரிய கடவுள்களில் பெண்களுக்கு இடமேயில்லை. அவர்களைப் பொருத்தவரை இந்திரன், மித்திரன், வருணன் என்ற ஆணாதிக்க சிந்தனையே ஆதிகாலத்தில் இருந்து தொடர்கிறது. அதனால் தான் இன்றைக்கும் சுளுளு-ல் பெண்களை உறுப்பினராக சேர்ப்பதில்லை. அதுமட்டுமின்றி நம்முடைய தாய்நாட்டை அவர்கள் பித்ரு பூமி - தந்தை பூமி கூறுகின்றனர்.
இவர்களது கலாச்சார தேசியம் இதுதான். RSS துறவி சஞ்சய் ஜோசியின் காம கொட்டாரங்களை இந்திய நாடே சிரித்ததே! இதுதான் இவர்களின் ஒழுக்கம் - சுய கட்டுப்பாடு - கலாச்சாரம்.
370வது சட்டப் பிரிவு குறித்து கேள்வி எழுப்பும் இவர்கள் தலித் மக்களை இன்னும் கோவில் கர்ப்ப கிரகம் வரை சென்று வழிபடவும், அவர்களை பூசாரிகளாக்கவும் முதலில் ஒத்துக் கொள்வார்களா? கேட்டால் மனுவே எங்களது வேத நூல், எனவே மனுவின் சட்டமே எங்கள் சட்டம். அதில் தலித்துக்கள் புழு, பூச்சிக்களை விட மிக கேவலமானவர்கள் என்று கூறுவார்கள் இந்த கொழுப்பேறிய சோம்பேறிகள்.
ஒரே சிவில் சட்டம் பேசும் இவர்களை பற்றித்தான் முந்தைய - இந்நாளைய - எதிர்கால சகா உமா பாரதி கூறினார் பா.ஜ.க.வுக்குள் மேல் ஜாதி ஆதிக்கமே நிலவுகிறது. பெண்களையோ, பிற்படுத்தப்பட்ட மக்களையோ கண்டு கொள்வதே இல்லை என்று முதலில் சங்பரிவாரத்திற்குள் சிவில் சட்டத்தையும் - பெண்களுக்கு சமஅந்த°தையும் கொடுக்கட்டும். பிறகு இது குறித்து விவாதிக்கலாம்.
“உண்மை இந்துக்களால் ஏற்றுக் கொள்ளமுடியாத கொலைகார தத்துவம்தான் இந்துத்துவா” இந்த இந்துத்துவாவில் பெயரால்தான் மகாத்காந்தி என்ற தீவிரமான - அகிம்சாவாத - நிராயுதபாணியான இந்து பக்தரை - இந்தியாவின் ஆத்மாவ திகழ்ந்தவரை கொலை புரிந்ததுதான் இந்துத்துவாவின் உண்மை முகம். இத்தகைய அழுக்கேறிய காட்டிக்கொடுக்கும் புத்தியுள்ள - மனுவின் வாரிசுகளை இந்திய மக்கள் நிச்சயம் வீழ்த்துவார்கள்.

January 20, 2006

எது ஏமாற்றம்! ஏமாற்ற முடியுமா!!

எங்கள் பகுதியில் 9வது ஆண்டு பொங்கல் விழா - விளையாட்டு போட்டி - கலை நிகழ்ச்சிகள் நடத்தினோம். இதற்காக நன்கொடை வாங்க கொடை வள்ளல்கள் சிலரிடம் சென்றோம். அதில் ஒருவர் நடந்த நிகழ்ச்சியை கூறினார். ரசிக்க முடிந்தது -
கருத்தாகவும் இருந்தது. அதை உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை சிறு கதையாகவும் ஏற்றுக் கொள்ளலாம்.



இரண்டு நண்பர்கள் பெங்களூருக்கு சென்று சென்னை திரும்பினர். சென்ட்டிரல் இரயில்வே ஸ்டேஷனில் இறங்கி இளைப்பாற ஒரு டீ கடைக்கு சென்று டீ அருந்தினர். அதற்கான தொகையை நண்பர் ஒருவர் கொடுக்க, டீ கடைக்காரரோ ஏதோ கவனக்குறைவால் 5 ரூபாய் அதிகமாக கொடுத்து விட்டார். (நேர்மையான) நண்பர் அதிகமாக அவர்தானே கொடுத்தார். நாம் ஏன் திருப்பித் தர வேண்டும் என்று பாக்கெட்டில் போட்டுக் கொண்டு நடையை கட்டினார்.
கொஞ்ச தூரம் சென்றவுடன் ஒரு தாய், தன் குழந்தையுடன் அந்த (நேர்மையான) நண்பரிடம் பிரச்சை கேட்டார். (எழுதுவதற்கு கேவலமாக இருக்கிறது) அவரும் இல்லம்மா... என்று எவ்வளவோ சலிப்பாக சொல்லிப் பார்த்தார்... ஆனால் பிச்சை கேட்கும் அந்த தாயும் விடுவதாக இல்லை.உடன் இருந்த நண்பர் கொடுப்பா என்று கூறிவிட, நண்பர் விழி பிதுங்கினார். அவரது பாக்கெட்டில் ரூபாய் நோட்டுக்கள் நிறைய இருந்தது. ஆனால் சில்லறை எதுவும் இல்லை. வேறு வழி என்ன? டீ கடைக்காரர் கொடுத்த ஐந்து ரூபாய் தானமாக சென்று விட்டது!

(நன்கொடை கொடுத்த நன்பர் இந்த உண்மை சம்பவத்தையும் கூறி, எங்களுக்கு நன்கொடையும் கொடுத்து அனுப்பினார். அவர் உதிர்த்த தத்துவ முத்து : நாம் இந்த உலகத்தில் யாரையும் ஏமாற்ற முடியாது! - அவருக்கு தெரியாது இந்த உலகத்தில் ஏமாற்றாமல் (மன்னிக்கவும் சுரண்டாமல்) வாழ முடியாது என்று! இது என் கருத்து!)

January 18, 2006

‘குடி’ மக்களால் ஆளப்படும் அரசு!

தமிழக சட்டமன்றத்தின் இறுதி கூட்டத் தொடர் வழக்கம் போல் ஜெயலலிதாவின் பல்லவி பாடும் கொலு மண்டபமாகவே காட்சியளிக்கிறது. இருப்பினும், அவ்வப்போது அதிமுகவினரே கேள்வி கேட்டு, அதற்கு மந்திரிகள் அளிக்கும் பதில்களில் இருந்து சில உண்மைகள் வெளிவரத்தான் செய்கிறது.

தமிழகத்தில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் இந்த ஆண்டு ரூ. 5795 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளதாக ஓ. பன்னீர் செல்வம் புளகாங்கிதம் அடைந்துள்ளார். தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னேறி வருகிறது என்று ஜெயலலிதா கூறுவது இதற்கும் பொருந்துமா?

2002-03ஆம் ஆண்டு ரூ. 2996 கோடி ரூபாயாக இருந்த டாஸ்மாக் வருமானம் தற்போது ரூ. 5795 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளதில் இருந்து தமிழகத்தில் குடிமக்களின் எண்ணிக்கை எந்த அளவிற்கு உயர்ந்துள்ளது நாம் அறிந்து கொள்ளலாம்.

சுனாமி பாதித்த பகுதிகளிலும், வெள்ள நிவாரணத்திற்காகவும் அரசு ஒரு புறம் நிவாரணம் கொடுத்து விட்டு அதை டா°மாக் மூலம் பெற்றுக் கொள்கிறது என்று சாதாரண மக்கள் நகைப்பதன் அர்த்தம் இப்போதுதான் புரிகிறது. டா°மாக் வருமான உயர்வு மூலம்.

இந்த குடி மக்களில் பெரும்பாலானோர் சாதாரண ஏழை - எளிய உழைப்பாளி மக்கள்தான். இவர்களை குடி மன்னர்களாக்கி, அவர்கள் மூலம் வருமானம் ஈட்டுவதில் அரசு பெருமைப்படலாம். ஆனால், பல வீடுகளில் அடுப்பு எரியாமல் போவதும், அந்த வீட்டு குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாக மாறிவருவதைப் பற்றியும் அரசுக்கு ஏதாவது கவலையுண்டா. இத்தகைய குடி மக்களில் எத்தனை சதவீதம் பேரின் வாழ்க்கை அதாள பாதாளத்திற்கு சென்றுள்ளது என்பது குறித்து சட்டமன்றத்தில் விளக்குவார்களா?

சரி! டாஸ்மாக்கில் கிடைக்கும் வருமானம் குறித்து பெருமிதம் அடையும் அரசு அதில் பணிபுரியும் ஊழியர்களின் பணி நிரந்தரம் குறித்து ஏதாவது செய்ததா? சங்கம் வைக்கப் பார்க்கிறார்கள் என்ற தகவல் கிடைத்ததுமே அவர்களை மிரட்டும் வேலையில் அல்லவா அரசு ஈடுபடுகிறது?

டாஸ்மாக்கில் போலிகளும் உண்டு என்று கூறப்படுகிறது? இதன் மூலம் கிடைக்கும் வருமானம் எங்குச் செல்கிறது? யாருக்கு செல்கிறது என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்!

ஒரு பக்கம் அரசு மது விற்பனை மூலம் தனியார் கொள்ளைக்கு முற்றுப் புள்ளி வைத்ததை வரவேற்கலாம். ஆனால், அதன் மூலம் கிடைக்கும் தொகையை அரசு குறைந்தபட்சம் தமிழகத்தில் எழுத்தறிவின்மையை போக்குவதற்காகவாவது பயன்படுத்தலாம். இதற்காக மது அருந்துவதை ஊக்குவிக்க வேண்டும் என்று அர்த்தமல்ல; கல்வியறிவு கிடைக்கப்பெற்றாலே பெரும் பகுதி மக்கள் இதிலிருந்து விடுபடுவார்கள். இன்றைக்கும் தமிழகத்தில் பெரும்பாலான கிராமங்களில் ஓராசிரியர் பள்ளிகளே செயல்படுகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், கிராமப்புற - நகர்ப்புறங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்பது வெறும் பெயரளவிற்கே செயல்படுகிறது. இதை பலப்படுத்தலாம். மதுவின் மூலம் கிடைக்கும் தொகையை நேரடியக அந்த ஏழை - எளிய மக்களுக்கு கிடைக்கச் செய்வதே அரசு மக்களுக்கு செய்யும் தொண்டாக இருக்கும். இவர்களிடம் இதை எதிர்ப்பது சரியா?

மேலும் மதுவால் ஏற்படும் தீமைகள் குறித்தும், அதனால் ஏற்படும் குடும்பச் சீரழிவுகள் குறித்தும் பாப்புலர் நடிகர்களை வைத்துக்கூட அரசே திட்டமிட்டு படம் எடுத்து பிரச்சாரம் செய்யலாம்.

குடிமக்களை காக்க அரசு இதை செய்யுமா? அல்லது எதிர்காலத்தில் ஆட்சியில் அமையப் போகிறவர்களாகவது இதைச் செய்வார்களா?

January 16, 2006

ஏழை பேச்சு அம்பலம் ஏறாது!

இயற்கை அன்னை இரும்பு, நிலக்கரி, அலுமினியம்... என பல முக்கியமான தாதுபொருட்களை சீதனமாக கொடுத்துள்ளது ஒரிசாவிற்கு. ராட்சச உருக்காலைகள் பல ஒரிசாவில் செயல்பட்டு வருகிறது. உலக முதலாளிகள் முதல் உள்ளூர் முதலாளிகளை வரை இந்த தாது சுரங்கங்களை கொள்ளையடித்து சுரண்டி கொழுத்து வருகின்றனர்.

சுரங்கங்களில் வேலைபார்க்கும் மக்கள் வாழ்க்கை அந்த சுரங்கங்களோடு சமாதி கட்டப்படுகிறது. சமீபத்தில் புவனே°வரத்திற்கு அருகில் உள்ள கலிங்கா நகரில் டாடா உருக்காலை ஒன்று எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கான நிலங்களை மூத்தகுடிகளான பழங்குடி மக்கள் பல ஆயிரம் ஆண்டுகளாக, தலைமுறை, தலைமுறையாக வாழ்ந்து வருபவர்களிடம் இருந்து பிடுங்கப்படுகிறது. ஏதுமறியா அப்பாவி பழங்குடி மக்களை நிலங்களில் இருந்து விரட்டியடிக்கிறது ஒரிசா மாநில அரசு. ஏற்கெனவே போ°கோ என்ற தென்கொரிய நிறுவனத்திற்கு ஒரிசாவின் தாதுவளத்தை 52,000 கோடி ரூபாய்க்கு கொள்ளையடிக்க அனுமதித்து விட்டது ஒரிசா மாநில அரசு.

இந்த நிறுவனம் அமையவுள்ள நிலப்பகுதியில் இருந்து 12,000க்கும் மேற்பட்ட பழங்குடி மக்களை வெளியேற்ற தீர்மானித்து விட்டது. இந்நிலையில் டாடாவின் செல்ல நாய்போல் செயல்பட்டுள்ளார் நவீன் பட்(நாய்)க். தங்களது வாழ்க்கை உரிமை பறிக்கப்படுவதை எதிர்த்து போராடிய மக்கள் மீது நவீன துப்பாக்கிகளை பிரயோகித்து 12 உயிர்களை பறித்துள்ளார் பட்நாயக்.

இந்த சம்பவம் இந்திய நாட்டு மக்களை உலுக்கியெடுத்துள்ளது. அதே சமயம் மீடியாக்களிலும் மறைக்கப்பட்டும் வருகிறது. அவர்கள் கேட்டது என்ன? தங்களுக்கு தேவையான மாற்றிடமும், பாதுகாப்பான வாழ்க்கையுமே! அவர்கள் டாடாவிடம் பிச்சையும் கேட்கவில்லை, அல்லது டாடா உற்பத்தி செய்யும் நவீன கார்களை கொள்ளையடிக்கவும்வில்லை.

உள்ளூரில் நாம் பல பேட்டை ரவுடிகளை பார்த்திருப்போம். கட்டபஞ்சாயத்து, அடிதடி மூலம் சொந்த வீட்டை பிடுங்கிக் கொண்ட பல சம்பவங்கள் பத்திரிகைகளில் வந்துள்ளது. இத்தகைய பேட்டை ரவுடிகளுக்கும், ஒரிசா அரசின் ரவுடித்தனத்திற்கும் என்ன வித்தியாசம்!
அரசு என்பது எதற்காக? யாருடைய நலனை காப்பதற்காக? மக்களின் நலனா? அல்லது டாடா, பிரேம்ஜி, அம்பானி, ஷிவ்நாடார்... போன்ற பன முதலைகளின் நலனா? இது போன்ற சம்பவம் ஒரிசாவில் மட்டும் அல்ல. நம்முடைய தமிழகத்திலும் உலகத் தமிழர்களின் ஒப்பற்ற தலைவர் கருணாநிதி ஆட்சிக்காலத்திலும் திருநெல்வேலி மாஞ்சோலை தொழிலாளர்களை தடியால் அடித்தே 18 உயிர்களை கொன்றது நம் நெஞ்சத்தை விட்டு இன்னும் அகலவில்லை...

மொத்தத்தில் அரசுகள் சாதாரண மக்கள் பக்கம் நிற்பதில்லை. “ஏழை பேச்சு அம்பலம் ஏறாது என்பார்கள்” இது கிராமப்புற பஞ்சாயத்துக்களுக்கு மட்டும் அல்ல. நவீன அரசுகளுக்கும் இதுதான் விதியோ!

January 06, 2006

ஆயுர்வேத மருத்துவத்தின் மகத்துவத்தை அழித்த குரு!
RSS-இன் அறிவிலித்தனம்

கடந்த இரண்டு நாட்களாக அகில இந்திய அளவிலும், உலகளவிலும் முதற்பக்கச் செய்தியாக இடம் பிடித்திருக்கிறது “போலி ஆயுர்வேத சாமியாரின் தகிடுதத்தம்”.

உத்திராஞ்சலை மையமாக வைத்து செயல்படும் சுவாமி குரு ராம்தேவ் மகராஜ், யோக கலையில் புகழ் பெற்றவர். அனைத்து நோய்களையும் யோகாவின் மூலம் தீர்க்க முடியும் என்று பிரச்சாரம் செய்வதோடு, உலகம் முழுவதிலும் யோகாவை வியாபாரமும் செய்து வருகிறார். இவரது யோக கலை அத்துடன் நின்றிருந்தால் எந்தப் பிரச்சினையும் இல்லை.

ஆனால், இந்த சாமியார் “திவ்ய யோக பார்மசி” என்ற பெயரில் நடத்தி வருகிறார். இவரது மருந்து பலான விஷயங்களுக்கு ரொம்ப வீரியமாக செயல்படுவதாக விளம்பரம் செய்யப்படுகிறது. இவரது லேபாரட்டிரியில் இருந்து தயாரிக்கும் மருந்துக்கள் மூலிகையால் தயாரிக்கப்படுவதாக லேபிள் ஒட்டப்பட்டிருக்கும். ஆனால், உண்மை வேறாக இருப்பதை தற்போது மத்திய சுகாதார அமைச்சகமே கண்டு பிடித்துள்ளது. அதில் மனித எலும்புகளும், விலங்குகளின் எலும்புகளும், மேலும் விலங்குகளின் கழிவுகளும் இருப்பதாக கண்டறியப் பட்டுள்ளது.

இந்த போலி சாமியாரின் போலித்தனத்தை மார்க்சிஸ்ட் கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினர், சமூக சேவகி பிரந்தா காரத் அம்பலப்படுத்தியுள்ளார். தனக்கு எதிராக கூறப்படும் கருத்தை மறுப்பது சாமியாருக்கு உள்ள உரிமை! ஆனால், அதை விட்டு விட்டு தனக்கு பின்னால் உள்ள RSS - VHP குண்டர்களை ஏவி மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகத்தை கற்களால் தாக்கியுள்ளனர். RSS-க்கு இதெல்லாம் புதிய விஷயமல்ல; ஏற்கனவே காமராஜரை கொலை செய்ய வெறி கொண்டு அலைந்ததோடு, காமராஜர் தங்கியிருந்த இடத்தையும் அடித்து நொறுக்கியவர்கள். மகாத்மாவை கொலை செய்ததை நாடே அறியும்.

மக்களின் அறியாமையை பயன்படுத்தி, போலி மருந்துகள் மூலம் கோடிக்கோடியாக கொள்ளையடிக்கும் சாமியாருக்கு RSS துணை நிற்பது! ஏதோ சேதப் பற்றினாலோ அல்லது இந்திய மருத்துவத்தை காக்க வேண்டும் என்பதாலோ அல்ல; மாறாக சுளுளு-இன் மறைமுக உலகளாவிய பிரச்சாரத்திற்கு உதவிடும் சாமியாரின் குட்டு வெளிப்பட்டுவிட்டதே என்ற ஆத்திரம்தான்.

இந்த போலி மருந்து சாமியார் கூறுவதுபோல் மார்க்சிஸ்ட் கட்சியும், பிருந்தா காரத்தும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறுவதை யாரும் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்பதோடு, இதில் எந்த உண்மையும் இல்லை என்பதை அனைவரும் அறிவர். பிருந்தா காரத் எந்த இடத்திலும் ஆயுர் வேத மருத்துவத்தையோ, யோகா கலையையோ குறைகூறவில்லை. இவரது போலித்தனத்தைத்தான் தோலுரித்துள்ளார்.

இந்த யோக்கியர் தன்னுடைய நிறுவனத்தில் வேலை பார்த்த 112 தொழிலாளிகளை அடிமைகளைப் போல் வேலை வாங்கியதோடு, அவர்கள் உரிமைக்காக குரல் கொடுக்க துணிந்த போது, அவர்களை நிறுவனத்தை விட்டே நீக்கி விட்டார். இதுதான் RSS சகாக்களின் நேர்மை!
பசுவின் புனிதத்தை பேசுபவர்கள் இன்றைக்கும் பசுமாட்டின் மூத்திரத்தை நம்மை குடிக்கச் சொல்லுவார்கள். ஏனென்றால் அது புனித தீர்த்தமாம்!
உண்மை என்ன?
லெப்டோ ஸ்பைரோசிஸ் பாதித்த விலங்குகளின் சிறு நீரில் இருந்து மனிதனைக் கொல்லும் இந்த கொடிய நோய் (எலி ஜூரம்) பரவுகிறது என்று விஞ்ஞான உலகம் நிரூபித்த பின்னும் இந்த மூடத்தனத்தை விட மறுப்பதோடு, இதுவே புனிதம் என்று பிரச்சாரம் செய்கிறார்கள். எனவே இவர்களுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லை. RSS-இன் அறிவிலித்தனத்தையே இதுவெல்லாம் காட்டுகிறது!

January 05, 2006

தமிழக தேர்தல் அலசல்

இன்றைய தினமலரில் (ஜனவரி 5-2006) திமுக கூட்டணியில் தொகுதி பங்கீடு முடிந்தது என்ற செய்த வந்துள்ளதை பார்த்திருப்பீர்கள்.

திமுக 138
காங்கிரஸ் 40
பா.ம.க. 25
மதிமுக 17
மார்க்சிஸ்ட் 6
சி.பி.ஐ. 6
இந்திய யூனியன் 1
ஆர்.எம். வீரப்பன் 1

என பங்கிடப்பட்டுள்ளதாக ஒரு அதிகாரப்பூர்வமற்ற செய்தி வெளியாகியுள்ளது. இது அதிகாரப்பூர்வமான செய்தியாக இருந்தாலும், இதை நம்பாமல் இருக்க முடியாது. இச் செய்தியினை ஏதோ ஒரு வட்டாரம் கசிய விட்டிருப்பதாகவே கருதலாம்.

கூட்டணியில் விரிசல் உண்டாக்க போலீஸ் சதி என்று அடிக்கடி குற்றம் சுமத்தும் கருணாநிதி இந்த செய்தியை மறுப்பாரா? அல்லது வாய் மூடி மவுனியாக இருப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

எப்படி இருந்தாலும், இந்த தொகுதி பங்கீடு என்பது தொடர்ச்சியாக போராடும் - வளர்ந்து வரும் - வளர்ந்த கட்சிகளுக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவே கருத வேண்டியுள்ளது.

இதை வரிசைப்படி பார்க்கலாம்.

1. கருணாநிதி தலைமையிலான திமுக கடந்த 5 ஆண்டுகளில் அதிமுக அரசை எதிர்த்து எத்தனை போராட்டங்களை நடத்தியுள்ளது? கடைசி கட்டத்தில்தான் கூட்டணி கட்சியினரின் ஆதரவோடு தற்போது போராட முனைந்துள்ளது. இதுவும் கூட கூட்டணி கட்சியினரின் நிர்ப்பந்தமாக இருக்கலாம்.

ஜெயலலிதா அரசு பஸ் கட்டணத்தை உயர்த்தியபோது, “ஓட்டு போட்ட மக்களுக்கு சந்தோஷம் என்றால் எனக்கும் சந்தோஷமே” என்று கிண்டலும், கேலியும் செய்து சும்மா இருந்தவர்தான் திமுக தலைவர் என்பதை மக்கள் இன்னும் மறக்கவில்லை.

2. தற்போது திமுகவின் வளர்ச்சி என்ன நிலையில் உள்ளது? திமுக வளர்ந்து வருகிறதா? தேய்ந்து வருகிறதா? என்பதையும் பரிசீலிக்க வேண்டியுள்ளது. திமுகவினர் கரைவேட்டிகளை மடித்து வைத்து நான்கரை ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதுதான் கீழ்மட்ட உண்மை. 18 வயது நிரம்பிய இளைஞர்கள் முதல் 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் யாராவது திமுகவில் சேர முன் வருகிறார்களா? இல்லை என்றே தெரிகிறது. இது அதிமுகவிலும்தான்.

இதைத்தான் இளைஞர்கள் யார் புதிய கட்சி என்று ஆரம்பித்தாலும் தங்களை அவர்களோடு இணைத்துக் கொண்டு தங்களது அடையாளத்தை வெளிப்படுத்த முனைகின்றனர். இது சமீப காலத்திய உதாரணம்.

3. காங்கிரஸ் கட்சியை எடுத்துக் கொண்டால், அதில் வட்டத்திற்கு ஒரு பிளவும், பெரும் தலைவர்களும் மட்டுமே உள்ள கட்சி! ஏற்கெனவே காங்கிரஸ் கட்சி காமராஜர் ஆட்சி என்ற கனவு கண்டு கொண்டிருந்தாலும், தமிழக மக்கள் கடந்த 30 ஆண்டுகளாக காங்கிரசை தமிழகத்தில் நுழைவதையே விரும்பவில்லை என்பதைத்தான் அவர்களின் வாக்குவங்கி சரிவுகள் காட்டுகிறது. போதாதற்கு திண்டிவனம் இராமமூர்த்தி காங்கிரசுக்குள் ஜாதிய அரசியலை தீவிரமாக நடத்தி வருவதையும் நாம் அறிந்ததே! இந்தப் பின்னணியில் பார்த்தால் காங்கிரசும் தேய்ந்து, தேய்ந்து ஓடாய் போய்க்கொண்டிருக்கிறது என்பதை அறியலாம்.

3. மதிமுக ஆரம்பத்தில் வீராதி வீரான் - சூராதி சூரன் என்று வாய்வீச்சு பேசினாலும், அம்மாவிடமும், அய்யாவிடமும், பா.ஜ.க.விடமும் சரணாகதி அடைந்து தனக்கென்று எந்தவிதமான கொள்கையும் இல்லை என்பதை நிரூபித்து விட்டவர். சமீப காலத்தில் மதிமுகவில் ஆரம்பகாலத்தில் இருந்த தொண்டர்களில் 70 சதவீதம் பேர் காணாமல் போய் விட்டனர் என்பதே கள வரலாறு நிரூபிக்கிறது. அவர்களது தொண்டர்களிடமும் மதிமுகவிற்கு கருணாநிதி துரோகம் இழைப்பார் என்ற காரணத்தினால் திமுக மீது எந்தவிதமான மரியாதையும் இல்லாமல் செத்த பிணத்திற்கு இருக்கும் ஆர்வமே அந்த தொண்டர்களுக்கு இருக்கிறது என்பது மதிமுக தலைமைக்கே புரியும்.

4. இராமதாஸ் ஜாதியை பின்னணியாக கொண்டு தனக்கென்று ஒரு வாக்கு வங்கியை வைத்திருந்தாலும் கூட அவரும் ஆடித்தான் போயுள்ளார் என்பதை அவர்கள் ரசிகர் மன்றங்களுக்கு எதிரான அரசியல் நடத்தியதில் இருந்தே தெரிந்தது. இருப்பினும் தொடர்ச்சியாக தமிழகத்தில் செயல்பட்டு வரக்கூடிய - இயக்கம் நடத்தக்கூடிய கட்சியாக பா.ம.க. இருக்கிறது. (தொண்டர்கள் அல்ல) தலைவர்களை வைத்துக் கொண்டு மட்டுமே இயக்கங்களை நடத்தி வருகின்றனர். இவரது பலமே தாவுவதுதான். எனவே தாவாமல் பார்த்துக் கொள்ள சீட்டு என்ற கயிரை பா.ம.க.விற்கு எப்படியாவது மாட்டி விடலாம் என்று துடித்துக் கொண்டிருக்கிறார் கலைஞர்.

5. அடுத்து கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுக அரசின் எதேச்சதிகார அரசியலுக்கு எதிராக வலுவான - தொண்டர்களின் அடித்தளத்தை கொண்டு குரலெழுப்பி வருகின்ற கட்சிகளாக இருக்கிறது. குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் புதிய இளைஞர்கள் நம்பிக்கையோடு இணைந்து வருவது இந்த கட்சிக்கு பெரும் பலம். ஏற்கனவே “கருணாநிதி இதயத்தில் இடம் உண்டு” என்ற டயலாக்கை மார்க்சிஸ்ட்டுகள் இன்னும் மறக்கவில்லை. மேலும், இந்தத் தொண்டர்கள் தான காசு வாங்காமல் கூட்டணிக்கு உழைக்கப் போகிறவர்களும். இதை கருணாநிதியே கூட ஒத்துக் கொள்வார். வலுவான தொண்டர் படையை வைத்திருக்கும் மார்க்சிஸ்ட்டுகளிடமும், கம்யூனிஸ்ட்டுகளிடமும் அவரது இதயத்தில் இடம் என்ற கொள்கையை பின்பற்றினால், ஆந்திர பாணி கூட்டணி முறையை கையாள்வார்களா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

6. அதிமுகவை பொறுத்தவரை பணத்தையே பலமாக நம்பி செயல்படுகிறது. சுய உதவிக்குழுக்கள், வெள்ள நிவாரணம், அதிரடி அறிவிப்புகள் மூலம் ஏதாவது செய்து வெற்றி பெறலாம் என்ற மாயையில் செயல்பட்டு வருகிறார் அம்மா. ஆனால், மக்களைப் பொறுத்தவரை அதிமுகவின் கடந்த கால அராஜக நடவடிக்கைகளை இன்னும் மறக்கவில்லை. அது, அரசு ஊழியர் - ஆசிரியர், மின்வாரிய தொழிலாளர், பஸ் ஊழியர் என பட்டியல் நீண்டுக் கொண்டே போகும். போததற்கு பத்திரிகைகள் மீது தாக்குதல்... ஜனநாயக அடக்குமுறை போன்றவற்றை அவர்கள் தெளிவாக அறிந்தே வைத்திருக்கிறார்கள்.

திமுக கூட்டணி கட்சிகள் அதிமுக அரசை வீழ்த்துவதில் குறியாக உள்ளார்கள் என்பதை மக்கள் நன்றாக அறிந்திருந்தாலும், கருணாநிதிக்கு இந்த உணர்வு புரியுமா? என்ற கேள்வி எழுகிறது அவரது சாணக்கியத்தனத்தை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். கூட்டணி ஒற்றுமையை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு எதிர் கட்சிகளுக்கு மட்டும் அல்ல! கருணாநிதிக்கும்தான். (அவருக்குத்தான் பெரும் பொறுப்பு இருக்கிறது. எனவே இழக்காமல் எதையும் பெற முடியாது என்பதை முதலில் அவர் உணர வேண்டும்.)

January 03, 2006


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்!


பா.ஜ.க. தலைவர் ராஜ்நாத் சிங்கின் ஒழுக்கம்!பா.ஜ.க.வின் புதிய தலைவராக ராஜ்நாத் சிங் பொறுப்பேற்றுள்ளார். வாஜ்பாய், அத்வானி தவிர வேறு யாரும் இரண்டு வருடங்களுக்கு மேல பா.ஜ.க.வில் தலைவராக பொறுப்பில் நீடிக்கவில்லை என்பது பா.ஜ.க.வின் வரலாறு. முரளி மனோகர் ஜோஷி, குஷாபாவ் தாக்ரே, பங்காரு லட்சுமணன், வெங்கய்யா நாயுடு இந்த பட்டியலில் புதிதாக சேர்ந்திருப்பவர்தான் ராஜ்நாத் சிங்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக பிரகாஷ் காரத் பொறுப்பேற்றபோது, இந்திய மீடியாக்களில் இளமையான தலைவர் என்று பத்திரிகைகளில் இடம் பிடித்தார். அவரது வரலாறுகள் தீவிரமாக அலசப்பட்டது. கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்களால் கூட எந்தவிதமான குற்றச்சாட்டையும் சுமத்த முடியவில்லை.

இந்தப் பின்னணியில்தான் RSS-சும் பா.ஜ.க.விற்கு ஒரு இளமையான தலைவர் தேவை என்ற ஆலோசனையை முன்வைத்து அத்வானியின் காலை வாறுவதற்கு நேரம் பார்த்துக் கொண்டிருந்தது. பா.ஜ.க. தலைவர் பதவிக்கு பிரமோத் மகாஜன், அருண் ஜேட்லி... என பலரது பெயர்கள் தீவிரமாக அடிபட்டன.

ஆனால் RSS-க்கு நம்பகமானவரான ராஜ்நாத் சிங்க்கு தற்போது மகுடம் சூட்டப்பட்டுள்ளது.இதன் மூலம் எதிர் வரும் ஆண்டுகள் இந்திய நாட்டிற்கு மதவாத தலைவலி ஆரம்பமாகும் என்ற சிக்னலை சுளுளு விடுத்துள்ளது. அவர்களது நீண்டநாள் கனவான அயோத்தி ராமர் கோவில், காஷ்மீர் விவகாரம், கலாச்சார தேசியம் என பல வழிகளில் மக்களை மதஅடிப்படையில் மோதவிடக்கூடிய செயல்களில் ஈடுபடுவதற்கான அடித்தளத்தை இட்டுள்ளனர்.

அதே சமயம் உத்திரபிரதேச முதல்வர் முலாயம் சிங் யாதவ் வெளிப்படையாக ராஜ்நாத் சிங் ஒரு கிரிமினல், இவருக்கு பிரபர மாபியா கும்பல்களுடன் தொடர்பு உள்ளது. இந்த குற்றச்சாட்டை மறுத்து நிரூபித்தால் நான் முதல்வர் பதவியில் இருந்தே விலகுகிறேன் என்று சவால் விடுத்துள்ளனர். இதன் மூலம் மீண்டும் பா.ஜ.க.வின் தலைவர் பதவியில் அழுக்கேறிய கரைபடிந்த கரங்களே அதிகாரப் பீடத்தில் ஏறியிருக்கிறது என நம்பலாம்.

RSS - பா.ஜ.க.விடம் இருந்து ஒழுக்கமானவரையும், ஊழலற்றவரையும், நடத்தையில் சிறப்பானர்களையும் கண்டுபிடிப்பது இயலாத காரியம் என்றே கடந்த கால அனுபவம் நிரூபித்துள்ளது. எனவே ராஜ்நாத் சிங்கின் பதவிக்காலம் எத்தனை நாட்களோ தெரியவில்லை! விபரம் தெரிந்தவர்கள் கூறலாம்.